Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினரான கலாநிதி தேவநேசன் நேசையாவை ஆணைக்குழுவிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார். முக்கியமான 15 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் எட்டு உறுப்பினர்களில் ஒருவராக கலாநிதி நேசையா நியமிக்கப்பட்டிருந்தார். இவரை ஆணைக்குழுவிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியிருப்பதாக விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் நிசாங்க உடலாகம தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினரான கலாநிதி நேசையா மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்துடன் தொடர்புகளைக் கொண்டவர் எனவும், அந்த அமைப்பு பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயற்படுவதாகவும் சட்டத்தரி கோமின…

    • 0 replies
    • 819 views
  2. தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக விரட்டியடிக்கப்படும் வரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை எனக் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவேனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிள்ளையான் இதனைக் குறிப்பிட்டதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. http://isoorya.blogspot.com/

    • 18 replies
    • 3.9k views
  3. எதிர்வரும் 23,25,26 ஆம் திகதிகளில் தென் பகுதியிலும் மற்றும் மட்டக்களப்பு ரயில் வண்டியிலும் குண்டு வெடிப்பை நடத்தி தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனவன்முறைகளை தூண்டுவதற்கு புலிகள் திட்டம் தீட்டியுள்ளனர். இது குறித்து எமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அதன் முக்கியஸ்தர் வசந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப்புலிகள் எதிர்வரும் நாட்களில் சிவிலியன்களை இலக்கு வைத்து தெற்கில் தாக்குதல்களை நடத்தவுள்ளதாக ஐரோப்பாவிலுள்ள எமது கிளைகளுக்குத் தகவல் கிட்டியுள்ளது.இதன் பிரகாரம் எதிர்வரும் 23,25,26 ஆம் திகதிகளில் பாரிய தா…

    • 1 reply
    • 1.1k views
  4. நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்கள் மத்தியில் இன வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு ஐ.நா.சமாதானப் படையை இலங்கைக்கு வரவழைப்பதற்கு தேசிய, சர்வதேச ரீதியில் சதித்திட்டம் முனனெடுக்கப்படுகின்றது. இன்னும் ஆறு மாதங்களுக்குள் எமது படையினர் முல்லைத்தீவைக் கைப்பற்றி விடுதலைப்புலிகளை தோல்வியடையச் செய்து விடுவார்கள். அதனைத் தடுத்து பிரைபாகரனை பாதுகாப்பதற்கான முயற்சியே இதுவாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சாட்டுகிறது. ஏ-9 பாதைக்கு மாற்றீடான பாதையை தேர்தெடுத்துள்ள எமது படையினர் இன்னும் ஆறு மாதங்களுக்குள் முல்லைத்தீவை கைப்பற்றி விடுவார்கள். இதன் மூலம் பிரபாகரனின் ஈழக் கனவு கலைந்து விடும். பயங்கரவாதத்திற்கு எதிரான படையினரின் வெற்றியை திசை திருப்பி பிரபாகரனை ப…

    • 1 reply
    • 1.2k views
  5. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் தொடர் தாக்குதல்களால் தென்பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 682 views
  6. இலங்கையில் கடந்த மாதம் 15 பேர் கடத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 547 views
  7. மனோ கணேசனின் அறிக்கை ஒரு பொறுப்பற்ற செயல் - ஐனாதிபதி செயலகம் கண்டனம் செவ்வாய், 10 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வடக்கு கிழக்கு மக்கள் கொழும்புக்கு வருவதை தவிர்க்கும் மனோ கணேசன் கோரியிருப்பது பொறுப்பற்ற செயல் என ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் மக்கள் மத்தியில் அநாவசியமான பீதி ஏற்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் இந்தக் கூற்றின் மூலம் சர்வதேச சமூகத்தில் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. மணித்தியாலத்திற்கு ஒருமுறை அரச ஊடகங்கள் தமிழர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருவதாக அரவது அறிக்கையில் குற…

  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எத்தகைய திட்டத்தை தீட்டினாலும் அது எமக்கு தெரியவரும் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: புலிகளின் தலைவர் தீட்டும் திட்டங்கள் அனைத்தையும் எமது புலனாய்வுத்துறையினர் எமக்கு தெரிவித்து வருகின்றனர். பிரபாகரன் எத்தகைய திட்டத்தை தீட்டினாலும் அது எமக்கு தெரியவரும். அத்திட்டங்கள் அனைத்தையும் இராணுவ புலனாய்வுத்துறையினர் உன்னிப்புடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். கோவில் நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களில் பங்கேற்கும் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களைக் க…

