Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் காலவரையறையற்ற ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைகளில் முஸ்லிம் பெண்னொருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்திருந்தார். இதனைத்தொடர்ந்து மேலும் வன்முறைகள் ஏற்படாது தடுப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் காலவரையறையற்ற ஊரடங்குச்சட்டத்தை பொலிஸார் பிறப்பித்துள்ளனர். இதேவேளை ஊரடங்குவேளைகளில் வன்முறைகளில் ஈடுபட்டோர் தொடர்பில் இதுவரை 23பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவ

  2. எரிபொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவது கடினமாகவுள்ளதால் எதிர்பார்த்ததை விடப் பணவீக்கம் இவ்வருடம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள மத்திய வங்கி, மேலும் விலை அதிகரிப்பிற்கான சாத்தியக்கூறுகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.தற்போதைய சூழ்நிலையில் 2008 இற்கான பணவீக்கம் முன்னர் மதிப்பிடப்பட்டதைவிடக் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகமாகக் காணப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன என மத்திய வங்கியின் மே மாதத்திற்கான நாணயக் கொள்கை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை மேலும் அதிகரித்தால் பணவீக்கம் 14 வீதமாக அதிகரிக்கலாம் என முன்னர் மத்திய வங்கி தெரிவித்திருந்தது.கொழும்பு விலைச்சுட்டெண்ணின் அடிப்படையில் ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்…

    • 0 replies
    • 932 views
  3. இரண்டு அதிரடிப்படையினரை சுட்டுக்கொன்ற புலனாய்வு அதிகாரி அம்பாறையில் அமைந்துள்ள சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் முகாமில் புலனாய்வு அதிகாரி ஒருவர் அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரண்டு அதிரடிப்படையினரும் உயிரிழந்தனர். எனவே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட புலனாய்வு அதிகாரி தனக்குத்தானே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். எனினும் ஆபத்தான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. - சங்கதி

  4. மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் குண்டுவெடிப்பு27.05.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் குண்டுவெடிப்புச் சம்வம் இடம்பெற்றுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில். http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&

  5. ஜெம்பட்டா வீதியில் வசித்த குடும்பஸ்தரைக் காணோம்! நான்கு வருடங்களுக்கு முன்பு சுவிஸ் நாட்டிலிருந்து கொழும்புக்கு வருகை தந்து ஜெம்பட்டா வீதியில் வசித்து வந்த 43 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்ப பயிற்சி பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் காணாமல்போனவரின் தந்தையார் முறைப்பாடு செய்துள்ளார். இவ்வாறு பிரதியமைச்சரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: வரப்பிரகாசம் யஸ்பன் கில்பட் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த 18ஆம் திகதி நண்பர்களுடன் அவிசாவளைக்குச் சென்ற அவர், 19ஆம் திகதி காலை கொழும்பு போகின்றேன் எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டார் என…

  6. Posted on : 2008-05-27 ஏட்டுச் சுரைக்காயாகும் சட்டக் கட்டமைப்புகள் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. இது நமக்கு நன்கு தெரிந்ததுதான். இலங்கையில் இப்போது பெரும் சர்ச்சைக்குரியதாகி இருக்கும் மனித உரிமைகள் விவகாரத்திலும் இதுவே உண்மை நிலைமை என்பதைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இலங்கை அரசுக்கு உணர்த்தியிருக்கின்றது அமெரிக்கா. ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் பிரதி உதவிச் செயலாளர் எரிக்கா பார்க்ஸ் ரகில்ஸ் இலங்கை அரசுக்கு இதனைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார

  7. தெஹிவளை தொடரூந்து குண்டு வெடிப்பு: ஆறு குழுக்கள் விசாரணை கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளை தொடரூந்து நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற தொடரூந்துக் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆறு விஷேட காவல்துறை குழுக்கள் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் இன்று காலை தெரிவித்தன. குண்டு எவ்வாறு தொடரூந்துக்குள் வைக்கப்பட்டது, இதற்கு காரணமாக இருந்துள்ள பாதுகாப்பு குறைபாடுகள் என்பன உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இக்குழுக்கள் ஆராயவுள்ளன. இதேவேளையில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதிக்கு இன்று செல்லவுள்ள இரசாயணப் பகுப்பாய்வாளர்கள் குண்டு வெடிப்பு தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளவிருக்கின்றார்கள். நேரம் குறித்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்றே வ…

