Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரூபவாஹினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நூலகவியலாளர் மீது பிளேட் வெட்டுக்கள் ரூபவாஹினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பெண் பணியாளர் ஒருவர் சிங்கள காடையர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ரூபவாஹினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நூலகவியலாளர் (librarian) ஒருவர் சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியதோடு, பிளேட் வெட்டுக்கும் உள்ளாகியுள்ளார். பிளேட்வெட்டுக்கு உள்ளாகியவர் நூலகவியலாளர் ரஞ்சினி அழுத்கே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 1 reply
    • 1.1k views
  2. ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே இன்று ராமேஸ்வரம் மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை 262 படகுகளில் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் வந்தனர். தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த கடற்படையினர், குயின்ராஜ் என்பவருக்குச் சொந்தமான படகில், இருந்த அக்காள் மடம் கிறிஸ்டி (30), அந்தோணி ராயப்பன், மரியகுவிட்டன், மரியபிச்சை ஆகியோரை துப்பாக்கி முனையில், நிறுத்தினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்களை கையை உயர்த்தியபடி நிற்க வைத்த சிங்களப் படையினர் பின்னர் த…

  3. 1980-களின் இறுதிப் பகுதிகளில் இந்திய தலைநகர் புதுடில்லியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்திய முதலமைச்சர்கள் பேரம், எம்.ஜி.ஆர் கொண்ட கோபம், அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்பன குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளிப்படுத்தியிருக்கின்றார

    • 0 replies
    • 1.2k views
  4. மட்டு. உள்ளூராட்சி சபை தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [Wednesday March 05 2008 06:03:00 PM GMT] [யாழ் வாணன்] கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எண்ணி ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அவசரகாலச் சட்டமனது…

    • 3 replies
    • 1.8k views
  5. இலங்கை விவகாரத்தில் இந்தியா குளறுபடித்தனமான நிலைப்பாட்டில் 06.03.2008 இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய சமிக்ஞைகள் மீண்டும் குளறுபடித்தனமாகவே வருகின்றன. ""இலங்கை விவகாரத்தை இந்தியா கையாளும்போது, இலங்கைத் தமிழர்கள் பற்றிய சிரத்தை இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் விடயமாகும். அதை விலக்கி இந்தியா நடந்து கொள்ளவே முடியாது.'' என்ற சாரப்பட இந்திய நாடாளுமன்றத்தில் அறிவிக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அது வெறும் நாடாளுமன்றப் பேச்சு மட்டுமல்ல. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டை இந்திய நாடாளுமன்றத்துக்கும் இந்திய தேசத்துக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எடுத்துக் கூறும் கொள்கை விளக்க உரையாகும். …

    • 11 replies
    • 2.2k views
  6. தேசிய கொள்கை ஒன்றை வெளியிடுவதற்கு நாடளாவிய ரீதியில் ஆலோசனைக் கூட்டம் - ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு 3/6/2008 12:01:33 AM வீரகேசரி இணையம் - தேசிய கொள்கையொன்றை வெளியிடுவதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றை நாடளாவிய ரீதியில் நடத்தப் போவதாக ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவும் இணைந்த தேசிய சபை தீர்மானித்துள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது மோசடிகள் அதிகரித்துள்ளன. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஊடக அடக்குமுறை மேலோங்கியுள்ளது என்பதே பெரும்பான்மையானோரின் கர…

  7. மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்றும் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  8. சிறிலங்காவின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இந்தியா சுயநலத்துடன் செயற்படுகின்ற போதும் அதனை எதிர்க்கத் தேவையில்லை என்று ஜே.வி.பி.யினருக்கு சிங்கள எழுத்தாளரான ஜெகான் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  9. ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிறிலங்கா இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகாவை இந்திய அரசாங்கம் அழைத்ததற்கு தமிழ்நாட்டின் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  10. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்க பயப்படமாட்டேன் - விஜய டி. ராஜேந்தர் 3/5/2008 6:40:19 PM வீரகேசரி இணையம் - நான் சிறு சேமிப்புத்துறையின் துணை தலைவராக இருந்தாலும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்க பயப்படமாட்டேன் என்று விஜய டி. ராஜேந்தர் கூறினார். பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ""லட்சியமே கீதம்'' என்ற தலைப்பில் 9 கொள்கை விளக்க பாடல்களை விஜய டி. ராஜேந்தர் தயாரித்துள்ளார். இந்த பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.விழாவிற்கு லட்சிய திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் விஜய டி. ராஜேந்தர் தலைமை தாங்கினார். மதுரை ஆதீனம் கொள்கை விளக்க பாடல்கள் குறுந்தகட்டினை வெளியிட்டார். …

