ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143590 topics in this forum
-
கடலூர், ஏப். 12: இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மீனவர் விடுதலை வேங்கை அமைப்பின் வாழ்வுரிமை கருத்தரங்கில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ராணுவ தளவாடங்களையும் இதர உதவிகளையும் உடனே நிறுத்த வேண்டும். கடற்கரை மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மீன் பிடிக்கச் ..................... தொடர்ந்து வாசிக்க.......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3433.html
-
- 1 reply
- 1k views
-
-
வடக்கில் ஒரு படைத்துறை வெற்றியை கொடுத்துவிட்டால் அது பல அனுகூலங்களை ஏற்படுத்தலாம் என்பது அரச தரப்பின் ஆவலாக உள்ளது. எனவே தான் மடுப்பகுதி நோக் கிய நகர்விற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பித்த இந்த நகர்வை மேற்கொண்டு வரும் 57 ஆவது படையணியின் 1 ஆவது மற்றும் 2 ஆவது பிரிகேட்டுக்கள் மடுவுக்கு ஒரு கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளன. இந்த நிலையில் பாதுகாப்புக் கருதி மடு புனித தேவாலயத்தில் இருந்த மடுமாதா சிலை அங்கிருந்து தொடர்ந்து வாசிக்க.............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_694.html
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காவில் உள்ள கதிர்காமத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் காவலரண் மீது இன்று மின்னல் தாக்கியதில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.6k views
-
-
சுலபமாகத் தாக்கப்பட்ட கடினமான இலக்கு.... விதுரன் [13 - April - 2008] இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களும் மிக முக்கிய பிரமுகர்களும் தலைநகரிலும் அதனையண்டிய பகுதிகளிலும் மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதை, கம்பஹா வலிவேரியா பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொல்லப்பட்ட சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு யுத்தத்தின் பிரதிபலிப்புகள் தலைநகருக்கும் தென் பகுதிக்கும் எப்போதோ பரவிவிட்டன. தலைநகருக்கு வெளியே பாதுகாப்பற்ற பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்களை விட தலைநகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்புமிக்க பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்கள் மற்றும் படை அதிகாரிகளின் எண்ணிக்…
-
- 3 replies
- 2.1k views
-
-
பிரித்தானியாவில் முதன் முறையாக அனைத்துப் பாகங்களையும் உள்ளடக்கிய பிரித்தானிய "தமிழர் மெய்வல்லுநர் போட்டி - 2008" லண்டன் வடகிழக்கில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற Lee Valley Athletic centrey இல் நடைபெறுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 677 views
-
-
அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ள தாக்கதல் பற்றி கருத்த வெளியிட்ட காவல் துறையினர் தமக்கு அமைச்சர் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வது தெரியாது எனவும் இதனால்தான் தாம் பாதுகாப்பு முறையாக.................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4877.html
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ்- சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வழமையாக யாழ்ப்பாணத்தில் இரவு ஒன்பது மணிமுதல்; ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்படு வருகிறது. புது வருடத்தை கொண்டாட இடமளிக்கும் வகையில் இந்த ஊரடங்கு நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேபோல் வவுனியா ஓமந்தை சோதனை சாவடியும் இன்று வழமைப்போல் திறக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார். http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 967 views
-
-
இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போரானது சுனாமியை போல முடிவுறாது என அமரிக்க வாசிங்டன் டைம்ஸ் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது. வாசிங்டன் டைம்ஸ்க்காக கொழும்பில் இருந்து செய்தியாக்கம் செய்துள்ள எமிலி வொக்ஸ் என்பவர் மட்டக்களப்பில் போரினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மக்களை செவ்விகண்டு அதனை வெளியிட்டுள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். இந்தக்குடும்பத்தினர் தமது கருத்தில் சுனாமி எப்போதும் முடிவுறாது எனக்கூறப்படுவதை போல இலங்கையிலும் யுத்தம் முடிவுறாது என குறிப்பிட்டுள்ளனர். போர் நிறுத்த உடன்பாடு அரசாங்கத்தினால் ரத்துச்செய்யப்பட்டமையின் பின்னர் இலங்கையில் போர் முடிவுறாது என்ற கருத்து பெரும்பாலான மக்களின் மனதில் எழுந்துள்ளத…
-
- 9 replies
- 2.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அடைந்துவரும் யுத்த தோல்விகளின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரகசிய பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு பிளவுபட்டால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி : தமிழ்வின்
-
- 13 replies
- 2.6k views
-
-
சண்டேலீடர் செய்திதாளின் ரத்மாலானை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள அச்சகத்தை எரித்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு என ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே வி பியில் இருந்து விமல் வீரவன்ச விலக்கிவிடப்பட்டதன் பின்னர்,கொழும்பில் ஊடக மாநாட்டை நடத்திய ஜே வி பியின் தலைவர் சோமவன்ச ...... .................................... தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6236.html
-
- 1 reply
- 1.1k views
-
-
கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இருவர் நேற்று முன்தினம் (10-04) வெள்ளை வானத்தில் சென்றவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். குடும்பஸ்தர்களான இவர்கள் இருவரும் கொட்டாஞ்சேனைப் பகுதியில் பொருட்கொள்வனவில் ஈடுபட்.............. தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2078.html
