ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143604 topics in this forum
-
தனக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் இரண்டாகப் பிளவுபடுத்தியிருக்கும் ஆளும் தரப்பு, இறுதியில், தனக்கு விசுவாசமாகவிருந்த அமைச்சன் டக்ளசுவையும் சங்கரியையும் பிரித்து மோதவிட்டுள்ளதாக த.தே.கூட்டமைப்பு மட்டு. மாவட்ட பா.உ பா.அரியநேத்திரன் தெரிவித்தார். பாரளுமன்றில் நேற்று உரையாற்றும் போது மேலும் தெரிவித்தாவது : 'இந்த நாட்டில் இனப்பிரச்சினையென்று ஒன்று இல்லை. இருப்பது பயங்கரவாத பிரச்சினை மட்டமேயென பிரதமர் கூறியுள்ளார். அவ்வாறெனில் ஏன்? யாரை ஏமாற்றுவதற்காக சர்வ கட்சி மாநாட்டை நடத்துகிறீர்கள்? பயங்கரவாத பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வகட்சி மாநாடு தேவையில்லையே? இந்த நாட்டிலுள்ள அனைத்த கட்சிகளையும் இரண்டாகப் பிளவுபடுத்தும் வேலையை மஹிந்த முன்னேடுத்து அதில் வெற்றியும…
-
- 0 replies
- 593 views
-
-
'வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தெற்கில் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது என்று நாம் நினைக்கிறோம்'. இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிஷோர் நேற்றுக் கூறினார். அவசரகாலச் சட்ட நீடிப்பபு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் அங்கு மேலும் : ஆழ ஊடுருவும் அணியினர் வன்னியில் அதிக எண்ணிக்கையான தமிழ் மக்களைக் கொன்று குவிக்கின்றனர். அதற்கான பதிலடியாகத்தான் கொழும்பில் குண்டு வெடிப்புகள் நடத்தப்படுகின்றன என்று நான் நினைக்கிறேன். இருலுந்தாலும் எந்தப் பகுதியிலும் பொதுமக்கள் தாக்கப்படுவதை எம்மால் ஏற்க முடியாது. வன்னியில் மக்கள் கொல்லப்பட்டால் அவர்க…
-
- 2 replies
- 2k views
-
-
சற்று முன் இடம்பெற்றதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலதிக செய்திகள்.. மொரட்டுவ கட்டுபெத்த வீதியில் பஸ்வண்டி (21-18599) ஒன்றினுள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுவரை 15 பேர் காயமடைந்துள்ளனர்.
-
- 49 replies
- 8.5k views
-
-
ராமேஸ்வரம் மீனவர்களின் கண்களை கட்டி இலங்கை கடற்படையினர் சித்ரவதை- ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினர் தங்கது கண்களை கட்டி, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்ததாக விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த 19 மீனவர்களை, கடந்த 9 ஆம் தேதி இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் இலங்கை அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், மத்திய - மாநில அரசுகளின் தீவிர முயற்சிகளால், மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு, இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மீனவர்கள், இலங்கை கடற்படையினர் தங்களது கண்களை கட்டி, ஐ…
-
- 0 replies
- 869 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளை தொடருந்து பாதையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் சூத்திரதாரியை இன்று காலை வவுனியாவில் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 888 views
-
-
அம்பாறையில் தாயும் மகளும் காடையர்களால் பாலியல் வல்லுறவு [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 06:31 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] அம்பாறை ஒலுவில் பகுதியில் தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்நாள் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது. தமிழ்ப் பெண்களான இந்த இருவரும் ஒலுவில் தென்னந்தோட்டப் பகுதி வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே அதிகாலை 1:00 மணியளவில் இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த இளம் தாயும் அவரது 13 வயது மகளும் மேற்படி வீட்டில் தங்கியிருந்த போது, அதிகாலை 1:00 மணியளவில் அந்த வீட்டுக்குள் நுழைந்த ஆறு பேரில் நான்கு பேர் இந்த இருவரையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்று…
-
- 15 replies
- 2.8k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் 16 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 53 பேர் காணாமல் போய் உள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 507 views
-
-
Two Policemen shot dead in Batti Two Policemen were shot dead in two seperate incidents in Batticaloa by unidentified gunmen a short while ago, police said. ஆதாரம்: http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=16885
