ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
இந்திய விமானப் படைத் தளபதிகளின் மாநாடு புலிகளின் வான்பலம் குறித்தும் ஆராய்வர் இந்தியாவின் தென்பிராந்திய விமானப்படைத் தலைமையகத்தில் எதிர்வரும் 16 ம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை விமானப்படைத் தளபதிகளின் மாநாடு இடம்பெறவுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்பலம் உட்பட தெற்கு குடாவில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள், சவால்கள் தொடர்பான நடவடிக்கைகள்,இவை தொடர்பாக புரிந்துகொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது. இந்த மூன்று நாள் மாநாட்டில் இந்திய விமானப்படைத் தளபதி பாலி எஸ். மேகர், உதவி தளபதி பி.என். கோகவே மற்றும் 7 விமானப்படை கட்டளைத்தளபதிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். அத்துடன், கொச்சியிலுள்ள இந்திய தென்பிராந்திய கடற்படைத்தளபதிகள…
-
- 3 replies
- 1.5k views
-
-
புதன் 15-08-2007 16:32 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கையில் 5700 பேர் காணாமல் போயுள்ளனர் - அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக 5700க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 30ம் நாள் அனைத்துலக காணமல் போனோர் தினம் அனு~;டிக்கபடவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. 2005ம் ஆண்டு தொடக்கம் வடக்கு - கிழக்கு , கொழும்பு உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் சிறீலங்கா அரச படைகளாலும் ஆயுதக்குழுக்களாலும் கடத்தப்பட்டுள்ளனர் என அனைத்துலக மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. சிறீலங்காப் படைகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரே அதிகமாக காணமல் போவதா…
-
- 2 replies
- 987 views
-
-
வியாழன் 16-08-2007 04:53 மணி தமிழீழம் தெற்கு ஆசிய மனித உரிமைகள் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு சிறீலங்கா இராணுவமும் காவல்துறையினரும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அனுமதிவழங்கிவருவதாக குற்றம்சுமத்தியுள்ளார்கள். மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் அவர்களது நடமாட்டங்கள் இராணுவத்தால் அவதானிக்கப்படுவதாகவும் காவலரங்களில் அவர்கள் படையினரால் சோதனையிடப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த புரவில் வாழும் சிங்கள கிராம வாசிகளும் சுற்றிவர தமிழ்கிராமங்கள் இருப்பதால் அச்சத்துடனே பிரயாணங்கள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளதாக அவ்அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மக்களது வாழ்க்கை இராணுவமயப்படு…
-
- 0 replies
- 736 views
-
-
வியாழன் 16-08-2007 04:27 மணி தமிழீழம் சிறீலங்கா இராணுவத்தினர் யாழ் கரையோரப்பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவலாம் என அஞ்சி முட்கம்பிகளால் ஆன வேலிகளும் மேலதிக காவலரண்களும் பதுங்கு குழிகளும் அமைத்து வருவதாக தெரியவருகிறது. யாழ்கோட்டை பகுதியில் இருந்து காக்கைதீவு, நாவாந்துறை, குருநகர், பொம்மைவெளி வரையான பகுதிகளிலேயே இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பனைமரங்களால் ஆன குத்திகளை யாழ் குடாநாட்டின் ஏனையபகுதிகளில் இருந்து கொண்டு சென்று பதுங்கு குழிகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்துவதாகவும் குடிசார்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இரவில் மீன்பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த இரு தினங்களாக கடற்கரைகளில் பொதுமக்கள் நடமாடவும் தட…
-
- 0 replies
- 790 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 14.08.2007 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவன்
-
- 1 reply
- 1.4k views
-
-
