ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
இன்றைய தினம் பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனம்! தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய(புதன்கிழமை) தினத்தை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவை திணைக்களம், வருமான வரி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்கவுள்ளனர். முறையற்ற வகையில் …
-
- 0 replies
- 535 views
-
-
மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை – ஜனாதிபதி இந்த அரசாங்கத்தில் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்த ராஜபக்சவுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அழுத்தம் கொடுப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் கட்டமைப்பைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் நாளுக்கு நாள் வதந்திகளை வெளியிடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் ஒன்றுதான் மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்கவுள்ளார் என்பதும் அடங்கும் என தான் நினைப்பதா…
-
- 0 replies
- 981 views
-
-
கடன் கிடைத்தவுடன் அமைச்சரவையில் மாற்றம்? சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கப்பெற்ற பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதன்போது எதிரணியில் உள்ளவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1327542
-
- 0 replies
- 171 views
-
-
மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் - டி.வி.சானக Published By: DIGITAL DESK 5 06 MAR, 2023 | 08:19 PM (இராஜதுரை ஹஷான்) மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார். மின்சாரத்துறை மறுசீரமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 24 மணித்தியாலமும…
-
- 3 replies
- 645 views
- 1 follower
-
-
யாழ்.நகரில் நகைக்கடை உரிமையாளரும் அங்கு பணியாற்றிய பெண்ணும் உயிர்மாய்ப்பு 14 MAR, 2023 | 07:04 PM யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும் குறித்த நகைக்கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/150525
-
- 0 replies
- 774 views
- 1 follower
-
-
மருத்துவமனைகளில் குழந்தை பொறுப்பேற்கும் மையங்களை NCPA முன்மொழிகிறது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிசு பொறுப்பேற்கும் மையங்களை நிறுவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. NCPA தலைவர் உதயகுமார அமரசிங்க, முன்மொழியப்பட்ட குழந்தை பெறும் மையங்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஒப்படைக்க அனுமதிக்கும் என்று கூறினார். நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமரசிங்க, பல்வேறு காரணங்களால் புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோருக்கு உதவுவதற்காக 2021 ஆம் ஆண்டு NCPA யினால் சிசு பொறுப்பேற்கும் நிலையங்கள் தொடர்பான முன்மொழிவு வரையப்பட்டதாகக் கூறினா…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
யாழின் பிரபல கணித ஆசான் பாஸ்கரன் காலமானார் யாழ். புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அகடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானார். அன்னார் 1990 களில் இருந்து கணித பாடத்தில் மிகவும் பிரபலமான ஆசிரியராக மிளிர்ந்தார். அன்னாரது பூதவுடல் அவரது கல்வி நிறுவனத்தில் இன்று மலரஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (15 03 2023) பி.ப. 1.00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று பி.ப.3.00 மணியளவில் கோம்பயன்மணல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/244760
-
- 1 reply
- 774 views
- 1 follower
-
-
ஹஸ்பர்_ கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் Khaled nasser Sulaiman al ameri (காலீத் நாஸர் சுலைமான் அல் அமீரி ) ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று (13) மாலை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கிளையொன்றை நிறுவி ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்தி புதிய முறை…
-
- 1 reply
- 524 views
-
-
வசந்த முதலிகேவுடன் சந்திப்பு- யாழ். பல்கலை மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்த மனோ கணேசன் March 14, 2023 பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979ல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் போராடும் போது, வாளாவிருந்து விட்டு, இப்போது திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து, வாகனம் பிடித்து, யாழ்ப்பாணத்துக்கு போய், “பயங்கரவாத தடை சட்டத்தை எதிர்க்க யாழ். பல்கலையும் இணைய வேண்டும்” என, அனைத்து பல்கலைக்கழக ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே முதலானோர் கோரியமை நகைப்புக்கு இடமானது. மறுபுறம், இத்தகையை கோரிக்கைக்கு “இணைகிறோம், ஆனால், எமது பிரச்சினைகளையும் உள்வாங்குங்கள்” என யாழ் பல்க…
-
- 0 replies
- 462 views
-
-
