ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
ஐக்கிய இலங்கைக்குள் "தமிழர் தன்னாட்சி அரசாங்கத்தை" அமைப்பதை அனுமதிக்கும் வகையில் சிறிலங்காவின் அரசியல் யாப்புகள் திருத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்" ஏடு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்தக் கிராமமான அம்பாந்தோட்டை இன்று சூனியப் பிரதேசமாக காட்சியளிக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
-1- பல்தேசி நிறுவனங்கள் நாடுகளிற்கு எதிரான புறக்கணிப்பு முயற்சிகள் பொதுவாகவே தாக்கத்தை உண்டு பண்ணுமா, அதன் மூலம் மாற்றங்களை உருவாக்க முடியுமா? ஜனநாயக உலகில் தனிமனிதரின் வாக்குரிமைக்கு அடுத்தாக அவர்களது நுகர்வு ஏற்படுத்தும் பொருளாதாரம் ஒரு பலமான ஆயுதமாக இருக்கிறது. ஜனநாயக சமூகத்தில் நுகர்வோரை மய்யப்படுத்திய முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தனிமனிதரின் தெரிவு என்பது மேலும் முக்கியத்துவமடைகிறது. தனிமனிதரின் வாக்குரிமை எவ்வாறு குறித்த கொள்கைகள் நிலைபாடுகள் நோக்கி குவிக்கப்படும் பொழுது ஒருமித்த வெகுஜன பலமாகி ஒரு நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறதோ அதேபோலவே ஒற்றுமையாக தமது நுகர்வுகளில் மேற்கொள்ளும் தெரிவுகளும் ஒருமித்து தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார பலமாக மா…
-
- 6 replies
- 2.5k views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில் சிறிலங்காவில் கடத்தல்களும் காணாமல் போதல்களும் தொடரும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
மன்னார் பகுதியில் மக்களை வெளியேறக் கூறி துண்டுப் பிரசுரங்கள் இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரம் மற்றும் வங்காலை பிரதேசத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியை முன்னிட்டு, உடனடியாக வெளியேறி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகக் கோரப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்தத் துண்டுப் பிரசுரத்தினால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து இராணுவத்தினரின் கவனத்திற்குக் கொண்டுவந்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது. …
-
- 1 reply
- 2.3k views
-
-
புதன் 14-11-2007 23:01 மணி தமிழீழம் [தாயகன்] ஈரான் செல்லவுள்ள மகிந்த, வானூர்தி வாங்க கடன் கேட்பார் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ இம்மாத இறுதியில் ஈரானிற்குச் செல்லவிருப்பதுடன், அவரது இந்தப் பயணத்தின்போது ஈரானிடம் கடனுதவி கேட்பார் என தெரிய வந்துள்ளது. இவ்வாறு பெறப்படும் றிதியின்மூலம் அண்மையில் அநுராதபுரத்தில் விடுதலைப் புலிகளால் தாக்கியழழிக்கப்பட்ட வானூர்;திகளுக்குப் பதலீடான வானூர்திகளைக் கொள்வனவு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், சிறீலங்காவிற்குத் தேவையான எரிபொருட்களையும் கடன்திட்ட அடிப்படையில் தருமாறு கோரிக்கை முன்வைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ஸவின் பயணதிற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கென அமைச்சர் மிலிந்த மொ…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 9 replies
- 2.9k views
-
-
செவ்வாய் 13-11-2007 20:09 மணி தமிழீழம் [மயூரன்] யுத்தத்தை தொடர ஈரான், சீனா, பாகிஸ்தானிடம் ஆயுத உதவியை சிறீலங்கா நாடியுள்ளத - பி.ராமன் யுத்த முன்னெடுப்புகளை தொடர்வதற்கு ஈரான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியை சிறீலங்கா அரசாங்கம் நாடியுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் முன்னாள் இந்திய புலனாய்வுத்துறை உயர் அதிகாரி டீ.ராமன், எல்லாளன் நடவடிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் துவமச்சம் செய்யப்பட்ட, பயிற்சி விமானங்கள், மின்னியல் அவதானிப்பு விமானங்கள், ஆளில்லா வேவு விமானங்கள் போன்றவற்றிற்கு மாற்றீடாக புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கு, ஈரானிடம் கடனுதவிகளை சிறீலங்கா அரசாங்கம் கோரியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, பாகிஸ்தானிடம் இ…
-
- 5 replies
- 3k views
-
-
இலங்கையில் துடிப்பது நமது உயிர்.. தமிழ் உயிர் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் வார இதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் ஆளும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் கொள்ளையர்களும் காடையர்களும் மட்டுமே உள்ளனர் என்று எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்ச சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
