ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
லங்கா ஈ நியூஸ் ஊடவியலாளர் தாக்கப்பட்டார். 22.04.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு நீதிமன்ற வாளகத்தில் வைத்து லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். நீதி மன்ற வளாகத்தில் நின்ற சிலரே லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளரான விஜேசூரியவை தாக்கியுள்ளனர். ஜே.வி.பியின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்ட போது செய்தி சேகரிப்பதற்காக பல ஊடகவியலாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்திற்கு சென்றிருந்த லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் குறித்த செய்தியை சேகரிக்க முடியாத வகையில் சிலர் தாக்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 730 views
-
-
சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளாரின் புகழுடலுக்கு மக்கள் கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 934 views
-
-
முகமாலையில் படையினரின் போர் டாங்கி தகர்ப்பு - எழுதுமட்டுவாள் எறிகணை ஏவுதளம் தீயில்... [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 22, 2008 - 06:58 AM - GMT ] யாழ். முகமாலையூடாக சிறிலங்கா படைகள் மேற்கொண்ட படைநடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறிலங்கா படைகளின் போர் டாங்கி ஒன்று முற்றாக தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முகமாலையில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளை சிறிலங்கா படைகள் உடைத்து பாரிய முன்னகர்வு முயற்சி ஒன்றை படையினர் தொடக்கினர். பின்தளங்களிலிருந்து கடுமையான பல்குழல் பீரங்கிகள் ஆட்டிலறி மற்றும் மோட்டார்களின் செறிவான சூட்டாதரவோடு போர் டாங்கிகள் கவச ஊர்திகள் சகிதம் படையினர் நகர்வு முயற்சித் தொடங்கினர். இதற்கு எதிராக கடு…
-
- 4 replies
- 2.7k views
-
-
இன்று எல்லோரிடமும் ஒரு கேள்வி இருக்கின்றது கொள்கை முன்னெடுப்பு பிரிவைச் சேர்ந்த திரு. ஏழிலன் பேசுகின்றார்.இன்றைய இந்த நாளிலே பல நெருக்கடிக்குள்ளே வாழ்ந்து வழுகின்ற நாங்கள் இடையிலே எங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்காக மாத்திரமல்லாது இன்றைய காலத்தின் தேவைகளையும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவேண்டும். இதேநேரம் இன்றைய நிலைப்பாடு என்ன என்பது இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று பலரிடம் பல கேள்விகள் எழுந்துள்ளது. இப்போது இராணுவத்தினரின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இராணுவம் முன்னேறுவது போல சொல்லகின்ற செய்திகள். எங்களுக்கருகிலேயே சத்தங்கள் கேட்பதற்கான அந்த நடவடிக்கைகள். நாங்கள் அதனை அண்மையிலேயே தொடர்ச்சியாக எதிரியினுடைய, தாக்குதல்…
-
- 1 reply
- 1.8k views
-
-
திருமலையில் பிள்ளையான் குழுவினரால் பாலியல் வல்லுறுவிற்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு திருகோணமலை மாவட்டத்தில் பிள்ளையான் குழு ஆயுததாரகளின் நடவடிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, திருகோணமலை மாவட்ட கிராமங்களில் உள்ள பெண்களை பிள்ளையான் குழு ஆயுததாரிகள் கடத்திச் சென்று பாலியல் வல்லுறுவிற்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை தமது படையணிகளில் சேர்ப்பதிலும் இந்த குழுவினர் ஈடுபட்டுள்ளதாக திருகோணமலைக்கு விஜயம் செய்தி ஊடகவியலாhள் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார். பிள்ளையான் குழுவின் அடாவடித்தனஙகள் குறித்து பொலிசில் முறைப்பாடு செய்தும் எந்த பலனும் ஏற்படவில்லை என்று அந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினை தமிழ்நாடு அரசியலை ஆக்கிரமிக்கும் அம்சமாக மீண்டும் உருவாகியுள்ளது. இந்த கருத்தை இந்தியாவிற்கான செய்தி ஆசிரியர் ராமாராவ் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இராமாயனம் தொடர்புபட்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் கட்டத்திலேயே இந்த அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது ராமராவின் கருத்தாகவுள்ளது. வர்த்தகதுறை