ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
இலங்கை சிங்களவர்களாலேயே ஆளப்படும் - தளபதி சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை ஒரு நாட்டில் ஆள்வார்களாயின் அது பெரும் ஆபத்துக்கு உரியதாகும். அது பெரும் பிரச்சினையாக அமையும் எனவும் அது நடைபெற முடியாத ஒன்றாகும் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த நாடு எப்போதும் 74 சதவீதத்தினரான சிங்கள இனத்தவராலேயே ஆளப்படும். இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டுமெனில், நாம் உயிர்வாழ வேண்டுமானால், நாம் தியாகம் செய்தே ஆக வேண்டும். இந்த வேளையில் சாதாரண மக்களுக்கு பொருளாதாரக் கஷ்டங்கள் தவிர்க்க முடியாதவையே. அரச சார்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பண வீக்கம் 29 சத வீதத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
சார்க் மாநாட்டை குழப்புவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கவில்லை. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் சுதந்திரப் பேராட்டத்திற்கு பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 2.1k views
-
-
த.தே.தொலைக்காட்சியின் அவசிய அறிக்கை- 42 பார்வையிட...
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார், பூநகரி நாச்சிக்குடாவில் விடுதலைப் புலிகளின் 8 சிறிய படகுகள் மீது சிறீலங்கா கடற்படையினரும், வான் படையினரும் கூட்டாக தாக்குதல் நடத்தியிருப்பதாக, சிறீலங்காபாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.நடைபற்ற தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் 6 படகுகள் முற்றாக மூழ்கடிப்பட்டதுடன், எஞ்சிய இரண்டு படகுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க..
-
- 0 replies
- 762 views
-
-
மட்டக்களப்பு காரைதீவு முருகன் ஆலய ஆடிவேல் தீர்த்தோற்சவத்தில் 6 இளைஞர்கள் கடலில் முழ்கினர் திங்கள், 21 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்ற காரைதீவு முருகன் ஆலய வருடாந்த உற்சவ இறுதி நாளான ஆடிவேல் தீர்த்தோற்சவ நிகழ்விற்காக கடலுக்கு சென்ற வேளையில் 6 இளைஞர்கள் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் நால்வர் மீட்கப்பட்டுள்ளனர். செல்லத்துரை ஜனார்த்தனன், காண்டீபன் தனுஷாந் ஆகிய இரு இளைஞர்களுமே கடலில் மூழ்கியவர்களாவர். இருவரும் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை குறித்த இருவரது உடலங்களும் கரை ஒதுங்கியுள்ளது. http://www.…
-
- 0 replies
- 713 views
-
-
TYO-UK are holding a 25 hour vigil to commemorate Black July 1983. It has been 25 years since this terrible incident, yet the genocide against Tamils continue. We believe it is our duty to inform the International Community of the atrocities that took place 25 years ago. We will be holding an exhibition, performing role plays, distributing cards and Tamil refreshments/snacks to the public, staying awake for 25 hours, in order to make a stand. This vigil is to be conducted by TYO-worldwide, all beginning at the same time and ending it 25 hours later. It will begin on Friday 25th July at 3.00pm and end on Saturday 26th July at 5.00pm, one hour extra …
-
- 0 replies
- 799 views
-
-
இனங்காணப்படாத நோயினால் பீடிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் பெரியதம்பனை பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார், நோயினால் பீடிக்கப்பட்ட இந்த சிப்பாய் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்த இனங்காணப்படாத நோயயினால் பீடிக்கப்பட்ட மற்றுமொரு சிப்பாய் வவுனியா வைத்தியாசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 11 replies
- 2.4k views
-
-
உங்கள் முழுமையான ஆதரவையும் தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் BLACK JULY RALLY Thursday, July 24 12 Noon Washington DC Commemorate the 25th anniversary of Black July with hundreds of fellow Tamil Americans! Remember those 3000 Tamils who died in 1983 Riots in Sri Lanka.. Save the date! Be sure to attend this historic event! This anniversary is once in a lifetime - show your solidarity with Tamils around the world http://tamilthesiyam.blogspot.com/2008/07/blog-post_4604.html
-
- 1 reply
- 958 views
-
-
July 18th - 22nd Toronto City Hall 100 Queen St. West, Toronto, July 23rd - 25th Scarborough Civic Centre 150 Borough Drive, Scarborough, July 29th - 31st Regional Municipality of York, Great Hall17250 Yonge Street, Newmarket, ON அனைவரையும் உங்கள் வேற்றின நணபர்களையும் அழைத்து வருமாறு அன்புடன் அழைக்கிறோம் நன்றிகள் அமைப்பாளர்கள் http://tamilthesiyam.blogspot.com/2008/07/blog-post_9813.html
-
- 0 replies
- 756 views
-
-
சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு. கிளிநொச்சியை முழுமையாகக் கைப்பற்றி அதனைக் கொண்டாடும் நாள் வெகு விரைவில் இல்லை. விடுதலைப் புலிகள் தற்போது பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளனர். விடத்தல் தீவை விடுதலைப் புலிகள் கைப்பற்றியது கடற்புலிகளினது தளபதி சூசைக்கு இது பாரிய தோல்வி என அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல மேலும்
-
- 35 replies
- 3.6k views
-
-
யாழ்பாணத்திற்க்கு, இலங்கை டயலொக் நிறுவனத்தால் 3G தொலைபேசி சேவை அறிமுகம்.