புதன் 14-11-2007 16:27 மணி தமிழீழம் [தாயகன்] இவ்வருடம் இருபதாயிரம் புதிய படை உறுப்பினர்கள் - கோதபாய சிறீலங்காவின் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பில் இவ்வருடம் மட்டும் இருபதாயிரம் இளைஞர்கள் புதிய உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இளைஞர்கள் படைகளில் இணையும் வகையில் விளம்பர உதவிபுரிந்த அரச ஊடகங்களுக்கு கோத்தபாய நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை, மன்னாரிலும், முகமாலையிலும் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் பல நூற்றுக்கணக்கான படையினர் களத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், சிறீலங்காப் படைக்கு மீண்டும் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டிருந்த நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று முன்தினம் முதல் படையிலி…
-
- 1 reply
- 1.2k views
-
-
13.11.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....7701cbc8a1653ad
-
- 0 replies
- 1.6k views
-
-
புதன் 14-11-2007 15:43 மணி தமிழீழம் [மயூரன்] ராஜபக்சவின் வீழ்ச்சி: புலிகளின் எழுச்சிக்கு வழிகோலும் - அமைச்சர் கரு ஜெயசூரிய மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிக்கும் வழிகோலும் என, அமைச்சர் கரு ஜெயசூரிய எச்சரித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய, ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்று அணியின் தலைவரும், சிறீலங்கா பொதுநிர்வாகத்துறை அமைச்சருமான கரு ஜெயசூரிய, அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு, ஒருபொழுதும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் இடம்மளிக்கக் கூடாது என் கோரியுள்ளார். அவ்வாறான நிலை ஏற்படுவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சி பெற்று வலிமையடைவதற்கு வழிகோலும் என்றும், சிறீலங்கா பொதுநிர்வாகத்துறை அமைச்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ அமைதிப் பேச்சுக் குழுத் தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வுகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெளிநாட்டவர்கள் பணத்துக்காக கடத்தப்படும் அபாயம் உள்ளதாக தன் நாட்டு மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : 2007-11-14 இனப்பிரச்சினையை மையமாக வைத்தே தெற்கின் அரசியல் அதிகாரப் போர் ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை மையமாக வைத்தே சிங்கள ஆளும் வர்க்கங்கள் காலம் காலமாகத் தமக்கிடையே யான அதிகாரப் போர்களை நடத்தி வந்திருக்கின்றன என்பதை இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். தமது அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பலப் படுத்தி, நிலைப்படுத்துவதற்கு ஈழத் தமிழர் பிரச்சினையை மையமாகக் கொண்ட தமது அதிகாரப் போர்களையே தளங் களாக சிங்களத் தலைமைகள் பயன்படுத்தி வந்திருக்கின் றன. அதுவே இன்றும் தொடர்கின்றது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அமைதி முயற்சிகள் தென் னிலங்கையின் இந்த அதிகாரப் போர்கள் ஊடாக அணுகப்பட்டமையால்தான். இன்று வரை தீர்க்கப்பட முடியாத பெரும் விவகாரமா…
-
- 0 replies
- 1.1k views
-
-
வஞ்சகத்தால் வீழ்ந்தாய்!- பழ. நெடுமாறன் இளமை அரும்பும் பருவத்தில் அதாவது தனது 17ஆம் வயதில் விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தம்பி தமிழ்ச்செல்வன் இளமை முதிர்ச்சியடையும் பருவத்தில் மறைந்துபோனார். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் வளர்க்கப்பட்டு உருப்பெற்றவர் தமிழ்ச்செல்வன் ஆவார். தனது தலைவரின் மனஓட்டம், எதிர்பார்ப்பு ஆகிய எல்லாவற்றையும் மிகத்துல்லியமாக அறிந்து அவர் எள் என்று சொல்லுவதற்கு முன்பே எண்ணெய்யாகக் கொண்டுவந்து கொட்டியவர் தமிழ்ச்செல்வன். சென்னையில் பிரபாகரன் அவர்கள் தங்கி இருந்தபோது அவரின் மெய்ப் பாதுகாப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த தமிழ்ச்செல்வனைச் சந்தித்து இருக்கிறேன். தமிழீழத்துக்குச் சென்ற ஒவ்வொருமுறையும் அவர…
-
- 0 replies
- 1.9k views
-
-
