Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகள் நோர்வே நாட்டை தொடர்ந்து அனுசரணையாளர் பணி செய்ய அழைப்பு விடுத்திருப்பதாக செய்தி வெளியாயிருக்கிறது.

  2. கிளிநொச்சி மாவட்ட தமிழீழ நிர்வாக சேவையின் வேலைப்பகுதி பணியாளர்களும், கனரக ஊர்திகளின் உரிமையாளர்களும் வடபோர்முனைக்குச் சென்று போராளிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை இன்று வெள்ளிக்கிழமை வழங்கினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  3. ஊடக இல்லத்தின் சச்சி தயாரிப்பாளர்களின் "உயிரம்புகள்" திரைப்படம் நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  4. அமைதி முயற்சிகளின் கதவுகளை சிறிலங்கா அரசாங்கம் மூடிவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  5. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 20,066 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்ட வராலாற்றில் 20,066 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 11-11-1982ம் ஆண்டு தொடக்கம் 31-12-2007ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைக்காக ஈகம் செய்த மாவீரர்களின் விரிப்பை தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ளது. ஆண் மாவீரர்கள் - 15,835 பெண் மாவீரர்கள் - 4,231 மொத்தம் - 20,066 தரைக்கரும்புலிகள் - 102 கடற்கரும்புலிகள் - 246 மொத்தம் - 348 எல்லைப்படை மாவீரர் - 279 காவல்துறை மாவீரர் - 37 மாமனிதர் - 18 நாட்டுப்பாற்றாளர் - 465 என அந்த விரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  6. பாகிஸ்தானிடமிருந்து 100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத கொள்வனவுக்கு நடவடிக்கை 1/11/2008 12:00:56 PM வீரகேசரி இணையம் - பாகிஸ்தானிடமிருந்து100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று ஜேன்ஸ் பாதுகாப்பு சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 18 மாதங்களில் மட்டும் 200 மில்லியன் டொலர் அளவுக்கு ஆயுதங்கள் வாங்க இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 450 கோடியாகும். தனது இராணுவ பலத்தை அதிகரிக்க பாகிஸ்தானிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்களை வாங்கிக் குவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. விடுதலைப்…

  7. யப்பான் சமாதானக்குழு விரைவில் சிறீலங்காவில் சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதையடுத்து, சிறீலங்கா அரசுடன் சிறீலங்கா நிலவரம்பற்றி கலந்தாலோசிக்க, ஒரு சமாதானக்குழுவை வார இறுதி நாட்களில் அனுப்பவிருப்பதாக யப்பான் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது. சனவரி மாதம் 13ம் திகதி சிறீலங்காவை சென்றடையும் யசூகி அகாசி அவர்கள், சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்கவிருப்பதாக யப்பான் வெளிநாட்டமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கும் அதேவேளை விடுதலைப் புலிகளை சந்திப்பது பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதையிட்டு ஆழ்ந்த கவலையை தெரிவித்திருக்கும் யப்பானிய…

    • 2 replies
    • 1.7k views
  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பு பொட்டு அம்மான் தலைமையில் இயங்கி வருகின்றது. அது மிகவும் நவீனமான புலனாய்வு அமைப்பாகும். அதன் உயர்ரகத் தகவல்கள் மிகவும் துல்லியமானவை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  9. வடமராட்சி அல்வாயில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 0 replies
    • 1.4k views
  10. மன்னாரில் இரு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  11. கொள்ளையடிக்கச் சென்ற துணை ஆயுதக்குழுக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவற்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டினுள் கொள்ளையடிக்கச் சென்ற, பிள்ளையான் அணியினர் ஐவரை, பொதுமக்கள் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர். பிடிபட்ட ஐவரில் ஒருவரான கனகரட்னம் அதிரவன் கல்லடி பிள்ளையான் குழுவிற்கு பொறுப்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கச் சென்ற துணைப் படைக்குழுவினரிடம் இருந்த டி.56 ரக துப்பாக்கிகளையும் கைப்பற்றிய பொதுமக்கள் காத்தான்குடி காவல் துறையினரிடம் அனைத்தையும் ஒப்படைத்துள்ளனர். காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஐவரும் தாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனத் தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். கல்லடி பிள்ளையான் முகாம் சிறீலங்கா படைகளின் பாதுகாப்புக்குட்பட்டிருப்ப

