Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் துணைவியாரின் தாயார் மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. First Lady’s mother passes away Mother of first lady Shiranthi Rajapaksa passed away today. ஆதாரம்:Daily Mirror

    • 3 replies
    • 1.5k views
  2. மேயர் சிவகீதா பிரபாகரனின் பதவியேற்பு விழா.... கணொழி/விபரம்.

  3. வடக்கில் நடைபெறும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் கூறியுள்ளார். நாட்டின் சேனாதிபதியான ஜனாதிபதி ராஜபக்ஸ அவர்கள் இப்படி கூறி , அரசுடன் இணைந்து கொள்ளுமாறு இரு முறை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தது மேல் மட்டத்தில் உள்ள ஒரு ஐதேகட்சியின் அமைச்சர் ஒருவருடன் ஆகும். ரணில் விக்ரமசிங்க அரசில் , அமைச்சர் பதவி வகித்த இவ் அமைச்சர் மலை நாட்டை பிரிதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ப முடியாத அளவு ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் வசம் இருபதாக கூறியுள்ள ஜனாதிபதி , வடக்கில் நடைபெறும் யத்தத்தால் வெற்றி அடைய முடியாது. அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் என்ன என்று பார்க்க வேண்டுமானால் நேரில் வந்து வீட…

    • 11 replies
    • 3.8k views
  4. இரத்மலானை விமானப்படை தளத்தில் குண்டு வெடிப்பு 3/23/2008 7:07:00 PM வீரகேசரி நாளேடு - இரத்மலானை விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு கருதி புதைத்து வைக்கப்பட்டிரு“ந்த குண்டொன்று காலை திடீரென வெடித்தமையினால் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. நேற்றுக் காலை 6.50 மணியளவில் புதைக்கப்பட்டிருந்த குண்டின் மேல் குறித்த சில விலங்கினங்கள் சென்றமையினாலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். விமானப் படைத்தளத்தின் பாதுகாப்பு கருதி சுற்றிவர இத்தகைய குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. இவை விமானப்படைத்தளத்திற்கு விரையும் விலங்கினங்களால் அடிக்கடி வெடிப்புக்கு உள்ளாவதாக இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்தார். …

  5. ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் அங்கம் வகிக்கும் வாய்ப்பினை இழக்கும் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் வாய்ப்பினை இலங்கை இழக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைக் ஆணைக் குழுவிற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யம் இரகசிய வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவான வாக்குகள் கணிசமாக குறைவடையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. 192 உறுப்பு நாடுகளில் அரைவாசிக்கும் அதிகமானவை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கை இடம்பெறுவதற்கு எதிர்பு வெளியிட்டுள்ளன. இதனால் ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் ஆசிய பிரதிநிதித்துத்தை இலங்கை இழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒ…

  6. ஞாயிறு 23-03-2008 20:43 மணி தமிழீழம் [மதுசன்] யாழ்.முன்னரங்க பகுதிகளில் படையினரின் முன்னகர்வு முயற்சி புலிகளால் முறியடிப்பு.யாழ்.முன்னரங்க நிலைகளான கிளாலி,முகமாலைப் பகுதிகளினுடாக இன்று அதிகாலை பெருமெடுப்பிலான முன்னகர்வு முயற்சி ஒன்றை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டனர். செறிவான எறிகணை வீச்சுடன் படையினர் மேற்கொண்ட இவ் முன்னகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முறியடிப்புப் சமருக்கு ஈடுகொடுக்கமுடியாது சிறீலங்காப்படையினர் முன்னகர்வு முயற்சியைக் கைவிட்டு தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றனர். இத் தாக்குதலில் படையினன் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பல படையினர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற இடங்களில் தேடுதல் நடத்தில் விடுதலைப்புலிகள் படையின…

