Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எழுவைதீவின் பனைவளத்தை பாதுகாக்க நடவடிக்கை – சிறீதரன் எம்.பி உறுதி Published By: VISHNU 29 MAR, 2023 | 04:12 PM எழுவைதீவின் பெருவளமாக உள்ள பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், கருவேலை மரங்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுவைதீவு மக்களிடம் தெரிவித்துள்ளார். எழுவைதீவு மக்களும், கடற்றொழிலாளர்களும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (28) எழுவைதீவில் நடைபெற்றுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் ஒழுங்குசெய்யப்பட்ட இக் கலந்துரையாடலில், அவர்களது அழைப்பின் பேரில் …

  2. குறைகிறது எரிபொருள் விலைகள் ! புதிய விலைகள் இதோ ! Published By: T. SARANYA 29 MAR, 2023 | 11:44 AM இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும், அதன் புதிய விலை 340 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றரின் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அதன் புதிய விலை 375 ரூபாவெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அதன் புதிய விலை 325 ரூபாவெனவும்…

  3. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் : நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ! kugenMarch 28, 2023 பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது.ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆ…

  4. சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – அனுர தரப்பு! சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால்…

  5. யாழில் போதைப்பொருள் விற்ற பெண்ணும் வாங்க சென்ற மாணவன் உள்ளிட்ட 10 பேரும் கைது 29 MAR, 2023 | 11:00 AM யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்று (29) மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வியாபாரியிடம் ஹெரோயின் வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும், கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. போதைப் ப…

  6. இன – மத ரீதியான வன்முறைகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது - டக்ளஸ் தேவானந்தா Published By: T. Saranya 29 Mar, 2023 | 10:45 AM இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துஷ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய…

  7. தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை! எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com…

  8. போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்…

  9. பிராந்தியத்திற்குள் பசுமை பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கை - ஜனாதிபதி Published By: T. Saranya 28 Mar, 2023 | 04:51 PM (எம்.மனோசித்ரா) பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை பசுமை வல…

    • 4 replies
    • 323 views
  10. மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறை தொடர்பில் இந்தியா - இலங்கைக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் Published By: T. SARANYA 28 MAR, 2023 | 03:06 PM (எம்.மனோசித்ரா) மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்பு தொடர்பில் இந்தியா இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2030 ஆம் ஆண்டு தொடக்கம் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையின் 70 சத வீதமானவை மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல் வளங்கள் மூலம் பெற்றுக்கொள்ளல், வலுசக்தி விநியோகத்தில் சுயாதீனமடைதல், மற்றும் 2050 ஆம் ஆண்டாகும் போது காபன் வெளியீட்டை பூச்சியமாக்குதல் போன்றவற்றை அரசு கொள்கைப் பிரகடனமாக வெளியிட்ட…

  11. சீன மொழியை தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் அரசு பயன்பாட்டு மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன், ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று மொழிகளை தவிர வேறு எந்தவொரு மொழியும் இலங்கையின் அரசியலமைப்பில் உள்வாங்கப்படவில்லை. எனினும், அரசியலமைப்பின் சரத்துக்களுக்கு அப்பாற் சென்று கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் அரச மொழியான தமிழ் மொழி அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடத்திற்கு சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. …

  12. வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு 'வட்டமான பர்வத விகாரை' எனும் பெயர் கூகுளில் காட்டப்படுகின்றது. வவுனியா - நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் அப்பகுதி மக்கள் நெடுங்காலமாக வழிப்பட்டு வந்த இடமாகும். இந்நிலையில் வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தனர். தொல்பொருள் திணைக்களம் அத்துடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸார், பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான கண்காணிப்பில் இருந்த வெட…

  13. எரிபொருள் விற்பனை வெகுவாக குறைவு-எதிர்காலத்தில் QR குறியீடு தேவையில்லை எரிபொருள் விநியோகம் செய்பவர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மாதாந்திர வருமானம் 30% – 40% வரை விற்பனையில் தொடர்ச்சியான குறைவு காரணமாக குறைந்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் இருப்பு ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும் எனவும் தற்போது அதற்கு மூன்று நான்கு நாட்கள் ஆகும் எனவும் ஒன்றியத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார். இந்நிலைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அதிக வங்கி வட்டிக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களை…

  14. இலங்கை அமைச்சர்களின் தென்னாபிரிக்க விஜயம் குறித்து தென்னாபிரிக்க மனித உரிமை அமைப்புகள் அதிருப்தி Published By: RAJEEBAN 28 MAR, 2023 | 04:50 PM இலங்கையின் யுத்தகுற்றத்துடன் தொடர்புடைய நபர்களை நல்லிணக்கம் மற்றும் நிலைமாற்றுக்கால நீதி அறிந்துகொள்வதற்காக தென்னாபிரிக்க அரசாங்கம் அழைத்துள்ளமை குறித்து அந்த நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைச்சர் நலெடி பன்டுரின் அழைப்பி…

  15. கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே கட்சியின் தலைவர் தெரிவு - இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் Published By: T. SARANYA 28 MAR, 2023 | 04:28 PM (எம்.நியூட்டன்) இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தலைவர் மற்றும் செயலாளர் கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள். யாரும் அவசரப்படுவதால் பயன் இல்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்வைக்கப்படுவதாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்ப…