  8. வன்னியில் திறந்தவெளிக்களமுனை ஒன்றுக்குள் படையினர் நுழையப் போகின்றனர். மன்னாரில் நடைபெறும் கடும் சமரானது இவ்வாறானதொரு புதிய களமுனையைக் காணப்போகிறது. கரையோரப் பகுதியை இலக்கு வைத்து நகரும் படையினர் அந்தப் பகுதிக்குள் செல்வதற்குள் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்கப் போகின்றனர். ஆனாலும், இந்தக் களமுனையில் இதுவரையான சாதக நிலைமையை இனியும் பயன்படுத்த முடியுமெனப் படைத்தரப்பு கருதுகிறது. வடக்கே நான்கு முனைகளில் கடும் சமர் நடைபெற்று வருகிறது. வன்னிக்குள் மூன்று களமுனைகளும் யாழ்.குடாவில் ஒரு முனையும் திறக்கப்பட்டுள்ளன. வன்னியில், மன்னார் களமுனையே தற்போதைய நிலையில் தங்களுக்குச் சாதகமாயிருப்பதாக படைத்தரப்பு நம்புகிறது. வவுனியாவிலும் மணலாறிலும், யாழ்.குடாவிலும் சாதகமற்றதொரு களநிலைய…

    • 0 replies
    • 1.2k views
  9. விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதியான பால்ராஜின் மறைவு விடுதலைப்புலிகளை மட்டுமன்றி முழுத் தமிழினத்தையுமே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள

  10. மாதங்களுக்குள் தேசிய போக்குவரத்து கொள்கைஎன்கிறார் அமைச்சர் அழகபெரும பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புகையிரதக் கட்டணங்களும் அதிகரிக்கப்படும். ஆனால், இந்த அதிகரிப்பு பஸ் கட்டணங்களை விட குறைவானதாகவே இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். எதிர்வரும் 3மாதங்களுக்குள் தனியார் பஸ் போக்குவரத்துத் துறையினருக்கு 50 வீதம் எரிபொருள் மானியம் வழங்கப்பட்டு மக்கள் மீதான சுமையைக் குறைக்க அரசாங்கம் நிரந்தரமாக தேசிய போக்குவரத்துக் கொள்கையினை வகுக்கவுள்ளது என்றும் அவர் கூறினார். புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பாக இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்த…

    • 0 replies
    • 639 views
  11. ஏற்பட்டுள்ள இனரீதியான வன்முறைகளுடன் தொடர்புபடுத்தி முஸ்லிம் காங்கிரஸ் மீது வீண்பழி சுமத்துவதற்கு அரசாங்கத்துக்கு சார்புடைய சில சக்திகள் முயன்று வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். இதை நோக்காகக் கொண்டு காங்கிரஸின் பிரதேச தலைவர்களின் மீது வன்முறைகள் கட்டவிழ்ந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று பகல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருசலாமில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது: அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் தினத்தில் இடம்பெற்ற…

    • 0 replies
    • 607 views
  12. சமாதானப் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்புரிமையை நேற்று இலங்கை பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 8 முதல் 13 வரை வெனிசுலா தலைநகர் கராகஸில் நடைபெற்ற உலக சமாதான பேரவையின் சர்வதேச மாநாட்டிலேயே இலங்கைக்கு உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. உலக சமாதான பேரவையில் நூற்றுக்கும் அதிகமான நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற உலக சமாதானப் பேரவையின் ஆசிய பசுபிக் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிமல் ரத்நாயக்க எம்.பி. விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இலங்கைக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உறுப்புரிமையை இழந்துள்ள நிலையில் உலக சமாதான பேரவையில் உறுப்புரிமையை …

