ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற ஒட்டுக்குழு அமைப்பைச் சார்ந்தோர் 1000 பேரை சிறீலங்கா இராணுவத்துக்குள்ளும்.. பொலீஸுக்குள்ளும் உள்வாங்கும் வேலைகளை ஆரம்பிக்க மேற்படி அமைப்பு சிறீலங்கா அரசைக் கோரியுள்ளது. ஏற்கனவே சுமார் 1500 ஆயுதப் பயிற்சி பெற்ற கருணா குழு உறுப்பினர்கள் அரச ஆதரவு மற்றும் பொது தொண்டு நிறுவனங்களின் உதவியோடு புனருத்தாரன பயிற்சி அளிக்கப்பட்டு சிறீலங்காவின் மக்கள் பாதுகாப்பு படை (Civil Defence Force ) அங்கம் பெற தயார்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறீலங்காவின் சிவில் பாதுகாப்பு படையில் அங்கம் பெறுபவர்கள் பின்னர் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு பணிக…
-
- 7 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சி, முல்லைத்தீவு வெகுவிரைவில் கைப்பற்றப்படும் : ராஜபக்ஸ ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகியவற்றை சிறீலங்கா படையினர் வெகுவிரைவில் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றுவார்கள் என்று கடந்த சனிக்கிழமை மாகாணசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இராணுவத்தினர் இவ்இரு மாவட்டங்களையும் மீட்பதற்கு அதிககாலம் தேவைப்படாது எனவும் கிழக்கினை விடுவித்து ஜனநாயகத்தினை ஏற்படுத்தியதைபோல் இவ்இருமாவட்டங்களையும் படையினர் மீட்பர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை படையினர் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் படையினர் களமுனைகளில் சடுதியான முன்னே…
-
- 0 replies
- 630 views
-
-
சரியான தகவல்களின் பின்னரே கருத்து வெளியிட்டுள்ளோம் : சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற குழுத்தலைவர் ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்காவிற்கு அண்மையில் விஜயத்தினை மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவினர் சிறீலங்காவின் மனித உரிமைகள்நிலை தொடர்பிலும் மற்றும் பல விமர்சனங்களை ஊடகங்களுக்கு முன்வைத்திருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் போகல்லாகம இச்செயல் பொறுப்பற்ற தன்மை என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடாளுமன்ற குழுத்தலைவர் றொபேர் இவன்ஸ் தாங்கள் சரியான தரவுகளின் அடிப்படையிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாகவும் தாம் நட்பு ரீதியிலேயே சிறீலங்காவினை விமர்ச…
-
- 0 replies
- 594 views
-
-
இலங்கையில் அமைதி ஏற்படவேண்டும் எனில் தமிழீழ விடுதலைப் புலிகள் படைத்துறை ரீதியாக முறியடிக்கப்பட வேண்டும் என நான் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது என்று கொழும்பு மாவட்ட போரயர் வண கலாநிதி ஒஸ்வொல்ட் கொமிஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 576 views
-
-
வழமையைவிட முன்னதாக வருமாறு விமானப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வீரகேசரி வாரவெளியீடு 7/27/2008 8:13:47 AM - சார்க் உச்சி மாநாடு நடைபெறும் காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கும் பயணிகள் வழமையை விட முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வந்து சேருமாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய முகாமையாளர் பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று ஆரம்பமாக உள்ள சார்க் மாநாடு எதிர்வரும் மூன்றாம் திகதிவரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு பிரதிநிதிகள் வருவதால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் என்றார். இவ்வேண்டுகோளை பயணிகளிடம் விடுத்திருப்பதாக விமான நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.