-
- 27 replies
- 3.4k views
-
-
சிறிலங்காவில் இயங்கும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கும் அவற்றில் பணிபுரிபவர்களுக்கும் சிறிலங்கா அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 496 views
-
-
பருத்தித்துறை, தம்பசிட்டிப் பகுதியில் வீடொன்றில் தனித்திருந்த வயோதிபரொருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தரான ஆறுமுகம் தங்க வடிவேல் என்பவரே எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த முதியவரின் மனைவி இறந்து விட்டதாகவும் மகள் வெளிநாட்டிலிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் தங்கச் சங்கிலி அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில், இவரின் வீட்டிற்குள்ளிருந்த பொருட்களை இவருக்கு மேல் போட்டுக் கொழுத்தியே இவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறை மேலதிக மாவட்ட நீதிபதி எ.ஜி.அலெக்ஸ்ராஜா விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை யாழ்…
-
- 1 reply
- 951 views
-
-
இலங்கை பாதுகாப்பு படையினர் கடந்த 20 வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே யுத்தத்தை முன்னெடுக்கும் படையினருக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என சிறீலங்காத் தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி அஸ்கிரி மாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கை ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலுக்கமைய பாதுகாப்புப் படையினர் விரைவில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பர் என அஸ்கிரி மாநாயக்க தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யுத்த முன்னெடுப்புகளில் முன்னாள் தளபதிகள் கொழும்பிலிருந்தே படையினரை வழிநடத்துவார்கள் எனவும் தற்போது படைத்தளபதிகள் எதிரிகளுக்கு எதிராக யுத்த முனைகளில் போரிட்டு வரு…
-
- 0 replies
- 641 views
-
-
கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு போதிய நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சபை ஆளுநர் கொமடோர் மொஹான் ஜயவிக்கிர இந்தக் கோரிக் கையை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் கடந்த நவம்பர் மாதத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப் பட்ட போது, கிழக்கு மாகாணசபை இயங்காததால் அதற்கென நிதி ஒதுக்கீடு செய்யப் பட வில்லை. கிழக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப் பட்டு நிர்வாகம் ஒன்று தெரிவுசெய்யப் பட்ட போதிலும் நிதி ஒதக்கீடு வழங்கப் படாததால் சபை தனது அலுவல்களை முழு அளவில் செயற்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படு கின்றது. இந் நிலையில் நிதி உதவி கோரி ஆளு நர் அவசர கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். சேதமடைந்…
-
- 0 replies
- 526 views
-
-
மட்டக்களப்பு, பாலமீன்மடுவில் கடந்த புதன்கிழமை புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மொத்தம் பதினாறு பேர்களினுடையன என்று அவற்றை ஆய்வு செய்த சட்டவைத்திய அதிகாரி உறுதிசெய்துள்ளார். பொலிஸ் பேச்சாளர் எஸ்.ரஞ்சித் குண சேகர இத்தகவலைத் தெரிவித்தார். ஆறு வருடங்களுக்கு முன்னர் கொல் லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் சட லங்களின் எச்சங்களே அவை என்றும் சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சட்ட வைத்திய மற்றும் மரபணுப் பரிசோத னைக்காக நாளை கொழும்புப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கப் பட விருக்கின்றன. மட்டக்களப்பில் இராணுவக் கட்டுப் பாட்டுப்பகுதியான பாலமீன்மடு கிராமத் தில் பொது…
-
- 0 replies
- 554 views
-
-
கண்டி அரச வங்கியில் பணியாற்றும் தமிழ் இளைஞர் ஒருவரை காவற்துறையினர் கைது செய்யுனர். பணியாற்றும் கணணி இயங்குனராக பணியாற்றிய இந்த இளைஞன் மீது, கண்டியில் உள்ள பாதுகாப்பு துறை பேச்சாளரும் அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெலயின் வீட்டை வீடியே படம் எடுத்தததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். தென்மராட்சிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்படட இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். சாவகச்சேரி மடத்தடிப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படை அரண்மீது நேற்று முன்தினமிரவு 7.30 மணிக்கு மீசாலை வேம்பிராய்ச் சந்தியில் உள்ள படை அரண்மீது அதே இரவு 8.30 மணிக்கும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. இந்த இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 568 views
