Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. த.ம.வி.பு. கட்சியின் செயற்பாடுகள் தனது தலைமையின்கீழ் இப்போழுதும் சிறந்த முறையில் நடந்துவருகின்றன என்று துரோகி கருணா தெரிவித்திருக்கிறா.. அத்துடன், பிரித்தானியாவிலிருந்து தவறுகளற்ற முறையிலும், தனது விருப்பின்பேரிலும் தான் இலங்கை திரும்பினா.. என்றும் அவ. மேலும் தெரிவித்துள்ளா.. பி.பி.ஸி.க்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அ;வ. இவற்றைத் தெரிவித்திருக்கிறா.. மேலும்: என்னால் நியமிக்கப்பட்ட பிள்ளையான் முதலமைச்சனாக தெரிவு செய்யபட்டிருக்கிறா.. இது மிகவும் வரவேற்கக் கூடிய மகிழ்ச்சிக்குரிய விடயம். எங்கள் அரசியல் கட்சி ஒரு பரந்துபட்ட கட்சி. முதலமைச்சர் என்ற வடிவத்துக்குள் எமது அரசியல் கட்சியை உள்ளடக்கிப் பார்ப்பது தவறான விடயம். எமது மாகாண சபைக்குரிய வடி…

    • 0 replies
    • 1.3k views
  2. அண்மையில் கொழும்பு வந்து, மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த இந்திய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு வடக்கு கிழக்கை மீள இணைத்துஇ அரசமைப்பின் 13ஆம் திருத்தத்துக்கும் அப்பால் சென்றுஇ இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இந்த அழுத்தம் தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாடு என்னவென்பதை நாட்டு மக்களுக்கு அரசு உடன் தெரிவிக்கவேண்டும் என்றும் அக்கட்சி அரசக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரமுகரும், எம்.பியுமான லக்ஷ்மன் கிரியெல்லவே மேற்கண்ட தகவலை வெளியிட்…

    • 0 replies
    • 700 views
  3. கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் இன்று பொங்கு தமிழ் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 668 views
  4. எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை என்ற செய்தியுடன் எமது உரிமையை ஓங்கி ஒலிப்போம்: யோ.செ.யோகி [சனிக்கிழமை, 05 யூலை 2008, 05:09 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை என்ற செய்தியுடன் எமது உரிமையை ஓங்கி ஒலிக்கச் செய்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் கடந்த செவ்வாய்க்கிழமை (01.07.08) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணல்: பொங்கு தமிழ் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஒரு விடுதலைப் போராட்டத்தில் பரப்புரை என்பது எவ…

    • 0 replies
    • 440 views
  5. இலங்கையில் நடைபெறவிருக்கின்ற 15 ஆவது சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்காக இந்திய படையினர் 3000 பேர் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவருகின்ற செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா, மாநாட்டின் மூலமாக கிடைக்கின்ற நன்மைகள் தொடர்பில் பேசவிரும்பாதவர்கள் மாநாட்டிற்கான செலவுகள் குறித்து விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இது கிணற்றில் இருக்கின்ற தவளையின் கதையாகும் என்பதுடன் இந்திய படையினர் தொடர்பில் எனக்கு தெரியாது, நான் கதைப்பதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது செய்தியாளர் கேட்டகேள்விக்கே …

    • 0 replies
    • 748 views
  6. இது நாள்வரை உள்ள ஜனாதிபதிகள் யாவரும் முப்படைகளின் தலைவர்களாக இருந்தபோதிலும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே அந்தப் பதவிக்கு தகுதியானவர் என்றும், எந்தவொரு அரசாங்கமும் செய்யத்தவறிய பல இராணுவ முன்னெடுப்புக்களை வெற்றிகரமாக முன்னெடுத்து தேச சிந்தனையின் படி நடப்பதுடன், இராணுவத்தினருக்கும் முப்படைக்கும் உரிய கௌரவத்தை வழங்கிய ஒரே தலைவரும் அவரே என 1992 ஆம் ஆண்டு அராலிப்பகுதியில் லெப்ரினனட் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவை மையப்படுத்தி நடத்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலில் அவருடன் சேர்ந்து மரணமடைந்த மேஜர் ஜெனரல் விஜய விமல ரட்னவின் மெய்ப்பாதுகாவலராக இருந்து விழுப்புண் அடைந்த முன்னாள் இராணுவ வீரர் விஜியக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வடமத்திய மாகாணசபைத்தேர்தல்களின்போது ஐக்கிய …