அண்ணா -- பூங்குழலி நெடுமாறன் செப்டம்பர் 17, 2007 - யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப வலியுறுத்தி மேற்கொண்ட சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை நிறைவு செய்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பா, அன்று தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியிருந்தார், 1 வாரம் விடுப்பு முடிந்து அன்றுதான் நான் மீண்டும் பணிக்குச் சென்றிருந்தேன். அன்று மாலை 8:00 மணியளவில் என் கைப்பேசியில் ஒரு அழைப்பு. எண்களின்றி வந்த அந்த அழைப்பு ஆர்வத்தைத் தூண்ட எடுத்து வணக்கம் சொன்னேன். மறுமுனையில், “அக்கா, நாங்கள் வன்னியில் இருந்து கதைக்கிறோம். தமிழ்ச்செல்வன் அண்ணை கதைக்க வேண்டும் என்றார்” என்றது ஒரு குரல். மனதில் ஒரு புறம் உண்மையா என்ற குழப்பம் ஏற்பட்டாலும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று அதிகாலை வவுனியாவைத் தாண்டி அனுராதபுரம் வான் பரப்பிற்குள் பிரவேசித்ததாக அறிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, படையினர் வானை நோக்கி தொடர்ச்சியாக 20 நிமிடத்துக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் அநுராதபுரம் பகுதி இன்று அல்லோலகல்லோலப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 2k views
-
-
ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் மீண்டும் மர்மப்படகு சிறீலங்கா அதிபரின் சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் தாக்குதல்களும், காணாமல்ப் போதல்களும் அதிகரித்துள்ள நிலையில், மற்றுமொரு மர்மப்படகு நேற்று மாலை 3.00 மணியளவில் கடற்பரப்பில் அவதானிக்கப்பட்டுள்ளது. ரேகவ - தங்காலை பகுதிகளுக்கு இடைப்பட்ட கடற் பிரதேசத்தில் இந்தப் படகு அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடற் பரப்பிலும், கரையோர நிலப்பிரப்பிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தங்காலை, மற்றும் குடாவெல மீன்பிடி துறைமுகங்களுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கடலில் தேடுதலை நடத்தவென காலி கடற்படைத் தளத்திலிருந்து பீரங்கிக் கப்பல்கள் சிலவும் தங்கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
நெருப்பாற்றைக் கடக்கும் நீச்சலில் இன்று ஊடகங்கள் - பிரசார யுத்தம் வேறு; உண்மையான போரியல் யுத்தம் வேறு. அதற்கு ஹிட்லர் நல்லதொரு உதாரணமாக அமைகிறார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மிக நெருக்கடியான இக்கட்டான மோசமான கட்டத்தை அடைந் திருக்கும் இச்சமயத்தில் அதன் விளைவாக மோசமான சிக்கலுக்குள் மாட்டியிருப்பது ஊடக சுதந்திரம்தான். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 775 views
-
-
மடு மாதா தேவாலயத்தை நோக்கி எறிகணை வீச்சு: சிறுவன் பலி- வயோதிபப் பெண் படுகாயம் மன்னார் மடு மாதா தேவாலய வளாகத்தினை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மடு மாதா வளாகம் நோக்கி படையினனர் செறிவான எறிகணை வீச்சுத் தாக்குதலை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணியளவில் நடத்தினர். மடுமாதா தேவாலய அலுவலகத்திலிருந்து 10 மீற்றர் தொலைவில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன் போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த 5 வயதுச் சிறுவனான அலோசியஸ் அனோஜன் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட வேளையில் இடைவழியில…
-
- 0 replies
- 749 views
-
-
எதிர்ப்புக்களையும் மீறி அமெரிக்கா சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றது: "த பொட்டம்லைன்" அமெரிக்கா சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்காது என்று ஊடகங்கள் தெரிவித்து வரும் நிலையில் சிறிலங்காவிற்கு அமெரிக்கா ஒரு தொகுதி ஆயுதங்களை கடந்த வாரம் வழங்கியுள்ளது என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. த பொட்டம்லைனின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 780 views
-
-
எதிர்வரும் நவம்பர் 18 ஆம் நாள் நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தை கலைத்துவிட அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எண்ணி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 592 views
-
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிரபல வர்த்தகர் ஒருவரும் குருநகரைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-