ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
மருதானை பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு காலம் நிர்ணயிக்கப்பட்ட வீசா வழங்கும் நடைமுறையை அப்பிரதேச பொலிஸார் அமுல்படுத்தியுள்ளனர். இதற்கென வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு அமைய மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் தங்களது அனைத்து விபரங்களையும் இந்த விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட தமிழ் பிரஜை தங்கியிருக்கக் கூடிய காலம் பொலிஸாரினால் நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்த கால எல்லையை குறிப்பிடும் புறம்பான பகுதியொன்றும் இந்த விண்ணப்பப்படிவத்தில் காணப்படுகிறது. இதேவேளை, முகத்துவார பிரதேச பொலிஸார் இதற்கு சற்று வித்தியாசமான விண்ணப்பபடிவத்தை தமிழ் மக்களுக்கு …
-
- 8 replies
- 2.3k views
-
-
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்ற மோதல்களில் 127 படையினர் கொல்லப்பட்டும் 363 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெரிவிக்கையில், கடந்த ஜனவரி முதல் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் உட்பட மன்னாரில் நடைபெற்ற மோதல்களிலேயே 127 படையினர் கொல்லப்பட்டும் 363 படையினர் படுகாயமடைந்துமுள்ளனர். மன்னாரில் பாலைக்குழி, திருக்கேதீஸ்வரம், அடம்பன்வீதி, கட்டுக்கரை, பரப்பாங்கண்டல், பண்டிவிரிச்சான், தம்பனை, முள்ளிக்:குளம், விளாத்திக்குளம் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலிலும் விடுதலைப்புலிகளின் சினைப்பர் தாக்குதல், மிதிவெடிகள் மற்றும பொறி வெ…
-
- 0 replies
- 1.9k views
-
-
அதி சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தினரால் பணவைப்புச் சான்றிதழ் வழங்கி மதிப்பளிப்பு [Wednesday February 13 2008 02:39:38 PM GMT] [யாழ் வாணன்] கல்விச் செயற்பாடுகளில் சிறப்பாகச் செயற்பட்ட மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு 12.02.2008 யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அதிசிறப்புச் சித்திபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தினரால் பணவைப்புச் சான்றிதழ் வழங்கி மதிப்பளிப்பு சுவிஸ்வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் நடைபெற்று முடிந்த கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப்பெற்ற யாழ் மத்திய கல்லூரி வர்த்தகப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களான கணேச…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை அக்கரைப்பற்றில் சம்பவம் 2/13/2008 8:30:37 PM வீரகேசரி இணையம் - அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று 07 சின்னக்குளம் தயாகேணி பாலர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான இளைய தம்பி தவராசா (51 வயது) என்றழைக்கப்படும் குடும்பஸ்தரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டவராவார். முன்தினம் இரவு 8.30 மணியளவில் இக்குடும்பஸ்தரை சுட்டுக்கொலை செய்துள்ள இனம் தெரியாத ஆயுததாரிகள் இவரின் சடலத்தினை அக்கரைப்பற்று சின்னக்குளம் காளி கோவில் தீயில் போட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேசன் தொழிலில் ஈட…
-
- 0 replies
- 995 views
-
-
அரசினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் 20 வருடங்களுக்கு முன்னரே தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டதொன்றாகும். இந்த தீர்வினை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக்கிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்துக்கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொட் ஓ பிளேக்கை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போதே தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பு ஒன்றரை மணிநேர…
-
- 1 reply
- 1.4k views
-
-