    • 0 replies
    • 571 views
  7. கனேடிய தமிழர்களே உங்களின் ஒன்று பட்ட எழுச்சியை கனேடிய அரசிற்கு வெளிப்படுத்த யூலை ஐந்தாம் நாள் தயாராகுங்கள். நீங்கள் பொங்கியெழும் இடம் மற்றும் நேரத்தை ஏற்பாட்டாளர்கள் சரியான நேரத்தில் உங்களிற்கு அறியத் தருவார்கள். தயவு செய்து சனிக்கிழமையை முழுமையான விடுமுறை நாளாக வைத்திருங்கள். ஒன்ராரியோ சட்டமன்று முன்பாக நடத்த பொங்கு தமிழைபோன்று இல்லை இல்லை அதைவிட எழுச்சியாக அதைவிட பெரும் எண்ணிக்கையில் நாங்கள் அணிதிரள்வோம். எமது போராட்டத்திற்கு பக்க பலமாக எமது மக்களின் தாயகம் - தேசியம் - தன்னாட்சி போன்ற இலட்சிக் கோட்பாடுகளை உரத்து ஒலிப்பதுடன் கனேடியத் தமிழர்களால் போராட்டத்திற்கு வலுவுட்டும் செயற்பாடுகளிற்கு எதிரக கனேடிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைளை கண்டிக்கவும், இனி எந்தவொரு நடவடி…

    • 12 replies
    • 2.1k views
  8. அரசுத்தரப்புக் கொறடவாக அண்ணன்; அதனால் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து கீதாஞ்சன குணவர்த்தன விலகல்! ஆளுங் கட்சியின் எம்பியும் பிரதி சபாநாயகருமான கீதாஞ்சன குணவர்தன பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். இவர் தமது இராஜினாமாக் கடிதத்தைச் சபாநாயகர் டபிள்யூ ஜே.எம். லொக்கு பண்டாரவிடம் நேற்றுக் கையளித்தார் என்று சபாநாயகர் தெரிவித்தார். தனது சகோதரர் ஆளுங்கட்சியின் பிரதம கொரடாவாக இருக்கின்ற நிலையில் தான் பிரதி சபாநாயகராக இருப்பது அரசியல் விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது எனக் குறிப்பிட்டே கீதாஞ்சன பதவியை இராஜினாமாச் செய்திருக்கிறார். கீதாஞ்சன குணவர்தனவின் மூத்த சகோதரர் தினேஷ் குணவர்தனவே ஆளுங் கட்சியின் பிரதம கொரடாவாக அண்மையில் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். …

  9. பாக். ஜனாதிபதி முஷாரப் சார்க்கிற்கு வரமாட்டார்! அந்நாட்டின் சார்பில் பிரதமரே பங்கேற்பு சார்க் உச்சி மாநாட்டிற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழுவிற்கு அந்த நாட்டின் பிரதம மந்திரி சையட் யூசுப் ரஸா கிலானி தலைமை தாங்கவுள்ளார். பாகிஸ்தானின் வெளிவிவகார அலுவலகப் பேச்சாளர் முகமட் சாபிக் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பின்படி இந்த மாநாட்டில் பாகிஸ்தான் சார்பில் அதன் ஜனாதிபதி முஷாரப் பங்குபற்றமாட்டார் என்பது தெளிவாகியுள்ளது. பிரதம மந்திரி யூசுப் கிலானி கொழும்பில் ஆகஸ்ட் 2ஆம், 3ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் குழுவிற்குத் தலைமை தாங்கி அங்கு செல்லவுள்ள அதேவேளை ஜூலை 31ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச…

