ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒருபோதும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேகச் செவ்வியின்போது பசில் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து வெகு விரைவில் மீட்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றி குறித்து சரியான காலக்கெடு விதிக்க முடியாது எனவும், விரைவில் புலிகளை வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோத்தபாய பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்றை வகிக்க முன்வர மாட்டார் என்பதனை உறுதிபடக் கூற முடியும் என…
-
- 0 replies
- 827 views
-
-
டெல்லி: இந்தியப் பெருங்கடலில், இன்று பிற்பகல் 5 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியப் பெருங்கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே உள்ளது கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜ் பகுதி. இந்தப் பகுதியில் இன்று பிற்பகல் 12.56 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுhttp://thatstamil.oneindia.in/news/2008/08/16/india-mild-quake-hits-indian-ocean.html
-
- 0 replies
- 1k views
-
-
போரியலின் புதிய பரிமாணம் செய்மதி தொலைக்காட்சி செய்மதித் தொலைக்காட்சி இன்று போரியலின் ஒரு புதிய பரிமாணமாகக் கொள்ளப்படுகிறது. பெரும் படையெடுப்புகளுக்கான திட்டமிடலின் இன்றியமையாத அங்கமாக இதை மேலைத்தேயப் போரியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 1991 இல் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஈராக்கின் மீது படையெடுத்த காலத்திலிருந்து இவ்விடயம் தொடர்பாக நிரம்ப ஆய்வுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. போரியலின் இப்புதிய பரிமாணத்தை சி.என்.என். விளைவு (C.N.N.Effect) என அழைப்பர். சி. என். என். என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளில் துரித வளர்ச்சி கண்ட ஒரு அமெரிக்க தொலைக்காட்சி ஒளிபரப்பு. (Cable Television Network என்பதன் சுருக்கம்) இதை 24ஃ7 வகைத் தொலைக்காட்சி என்பர். அதாவது, ஒரு நாளில் 24 மணித்தியா…
-
- 4 replies
- 3.5k views
-
-
ஜேர்மன் நாட்டு பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு தங்காலையில் சம்பவம் வீரகேசரி நாளேடு 8/16/2008 9:58:08 AM - தங்காலை, குடாவெல்ல பகுதி கடலில் நீராடச் சென்ற ஜேர்மன் நாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது நேற்று முன்தினம் மாலை சக நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற போதே குறித்த ஜேர்மன் நாட்டுப் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சுபானா இங்கிறீட் தீம் எனும் பெண்ணே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவராவார். இவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டதை அடுத்து…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார் நிருபர் 8ஃ16ஃ2008 11:05:40 யுஆ - விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் விடத்தல் தீவு பகுதியில் தொடர்ச்சியாக மோதல் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இம் மோதல்களில் படுகாயமடைந்த 08 இராணுவத்தினர் நேற்று 15ஃ08ஃ2008 வெள்ளிகிழமை இரவு 7 மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தின்ருக்கு என முன்று வைத்தியர்கள் மன்னார் வைத்தியசாலையில் கடமைக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இராணுவத்தினர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.இதனால் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து வைத்தியசாலை வரையிலான பாதைகளில் பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நு-அயடை வழ ய கசநைனெ http://www.virakesari.lk/news/head_v…
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கையில் இதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் தொடர்பில் எவ்வளவு விமர்சனங்கள் இருந்த போதிலும் அவர்கள் குறைந்தபட்சம் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாக ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். எனினும் தேசப்பற்றாளர் என்ற பெயர்ப் பலகையை கழுத்தில் தொங்க வைத்து கொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, வாரத்திற்கு ஒரு முறை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று வருவதாகவும் இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளதாகவும் சோமவன்ஸ குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு என்ற தலைப்பில் மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (14) நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக கருதியே இந்திய …
