ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
வங்காள விரிகுடாவில் ஒரு படை ஒத்திகை இலங்கைத்தீவின் எதிர்காலம் -புரட்சி (தாயகம்)- வருகின்ற செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவானது பாரிய கடற்படை ஒத்திகை ஒன்றினை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வங்களா விரிகுடாவில் மேற்கொள்ளவுள்ளது. ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த போர் ஒத்திகையில் இந்தியா தவிர அமெரிக்கா, யப்பான், சிங்கப்ப+ர் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன. அமெரிக்காவின் இரண்டு அணு ஆயுத விமானம் தாங்கிக் கப்பல்களான ருளுளு நிமிட்ஸ், ருளுளு கிற்றி ஹோக் மற்றும் இந்தியாவின் ஐNளு விராட் உட்பட இருபது வரையிலான கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கவுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இதேபோன்ற ஒத்திகையொன்று யப்பானிய கடற்பரப்;பில் மேற்கொள்ளப்பட்டது. இந்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
மக்கள் விரோத செயற்பாடுகளின் உறைவிடமாக மாறிவரும் இலங்கை [01 - September - 2007] காலகண்டன் ஒரு காலத்தில் நல்ல பல விடயங்களுக்காக உலக நாடுகளில் பெயர் பெற்று விளங்கிய இலங்கை இன்று தீய விடயங்களினதும் மக்கள் விரோத செயற்பாடுகளினதும் இருப்பிடமாகி பெயர் மங்கி வரும் நாடாகக் காட்சி தருகின்றது. முப்பது வருட இன முரண்பாட்டு யுத்தம் அரசியல் தீர்வு மறுக்கப்பட்ட நிலையில் தொடரப்படுகின்றது. அதன் எதிர் விளைவுகள் சகல துறைகளிலும் பாதக நிலைமைகளைத் தோற்றுவித்து நிற்கின்றமை இன்றைய யதார்த்தமாகும். யுத்த அழிவுகள், இடப் பெயர்வுகள் மட்டுமன்றி அன்றாடம் கொலைகளும் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களும் பாரிய மனித உரிமை மீறல்களாகத் தொடர்கின்றன. அதேவேளை பொருளாதார நெருக்கடிகளும் வாழ்க்கைச் செலவி…
-
- 0 replies
- 929 views
-
-
தொண்டர் அமைப்புப் பணியாளர்களை போராளிகளாகப் பார்க்கும் அரசுகள்: "ரொய்ட்டர்ஸ்" [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 10:36 ஈழம்] [பி.கெளரி] இனப்பிரச்சினை நிகழும் நாடுகளில் பணியாற்றும் தொண்டர் அமைப்புப் பணியாளர்களைப் போராளிகளாகவே அரசாங்கங்கள் சந்தேகிக்கின்றன என்று அனைத்துலக செய்தி ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்சிற்காக நேற்று வெள்ளிக்கிழமை (31.08.07) பீற்றர் ஆப்ஸ் எழுதிய செய்தி ஆய்வின் தமிழ் வடிவம்: தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்கள் தம்மை ஒரு நடுநிலையாளர்களாகவே கருதுவதுடன், மிகவும் முனைவாக்கப்பட்ட களமுனைகளில் உதவிகளை வழங்கி வருகின்றனர். எனினும் அவர்கள் ஒரு தரப்பிற்கு சார்பானவர்கள் என்றே குற்றம் சுமத்தப்படுகின்றனர். அதனால் அவர்களின் நடவட…
-
- 1 reply
- 1.1k views
-
-