  10. பண்டாரவளையில் வியாழனன்று விபரீதம் வெடிகுண்டு எனத் தெரியாமலேயே அதைத் திருகியவர் அது வெடித்ததில் பலி! அவரது இரு பிள்ளைகளும் படுகாயம் வீட்டு முற்றத்தில் கிடந்த மர்மப் பொருளை அது வெடிகுண்டு என்று தெரியாமல் அதைக் கையாள முற்பட்டவர். அது வெடித்ததில் அந்த இடத்திலேயே பலியானார். அருகில் இருந்த அவரின் இரு பிள்ளைகளும் படுகாயமுற்று, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இச்சம்பவம், பண்டாரவளைப் பகுதியைச் சேர்ந்த எல்ல என்ற இடத்தில் உள்ள வீடொன்றிலேயே நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளரான தச்சத் தொழில் செய்யும் ஆர்.டி.குணபால (வயது 34) என்ற இளைஞரே பலியானவராவார். இதுபற்றிக் கூறப்படுபவை வருமாறு: இந்த நபர், தமது இரு பிள்ளைகளுடன் வீட்டில…

  11. Posted on : 2008-07-05 அரசின் அரசியல் பிழைப்புக்கு யுத்த விவகாரமே தஞ்சம் அரசியல் "வங்குரோத்து' நிலையை அடைந்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு, யுத்தம் ஒன்றை நம்பியே தன்னுடைய அரசியல் காய் நகர்த்தல் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. "செல்லும் செல்லாதது எல்லாம் செட்டியார் தலை மேலே' என்பது போல தன்னுடைய எல்லாப் பிரச்சினைகளையும் அரசியல் ரீதியாக சமாளிப்பதற்கு நாட்டின் யுத்த விவகாரத்தை நாடுவது ஒன்றே வழி என்ற இக்கட்டில் அரசுத் தலைமை இருப்பது துலாம்பரமாகத் தோன்றுகின்றது. நாய்க்குக் கல்லெறிந்தால் நாயின் உடலில் எந்த இடத்தில் அந்தக் கல் பட்டாலும் நாய் காலை நொண்டிக் கொண்டு ஓடும் என்பார்கள். கல்லால் அடித்த நோவு எங்கு ஏற்பட்டாலும் க…

  12. பிற தமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி குரல்கொடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "குமுதம்" வார இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணல்: புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. புலிகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே? புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிர…

  13. வீரகேசரி நாளேடு 7/4/2008 8:02:49 PM - பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பக்கம் 96 உறுப்பினர்களே அமர்ந்துள்ளார்கள். இந்த சூழ்நிலையில் பாராளுமன்றத்தினை முன்னெடுக்கும் தார்மீகக் கடப்பாடு அரசாங்கத்துக்கு இல்லாது போயுள்ளது. எனவே அரசாங்கம் பொதுத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். கடன் வாங்கிக் கல்யாணம் செய்வதைப்போன்று அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது, மாகாண சபைகளில் அரசுக்கு பெரும்பான்மை இல்லையென கலைத்து தேர்தல்களை நடத்தும் அரச…

  14. கலைஞரின் உண்மையான அறிக்கையின் நாகல் எனக்கு நண்பர் ஒருவர்மூலம் கிடைத்தது அதில் இலங்கை அகதிகள் என இருப்பது முழுமையான அறிக்கையை வாசிக்க்க http://www.tn.gov.in/pressrelease/pr190608...08_cmspeech.pdf ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் கலைஞர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும் ஆனால் அறிக்கையில் உள்ளபடி அவர் சொல்வது சட்டத்துக்கு புறம்பாக ஆவணங்களை பெற்று சொத்துவாங்கும் சிலர் என குறிப்பிட்டதன் படி சட்டத்தின் பிரகாரம் செய்யவே கலைஞர் சொல்லி இருகின்றார் ஆனால் ஊடகங்கள் இலங்கை தமிழ் அகதிகள் என சொல்லி திரிவு படுத்தி விட்டார்கள் இந்தியன் ரிசர்வ் வங்கியின் தளத்தில் இருந்து http://www.rbi.org.in/scripts/FAQView.aspx?Id=33. Acquiring immovable property in …