    • 4 replies
    • 3k views
  11. வீரகேசரி இணையம் - "இலங்கையில் அமைதி நிலவவேண்டும். இதற்காகத்தான் எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்'' என்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகள் செலுத்தி வரும் அரசியல் ஆதிக்கத்தை குறைக்கவும் எதிர்கால இளம் தலைமுறையினருக்கான புதிய அரசியல் பார்வையை வழங்கிடவும் சமீப காலமாக சிலர் முயன்று வருகின்றனர். இம்முறையும் கலை உலகத்திலிருந்து தான் அதற்கான முதல் அடி எடுத்துவைக்கப்பட்டிருக்கிற

    • 0 replies
    • 1.4k views
  12. 3 விடுதலை புலி உறுப்பினர்களின் சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது e-Paper 3/5/2008 2:31:05 PM மன்னார் நிருபர் - மோதல்களின் போது உயிரிழந்த 03 பெண் புலிகளின் சடலங்களை படையினர் நேற்று 6.30 மணியளவில் மன்னார் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். அடம்பன் பகுதியில் இடம் பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த புலிகளின் சடலங்களையே தாம் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது . இச்சடலங்களை இன்று மதியம் 1.30 மணியளவில் மன்னார் வட்ட நீதிவான் டி.ஜே. பிரபாகரன் வைத்திய சாலையில் சென்று பார்வையிட்டார். பின்னர் பிரதே பரிசோதனையின் பின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் http://www.virake…

    • 0 replies
    • 1.4k views
  13. விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாக சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தூங்கிய மாத்தறை பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம் [Wednesday March 05 2008 09:24:25 AM GMT] [யாழ் வாணன்] Tamilwin.com விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாகவும் அவற்றுக்கு உரிய பாதுகாப்புக் குறித்தும் ஆராய்வதற்கு நடத்தப்பட்ட மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின்போது அதில் கலந்து கொண்ட மாத்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதில் உரையாற்றும்போது இந்த பொலிஸ் அதிகாரி உறங்கிவிட்ட…

    • 2 replies
    • 1.3k views
  14. தினமும் 5 படையினருக்கு சிராய்ப்பு.. நாலு படையினருக்கு எறும்புக்கடி.. 3 படையினருக்கு நுளம்புக்கடி.. 2 படையினருக்கு மன்னாரில் அடம்பனில் மாடு முட்டிக் காயம்.. என்று அறிக்கை விட்டுவரும் சிறீலங்கா பாதுகாப்பமைச்சும் (MCNS ) அதன் இராணுவ இணையத்தளங்களும் இன்று நாடாளுமன்றத்தில் சிறீலங்காப் பிரதமர் விடுத்த அறிக்கை ஒன்றை அடுத்து சற்றே அதிர்ச்சியில் உள்ளனர். அது ஒன்றுமில்ல பிரதமர் ரட்னசிறிவிக்கிரம நாயக்கா அவர்கள் பெளத்த பிக்குகளுடன் இணைந்து கூட்டிக்கழிச்சு.. சொல்லக் கூடிய தொகை ஒன்றை சொல்லி இருக்கிறார். அதுதான் கடந்த மாதம் மட்டும் சிறீலங்காப் படை 104 படைவீரர்களை இழந்து 822 பேரைக் காயப்படுத்தி களத்தை விட்டு வெற்றிகரமாக வெளிநகர்த்தி இருக்கின்றது என்ற கூற்றுத்தான் அது. படையினர் …