ஆய்வாளர்களின் பார்வையின்படி இது இனப்பிரச்சினை என்ற அம்சத்திற்குள் வரவில்லை. அவர்கள் இதனை இந்தியாவின் காஷ்மீர் மற்றும் அஸாம் மாநிலங்களின் சுற்றுலாத்துறையின் வீழ்ச்சிநிலை அடிப்படையிலேயே நோக்குகின்றனர். தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக செயற்படுகிறார் என்ற அடிப்படையில் அவர் அண்மையில் கூறிய கருத்து முக்கி…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் ஈழத்தமிழர் ஆதரவாளருமான வைகோ விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்-கீ-மூனைச் சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுபடவிருக்கிறார். ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அரச ஒடுக்கு முறைகளால் தமிழ் மக்கள் படுகின்ற அவலங்கள் குறித்தும் உண்மை நிலையை இந்தச் சந்திப்பின்போது ஐ.நா.செயலர் பான்-கீ-மூனுக்கு விலாவாரியாக எடுத்து விளக்குவார் என்று விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிந்தது. ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்கு வைகோவிற்கு ஐ.நா.சபை நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது என்றும் இன்னும் சில தினங்களில் இந்தச் சந்திப்பு இடம் பெறவிருப்பதாகவும் இராஜதந்திர வடட்டாரங்கள் நேற்று 'சுடர் ஒளி'க்கு தெரிவித்தன. முன்னாதாக கடந்த வாரம…
-
- 1 reply
- 1.3k views
-
-
2003 ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்திற்கு வருகை தந்தபோது லுட்சேர்ன் தமிழ்மன்றத்தினால் வெளியிடப்பட்ட "ஊசிஇலை" இன் சார்பில் பேட்டிகாண நேர்ந்தது. பனிபடர்ந்த ஒரு இரவில் தூக்கத்தை மறந்து தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார். தன் மூச்சில் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் தமிழீழத்தையும் தமிழீழத்தின் வளங்களையும் அதன் எதிர்காலம் பற்றியுமே சுவாசித்தார். அவர் கண்கள் சுபீட்சமான சுதந்திரமான தமிழீழத்தை கனவு கண்டுகொண்டிருந்தது. எங்களோடு அவர் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்ட அந்த ஒரு இராக்காலப்பொழுது இப்போதும் என் மனதில் காயங்களாய் வலிக்கிறது. அவரின் உணர்வுகள் தற்போதைய காலத்தின் கண்ணாடியாதலால் நன்றியுடன் மீள் பிரசுரமாகின்றது. உங்களை ஒரு மதகுருவாக அறிமுகம் செய்து கொள்ளலாமா? அடக்கப்பட்டு நசுக்கப்பட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் செலவிடப்பட்ட செலவீனங்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து கணக்காய்வுக் குழுவொன்றை அரசாங்கம் பிரித்தானியாவிற்கு....................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_223.html
-
- 1 reply
- 1.4k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வன்னேரி, ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணி இன்று அதிகாலை நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சுமையூர்தியில் சென்ற இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 20.04.2008 அன்று ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்ச்சி. ஆய்வின் கருப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்ட விடயம், இனத்துவ அடிப்படையில் எதிர்வரும் உலகம். பாகம் இரண்டு http://www.yarl.com/videoclips/view_video....a0d22ac97d69b79 13.04.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாகம் ஒன்றினைப் பார்க்க http://www.yarl.com/videoclips/view_video....9b44e954ec0b9bc
-
- 1 reply
- 1.2k views
-
-
பாகிஸ்தானிய, சீன அணுகுமுறைகளை பின்பற்றி வரும் மகிந்த ராஜபக்ச அரசு -தாரகா- தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான அணுகுமுறை தீர்வாக அமையாது என்றெல்லாம் பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை சொல்லி வருகின்றனர். அதிலும் இந்தியா எல்லோரையும் மிஞ்சுமளவிற்கு அரசியல் தீர்வு பற்றிய வாய்ச்சவடால்களை உதிர்த்து வருகிறது. ஆனால் நிலைமையோ முற்றிலும் தலைகீழாக இருக்கின்றது. இலங்கையில் தமிழருக்குப் பிரச்சினையா? அப்படியொரு பிரச்சினையே இல்லை. அது பற்றி பேசுவதற்கான ஒரு இடைவெளியே இருக்கக்கூடாது என்னும் வகையிலான அரசியல், இராணுவ கொள்கை முன்னெடுப்புக்களையே சிங்களம் கடைப்பிடித்து வருகிறது. சிங்களத்தின் சம…