  15. கிழக்கில் தீவுச்சேனையை தளமாகக்கொண்ட சுமார் 15 முகாம்களை சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையான் நிர்வகித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 832 views
  16. கருணாவின் மீது போர்க் குற்றம் சுமத்தக்கூடிய வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் [ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2008, 02:04.42 AM GMT +05:30 ] கருணாவை பிரித்தானியா நாடு கடத்தியமை தொடர்பாகச் சர்வதேச மன்னிப்புச் சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கருணாவின் மீது போர்க் குற்றத்தைச் சுமத்தக்கிடைத்த வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது. கருணாவின் மீது சித்திரவதை, சட்டவிரோத நிதிசேகரிப்பு, சிறுவர்களைப் படைகளுக்கு சேர்த்தல், சித்திரவதை ஆகியவை தொடர்பாகப் போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்படவேண்டும் எனத் தாம் கடந்த மேமாதம் 14 ஆம் திகதி மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில், பிரித்தானிய மெட்ரோபொலிட…

  17. விடுதலைப் புலிகளின் படையணியில் நாற்பதாயிரம்(40000)படை வீரர்கள்? விடுதலைப் புலிகளின் படையணியில் சுமார் (40000) நாற்பதாயிரம் படை வீரர்கள் இருப்பதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக நிலவன் அவர்கள் கனடிய வானொலி ஒன்றுக்கு இன்று பேட்டி ஒன்றின்போது கூறினார் இது எவ்வளவு தூரம் உண்மை? இதுபற்றி ஏதாவது பத்திரிகைகளில் செய்தி வற்துள்ளதா? புலிகளிடம் 2000 3000 வீரர்கள்தான் உண்டு என்று சொல்லிவந்த அரசு தற்பொழுது இப்படி கூறக்காரணம் என்ன?ஏதாவது சதித்திட்டமாக இருக்குமோ? அல்லது சில வருடங்களுக்கு முன் நான்கேள்விப்பட்ட செய்தியின்படி இது உண்மையாக இருக்குமா? அதாவது புலிகளிடத்தில் சுமார் 50000 வீரர்கள் இருப்பதாகவும் சண்டையென்று தொடங்கும் பட்சத்தில் ஒருவா…

    • 8 replies
    • 2.1k views
  18. வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓமந்தை சோதனை நிலையம் நான்காவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டுள்ளதால் வன்னிப் பகுதி மக்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 707 views
  19. சிறிலங்கா அரசாங்கமானது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருக்கும் அரச திணைக்களங்களில் மூன்றுக்கு மட்டும் டீசல் எரிபொருளை மட்டுப்படுத்திய அளவுக்கு அனுமதிக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 529 views
  20. கம்பளம் விரித்தது போன்ற நகர்வுத் தந்திரத்துடன்- பெரும் நம்பிக்கையுடன்- தொடங்கப்பட்ட படை நடவடிக்கை படையினருக்கு பாரிய இராணுவ நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது. புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை காட்டமாக நடத்துவதற்கான தெரிவுக்கு, சிங்களப் படையின் விரிந்த நகர்வு இடம் கொடுத்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரவழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 841 views
  21. வவுனியாவில் முதியவர் சுட்டுப்படுகொலை [வெள்ளிக்கிழமை, 04 யூலை 2008, 07:04 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] வவுனியா மாவட்டத்தில் உள்ள பாரதிபுரத்தில் அடையாளம் தெரியாதவர்களால் நேற்று வியாழக்கிழமை மாலை முதியவர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாரதிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கறுப்பையா (வயது 67) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். இவர் என்ன காரணத்திற்காக சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது தெரியவரவில்லை என்று தெரிவித்திருக்கும் வவுனியா காவல்துறையினர், இவரது உடலம் மரண விசாரணைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். வவுனியாவில் அண்மைக்காலமாக மீண்டும் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்களும் கடத்தல் மற்றும் கப்பம் பெறும் சம்பவங்களும்…

