ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
வவுனியா - மன்னார் களமுனையில் பலியான 9 போராளிகளின் உடலங்களை சிறீலங்கா அரச படைகள் வவுனியாவில் வைத்து ஐ சி ஆர் சியிடம் கையளித்துள்ளன. இவை கடந்த இரண்டு தினங்களின் போது கைப்பெற்றப்பட்ட சடலங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை இன்று வவுனிக்குளம் பகுதியில் நடந்த மோதலில் மேலும் 7 போராளிகளின் சடலங்களும் ஒரு 120 மிமி நெடுந்தூர எறிகணை செலுத்தி மற்றும் 2, 81 மிமி எறிகணை செலுத்திகளையும் 5 துப்பாக்கிகளையும் தாம் கைப்பற்றியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. Tamil Tigers' bodies handed over The Sri Lankan army says it has handed over the bodies of nine rebels to Tamil Tiger guerrillas in the island's north. According to the military, the fighters were killed ov…
-
- 0 replies
- 2k views
-
-
சிங்களத்தின் அசைவிற்கு ஆப்பு வைத்த வெடியோசை - க.ப.துசியந்தன் - சிங்கள தேசத்தின் அடக்குமுறை சக்திகளின் அசைவிற்கு ஆப்பு வைத்த அந்த வெடியோசையை இந்த மண் இலகுவில் மறந்துவிட முடியாது. துப்பாக்கி முனையில் பிறந்திருந்த ஈழ விடுதலைப் போராட்டக் குழந்தையை அப்போதுதான் சிங்கள தேசம் அதிர்ச்சியோடு பார்த்தது எனலாம். 1983 யூலை 23 நள்ளிரவை அண்டிய நேரம் நிகழ்ந்த அச்சம்பவம் எமது விடுதலைப் போருக்கு ஒரு மைல்கல்லாய் அமைந்தது. அடக்குமுறை வழிமுறையை பிரயோகித்து தமிழினத்தின் சுதந்திர உணர்வை மழுங்கடித்துவிட முயன்ற சிங்களத்தின் போக்கிற்கு எதிராக ஆயுதவழிப் போராட்டத்தை முன்னெடுத்த எமது விடுதலைப்படை தன் அதிர்ச்சியூட்டும் அசாத்தியமான தாக்குதல்களால் சிங்களப் படைகளுக்கு அதிர்ச்ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
அகதிகள் தலையில் லைசென்ஸ் 'இடி'! [ ஜூனியர் விகடன் ] - [ Jul 24, 2008 04:00 GMT ] இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்துக்கு வருவது, கடந்த 25 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய தேதியில் அகதி முகாம்களில் சுமார் 78 ஆயிரம் பேரும் முகாம்களுக்கு வெளியே சுமார் ஐயாயிரம் பேரும் தமிழகத்தில் அகதி களாகத் தங்கியிருக்கிறார்கள். இங்கேயும் அவர்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். இலங்கைத் தமிழ் அகதி களுக்கு வழங்கப்பட்டிருக்கும் டிரைவிங் லைசென்ஸ்களை ரத்து செய்யப் போவதா கத் தமிழக அரசு தீடீரென சமீபத்தில் அறி வித்திருப்பது லேட்டஸ்ட் அடி! தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக் கும் சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையரிடமிருந்து அண்ம…
-
- 4 replies
- 1.6k views
-
-
வன்னிக் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் நான்கு சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 786 views
-
-
கொழும்பின் புறநகர் பகுதியான முல்லேரியா அம்பத்தள வீதியில் அம்பலம பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் முச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டோர் தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogsp…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் கேலிக்குரியவை எனக் குறிப்பிட்டுள்ள சுற்றாடல் மற்றும் இயற்கைவள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, உண்மையிலேயே கடந்த சில வருடங்களாக கிழக்கில் சிங்களவர்களின் சனத்தொகை குறைவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்குக் கிழக்கு விவகாரம் தொடர்பில் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் அமபாறை மாவட்டத்தில் சிஙகளவர்களின் சனத்தொகை 2001 இல் 236,583 இலிருந்து 2007 இல் 228,938 ஆக குறைவடைந்துள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேகாலப்பகுதியில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் சனத்தொகை 249,620 இலிருந்து 2…
-
- 0 replies
- 728 views
-
-
கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் [வியாழக்கிழமை, 24 யூலை 2008, 06:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியை அண்டிய உடும்பன்குளம் பகுதியில் புதிதாக முகாம் நிறுவிக்கொண்டிருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சுமார் 40 நிமிட நேரம் நீடித்ததாக விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்டப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதலை அடுத்து, அப்பகுதியில் முகாம் அமைக்கும் பணிகளை இடையிலேயே கைவிட்டு விட்டு படையினர் தப்பியோடியுள்ளனர். இதன…
-
- 4 replies
- 1.8k views
-
-
மீன் பிடித்துவிட்டு கரைக்கு ஜூலை 22 அன்று திரும்பியிருக்க வேண்டிய ராமேஸ்வரம் தங்கச்சி மடம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 பேர் கரைக்குத் திரும்பாததால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது. தொடர்ந்து வாசிக்க..
