Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். தென்மராட்சி மிருசுவில் பகுதியிலிருந்த பதினாறு குடும்பங்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு சிறிலங்காப் படையினர் நிர்ப்பந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 635 views
  2. துணுக்காயில் வல்வளைப்பு முயற்சி முறியடிப்பு: 25 படையினர் பலி- 40 பேர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 08:30 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கல்விளான் நகரை வல்வளைப்புச்செய்யும் நோக்கிலான சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25 படையினர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். படைப் பொருட்கள் உட்பட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. துணுக்காயில் உள்ள கல்விளான் நகரை நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு வல்வளைப்புச் செய்யும் நோக்கில் செறிவான ஆட்டிலெறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடி…

  3. வவுனிக்குளம் மற்றும் அதனோடு இணைந்த பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலைவரை நடைபெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய 33 போராளிகளின் வித்துடல்களைக் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. விலை மதிக்க முடியாத தமது இன்னுயிர்களை விடுதலைக்காக ஈந்த இந்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்துவோம்.

    • 46 replies
    • 7.8k views
  4. புலிகள் அடுத்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பதுதான் இன்றைய நிலையில் முதன்மையான கேள்வியாகும். இன்று சாதாரண தமிழ் மக்களிலிருந்து அரசியல் நோக்கர்கள் வரை இந்த கேள்வியில்தான் கட்டுண்டு கிடக்கின்றனர். சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் சில நேரங்களில் இது ஒரு புரியாத புதிராகவும் சில நேரங்களில் வேதனைக்குரிய விடயமாகவும் இருக்கலாம். அரசியல் நோக்கர்களைப் பொறுத்தவரையில் இந்தக்கேள்வி, புதிய புதிய ஊகங்களுக்கும், ஆய்வுகளுக்குமான களத்தை தொடர்ந்தும் விரித்துச் செல்லும் ஆய்வுப்பொருளாக இருக்கலாம். ஆனால், சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து வருகின்றனர். இன்னும் சிறிது காலத்திற்குள் அவர்கள் பூண்டோடு அழிந்துவிடுவார்கள். சிங்கள நிகழ்சி நிரலை அப்ப…

    • 0 replies
    • 1.6k views
  5. கிளிநொச்சி, முல்லைத்தீவு வெகுவிரைவில் கைப்பற்றப்படும் : ராஜபக்ஸ ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகியவற்றை சிறீலங்கா படையினர் வெகுவிரைவில் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றுவார்கள் என்று கடந்த சனிக்கிழமை மாகாணசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இராணுவத்தினர் இவ்இரு மாவட்டங்களையும் மீட்பதற்கு அதிககாலம் தேவைப்படாது எனவும் கிழக்கினை விடுவித்து ஜனநாயகத்தினை ஏற்படுத்தியதைபோல் இவ்இருமாவட்டங்களையும் படையினர் மீட்பர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை படையினர் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் படையினர் களமுனைகளில் சடுதியான முன்னே…

  6. சரியான தகவல்களின் பின்னரே கருத்து வெளியிட்டுள்ளோம் : சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற குழுத்தலைவர் ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்காவிற்கு அண்மையில் விஜயத்தினை மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவினர் சிறீலங்காவின் மனித உரிமைகள்நிலை தொடர்பிலும் மற்றும் பல விமர்சனங்களை ஊடகங்களுக்கு முன்வைத்திருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் போகல்லாகம இச்செயல் பொறுப்பற்ற தன்மை என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடாளுமன்ற குழுத்தலைவர் றொபேர் இவன்ஸ் தாங்கள் சரியான தரவுகளின் அடிப்படையிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாகவும் தாம் நட்பு ரீதியிலேயே சிறீலங்காவினை விமர்ச…

