ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
வீரகேசரி நாளேடு - சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட சகல சார்க் நாடுகளின் தலைவர்களுக்கான பாதுகாப்பும் இலங்கைப் படையினராலேயே வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்தார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமருடன் இந்தியப் பாதுகாப்புப் படையினர் எவரும் வருகை தரமாட்டார்கள். அதற்கான தேவை எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார். சார்க் மாநாட்டில் பங்குபற்றவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாதுகாப்பளிப்பதற்கு இந்தியப் படையினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோதே பாலித கோஹன இவ்வாறு கூறினார். இது குறித்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கையில் மனித உரிமை நிலைவரம்: அரசிடம் கேள்வி எழுப்புகிறது பிரான்ஸ்! ஒப்புக்கொள்கிறார் அமைச்சர் பீரிஸ் ஐ@ராப்பிய ஒன்றியத்தின் புதிய தலைமைப் பொறுப்பை நாளை முதல் ஏற்கவிருக்கும் பிரான்ஸ், இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துக் கேள்வி எழுப்பியிருக்கின்றது. பிரான்ஸுடன் பேச்சு நடத்துவதற்குச் சென்றிருந்த இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் @பராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இத்தகைய கேள்வியை பிரான்ஸ் எழுப்பியது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இலங்கையிலிருந்து ஆடைகள் உட்பட முக்கிய பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செல்வதற்கான ஜி.எஸ்.பி. வரிச்சலுகைகளை மேற்கு நாடுகளிடமிருந்து தொடர்ந்து பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் எத்தனமாக அமைச்சர…
-
- 0 replies
- 904 views
-
-
Posted on : 2008-07-01 இந்தியப் படைகளின் வருகையின் பின்னணியில் சில காரணங்கள் சரித்திரம் தலைகீழாகத் திரும்புகின்றது என்ப தையே நிகழ்வுகள் காட்டுகின்றன. 1980 களின் கடைசியில் ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதி பதி பிரேமதாஸா, அவ்வேளையில் "சார்க்' உச்சி மாநாட்டை இலங்கையில் நடந்த வேண்டியவரானார். இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியத் துருப்புகள் "அமைதி காக்கும் படை' என்ற பெயரில் ஆக்கிரமித்து நின்றமையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பெரும் யுத்தம் ஒன்றையும் மேற்கொண் டிருந்தன. ""ஓர் ஆக்கிரமிப்புப்படை(இந்தியப்ப
-
- 0 replies
- 2k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கைப் படையினர் களத்தில் இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். ஒரு கிழமைக்குள் பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிய வரலாறு புலிகளுக்கு உண்டு என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார். அக்கராயனில் நேற்று நடைபெற்ற தேசிய எழுச்சி மாநாட்டில் உரையாற்றும் பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: மக்களால் கட்டிவளர்க்கப்பட்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திகழ்கின்றது. களமுனையில் போராளிகள் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் மக்களுக்கு கிடைக்கும் வெற்றியாக அமைக்கின்றது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக தமது உணர்வின் வெளிப்பாட்டை தமிழ் மக்களின் பலத்தை உலகி…
-
- 10 replies
- 2.1k views
-
-
இலங்கைக்கு இந்திய வீரர்களை அனுப்ப நெடுமாறன் கண்டனம் திங்கள்கிழமை, ஜூன் 30, 2008 சென்னை: சார்க் மாநாட்டு பாதுகாப்பு என்ற போர்வையில் இலங்கைக்கு 3000 இந்திய ராணுவ வீரர்கள் அனுப்பபட்டுள்ளனர். இவர்களை வைத்து ஈழத் தமிழர் போராட்டத்தை ஒடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு செல்லும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது என்ற போர்வையில், 3 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியப் படை வீரர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவும், முதல் கட்டமாக 1500 வீரர்கள் கொழும்பு சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகி…
-
- 0 replies