மன்னார் மதவாச்சியில் காடொன்றில் ஆயுதங்கள் மீட்பு வீரகேசரி இணையம் மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள காடொன்றிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் சில மீட்க்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இச்சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.. நேற்று இரவு 9.30 மணிமுதல் இன்று காலை 4 மணிவரை குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள் 12 தோட்டாக்கள் என்பன மீட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் மெலும் தெரிவித்தனர்.. அதேவேளை மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் பாதுகாப்பு படையினர் பெரு தொகையான அயுதங்கள் வெடிப்பொருட்களை மீட்…
-
- 1 reply
- 1.8k views
-
-
பிரித்தானிய உள்துறை அமைச்சு ஏற்பாடு பிரிட்டனின் அகதி அந்தஸ்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இளவாளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இலங்கைக்குத திருப்பி அனுப்ப பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைக்குத திரும்பி அனுபினால், உயிர் அச்சுறுததலுக்கு ஆளாக நேரிடும், எனவே தம்மை திருப்பி அனுப்ப வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரதப் போரட்டம் நடத்திய இளவாலையைச் சேர்ந்த ஜூட் கிறிஸ்டி என்ற இளைஞரே நாடுகடத்தப்பட உள்ளார். எதிர்வரும் செவ்வாய்கிழமை அவரை நாடு கடத்தத் தேவையான பயண ஏற்பாடுகளை உள்துறை அமைச்சு செய்துள்ளது. ஜூட் கிறிஸ்டியை நாடு கடத்துவதற்காக அவருக்கான பயணச்சீடட்டு பயணப்பதிவு ஆகியவற்றை அந்த அமைச்சு பூர்த்தி செய்து விட்டது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆடை ஏற்றுமதிக்கான வரி விலக்கு ரத்தாகும்? இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் அமைதித்தீர்வு காண்பதிலும், நாட்டில் மனித உரிமைகளைப் பேணுவதிலும் கொழும்பு அரசு பொறுப்புணர்வோடு செயற்படவில்லை என்று அதிருப்தி கொண்டிருக்கும் ஐரோபிய ஒன்றியம், இது தொடர்பான தனது அதிருப்தியையும் விசனத்தையும் இலங்கைக்கு உணர்த்தும் விதமாக அழுத்தம் ஒன்றை இலங்கை மீது பிரயோகிக்கும விதத்திலும் சில நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிகின்றது. பெரும்பாலும் வர்த்தக விவகாரங்கள் தொடர்பான சில வரிச்சலுகைகளை விலக்கி, இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்க அது தீர்மானிப்பதற்கு, வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன எனக் கூறப்படுகின்றது. இலங்கையின் பெரும் அந்நிய செலவாணி வருமானம் இப்போது ஆடைத…
-
- 0 replies
- 1.2k views
-
-
சனி 01-09-2007 04:45 மணி தமிழீழம் [மயூரன்] வாழைச்சேனையில் ஆயுதக்குழுக்கள் கடைக்கு தீவைப்பு வியாழன் இரவு மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தியாவெட்டுவான் பகுதியில் இருகடைகளுக்கு இனம்தெரியாத ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் தீவைத்துள்ளதாக தெரியவருகிறது. இத்தீயினால் நான்கு கட்டடங்கள் முற்றாக நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. இவ் கடை உரிமையாளர்கள் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை வழமையாக கடைகளை திறந்திருப்பதாகவும் இவர்கள் கடையை மூடியபின் இவர்களது கடைக்கு தீவைத்துள்ளதாக தெரியவருகிறது நன்றி பதிவு.