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணாகொட நேற்று இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் இந்திய கடற்படை தளபதி மற்றும் படையதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பில் இலங்கை கடல் எல்லையில் மிதக்கவிடப்பட்டுள்ள கடற்கண்ணி வெடிகள் மற்றும் இந்திய மீனவர்கள் வேடத்தில் மேற்கொள்ளப்படும் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் பேசப்படவிருக்கின்றது. இதேவை கடந்த 23 ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்களுக்கு மத்தியிலிருந்து இலங்கை கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படவிருக…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கி படையினரால் முன்னேற முடியவில்லை - ஏ.எஃப்.பி வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கிய மும்முனை ஆக்கிரமிப்புத் தாக்குதலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள போதிலும், விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக படையினரால் முன்னேற முடியவில்லை என ஏ.எஃப்.பி செய்திச்சேவை இன்று வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மன்னார், மணலாறு களமுனைகளில் கடந்த மூன்று நாட்களாக படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளாக படைத் தரப்பு தெரிவித்துள்ள போதிலும், மன்னார் பாலக்குழியில் நேற்றைய தாக்குதலில் மட்டும் 42 படையினர் கொல்லப்பட்டுள்ளதாவும், 53 படையினர் காயமடைந்துள்ள…
-
- 3 replies
- 2.7k views
-
-
எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்G http://www.rsf.org/IMG/pdf/RSF-TAMIL-1-2.pdf http://www.rsf.org/article.php3?id_article=25690 இலங்கை அரசாங்கமும் படைத்தரப்பும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தி உள்ளன. ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ விடுதலைப் புலிகளை அழித்துவிடுவதாக சூழுரைத்துள்ளார். இதற்காக தேவையேற்படும் போது மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் என்றும் இல்லாதவாறு 2007ல் இலங்கை அரச அதிகாரத்தின் கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டு; தவிக்கின்றன. மறுபுறம் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களின் குரல்களை அனுமதிப்பதில்லை. கிழக்கில் கிடைத்த இ…
-
- 0 replies
- 1.7k views
-
-
புலிகளைப் பற்றிப் பேசவே பயந்தவர்கள் தற்போது நமது ஆட்சிதான் என செயற்படுகின்றனர் - இல. கணேசன் 2/13/2008 6:10:23 PM வீரகேசரி இணையம் - கடந்த ஆட்சியில் புலிகளைப் பற்றிப் பேசவே பயந்தவர்கள் தற்போது நமது ஆட்சிதான் என நினைத்து செயற்படுகின்றனர் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள பண்ருட்டி வந்த அவர் முன்தினம் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில், தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு ஆயுத கடத்தல், தயாரித்தல் போன்ற பணிகள் நடைபெறுகிறது. கடந்த ஆட்சியில் புலிகளைப் பற்றி பேசவே பயந்தவர்கள் தற்போது நமது ஆட்சிதான் என நினைத்து செயற்படுகின்றனர…
-
- 1 reply
- 2k views
-
-
கொழும்புத்துறை கரையோரப் பகுதிகளில் நேற்றிரவு 20 நிமிட நேரமாக மோதல் மக்கள் பலரும் இடம்பெயர்வு [Wednesday February 13 2008 08:11:06 AM GMT] [யாழ் வாணன்] கொழும்புத்துறை மற்றும் துண்டி கடற்கரையோரப் பகுதிகளில் நேற்றிரவு 8.30 மணி முதல் சுமார் 20 நிமிடங்களாக கடும் மோதல் இடம்பெற்றது. பல்குழல் ஷெல் தாக்குதல் மற்றும் சர மாரியான தொடர் துப்பாக்கி வேட்டுச் சத் தங்களால் நகரப்பகுதி அதிர்ந்த வண்ணம் இருந்தது. எதிர் எதிரே துப்பாக்கிச் சூட்டு மோதல் கள் நடைபெறுவதுபோன்று மிக அண் மித்ததாக நகரப் பகுதியில் இடைவிடாது சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. அவை ஓய்வதற்கு சுமார் 20 நிமிடங்கள் சென்றன. கடற்கரையோரத்துக்கு அப்பால் விடு தலைப் புலிகளின் நடமாட்டம் காணப்…
-
- 0 replies
- 2k views
-
-
புலிகளுக்கு எதிராக செயற்பட மனித உரிமை அமைப்புக்கள் அஞ்சுகின்றன-கெஹெலிய [Wednesday February 13 2008 12:17:08 PM GMT] [Naffel] மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கத்திற்கு எதிராக குற்றங்களை முன்வைக்கும் மனித உரிமைகள் அமைப்புக்கள் புலிகளுக்கு எதிராக செயற்பட அஞ்சுகின்றன என தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறிப்பாக புலிகளால் அண்மைக்காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பாடசாலைகள் மாணவர்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், இதற்கு கண்டனம் தெரிவிக்கக் கூட எந்தவொரு மனித உரிமை அமைப்பு முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். tamilwin.com
-
- 0 replies
- 916 views
-
-
