ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
கனடாவிற்கு எதிர்வரும் சனிக்கிழமை (15.03.08) செல்லவுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல் மிக மனவருத்தம் தரும் நிலையில்! லூயிஸ் ஆர்பர் அம்மையார் சுட்டிக்காட்டுகிறார் [ ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2008, 06:19.07 AM GMT +05:30 ] இலங்கையில் மோதல்கள் மீண்டும் ஆரம்பமான பின்னர், அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் மிக மோசமடைந்திருக்கின்றன சிக்கலான நிலையை அடைந்துள்ளன. அது மிகவும் மன வருத்தம் தரும் ஒன்றாக மாறியுள்ளது. இலங்கையில் மேலும் வன்செயல்கள் மூளும் அபாயம் உண்டு. அது குறித்தும் கவலைப்படும் நிலை உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இவ்வாறு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். மனித உரிமைக் கவுன்ஸிலின் அமர்வுகளின் முடிவில் அவர் தமது வருடாந்த இறுதி அறிக்கையை சமர்ப்பி…
-
- 0 replies
- 639 views
-
-
ஞாயிறு இரவு 10 மணியளவில் சுமார் 3 மணித்தியாலங்களாக கடுமையான எறிகணை வீச்சு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தென்மராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை அதிகாலை 1 மணிவரை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதுதொடர்பான மேலதிக விபரங்கள் பெறப்படவில்லை
-
- 1 reply
- 1k views
-
-
'இலங்கையில் தலையீடு" - மீளச் சொல்லப்பட்டுள்ள இந்திய சமாதானப் படையின் அனுபவங்கள் என்ற இந்த நூல் இந்தியப் படையின் தளபதி மேஜர்- ஜெனரல் கர்கிரத்சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையின் முதற் கட்டளைத் தளபதியாக இவரே நியமிக்கப்பட்டிருந்தார். 72 வயதில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்;கின் இந்த நூல் டிசம்பர் 2006 இல் வெளியிடப்பட்டுள்ளது. http://www.tamilnaatham.com/articles/2008/...avi20080309.htm
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னார்ப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் பதுங்கிச் சூட்டுத் தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் - மனித உரிமை விடயத்தில் ஐ.நா.வுடனும் சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராக உள்ளது. எனினும் இவ்விடயத்தில் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு தேவை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெனிவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்ல
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் படையினரின் வளத்தையும், பொருளாதரத்தையும் சீரழித்து வருகின்றது. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் தென்பகுதியில் தாக்குதல்களை அதிகரிப்பதன் பிரதான நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
ஐக்கிய நாடுகள் சபை பராமரிப்பில் அகதிகள் முகாமை ஒப்படைக்க வேண்டும் - பழ.நெடுமாறன் 3/9/2008 6:19:30 PM வீரகேசரி இணையம் - ஐக்கிய நாடுகள் சபை பராமரிப்பில் அகதிகள் முகாமை ஒப்படைக்க வேண்டும். மேலும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் நல்ல உடல்நலத்துடன் இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார் என தமிழர் தேசியத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது, இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த எம்.பி. சிவநேசன் உட்பட 3 எம்.பி.க்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழ் எம்.பி.க்களுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அங்கு மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க இந்திய உச்ச நிதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். பகவதி தலைமையில் 11 பேரை கொண்ட சர்வதேச கண்காணிப்…
-
- 0 replies
- 681 views
-
-
பஸ்ஸினுள் வைக்கப்பட்டிருந்த வெற்று பொதியினால் நுகேகொடையில் பதற்றம் 3/9/2008 5:39:40 PM வீரகேசரி இணையம் - நுகேகொடை வழியாகப் பயணித்த பஸ் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியினால் அப்பகுதி முழுவதும் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரகம்பிட்டிய ஹெட்டியாவத்தை நோக்கிப் பயணிக்கும் 176 ஆம் இலக்க பஸ் வண்டி ஒன்றினுள்ளேயே மேற்படி சந்தேகத்திற்கிடமான பொதி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி பொதி காரணமாக அந்த பஸ் வண்டி நுகேகொடை ஹைலவல் வீதியில் வெகு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் பஸ்ஸில் இருந்த பயணிகளும் விரைவாக இறக்கப்பட்டனர். இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து குண்டு செயலிழக்க வைக்கும் படையினருடன் அவ்வி…
-
- 0 replies
- 868 views
-
-
மன்னார் சேத்துக்குளம் பகுதியில் இன்றும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 928 views
-
-
மகிந்தவின் படுகொலைகளை எதிர்கொண்டு, தமிழீழ தனியரசை நிறுவுவதே ஒரே வழி - பா.நடேசன் மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ தேசத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பு என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாமனிதர் சிவநேசனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ தேசத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு. இவ்வாறான இழப்புக்களின் மத்தியில் எமது விடுதலைப் போராட்டம் முழுவீச்சுடன் நகர்ந்து வந்துள்ளது. சிவநேசனை எனக்கு 20 வருடங்களுக்கு மேலாகத் தெரிவியும். இவர் இளம் வயதிலிருந்து புரட்சிகர எண்ணங்களுடனும், எமத…
-
- 2 replies
- 2.5k views
-
-