-
- 16 replies
- 2k views
-
-
கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டதாக கூறும் அரசாங்கம், வேலுப்பிள்ளையின் தம்பியான பிள்ளையானிடம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களின் எதிர்காலத்தை கையளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இதனால் கிழக்கு மாகாணம் தொடர்ந்து வியாகுல நிலைமையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார். கிழக்கு மாகாண பிரதிகாவற்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய மாகாணத்தில் உள்ள சகல காவல் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்று நிரூபத்தின் மூலம் …
-
- 3 replies
- 1.7k views
-
-
வன்னேரிக்குளம் பகுதியில் இடம்பெயர்தோருக்கான தங்கக தறப்பாளான கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. யு.என்.ஏச்.சி.ஆர். நிறுவனத்தினர் அக்கராயன் அபிவிருத்தி நிறுவனம்ஊடாக இச்செயற்பாட்டினை மேற்கொண்டுவருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த மக்கள் தம் உடைமைகளை மழையிலிருந்து பாதுகாக்க பெரும் இடர் பட்டு வரும் நிலையில் அம்மக்களுக்கான இடத்தினைத் தெரிவுசெய்து இத்தறப்பாளான தற்காலிக இடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட்டு முடிந்த கொட்டகைகள் உடனடியாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பூநகரி அபிவிருத்தி நிறுவனம் கிராமிய புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனம் ஆகிய இடம்பெயர்ந்த மக்களுக்கான உடனடிப்பணிகளைச் செய்து வருகின்றன. http…
-
- 0 replies
- 688 views
-
-
சிறீலங்கா இராணுவத்தினரின் படை நடவடிக்கை காரணமாக பலபகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் பூநகரிக்கோட்ட பாடசாலை பலவற்றில் தங்கியுள்ளனர். இதனால் அந்தப் பாடசாலைகள் செயலிழந்துள்ளன என வன்னியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இடம்பெயர்ந்த மாணவர்கள் பலர் கிளிநொச்சி மாவட்டத்தின் பலபகுதிகளிலும் உள்ள பாடசாலைகளில் நாளாந்தம் இணைந்து வருகின்றனர். இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற்கொண்டு எல்லா மாணவர்களும் பரீட்சை எழுதுவதற்கு ஏதுவாகவே இரண்டாம் தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் கணேசலிங்கம் தெரிவித்தார். பாடசாலைகள் பரீட்சைக்கு ஏதுவான நிலையில் சீர்நிலைக்கு வரும் பட்சத்தில் பரீட்சைகளை நடத்த உத்தேசித்திருப்பதாகவும். பர…
-
- 0 replies
- 637 views
-
-
இந்தியாவரும் இலங்கை அரசியல் வாதிகள் ஏழு நாட்களுக்கு முன்னர் அறிவித்தல் விடுக்கவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சு, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு ஊடாக விசேட தகவலொன்றை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்குச் செல்லும் பெரும்பாலான இலங்கை அரசியல்வாதிகள் முற்கூட்டிய அறிவித்தல்களை வழங்காமல் செல்வதாகவும், இதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு, இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. முன்கூட்டியே அறிவித்தல் வழங்கப்பட்டாலே உரிய பாதுகாப்பை வழங்க முடியும் எனவும், அரசியல் தலைவர் இந்தியா செல்வதாயின் குறைந்தது 7 நாட்களு…
-
- 0 replies
- 650 views
-
-
இவ்வாரம் நடைபெறவிருந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் சார்க் உச்சி மாநாட்டின் பின்னர் நடைபெறுமென குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றபோது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் முதன்முதலாக பங்குபற்றியது. அக்கட்சி சார்பாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் கலந்துகொண்டார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்துள்ள தீர்வு யோசனை தொடர்பாக தமது கட்சி சமர்ப்பித்துள்ள திருத்த யோசனைகளையும் அதில் உள்ளடக்குமாறு கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் சிவகீதா பிரபாகரன் கேட்டுக்கொண்டார் எனவும், இதேவேளை அதிகாரப் பகிர்வு தொடர்ப…
-
- 1 reply
- 555 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஒரு தலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டுள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூற்று விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளதென அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது: கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களிலுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்கள் மீது படையினர் தொடர்ந்தும் நடத்திவரும் தாக்குதல்களுக்கு ஆதரவாகவே ஐக்கிய தேசியக் கட்சி கருத்துத் தெரிவித்திருக்க வேண்டும். சார்க் மாநாட்டை இலங்கையில் நடத்துவதென்பது …
-
- 0 replies
- 415 views
-
-
யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமத்தில் இளைஞர் ஒருவர் நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என யாழில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுட்டுக்கொல்லப்பட்டவர் 28 அகவையுடைய ஆர்.அபிலேஸ்வரன் என இனம்காணப்பட்டுள்ளார். http://www.tamilseythi.com/srilanka/yaal-2008-07-24.html நிருபர்:அன்பு
-
- 0 replies
- 530 views
-
-
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் இன்று காலை 7:30 அளவில் சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சிறீலங்கா வான்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜானக நாணயக்கார தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு குளத்திற்கு அருகில் இருந்த விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வழமைபோன்று படைத்தரப்பு அறிவித்துள்ள போதிலும், சுயாதீன தகவல்களை இதுவரை பெற முடியவில்லை. http://www.tamilseythi.com/srilanka/odisudan-2008-07-24.html நிருபர்:செல்வி
-