-
- 1 reply
- 1k views
-
-
Posted on : 2008-08-15 தமிழ் - சிங்கள தேசியங்கள் சுட்டமண்; இனி அவை ஒட்டுமா? இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணும் விடயத்தில் தனக்குள்ள நேர்மையை, சர்வதேச சமூகத்திற்குப் புரிய வைப்பதில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளதாகக் கூறி யிருக்கின்றார் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிப திக்கு அடுத்து அதிக அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட வருமான கோத்தபாய ராஜபக்ஷ. செயன்முறையில் தமக்குள்ள நேர்மையை சாதித்துள்ள போதிலும், அது பற்றிய பிரசாரத்தில் தாம் துரதிஷ்ட வசமாகத் தோற்றுவிட்டோம் என்கிறார் அவர். ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றையோ, அதிகாரப் பகிர்வை…
-
- 2 replies
- 1.2k views
-
-
அகலக்கால் பதிக்கும் மகிந்தவின் படைகள் செலுத்தப்போகும் விலை என்ன? -எரிமலை- 'ஒவ்வொரு குடிமகனும் ஒரு தீரமிக்க போராளியாக வேண்டும். ஒவ்வொரு கிராமமும் அல்லது தெரு வட்டாரமும் ஓர் அரணாக மாற வேண்டும். ஒவ்வொரு கூட்டுறவுப் பண்ணையும் தொழில் நிறுவனமும் மக்கள் போரின் வழங்கல் விநியோக அடித்தளமாக வேண்டும். இவ்வாறு நாம் எமது தேசம் முழுவதையும் ஒரு பெரும் போர்க்களமாக மாற்றி எந்த ஆக்கிரமிப்பாளனையும் துடைத்தெறிய முடியும்" - வியட்நாமின் தந்தை ஹோ சி மின் சிறிலங்கா அரசும் அதன் படைத்தளபதிகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலே முன்னேற்றங்களைக் கண்டு வருவதாக பாரியளவிற்கு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும் சிறிலங்காப் படையினர் தமிழர் தாயகப் பிரதேசத்திலே அகலக்கால் பதித்த…
-
- 1 reply
- 2.2k views
-
-
தெற்காசியாவில் அமைதியை பேணுவதே இந்தியாவின் இலக்கு: சுதந்திர தின உரையில் மன்மோகன் சிங் [வெள்ளிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2008, 11:27 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியானதும் உறுதியானதும் சுபீட்சம் நிலவுகின்ற நிலைமையை பேணுவதே இந்தியாவின் இலக்கு. இதன் அடிப்படையிலேயே இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை அமைந்துள்ளது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்றைய தினம் தனது சுதந்திர தின உரையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:- இந்தியாவின் அயல்நாடுகளிலும் அமைதியும் உறுதியும் நிலவுவதையே நாம் விரும்புகிறோம். அயல்நாடுகளில் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவதற்கு நாம் பேரார்வம் கொண்டுள்ளோம். …
-
- 0 replies
- 701 views
-
-
அம்பாறை மாவட்டம் வேப்பேரிக்குளம் சிறீலங்காப் படையினரின் பவள் கவச வாகனம் வடுதலைப் புலிகளின் அமுக்க வெடியில் சிக்கியதில் இரு சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கடந்த புதன்கிழமை விடுதலைப் புலிகளின் அமுக்க வெடியில் சிக்கியதில் பவள் வாகனத்தில் பயணம் செய்த மூன்று சிறீலங்கா அதிரடிப்படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த படையினரில் இருவர் மருத்துவமனையில் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த மற்றப் படையினர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். http://www.pathivu.com/?p=2899
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டாவது விமானத்தளமொன்றை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகப் பிரபல ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கப் படையினரின் விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் புதிய விமான இறங்குதளமொன்றை அமைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச படையினரின் வான் தாக்குதல் காரணமாக வன்னி முன்னரங்கப் பகுதியில் புலிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் இரணமடுவில் அமைந்துள்ள இறங்குதளத்திற்குச் சேதமேற்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது முழுப் பலத்தைப…
-
- 5 replies
- 2.8k views
-
-
