Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலையில் அமைக்கப்பட்டிருக்கும் உயர்பாதுகாப்பு வலயமானது சர்வதேச சட்டத்துக்கு முரணான வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களில் சென்று குடியமர்வதற்கு உரிமை உடையவர்கள். சர்வதேச சட்டத்துக்கு அமைய எந்தவொரு நபரும் ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு இல்லத்து விடயத்தில் தலையிடுவதற்கு உரிமை அற்றவர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் கடந்த மே மாதம் திருகோணமலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆய்வறிக்கையொன்றை வெளிய…

  2. மனோ கணேசன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு: கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சு வியாழன், 12 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] மேலக மக்கள் முன்னணியும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் கூட்டணி அமைப்பதற்காக பேச்சுக்களை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டணி அமைக்கும் விடயம் தொடர்பில் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூவ் ஹக்கீனும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சிறுபாண்மைக் கட்சிகளாக இருக்கும் இவ்விரு கட்சிகளும் சில பேச்சுக்களின் மூலம் சில உட்பாட்டை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. தேர்தல் காலங்களில் இணைந்து போட்டியிடுவது…

    • 0 replies
    • 673 views
  3. வன்னிச் சமரில் அரசுக்கு பாதகமான நிலை உருவாகிறது அது வெளியே தெரிய சில காலம் பிடிக்கலாம் விடுதலைப் போருக்கு எதிராக இந்திய அரசு மறைமுகப் போர் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பேட்டி * வன்னியில் நீண்ட போர் அரங்கில் பாரிய சமர் இப்போது நடைபெறுகிறது. அந்தப் போர்க்களம் மாற்றம் கண்டு வருகிறது. அரச படைகளுக்கு பாதகமான காட்சி மாற் றம் வெளியே தெரிவதற்கு சில காலம் பிடிக் கலாம். * இந்திய அரசு, புலிகளுக்கு எதிராக வும் தமிழர் விடுதலைப் போருக்கு எதிரா கவும் மறைமுகப் போரை நடத்தியே வருகிறது. இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிக ளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடே சன் புதினம்' இணையத் தளத்துக்கு வழங் கிய நீண்ட பேட்டியில் தெரிவித்திருக் கிறார். இலங்கை அரசாங்கம் நடத்தும் பரப் புரைகள் பொய்யானவை …

    • 0 replies
    • 1.3k views
  4. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்ள விண்ணபிப்பதற்கு முன்னர் மனித உரிமை விவகாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மற்றும் அபிவிருத்தி உதவி என்பனவற்றை வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் ரொய்டர் செய்தி சேவைக்கு இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளனர். நாட்டின் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டுமாயின் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜாவோ மசடோ தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை தொடர்பாக …

    • 0 replies
    • 802 views
  5. இன்று பிற்பகல் 2.00 மணியளவில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முதலாவது பிரதிநிதிகள் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் ஓரே மேடையில் உiராயற்றவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். நாட்டின் 18 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெரும் எண்ணிக்கையிலான கட்சி உறுப்பினர்கள் இ…

    • 0 replies
    • 948 views
  6. இலங்கை இனப்பிரச்சினையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் மூலம் இந்தியாவுக்குப் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நேற்று நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் இலங்கையிற் பிரச்சினை தீவிரமடையும் போது அதிகளவான அகதிகள் இந்தியாவுக்கு வருகை தருவதாகக் குறிப்பிட்டார். எனவே இந்தியாவுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையாக உள்ளது. மறுபுறத்தில் அது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகியுள்ளது என இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா அயல்நாடுகளான பாகிஸ்தான்; பங்களாதேஸ்; நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாட…