-
- 0 replies
- 837 views
-
-
ஜே வி பியின் பிளவுக்கு இந்தியாவே பின்புலமாக இருந்ததாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத்தீர்வு விடயத்தில் ஜே வி பி கொண்டுள்ள கொள்கை காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்............................. தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2787.html
-
- 1 reply
- 1.3k views
-
-
"சாள்ஸ் அந்தனி சிறப்புப் படையணி" . கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு ஒளி நாடா. See Video
-
- 3 replies
- 2.4k views
-
-
புத்தாண்டு தினத்தில் இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மின்சாரப்பொறியியலாளர்கள் சரிசெய்வதற்கு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Island wide power cut An island wide power cut is being experienced in the country at the moment. Ceylon Electricity Board engineers say there are trying to rectify the problem ஆதாரம் Daily Mirror
-
- 0 replies
- 1k views
-
-
போர்நிறுத்தம் பிரகடனம் செய்து ஏ9 பாதையைத் திறக்க வேண்டும் 13.04.2008 / நிருபர் வானதி தமிழ் சிங்களப் புத்தாண்டு வேளையிலாவது அரசாங்கம் போர் நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்த முன்வர வேண்டும். ஏ9 பாதையைத் திறந்து வடபகுதி மக்களுக் குத் தேவையான பொருள்களை அனுப்பி வைக்கவும் அரசு ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறு அகில இலங்கை இந்துமா மன்றம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் வலியுறுத்தி உள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிங்கள மக்களும் தமிழ்மக்களும் ஒன்று கூடி புத்தாண்டை கொண்டாடவிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் கூட ஏ9 வீதி மூடப்பட்டிருப்பது வடபகுதி மக்கள் நாட்டின் ஏனைய பகுதி மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டு மக்கள…
-
- 1 reply
- 1.1k views
-
-
நோர்வேயில் மதிப்புற்குரிய வைகோ அவர்கள் நிகழ்த்திய உரை பகுதி - 1 பகுதி - 2
-
- 2 replies
- 1.9k views
-
-
இலங்கையின் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் (வயது 55) கொலைச் சம்பவம் மகிந்த ராஜபக்ஷவை வெகுவாக பாதித்துள்ளது........................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1591.html
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறக்கின்றது. 30 கி.மீ தொலைவிலுள்ள இடைத் தங்கல் முகாமில் அகதியாகிவிட்டார் மடு மாதா. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டாலும் போரைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான படைக்கலங்களைப் பெறும் முயற்சியில் அரசு ஈடுபடுவது குறித்து, கேள்விகேட்பது கூட இனத் துரோகமாகக் கணிப்பிடும் துன்பகரமான................... தொடர்ந்து வாசிக்க......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2986.html
-
- 2 replies
- 1.4k views
-
-
பரந்தளவில் படை நடவடிக்கை மேற்கொள்வது பாதகமான விளைவுகளை தமது படைகளுக்கு ஏற்படுத்தும் என, சிறீலங்கா முன்னாள் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்துள்ளார். பரந்த படை நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அது பாரிய படைத்துறை உயிரிழப்புக்களையும், நிதி நெருக்கடியையும் ............. தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3575.html
-
- 1 reply
- 971 views
-
-
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவிக்கு இராணுவத்தினூடாக 44 மிலியன் ரூபாய்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக 'த சன்டே லீடர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பொன்சேகா இவ்வருட இறுதியில் சேவையில் இருந்த ஓய்வு பெறப் போவதாக செய்திகள் அடிபடுவது அறிந்ததே. மார்ச் 14ம் திகதி வாங்கப்பட்ட இவ் வாகனத்தில் எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாததுடன் வாங்கப்பட்ட ஆவணங்களில் இது இராணுவ அதி உயர் அதிகாரியான சரத் பொன்சேகாவின் பாவனைக்காக வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விடயம் பற்றி இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் வினவிய பொழுது, இவ்விடயம் பற்றி தமக்கு எதுவும் தெரியாதெனவும், மெர்சிடஸ் பென்ஸை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் ஒரே நிறுவனமான 'டீம…
-
- 7 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கொம்பெனித் தெருவில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 727 views
-
-
சிறிலங்கா இராணுவ நடவடிக்கையால் 600 சிறார்கள் உட்பட 12 ஆயிரம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 600 views
-
-
ஜே.வி.பி. கட்சியின் அதிருப்திக்குழுவின் தலைவரான விமல் வீரவன்ச, தேசப்பிரேமி பெரமுன (தேசப்பற்று முன்னணி) என்ற அமைப்பைத் தொடங்க உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 689 views
-
-
வரலாற்றில் இல்லாதளவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கம் அனைத்துலக ஆதரவுத் தளம் உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 745 views
-
-
விமான தாக்குதல் இலக்குகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் புலிகளுக்கு கிடைக்கிறது! Saturday, 12 April 2008 விடுதலைப் புலிகளது இலக்குகளை நோக்கி தாக்குதல் தொடுப்பதற்கு விமானம் புறப்படுவதற்கு முன்னமே விமானப் படையினரின் தாக்குதல் குறித்த விபரங்கள் உடனுக்குடன் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்து விடுவதாக விமானப் படையில் உள்ளோர் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1822/1/
-
- 0 replies
- 1.6k views
-