-
- 0 replies
- 627 views
-
-
உள்ளகப் பாதுகாவல் பயிற்சியைப் பெற்ற ஒரு தொகுதியினர் வெளியேறினர் [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 03:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] லெப். கேணல் சூட் பயிற்சிப் பாசறையில் உள்ளகப் பாதுகாவல் பயிற்சியைப் பெற்ற ஒரு தொகுதியினர் நேற்று சனிக்கிழமை வெளியேறி உள்ளனர். இந்நிகழ்வு ஜேந்தன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்சுடரினை பொறுப்பாளர்களில் ஒருவரான நளன் ஏற்ற, தமிழீழ தேசியக் கொடியினை பயிற்சி ஆசிரியர் ஆழியன் ஏற்றினார். லெப். கேணல் சூட்டின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை முல்லைத்தீவு மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்பழகன் ஏற்ற, மலர்மாலையினை பொறுப்பாளர்களில் ஒருவரான நிலவன், பொறுப்பாளர்களில் ஒருவரான கண்ணப்பன், பொறுப்பாளர்களில் ஒருவரான செ…
-
- 18 replies
- 2.6k views
-
-
படையினர் குவிக்கப்பட்டபோதும் பூனையைக் கூட பிடிக்க முடியாத நிலை; ருக்மன் எம்.பி. ஜீவா சதாசிவம் யால சரணாலயப் பகுதியில் புலிகளின் ஊடுருவல்களும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனநாயக்கா அப்பகுதியில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களால் இதுவரை ஒரு புலிக்குட்டியையோ, பூனைக்குட்டியையோ பிடிக்க முடியாதுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; வனங்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். வனப் பாதுகாப்பு திண…
-
- 0 replies
- 558 views
-
-
சிறீலங்கா அரசுக்கு யப்பான் அரசாங்கம் இரகசிய படைத்துறை உதவிகளை புரிகின்றமை தெரிய வந்துள்ளது.தற்பொழுது கொழும்பிலுள்ள யப்பானிய அரசாங்க குழுவொன்று, சிறீலங்கா படையினருக்கு அவசர சிகிச்சை ஊர்திகள், மற்றும் பல மருந்துப் பொருள்களை வழங்கவுள்ளனர். மேலும் யப்பான் அரசாங்கம் படைத்துறை உபகரணங்களை வழங்க இருப்பதாகவும் தெரியவருகின்றது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/japan-...2008-07-27.html
-
- 1 reply
- 841 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் வீழச்சி கண்டு வருகின்றனர். அவர்களை முறியடிப்பதற்கு மேலும் 10 ஆயிரம் இராணுவத்தினர் தேவை. எனவே இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் மீண்டும் வர வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 1.4k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு 7/27/2008 8:23:06 AM - மோதல் காரணமாக அகதிகளாகி கிளிநொச்சி பகுதியில் நிர்க்கதியாகி நிற்கும் மக்களின் நிலை தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின
-
- 0 replies
- 584 views
-
-
சார்க்” மாநாட்டுக்காக வரும் மன்மோகன்சிங், பிள்ளையானையும் சந்திக்கிறார் சார்க்” மாநாட்டுக்காக இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக சண்டே டைம்ஸ் செய்திதாள் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக, வடக்குகிழக்கு மாகாணத்தை பிரித்து கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்தி அதன் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஒருவரை இந்திய பிரதமர் சந்திப்பதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்திய பிரதமர் சிவநேசதுரையை சந்திப்பது இந்தியா, கிழக்கு மாகாணத்தை அங்கீகரிப்பதாக அமைந்து விடும் என்ற நிலைப்பாட்டையும் கொடுத்து விடும் என ஆய்வாளர்கள் கருதுவதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. எனினும…
-
- 0 replies
- 789 views
-
-
பயங்கரவாத நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கு சார்க் பிராந்திய வலய நாடுகள் இணைந்து செயற்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன தெரிவித்துள்ளார். பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சினையாக பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வு தவல்களை பிராந்திய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் விசேட திட்டமொன்றை இலங்கை மாநாட்டின் போது முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சண்டே ஒப்சர்வர் வார இதழுக்கு அளித்த விசேட செவ்வியின் போது வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பயங்கரவாத ஒழிப்பு, உலகம் வெப்பமாதல் மற்றும் கடல் மட்டம் உயர்வடைதல் போன்ற விடயங்கள் தொடர்பாக …
-
- 0 replies
- 444 views
-
-
யாழ்.கொடிகாமம் பெரிய நாவலடியைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயாரான எம்.வனிதமணி (வயது 25) என்பவர் நேற்று சனிக்கிழமை சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இதேவேளை, இப்பெண்ணின் கணவர் கொடிகாமம் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாகவும் மேலும் அந்த செய்தி தெரிவிக்கின்றது . நிருபர்:அன்பு http://www.tamilseythi.com/srilanka/jaffna-2008-07-27.html
-
- 0 replies
- 680 views