மணலாற்றில் பெருமெடுப்பிலான முன்னகர்வு: விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதல் 10 இராணுவம் பலி என சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது.. நன்றி: புதினம்
-
- 18 replies
- 6.4k views
-
-
இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை ஆய்வு செய்யவுள்ள இந்திய சமஸ்கிருத கல்விமான்கள் [13 - February - 2008] இந்துக்களின் இதிகாசமான இராமாயணத்துடன் தொடர்புபட்ட இடங்களெனக் கருதப்படும் இலங்கையிலுள்ள பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள சமஸ்கிருதத்தை கற்றுள்ள கல்விமான்கள் குழுவை இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஆலய பரிபாலனசபை விரைவில் அனுப்பிவைக்கவுள்ளது. இராமபிரான் இராவணனைக் கொன்ற இடம் மற்றும் சீதாப்பிராட்டியாரை இராவணன் கவர்ந்துகொண்டு வைத்திருந்த குகை என்பன ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ள
-
- 9 replies
- 1.9k views
-
-
எகிப்தில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது [13 - February - 2008] எகிப்தில் கொலை செய்யப்பட்ட எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த வதுகே வஜிர புஸ்பகுமார என்ற 31 வயது நபரின் சடலம் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2007 டிசம்பர் 12 ஆம் திகதி எகிப்தில் உள்ள அவரது அறையில் வைத்து இவர் கொலை செய்யப்பட்டார். இவரிடமிருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்தவர்களே இவரைக் கொலை செய்துள்ளனர். இக்கொலை தொடர்பாக அங்கு தொழில்புரியும் இலங்கையர் ஒருவர் உட்பட இரு எகிப்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவரது சடலம் விமானமூலம் கொண்டுவரப்பட்டு மரண விசாரணைக்காக நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது. சட்ட வைத்திய அதிகாரி…
-
- 0 replies
- 1.4k views
-
-
இராணுவ அதிகாரி தற்கொலை. 13.02.2008 / நிருபர் எல்லாளன் றத்மலான சிறிலங்கா பாதுகாப்பு கற்கைநிறுவனமான கொத்தலாவல பாதுகாப்பு அக்கடமியின் பயிலுனர் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது அறையில் சுருக்கிட்டு தொங்கியநிலையில் இவரது உடல் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. எனினும் தற்கொலை செய்தவரின் பெயர் விபரம் தற்கொலைக்கான காரணம் குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாவில்லை. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 5 replies
- 3k views
-
-
திருகோணமலையில் இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்துக்கான அடிக்கல் இன்று நடப்படவுள்ளது. படையினரால் மீட்கப்பட்ட சம்பூர் பிர தேசத்தில் இந்த அனல் மின்நிலையத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது. ஆயினும்இ அந்தப் பிரதேசத்தில் மின் நிலையத்தை அமைப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனைய டுத்து மின் நிலையத்தை நகரில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் கப்பல்துறை என்னும் இடத்தில் அமைக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. இந்திய அதிகாரியான எஸ்.சங்கரலிங் கம்இ மின்சக்தி அமைச்சர் டபிள்யூ. ஜே. செனவிரத்தின ஆகியோர் இணைந்து இன்று முற்பகல் 10 மணிக்கு மின் நிலை யத்துக்கான அடிக்கல்லை அங்கு நடவுள் ளனர். நன்றி உதயன்
-
- 1 reply
- 1.4k views
-
-
இன்று காலை 7:00 மணியளவில் வவுனியா தட்டான்குளம் பகுதியில் கிளைமோர் வெடித்ததில் இரு ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் என இராணுவ பேச்சாளர் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார் ஜானா
-
- 2 replies
- 1.7k views
-
-
இந்திய நிறுவனமொன்றுக்கு திருகோணமலையில் 900 ஏக்கர் நிலம் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் விசேட வர்த்தக வலயமொன்றை இலங்கையில் அமைப்பதற்காக இந்திய நிறுவனமான மஹிந்து லைப்ஸ்பேஸ் தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. விசேட வர்த்தக வலயமொன்றை அமைப்பதற்காக திருகோணமலை கப்பல்துறை பிரதேசத்தில் 900 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஒப்பந்தம் இன்னும் 30 நாட்களுக்குள் கைச்சாத்திடப்படும் என இந்திய வர்த்தக அமைச்சர் ஜெயராம் ரமேஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தொழில்நுட்ப பூங்கா சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட உள்ளது. இந்தப் பூங்காவை அமைப்பதற்கான ஒப்பந்த…
