ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143595 topics in this forum
-
சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவியை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இயக்கங்களை உள்ளிடக்கிய "தமிழ்ப் பாதுகாப்பு" இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியாவின் யோசனைகள் இலங்கையில் தனிநாடு உருவாக்க முயற்சிக்கு வழிவகுக்கலாம் என ஜே.வி.பி யின் விஜித ஹேரத் இந்தியாவில் வைத்து கருத்து தெரிவித்திருக்கிறார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற அகில இந்திய போர்வவோட் புளோக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த விஜித ஹேரத் அங்கு இந்தோ - ஆசிய செய்திச் வேவைக்கு மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டள்ளா. அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியவின் யோசனைகள் விடுதலைப் புலிகளின் கொள்கைக்கு மறைமுக ஆதரவளிப்பவை என்றும் ஜே.வி.பியின் நா.உ அங்கு மேலும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிகககைகளை மேற்கொள்வதற்காக இலங்கை அரசைப் பாராட்டிய விஜித, அரசியல் தீர்விற்கு முயற்சிகளை மேற்கொள்ளும்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 7 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளை நேற்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சமகால இலங்கை அரசியல் நிலைமைகள், மனித உரிமைகளின் நிலைவரம் மற்றும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவும் இதனால் எழுந்துள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் சர்வதேச சுயாதீன மனித உரிமை கண்காணிப்புக் குழுவை இலங்கையில் அமைப்பதே ஒரே வழி என சந்திப்பின்போது மனோ கணேசன் எம்.பி. சுட்டிக்காட்டியு…
-
- 0 replies
- 785 views
-
-
மன்னார் முன்னரங்க நிலைகளில் புலிகளால் விதைக்கப்பட்ட பொறிவெடிகளில் சிக்கி ஏராளமான இராணுவத்தினர் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர
-
- 7 replies
- 2.9k views
-
-
நாட்டிற்குள் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி 3/14/2008 7:13:18 PM வீரகேசரி இணையம் - அரசியலில் எதிர்காலத்தில் பிழையான அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு இடம் வைக்கமாட்டேன். சுதந்திரமான நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையென்று ஒவ்வொரு நாளும் கோஷம் எழுப்பபடுகின்றது எனினும் நாட்டிற்குள் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் எதிர்ப்பார்ப்புகளை காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. யதார்த்தம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மட்டுமே முடிவுகள் எடுக்கப்படமாட்டாது ஒரு விடயத்தை நன்கு ஆராய்ந்ததன் பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ரூஹ…
-
- 3 replies
- 936 views
-
-
மணலாறு கொக்குதொடுவாயில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுத்தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
மண்டபம் முகாமில் பாணுக்குள் பல்லி சாப்பிட்ட 10 அகதிகள் வாந்தி, மயக்கம் 3/14/2008 6:59:06 PM வீரகேசரி இணையம் - மண்டபம் அகதிகள் முகாம் கடையில் பல்லி இருந்த பாணை சாப்பிட்ட குழந்தை உட்பட 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகில் உள்ள கடையில் அகதியொருவர் வாங்கிய பாணிலே பல்லி இருந்துள்ளது. அந்த பாணை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே அவர் அதில் பல்லியொன்று இருப்பதை கண்டடுள்ளார். அப்போது அந்த பாணை இரண்டு வயது குழந்தை ஹரினி உட்பட 10 பேர் சாப்பிட்டிருந்தனர். இதையடுத்து அவர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக இவர்கள் அகதிகள் முகாம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை ஹரினியின் தாய்…
-
- 0 replies
- 798 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள பொரளையில் உடல் இல்லாத தலை ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டது. அந்த தலைக்குரிய உடல் முல்லேரியாப் பகுதியில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 993 views
-
-
மாணவர்களிற்கு மதுபானங்களைக் கொடுத்து படையினர் தகவல் சேகரிப்பு. 14.03.2008 / நிருபர் எல்லாளன் யாழ் தென்மராட்சி கச்சாய் சந்திக்கு அருகாமையில் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை பயன்படுத்தி தகவல்களை சேகரிப்பதில் படையினர் மும்மரமாக ஈடுபடுகின்றனர். இச் செய்தி தொடர்பாக தெரியவருகையில் குறிப்பிட்ட விளையாட்டு மைதானத்தில் மாலை நேரங்களில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சமயம் சிறிலங்காப் படையினரும் சேர்ந்து விளையாட்டில் ஈடுபடுவதாக காட்டி தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்காக மதுபானப் பொருட்களைக் மாணவர்களிற்கு கொடுப்பதுடன் விளையாட்டுப் பொருட்களையும் வாங்கிக்கொடுத்து தகவல்களை நாளாந்தம் விளையாட்டு நேரங்களில் படையினர் சேகரிப்பதாக தகவல்கள் …
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒரே சீனா என்ற கொள்கைக்கே ஆதரவு தாய்வானின் சுதந்திரத்தை ஏற்கமுடியாது அரசாங்கம் உறுதியாக தெரிவிப்பு வீரகேசரி இணையம் - ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்கே இலங்கை முழுமையான ஆதரவளிக்கும். சீனாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கும், சர்வதேச, பிராந்திய ஒன்றியங்களில் இணைவதற்கும் தாய்வான் எடுக்கும் சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது, சீனாவிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுதல், ஐக்கிய நாடுகள் சபையில் தாய்வான் என்ற பெயரில் இணைதல் என்பவற்றுக்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த தாய்வான் திட்டமிட்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஒரே சீனா என்ற கொள்கைக்கே ஆதரவளிக்க…
-