  7. யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாப் பகுதிகளில் சிறிலங்கா தரைப்படை கப்டன்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 926 views
  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் மல்லாவிக் கோட்ட வானொலி மன்றத்தின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வு நேற்று முன்நாள் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 665 views
  9. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக்கு அமெரிக்க உளவு நிறுவனம்தான் காரணம் என்று தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 24 replies
    • 4.9k views
  10. ஸ்ரீலங்காவிலும் தளத்தைக் கொண்ட அல் ஜசிரா தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கு இந்தியா தடை? Sunday, 23 March 2008 ஸ்ரீலங்காவிலும் தளத்தைக்கொண்ட அல் ஜசிரா தொலைக்காட்சியின் ஒளிபரப்புகளை இந்தியா தமது நாட்டுக்குள் தடைசெய்துள்ளது. இந்த சேவை இந்திய உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்தே இந்தியா அதன் ஒளிபரப்புகளை தமது நாட்டில் தடைசெய்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. மேலதிக செய்திகளுக்கு http://www.ajeevan.ch/content/view/1231/1/

  11. இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் உதவிகளை தவிர்க்கக் கோரி மதுரை மற்றும் சென்னையில் பொதுக்கூட்டங்களை நடத்த உள்ளதாக தமிழக நடிகரும் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான விஜய டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  12. தமிழ்நாட்டிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த தமது தலைமையிலான குழு விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சிறிலங்காவின் மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 713 views
  13. மணலாற்றுப் பகுதியில் நிகழ்ந்த மோதலில் மூன்று சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 957 views
  14. சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையினரால் மிகவும் திட்டமிட்ட வேலைத் திட்டமொன்றிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆளுகைக்குள் சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்துவிட்டு பழியை புலிகளில் தலையில் போடலாமென்று பார்த்துள்ளது. ஆனால்... சிறீலங்கா அரசும் அதன் படைக்கட்டமைப்பும் புலனாய்வாளர்களும், இது விடயத்தில் அதாவது இந்தப் படுகொலையை புலிகளின் தலையில் போடலாமென்று தாம் நினைத்த விடயத்தை செய்யமுடியவில்லை. படுகொலை நடந்து சில மணிநேரத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒருவித தடுமாற்றம் இருந்தது உண்மை தான். அதற்கான காரணம் தாக்குதல் நடந்த இடம். ஆனாலும்... படுகொலையை புலிகளின் தலையில் போட நினைத்த விடயத்தில் சிறீலங்காப் புலனாய்வாளர்கள் தோற்றுதான் ப…

  15. புலிகளின் இழப்பு தொடர்பான எண்ணிக்கையை கூட்டினால் அது வடக்கு மக்களின் இரண்டு மடங்காக இருக்கும் இக்பால் அத்தாஸ் தெரிவித்த கருத்தை பி பி சி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு முன்னரங்க காவல்நிலைகளில் தமிழிழ விடுதலைப்புலிகளும் இலங்கைப்படையினரும் தொடர்ந்தும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது 35 தமிழீழ விடுதலைப்புலிகளும் இரண்டு படைவீரர்களும் பலியானதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இந்த இழப்பு அறிவிப்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பி பி சியின் கொழும்பு செய்தியாளர் ரோல்ணட் பேர்க் தெரிவிக்கின்றார். இலங்கை அரசாங்கம் யுத்தம் தொடங்கிய காலம் முதல் தெரிவித்து வருகின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் இழப்பு தொடர்பான எண்ணிக்கையை கூட்டினால் …

  16. யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் படையினரின் தேடுதல் - நேற்று சுட்டுக்கொல்லப்பட்டவர் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் படையினர் இன்று காலையில் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை நடத்தியுள்ளனர். சுண்ணாகம் மேற்கு உடுவில் வடக்கு மற்றும் கந்தரோடை ஆகிய பகுதிகளில் இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் வீடு வீடாக நடத்தப்பட்ட இந்த தேடுதல்; நடவடிக்கையின் போது எவரும் கைதுசெய்யப்பட்டனரா என்ற தகவல் எவையும் வெளியாகவில்லை. நேற்று காலை ஒருவர் முருகமூர்த்தி கோயிலுக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டமையை அடுத்தே இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று சுட்டுக்கொல்லப்பட்டவர் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என பிரதேசவாசிகள் கூற…