-
- 2 replies
- 1.1k views
-
-
மறைந்த வடக்கு - கிழக்கு விஞ்ஞானக் கல்லூரி பயிற்சி ஆசிரியர் றொகான் இராஜசிங்கத்தின் நினைவு நிகழ்வும் பகிர்வும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 671 views
-
-
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் அனைத்துலக மன்னிப்புச் சபையினால் புகைப்படக் கண்காட்சி இன்று வியாழக்கிழமையும் நாளையும் நடத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1k views
-
-
மாந்தையில் சிறிலங்காப் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் 2 பொதுமக்கள் படுகொலை [வியாழக்கிழமை, 05 யூன் 2008, 08:18 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பாலைப்பாணியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாந்தை கிழக்கு மூன்றுமுறிப்பு பாலைப்பாணியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணிக்கு வன்னிவிளாங்குளத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டுப்பொருட்களை ஏற்றி வருவதற்கு உழவூர்தியில் சென்றுகொண்டிருந்த போது அவர்களை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் இக்கிளைமோர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் உழவூர்தியில் பயணித்த இரு பொதுமக்கள் …
-
- 0 replies
- 569 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறநகரான தெகிவளை தொடருந்து பாதையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் சூத்திரதாரியை இன்று காலை வவுனியாவில் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கவுள்ளோம் - இஸ்ரேல் வியாழன், 05 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] இலங்கையில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் மார்க் சொபர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்து உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பயரங்கரவாதம் இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். கடந்த காலங்களில் இலங்கைக்கு இஸ்ரேல் பலவழிகளில் உதவிகளை வழங்கியுள்ளது. இல்ரேஸ் உளவு நிறுவனமான மொசாட் அமைப்பினால் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கியதாக வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப்…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை "தேசத்துரோகி" என்று தெரிவித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 727 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலில் சுமார் ஒரு மாத காலப்பகுதியில் 138 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 549 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டுப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தூண்டில் படகுகளை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சுத் தாக்குதலினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 706 views
-
-
சிறிலங்காவின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள தம்புள்ளவில் இன்று அடையாளம் தெரியாதோரால் தமிழ் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 796 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரையோரத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்புக்கனரக அணியினர் தாக்குதல் நடத்தி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: யாழ். வடமராட்சி நாகர்கோவில் கடற்பரையோர காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்பு கனரக அணியினரால் இன்று காலை 6:00 மணிக்கு தாக்கப்பட்டுள்ளன. இதில் படையினரின் 3 காவலரண்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. 5 காவலரண்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் படைத்தரப்புக்கு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் இளந்திரையன். http://www.puthinam.c…
-
- 21 replies
- 5.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இன்று முற்பகல் முதல் மீண்டும் வன்முறை வெடித்து அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. இப்பதற்றத்தில் இதுவரை 5 பேர் வாள்வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.8k views
-
-
மிக்-27 ரக போர்விமானங்கள் புலிகளின் மன்னார் நிலைகள் மீது குண்டுவீச்சு வீரகேசரி இணையம் 6/5/2008 10:14:14 AM - இன்று காலை 8.20 மணியளவில் மன்னார் முன்னரங்குகளில் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது விமானப்படையின் மிக்-27 ரக போர்விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 1.6k views