சனிக்கிழமை, 11 ஆவணி 2007 தென் தமிழீழத்தில் கருணா குழுவின் அராஜகம் அட்டகாசம் என்று அரங்கேறிவரும் நிலையில் வட தமிழீழம் வவுனியாவில் மற்றொரு துணை ஆயுதக்குழு நகரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடும் பிரயத்தனங்களைச் செய்து வருகின்றது. இவர்கள் கரங்களில் ஆயுதங்கள் தாராள மயப்படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயக அமைப்பு என்ற போர்வைக்குள் இவர்கள் செய்யும் கொடுமைக்கு அளவே இல்லை என்று சொல்ல முடியும். அதை விட, புலிகள் வரி அறவிடுகின்றனர், கப்பம் பெறுகின்றனர் என்று ஒப்பாரி வைத்து ஓலமிட்ட இந்த அமைப்பின் தலைவர்கள் இன்று அதை தாமும் செய்ய முனைந்துள்ளனர். வவுனியா நகரிலிருந்து ஹெரவபொத்தானை வீதியில் அமைந்திருக்கின்றது றம்பைக்குளம், கோவில்குளம் என்பன. வவுனியாவில் உள்ள உயர்பாதுகாப்பு வலயமான யே…
-
- 0 replies
- 967 views
-
-
புதன் 15-08-2007 19:24 மணி தமிழீழம் ஆசிய பிராந்திய ஆதிக்கத்திற்கான நகர்வுகளில் அமெரிக்கா தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. மிக நுட்பமாக தமக்கு சார்பான அரசுகளை ஆசிய பிராந்தியத்தில் உருவாக்குவதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இத்தாலிய பெண்மணியான சோனியா காந்தியை மிக இலகுவாக தனது வலைக்குள் விளவைத்த அமெரிக்கா, அவருடை நம்பிக்கைக்கு பாத்திரமானவரும் தீவிர வலதுசாரிப் போக்குடையவருமான மன் மோகன் சிங்கை இந்தியாவின் பிரதமராக்கி இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை தனதாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த நகர்வு ஆசிய அரசியல் அரங்கில் அமெரிக்கா கண்டுள்ள மிகப்பெரிய வெற்றி என குறிப்பிடப்படுகின்றது. ஏற்கனவே அமெரிக்க விசுவாசியான பாகிஸ்தான் அதிபர் பேர்வஸ் முசரப் தெற்காசியாவின்…
-
- 0 replies
- 895 views
-
-
புதன் 15-08-2007 19:48 மணி தமிழீழம் யாழ் போதனா மருத்துவ மனைக்கு முன்;னால் வைத்து இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்று காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்கு முன்னர் உள்ள ஈ.பி ஆர்.எல்.எப் முகாமின் முன்னால் கப்பலில் திருமலைக்குச் செல்ல காத்திருந்த வேளையில் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் சண்டிலிப்பாய் வடக்கைச் சேர்ந்த திருநாமம் மனோகரன் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரை உந்துறுளியில் வந்த சிவில் உடை தரித்த இராணுவப் புலனாங்வாளர்களும் மற்றும் ஈ.பி.டி.பி யினருமே கடத்தியதாக நேரில் கண்ட பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் கூட நின்ற சகோதரியினால் முறையிடப்பட்டுள்ளது. -நன்றி பதிவ…
-
- 0 replies
- 906 views
-
-
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தினால் பலி கொள்ளப்பட்ட செஞ்சோலை சிறார்கள் மற்றும் பணியாளர்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வுகள் கடந்த வருடம் தாக்குதல் நடைபெற்ற பின்னரான பதிவுகள்
-
- 0 replies
- 1.5k views
-
-
சந்திரிகாவை கண்காணிக்க மகிந்த உத்தரவு சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவை தொடர்ந்து கண்காணிக்குமாறு மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் த மோர்னிங் லீடர் நாளேடு வெளியிட்டுள்ள செய்தி விவரம்: ரணில் விக்கிரமசிங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரினால் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படும் பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையை கண்டு கலங்கிப் போயுள்ள மகிந்த ராஜபக்ச அரசிற்கு, முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவின் வரவும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் இருந்து எமிரேட்ஸ் வானூர்தியில் முன்னாள் அரச தலைவர் சந்திரி;கா குமாரதுங்கா கடந்த ஞயிற்றுக்கிழமை கொழும்பை வந்து அடைந்தார். அதனை தொடர்ந்து கட்டு நாயக்கா அனைத்துலக வானூர்…
-
- 3 replies
- 1.2k views
-
-