    • 0 replies
    • 797 views
  13. கிழக்கு மாகாணத்தில் இன வன்முறை மீண்டும் தீவிரம் பெறத் தொடங்கியுள்ளது. படுகொலைகள், ஆட்கடத்தல்கள், தீ வைப்புக்கள் என இன ரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் அண்மைக்காலத்தில் வலுப் பெற்றுவந்த நல்லுறவுகள் மீண்டும் மோசமானதொரு கட்டத்தை அடைந்துள்ளது. இத்தகையதொரு நிலைக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளே காரணம் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரனின் குற்றச்சாட்டில் தவறேதும் இல்லை. வரலாற்று ரீதியில் அன்னியோன்னியமாக வாழ்ந்து வந்த தமிழ், முஸ்லிம் மக்கள் இடத்தில் மோதல்களை ஏற்படுத்துவதில் கடந்த காலத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டமையும் அவர்கள், இதில் குறிப்பி…

    • 0 replies
    • 624 views
  14. இலங்கையில் இன்றைய அரசியல் சூழ்நிலை சிக்கல் நிறைந்ததாகக் காணப்படுகிறது. தென்னிலங்கையின் அரசியலைப் பொறுத்த வரையில் அது ஏதேச்சதிகாரப் போக்குடைய அரசாங்கம் ஒன்றின் பிடிக்குள்ளான அரசியலாகவே அமைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இலங்கையின் எதிர்க்கட்சிகளை உடைத்து அதற்கூடாக தமது பெரும்பான்மையைக் காட்டும் ஒரு உத்தியைக் கடைப்பிடித்து வருகிறது. இது அதனைப் பொறுத்த வரையில் வெற்றியையும் அளித்துள்ளது. இறுதியாக ஜே வி பியை உடைத்து அதன் ஒரு பிரிவைத் தமது பக்கத்தில் வைத்திருக்கும் செயற்பாட்டில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது. விமல் வீரவன்சவின் தரப்பு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆதரவு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 870 views
  15. கருணாகுழுவின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் பாரதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கருணாகுழு உருவாகிய போது கருணாவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர் இந்த பாரதியாவார் இந்த நியமனம் தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவால் கடந்த சனிக்கிழமை கையளிக்கப்பட்டதாக பாரதி என அழைக்கப்படும் குமாரசாமி புஷ்பாகரன் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். “ஜனாதிபதியின் அம்பாறைமாவட்ட இணைப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஜனாதிபதியுடன் கலந்தாலோசிப்பதே எனது கடமை” என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜுன் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பி…

  16. 25.05.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு

  17. 95% தமிழர்கள் ஐக்கிய சிறீலங்காவுக்குள் வாழ விரும்புகின்றனர் என்ற அமெரிக்கத் தூதரின் கூற்றை இலங்கையில் தமிழ் மக்களிடம் ஐநாவின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும் தேர்தல் மூலமான கருத்துக் கணிப்பின் மூலம்.. நிரூபித்துக் காட்ட முடியுமா..??! என்று சவால் விட்டுள்ளார் அமெரிக்காவில் தமிழர்களின் உரிமைக்காக நீதிக்காக குரல் கொடுக்கும்... Bruce Fein அவர்கள்..! Fein: Hold referendum to test support for Tamil Statehood [TamilNet, Monday, 26 May 2008, 18:15 GMT] Bruce Fein, Attorney for a US-based Tamil Activist Group, in responding to a statement by Ambassador Robert Blake to Sunday Observer that from his discussions with Tamils that he knows that "over 95 percent of them…

    • 3 replies
    • 2.3k views
  18. மட்டக்களப்பு ஏறாவூரில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தாய் ஒருவர் கொல்லப்பட்டு அவரது மகன் காயத்திற்கு உள்ளாகி உள்ளார். கடந்த வியாழக்கிழமை (மே22) கடத்தப்பட்ட இரண்டு முஸ்லீம் இளைஞர்களை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இன்று மாலை 5 மணியவில் (மே26) விசேட அதிரடிப்படையினர் நடத்திய திறந்தநிலைக்குட்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. ஏறாவூர் பெற்றோல் நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியில் ரயர்களைப் எரித்து வீதியை மறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதில் விசேட அதிரடிப்படையினர் அவர்களை விரட்ட எடுத்த முயற்சியின் போது இளைஞர்கள் அதிரடிப்படையினரை நோக்கி கற்களை எறிந்ததா…