-
-
மன்னார் வவுனியா போர் அரங்குகளில் தற்போது படையினரின் முன்னகர்வு அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 16ஆம் திகதி விடத்தல்தீவைக் கைப்பற்றிய படையினர், அங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள இலுப்பைக்கடவையை 20ஆம் திகதி காலையில் கைப்பற்றியிருக்கின்றனர். இன்னொரு முனையில் வவுனிக்குளத்தின் மேற்குப் பகுதியில் 10 ச.கி.மீ பரப்பளவை கடந்த 24ஆம் திகதி கைப்பற்றியிருக்கின்றனர். 57ஆவது டிவிசன் துருப்புகள் இந்தப் பகுதியில் முன்னகர்வை மேற்கொண்ட போது புலிகள் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்து விட்டுப் பின்வாங்கியுள்ளனர். இந்த மோதலில் புலிகளின் 7 சடலங்களையும் 120 மி.மீ மோட்டார் மற்றும் 81மி.மீ மோட்டார்கள் இரண்டு உள்ளிட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியதாகப் படைத்தரப்பு அறிவித் …
-
- 9 replies
- 3.3k views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கான தாக்குதல்களை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். இதனால் விடு முறையில் சென்றுள்ள இராணுவத்தினர் உடனடியாக பணிக்குத் திரும்பவேண்டும். வரத் தவறுபவர்கள் மீது இராணுவ நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது கூறினார். விபரம் http://swissmurasam.info/content/view/7968/26/
-
- 0 replies
- 650 views
-
-
விடுதலைப்புலிகளின் மரபுவழி இராணுவமாக போரிடும் திறனை தாம் முற்றாக அழித்துவிட்டதாகவும் அவர்களால் இனிமேல் படையினர் மீது மரபுவழி தாக்குதல்களை மேற்கொள்ளமுடியாது என்றும் கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் மார் தட்டியிருக்கிறார் இராணுவ தளபதி லெப்ரினென்ட் ஜெனரல் சரத் பொன்சேகா. விபரம் http://www.swissmurasam.info/content/blogcategory/8/31/
-
- 4 replies
- 2.7k views
-
-
கொழும்பு பேராயர் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்காக வத்திகான் வானொலிக்கு தெரிவித்ததாக சொல்லப்பட்டு வந்த செய்திகள் அரசால் திரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்று கொழும்பு பேராயர் 26-07-2008 திகதியிட்டு விட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார். பெரும்பாலான சிங்களவர்கள் புலிகளை அழித்தால் தான் சமாதானம் வரும் என்று நம்புகிறார்கள் என்ற தகவலையே பேராயர் பகிர்ந்து கொண்டதாகவும்.. அதுவே தனது நிலைப்பாடு என்பதாக கருத முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். (அண்மைய கணக்கெடுப்புகளில் சிங்களவர்களில் பெரும்பாலானோர் அப்படியான அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பது வெளிப்பட்டிருந்தது ஊடகங்கள் மூலம் செய்தியாக்கப்பட்டிருந்தன.) Archbishop of Colombo blames government for…
-
- 1 reply
- 813 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - பதினைந்தாவது சார்க் உச்சிமாநாடு பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல்களுடன் இன்று காலை ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நடைபெற உள்ள உச்சி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது. இன்றும் நாளையும் சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளின் உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடைபெறும். ஜூலை 29ஆம் 30ஆம் திகதிகளில் வெளியுறவு செயலாளர்களின் மாநாடும், ஜூலை 31ஆம் திகதியும் ஆகஸ்ட் முதலாம் திகதியும் வெளி நாட்டமைச்சர்களின் மாநாடும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் இரண்டாம் மூன்றாம் திகதிகளில் சார்க் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளத…
-
- 0 replies
- 788 views
-
-
கிழக்கு மாகாண சபையும் முஸ்லிம் காங்கிரஸும் வீரகேசரி வாரவெளியீடு 7/27/2008 9:11:20 AM - கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பொத்துவில், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம் காங்கிரஸிலிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்தும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். நிந்தவூர் கிராமத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே வேட்பாளரை நிறுத்தியது. மு.கா. வின் செயலாளர் எம்.ரீ. ஹஸன் அலியே நிந்தவூரின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். நிந்தவூரிலும் வேறு கிராமங்களிலும் ஹஸன் அலிக்கு இருக்கின்ற செல்வாக்கின் காரணமாக நிந்தவூரில் வேறு ஒருவரும் போட்டியிட முன்வரவில்லை என்பதே இப்பிரதே…
-
- 0 replies
- 416 views
-
-