-
- 0 replies
- 836 views
-
-
திங்கள் 21-04-2008 22:27 மணி தமிழீழம் [மயூரன்] ஹற்றனில் அதிபர், உப அதிபர், ஆசிரியர் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது ஹற்றன் டேம்ஸ்ரன் தமிழ் மகாவித்தியாலய அதிபர், உப அதிபர் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை அதிபரான விஸ்வநாதன் உப அதிபர் பூபாலசிங்கம் மற்றும் முன்னாள் ஆசிரியரான ராமச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 995 views
-
-
மடுத் தேவாலயம் மற்றும் கருணாரட்ணம் அடிகளார் மீதான தாக்குதலுக்கு கரிதாஸ் அமைப்பு கண்டனம் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தலையிடுமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கிறிஸ்தவ மத அமைப்பான் கரிதாஸ் அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளரும் கிறிஸ்தவ மதகுருவுமான எம்.எக்ஸ். கருணாரட்ணம் அடிகளாரின் மறைவை ஒட்டி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் பின்னர் இலங்கையில் ஏற்பட்டு வரும் நெருக்கடி குறித்து கவலை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு மடு தேவாலயம் மீதான தாக்குதல்கள் மற்றும் கருணாரட்ணம் அடிகளார் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாகவும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் பிள்ளையான் குழுவினர், கப்பம் பெறல், பெண்களை பாலியல் வல்லூறவுக்கு உட்படுத்துதல், சிறுவர்கள் பலவந்தமாக படையில் சேர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மக்கள் இதனை யாரிடம் எவரிடமும் முறையிட முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. திருகோணமலையின் அனுராதபுரம், கீழ்மூதூர், ஒர்தீன், ஜம்பள்ளிபுரம், பாலத்தீவு, மற்றும் செல்வநாயகபுரம் பிரதேசங்களை சேர்ந்த மக்களே இந்த கொடுமைகளை அனுபவித்து வருவகின்றனர். திருகோணமலையில் உள்ள தமிழ் கிராமங்களில் பிள்ளையான் குழுவினர் கப்பம் பெறாத ஒருவரும் இல்லை. இவர்களில் தாக்குதலுக்கு இலக்காகாது தப்பித்த இளைஞர்கள் எவரு…
-
- 1 reply
- 2k views
-
-
-
சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளாரின் புகழுடலுக்கு மக்கள் கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 923 views
-
-
கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட முடியாத நிலை காணப்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மல்வத்து மநாயக்க தேரர் விமல் விரவன்சவிடம் கோரியுள்ளார். கண்டி மல்வத்து மநாயக்க தேரரை நேற்றைய தினம் தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9225.html
-
- 0 replies
- 833 views
-
-
திங்கள் 21-04-2008 17:57 மணி தமிழீழம் [மயூரன்] ஜெயராஜ் மீதான குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் 8 பேர் கைது முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான குண்டு தாக்குதலுடன் தொடர்புடையர்வர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 8 பேர் ஸ்ரீலங்காவின் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவனால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் திட்டம் தெஹிவளை அத்திட்டடிய பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவனர் அறிவித்துள்ளனர். குண்டு தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி அந்த வீட்டில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். http://www.pathivu.com/i…
-
- 0 replies
- 755 views
-
-
பிள்ளையான் குழுவுக்குள் முரண்பாடாம் இரண்டாக பிளவுபடலாம் என ஆருடம் வீரகேசரி இணையம் 4/21/2008 4:33:43 PM - மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவினுள் இருந்த முறுகல் நிலை முற்றி வெடிக்கும் நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுடன் தொடங்கிய உள்முரண்பாடு தற்போது கிழக்கு மாகாணசபை தேர்தலுடன் வலுவடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. கருணாவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர் மௌனகுருசாமி இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்துவிட்டு மீண்டும் மட்டக்களப்பு வந்துள்ளார். இந் நிலையில் அவரை கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென பிள்ளையான் குழுவின் மற்றொரு சாரார் கேட்டுள்ளனர். இதனை பிள்ளைய…