    • 3 replies
    • 2.2k views
  12. இலங்கையில் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைபட்சமாக வெளியேறிய நிலையில் சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கினை புரிந்துகொண்டு தமிழர் தேசத்தின் நியாயமான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வியாழக்கிழமை (10.01.08) வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கினை புரிந்துகொண்டு தமிழர் தேசத்தின் நியாயமான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் 2002 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தின் ஆதரவுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையினை சிறிலங்கா அரசாங…

  13. வியாழன் 10-01-2008 11:42 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] பத்திரிகையாளர்கள் தேசத்துரோகிகள் சில பத்திரிகையாளர்கள் தேசத்துரோகிகள் என முத்திரை குத்தி இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துக்கு, அனைத்துலக செய்தி பாதுகாப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அனைத்து ஊடகவியலாளர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை, நம் மத்தியில் பணியாற்றும் சில பத்திரிகையாளர்களால் மேற்கொள்ளப்படும் தேத்துரோகத்தால் பின்னடையச் செய்கின்றது என கடந்த சனவரி 2ம் திகதி அரச சார்பு பத்திரிகையான ’தினமின’வுக்கு, இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேக அவர்கள் அளித்த செவ்வியிலே தெரிவித்திருந்தார். இராணுவத் தளபத…

    • 2 replies
    • 1.9k views
  14. எவருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை புத்தாண்டில் அமைதியும் சமாதானமும் கிடைக்கட்டும் என்று ஆசி கூறி அன்பர்கள், அனுதாபிகளினால் அனுப்பப்பட்ட வாழ்த்து மடல்கள் வருடம் பிறந்து 10 நாட்களாகியும் கூட இன்னமும் தபாலில் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மடல்களை விரித்துப்பார்க்கும் போது ஒரு சம்பிரதாயத்துக்கேனும் மனம் மகிழக்கூடிய அருகதையுடன் இலங்கையர்களாகிய நாம் இருக்கின்றோமா என்று கேட்க வேண்டியிருக்கிறது. முன்னைய வருடங்களையும் விட 2008 ஆம் ஆண்டில் வன்முறைகள் படுமோசமாக அதிகரிப்பதற்கான அபாயச் சமிக்ஞைகளையே அன்றாடம் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வருடம் பிறந்த ஒருவாரகாலத்திற்குள் இரு அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். புத்தாண்டு தினத்தன்று தலைநகர் கொழும்பில் பொன்னம்பல…

    • 0 replies
    • 1.5k views
  15. சர்வகட்சி ஆலோசனை குழுவின் யோசனைகள் 23 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவிப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வகட்சி ஆலோசனை குழுவின் யோசனைகள் அடங்கிய அறிக்கை 23 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். சர்வகட்சி ஆலோசனை குழுவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் யோசனைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடியதன் பின்னர் வெளியிடப்படும் இந்த யோசனையை பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்…

    • 0 replies
    • 846 views
  16. மணலாற்றில் தாக்குதல் நடத்த வந்த படையினர் புலிகளால் விரட்டியடிப்பு மணலாற்றுப் பகுதியில் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மணலாற்றுக் களமுனையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் படையினர் தாக்க வந்த வேளை விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தி படையினரை விரட்டியடித்தனர். இத்தாக்குதலின் போது படையினரின் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. http://www.puthinam.com/

    • 0 replies
    • 856 views
  17. பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஒரு கட்டமாகவே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகினோம் புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்கமுடியாது ரட்ணசிறி விக்கிரமநாயக்க பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமா கவே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசு விலகி யுள்ளது. ஒரு தலைப்பட்சமாக அந்த ஒப்பந்தத்தைப் பேணுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கும் பிரேரனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பேசு கையில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார் அவர் அப்போது மேலும் கூறியதாவது: சமாதானப் பேச்சுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம். ஆனால், அதற்காகப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக நாம் ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாகத் த…