  7. அரசாங்கத்தின் கொலை பட்டியலில் 27 ஊடகவியலாளர்கள் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொலை செய்வதற்காக அரசாங்கம் 27 ஊடகவியலாளர்களின் பெயர்களை அடங்கிய பட்டியலை தயாரித்துள்ளதாகவும், இந்த பட்டியல் தொடர்பான தகவல்களை ஊடக அமைப்புகள் தூதரங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தகவல் வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கில் ஊடகவியலாளர்களை கொலை செய்து, அங்கு ஊடகத்தின் குரலை ஒடுக்கி விட்டு தற்போது, தென் பகுதியில் ஊடகவியலாளர்களை கொலை செய்ய முயற்சிப்பதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். தென் பகுதி ஊடகவியலாளர்களை கொலை செய்யும் சூழ…

    • 0 replies
    • 1.2k views
  8. யாழ். குடாநாட்டு மீட்புச் சமரை ஆரம்பிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, இதன் காரணமாக அடுத்த வாரம் குடாநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. இன்று பிற்பகல் 2.00 மணியளவில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முதலாவது பிரதிநிதிகள் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் ஓரே மேடையில் உராயற்றவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். நாட்டின் 18 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெரும் எண்ணிக்கையிலான கட்சி உறுப்பினர்கள் இன…

    • 0 replies
    • 898 views
  10. இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களுக்கு பொதுமக்களின் பணமே செலவுசெய்யப்படுவதால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளவேண்டியதேவை நாட்டு மக்களுக்கு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எனினும், பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவத் தளபாடக் கொள்வனவு தொடர்பான தகவல்களை ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் வெளியிடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறினார். இலங்கையில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். சர்வதேச ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு கூடுதலான அச்சுறுத்தல்கள் இருக…

    • 0 replies
    • 689 views
  11. கடத்தல்கள், காணமல் போதல்களுக்கு அரசே பொறுப்பு சிறீலங்காவில் இடம்பெறும் கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு சிறீலங்கா அரசாங்கமே பொறுப்பு என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. கடத்தல்கள், காணாமல் போதல்களைக் கண்காணக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு, இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பெண்கள், மனிதநேய பணியாளர்கள் உட்பட, 22 கடத்திச் செல்லப்பட்டிருப்பதாகவும், மே மாதத்தில் மட்டும் 18 பேர் கடத்திச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்டவர்களின் பெண்களும், மனிதநேய பணியாளர்களும் உள்ளடங்குவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை அதிக கவனம் செலுத்துவ…

  12. முல்லைத்தீவினை நோக்கி இராணுவத்தினர் முன்னேறுகின்றனர்- இராணுவ தளபதி - பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவினை மீட்கும் நோக்கில் பல்வேறு முனைகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைதுசெய்யும் முகமாகவே முல்லைத்தீவில் பல்வேறுமுனைகளில் தாக்குதல் நடத்துவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா சிங்கள் நாளிழான தினமினவிற்கு வழங்கிய நேர்காண்லொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவினை நோக்கிய இராணுவ நடவடிக்கையில் 56,57.58 மற்றும் 59 இராணுவ படையணிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன அத்துடன் அதிரடிபடை ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத்தினர் முல்லைத்தீவிலுள்ள விடுதலைப்புலிகளின் 1௪ வரையான முகாம்கள் மீது…

  13. இலங்கை ஜனாதிபதி பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் டேவிட் கமரூனை இன்று சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவற்றில் விடுதலை புலிகளை தொடர்ந்து தடை செய்யுமாறும் அவர்களுக்கு நிதி சேகரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறித்தியுள்ளார். இவருடன் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரும் கலந்து கொண்டு தகவல்களை வழங்கியதாக தெரியவருகிறது. முன் எப்பொழுதும் இல்லாதவாறு இலங்கை உயர்ஸ்தனிகராலயம் தமிழ் மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பது ஆச்சரியமான விடையமொன்றாகும். கடந்த ஆண்டில் B.B.C க்கு அளித்த பேட்டியில், தாமே அருகிலிருந்து பார்த்ததை போல வங்கி அட்டை மோசடிகளில் இலங்கை தமிழரே ஈடுபடுவதாக பரப்புரை ஒன்றை மேற்கொண்டது முதல் நேற்று நடைபெற்ற புலிகள் எதிர்பு ஆர்…

    • 5 replies
    • 2k views
  14. தகவல்: மணிவாசகன் மூலம்: http://www.frictiontv.com/ftv_debate.php?debate_id=3359 நன்றி!