சிறீலங்காவினால் 65 மில்லியன் ரூபா செலவில் லொபி குழு அமர்த்தப்பட்டுள்ளது ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்கா அரசாங்கம் பலகன மில்லின் டொலர்கள் செலவில் சிறீலங்காவுக்கு அனைத்துல நாடுகள் வழங்கும் உதவிகளைத் காப்பாற்றுவதற்காக அனைத்துலக பரப்புரை வல்லுநர் குழுவினரை (லொபி குழு) பணம் செலுத்தி ஒரு வருட காலத்திற்கு அமர்த்தியுள்ளனர். சிறீலங்கா மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அனைத்துல உதவிகள் மட்டுப்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அமெரிக்கவின் சட்டநிறுவங்களின் ஒன்றான பிரவுண் ஸ்ரீன் ஹெயேட் பாவர் சிறேக் (Brownstein Hyatt Farber Schreck) 65 மில்லியன் ரூபா கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது என லக்பிம நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க…
-
- 0 replies
- 554 views
-
-
விடுதலைப் புலிகள் தொடர்பில் பராம் ஒபாமா மௌனம் ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] அமெரிக்க அதிபருக்குப் போட்டியிடும் பராக் ஒபாமா தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உள்ளகப் புனலாய்வு பிரிவான எவ்.பி.ஐ தமிழீழ விடுதலை புலிகள் மிக மோசமான பயங்கரவாத அமைப்பு எனக் கூறியிருந்த போதும் பராக் ஒபாமா விடுதலைப் புலிகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருகிறார். கடந்த வாரம் பேர்லினிக்கு வருகை தந்த ஒபாமா தலிபான் மற்றும் அல்கொய்தா அமைப்புகளின் பயங்கரவாதத்தை நாங்கள் தோற்கடிக்க வேண்டும் என கூறியிருந்தார். கடந்த சனவரி மாதம் இலங்கையில் இன முரண்பாடு தொடர்பில் கருத்துத் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில், சிறீலங்காவில் மக்கள் …
-
- 1 reply
- 954 views
-
-
Posted on : 2008-07-27 சர்வதேசத்திடம் அம்பலமாகும் தெற்கின் திருகுதாளங்கள் தெற்காசியாவுடனான உறவுகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட சமயம் தான் வெளியிட்ட அறிக்கையிலும்; செய்தியாளர் மாநாட்டிலும் இலங்கை அரசுக்கு சூடாகவே கொடுத்திருக்கின்றது. * மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் அர சின் போக்குக்குக்கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டி ருக்கின்றது. * மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச கவலைகள் குறித்து இலங்கை அதிகம் சிரத்தை எடுத்து, அவற்றுக்குப் பரிகாரம் காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேசப் பட்டயங்கள் தொடர்பான தனது கடப்பபாடு களை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்த ஆவன செய்யாவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்ற…
-
- 0 replies
- 529 views
-
-
மன்னார் களமுனை குழப்பமான ஊகங் களை பல மட்டங்களிலும் ஏற்படுத்தி உள்ள வேளையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட அடுத்த நகர்வு பிராந்திய வல்லரசாக தன்னை தக்கவைக்க முயலும் இந்தியாவையும், இலங்கை அரசையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி யுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை இந்திய அரசும் இலங்கை அரசும் தமக்கு சாதகமான விவாதங்களின் போதும், அதற்கு அனுசரணை வழங்க நோர்வே முன்வந்த போதும் இலங்கையின் இறையாண்மை குறித்து அழுத்தமான கருத்துக்களை வெளியிட்டுவந்த அராங்கம் இந்திய படையினரின் தரையிறக்கத்தினால் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விடுதலைப்புலிகளின் மீது சுமத்த முற்பட்டிருந்தது. இதேவேளை, தென்ஆசிய பிராந்தியத்தில் இந்திய அரசு மேற் கொண்டு வரும் இராஜதந் திர நகர்வுகளுக்கு ஆதரவாக அண் மைக…
-
- 1 reply
- 1.9k views
-
-
துணுக்காயில் வல்வளைப்பு முயற்சி முறியடிப்பு: 25 படையினர் பலி- 40 பேர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 08:30 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கல்விளான் நகரை வல்வளைப்புச்செய்யும் நோக்கிலான சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25 படையினர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். படைப் பொருட்கள் உட்பட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. துணுக்காயில் உள்ள கல்விளான் நகரை நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு வல்வளைப்புச் செய்யும் நோக்கில் செறிவான ஆட்டிலெறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடி…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
சிங்கள மொழியை கற்பதற்கே தற்போது அதிக நேரத்தை செலவிடுவதாக கருணா தெரிவித்துள்ளார். சிங்களம் பேச கூடிய ஒருவராக நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மொழியை தவிர தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியும் என தெரிவித்துள்ள அவர் அனைத்து தமிழர்களுக்கும் சிங்கள மொழியையும், சிங்களவர்களுக்கு தமிழ் மொழியையும் கற்க சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தமிழர்களுக்கு சிங்களமும், சிங்களவர்களுக்கு தமிழும் கற்க வழியேற்படுத்துவதன் மூலம், சிறந்த புரிந்துணர்வுடன் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என கருணா கூறியுள்ளார். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspo…
-
- 28 replies
- 8.8k views
-