- 796 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழர் தரப் பின் பிரதிநிதியான தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு தீண்டத்தகாத தரப்பினர் போல நமது அயல் பாரத தேசம் கருதுகின்றது. ஈழத்தமிழர்களின் மனதைப் பெரிதும் புண் படுத்தும் விடயம் இது. ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்தைக் காட்டி புலிகளையும் தமிழர்களையும் விரோதிகள் போலத் தள்ளி வைத்து நடக்கும் இந்திய தேசத்திற்கு உறைப்பாகக் கொடுத்திருக்கின்றார் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன். கொழும்புக்கு வந்திருந்த இந்திய உயர்மட்ட இராஜந் திரிகள் குழுவினரைத் தாம் ஒருவராக தனியாக சந்தித்து, ஈழத்தமிழர்களுக்காக வாதாடிய சமயமே இது விடயத்தில் இந்நியத் தரப்புக்கு சில விடயங்களையும் காட்டமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், சமாதானப் பேச்சுக்கு வருமாறு, தாமே அவரே நேரடியாக அழைப்பு விடுத்தால் மட்டுமே அரசாங்கம் அதனைப் பரிசீலனை செய்து பேச்சுவார்த்தையை நடத்துவது குறித்து முடிவு செய்யும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அரசாங்கத்தின் சமாதானப் பேச்சுக் குழுவின் தலைவரும், அமைச் சருமான நிமால் சிறிபால டி.சில்வா. அரசாங்கம் விடுதலைப் புலிகளு டன் சமாதானப் பேச்சுக்களை நடத்து வதற்குத் தயாராகவே உள்ளது. பேச்சுகள் எந்த நிபந்தனையும் இன்றி ஆரம் பிக்கப்படலாம். எனினும் பேச்சுத் தொடர்பான அழைப்பு விடு தலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர னிடம் இருந்து நேரடியாக அரசாங்கத்து க்குக் கிடைக்க வேண்டும். அவரிடமிருந்து அழைப்புக் கிடைத் தால் பேச்சுக்கான சூழல் உருவா…
-
- 0 replies
- 1.1k views
-
-
மூன்று யுத்தக்கப்பல்கள் மற்றும் யுத்த உலங்குவானூர்திகள் சகிதம் ஆயிரக்கணக்கான இந்தியப் படையினர் கொழும்புக்கு விரைவு. சார்க் தலைவர்களை புலிகள் ஆகாயம் அல்லது கடல் மார்க்கமாகத் தாக்கலாமாம். Indian troops for South Asian summit in Sri Lanka 1 hour ago COLOMBO (AFP) India is to send thousands of troops, war ships and helicopters to Sri Lanka as part of security for next month's South Asian summit in Colombo, diplomatic sources said Sunday. New Delhi is planning to send three war ships with a combined force of up to 3,000 security personnel because of fears that Tamil Tiger rebels could stage land, sea or air attacks, diplomats and officials said. …
-
- 15 replies
- 3.1k views
-
-
வவுனியா பாரதிபுரம் மற்றும் தாலிக்குளம் பகுதிகளில் நேற்று முன்நாள் இரு இளைஞர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 539 views
-
-
யேர்மனியின் டுசல்டோவ் நகரில் நேற்று முன்நாள் சனிக்கிழமை பேரெழுச்சியுடன் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 8,000-க்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 574 views
-
-
சிறிலங்காப் படைத்தளபதிகள் கூறுவதனைப் போன்று விடுதலைப் புலிகளின் 1- 4 தளம் மணலாறில் தற்போது இல்லை. அது 1991 ஆம் ஆண்டில் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ தலைமையில் நடைபெற்ற "மின்னல்" படை நடவடிக்கையிலேயே அழித்தொழிக்கப்பட்டு விட்டது. புலிகளின் அந்தத்தளம் தற்போது இடம்மாற்றப்பட்டு விட்டது என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 794 views
-
-
வெள்ளவத்தைக் கைதுகளும் ஆட்கடத்தல்களும் அதனை நிரூபிக்கின்றன என்கிறார் "வடக்கு கிழக்கு மக்கள் கொழும்புக்கு வருவதைத் தற்காலிகமாகத் தவிர்க்க வேண்டும்' என்று நான் முன்னர் கூறிய கூற்றின் நியாயத்தைக் கடந்த சனிக்கிழமை வெள்ளவத்தையில் கண்மூடித்தனமாகப் பலர் கைது செய்யப்பட்டமையும், தலைநகரிலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் வகை, தொகையின்றி இடம்பெறும் ஆட்கடத்தல்களும் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் நேற்றுமுன்தினம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு, பஸ்களில் ஏற்ற…
-
- 0 replies
- 642 views
-
-