- 0 replies
- 621 views
-
-
ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவி செய்வதாக இலங்கை அரசு சந்தேகப்படுவதாக ராமேஸ்வரம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கூறினார். இலங்கையில் தெற்காசிய மக்கள் சபை மாநாடு கடந்த 20ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து 80 பேர் சென்றனர். இதில் தமிழகத்தில் இருந்து மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ் உள்பட 30 பேர் சென்றனர். மாநாட்டில் கலந்து கொண்டு ராமேஸ்வரம் திரும்பிய மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் பெனிக்கஸ் பெரேராவை சந்தித்து பேசினோம். எங்களது கோரிக்கையை கவனமாக கேட்டார். தமிழக மீனவர…
-
- 1 reply
- 741 views
-
-
யுத்த முன்னெடுப்புக்களுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக, சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்பட்டு , காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி ஓராண்டுக்கு தக்க வைக்கப்பட்ள்ளது. இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கருத்துரைத்திருக்கும், சிறீலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வா, நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றியீட்டியுள்ளமை, வடக்கில் தமது படைகள் முன்னெடுக்கும் படை நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்திருப்பதாக கூறியுள்ளார். இதனிடையே, தென்…
-
- 0 replies
- 623 views
-
-
பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வினை எட்ட முடியாது: யுத்தத்தின் மூலமே தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் - கொழும்பு பேராயர் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு எட்டக்கூடிய காலம் கடந்து விட்டதாகக் கொழும்புப் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் தெரிவித்துள்ளார். வத்திக்கான் வானொலிச் சேவைக்குப் பேராயர் அளித்த செவ்வியை மேற்கோள்காட்டி கத்தலிக்நெட் என்ற இணையத்தளம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. யுத்தத்தின் மூலமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என்ற ஓர் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால் அது மி…
-
- 48 replies
- 4.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங்கள நபர் ஒருவர் சிறிலங்கா காவல்துறையினரால் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 597 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளத்தில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான புளொட் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 602 views
-
-
மல்லாவி துணுக்காய்ப் பகுதிகளிலுள்ள மக்கள் தாங்கள் இடம்பெயர்ந்தமை இதுவே முதற்தடவை எனவும் தங்கள் வீடுகளிலுள்ள பொருட்கள் பெருமளவிலான ஆடுமாடுகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு..... படையினரின் எறிகணை வீச்சுக்களிலிருந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரே நோக்கத்துடன் இடம்பெயர்ந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் விரைவில் இலங்கைப் படையினரை விரட்டியடித்துத் தங்களைத் திரும்பவும் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல வழிசமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மல்லாவி துணுக்காய்ப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து மரநிழல்களிலும் வெட்டவெளிகளில் கூடாரங்களிலும் தங்கியுள்ள மக்களே இவ்வாறு தங்கள் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களின் விவச…
-
- 10 replies
- 1.7k views
-
-
ஆயிரத்து இருநூறு சிறீலங்கா காவல்துறையினர், கொழும்புக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். வியாழன், 24 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த ஆயிரத்து இருநூறு சிறீலங்கா காவல்துறையினர், கொழும்புக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். காங்கேசன்துறையில் இருந்து கப்பல் மூலம், நேற்று கொழும்பு நோக்கி இவர்கள் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொழும்பில் இடம்பெறும் சார்க் உச்சி மாநாட்டிற்கான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தும் நிமித்தம், இவர்களை கொழும்புக்கு சிறீலங்கா அரசாங்கம் மீளப்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. http://www.pathivu.com/
-
- 1 reply
- 874 views
-
-
லெப். தமிழ்பாண்டி உள்ளக பாதுகாப்பு அணி பயிற்சிகளை நிறைவு செய்துள்ளது வியாழன், 24 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப். தமிழ்பாண்டி உள்ளக பாதுகாப்பு அணி, பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளது. நேற்று லெப். தமிழ்பாண்டி உள்ளக பாதுகாப்பு அணியின் வீரர்களுக்கான பயிற்சி நிறைவு நிகழ்வு, வன்னியில் இடம்பெற்றது. இதன்பொழுது, சிறப்பாக பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, ஏனையோரும் மதிப்பளிக்கப்பட்டனர். http://www.pathivu.com/?p=2323
-
- 0 replies
- 1.8k views
-
-
யுத்த முன்னெடுப்புக்களுக்கு மீண்டும் இந்தியாவின் ஒத்துழைப்பு வியாழன், 24 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] யுத்த முன்னெடுப்புக்களுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக, சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்பட்டு , காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி ஓராண்டுக்கு தக்க வைக்கப்பட்ள்ளது. இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கருத்துரைத்திருக்கும், சிறீலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வா, நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றியீட்டியுள்ளமை, வ…
-
- 0 replies
- 804 views
-