ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
பொருளாதாரம் 7.8% ஆல் சுருங்கியது இலங்கையின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 7.8 சதவீதத்தால் சுருங்கியுள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. தேசிய கணக்கு மதிப்பீடுகள் குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் 13,037,934 மில்லியன் ரூபாயாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2022ஆம் ஆண்டில் 12,017,849 மில்லியன் ரூபாயாக குறைவடைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2,917,721 மில்லியனில் இருந்து 2021 ஆம் ஆண்டில் 3,331,073 மில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டு, 12.4 சதவிகி…
-
- 1 reply
- 776 views
-
-
பாடசாலை மாணவர்களுக்கு சலுகையில் அப்பியாச புத்தகங்கள்! Published By: T. SARANYA 17 MAR, 2023 | 09:30 AM பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாச புத்தகங்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக சதொசவின் தலைவர் சவான் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு சதொச நிலையங்ளில் இருந்து உயர்தர அப்பியாச புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் உயர்தர அப்பியாச புத்தகங்கள் நாடு பூராகவும் உள்ள 48 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/150…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
நெற்செய்கைக்குத் தேவையான மண் உரம் நாட்டை வந்தடைந்தது! நெற்செய்கைக்குத் தேவையான மண் உரம் அல்லது TSP உரம் நாட்டை வந்தடைந்துள்ளது. உரம் ஏற்றி வந்த MV INCE PACIFIC என்ற கப்பல் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 03 பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் முதன்முறையாக இந்நாட்டு விவசாயிகளுக்கு 36,000 மெட்ரிக்டொன் மண் உரம் கிடைக்கவுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த மண் உரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற மற்றொரு கப்பல் எதிர்காலத்தில் வரவுள்ளது. நாட்டிலுள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்கள் 2022ஃ23 பெரும் போகத்தில் நெற்செய்கை செய்தாலும் இல்லாவிட…
-
- 0 replies
- 260 views
-
-
கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய தீர்மானம்! தேவையான தரத்தில் தயாரிக்கப்பட்ட கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணலை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கழுவி தேவையான தரத்தில் தயாரிக்கப்பட்ட கடல் மணலின் கனசதுரத்தை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யுமாறு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ப…
-
- 0 replies
- 198 views
-
-
மரவள்ளிக்கிழங்குக்கு உயர்ந்த மவுசு! உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளின் சராசரி சந்தை விலைகள் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாவாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இலங்கையில் மரவள்ளிக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 230 ரூபாவாக உயர்ந்துள்ளது. சமீபகாலமாக நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 60 – 70 ரூபாய் வரை பரவலாகக் கிடைத்து வந்த ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கின் விலை மிகவும் அதிகரித்து நுகர்வோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் 200 ரூபா அல்லது அதற்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கு இன்றைய தினங்களில் வீழ்ச்சியடைந்து வரும் பொருட்களின் விலைகளை ஒப்பிடுகையில் குறையாதது விசித்திரமான நிகழ்வு எனவும் …
-
- 1 reply
- 252 views
- 1 follower
-
-
சமுர்த்தி உத்தியோகத்தர் எனக்கூறி யாழில் பண மோசடி Published By: VISHNU 16 MAR, 2023 | 12:22 PM சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோர்களையும், அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களையாம் இலக்கு வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது. புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் எம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு வழங்குவோம் என கூறி முதியவர்களிடம் ப…
-
- 1 reply
- 443 views
- 1 follower
-
-
13 வது திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக பௌத்தமதகுருமாரை சந்திக்க விக்னேஸ்வரன் விருப்பம் Published By: RAJEEBAN 16 MAR, 2023 | 04:40 PM அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூகத்தினரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவொன்று இதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதுடன் பதிலுக்காக காத்திருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்தமதகுருமார்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஜனாதிபதி 13வது திருத்தத்தை …
-
- 1 reply
- 219 views
- 1 follower
-
-
ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயர நடராஜர் சிலை பிரதிஷ்டை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்துக்கு அமைவாக நடராஜர் பணிக் குழுவினால் ஆனையிறவுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று முற்பகல் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. ஆனையிறவுப் பகுதியில் பிரதான வர்த்தக மையம், பாரம்பரிய உணவகம், எரிபொருள் நிரப்பு நிலையம், நவீன குளியலறை, விளையாட்டு முற்றம், கடற்கரை, உல்லாச விடுதி மற்றும் உணவகம், வங்கி வசதிகள் என்பவற்றுடன் கூடிய ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தை நிறுவும் திட்டமிடல் வரைபடத்தின் அடிப்படையில் முதலாம் கட்டப் பணிகள் நிறைவுபெற்று அங்கு நிறுவப்பட்ட சுமார் 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு பிரதிஷ்டை செய்து…
-
- 10 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான் 09 MAR, 2023 | 04:30 PM அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகின்றது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு மிக முக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு (WFP)மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்கயே இவ்வாறு ஜப்பான் வழங்குகின்றது. இந்த நிதியுதவியின் மூலம் WFP குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய உணவுப் பொதிகளை வழங்கி, அவர்களின் மாதாந்த உணவுத்…
-
- 1 reply
- 509 views
- 1 follower
-
-
ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை! Published By: VISHNU 15 MAR, 2023 | 06:35 PM பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனை…
-
- 2 replies
- 629 views
- 1 follower
-
-
மருத்து தட்டுப்பாடு தொடர்பில் விசாரணை அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்து தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையும் இந்த விசாரணைகளின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விசாரணைகளுடன் தொடர்புடைய முறைப்பாட்டாளர்களும் பிரதிவாதிகளும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனினும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சமூகமளிக்காமையால், இந்த விசாரணைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள…
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
பால்நிலை மாற்றம் கொண்டவர்களிற்கான பாதுகாப்பு - பொலிஸ் அதிகாரிகளிற்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டது இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு Published By: RAJEEBAN 16 MAR, 2023 | 03:20 PM 1978ம் அரசியலமைப்பின் 12.1 பிரிவின் கீழ் குறிப்பிட்டுள்ள படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சட்டத்தினால் சமமான பாதுகாப்பு என்ற அரசியலமைப்பு உத்தரவாதத்தை கருத்தில் கொள்வதுடன் பொலிஸ் அதிகாரிகள் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் அடையாளம் மற்றும் செயல்முறையை அங்கீகரிக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வெவ்வேறு துறைகளில் உள்ள சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் பால்நிலை மாற்றம் கொண்டவர்கள் மற்றும் பால்நிலை மாற்றம் கொண்டவர்கள…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
சர்வதேச அழகிப் போட்டி - முதல் தடவையாக யாழ் மண்ணில்! Vhg மார்ச் 14, 2023 சர்வதேச அழகிப் போட்டியான Miss Globe 2023 ஐ நடத்துவதற்கான வாய்ப்பை இம்முறை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் 75ற்கு மேற்பட்ட நாடுகளின் அழகிகளின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எமது நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாக அமைகிறது. இலங்கை வரலாற்றில் இப்படியான ஒரு சர்வதேச நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெறுவதுடன் அதனை சுற்றுலாத்துறை அமைச்சுடன் Tronic Entertainment நிறுவனம் சேர்ந்து ஏற்பாடு செய்கின்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக Miss Globe 2023 இலங்கை அழகிப் போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பும் அங்குரார்பண நிகழ்வும் கொழும்பு ஹில்ட…
-
- 29 replies
- 2.2k views
- 2 followers
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் - கொழும்பு விமான சேவை குறித்து ஆராய்வு - இந்தியத் துணைத்தூதுவர் Published By: VISHNU 15 MAR, 2023 | 08:44 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொட…
-
- 10 replies
- 778 views
- 1 follower
-
-
வரி விதிப்பு தொடர்பான இடைக்கால தடை உத்தரவை நீடித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்! 24 FEB, 2023 | 05:27 PM மேல் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் சம்பளத்துக்கு வரி விதிக்கும் வருமான வரி திணைக்களத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தம்மிக்க கனேபொல மற்றும் ஏ.எஸ்.ஆர்.மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.…
-
- 4 replies
- 727 views
- 1 follower
-
-
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. எனினும், நேற்றையதினம் சிறு வீழ்ச்சி பதிவானதுடன், இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 344.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை 327.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போ…
-
- 1 reply
- 547 views
- 1 follower
-
-