கலைஞர் கருணாநிதியும் இலங்கைத் தமிழ் அகதிகளும் [29 - June - 2008] தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் எந்தவொரு சொத்துக்களையும் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக மூண்டிருக்கும் யுத்தத்தால் வட, கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் இலட்சக் கணக்கில் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளதுடன் தற்போதும் அவர்களின் படகுப் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்திற்கு வட, கிழக்குத் தாயகத்திலிருந்து மட்டுமல்லாமல் 1983 இனக்கலவரத்தின் பின்னர் மலையகம் மற்றும் கொழும்பிலிருந்தும் கூட தமிழ் மக்கள் அகதிகளாக சென்று…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியா: தேச நலனா? அரசியல் இலாபமா? சார்க் மாநாட்டைச் சாக்காகக் கொண்டு இலங்கை வந்து சென்றிருக்கும் இந்திய உயர்மட்டக் குழுவின் விஜயம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், வாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கைக்கு இவர்கள் ஏன் வந்தார்கள், அரசாங்கத் தரப்புடன் என்ன பேசினார்கள், என்ன முடிவுகள் எட்டப்பட்டன என்பன தொடர்பாக ஊகங்களைத் தவிர வேறெதுவும் இன்னமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இலங்கைக்கு ஆயுத உதவி வழங்க இந்தியா சம்மதம் தெரிவித்துவிட்டதாக சில கருத்துக்களும், இதன்மூலம் போருக்கு வலுவூட்டி ஈழத்தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைப்பதாகச் சில கருத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஈழத்தமிழர்களுக்கு உதவவேண்டிய இந்தியா அதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிராக இலங…
-
- 0 replies
- 609 views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்தினை உரிய நேரத்தில் சிறிலங்காப் படையினர் கற்றுக்கொள்வார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 570 views
-
-
போரில் இருந்து அரசாங்கம் பின்வாங்கினால் அரசாங்கத்தின் முடிவாக அது இருக்கும் என்று சிறிலங்காவில் உள்ள தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 508 views
-
-
கறுப்புப் பூனைகளுடன் சிறிலங்கா செல்லும் இந்தியப் பிரதமர் [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:30 மு.ப ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு கறுப்புப் பூனைப் படையை அழைத்துச் செல்லவுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் உயர்மட்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: சார்க் மாநாட்டை முன்னிட்டு சிறிலங்காவுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு என சிறப்பாக அமைக்கப்பட்ட கறுப்புப் பூனை படையினரை அழைத்துச் செல்லவுள்ளார். சிறிலங்காவில் மன்மோகன் சிங் தங்கியிருக்கும் காலப்பக…
-
- 19 replies
- 1.5k views
-
-
வடக்கிலும் ஒரு பிள்ளையானை உருவாக்க வேண்டும்: இந்தியா [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 06:13 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசாங்கம் கிழக்கில் நடத்திய பரீட்சார்த்த அரசியல் நடவடிக்கையைப் போன்று வடக்கிலும் நடத்தி அங்கும் ஒரு பிள்ளையானை உருவாக்க வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் "லக்பிம"வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பான தொடர்புகளைப் பேணுவதற்கு சிறிலங்காவுடன் இந்தியா ஒரு உடன்பாட்டைச் செய்துள்ளது. அதிகாரபூர்வமற்ற ஒரு செயற்பாட்டை இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் இது தொடர்பில் செய்துள்ளன என்று வெளிவிவகார அமைச்ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காயில் இன்று சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். துணுக்காய் பிரிவில் உள்ள அம்பலப்பெருமாள்குளத்துக்கு
-
- 2 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளிடம் இருந்து விடத்தல்தீவைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம் இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய விடத்தல்தீவு பகுதி வரை இராணுவம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம அறிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மன்னார் - பூனகரி பிரதான வீதியில் 12 கிலோ மீட்டர் தூரத்தைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார். உயிலங்குளம் - அடம்பன், உயிலங்குளம் - ஆண்டான்குளம் ஆகிய விடுதலைப் புலிகளின் முக்கிய விநியோக வீதிகள் உட்பட சுமார் 120 சதுர கிலோ மீட்டர் பரப்…