  15. வவுனியா மாவட்டம் நெலுக்குளம் பகுதியில் நேற்று முன்நாள் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 697 views
  16. பயங்கரவாதத்தை அழிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாப்பரசர் இரண்டாவது ஆசீர்வாதப்பர் உள்ளிட்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள் கைகோர்த்துக்கொண்டு ஆதரவளிக்கின்றனர் என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டு பிரஜைகளின் சுதந்திரம்,இறைமை, ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்ற நிலையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தோல்வியடைந்து வருகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்துள்ளமையினை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கின்றது என்றும் அவர் சொன்னார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலை…

    • 0 replies
    • 927 views
  17. சிறிலங்காவின் அக்குரஸ்ஸ பகுதியில் 10 வயதுச் சிறுமி ஒருவர் தான் வன்னியில் இருந்து குண்டு வைக்க வந்துள்ளதாக தெரிவித்த தகவலால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சில பாடசாலைகளும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து வாசிக்க

  18. யாழ்.குடாநாட்டில் விடுதலைப்புலிகளின் அச்சுத்தல் அதிகரித்துள்ளதால் அங்கு அடுத்த ஒரு வாரத்ததுக்குப் பாதுகாப்பு தீவிரமாகவும் இறுக்கமாகவும் இருக்கும். என மேஜர்ஜெனரல் சந்திரசிறி நேற்று தெரிவித்தார் யாழ் குடாவில் ஊடகவியலாளர்களுடன் நேற்றுப் பலாலிப்படைத்தளத்தில் தாம் நடத்திய சந்திப்பின்போது அவர் அத்தகவலை வெளியிட்டா. எதிர்வரும் 19,20 ஆம் திகதிகளில் யாழ்.குடாவின் தென்கரைரோப்பகுதி ஊடாகத் தாக்குதல் நடத்திக் கொண்டு குடாநாட்டிற்குள் நுழையப் போகிறோம் என்று யாழ்.குடாவில் மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களிடம் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்ற செய்தி குடா நாட்டில் பரவியுள்ளது. இந்தப் பின்புலத்தில் குடா நாட்டில் படையினரின் பாதுகாப்பு நடவக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இ…

  19. 2008 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைத தரம் வாய்ந்த உலகளாவிய நகரங்களின் தரப்படுத்தல் வரிசையில் ஒக்லாந்து ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த வாழ்க்கைத் தரம்வாய்ந்த நகரமாகவும், பிராந்தியத்தின் மோசமான வாழ்க்கைத் தரம் வாய்ந்த நகரமாக டாக்காவும் தரப்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய நகரங்களே உலகளவில் கூடுதல் வாழ்க்கைத்தரம் வாய்ந்த நகரங்களாக தரப்படுத்தப்பட்டுள்ளன. இத்தரப்படுத்தலில் சூரிச் முதலிடத்திலும், வியன்னா மற்றும் ஜெனீவா ஆகிய நகரங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளன. வான்கூவர் மற்றும் ஒக்லாந்து ஆகிய நகரங்கள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களைப் பிடித்துள்ளன. அரசாங்கங்கள் மற்றும் தனியார் கம்பனிகளின் உதவியுடன் சர்வதேச ரீதயில் இந்த தரக்கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பீ…