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று - தொல்பொருள் திணைக்களம் வசமானது! Vhg மார்ச் 15, 2023 திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்துக்களின் வரலாற்று தொல்பொருள் தளமான கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில், பௌத்த மயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் தளத்தை, அனுராதபுர காலத்தைச் சேர்ந்த பௌத்த இடிபாடுகளைக் கொண்ட தனித்துவமான இடமாக அடையாளம் காண முடியும் என தொல்பொருள் திணைக்களத்தன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 …
-
- 1 reply
- 1.5k views
-
-
மட்டு.கொக்குவில் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு தங்கியிருந்த 17 பேர் கைது Published By: T. SARANYA 16 MAR, 2023 | 09:46 AM மட்டக்களப்பில் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று புதன்கிழமை (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரகசியமாக கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவதினமான நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் ப…
-
- 1 reply
- 446 views
- 1 follower
-
-
ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை என தகவல்! ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொது வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அரச அச்சகத் திணைக்கள சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் அசங்க சதருவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா, இல்லையா என்ற சந்தேகம் காணப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் இதுபோல் எந்த தேர்தலுக்கும் இவ்வாறான நிலை ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் பல வழிகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அரச அச…
-
- 1 reply
- 496 views
-
-
யாழில் மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கும்பல்! பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் , அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில்…
-
- 0 replies
- 601 views
-
-
ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – சாணக்கியன் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது. வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ஒவ் டெமோகிரசி என்ற அமைப்பின் அனுசரனையில் குறித்த குழுவினர் ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர். நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக ஸ்கொட்லாந்து நா…
-
- 0 replies
- 205 views
-
-
வன்னேரிக்குளம் மைதானத்திலிருந்து 14 வருடங்களின் பின் வெளியேறிய இராணுவம் கிளிநொச்சி – வன்னேரிக்குளம் வன்னொளி விளையாட்டு மைதானத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். 2009 ஆம் ஆண்டில் இருந்து வன்னொளி விளையாட்டுக் கழக மைதானத்தின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். இதன் காரணமாக விளையாட்டுக் கழகத்தினால் முழுமையாக மைதானத்தை பயன்படுத்துவதிலும் பொது நிகழ்வுகளை நடாத்துவதிலும் நெருக்கடிகள் காணப்பட்டன. கிராம, பிரதேச, மாவட்ட மட்டங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகளில் மைதானத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி விளையாட்டுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு வழிவகுக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகளும் மனுக்களும் கையளிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் தற்போ…
-
- 1 reply
- 342 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி வெளிநாடு செல்ல உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது Published By: RAJEEBAN 14 MAR, 2023 | 03:43 PM முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க பெண்போராளியொருவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொக்கட்டிச்சோலையை சேர்ந்த குறிப்பிட்ட தான் வெள்ளவத்தையில் வசிப்பதாக போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் உதவியதாக அவரை கைதுசெய்த பயங்கரவாத விசேட பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பெண் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை - அரசாங்கம் Published By: VISHNU 14 MAR, 2023 | 03:53 PM (எம்.மனோசித்ரா) அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடங்கும் துறைகள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள துறைகளைச் சேர்ந்தோர் இன்றைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும் , மேலும் பல கோரிக்கைகளை முன்வைத…
-
- 3 replies
- 493 views
- 1 follower
-
-
யுத்தத்தை விட வீதி விபத்துகள் பயங்கரமானவை - மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி Published By: VISHNU 15 MAR, 2023 | 04:35 PM தற்போதைய காலகட்டமானது, வீதி விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் கால கட்டம் என்பதினால், இளைஞர்கள் வீதி விபத்துக்கள் விடயத்தில் மிகவும் கரிசனையாக செயல்பட வேண்டுமென இலங்கை இராணுவத்தின் 24ம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் 18 வது விஜயபாகு காலாட்படையணி முகாமின் கட்டளை அதிகாரி மேஜர் உதித்த கலுஆராச்சி தலைமையில் (11) நடைபெற்ற இளைஞர் தன்னார்வ அணியின் அங்கத்தவர்களுக்கான தலைமைத்துவ வழிகாட்டல் செயலமர்வில் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டு உரையா…
-
- 0 replies
- 476 views
- 1 follower
-