-
- 2 replies
- 2.3k views
-
-
வவுனியாவில் கொலைகள் தொடர்கின்றன. இனந்தெரியாதவர்களினால் கொல்லப்பட்ட இருவரது சடலங்கள் பொலிசாரினால் வைத்தியசாலையில் ஒப்படைப்பு. வவுனியாவில் அண்மைக்காலமாக இனந்தெரியாதவர்களின் கைவரிசைக்கு ஆளாகி இளைஞர்கள் கொல்லப்பட்டு வருகின்றார்கள். இளம்பெண் குடும்பப் பெண் ஒருவரும் இனந்தெரியாதவர்களினால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மேலும் இரண்டு பேர் நேற்றிரவு கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த இருவரும் வெட்டிக் கொல்லப்பட்டதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தபோதிலும், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியபின் அவற்றை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ள வவுனியா பொலிசார், இறந்தவர்களின் உடல்களில் எந்தவிதமான காயங்களும் வெளிப்படையாகத் தெரியவில்லை என தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 828 views
-
-
எதிர்பாராத திடீர் பயணமும் எதிர்பார்க்கப்படும் தேர்தலும் -இதயச்சந்திரன் ஞாயிறு, 29 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் 15ஆவது சார்க் உச்சி மாநாட்டிற்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் இந்திய பாதுகாப்புத்துறை செயலர் ஸ்ரீ விஜயசிங் ஆகியோரின் இரண்டு நாள் திடீர் இலங்கை விஜயத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக பேசப்படுகிறது. அதேவேளை இப்பயணத்தின் பின்புலத்தில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இந்திய நாடõளுமன்ற தேர்தல் குறித்தும் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த மூன்று இந்திய உயர்நிலை அதிகாரிகளின் ஒன்றிணைந்த வரவு மறுபடியும் இந்தியாவின் நேரடித் தலையீட்டிற்கான முதற்படியாக இருக்க…
-
- 0 replies
- 815 views
-
-
பூநகரியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்தவர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:48 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பூநகரி, வன்னேரியில் இன்று காலை சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பூநகரியில் உள்ள ஜெயபுரம், முறிகண்டி சாலையில் வன்னேரிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகள் பேருந்தினை தாக்குவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்த போதே ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட ஆழ உடுருவும் அணியின் தாக்குதலாளி, ஜெனீவா கடப்பாடுகளை மீறி தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் நியமச்சீருடையை அணிந்திருந்தார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியா சிராட்டிக்குளம் பகுதியில் நேற்று மாலை முதல் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 25 போராளிகளின் உடலங்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. 5-4 என்ற முகாம் மீதான படையினரின் தாக்குதலிலேயே இந்த இழப்புக்களை புலிகள் சந்தித்ததாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
-
- 63 replies
- 10.3k views
-
-
தேடுதலின்போது கைத்தொலைபேசி விபரங்களும் பதியப்படுகிறது ஞாயிறு, 29 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] சனிக்கிழமை சிறீலங்கா படையினரால் வெள்ளவத்தைப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையின்போது கைத்தொலைபேசி எண்கள், சீரியல் இல போன்றவற்றை பதிவுசெய்துள்ளதாகவும் தெரியவருகிறது. பல பொதுமக்கள் விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டபோதும் அவர்கள் இன்னமும் வீடுதிரும்பவில்லை. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வெள்ளவத்தைக்கு வெளியே உள்ளே காவல்நிலையத்திற்கு பேரூந்தில் அழைத்துச்சென்றுள்ளதாகவும் அறியமுடிகிறது. தேடுதல் நடவடிக்கை காலை 5 மணிமுதல் மதியம் 1 மணிமுதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது http://www.pathivu.com/?p=1511
-
- 0 replies
- 696 views
-