புதன் 15-08-2007 14:48 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவில் வெளிநாட்டுப் படைகளின் தலையீடு - அரசு அச்சம் கொள்வதாக கொழும்பு ஊடகம் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை அனைத்துலக நாடுகள் கண்டித்துவரும் நிலையில், வெளிநாட்டுப் படைகளின் தலையீடு நிகழ வாய்ப்பு இருப்பதாக, அரசு அச்சப்படுவதாக கொழும்பின் ஆங்கில ஏடு ஒன்று தெரிவிக்கின்றது. சிறீலங்காவில் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பணியாற்ற முடியாத நிலை காணப்படுவதாக ஐ-நா துணைப் பொதுச் செயலாளர் கலாநிதி ஜோன் ஹோம்ஸ் வெளியிட்ட கருத்து, மூதூரில் ஏ.சி.எஃப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை பற்றி அவுஸ்திரேலிய நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கை, மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளால் இந்த நிலை தோன்றியுள்ளதாக அரசு கூறியுள…
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : 2007-08-15 தெற்கில் தோற்றும் மாற்றுத் தரப்பு தமிழர்களுக்கு பயன் ஏதும் தருமா? தென்னிலங்கையில் மீண்டும் ஒரு தடவை சந்திரிகா புராணம் பாடும் சூழல் எழுந்திருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, சுமார் 21 மாதங்களாக அரசியல் அஞ்ஞாதவாசம் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, நாடு திரும்பியிருக்கின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கிளர்ந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுப் பிரிந்து , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவை உருவாக்கியிருக்கும் மங்கள சமரவீர ஸ்ரீபதி சூரியாராய்ச்சி அணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆசீர்வாதமும் ஆதரவும் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது. மஹிந்த அரசை வீழ்த்துவதற்கு மங்கள ஸ்ரீபதி அணி, …
-
- 1 reply
- 805 views
-
-
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2007, 06:35 ஈழம்] யாழ். குடாநாட்டில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாலும் அதிலும் குறிப்பாக இளைஞர்களின் பாதுகாப்பு பெரும் ஆபத்தான நிலையை அடைந்து வருவதையும் அடுத்து குடாநாட்டை விட்டு வெளியேறி வரும் பெருமளவான குடும்பங்கள் கொழும்பில் தஞ்சமடைந்து வருவதாகவும் தமது பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப முயற்சித்து வருவதாகவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் வெளியாகி உள்ள செய்தி: தமது விடுதியில் தங்கியிருப்பவர்களில் அரைப்பங்கிற்கும் மேற்பட்டவர்கள் யாழ். குடாநாட்டில் இருந்து வந்தவர்கள் எனவும் அவர்களில் பலர் தமக்கும் தமது இளம் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு தேடி வந்துள்ளதாகவும்…
-
- 1 reply
- 895 views
-
-
27 வருடங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை [15 - August - 2007] -த. மனோகரன்- 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அதாவது இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன் இரத்தினபுரி மாவட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட இன வெறிப் பயங்கரவாத வரலாற்றுப் பதிவை மீள நோக்கும் நினைவு நாளாக இந்நாள் அமைகின்றது. ஆம். அமைதியாக நிம்மதியாக இருந்த இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களைத் திடீரென்று கிளம்பிய ஆழிப் பேரலை அனர்த்தத்தைப் போன்று 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தோன்றிய இன வெறிப்பயங்கரவாதம் தாக்கி நிலைகுலைய வைத்தது. 1958 இல் கிளம்பிய இவ்வாறான பயங்கரவாதம் தோட்டப்பகுதி வாழ் தமிழ் மக்களைத் தாக்காத போதும் 1981 ஆம்…
-
- 0 replies
- 799 views
-
-