    • 30 replies
    • 4.3k views
  9. கேரள சோதிட நிபுணரிடம் ரணில் முக்கிய ஆலோசனை! இந்தியாவின் கொச்சி நகருக்கு விஜயம் செய்த ஐ.தே.கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அங்கு மூடிய அறைக்குள் இரண்டு நாள்கள் பிரபல சோதிடர் ஒருவருடன் முக்கிய சோதிட சாஸ்திரப் பூஜை ஒன்றில் ஈடுபட்டிருந்தார் என இந்திய செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. கடந்த வியாழனன்று கொச்சின் வந்தடைந்த ரணில் விக்கிரமசிங்க கேரளத்தின் பிரபல ஜோதிடரான பரப்பனாங்காடிகிருஷ்ணபணிக்க

    • 6 replies
    • 2.4k views
  10. அரசாங்கப்படைகளினால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்கில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக கொழும்பின் ஆங்கில நாழிதல் செய்தி வெளியிட்டுள்ளது. பொத்துவில் பகுதியில் இருந்து 10 பேர் கடத்திச்செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் காவல்துறையினருக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தில் தம்மை தமிழீழ விடுதலைப்புலிகள் கடத்திச்சென்று முகாமில் தடுத்து வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். மற்றும் ஒரு சம்பவத்தில் திருகோணமலை புல்மோட்டையில், காட்டுக்கு பழங்கள் பறிக்கசென்ற வேளையில், ஊர்காவல் படை சிப்பாய்; ஒருவரும் ஐந்து சிறுவர்களும் கடத்திச்செல்லப்பட்டனர். இதன் பின்னர் ஐந்து சிறுவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், ஊர…

    • 1 reply
    • 2.7k views
  11. நாட்டில் பிரிவினைவாத்தை ஸ்தாபிக்க ஏகாதியத்தியவாதிகள் உட்பட அவர்களுக்கு நெருக்கமான அமைப்புகள் பல்வேறு கருத்தியல்களை முன்வைத்து, நாட்டை மீண்டும் ஈழத்தை நோக்கி நகர்த்தி வரும் காலத்தை கடந்து கொண்டிருப்பதாக ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதனை அரசியல் ரீதியாக தோற்கடிக்கும் பொறுப்பை நாட்டின் இளைய தலைமுறையினர் ஏற்கவேண்டும் என அவர் கேட்டுள்ளார். பிரிவினைவாதம் கொசோவோவில் இருந்து ஈழம் வரை????என்ற தலைப்பில் மஹாரகம தேசிய இளைஞர் சேவை மண்டபத்தில் சமவுடமைவாத இளைஞர் அமைப்பு ஒழுங்கு செய்த கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். படையினர் தமது உயிர்களை துச்சமென மதித்து கிழக்கை விடுவித்தனர். அவ்வாறு விடு…

    • 1 reply
    • 1.1k views
  12. கழிவு எண்ணெய் ஊற்றி, கல்லெறிந்து ஜே.வி.பி.யினர் மீது தாக்குதல்; சிலர் காயம் [10 - June - 2008] சிலாபம் ஆராச்சிக்கட்டுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை ஜே.வி.பி.யினர் நடத்திய ஆர்ப்பாட்டம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் சிலர் காயமடைந்துள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஊழல் மோசடிகளைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை காலை ஆராய்ச்சிக்கட்டு நகரில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இதன் போது அங்கு வந்த அரச ஆதரவாளர்கள் நடத்திய மிக மோசமான தாக்குதலில் ஜே.வி.பி. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 11 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அரசின் இந்த அராஜகத்தைக் கண்டித்து நேற்றுக் காலை ஜே.வி.பி.யினர் ஆராச்சிக்…

  13. பேராதனைப் பல்கலைக்கழக பொறியி யல் பீடத்துக்கு யாழ்ப்பாண மாவட்டத் தைச் சேர்ந்த 28 பேர் அனுமதி பெறு கின்றனர். அனுமதி பெறுபவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் சமூ கமளிக்குமாறு பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் சரத் அபயக்கோன் அறிவித் துள்ளார். அனுமதி பெறுபவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் யாழ்.பல்கலைக்கழ கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரச அதிபருடன் தொடர்பு கொண்டு பயண ஒழுங்கை மேற்கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழகம் மாணவர்களைக் கேட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் அனுமதி பெறுவோர் விவரம் வருமாறு : அனுஷியா அனந்தசிங்கம் தெல்லிப் பழை, ஆரணி சீவரத்தினம் பருத்தித் துறை, பரமேஸ்வரன் அரிராம் 55, பழம் வீதி, யாழ்ப்பாணம், சிவநாதன் அருணன் கந்தர்மடம், குலதாஸ…