-
- 0 replies
- 761 views
-
-
அதிகமான காணாமல் போதல்களுக்கு இராணுவமும், கருணா குழுவுமே காரணம்: அனைத்துலக மன்னிப்பு சபை [வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007, 20:42 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் பொதுமக்கள் காணாமல் போன சம்பவங்களில் அதிகமானவை சிறிலங்கா இராணுவத்தினராலும் அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டவைதான் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 2006 ஆம் ஆண்டு குறைந்த பட்சம் 1,000 பேர் காணாமல் போனதாக பதிவுகள் கூறும் நிலையில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக ஓகஸ்ட் மாதம் மட்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 21 பேர் காண…
-
- 1 reply
- 842 views
-
-
ஜனாதிபதி மஹிந்த சந்திரிகாவுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்த அலவி முயற்சிஎதிர்வரும் செவ்வாயன்று சந்திப்புக்கும் ஏற்பாடு வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மேல் மாகாண சபை ஆளுனர் அலவி மௌலானா ஈடுபடவுள்ளதாகவும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முன்னாள் ஜனாதிபதியை ஆளுனர் சந்தித்து பேச்சுவாத்தைகளை நடத்தவுள்ளதாகவும் நம்பத்தக்தகுந்த அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இவ்விடயம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது, நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவுடன் மேல் மாகாண சபை ஆளுனர் பல முறை தொலைபேசி மூலம்…
-
- 0 replies
- 900 views
-
-
ஒட்டுக் குழுத் தலைவரின் பாசிசப் படுகொலைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன!!! ஜ வெள்ளிக்கிழமைஇ 31 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ ஈ.பி.டி.பி. ஒட்டுக் குழுவிலிருந்து வெளியேறி தலைமறைவாக உள்ள கிருபன் வெளியிடும் தகவல்கள். டக்ளஸ் ஆரம்பத்தில் கொழும்புக்கு வரும்போது வெறும் பத்துப் பேர் வரையே அவனுடன் இருந்தனர். கொழும்பில் உள்ள பிற ஒட்டுக்குழுக்களில் இருந்த முன்னை நாள் உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு உள் ஊரில் ஆட்களைத் திரட்டியுள்ளான். இவ்வாறு திரட்டுபவர்களுக்கு அரசு தரும் கூலிப் பணம் பத்தாயிரம் ரூபா தருவதாகக் கூறி மலையகப் பகுதிகளிலும், 1991 க்குப் பின் தீவுப்பகுதிகளிலும், 1994 இல் இடம் பெயர்ந்த முகாம்களிலும் ஆட்களைச் சேர்த்துள்ளான். இதன்போது இணையும் ஆட்களில் எல்.ரி.ரி. ஆட்களும் இருக்கக…
-
- 1 reply
- 2.4k views
-
-
வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டமெதுவும் இல்லை மலேசியாவில் போகொல்லாகம அறிவிப்பு வீரகேசரி நாளேடு வடக்கிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டமெதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.மலேஷியாவிற
-
- 1 reply
- 938 views
-
-
யாழில் மீண்டும் சிறப்பு அடையாள அட்டை [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 15:42 ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ்ப்பாணத்தில் சிறப்பு அடையாள அட்டைகள் மீண்டும் வழங்கப்பட உள்ளன. இது குறித்த கலந்துரையாடல், யாழ். மாவட்ட இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் உதவி அரசாங்க அதிபர் ஆகியோர்களுக்கு இடையே பலாலி படைத்தளத்தில நடைபெற்றது. யாழ்ப்பாணத்தை 1996 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் வலிகாமம் உட்பட ஏனைய பகுதிகளுக்கு திரும்பிய போது சிறப்பு அடயாள அட்டைகள் வழங்கப்பட்டன. 12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் முதியவர்கள், நோயாளிகள் என்ற வேறுபாடுகள் இன்றி சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது ம…
-
- 2 replies
- 980 views
-
-