-
-
இந்தியா - புலிகள் இடையேயான உறவின் கீறலை சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கே உண்டு: க.வே.பாலகுமார் [புதன்கிழமை, 04 யூன் 2008, 05:28 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இந்தியாவின் நலன்களை எமது நலன்களாகப் பார்த்துக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. என்றைக்கு இந்தியா எம்மைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கியதோ அன்றைக்கே அதில் கீறல் விழுந்துவிட்டது. அதனைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியத் தரப்பிற்கு உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமார் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகும் "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (03.06.08) அவர் வழங்கிய நேர்காணல்: கேள்வி: தமிழீழத் தாயகம் என்ற தீர்வு…
-
- 1 reply
- 1.1k views
-
-
புத்தளத்தில் தொழிலதிபர் வெள்ளைவானில் கடத்தல் Thursday, 05 June 2008 புத்தளம் மாவட்டத்திலுள்ள கையடக்கத் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் நேற்று புதன்கிழமை மாலை கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். வெள்ளை வானொன்றில் வந்த ஆயுதபாணிகளால் இவர் கடத்திச் செல்லப் பட்டிருக்கின்றார். குறிப்பிட்ட வெள்ளை வானை அவரது நண்பர் ஒருவர் மோட்டர் சைக்கிள் ஒன்றில் துரத்திச் சென்ற போதிலும் வெள்ளை வான் வேகமாகத் தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று புதன்கிழமை மாலை 6.10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம் பெற்றிருக்கின்றது. புத்தளம் நகரிலுள்ள தன்னுடைய கைத் தொலைபேசி விற்பனை நிலையத்துக்கு அருகாமையில் வைத்தே எஸ்.எச்.எம்.அலி என்ற 55 வயதான முகாமையாளர் கடத்திச் செல்லப்பட்…
-
- 0 replies
- 897 views
-
-
போலிக் கடவூச்சீட்டில் பயணித்தமை தொடர்பில் பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ள கருணா இன்று அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கருணா பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார், அவரது கோரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதேவேளை கருணா இலங்கை மக்களுக்குச் செய்த தவறுகளுக்காக அவருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் எனச் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த கருணாஇ அந்த அமைப்பில் இருந்து விலகிய பின்னர் அரசாங்கப் படைகளுடன் இணைந்து செயற்பட்டார். இந்த நிலையில் சுற்றாடல்துறை அமைச்சின் அதிகாரி ஒருவரின் பெயரில் வழங்க…
-
- 8 replies
- 2.3k views
-
-
இந்தியாவின் கடல் கண்காணிப்பு நடவடிக்கை இலங்கைக்கு பாரிய அளவில் உதவுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம நேற்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்குவதையும் ஏனைய ஆதரவுகளையும் தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு கொழும்பு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் ஆதரவாரளர்கள் நிதி சேகரிப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். 'இந்து' பத்திரிகைக்கு இது தொடர்பாக ரோகித்த மேலும் தெரிவித்ததாவது : விடுதலப் புலிகளின் மையக் கட்டமைப்பு தற்போதும் சிதைவுறாமால் இருக்கின்றதா? என்று அவரிடம் 'இந்து' கேள்வி எழுப்பியது. வெளிமட்ட உதவி தடுக்கப்பட வேணடிய தேவை உள்ளதாகவும் அதுவே …
-
- 7 replies
- 1.4k views
-
-
கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் தம்மைப்பற்றி பெறுப்பேற்றும் சதித்திட்டமாகச் சிங்கள அமைசசர் ஒருவர் திட்டமிட்டு பொய்பிரச்சாரம் செய்துள்ளார் என ம.தி..க பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டடிருக்கின்றார். 'புலிகள் தழிழீழத்தை அடைந்தால், வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களை அங்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கவே மாட்டார்கள், என்ற சாரப்பட வைகோ கருத்து வெளியிட்டார் என இலங்கை அரசின் சார்பில் பேசவல்ல ஓர் அமைச்சரை மேற்கோள் காட்டி அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தச் செய்திகளை ஒட்டித் த.தே.கூட்டமைப்புக்குத் தாம் அனுப்பி வைத்துள்ள ஒரு விளக்க அறிக்கையிலேயே மேற்படி செய்தி, சிங்கள அமைச்சர் ஒருவரின் திட்டமிடப்பட்ட சதி என வைகோ கடுமையாகச் சாடியிருக்கின்றார். அந்த அறிக்…
-
- 1 reply
- 985 views
-