  14. அமைதி நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 634 views
  15. முகமாலையிலுள்ள புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது விமானக் குண்டு வீச்சு. சிறிலங்கா விமானப்படையைச் சேர்ந்த 4 குண்டுவீச்சு விமானங்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் முகமாலையிலுள்ள புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. நீண்ட நேரமாக குடா நாட்டின் வான்பரப்பில் வட்டமிட்ட இந்த நான்கு விமானங்களும் அடுத்தடுத்து முகமாலையில் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியபின் தெற்கு நோக்கி சென்றதாக வடபகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்திய சிறிலங்காவின் விமானப்படைப் பேச்சாளர் ரெண்டாவது தடவையும் புலிகளின் முன்னரங்க நிலைகைளை தமது விமானங்கள் தாக்கிவருவதாகக் கூறியிருக்கிறார். நன்றி - தமிழ்நெட்.

  16. சகல அரசாங்க பாடசாலைகளும் நாளையும் மற்றும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளது. ஆசிரியர் சங்கத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ஆசிரியர்கள் இல்லாதவிடத்து மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல ஏற்படும் என்ற காரணத்திற்காக அரச பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்

  17. இரண்டு மாகாணசபைகளைக் கலைத்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு உதவிசெய்வதாக ஜே.வி.பி.யினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மாகாணசபைகள் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்கள் கலைக்கப்பட்டமையானது சட்டவிரோதமான நடவடிக்கை. இதற்கு எதிராக சட்டநவடிக்கை எடுக்கவிருப்பதுடன், மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாக இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார். தற்பொழுது இரண்டு மாகாணசபைகளையும் கலைத்திருக்கும் அரசாங்கம் அங்கு தேர்தல்களை நடத்துவதாயின் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தரப்ப…

    • 0 replies
    • 843 views
  18. பிள்ளையான் சென்றுவர கரையோர ரோந்துப் படகு [10 - June - 2008] கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) போக்கு வரத்துக்காக கரையோர ரோந்துப் படகொன்றை கடற்படையினர் அமர்த்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபை தலைமையகம் திருகோணமலையிலுள்ளதால் மட்டக்களப்பிலிருந்து பிள்ளையான் திருகோணமலைக்குச் சென்று வருவதற்காக இந்தப் படகை கடற்படையினர் அமர்த்தியுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து பிள்ளையான் திருகோணமலை சென்றுவர ஹெலிகொப்டரை வழங்க முடியாதிருப்பதாலேயே இவருக்கு கடல்வழிப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. திருகோணமலை கடற்படைத்தளத்திலிருந்தே இவர் இந்தப் படகில் மட்டக்களப்பிற்கான பயணத்தை மேற்கொள்வாரெனவும் தெரிவிக்கப்படுகிறத…

    • 0 replies
    • 1.2k views
  19. படைவீரர்கள் தினத்தில் இந்தியாவிற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இலங்கைப் படைவீரர்களுக்கு யுத்தத்தை வெற்றிகொள்ளும் இயலுமை இல்லை என இந்திய ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்றுவரும் குண்டுத் தாக்குதல்களின் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் தோல்வியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது பாதகமான கிரகநிலைக்கு பரிகாரம் பெற்றுக்கொள்ள ரணில் இந்தியா சென்றுள்ளதாக அந்த நாளேடு தெரிவித்துள்ளது. இதேவேளை, பேருந்துக் குண்டுத் தாக்குதல்களின் மூலம் சிவில் மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்ப மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை முப்படையினர் மற்றும் காவற்துறையினரால் மாத்திரம் கட்டுப்படுத்த…