    • 0 replies
    • 1.4k views
  19. வீரகேசரி இணையம் - வடக்கில் ஆலோசனை சபையையும்,கிழக்கில் மாகாணசபையையும் தற்போது நிறுவியுள்ள அரசாங்கம் வடபகுதி வன்னியில் விடுதலை புலிகளுக்கு எதிராக போரை தீவிரபடுத்தி வருகிறது.வன்னி போர் அரங்குகளில் இதுவரை படைதரப்புக்கு போரின் மூலம் பெரிதாக பலாபலன்கள் எதுவும் கிட்டாத போதிலும்,போர் முனைகளில் படையினரை உசார்படுத்தி புலிகளுக்கு எதிராக யுத்தத்தை தொடர்ந்து தீவிரபடுத்தும் வேலைகளிலேயே அரசாங்கம் முழு வீச்சில் செயலாற்றி கொண்டிருக்கிறது. வடக்கு யாழ்பாணத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் மீட்டார்.கிழக்கை தற்போதைய ஜனாதிபதி மகிந்த மீட்டார் என்ற பெருமைகள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு புறமிருக்க,வன்னியை யார்?மீட்பது என்ற பெருத்த கேள்வி தற்போது சிங்கள ஆட்சியாளர்கள் மத்தியில் நெஞ்சட…

    • 0 replies
    • 1.3k views
  20. இலங்கை இனப்பிரச்சினையில் நடுநிலை வகிக்க முனைப்புக்காட்டும் இந்தியா, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தடையை நீக்குமா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  21. கொழும்பு தெஹிவலையில் தொடருந்து வண்டியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு செய்தி வழங்கியுள்ளது. எனினும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜானா

    • 61 replies
    • 7.4k views
  22. உலக வங்கியால் உணவுத் தட்டுப்பாட்டை நீக்க இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி திங்கள், 26 மே 2008 [நிருபர் அ.மயூரன்] உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் உணவுத் தட்டுப்பாட்டையடுத்து இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய உணவுத்தட்டுப்பாட்டை நீக்குவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு கடன்களைப் பெற்றிருக்கும் இலங்கையின் இந்த கோரிக்கையை சாதகமாக ஏற்றுக்கொண்டு கடன் வழங்க முன்வந்திருப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பிரதித் தலைவர் ப்ரவுல் பட்டேல் தெரிவித்துள்ளார். எரி பொருள்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதா…

  23. மட்டக்களப்பில் இன்றும் கனரகஆயுதங்களுடன் படையினர் குவிப்பு 26.05.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பில் ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி ஆகிய தமிழ் - முஸ்லிம் கிராமங்களில் இன்று பொலிசாரும், படையினரும் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கனரக ஆயுதங்கள் சகிதம் குவிக்கப்பட்டு தீவிரகண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டகளப்பின் சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு மாறாக தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது. இதையொட்டி தற்போது அங்கு படையினரது பிரசன்னம் அதிகரிக்கபட்டு பாதுகாப்பு உசார்படுத்தபடுவதாகவும் தெரிவிக்கபடுகிறது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

    • 1 reply
    • 1.7k views
  24. ஜே.வி.பி கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்குப் பதிலாக ரில்வின் சில்வா புதிய தலைவராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன........... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/05/blog-post_5136.html

    • 0 replies
    • 1.5k views
  25. ஆய்வு: மதி 25. மே 2008 20:08 map-srilanka.jpgகிழக்கு மாகாணத்திற்கென தனியாக தேர்தலை நடத்தி தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கிழக்கு மாகாணமக்கள் தமிழீழத்தை புறக்கணித்துவிட்டனர் என அறிக்கை விடுவது பொருத்தமற்ற கூற்றாகும். எனவே இந்த விவகாரம் பற்றி நாம் இன்று ஆராய்வது பொருத்தமான ஒன்றாகத் தான் இருக்கும் என நம்புகின்றேன். தமிழீழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் முடிவடைய வேண்டுமானால் தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். அப்படியோரு நிலையை அடையாதவரை தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடரத்தான் போகிறது. எனவே தமிழரின் விடுதலைப் போராட்டத்தை இல்லாதொழிப்பதற்கு எந்த ஆயுதத்தை எடுத்தும் சிங்களப் பேரினவாதம் வெல்லப்போவதில்லை. கடந்த கால வரலாற்றில் இருக்கக்கூடிய அனுபவத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.