அக்ஷன் பேம் நிறுவனத்தின் கவனயீனமே அவர்களின் பணியாளர்கள் கொல்லப்படுகதற்கு காரணம் : சிறிலங்கா அரசு அக்ஷன் பேம் நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேரும் படுகொலை செய்யப்பட்டமைக்கு அந்த நிறுவனத்தின் கவனயீனம் மற்றும் பொறுப்பற்ற தன்மையே காரணமென சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென சிறிலங்கா அரசாங்க சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க, மனித உரிமைகள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு பக்தாத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற மோசமான சம்பவம் மனித நேயப் பணியாளர்களின் படுகொலை என நோர்வேயின் அனுசரணைப் பணியில் செயற்படும…
-
- 1 reply
- 925 views
-
-
செவ்வாய் 14-08-2007 22:44 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கில் சிங்கள குடியேற்றத்தின் ஒரு கட்டம் - வாகரையில் ஆதிவாசிகள் வாக்குரிமையுடன் நாடோடிகள், அல்லது ஆதிவாசிகள் என்றழைக்கப்படும் வாக்குரிமையற்ற சமூகத்தினருக்கு வாக்குரிமை வழங்கி, மட்டக்களப்பு வாகரையில் குடியேற்றுவதற்கு அரசினால் திட்டமிடப்பட்டுள்ளது. சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ இதற்கான அனுமதியை நாடோடி சமூகத்திற்கு வழங்கியிருப்பதாக நம்பகமாகத் தெரிய வருகின்றது. வாகரையில் குடியேறுவதற்கு நாடோடி சமூகத்தினரும் இணங்கியுள்ளனர். மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், வாக்குரிமை அற்ற நாடோடிகளுக்கு வாக்குரிமை அளித்து வாகரையில் குடியேற்றுவதன் மூலம், தமிழர்களின் வாக்கு வீதத்தை சிதைப்பதற்கு சிங்கள …
-
- 3 replies
- 1.2k views
-
-
நெடுங்கேணியில் விமானத் தாக்குதல் நிஷாந்தி ஸ்ரீறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் இன்று காலை நெங்கேணி பகுதியில் வான் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் விடுதலைப்புலிகளின் மோட்டார் தாக்குதல் நடத்தும் மையமொன்றை விமானப்படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 6.40 மணியளவில் இவ் வான் தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் இதில் புலிகளிற்கு சேதம் ஏற்ப்பட்டிருக்கலாம் எனவும் தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீரகேசரி
-
- 2 replies
- 1.2k views
-
-
மீனவர்களின் பிரச்சினை தீர சந்திப்புகள் பயன் தருமா? -வே.தவச்செல்வன் பல்கலைக்கழக மாணவனின் படுகொலையுடனும் தொழிநுட்பக் கல்லூரி மாணவனின் படுகொலையுடனும் ஈபிடிபி கட்சித்தலைவர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக ஒட்டுக்குழு ஒன்றினால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த இணையத் தளத்தின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாக இருந்தாலும், வேறு சில அமைப்புக்கள் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்படுகொலையின் பின்னணியில் டக்ளஸ் தேவானந்தா தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. எது எப்படியோ டக்ளஸ் தேவானந்தா யாழ்பாணத்திற்கு வருகை தந்ததன் பின்னர் குடாநாட்டில் படுகொலைகள் மீண்டும் அதிகரித்து இருப்பதை எவரும் மறுக்க முடியாது. …
-
- 0 replies
- 755 views
-
-
Posted on : Tue Aug 14 8:26:37 EEST 2007 .முல்லை. - திருமலை கடற் பிராந்தியத்தில் கடற்படை - கடற் புலிகள் கடுஞ் சமர்! புலிகளின் தப்பிச்செல்லும் முயற்சி முறியடிப்பாம் கொழும்பு,ஓகஸ்ட்14 முல்லைத்தீவுக்கும் மற்றும் திருகோணமலைக்குமிடையே கொக்கிளாய், நாயாறு, புல்மோட்டை கடற்பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் இலங்கை அரசின் கடற்படைக்கும் இடையில் ஞாயிறு நள்ளிரவு முதல் நேற்று அதிகாலைவரை கடும் கடற்சமர் இடம்பெற்றிருக்கிறது. கிழக்குப் பிரதேசத்தில் சிக்குப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை கடல் வழியாக மீட்பதற்கு அந்த இயக்கம் எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், திருகோணமலையை அண்டிய கடற் பிரதேசத்தில் கடற்படையினர் மீது கடற்புலிகள்…
-
- 2 replies
- 3.4k views
-
-