-
- 5 replies
- 1.9k views
-
-
போரை நிறுத்தி அரசியல் தீர்வினைக் காணும் முகமாக சிறிலங்காவுடனான அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவர ஜேர்மனி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
இதனை யூடியூப்பில் தரவேற்றிய நண்பர் bloodpoliticsகு நன்றிகள் 6 மாதத்துக்கு முன்னர் யூடியுபில் இணைந்து இன்றைவரை 272 காணொளிகளை தரவேற்றி அனைத்து காணொளிகளையும் ஒவ்வொருவரையும் கவரும் விதமாகவும் எமது நாட்டு நடப்பினை கண்டு எமது நிலையை உணரவைக்கும் முகமாகவும் செயற்பட்டுவரும் நண்பர் bloodpolitics கு இந்த தருணத்தில் நன்றிகள் இவரின் காணோளிகளை பார்வையிட http://youtube.com/user/bloodpolitics
-
- 0 replies
- 1.5k views
-
-
உள்ளூர் தயாரிப்பு இராட்சத ஷெல் "சமாதானம் 2005' புலிகள் பாவிப்பு பேரழிவு தரக்கூடிய ஷெல் அல்லது பீரங்கி வகையைச் சேர்ந்த இராட்சத ஏவு வெடி கருவி ஒன்றை மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் அரசுத் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன எனக் கூறப்படுகின்றது. "சமாதானம் 2005' என நாமம் சூட்டப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கருவி முன்னர் புலிகள் தாங்களே தயாரித்துப் பயன்படுத்திய "பஸிலன்' ஷெல் வகையை ஒத்ததாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது. "சமாதானம் 2005' என்ற இந்தப் பெயர் இதற்கு புலிகள் சூட்டியதா அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அந்தப் பெயரில் அக்கருவியை இனங்கண்டு குறிப்பிடுகின்றதா என்பதை அறியமுடியவில்லை. …
-
- 24 replies
- 6.8k views
-
-
வட கிழக்கில் 469 சிறுவர்கள் படையணிகளில் மோதல்களில் 45 பேர் பலி; 77 பேர் அங்கவீனம் - ஐ.நா. விசேட அறிக்கை [Tuesday February 12 2008 04:06:37 PM GMT] [யாழினி] வடக்கு கிழக்கு பகுதிகளில் கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 2007 ஆகஸ்ட் 31 வரையான காலப் பகுதியில் 469 சிறுவர்கள் பலவந்தமாக படையணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர். இக்காலப் பகுதியில் மோதல்கள் காரணமாக 45 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 77 பேர் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மோதல்கள் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் 261 பாடசாலைகள் அழிவடைந்துள்ளன என்று சிறவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான ஐ.நா. வின் விசேட ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் ஆயுத மோதல்கள் இட…
-
- 0 replies
- 1.6k views
-
-
உயிர் அச்சுறுத்தல் நீங்கவில்லை நீதிமன்றத்தை நம்பி நாடு திரும்பினேன் - மனோ கணேசன் எம்.பி. கூறுகிறார் [Tuesday February 12 2008 08:24:03 PM GMT] [யாழினி] எனக்கு ஏற்பட்டுள்ள பாரிய உயிர் அச்சுறுத்தல் இன்னமும் நீங்கவில்லை. இருந்த போதிலும் நீதிமன்றத்தை நம்பியே நான் நாடு திரும்பியுள்ளேன் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழு ஏற்பாட்டாளரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் மரணம் துர்ப்பாக்கியமானதும் துரதிஷ்டவசமானதுமாகும். ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருக்கின்றது. இது குறித்து சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். …
-
- 2 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணம் ஏரிப் பகுதியில் அரியாலை தனங்கிளப்புப் பகுதிகளை நோக்கி புலிகள் ஆட்லறித்தாக்குதல் நடத்தியுள்ளதுடன் புலிகளின் படகுகளின் நடமாட்டமும் அவதானிக்கப்பட்டுள்ளதை அடுத்து இராணுவமும் பதிலுக்கு ஆட்லறி மற்றும் பல்குழல் வெடிகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் இராணுவத்தின் தாக்குதல் அகோரம் புலிகள் நடத்திய பதில் தாக்குதலை அடுத்து 10 நிமிடத்துள் சமாளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நெட் கூறுகிறது. இதற்கிடையே மிகச் சமீபத்தில் தனங்கிளப்புப் பகுதியில் தரையிறங்கிய புலிகளின் அணி ஒன்று இராணுவக் காவலரண்கள் இரண்டை தகர்த்து இராணுவத்தின் ஒரு படகையும் கைப்பெற்றி மீண்டும் தளந்திருப்பியதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன..! LTTE, SLA exchange artillery fire across Jaffna lagoon. …
-
- 6 replies
- 3.3k views
-