  7. இலங்கையில் அமைதி ஏற்படவேண்டும் எனில் தமிழீழ விடுதலைப் புலிகள் படைத்துறை ரீதியாக முறியடிக்கப்பட வேண்டும் என நான் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது என்று கொழும்பு மாவட்ட போரயர் வண கலாநிதி ஒஸ்வொல்ட் கொமிஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 576 views
  8. வழமையைவிட முன்னதாக வருமாறு விமானப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வீரகேசரி வாரவெளியீடு 7/27/2008 8:13:47 AM - சார்க் உச்சி மாநாடு நடைபெறும் காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கும் பயணிகள் வழமையை விட முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வந்து சேருமாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய முகாமையாளர் பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று ஆரம்பமாக உள்ள சார்க் மாநாடு எதிர்வரும் மூன்றாம் திகதிவரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு பிரதிநிதிகள் வருவதால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் என்றார். இவ்வேண்டுகோளை பயணிகளிடம் விடுத்திருப்பதாக விமான நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

  9. 'புலிகளின் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. புலிகளின் வரலாற்றில் இது போன்ற பல யுத்த நிறுத்தங்கள் பல முன்னரும் அறிவிக்கபட்டன. பின்னர் அவை மீறபட்டன. இராணுவ ரீதியிலான தாயாரிப்புகளை மேற்கொள்வதற்குச் சாதகமாக இத்தகைய நடவடிக்கைகளை புலிகள் மேற்கொள்வது யாவரும் நன்கறிந்த விடயமே.' ஐரோப்பிய நாடளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று முன்தினம் அமைச்சனின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். இதன் போது அவ. இதைத் தெரிவித்துள்ளா.. மேலும் : தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு கௌரவமானதும் நிலையானதுமான அரசியில் தீர்வு கிட்ட வேண்டும். அதிகாரப் பரவலாக்களின் மூலமே அது சாத்தியப்படும். எமது கட்சி ஆரம்பம் தொட்டு முனவைத்து வந்த நடைமுறை…

    • 9 replies
    • 1.5k views
  10. படையினர் குவிக்கப்பட்டபோதும் பூனையைக் கூட பிடிக்க முடியாத நிலை; ருக்மன் எம்.பி. ஜீவா சதாசிவம் யால சரணாலயப் பகுதியில் புலிகளின் ஊடுருவல்களும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனநாயக்கா அப்பகுதியில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களால் இதுவரை ஒரு புலிக்குட்டியையோ, பூனைக்குட்டியையோ பிடிக்க முடியாதுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; வனங்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். வனப் பாதுகாப்பு திண…

    • 0 replies
    • 559 views
  11. சிறீலங்கா அரசுக்கு யப்பான் அரசாங்கம் இரகசிய படைத்துறை உதவிகளை புரிகின்றமை தெரிய வந்துள்ளது.தற்பொழுது கொழும்பிலுள்ள யப்பானிய அரசாங்க குழுவொன்று, சிறீலங்கா படையினருக்கு அவசர சிகிச்சை ஊர்திகள், மற்றும் பல மருந்துப் பொருள்களை வழங்கவுள்ளனர். மேலும் யப்பான் அரசாங்கம் படைத்துறை உபகரணங்களை வழங்க இருப்பதாகவும் தெரியவருகின்றது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/japan-...2008-07-27.html

  12. வீரகேசரி வாரவெளியீடு 7/27/2008 8:23:06 AM - மோதல் காரணமாக அகதிகளாகி கிளிநொச்சி பகுதியில் நிர்க்கதியாகி நிற்கும் மக்களின் நிலை தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின

  13. சார்க்” மாநாட்டுக்காக வரும் மன்மோகன்சிங், பிள்ளையானையும் சந்திக்கிறார் சார்க்” மாநாட்டுக்காக இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக சண்டே டைம்ஸ் செய்திதாள் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக, வடக்குகிழக்கு மாகாணத்தை பிரித்து கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்தி அதன் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஒருவரை இந்திய பிரதமர் சந்திப்பதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்திய பிரதமர் சிவநேசதுரையை சந்திப்பது இந்தியா, கிழக்கு மாகாணத்தை அங்கீகரிப்பதாக அமைந்து விடும் என்ற நிலைப்பாட்டையும் கொடுத்து விடும் என ஆய்வாளர்கள் கருதுவதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. எனினும…