மஹிந்த சிந்தனை மீது நம்பிக்கைவைத்த மக்கள் தற்போது ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர் ஐ.தே.க. தெரிவிப்பு வீரகேசரி நாளேடு மஹிந்த சிந்தனை மீது நம்பிக்கை வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்கள் தற்போது புதிய தேர்தலான்றுக்காகவும் ஆட்சி மாற்றத்துக்காகவும் காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போதைய அரசாங்கத்தில் ஊழல், வீண்விரயம் மற்றும் மோசடி அதிகரித்துவிட்டது. திட்டங்கள் மற்றும் குறிக்கோள்கள் இன்றி அரசாங்கம் செயற்படுகின்றது. பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியில் நாடு திண்டாடுகின்றது. தோல்வியடைந்த மற்றும் அராஜகமான நிருவாகமே தற்போது நாட்டில் இடம்பெறுகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பேச்சாளரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க த…
-
- 0 replies
- 731 views
-
-
மீண்டும் கருணா - பிள்ளையான் குழுக்களிடையே மோதல்;: மார்க்கன் அவர்களின் மைத்துனருமான முரளி என்பவர், கருணாவின் கொலைக்கருவி வீரா என்பவரால் பொதுமக்கள் மத்தியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். ஜ புதன்கிழமைஇ 29 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இன்று காலை எட்டு முப்பது மணியளவில் திருகோணமலையில் உள்ள அண்புவலிபுரம் என்னும் இடத்தில், பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஆரம்பகால உறுப்பினரும், முக்கியஸ்தர் மார்க்கன் அவர்களின் மைத்துனருமான முரளி என்பவர், கருணாவின் கொலைக்கருவி வீரா என்பவரால் நயவஞ்சகமாக அழைத்துவரப்பட்டு பொதுமக்கள் மத்தியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இப்பொழுது கருணா குழுவினர், பிள்ளையான் குழுவினரின் முக்கிய உறுப்பினர்களை கொன்றொழித்து வருகிறார்கள். வீரா. முரளியை சுட்டுக்கொண்றத…
-
- 1 reply
- 3.1k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரின் மன்னாரில் உள்ள பிரதான படைத்தளமான தள்ளாடி முகாம் மீது இன்று 6 மணி நேரத்துக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இன்று புதன்கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறனர். இத்தாக்குதல்கள் இன்று இரவு 10 மணிக்கும் மேலாக தொடர்கின்றன. சிறிலங்காப் படைத்தளத்துக்குள் பலத்த அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்புகள் உறுதி செய்கின்றன. இத்தாக்குதல்கள் தொடங்கிய நேரம் தொடக்கம் தள்ளாடி படைத்தளத்தில் இருந்தும் அதனை அண்மித்த சிறிலங்கா இராணுவப் படைத்தளங்களில் இருந்தும் படையினரும் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர் நன்றி புதினம். …
-
- 5 replies
- 2.7k views
-
-
களமுனைக் கடற்புலிப் போராளிகளுடன் மக்கள் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2007, 15:35 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை மாதர் சங்கத்தினரும் மக்களும், மாத்தளன் மாதர் சங்கத்தினரும் மக்களும் இணைந்து கடற்புலிகளின் களமுனைப் போராளிகளைச் சந்தித்து கலந்துரையாடி உலர் உணவுப் பொருட்களை வழங்கினர். போராளிகளுக்கு பிற்பகல் உணவும் வழங்கி மகிழ்வடைந்தனர். உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட கடற்புலிகளின் சாள்ஸ் படையின் நிர்வாகப் பொறுப்பாளர் உமாராம், உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்களுடைய போராளிகளைப் பார்ப்பதற்காக நீண்ட நேரமாகக் காத்திருப்பதனைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மக்களுடைய சுதந்திர…
-
- 0 replies
- 1.3k views
-
-
