Jump to content

'கருணா தன்னிச்சையாக முடிவு.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'கருணா தன்னிச்சையாக முடிவு எடுக்கமுடியாது' அஷாத் மௌலானா

வியாழன், 17 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்]

கருணா தனித்து எந்த விதமான ரி.எம்.வி.பி. கட்சியின் முடிவுகளையும் எடுக்கமுடியாது எனவும், முடிவுகள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் என்பவற்றை தீர்மானிக்க கருணர் உட்பட 10 பேர் அடங்கிய ரி.எம்.வி.பி.யின் பேராளர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரி.எம்.வி.பியின் பேச்சாளர் அஷாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

இந்த கட்சிப்பேராளர் குழுவில் ரி.எம்.வி.பியின் கட்சித்தலைவர் கருணர், பிரதித்தலைவர் பிள்ளையான், மௌலானா, பத்மினி, ஜெயம், மார்க்கன், உருத்திரன், பிரதீப் மாஸ்டர், இனியபாராதி, சின்னத்தம்பி, மங்களம் மாஸ்ரர் மற்றும் ஜீவேந்திரன் ஆகியோர் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருணர் இணைந்தே செயற்படுவதற்கு இந்த பேராளர் குழுவே முடிவுகளை எடுத்ததாகவும், ஆனால் கருணா தனித்து எந்த முடிவுகளையும் எடுக்கமுடியாது, இந்த நிர்வாகக்குழுவுடன் கலந்துரையாடியே எதையும் செய்யமுடியும் எனவும் மௌலானா தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் பிரதித்தலைவரான பிள்ளையான் தொடர்ந்தும் தமது முதலமைச்சர் பதவியில் இருப்பார் எனவும் மகாணசபை மற்றும் முதலமைச்சரின் தீர்மானங்களை அவர் தமது பதவிக்கு ஏற்றவகையில், செயற்படமுடியும் எனவும் மௌலான மேலும் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

இதில என்ன கிடக்கு?

அவங்கள் இப்பிடித்தான் அடிபடுவாங்கள்.. அல்லது அடிபட வைக்கப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எய்தவனை விட்டுவிட்டு...............

அம்பை நோவானேன்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எய்தவனை விட்டுவிட்டு...............

அம்பை நோவானேன்????

அம்புகளுக்கு கொஞ்சம் தன்னும் யோசிக்கும் தன்மை இல்லையா ?

இதுகள் புடுங்குப் படுவதால் எத்தனை உயிர் இழப்பு .......

நேற்றும் ஈ. பி .டி . பி.க்கு சொந்தமான காணியில் பிள்ளையான் குழுவை சேர்ந்தவரை கொன்று புதைத்துள்ளார்கள் என்று செய்தி ,

கிழக்கில் மனிதப் படுகுழிகள் என்று மற்றொரு செய்தி .

இவை வெளிவந்தவை , வெளிவராமல் எத்தனையோ யாரறிவார் .........

இது எல்லாம் தமிழன் இலங்கையில் மெல்ல , மெல்ல அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றான் என்பது இவர்களுக்கு ஏன் விளங்கவில்லை .

சீ .........கோடாலிக்காம்புகள்.

Link to comment
Share on other sites

அம்புகளுக்கு கொஞ்சம் தன்னும் யோசிக்கும் தன்மை இல்லையா ?

இதுகள் புடுங்குப் படுவதால் எத்தனை உயிர் இழப்பு .......

நேற்றும் ஈ. பி .டி . பி.க்கு சொந்தமான காணியில் பிள்ளையான் குழுவை சேர்ந்தவரை கொன்று புதைத்துள்ளார்கள் என்று செய்தி ,

கிழக்கில் மனிதப் படுகுழிகள் என்று மற்றொரு செய்தி .

இவை வெளிவந்தவை , வெளிவராமல் எத்தனையோ யாரறிவார் .........

இது எல்லாம் தமிழன் இலங்கையில் மெல்ல , மெல்ல அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றான் என்பது இவர்களுக்கு ஏன் விளங்கவில்லை .

சீ .........கோடாலிக்காம்புகள்.