வெறிபிடித்த மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக ஈழத் தமிழர்கள் போராட வேண்டிய காலகட்டம் - வை.கோ சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையின் தொடச்சியின் அரஜாகம் தான், தமிழ் மக்களுக்கான நாடாளுமன்றம் வரை சென்று குரல் எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் படுகொலையாகும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைப் படம்போட்டுக் காட்டியிருக்கிறது. இந்த நிலையில் அனைத்துலக சமூகம், நவீன கிட்லராக மாறி மகிந்த ராஜபக்ச தமிழர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் மகிந…
-
- 1 reply
- 1k views
-
-
இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்- இந்தியாவை அல்ல என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 986 views
-
-
"ரிவிர" மற்றும் "த நேசன்" ஊடக நிறுவனத்தின் பங்குகளில் 49 விழுக்காட்டினை சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒருவர் வாங்கியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 987 views
-
-
ஈரான் அரச தலைவர் மொகமட் அகமட்னிஜாத் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிறிலங்கா பயணம் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளை சகிக்க முடியாமல் சிறிலங்காவை விட்டு வெளியேறுவது என்று அந்நாட்டின் புகழ்பெற்ற 6 மருத்துவர்கள் முடிவு செய்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
மகிந்தவின் பாதுகாப்பை உடனடியாக மாற்ற முடிவு 09.03.2008 / நிருபர் வானதி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புகள் தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலரி மாளிகையிலிருந்து செயலகம் மற்றும் மாளிகைக்கு மகிந்த பயணம் செய்யும் போதும் திரும்பி வரும்போதும் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டவர்களில் அஜ்மீர் என்ற சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. நிசாந்தன் என்ற கரும்புலி உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபரை பணி நேரங்களிலும் அவர் தமது சகோதரர் எனக் கூறி மகிந்த பயணித்த பாதைகளில் நிறுத்தியதாகவும் அஜ்மீர…
-
- 5 replies
- 2.3k views
-
-
பிரித்தானிய அமைச்சர் லோட் பிரவுனின் அறிக்கையில் இலங்கை பற்றிக் கூறப்பட்டுள்ள விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டவை-மஹிந்த சமரசிங்க 3/9/2008 10:24:46 AM வீரகேசரி இணையம் - ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கான பிரித்தானிய அமைச்சர் லோட் பிரவுனின் அறிக்கையில் இலங்கை பற்றிக் கூறப்பட்டுள்ள விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டவையெனவும
-
- 0 replies
- 1.1k views
-
-
காட்சி : 1 வகுப்பில் பாடம் எடுத்துகொண்டிருக்கிறார் ஆசிரியர். மாணவர்கள் அதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறன்றார். திடீரென துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சில நபர்கள் வகுப்பறைக்குள் ஆவேசமாக நுழைகின்றனர். அதே வேகத்தில் அங்கிருந்த மாணவர்களை இழுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். பதறிய ஆசிரியர் அவர்களைத் தடுக்க முயல, தாக்கப்படுகிறார். சாய்ந்து விழுகிறார். காட்சி 2 வாகனம் ஒன்றில் வலுக்கட்டாயமாகத் திணிக்கபடுகிறான் ஒரு சிறுவன் ஆழுதபடியே அதில் அமர்கிறான் புழுதியைக் கிளப்பியபடி வாகனம் புறப்படுகிறது மின்னல் வேகத்தில் புறப்பட்ட வாகனம் ஒரு காட்டுப் பகுதியை நோக்கி விரைகிறது. காட்சி 3: அதிகாலை நேரம் சிறுவர்களுக்கு ஆயுதப்பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. நடுநாயமகாக அமர்…
-
- 3 replies
- 3.1k views
-
-
சிறிலங்காவில் ஏற்பட்டு வரும் பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக கண்டியில் நடைபெறவிருந்த தென்னாசிய நாடுகளின் (சார்க்) கூட்டத்தொடர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 987 views
-
-
-
சிறிலங்கா அரசியலில் மிக முக்கிய புள்ளி ஒருவர் மரணமடைந்து விட்டதாக தவறுதலாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அரசு வெளியிட இருந்து இரங்கல் அறிக்கை அதிர்ஸ்டவசமாக இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2k views
-
-
1996 இன் உடன்படிக்கையை மீறி அப்காசியா மீது இருந்த பொருளாதார தடையை ரஸ்யா 06.03.2008 அகற்றியுள்ளது. ஜேர்ஜியாவின் அப்காசியா பகுதியை தனிநாடாக அங்கீகரிக்குமாறு சர்வதேசத்தை அதன் நடைமுறை அரசு கேட்டுள்ளது. http://www.rferl.org/featuresarticle/2008/...FECFEF1FEF.html http://www.eurasianet.org/departments/insi...av030608a.shtml http://hosted.ap.org/dynamic/stories/G/GEO...EMPLATE=DEFAULT http://www.russiatoday.ru/news/news/21818
-
- 1 reply
- 1.5k views
-
-
'மடு"த்தலம் மகிந்தவுக்கு தூரத்துக் கோவிலா? -சேனாதி- ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டு 2052 ஆண்டுகளும், சிறிலங்காப் படைகள் மடுவைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஆரம்பித்து ஒரு ஆண்டும் வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதியோடு முடிவடைகின்றன. 2007 மார்ச் 15 காலை 9:00 மணியளவில் இரணைஇலுப்பங்குளம் பீரங்கித் தளத்தில் இருந்து முள்ளிக்குளம், கீரிசுட்டான், பெரியபண்டிவிரிச்சான் ஆகிய ஊர்களின் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு புதிய களமொன்றை நோக்கி சிறிலங்காப் படைகள் அடியெடுத்து வைத்தன. சமகாலத்தில் புளியங்ககுளத்தை நோக்கியும் பூவரசங்குளத்தில் இருந்து கணைகள் வீசப்பட்டன. மாலையில் பாலைமோட்டைக்கு மேற்காக இருக்கும் முள்ளிக்குளத்தில் விடுதலைப் புலிகளுக்கும் முன்னேறிவந்த படையின…
-
- 1 reply
- 2k views
-
-