அம்பாறையில் விடுதலைப் புலிகளுடன் இணைய வந்த 18 வயதிற்கும் குறைவான 14 பேரை, ஐ.நா.சிறுவர் நிதியத்திடம் (யுனிசெவ்) ஒப்படைப்பதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை அழைத்து வந்த போது அவர்கள் மீது விஷேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பொத்துவில் - திருக்கோவில் வீதியில் தாண்டியடிப் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; அம்பாறையில் அண்மைக்காலத்தில் தங்களுடன் இணைந்த 18 வயதுக்கும் குறைவான 14 சிறுவர்களை (9 ஆண்கள், 5 பெண்கள்) யுனிசெவ்விடம் ஒப்படைக்க புலிகள் முன்வந்தனர். இது தொடர்பாக ்யுனிசெவ்ீ அதிகாரிகளுக்கும் ஒரு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. அவர்களும் இந்த சிறுவர்களை இன்று…
-
- 7 replies
- 2k views
-
-
மக்கள் மத்தியில் மேலோங்கும் விரக்தி [31 - August - 2007] வாழ்க்கைச்செலவு தொடர்ந்து கட்டுமீறி அதிகரித்துக்கொண்டே போகின்றது. குழந்தைகள் பால்மா முதல் சீனி, கோதுமை மா உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பத்துலகுணவர்தன எப்போதும் போலவே புள்ளிவிபர அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். கூட்டுறவுக்கடைகளையும் பட்ஜட் ஷொப்களையும் மட்டும் காட்டி அங்கு நியாய விலைக்கு பொருட்கள் கிடைப்பதாகக் கூறி வருகின்றார். ஆனால், நாட்டில் எத்தனை இடங்களில் பட்ஜட் ஷொப்களும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களும் காணப்படுகின்றன என்பதைப்பற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும். கிராமப்புறத்து மக்களால் நகர்ப்புறங்களுக…
-
- 0 replies
- 1.5k views
-
-
வன்னியை தாக்கப் போவதாக அரசு கூறுவது புதிய விடயமல்ல * புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் வன்னியை விரைவில் கைப்பற்றுவோமென்ற அரசின் சவாலை எதிர்கொள்ளத் தாங்கள் தயாராயிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கைப் போல் வன்னியையும் விரைவில் கைப்பற்றுவோமென கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இது பற்றி கூறுகையிலேயே, வன்னி மீது படையினர் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்ளத் தாங்களும் தயாராயிருப்பதாக புலிகள் கூறியுள்ளனர். இதுபற்றி புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறுகையில், வன்னியை தாக்கப் போவதாக அரசு கூறுவது புதிதான ஒன்றல்ல அண்மைக்காலமாக அவர்கள் இவ்வாறே கூறி வருகின்றனர…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐ.தே.க.வுக்கு ஆதரவாக பிரிட்டன் செயற்படுகிறது * ஆட்சி மாற்றத்தை எதிர்பார்ப்பதாக அரச சமாதான செயலாளர் நாயகம் புதுடில்லியில் குற்றச்சாட்டு இலங்கையில் `ஆட்சி மாற்றத்தை' பிரிட்டன் எதிர்பார்த்திருப்பதாகவும் ஆளும் கட்சியிலும் பார்க்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை பிரிட்டன் கொண்டிருப்பதாகவும் அரச சமாதான செயலகச் செயலாளர் நாயகம் ரஜீவ விஜயசிங்க தெரிவித்திருக்கிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அவர்கள் (பிரிட்டன்) மகிழ்ச்சியடைவார்களென கூறியிருக்கும் ரஜீவ விஜயசிங்க, மேற்குலகின் மனித உரிமைக் குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களைச் சேர்ந்த சில பிரிவினர் மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று வியாழக்கிழமை தெரிவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
வியாழன் 30-08-2007 03:39 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பில் பிரித்தானியா தூதரகத்தின் விசா வழங்கும் பிரிவு விரைவில் சென்னைக்கு மாற்றம்? சிறீலங்காவில் பிரித்தானியா தூதரகம் தமது விசா வழங்கும் பிரிவினை சென்னைக்கு மாற்ற இருப்பதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் தூதரக பேச்சாளர் ஜோன் கொலி கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இம் மாற்றம் தொடர்பில் இறுதியான முடிவு எடுத்தபிற்பாடு அறிவிக்கப்படும் எனவும் தற்போது இது பரிசீலனையில் இருப்பதாகவும் அறியமுடிகிறது. இதுதொடர்பில் மேலதிக தகவல்களை கூற மறுத்த அவர் மேலதிக விபரங்கள் செப்ரம்பர் மாதமளவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். நன்றி பதிவு.