போரியல் அறிவை எமது ஊடகங்கள் ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்? -பரணி கிருஸ்ணரஜனி- 05.08.2007 வீரகேசரி வாரப்பதிப்பில் 'அங்கீகரிக்கப்பட்ட கொசோவா விடுதலை அங்கீகரிக்கப்படாத தமிழர் போராட்டம்" என்ற தலைப்பில் நண்பர் இதயச்சந்திரன் எழுதிய கட்டுரை ஒன்று காணக்கிடைத்தது. தமிழ்நாதம் இணையத்தளத்தில் நான் எழுதியிருந்த கட்டுரையொன்றின் சில மேற்கோள்களை சுட்டிக்காட்டி எனது அக்கட்டுரைக்கான ஒரு எதிர் வினையாகவே நண்பர் இதயச்சந்திரன் தனது கட்டுரையை எழுதியிருந்தார். அவர் கூறும் எந்தக் கருத்துடனும் முற்று முழுதாக நான் முரண்படவில்லை. ஆனால் அவர் அந்தக் கட்டுரையை அமைத்திருக்கும் விதம் நான் அவர் கூற விரும்பும் கருத்துக்கு முரணானவனாகவும் அத்துடன் எனது 'தமிழ்நாதம்" கட்டுரை அந்த முரணையே…
-
- 1 reply
- 1k views
-
-
தீர்வு திட்டத்தினை தயாரிக்கும் சர்வகட்சி குழுவின் நடவடிக்கைகள் காலவரையறையின்றி ஒத்திவைப்பு வீரகேசரி நாளேடு இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சர்வகட்சி குழுவின் நடவடிக்கைகள் திடீரென காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.அமைச்
-
- 1 reply
- 889 views
-
-
நாடாளுமன்றம் அருகில் 5 தமிழ் இளைஞர்கள் கைது [செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007, 20:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நாடாளுமன்றத்திற்கு அருகில் 5 தமிழ் இளைஞர்களை சிறிலங்கா காவல்துறையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை செய்துள்ளனர். சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபு (வயது 27), ரஜனிகாந்த் (வயது 28), சதீஸ் (வயது 31), ஜோன்சன் (வயது 28), சஜி (வயது 27), ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள். அனைவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். முச்சக்கர வாகனத்தில் நேற்று இரவு அப்பகுதிக்கு சென்ற இவர்கள், இன்று அதிகாலை வரை மைதானத்தில் இருப்பதாக கிடை…
-
- 1 reply
- 801 views
-
-
புலிகள் ஜ.தே.க.வின் இறுதி இலக்கை பெற்றுக் கொடுக்க சர்வதேசம் முயற்சி வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினதும் இறுதி இலக்கைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச அமைப்புக்கள் சில முயற்சி செய்கின்றன. இதற்காகவே, அரசாங்கத்தின் மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுக்களை இந்த அமைப்புக்கள் முன்வைக்கின்றன. இதற்கு எதிராக அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த கருத…
-
- 1 reply
- 819 views
-
-
செவ்வாய் 14-08-2007 15:02 மணி தமிழீழம் [மயூரன்] பயங்கரவாதம் யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் தோற்கடித்து இறுதியில் அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் என பீரிஸ் கூறியுள்ளார். அத்துடன் பீரில் அஸ்ரிய மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றதுடன் நாட்டில் அரசியல் நிலைப்பாடுகளையும் எடுத்து விளக்கியுள்ளார். நன்றி : பதிவு ஐ.தே.கவில இருக்கிறபோது மனிசனுக்கு மண்டையில கெ…
-
- 7 replies
- 1.4k views
-
-
செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007, 20:29 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீதே சிறிலங்கா அரசாங்கம் போரை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்திய தாக்குதல் சம்பவமாக செஞ்சோலைப் படுகொலைச் சம்பவம் அமைந்திருந்தது என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வே.இளங்குமரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செஞ்சோலை சிறார்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வில் அவர் பேசியதாவது: தமிழினம் மீதான சிறிலங்கா அரசின் படுகொலைகள் மிக நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நீண்டகால படுகொலைகளில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத…
-
- 0 replies
- 923 views
-