நம்மை நாமே அழித்துக் கொள்ளும் போது எதிரிக்கு லாபம். அதுதான் தொடர்கிறது? வேதனை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D நாம் என்ன சொல்லியும் எந்தப் பிரயோசனமும் இல்லை. தென் தமிழீழ மக்கள் இந்த துரோகிகளை அடித்து விரட்டாதவரை ! குறைந்தது தேர்தலிலாவது இந்த நாய்களை நிராகரிக்க வேண்டும். இவர்களை எதிர்த்துப் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும்( அவர் தமிழராக இருந்தாலென்ன, முஸ்லீமாக இருந்தாலென்ன )வாக்களிக்கும் தெளிவும் உறுதியும் பிறக்க வேண்டும்.
Link to comment
Share on other sites

அவங்களே கள்ள வாக்கை கொட்டும் போது அப்பாவிகள் என்ன செய்வார்கள் ரகுநாதன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D உண்மைதான் தலைவன். ஆனால் சில கிழக்கின் நண்பர்கள் தாம் பிள்ளையானைத் தெரிவு செய்தது முஸ்லீம் முதலமைச்சர் வருவதைத் தடுக்கவே என்று சொல்லும்போது கவலையாக இருக்கிறது.

கள்ள வாக்கு, வாக்கு மோசடி- இந்த ரெண்டினாலும் தான் பிள்ளையான் பதவிக்கு வந்தான். அதுதான் உண்மை. அதை விடுத்து "நாமே தான் தெரிவுசெய்தோம்" என்று உரிமை கோருவது தவறு. அவ்ர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

நான் தென் தமிழீழ மக்கள் பிள்ளையானைத் தெரிவு செய்தார்கள் என்று நம்பவும் இல்லை, நினைக்கவுமில்லை.

Link to comment
Share on other sites

ரகுநாதன்!

உண்மையா தென் தமிழ் ஈழ மக்களுக்கு இருந்த தெரியு பேக்கும் பிசாசுக்கும்மான தெரிவுதான்....

அதுல வந்த சனியனை எதிர்க்கிறாதிலும் பாக்க அனுசரிச்சு காரியமாற்றுவது மேல்... இதை பிள்ளையான் இல்லாத வேற ஒருவனால் செய்யேலாது....

ஏனெண்டா மத்தவங்கள் சிந்திப்பாங்கள்.. இது ...ஆக....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர்.  தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது. 
    • தமிழருக்கெதிரான அடக்குமுறையினை அரசமயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஜெயவர்த்தன. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையே இதற்குச் சாட்சி. அவரால் உருவாக்கப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியும் ஒற்றையாட்சி முறைமையுமே தமிழர்களின் அபிலாஷைகளுக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து இனக்கொலையினை நடத்திவருபவை. இப்பதவியில் அமர்ந்த அனைத்துச் சிங்கள ஜனாதிபதிகளுமே தமிழரின் இனவழிப்பில் தமது பங்கினைத் தவறாமல்ச் செய்து வந்தவர்கள் தான்.  ஆகவே, இவ்வாறான இன்னுமொருவரை பதவியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவேண்டிய தேவை இல்லையென்பதை சாதாரணமாகச் சிந்திக்கும் எவரும் இலகுவாக உண‌ர்ந்துகொள்வார்கள். ஆகவே, இதற்கான தமது எதிர்ப்பினைக் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தேவை என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறோம், இல்லையே?! சிலருக்கு வெளிப்படையாகத் தெரிவதையே புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலிருக்கிறதே, என்ன செய்வது ?! 
    • ஸ்கொட்லாந் க‌டிமையாக‌ போராடின‌வை சூப்ப‌ர்8க்கு போக‌ ஆனால் அது ந‌ட‌க்க‌ல‌   இங்லாந் சூப்ப‌ர்8க்கு போய் பெரிசா சாதிக்க‌ போவ‌து கிடையாது.................................
    • 10 ஓவர் முடிய இனி என்ன தோல்வி தானே படுப்பம் என்றால் சரி 15 ஓவர்வரை பார்ப்போம் என்று இருந்தேன்.பரவாயில்லை.நிம்மதியான தூக்கம்.
    • 13வது ஓவர் முடிய ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்திற்கு சொன்னது ' சரி சரி, நீங்கள் சின்னப் பிள்ளைகள், விளையாடினது காணும், வீட்டை போக ரெடியாகுங்கோ...'.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.