    • 0 replies
    • 638 views
  22. தமிழர் தாயகமெங்கும் கரும்புலிகள் நாளை உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்க ஏற்பாடு [வெள்ளிக்கிழமை, 04 யூலை 2008, 06:37 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தாய்மண்ணின் விடுதலைக்காக தம்மையே உயிராயுதங்களாக்கி வீரவரலாறான கரும்புலி மாவீரர்களை ஒன்றுசேர தமிழினம் போற்றும் கரும்புலிகள் நாள் நாளை தமிழினத்தால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படடவுள்ளது. கரும்புலிகள் நாள் தொடக்க நிகழ்வுகள் நாளை முற்பகல் 9:00 மணிக்கு தொடங்குகின்றன. முற்பகல் 9:00 மணிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட இடங்கள் எங்கும் முதலில் பொதுச்சுடரேற்றப்பட்டு தமிழீழ தேசியக் கொடியேற்றப்படும். தொடர்ந்து மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றப்பட்டு, மலர்மாலைகள் சூட்டப்பட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டு வணக்கம் செலுத்தப்படும்…

    • 0 replies
    • 633 views
  23. வைர விழாக் காணும் பறித்தல்களைத் தட்டிப்பறிக்கும் தற்கொடைப்படை புனிதன் - 5-7-08 இலங்கைத் தீவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரம் கொடுத்து 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அன்றே, தமிழர் தாயகத்தைச் சிங்கள நாட்டுடன் இணைத்துச் சுதந்திரம் கொடுத்ததனால் தமிழ்த் தேசியமும், தமிழர் தாயகமும் பிரித்தானியர்களால் பறிக்கப் பட்டது. எனவே முதல் பறித்தல்கள் இவ்வாண்டு வைரவிழாக் காண்கின்றன. இலங்கைத் தீவின் சுதந்திரத்துக்காக பிரித்தானியா சென்றவர்கள் இரு தமிழ்ச் சகோதரர்கள். அவர்களைக் குதிரை வண்டியில் ஏற்றி சிங்களவர் இழுத்தது சரித்திரம். காலிமுக மைதானத்தில் உள்ள பாராளுமன்றத்தின் இரு புறமும் அவர்களின் சிலைகள் இருப்பது இலங்கைத் தீவின் சுதந்திரத்துக்கான தமிழனின் முக்கியத்துவம். மாவீரர் துயிலும் …

    • 0 replies
    • 969 views
  24. 'வீரர்கள் மதிக்கும் வீரன்" -சிறீ. இந்திரகுமார்- முதற்பயணம் அது 1984 ஆம் ஆண்டு. செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது. அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை பதைப்பாக நின்றனர். விடுதலைப் போராளிகளாகத் தம்மை இணைத்திருந்த அந்த இளைஞர்கள்; இராணுவப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு நோக்கிய பயணத்திற்குத் தயாராகி நின்றனர். லெப்.காண்டீபன் தலைமையில் அவர்கள் புறப்பட வேண்டும். செம்மலையிலிருந்து புறப்படும் அவர்கள்; கடற்கரையை அடைந்து அங்கிருந்து வண்டியெடுத்து தமிழ்நாட்டைச் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டைச் சென்றடையும் அவர்கள்; அங்கு நிறுவியிருக்கும் பயிற்சி முகாமில்; தமக்கான இராணுவப் பயிற்சி முடி…

    • 0 replies
    • 707 views
  25. 1987 ஆம் ஆண்டு யூலை 5 ஆம் திகதி எமது விடுதலைப் போராட்டத்தின் புதிய வடிவம் ஒன்று பிறப்பெடுத்த நாளை யாரும் மறந்திருக்க முடியாது. நெருப்புக் குளித்து நின்ற தேசத்தில் தனி ஒருவனாய் பொறுப்புச் சுமந்து போய்வெடித்த அந்த அற்புத தியாகத்தின் தோற்றுவாய் அன்று ஒரு பெரும் மாறுதலை எம் விடுதலைப் போராட்டத்திற்கு பெற்றுத்தந்தது. இறுக்கமான கட்டமைப்புக்குள் வளர்ச்சியுற்று வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பகைப்படையின் எண்ணிக்கையில் மிகச் சொற்பமாகவே இருந்து பல சாதனைகளைச் செய்து கொண்டிருந்த காலமது. யாழ். குடாவில் பெரும் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. இப்படிப்பட்ட காலச் சூழ்நிலையில்தான் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஜே.ஆர். அரசு இன்னும…

    • 1 reply
    • 928 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.