  15. மடுக்கந்தவில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 687 views
  16. சீமானின் 'புலி'ப்பேச்சு... ''பிரபாகரனுக்கு நோபல் பரிசு கொடுக்கணும்!'' 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை...' -பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சமீபத்தில் ஆரம்பித்த அமைப்பு இது. மார்ச் முதல் தேதி, நாகப்பட்டினத்தில் இந்தப் பேரவையின் அறிமுகக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து சினிமா இயக்குநர் சீமான் முழக்கம்தான் ஹைலைட்! சீமானின் சீற்றத்திலிருந்து சில துளிகள்.... ''இந்திய இறையாண்மை பற்றிப் பேசுகிறார்களே... அவர்கள் இலங்கை இறையாண்மையைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அங்கே சிங்கள பௌத்தர்கள் மட்டுமே ஆளமுடியும். புத்தரின் பல்லைப் பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்பவர்கள், அவருடைய சொல்லைப் பாதுகாக்க மறந்து விட்டார்கள். பி…

    • 2 replies
    • 2.3k views
  17. நன்றி bloodpolitics தரவேற்றியதற்கு

  18. சிறிலங்காவின் ஹரவபொத்தான, துட்டுவேவ பகுதியில் இன்று காலை கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை - அனுராதபுரம் சாலையில் ஹரவபொத்தன பகுதி அமைந்துள்ளது

    • 8 replies
    • 3k views
  19. கிழக்கிலிருந்து புலிகள் பின்வாங்கிய சமயம் அங்கு அவர்கள் வைத்திருந்த ஆயுதக்களில் ஒரு தொகுதி தென்னிலங்கையில் செயற்படும் ஒரு குழுவுக்கு கைமாறியதா என்பது குறித்து அரச புலனாய்வுப் பிரிவினர் துருவத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கிழக்கின் அரசியல் வாதி ஒருவர் ஊடாகவே இந்த ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு கைமாறியதாகக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே, இது விடயத்தில் புலனாய்வாளர்கள் நுணுக்கமாக இறங்கியிருக்கிறார்கள் என சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் அண்மையில் மஹரகம பிரதேசத்தில் தேடுதல் நடத்திய சமயம், மேற்படி குழுவினரால் நடத்தப்படும் அரசியல் அலுவ…

    • 0 replies
    • 1.7k views
  20. இலங்கையின் வான் வெளிப் பாதுகாப்புத் திறனை மேலும் அதிகரிக்கக் கூடிய 'ராடர்' சதாதனங்களை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சரத் பொன்சேகாவும், பேகாட்டபயவும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தற்போதைய சந்தர்ப்பத்திலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்படத்தக்கது. பொன்சேகா தனது இந்திய விஜயத்தின் போது இராணுவத்திற்கான ஆயுதக் கொள்வனவு குறித்தே அதிக கவனம் செலுத்துவார் எனப் புதுடில்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய இராணுவத்தளபதி, பாதுகப்பு அமைச்சர் உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் அவரது ஒருவார கால விஜயத்தின் போது பேச்சுகளை மேற்கொள்ளவுள்ள பொன்சேகா இராணுவ ஒத்துழைப்பிற்கான சாதியக்கூறுகள் குறித்து ஆராய்வார்கள் என இந்தியப…

    • 6 replies
    • 1.9k views
  21. இலங்கை விமானத்தில் பிரயாணம் செய்வதை புறக்கணியுங்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.4k views
  22. சிறிலங்காவின் பொருட்களை புறக்கணியுங்கள்

    • 0 replies
    • 1k views
  23. சிறிலங்காப் படையினரே அதிகளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பான யுஎன்எச்சிஆரின் செயற்பாட்டுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 700 views
  24. விடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான "மினி' கப்பலை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர் திருச்சியில் கைது 3/4/2008 8:15:51 PM வீரகேசரி இணையம் - கேரளாவில் சிறிய ரக கப்பலைத் தயாரித்து இலங்கைக்கு கடத்த முயன்ற புலிகள் ஆதரவாளர்கள் இருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். திருச்சி கே.கே. நகரில் உள்ள அண்ணாசிலை அருகே விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் நின்று கொண்டிருப்பதாக "கியூ' பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கையைச் சேர்ந்த பிரேம்ராஜ் என்ற துரைக்குட்டி எனவும் மற்றையவர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குமார் என்ற டீசல் குமார் எனவும் தெரிய வந்தது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.