  20. வவுனியா மொதல்களில் 19 இராணுவத்தினர் பலி குஞ்சுக்குளம் பகுதி முன்னரங்க நிலைகளால் பல முனைகளில் முன்னேற முயன்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலின் போது ஒரு lance corporal தர அதிகாரி உற்பட 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.. மேலும் இப் பதில் தாக்குதல்களின் போது விடுதலைப் புலிகளின் இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக புலிகள் அறிவித்துள்ளனர்.. http://tamilnet.com/art.html?catid=13&artid=25989

    • 2 replies
    • 1.6k views
  21. Posted on : 2008-06-12 அப்பாவிகளைப் பலி வாங்கியமைக்கு அப்பாவிகள் மீது பழி தீர்க்கலாமா? கொழும்பிலும் தென்னிலங்கையிலும் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு "எல்லாளன் படை அணி' என்ற அமைப்பு உரிமை கோரியிருப்பதாக செய்தி ஏஜென்ஸிகள் சில தகவல்கள் வெளியிட்டிருக்கின்றன. ஆழ ஊடுருவும் படையணியைப் பயன்படுத்தியும், விமானத் தாக்குதல்கள் மூலமாகவும் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்வதற்குப் பதிலடியாகவே இந்தக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அந்த "எல்லாளன் படை அணி' தெரிவித்திருக்கின்றதாம். இலங்கை இராணுவத் தரப்புக் கூறுவது போல "எல்லாளன் படை அணி' என்ற பெயரில் இந்தக் கைவரிசையைக் காட்டுவது விடுதலைப் புலிகள் அமைப்பாக இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இர…

    • 10 replies
    • 2k views
  22. அரசியல், உலகமயமாக்கல் தொடர்பான கொள்கைகளை கருத்தில் எடுக்காது உதவிகள் வழங்கவேண்டும் - ஜனாதிபதி மஹிந்த கருத்து வீரகேசரி நாளேடு 6/11/2008 11:22:57 PM - உதவி வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் ஒரு நாட்டுக்கு உதவி வழங்கும் போது அந்நாட்டின் அரசியல் மற்றும் உலகமயமாக்கல் தொடர்பான கொள்கைகளை கருத்தில் எடுக்கக் கூடாது. அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடõக அல்லது நேரடியாக நாடுகளுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக சர்வதேச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பொதுநலவாய செயலாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரி…

  23. ராஜபக்ஸ குடும்பத்தின் குறைபாடுகளை மூடிமறைப்பதற்காக அப்பாவி படைவீரர்களின் உயிர்களை பலிகொடுத்து, தேசிய சொத்துக்களை சுரண்டி மேற்கொள்ளப்படும் யுத்தமே பொதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியாத பொருட்கள் விலையேற்றத்திற்கு பிரதான காரணம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்சள சமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முதலாவது பிரதிநிதிகள் மாநாடு நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தொடர்பாக இன்றைய தினம் (ஜூன்11) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ஸ சகோதர ஆட்சி மக்களை பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கி வருவதாகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதில…

    • 0 replies
    • 654 views
  24. வீரகேசரி இணையம் 6/11/2008 12:46:45 PM - சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்க்காக இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கிழக்குமாகாணசபை தலைவர்களும், முதலைமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் சந்திக்க விரும்புகின்றனர். கிழக்குமாகானசபையின் அபிவிருத்தி தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கிழக்கு மாகாணசபை முதலைமைச்சர்கள், தலைவர்கள் தானும் கலந்துரையாட விரும்புவதாக கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.எலெ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=3817

  25. சிறீலங்காவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டு வருவதாகக் கூறி ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் 70 மில்லியன் யூரோ உதவி நிறுத்தி வைக்கப்படவுள்ளது. சிறீலங்காவில் மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. COLOMBO, June 11 (Reuters) - The Europen Commission has serious concerns about Sri Lanka's human rights record and will withhold a 70 million-euro aid package unless it opens up, a top EU official said on Wednesday. The commission said the package was dependent on Sri Lanka removing barriers to humanitarian assistance, including resolving visa issues for Red Cross and U.N. workers in the country. "We …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.