-
- 0 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவு நகரில் உள்ள கத்தோலிக்க கோவில் பகுதி மற்றும் சுற்றயல் பகுதியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு சிறுமிகள் உட்பட எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 714 views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் அரசாங்க கட்சி தவிர்ந்த ஏனைய கட்சியினரின் போக்குவரத்துக்கு விமான வசதிகளை செய்து கொடுப்பது தவிர்க்கப்படுவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அம்பாறை விமான நிலையத்தின் ஓடுதளம் புனரமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் விமானங்களும் அங்கு தரையிறக்கப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் தயா கமகேவின் தயா ஏவிஹேசன் நிறுவனத்தின் விமானங்கள் தேர்தல் காலத்தில் அம்பாறையில் தரையிறக்கப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தயா கமகே குற்றம்சுமத்தியுள்ளார். இது ஒரு அரசியல் பழிவாங்கல் எனவும் அவர் கூறியுள்ளார், அம்பாறை விமான நிலையத்தின் ஓடுதளத்தை தமது விமான சேவையின் விமானங்கள் தொடர்ந்தும் பயன்படுத்த…
-
- 0 replies
- 816 views
-
-
மடு தேவாலய பிரதேசத்தை நோக்கி இலங்கைப்படையினர் தாக்குதல் நடத்துகின்றனரா என்பதை அமெரிக்கா செய்மதி மூலம் கண்காணித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன இதனையடுத்து இது குறித்து இலங்கை படைத்தரப்பு நிதானமான போக்கை கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விடயம் குறித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார,அமரிக்கா அவ்வறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என தெரிவித்தார். எனினும் படைத்தரப்பினர் மடுதிருப்பதியை நோக்கி தாக்குதல்களை நடத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மடுத்திருப்பதியை நோக்கி படையினர் தாக்குதலை நடத்துவதாக கூறி சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையிலேயே அமெரிக்கா செய்மதிக்கண்காணிப்பை மேற்…
-
- 1 reply
- 1.5k views
-
-
வழமையாக மிகவும் கோலாகலமாக நடாத்தப்படும் ஜே.வி.பி.யின் மேதின பேரணிகள் இம்முறை நடைபெறாது எனத் தெரியவருகிறது. கிழக்கில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஜே.வி.பி.யின் சிரேஸ்ட தலைவர்கள் மும்முரமாக கலந்து கொண்டுள்ளமையினால் இம்முறை மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறாதெனத் தெரியவருகிறது. ஜே.வி.பி.யின் உட்கட்சி பூசல் காரணமாக இம்முறை மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறாது என்ற கருத்து மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஜே.வி.பி.யினர் இதனைத் தெரிவித்துள்ளனர். கிழக்குத் தேர்தல்கள் மற்றும் கொழும்பில் தற்போதுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலை என்பவற்றை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், மார்ச் மாத முதல் வாரத்திலேயே இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் த…
-
- 1 reply
- 906 views
-
-
கிழக்கு மாகாண சபைபக்கான தேர்தலுக்குரிய மட்டு.மாவட்ட வாக்ககுச் சீட்டில் புலிச் சின்னமும் காணப்படுகின்றது என அறிய வருகிறது. அச்சின்னத்துக்கான கட்சியில் சார்பிலும் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யபட்டு அது ஏற்றுக் கொள்ப்பட்டதை அடுத்தே வாக்குச் சீட்டில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டு. மாவட்டத்துக்கான வாக்கு சீட்டின் நீளம் பதினெட்டரை அங்குலம் என்று தெரியவருகின்றது. மட்டு. மாவட்டத்துக்கான தபால் வாக்கு சீட்டுகள் நேற்று முன்தினம் தபாலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி வார வெளியீடு
-
- 1 reply
- 1.4k views
-