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத பயணம் மேற்கொள்ள முயல்பவர்களிற்கு அவுஸ்திரேலிய தூதுவர் கடும் எச்சரிக்கை Published By: RAJEEBAN 14 MAR, 2023 | 11:00 AM இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையமுயல்பவர்களிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு சிறிய வாய்ப்புகூட இல்லை என தெரிவித்துள்ளார். ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுவதாக போல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தல் என்பது புதிய விடயமல்ல பல வருடங்களாக காணப்படுகின்றது இலங்கை இந்த விடயத்தை கையாளு…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
யாழ்.நாகர் கோவிலில் துப்பாக்கி சூடு – ஆலய சப்பர கொட்டகைக்கும் தீ வைப்பு யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு , அப்பகுதிகளில் துப்பாக்கி சன்னங்களின் வெற்றுக்கோதுகள் காணப்படுகின்ற போதிலும் , பொலிஸார் தாம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என தெரிவித்துள்ளனர். அவ்வாறாயின் யார் துப்பாக்கி சூடு நடத்தியது எனவும் ? பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை விட வேறு நபர்களிடம் துப்பாக்கி உள்ளனவா என்ற சந்தேகம் எழுத்துள்ளதாகவும் , அதனால் தாம் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அ…
-
- 0 replies
- 398 views
-
-
யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவின் போது சிறிதரன் ஆதரவு கோரினார் – டக்ளஸ் தரப்பு! யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவின் போது, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரினாரென அந்த கட்சியின் யாழ்.மாவட்ட ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று(திங்கட்கிழமை)இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஆதரவு கேட்டு யாழ்.மாநகர சபையில் ஆதரவு வழங்கிய போதும் அதன் பின்னர் அதனை மறுத்திருந்தனர். கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபை தொடர்பான விடயங்களில் சீ.வீ.கே.சிவஞானம், ம…
-
- 0 replies
- 311 views
-
-
சடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்யில் தற்போ…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா எச்சரிக்கை இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என இலங்கைக்கான அவுஸ்ரேலியாவின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். ஆபத்தை பொருட்படுத்தாமல் பலர் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சிப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இதேநேரம் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்காக தொடர்ந்தும் இணைந்து செயற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்கள் அங்கு செல்வதற்கு பூஜ்ஜிய வாய்ப்பு கூட இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என…
-
- 0 replies
- 178 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்தால் நாடு வங்குரோத்தடைந்துள்ளது - விமல் கடும் சாடல் Published By: VISHNU 13 MAR, 2023 | 12:30 PM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷ குடும்பத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே 134 உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி மக்களின் வாக்குரிமைக்கு தடையாக உள்ளார்.போராடியேனும் வாக்குரிமையை வெல்வோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அ…
-
- 6 replies
- 918 views
- 1 follower
-
-
இலங்கையர்களுக்கு இத்தாலியில் வேலைவாய்ப்பு! இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக, இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள கோரப்படவுள்ளன. பாரவூர்தி சாரதிகள், கட்டுமான தொழில்துறையினர், உணவக துறை, மின்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகள் மற்றும் இலங்கை என்பவற்றின் பணியாளர்களுக்காக 87,702 விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. https://athavannews.com/2023/1326971 @தனிக்காட்டு ராஜா
-
- 2 replies
- 809 views
-
-
குற்றமிழைப்பவர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் - வஜிர அபேவர்தன Published By: DIGITAL DESK 5 13 MAR, 2023 | 12:34 PM (எம்.மனோசித்ரா) அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் (1979 ஆம் ஆண்டு இலக்கம் 61) குற்றமிழைக்கும் ஒவ்வொரு நபரின் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , அத்தியாவசியப் பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமிழைத்து , நீதிமன்ற வழக்கு விசாரணையின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிக்கு , இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும…
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தனது சுயாதீன தன்மையை உறுதி செய்ய வேண்டும்-அருட்தந்தை சக்திவேல் March 13, 2023 இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பாதிக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் ஆட்சியாளர்களின் ஒரு துணைக் குழுவாக செயல்பட முனைகின்றதோ? எனும் கேள்வியை கேட்க வைத்துள்ளது. இவ் ஆணைக் குழுவின் பிரதிநிதிகள் கடந்த பெப்ரவரி மாதம் யாழ் சென்று ஒரு குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் சந்தித்து விட்டு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இவர்கள் ஒரு தரப்பை மட்டும் சந்தித்தது ஏன்? யாழ் பிரதேசத்துக்கு மட்டும் கட்டுப்படுத்தியது ஏன்? ஐ நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு சற்று முன் “பொறுப்புக் கூரல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேச பொறிமுறைக்கு வடக்கு மக்கள் ஆதரவாக உள்…