கிளிநொச்சி விரைவில் வீழும் - மகிந்த சூளுரை வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] கிளிநொச்சியை வெகு விரைவில் மீட்டுவிடுவோம் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சூழுரைத்துள்ளார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு நோக்கிய யுத்தத்தில் புதிய போரியல் தந்திரரோபாயங்களைப் பயன்படுத்துவதால் எமது படையினர் முன்னேறிவருகின்றனர். வெகு விரைவில் கிளிநொச்சி நகரம் எமது படையினரின் வசம் வீழும். வராற்றப் புகழ்மிக்க எமது படைவீரர்கள் யுத்தகளத்தில் முன்னேறிவருவின்றனர். இவர்களுக்கு நாங்கள் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச சகோதரர் கோத்தபாய ராஜபக்ச நேற்று முன்தினம் கிள…
-
- 11 replies
- 3.4k views
-
-
சிங்களப் படைகளிற்கு வன்னிப்பெருநிலப்பரப்பை புதைகுழியாக மாற்ற மக்கள் அனைவரும் அணிதிரள்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது பா.நடேசன் மேலும் தெரிவித்ததாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள அரச பயங்கர வாதத்தினால் 53 மாணவிகள் குண்டுவீச்சினால் பலியெடுக்கப்பட்டனர். இப்படுகொலை தமிழினத்திற்கு மட்டுமல்ல பன்னாட்டுச் சமூகத்திற்கும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் முகத்தை வெளிப்படுத்தி நின்றது. சிங்களப் பயங்கர…
-
- 4 replies
- 2.3k views
-
-
ஈழத்தமிழ் மக்களிற்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றான 1977ஆம் ஆண்டு ஆவணிப் படுகொலை ஆரம்பித்த நாள் இன்றாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற தொடரூந்தும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தொடரூந்தும் அநுராதபுரத்தில் எரியூட்டப்பட்டு, மக்கள் உயிருடன் கொழுத்தப்பட்டனர். தமிழ் மக்களிற்கு எதிரான இந்த இனவழிப்பு நடவடிக்கை வவுனியா, திருகோணமலை, மலையகத்தில் பதுளை, கொழும்பு, இரத்மலானை என நாடு அனைத்திலும் மிக வேகமாகப் பரவியது. தமிழர்கள் 300 பேர் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் காயப்படுத்தப்பட்டதாக இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்ட சன்சோனி ஆணைக்குழு (Sansoni Commission) 1980களில் அறிக்கை வெளியிட்டது. இருந்த போதிலும், கொ…
-
- 0 replies
- 961 views
-
-
(நாலாவது ஈழப் போர் இடம் பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில், பெருமெடுப்பிலான தாக்குதல் முயற்சிகள் எதுவுமின்றி விடுதலைப் புலிகள் அமைப்பு காட்டி வரும் மௌனப் போக்கானது அவர்களது நலிவுற்ற தன்மையை வெள்காட்டி நிற்பதாகக் கருதப்படுமா என்ற கோணத்தில், இலங்கையின் போர் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் வகையில் அமைகிறது இக்கட்டுரை. ) (திலக் கோதாகொட என்பவரால் எழுதபட்ட இக்கட்டுரை கடந்த 03ம திகதி 'ராவய' பத்திரிகையில் பிரசுரமாயுள்ளது. அதன் தமிழாக்கம் இது.) தமிழாக்கம சரா விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளபட்டு வரும் இன்றைய யுத்ததில் இலங்கை அரசபடைகள் நிரந்தர வெற்றியை நிச்சயமாக ஈட்டிக் கொள்ளும் என்ற ஏகோபித் எதிர்பார்ப்பு தென்புலத்து அரசியல் களத்தில தளிர் விட்டு வளர்ந்த…
-
- 12 replies
- 4.1k views
-
-
சிறீலங்கா அரசு இவ்வருடம் மட்டும் அனைத்துலக நாடுகளிடம் இருந்து 970 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுள்ளது. முன்னைய ஆட்சிகளைவிட சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆட்சியில் அதிக கடன்கள் பெறப்பட்டு, சிறீலங்காவின் பிரசைகள் ஒவ்வொருவரும் மிகப்பெரிய கடனாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இதன்மூலம் சிறீலங்கா நாட்டின் ஒவ்வொரு பிரசையின் கடன்தொகை ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டதாக மாறியிருக்கின்றது. நன்றி: ஐரோப்பிய தொலைகாட்சி
-
- 2 replies
- 1k views
-
-
போர்முனையில் கூர்க்காக்கள்??? (படம்!!!! லிங்!!!!) *****
-
- 7 replies
- 4.9k views
-
-
இலங்கைப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் வடக்கில் நடைபெறும் மோதல்களின் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கும், மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள்விடுத்தள்ளது. இந்த மக்கள் தமது இடங்களிலிருந்து வெளியேறி, அடிப்படைத் தேவைகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொலான்டா போஸ்டர், "மக்களுக்கு சேதம் ஏற்படக்கூடிய வழிகளிலேயே விடுதலைப் புலிகள் அவர்களை வைத்திருக்கிறார்கள். அரசாங்கமோ அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய எதுவித நடவடிக்கைகள…
-
- 0 replies
- 616 views
-
-