    • 0 replies
    • 802 views
  20. சிறிலங்காவின் இரு மாகாண சபைகள் ஓரே நேரத்தில் கலைப்பு [செவ்வாய்க்கிழமை, 10 யூன் 2008, 03:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கம் நேற்று நள்ளிரவு இரண்டு மாகாண சபைகளை ஒரே நேரத்தில் கலைத்துள்ளது. வட மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளையே நேற்று நள்ளிரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கலைக்கும் உத்தரவை அரசுத் தலைமை வெளியிட்டுள்ளது. மேற்படி இரண்டு மாகாண சபைகளையும் கலைக்குமாறு அந்தந்த மாகாண சபை ஆளுநர்களுக்கு அரச தலைமை அறிவித்ததையடுத்தே மாகாண சபைகள் கலைக்கப்பட்டதாக மேற்படி மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். மேற்படி இரண்டு மாகாண சபைகள் கலைக்கப்பட்டமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படு…

    • 0 replies
    • 707 views
  21. அதிகாரப் பகிர்வு ஊடான அரசியல் தீர்வின் மூலம் மாத்திரமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தமுடியும் - இந்திய செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து சகல சமூகத்தினரிற்குமான நம்பகத்தன்மை மிக்க அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அதிகாரப் பகிர்வு ஊடான அரசியல் தீர்வின் மூலம் மாத்திரமே நிரந்தர சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்னையில் கருத்துத் தெரிவித்துள்ளார். கேரளாவின் குருவாயூர் ஐயப்பன் கோவிலுக்கு விசேட வழிபாட்டுக்காகச் சென்ற பின்னர் புதுடில்லிக்குத் திரும்பும் சமயம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர்இ எனினும் மஹிந்த ராஜபக்ஷ அரசினால் இவ்வ…

  22. மணலாறில் (வெலிஓயாவில்) கடந்த இரண்டு நாள்களாக, கொட்டும் மழையின் மத்தியி லும், அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில், இரவு பகலாகக் கடுஞ்சமர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருதரப்புக்களும் உத்வேகத்துடன் மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாக நேற்று நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர் கிடைத்த களமுனைத் தகவல்கள் தெரிவித்தன. நான்கு முனைகளில் பாரிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த அரசுப் படைகள், புலிகளின் முக்கிய படைத் தளமான "வன் போர்' மையத்தை முற்றுகையிட்டுள்ளன எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது. முன்னேற முயலும் படையினருக்கு எதிராகக் கடும் தாக்குதலை நடத்தி அரசுத் துருப்புகளுக்குத் தாங்கள் பேரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர் எனப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்ப…

    • 1 reply
    • 1.7k views
  23. 'பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி வடபகுதி மக்கள் தென்பகுதிக்குள் வருவதைத்தடை செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்ககைள் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். 'தமிழ் நாடாளுமன்று உறுப்பினா ஒருவர் வடகிழக்கு மக்களைத் தென்பகுதிக்கு வராதீர் எனக் கோரிக்கை விடுப்பது அரசு முன்னெடுத்துச் செல்லும் யுத்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் அறிவுரையாகவே நோக்க வேண்டியுள்ளது.' இடது சாரி முன்னணி பிரசாரச் செயலாளர் ஞானசிறி கொதிகொடவின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அரசு யுத்த வெறி கொண்டு இயங்குவதை மஹிந்தவின் பேச்சும், ரத்ணசிறியின் யுத்தம் பற்றிய விளக்கங்களும் நன்கு புலப்படுத்துகின்றன. அண்மைய தினங்களில் கொழும்பிலும், அதனை அண்டிய நகரங்களிலும் நடத்தபட்ட குண்டு வெடிப்புகளால் நூற்…

  24. வெள்ளை வான் கடத்தல்களுடன் சீருடை தரித்த பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பந்தப்பட்டுளமை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், தமிழர் மீதான கடத்தல்கள், கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். பொது மக்களை குறி வைத்து மேற்கொள்ளப்படும் குண்டு வீச்சுகளும் குண்டுத்தாக்குதல்களும் வடகிழக்கில் மட்டுமல்ல இலங்கையில் எந்தப் பாகத்திலும் இடம் பெறக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு. அரசும் விடுதலைப் புலிகளும் நடத்தும் வெற்றி கொள்ள முடியாத போருக்கு அப்பாவிப் பொதுமக்களே பலியாகி வருகிறார்கள். அதற்கு மேலாக சொல்லொணாத் துயரங்களிலும் கடத்தல் கைதுகளாலும் மக்கள் இம்சிக்கப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். …

  25. நடமாட்ட சுதந்திரத்துக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கை வடக்கில் யாழ். மாவட்டத்தில் சிவிலியன்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு இப்போது வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டிருக்கின்ற

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.