- 11 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் முதியவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இது குறித்து மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 857 views
-
-
தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுத உதவி செய்வதனைக் கண்டித்து புதுவை யூனியன் பிரதேசத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21.03.08) கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 664 views
-
-
யாழ். பரவைக்கடல் பகுதியில் பொதுமக்கள் சென்ற படகு மீது சிறிலங்கா கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 771 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மட்டக்குளியில் இன்று மாலை ஏற்பட்ட குண்டுப்புரளியால் மக்கள் அல்லோகல்லோலப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
------------------ --------------------------------- ------------------------------------- ---------------------------
-
- 0 replies
- 655 views
-
-
இலங்கையில் காணாமல் போனோரினது நிலை இன்னமும் புரியாத புதிராக நீடிக்கிறது என்று கனடிய ஊடகமான "நசனல் போஸ்ட்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 922 views
-
-
அச்சமும் நம்பிக்கையீனமுமே உலகிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதி [14 - March - 2008] 2001 செப்டெம்பர் 11 இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தனது பொருளாதார, இராணுவ நலன்சார் ந்த நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் தீவிரமாக உலகளாவிய ரீதியில் முன்னெடுத்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுவரும் நிலையில் ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாகத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சராக முன்னர் பணியாற்றிய ரிச்சர்ட் ஆர்மிரேஜ் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டியொன்றின் போது, `9/11 இற்குப் பிறகு எமது அச்சத்தையும் ஆத்திர உணர்வையுமே நாங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி …
-
- 0 replies
- 971 views
-
-
கிழக்கு மாகாணசபைக்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 27ம் திகதி முதல் அடுத்த மாதம் 3ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது . வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ டி சுமனசிறி தெரிவித்தார் . எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை . கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. வேட்பு மனுக்களை ஏற்பது தொடர்பாக தேர்வு அத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் சுமணசிறி மேலும் தெரிவித்துள்ளார். ஆதாரம் வீரகேசரி
-
- 0 replies
- 696 views
-
-
மட்டக்களப்பில் ஆயுதக்குழுக்களை எதிரும் புதிருமாக தேர்தல் களத்தில் இறக்கி மோசடியான தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 534 views
-
-
ரூபவாஹினி நேரடி நிகழ்ச்சிகள் நிறுத்தம் மற்றுமொரு ரூபவாஹினி ஊழியர் தாக்கப்பட்டதையடுத்து நேரடி நிகழ்ச்சிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. Rupavahini stops live programmes Employees of the Rupavahini Corporation have stopped all live programmes with immediate effect till President Mahinda Rajapaksa intervenes and gives an assurance that spree of violence against Rupavhini employees would be brought to an end ஆதாரம் : Dailymirror
-
- 1 reply
- 971 views
-
-
வெள்ளி 14-03-2008 12:54 மணி தமிழீழம் [சிறீதரன்] கடந்த 8 நாட்களில் 35 குண்டுவெடிப்புகள் பெருமளவில் படையினர் பாதிப்பிற்குள்ளாகியிருக்கல
-
- 0 replies
- 971 views
-
-
24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் ஆயுதபாணிகள் கொள்ளையடித்துவிட்டு தப்புவது எப்படி? [14 - March - 2008] *வவுனியா பகுதி மக்கள் மத்தியில் சந்தேகம் வவுனியாவின் சகல பகுதிகளிலும் 24 மணிநேரம் பலத்த பாதுகாப்பு உள்ள நிலையிலும் ஆயுதபாணிகள் மிக இலகுவாக வந்து பெரும் கொள்ளைகளில் ஈடுபட்டு விட்டு தப்பிச் செல்வது மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. வவுனியா சுற்றாடலில் இரவு நேரக் கொள்ளையர்களின் பெரும் அட்டகாசம் காரணமாக நித்திரையின்றி பலர் விழித்திருக்கின்றனர். இவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொள்ளையிட முற்படுவதனால் சாதாரண குடி மக்களினால் எதுவுமே செய்ய முடியாதுள்ளது. பூந்தோட்டம், வேப்பங்குளம், சமயபுரம், மகா …
-
- 1 reply
- 791 views
-
-
யாழ்.மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகளில் வீழ்ச்சி' [14 - March - 2008] யாழ். மாவட்டத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு கணிதபாடப் பிரிவில் தோற்றும் மாணவர்கள் தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதால் அதிக எண்ணிக்கையானவர்கள் பொறியியல் பீடத்துக்கு தெரிவாகும் நிலை இருந்துவருகின்றது. இதேவேளை, உயிரியல் பாடப் பிரிவில் தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகள் பெருமளவு வீழ்ச்சியடைந்துவருகின்றது. இதனால், எதிர்காலங்களில் மருத்துவபீடத்துக்கு தெரிவாகும் மாணவர் எண்ணிக்கை குறைவடைவதுடன் மாவட்டத்தில் சேவையாற்ற மருத்துவர்கள் இல்லாமல் போகும் நிலையும் உருவாகிவருகின்றது. கல்வித்துறை சார்ந்தவர்கள் இதுவிடயத்தில் கவனமெடுத்து, …
-
- 0 replies
- 612 views
-
-
வியாழன் 13-03-2008 17:26 மணி தமிழீழம் [நிலாமகன்] மன்னாரில் களமுனைகளில் மோதல்கள் மன்னார் களமுனைகளில் மோதல்கள் இடம்பெறுவதாக குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன. இன்று அதிகாலை முதல் மாந்தை மற்றும் அடம்பன் பகுதிகளில் பெரும் எறிகணை வெடியோசைகள், துப்பாக்கி வேட்டுகள் செவிமடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.8k views
-