-
-
பாராளுமன்றத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட சுகாதார அமைச்சரும், அவைத் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வாவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றன. இந்திய படையினரோ விமானங்களோ சார்க் மாநாட்டின் போது இலங்கையில் கடமையில் ஈடுபடுத்தப்படாதென அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். எனினும், இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு இந்திய விசேட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும், இலங்கை வான் மற்றும் கடற்பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, ஜனநாயகத்தின் அதி உயர் பீடமாக …
-
- 0 replies
- 714 views
-
-
காத்தான்குடி பிரதேசத்தில் மீண்டும் பயில்வான்களின் விசுவாசிகளின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமென்று நடைபெற்றது. காத்தான்குடி பிரதேசத்தில் அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையில் இயங்கி வந்த பயில்கானின் கொள்கையை பின்பற்றும் இஸ்லாத்துக்கு முற்றிலும் எதிரான தரீக் கதுல் முப்லிஹீன் காரியாலயம் சட்டத்தை மீறி நிர்மாணிக்கபட்டுள்ளது என்று காத்தான்குடி நகரசபை உட்பட பிரதேச அனைத்தும் சமய, சமூக அமைப்புக்கள், நிறுவனங்கள் வழக்கு தாக்கல் செய்தது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இக்கட்டத்தை தகர்த்ததுடன் பயில்வானின் சடலமும் அகற்றபட்டது. இச் சம்பவத்தின் போது காத்தான்குடி பிரதேச வாசிகள் மூவர் உயிரிந்தமையும் குறிப்பிடபட்டது. இ…
-
- 0 replies
- 869 views
-
-
யாழில் இருந்து தென்பகுதி விமானசேவை சார்க்மாநாடு முடியும்வரை நிறுத்தப்படும்! யாழ் குடாநாட்டிலிருந்து தென்பகுதிக்குச் செல்வதற்கான விமானசேவை எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து சார்க்மாநாடு முடியும்வரை முழுமையாக நிறுத்தப்படுமென படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 562 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பதுங்கிச் சூட்டுத்தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 436 views
-
-
புதுடெல்லி சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2008 தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து, இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் எந்த பலனும் ஏற்படவில்லை. கடந்த வாரம் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து,. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி மத்திய அரசை வலியுறுத்தி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஒருநாள் அடையாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மத்திய அரச…
-
- 0 replies
- 581 views
-
-
சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்கள், நில ஆக்கிரமிப்புக்கள், எறிகணைத் தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக வன்னியின் மேற்குப் பகுதியில் பாரிய மக்கள் அவலம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.3k views
-
-
வெளிநாடுகளில் குறிப்பிட்ட காலம் இருந்தவர்கள் நாடு திரும்பும் போது கொண்டு வரும் பொருட்களுக்கு வழங்கப்பட்டிருந்த வரிச்சலுகையை அரசாங்கம் நீக்குவதற்கு உத்தேசித்துள்ளது. ஏழு பொருட்களுக்கான வரிச்சலுகை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நீக்கப்படவுள்ள தாக சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி 29 மற்றும் 32அங்குல தொலைக்காட்சிப்பெட்டிகள், குளிரூட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், தன்னியக்க சலவை இயந்திரங்கள், ரெபிரிஜிரேடர்கள், நான்கு அடுப்புகளை கொண்ட கேஸ் அடுப்புகள் ஆகிய பொருட்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரிச்சலுகை நீக்கப்படவுள்ளது. வெளிநாடுகளில் குறிப்பிட்ட காலம் இருப்பவர்கள் நாடு திரும்பும் போது ஆயிரத்து ஐந்நூறு டொலர் பெறுமதியான பொருட்களை கொண்டு வருவதற்கு வரி விதிக்கப்படுவதில…
-
- 0 replies
- 707 views
-