    • 0 replies
    • 1.2k views
  17. அதிரடிப்படையினரின் இடமாற்றத்திற்கான காரணம் என்ன? ராமின் தலைமையில் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சுமார் 100 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் இயங்கி வருகின்றனர். கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் செயற்படும் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காகவே அதிரடிப்படையினர் கிழக்கில் இருந்து வடக்குக்கு மாற்றப்பட்டதாக செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழிழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் புலனாய்வு தலைவர் ராமின் தலைமையில் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சுமார் 100 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் விநியோகப்பாதையை ஏற்படுத்தி அதனூடாகவே யால பகுதியில் தமது தாக்குதல்களை நடத்துகின்றனர். எனினு…

    • 0 replies
    • 1.8k views
  18. வங்கி அட்டை மோசடியில் 6 வா் கொழும்பில் கைது பல லட்சம் அமெரிக்க டாலா்கள் பெறுமதியல் இலங்கையில் வங்கி அட்டை மோசடியில் சம்பந்தப்பட் 6 வரை இலங்கை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவை பற்றி மேலும் தெரிய வருவதாவது போலி வாங்கி அட்டையை பயன் படுத்தி ஆடம்பர பொருட்களை வாங்க முற்போட்ட போது அவர்களின் நடவடிக்கையில் சந்தேகப் பட்ட வணிக நிர்வணத்தினா் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவித்துள்ளன. ___மேலும் படிக்க..______________ http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1078

  19. 27.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் - ஆய்வு http://www.yarl.com/videoclips/view_video....8269faf0ba7491d

    • 1 reply
    • 2.1k views
  20. முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக டோறா பீரங்கிப்படகு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 49 replies
    • 7.5k views
  21. மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசு முற்படுகின்றதா? என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  22. "தமிழகத்தில் உழவு பார்க்கிறதா இலங்கைத் தூதரகம்?" - புத்தக வடிவில் ஒரு பூகம்பம் வடக்கு _ கிழக்கு இலங்கையில் மட்டும் வாலாட்டி வரும் இலங்கை அரசு, இப்போது கடல் தாண்டி தமிழகத்துக்குள்ளும் இடக்குச் செய்ய ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. சென்னையில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தமிழகத்தின் பார்வையில் விடுதலைப்புலிகள்’ (லிஜிஜிணி வீஸீ tலீமீ மீஹ்மீs ஷீயீ ஜிணீனீவீறீஸீணீபீu). இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்தப் புத்தகத்தில், தமிழகமே புலிகளுக்கு எதிராக இருப்பதைப் போல காட்டப்பட்டிருக்கிறது. இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழகச் செய்தித்தாள்களில் வந்த செய்திகளை மட…

  23. சிறிலங்கா இராணுவத்திற்கு தொடர்ந்தும் ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கும் இந்திய அரசை எதிர்த்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு சென்னையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  24. உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைகதை ஆசிரியர், விஞ்ஞானி சேர்.ஆர்தர். சீ. கிளார்க்கின் உடல் இன்று கொழும்பு கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சேர். கிளார்க்கிற்கு மரியாதை செலுத்தும்முகமாக சிறீ லங்கா அரசாங்கம் சனிமாலை 3.30 தொடக்கம் 3.31 வரை ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தும்படி மக்களிடம் அறிவிப்பு செய்து இருந்தது. தனது 90வது வயதில் கடந்த புதன்கிழமை மார்ச் 19 அன்று மரணமான சேர்.கிளார்க் அவர்கள் தனது உடல் இறந்தபின் எவ்வாறு அடக்கம் செய்யப்படவேண்டும் என்று எழுத்து மூலமான அறிவுரை கொடுத்து இருந்தார். தனது மரணச்சடங்கில் எதுவிதமான சமயம் சம்மந்தமான சடங்குகளும் இடம்பெறக்கூடாது என்று மிகவும் கண்டிப்பாக கூறி இருந்தார். வாழ்க்கையில் மிகவும் ஒரு சாதார…

  25. ------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------------------------------------------------------

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.