  16. சிறுவர்களிடையே பரவும் வைரஸ் -சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் இதுபோன்ற வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் குழந்தைகளிடையே காணப்படுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கிடையே கண்சார்ந்த நோய் ஒன்று பரவி வருதாகவும் அது தொடர்பில் பெற்றோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளது. கண் சிவப்பாகுதல், கண்ணில் இருந்து நீர் வெளியேறுதல், கண் அரிப்பு மற்றும் இருமலுடன் தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நோய் அறிகுறிகள் தென்படுமாயின் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்…

  17. சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச அறிக்கையின் பிராந்திய வெளியீட்டு விழா இன்று Published By: DIGITAL DESK 5 28 MAR, 2023 | 09:23 AM (எம்.மனோசித்ரா) சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா உத்தியோகபூர்வ விஜயம்மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை (28)இடம்பெறவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச அறிக்கையின் பிராந்திய வெளியீட்டு விழாவில் பங்குபற்றுவதற்காகவே அவர் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா சிறப்புரையொன்றையும் ஆற்றவுள்ளமை விசேட அம்சமாகும். …

  18. ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமை அரசினுடைய பின்னணியிலேயே – மணிவண்ணன் குற்றச்சாட்டு! வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசினுடைய பின்னணி இருப்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது என யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காடையர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த செயற்பாடானது முற்று முழுதாக மத பிரிவினைவாதத்தை இங்கு தூண்டி அதில் குளிர்காய எடுக்கப்படுகின்ற ஒரு அரசியல் கலந்த நடவடிக்கையாகவே நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். இந்…

  19. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை – பிரதமர்! தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அர…

  20. முடிந்ததை கொடுங்கள்; இன்னும் 3 மாதங்களே உள்ளன - மைத்திரி மக்களிடம் கோரிக்கை Published By: NANTHINI 27 MAR, 2023 | 09:40 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 10 கோடி நஷ்ட ஈடு செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்ததன் பின்னர் நான் சிறை செல்ல நேரிடுமா என்பது எனக்குத் தெரியாது. எனவே, எனக்கான கால அவகாசம் நிறைவடையும் முன் இயன்ற நிதி உதவியை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சஹரானுடன் தொடர்புகளை பேணாமல், குண்டு தாக்குதல்களையும் மேற்கொள்ளாமல் பாரிய தொகையை நஷ்ட ஈடாக செலுத்தும் நிலைமைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்…

  21. அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக, ஆளும் கட்சிக்கு ஜனாதிபதி அறிவிப்பு? அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக விசேட நபர் ஒருவரின் ஊடாக ஜனாதிபதி, ஆளும் கட்சிக்கு அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி 4 வருடங்களின் பின்னர் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த முடியும். எவ்வாறாயினும் பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவருக்கு தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் குறித்த சந்தர்ப்பம் வழங்கப்பட மா…

  22. பௌத்த மயமாக்கலுக்கு எதிராக தெற்கில் போராடினால் இணைந்து கொள்வோம் – யாழ். மாணவர்கள் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை தெற்கில் செய்துகாட்டினால் இணைந்து போராடத் தயார் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், வசந்த முதலிகேவிடம் தெரிவித்துள்ளனர். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவத்தை கண்டித்து நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின் பின்னரே அவர்கள் இந்த நிபந்தனையை முன்வைத்துள்ளனர். அண்மையில் தம்மால் கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என வசந்த முதலிகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இருப்பினும் தங்களது தரப்பில் இருந்து பத்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக யாழ். பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய உபதலைவர் இரா.தர்ஷன் தெ…

  23. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய மீண்டும் இந்தியாவிடம் கடன் கோரும் இலங்கை நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தற்காலிக கடன் வசதியாக பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இந்தியாவில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் உரங்களை கொண்டு வர இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி வழங்கப்பட்டது. நாட்டிற்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவை பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றை திருப்பிச் செலுத்த …

  24. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட தொகையில் இந்தியக் கடன் செலுத்தப்பட்டது - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய Published By: T. SARANYA 25 MAR, 2023 | 12:45 PM (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதற்கட்டமாகப் பெற்றுக் கொண்ட 330 மில்லியன் டொலரில் , 121 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தின் முதற் தவணையை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார். இவ்வாறு கடன் மீள் செலுத்தப்பட்டுள்ளமையானது , கடன் ஸ்திரத்தன்மையை பேணுவதற் உதவுவதோடு , எமக்கு உதவிய நாடுகளின் நம்பிக்கையை காப்பாற்றுவதில் சாதகமான தாக்கத்தை செலுத்தும் என்றும் நிதி இராஜாங்க அமைச…

  25. சூரிய சக்தியில் இயங்கும் 500 வீட்டு சமையல் சாதனங்கள் இலங்கைக்கு நன்கொடை ! இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சின் செயலாளர் பன்கஜ் ஜேன் உள்ளிட்ட குழாத்தினரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். சூரிய சக்தியில் இயங்கும் 500 வீட்டு சமையல் சாதனங்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக லங்கா IOC அதன் விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட ஜெக்கட் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இதன்போது வழங்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.