மடுமாதா ஆலய வருடாந்த உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பலி பூசையுடன் ஆரம்பமாகவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்தார். இன்றைய உற்சவத்தின் பொருட்டு கொழும்பு, மற்றும் அநுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த குருமுதல்வர்களும் மடுமாதா ஆலயத்துக்கு வருகைதந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்றைய உற்சவத்தில் கலந்துகொள்வதற்கு 500 பொது மக்களுக்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மதவாச்சியிலிருந்து பேரூந்து மூலம் அவர்கள் இராணுவத்தினரால் அழைத்துவரப்படுவதாகவும் தெரிவித்தார். இதேவேளை, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு மடுமாதா ஆலயத்தில் தங்கியிருப்பதற்கு இன்று மாலை வரையுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்…
-
- 0 replies
- 825 views
-
-
கல்விளான் படையினர் வசம்-பாதுகாப்பு அமைச்சகம் வீரகேசரி இணையம் 8/13/2008 3:17:02 PM - முல்லைத்தீவு கல்விளான் பகுதியை இராணுவத்தினர் இன்று தமது கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 18 replies
- 3.1k views
-
-
கடந்த ஞாயிறு அதிகாலை கிளாலியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவி விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 21 படையினர் கொல்லப்பட்டதை யாழ்ப்பாண சிறீலங்கா படைத்தரப்பு ஒத்துக் கொண்டுள்ளது. உயிரிழந்த 14 படையினரின் உடலங்கள் பலாலி தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் 2 பெண் போராளிகள் வீரமரணமடைந்து அவர்களின் உடலங்கள் யாழ் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தமை ஏலவே அறிவிக்கப்பட்ட செய்தியாகும். இத்தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பு இதுவரை எந்த அறிவிப்பையும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ------------- Tiger penetration attack kills 21 SLA in Northern Front [TamilNet, Tuesday, 12 August 2008, 11:44 GMT] T…
-
- 72 replies
- 10.7k views
-
-
-
இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்கிறது அவர்களுக்கு தொல்லை கொடுக்கிறது என்று விடுதலைப் புலிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனா. இது உண்மை அல்ல. இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பாகவே இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் இருக்கிறது. இலங்கைப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சு மூலமே தீர்வு காண இலங்கை அரசு விரும்புகிறது. இவ்வாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார் என தமிழக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளருக்கு பேட்டி கொடுக்கையில் மேலும் : நான் சொந்த பயணமாக இந்தியா வந்துள்ளேன். இலங்கையின் கிழக்குப் பகுதியில் இப்போது முழு அமைதி நிலவுகிறது. அனால் வடக்குப…
-
- 8 replies
- 2k views
-
-
தாய்நாட்டைத் துண்டாடுவதற்கு ஒரு போதும் பயங்கரவாதிகளுக்கு இடமளிக்க மாட்டேன் -ஜனாதிபதி மகிந்த சூளுரை [ வெள்ளிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2008, 07:00.50 AM GMT +05:30 ] எனது உயிர் இருக்கும் வரையில் எனது தாய்நாட்டைத் துண்டாட இடமளிக்க மாட்டேன். இதில் ஏற்படும் எந்த ஒரு தடையையும் தகர்த்தெறியத் தயங்கமாட்டேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் முப்பத்தி இரண்டு குளங்களையும் அவற்றுடன் தொடர்புடைய கால்வாய்களையும் புனரமைப்புச் செய்யும் திட்டத்தினைப் பொலநறுவை பராக்கிரம சமுத்திரப் பகுதியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வின் பின் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்து உ…
-
- 0 replies
- 1.2k views
-
-
அரச படையினரால் 10 வருடங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணம் கைப்பற்றபட்டிருந்த போதிலும் அந்த பிரதேசத்தில் இதுவரை சிவில் நிர்வாகமோ மக்களின் வாழ்க்கையோ இன்னும் வழமைக்கு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கள் கடத்திச் செல்லப்படுதல் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளை தொடர்ந்தும் கேட்க முடிகிறது என அங்கு சென்றிருந்த சிங்கள இணையத்தளம் ஒன்றின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பொருட்களின் விலைகள், நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லையென்ற போதிலும் சீமெந்து ஒரு மூடை 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏனைய பயன்பாட்டு பொருட்களின் தட்டுப்பாடு, நியாயமற்ற விலை அதிகரிப்பு தொடர்பான …
-
- 0 replies
- 1.3k views
-