  14. பயங்கரவாத நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கு சார்க் பிராந்திய வலய நாடுகள் இணைந்து செயற்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன தெரிவித்துள்ளார். பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சினையாக பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வு தவல்களை பிராந்திய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் விசேட திட்டமொன்றை இலங்கை மாநாட்டின் போது முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சண்டே ஒப்சர்வர் வார இதழுக்கு அளித்த விசேட செவ்வியின் போது வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பயங்கரவாத ஒழிப்பு, உலகம் வெப்பமாதல் மற்றும் கடல் மட்டம் உயர்வடைதல் போன்ற விடயங்கள் தொடர்பாக …

  15. யாழ்.கொடிகாமம் பெரிய நாவலடியைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயாரான எம்.வனிதமணி (வயது 25) என்பவர் நேற்று சனிக்கிழமை சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இதேவேளை, இப்பெண்ணின் கணவர் கொடிகாமம் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாகவும் மேலும் அந்த செய்தி தெரிவிக்கின்றது . நிருபர்:அன்பு http://www.tamilseythi.com/srilanka/jaffna-2008-07-27.html

    • 0 replies
    • 680 views
  16. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கான தாக்குதல்களை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். இதனால் விடு முறையில் சென்றுள்ள இராணுவத்தினர் உடனடியாக பணிக்குத் திரும்பவேண்டும். வரத் தவறுபவர்கள் மீது இராணுவ நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது கூறினார். விபரம் http://swissmurasam.info/content/view/7968/26/

  17. கொழும்பு பேராயர் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்காக வத்திகான் வானொலிக்கு தெரிவித்ததாக சொல்லப்பட்டு வந்த செய்திகள் அரசால் திரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்று கொழும்பு பேராயர் 26-07-2008 திகதியிட்டு விட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார். பெரும்பாலான சிங்களவர்கள் புலிகளை அழித்தால் தான் சமாதானம் வரும் என்று நம்புகிறார்கள் என்ற தகவலையே பேராயர் பகிர்ந்து கொண்டதாகவும்.. அதுவே தனது நிலைப்பாடு என்பதாக கருத முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். (அண்மைய கணக்கெடுப்புகளில் சிங்களவர்களில் பெரும்பாலானோர் அப்படியான அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பது வெளிப்பட்டிருந்தது ஊடகங்கள் மூலம் செய்தியாக்கப்பட்டிருந்தன.) Archbishop of Colombo blames government for…

  18. வீரகேசரி வாரவெளியீடு - பதினைந்தாவது சார்க் உச்சிமாநாடு பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல்களுடன் இன்று காலை ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நடைபெற உள்ள உச்சி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது. இன்றும் நாளையும் சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளின் உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடைபெறும். ஜூலை 29ஆம் 30ஆம் திகதிகளில் வெளியுறவு செயலாளர்களின் மாநாடும், ஜூலை 31ஆம் திகதியும் ஆகஸ்ட் முதலாம் திகதியும் வெளி நாட்டமைச்சர்களின் மாநாடும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் இரண்டாம் மூன்றாம் திகதிகளில் சார்க் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளத…

  19. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாம் தீவிர தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அதற்காக விடுப்பில் சென்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். சனிக்கிழமையன்று அநுராதபுரத்தில் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து நாம் ஏற்கனவே மீட்டுவிட்டதாக அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த, அடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கான தாக்குதலை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். …

    • 8 replies
    • 2k views
  20. விடுதலைப் புலிகள் தொடர்பில் பராம் ஒபாமா மௌனம் ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] அமெரிக்க அதிபருக்குப் போட்டியிடும் பராக் ஒபாமா தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உள்ளகப் புனலாய்வு பிரிவான எவ்.பி.ஐ தமிழீழ விடுதலை புலிகள் மிக மோசமான பயங்கரவாத அமைப்பு எனக் கூறியிருந்த போதும் பராக் ஒபாமா விடுதலைப் புலிகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருகிறார். கடந்த வாரம் பேர்லினிக்கு வருகை தந்த ஒபாமா தலிபான் மற்றும் அல்கொய்தா அமைப்புகளின் பயங்கரவாதத்தை நாங்கள் தோற்கடிக்க வேண்டும் என கூறியிருந்தார். கடந்த சனவரி மாதம் இலங்கையில் இன முரண்பாடு தொடர்பில் கருத்துத் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில், சிறீலங்காவில் மக்கள் …