    • 11 replies
    • 1.8k views
  18. எத்தகைய சவால்களுக்கும் முகம்கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  19. விடுதலைப் புலிகளைத் தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவாதாக மஹிந்தவின் அரசியல் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ் தெரிவித்தார். 'தினக்குரல்' க்கு நேற்று புதன் கிழமை மாலை இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் :- விடுதலைப்புலிகள் தமது பயங்கரவாதத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதிகளின் இலக்குகளாக பொதுமக்களும் அரசில்வாதிகளுமாக மாறியுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை தமக்கு சாதகமாகப் புலிகள் பயன்படுத்தினார்கள். ஆயிரக் கணக்கில் அதனை மீறினார்கள். எனவே தான், போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் வெளியேறியது. தோல்வி காணும் புலிகள் இப்போது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். என்வே, அரசு புலிகளை தடைசெய்வது குறித்து தற்ப…

    • 6 replies
    • 1.8k views
  20. அரசுடான போரை எதிர்கொண்டு, தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பலம் புலிகளுக்கு உண்டு - பா. நடேசன் சிறீலங்கா அரசுடனான போரை எதிர்கொண்டு, தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பலம் விடுதலைப் புலிகளுக்கு உண்டு என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கண்காணிப்புக் குழுவின் தலைவருடனான சந்திப்பை அடுத்தே உடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருருந்து தன்னிச்சையாக விலகுவதாக அறிவித்ததுடன், கண்காணிப்புக் குழுவினர் எதிர்வரும் 16ம் நாள் தமது நாடுகளுக்குத் திரும்புகின்றனர். இவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பும் முன்னர் இவர்களுடன் ஒரு சுமூகமான சந்திப்பை ஏற்படுத்தினோம்.…

    • 6 replies
    • 2.4k views
  21. கண்காணிப்புக்குழு விடுதலைப் புலிகள் விடைபெற்றுச் செல்லும் இறுதிச் சந்திப்பு இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான விடைபெறும் இறுதி ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்திப்பானது இன்று காலை 9 மணிக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தின் நடுவப் பணியகத்தில் நடைபெற்றது. கண்காணிப்புக் குழுவில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க் உட்பட மேலும் சில கண்காணிப்பு அதிகாரிகளும் கலந்துகொண்டனர். விடுதலைப் புலிகள் தரப்பில் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பபாளர் செ.புலித்தேவன், மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர். சந்திப்பில் சிறீலங்கா அரசாங்…

    • 2 replies
    • 2.5k views
  22. 09.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....9fa097b85867d9a

  23. கிழக்கு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் [Thursday January 10 2008 04:04:13 PM GMT] [யாழினி] கிழக்கில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரேணுகா ஹேரத் தெரிவித்துள்ளார். கிழக்கு தேர்தல் தொடர்பாக ஒட்டுக் குழுக்கள் மத்தியில் மறைமுக மோதல்கள் ஆரம்பித்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இன்று (வியாழக்கிழமை) தமது நிலைப்பாடு தொடர்பாக அறிவித்துள்ளது. tamilwin.com ஆசை யாரை தான் விட்டு வைத்தது. ரனிலுக்கு ஒரு சின்ன நப்பாசை தான்.

  24. மட்டக்களப்பு மாவட்டம் கல்லடியில் நேற்று புதன்கிழமை இரவு இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

    • 0 replies
    • 612 views
  25. யா-எலவில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் உயிரிழந்த அமைச்சர் தசநாயக்கவின் இறுதிச் சடங்கிற்கு செல்லவுள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சர்கள் சிலருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் தங்குவதற்கு என புத்தளத்தில் உள்ள இரண்டு பாடசாலைகள் முன்னறிவித்தலின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.