-
- 0 replies
- 191 views
-
-
TMVP ஒரு பணம் உழைக்கின்ற குழு ! அமைச்சு பதவிகளை தக்கவைக்க மேச்சல் தரையை விட்டுக் கொடுப்பதுதான் அவர்களது நிலைப்பாடு Batticaloa (சரவணன்) மயிலத்தைமடு மேச்சல் தரை என்பதை தாண்டி எமது மண்ணுக்கான போராட்டம் அது நில ஆக்கிரமிப்பு திட்டமிட்ட இனபரம்பலாக்கல் அதனைவிடுத்து பாராளுமன்றத்தில் இருக்கம் தமிழர் பிரதிநிதித்துவத்தை உடைத்தெறிவதற்கான வேலைத்திட்டத்திற்கான சதி முயற்சி எனவே இந்த பிரச்சனை முடிக்கவேண்டும் என அரசியல்வாதிகள் இதய சுத்தியுடன் கவனம் எடுக்கவில்லை என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார். செங்கலடியிலுள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை 9110 இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெர…
-
- 0 replies
- 376 views
-
-
ஜனாதிபதி ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் - கஜேந்திர குமார் Published By: Vishnu 13 Mar, 2023 | 12:23 PM (எம்.நியூட்டன்) அண்மைக்காலமாக ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கீகாரம் இல்லாத, மக்கள் நிராகரிக்கப்பட்ட ஆட்சியை தக்க வைப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்துவதாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சனிக்கிழமை காரைநகரில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார் …
-
- 0 replies
- 343 views
-
-
காற்றாலை திட்டங்களின் திறனை அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை இலங்கையில் 340 மெகாவோட் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க அனுமதி பெற்றுள்ள அதானி குழுமம், அங்கீகரிக்கப்பட்ட மின்னுற்பத்தி திறனை 500 மெகாவோட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க கடந்த வெள்ளிக்கிழமை (10) அதானி குழுமத்துக்கு தெரிவித்தார். அதானி குழுமம் அதன் சொந்த 5.2 மெகாவோட் விசையாழிகளை நாட்டுக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் முன்மாதிரி குஜராத்தின் முந்த்ராவில் ஒரு வருடமாக இயங்குகிறது. ஜெர்மனியின் W2E (Wind to Energy) GmbH தொழில்நுட்பத்துடன் இந்த இயந்திரத்தை அதான…
-
- 0 replies
- 469 views
-
-
தடம் புரண்டது யாழ் தேவி! கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ் தேவி விரைவு புகையிரதம் ஒருகொடவத்த புகையிரத பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இரண்டு புகையிரத பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக புகையிரத பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் இயங்கும் புகையிரத சேவை தடைபட்டுள்ளதாக பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு நோக்கி வரும் சில புகையிரதங்களில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தடம் புரண்ட யாழ்தேவி புகையிரதத்தை வழமைக்கு கொண்டுவரும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 401 views
-
-
தேர்தலை நடத்தினால் IMF நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் – அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அத்தோடு மீண்டும் அத்தியாவசிய சேவை விநியோக கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆகவே பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் கைச்சாத்திடப…
-
- 0 replies
- 349 views
-
-
அடுத்த பருவத்தில் இருந்து தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை உரம் ! நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் உரம் விவசாயிகளுக்குத் தேவையில்லை என்றால், தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சங்கங்களுடன் அண்மையில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் காரணமாக இயற்கை உரங்கள் தொடர்பாக நெற்பயிர்ச் செய்கை செய்யும் விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முறை இயற்கை உரத்தை விவசாயிகள் மறுத்த…
-
- 0 replies
- 325 views
-
-
இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள அனைத்து சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள இளம் வர்த்தகரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தையா கஜன், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பொன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் பொருளாதாரம் அத்துடன் தற்போது ஜனாதிபதியின் பொருளாதார மீட்புக்கான திட்டங்களால் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கின்றது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் உலக நாடுகளிலுள்ள சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து அவர்களை இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவ…
-
- 0 replies
- 636 views
- 1 follower
-