  21. கிழக்கு மாகாண சபையும் முஸ்லிம் காங்கிரஸும் வீரகேசரி வாரவெளியீடு 7/27/2008 9:11:20 AM - கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பொத்துவில், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம் காங்கிரஸிலிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்தும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். நிந்தவூர் கிராமத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே வேட்பாளரை நிறுத்தியது. மு.கா. வின் செயலாளர் எம்.ரீ. ஹஸன் அலியே நிந்தவூரின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். நிந்தவூரிலும் வேறு கிராமங்களிலும் ஹஸன் அலிக்கு இருக்கின்ற செல்வாக்கின் காரணமாக நிந்தவூரில் வேறு ஒருவரும் போட்டியிட முன்வரவில்லை என்பதே இப்பிரதே…

  22. சிறீலங்காவினால் 65 மில்லியன் ரூபா செலவில் லொபி குழு அமர்த்தப்பட்டுள்ளது ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்கா அரசாங்கம் பலகன மில்லின் டொலர்கள் செலவில் சிறீலங்காவுக்கு அனைத்துல நாடுகள் வழங்கும் உதவிகளைத் காப்பாற்றுவதற்காக அனைத்துலக பரப்புரை வல்லுநர் குழுவினரை (லொபி குழு) பணம் செலுத்தி ஒரு வருட காலத்திற்கு அமர்த்தியுள்ளனர். சிறீலங்கா மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அனைத்துல உதவிகள் மட்டுப்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அமெரிக்கவின் சட்டநிறுவங்களின் ஒன்றான பிரவுண் ஸ்ரீன் ஹெயேட் பாவர் சிறேக் (Brownstein Hyatt Farber Schreck) 65 மில்லியன் ரூபா கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது என லக்பிம நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க…

  23. Posted on : 2008-07-27 சர்வதேசத்திடம் அம்பலமாகும் தெற்கின் திருகுதாளங்கள் தெற்காசியாவுடனான உறவுகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட சமயம் தான் வெளியிட்ட அறிக்கையிலும்; செய்தியாளர் மாநாட்டிலும் இலங்கை அரசுக்கு சூடாகவே கொடுத்திருக்கின்றது. * மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் அர சின் போக்குக்குக்கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டி ருக்கின்றது. * மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச கவலைகள் குறித்து இலங்கை அதிகம் சிரத்தை எடுத்து, அவற்றுக்குப் பரிகாரம் காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேசப் பட்டயங்கள் தொடர்பான தனது கடப்பபாடு களை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்த ஆவன செய்யாவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்ற…

  24. புலிகளின் குரல் கலைஞர் லெப். கேணல் ராணிமைந்தன் வீரச்சாவு [சனிக்கிழமை, 26 யூலை 2008, 07:41 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிக் கவிஞரும் படைப்பாளரும் புலிகளின் குரல் வானொலியின் கலைஞருமான லெப். கேணல் ராணிமைந்தன் வீரச்சாவடைந்துள்ளார். புலிகளின் குரல் வானொலியில் நிகழ்ச்சிகள், கவிதை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிப் படைப்பாளராக விளங்கியவர் ராணிமைந்தன். விடுதலைப் பாடல்களையும் எழுதியிருக்கும் அவர், சிறந்த ஒரு பேச்சாளராகவும் விளங்கினார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியிலும் அறிக்கை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை அவர் உருவாக்கியுள்ளார். புதினம்

  25. கனேடிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட, 1983 கறுப்பு யூலை துயர நினைவுகளை நினைவு கூறும் கண்காட்சி மற்றும் நாடக நிகழ்வுகள், கனேடிய பெரும்பாண்மை மற்றும் சிறு பாண்மை இனததவர் களின் வரவேற்பை பெற்றதுடன், அவர்களுக்கு எம் துயர வரலாற்றையும் விளக்கிக்கூறும் வாய்ப்பாய் அமைந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.