-
- 2 replies
- 1.1k views
-
-
புதன் 29-08-2007 16:35 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகள் பிரித்தானியாவில் காவல்துறை பயிற்சி பெற்றதாகக்கூறி அரசு விசாரணை சிறீலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளின் 12 உறுப்பினர்கள் வட அயர்லாந்துக்குச் சென்று காவல்துறைப் பயிற்சி பெற்றிருப்பதாக, கொழும்பில் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும், நோர்வே அரசின் அனுசரணையும் இருந்ததாகவும் அரசாங்கத்தின் ஆங்கில ஊடகம் மேலும் குற்றம் சாட்டுகின்றது. திருகோணமலையில் அண்மையில் கைது செய்யப்பட்ட 29 அகவையுடைய காளிமுத்து வினோத்குமார் என்பவரும் வட அயர்லாந்தில் பயிற்சி பெற்ற 12 பேர…
-
- 3 replies
- 1.7k views
-
-
கிழக்கை மீட்டுவிட்டோம் என்று மகிந்தர் இன்று தம்பட்டம் அடிப்பது பிரபாவின் கண்ணைக் கொண்டுவந்ததாக ஜே.ஆர். கூறியதற்கு ஒப்பாகும்! எஸ்.பி. திஸாநாயக்க சொல்லுகிறார் கிழக்கை மீட்டுவிட்டோம் என மகிந்தர் இன்று தம்பட்டம் அடிப்பது, வடமராட்சியை மீட்டபோது பிரபாகரனின் கண்ணைக் கெண்டு வந்துவிட்டோம் என்று அன்று ஜே.ஆர். பெருமைப்பட்டமைக்கு ஒப்பானதாகும். ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸநாயக்க இப்படிக் கூறியுள்ளார். பதுளையில் நேற்று மாலை நடந்த அர சுக்கு எதிரான பொதுக் கூட்டத்தில் பேசுகை யில் அவர் இப்படிக் கூறினார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது: கிழக்கின் வெற்றியை மஹிந்தர் கொண் டாடுவது இந்த நாட்டை மீண்டும் ஒரு யுத் தத்துக்கு அழைத்துச் செல்வதாகவே கருத வேண்டியுள்ளது.…
-
- 0 replies
- 1.6k views
-
-
அரங்கேறும் அராஜகங்கள் குறித்து புள்ளிவிவரங்கள் தரும் அதிர்ச்சி காணாமற்போனோருக்கான சர்வதேச தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி இலங்கை தொடர்பாக வெளியான புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தருபவையாக அமைந்துள்ளன. சட்ட, சமூக மையம், மக்கள் கண்காணிப்புக்குழு, சுதந்திர ஊடக இயக்கம் ஆகியன இந்தப் புள்ளிவிவரங்களைத் திரட்டி வெளியிட்டிருக்கின்றன. அதன்படி இலங்கையில் இந்த வருடத்தில் 547 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள
-
- 0 replies
- 1.3k views
-
-
நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சியில் பிரிட்டன் தூதரகம் ஈடுபடுகிறது வீரகேசரி நாளேடு இன நெருக்கடிக்கு தீர்வு என்ற பெயரில் திட்டமொன்றினை தயாரித்துக் கொண்டு எமது நாட்டின் உள்விவகாரங்களில் பிரித்தானியா தலையிட்டுள்ளது. பலமிழந்து வரும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பலத்தினை வழங்கி நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சி திட்டத்தினை இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகம் மேற்கொண்டுள்ளது என்று ஜே.வி.பி. யின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார். பிரித்தானியாவின் சூழ்ச்சியினை அறிந்தும் அரசாங்கம் கண் தெரியாத குருடனாக செயற்படுகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ இதனை பயன்படுத்தி ஆட்சிக்குவர முயற்சிக்கின்றது என்றும் அவர் மேலும் கூறினார்…
-
- 4 replies
- 1.7k views
-