ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
வடக்குகிழக்கு மக்கள் கொடூர ஆட்சிக்குபயந்து இந்தியாவுக்கு தப்பி ஓடுகின்றனர் வீரகேசரி நாளேடு தமிழர்கள் கடத்தப்படுதல், கப்பம் பெறப்படல் மற்றும் படுகொலை செய்யப்படும் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். யாழ்ப்பாணத்தில் தினமும் மூன்று இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் என்று சபையில் ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட எம்.பி. தி. மகேஸ்வரன் தெரிவித்தார்.வடக்கு, கிழக்கு மக்கள் இந்த கொடூர ஆட்சிக்கு பயந்து இந்தியாவுக்கு தப்பி ஓடுகின்றனர். தமிழர் கடத்தப்படுதல், கப்பம் பெறப்படல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த மௌனம் காப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தை எதிர்க்கட்சி சார்பாக நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மகேஸ்வரன்…
-
- 0 replies
- 924 views
-
-
இலங்கையிலிருந்து புறப்பட முன் தெரிவிப்பு கருணா அணி போன்ற துணைக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா உயரதிகாரி ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கின்றார். நான்கு நாள் விஜயமாக இலங்கை வந்திருந்த அவர் நேற்று இங்கிருந்து புறப்பட முன்னர் ஊடுகவியலாளர் மாநாடடிலும், ஊடகங்களுக்குத் தனித்து பேட்டியளித்த சமயத்திலும் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உயர் நிலை அதிகாரியன ஜோன் ஹோம்ஸ் நேற்று முற்பகல் ஊடுகவியலாளர் மாநாட்டில் கலந்து கொள்ள முன்னர் ஜனாதிபதியை சுமார் 15 நிமிட நேரம் குறுகிய காலம் சந்தித்துப் பேசினார். ஊடகவியலாளர் மாநாட்டிலும் அதற்கு முன்னர் உடகவியலாளர்களைத் தனித்துச் சந்தித்த போதும் ஹோம்ஸ் தெரிவ…
-
- 2 replies
- 899 views
-
-
மடு மாதா உற்சவத்தினை முன்னிட்டு மடு வீதியினை திறப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி இறுதி நேரத்தில் பயனளிக்கவில்லை. இதனால் மடு வீதியினை திறக்காது 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை உயிலங்குளம் பாதையை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மடு உற்சவத்தினை முன்னிட்டு மடு வீதியினை திறப்பதற்கு அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இணக்கம் தெரிவித்திருந்தன. இதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மடு வீதியில் இருதரப்பினரது பகுதிக்கிடையில் உள்ள சூனியப் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஏற்பட்ட சிக்கலையடுத்தே மடு வீதி திறக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மடு வீதியினை திறப்பதற்கு இணக்கம் தெரிவித்து மன்னார் ஆயர் இராயப…
-
- 0 replies
- 757 views
-
-
அமெரிக்காவும் சீனாவும் தென்கிழக்காசியாவில் (புத்தளத்தில்) சந்திப்பு. ஜ வெள்ளிக்கிழமைஇ 10 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இலங்கையின் புத்தளத்தில் இரண்டு துருவங்களில் சவால் விட்டு வளந்துவரும் வல்லரசுகள் புத்தளம் பகுதியில் இணைகின்றன. இலங்கையின் புத்தளப் பகுதியில் அமெரிக்கா ஜெ.பிபி என்ற வானொலி திட்டத்தின்கீழ் அமெரிக்காவின் குரல் ஒலிபரப்பு என்று கூறிக்கொண்டு வெளி நபர்கள் எவரும் உள்நுழைய விடாது ஒரு சுhனிய பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து அதன் ஊடாக பல தொடர்பாடல் கண்காணிப்பகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது அதற்கு அண்மித்த பிரதேசத்தில் சீனா தனது நாட்டின் செயற்கை அனல் மின் நிலையத்தை அமைப்பதாக கூறிக்கொண்டு உள் நழைந்துள்ளது. பொருளாதாரா வல்லரசாக அமெரிக்காவுடன் சர்வதேச சந்தையில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கைக் கைப்பற்றிய அரசு அங்கு அபிவிருத்தி செய்யாமல் படுவாங்கரையில் 33 இராணுவ முகாம்களை அமைத்து அழிவு விருத்தியிலேயே ஈடுபட்டு வருவதாக த.தே.கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேற்று நடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு :- கிழக்கைக் கைப்பற்றிய அரசு அங்கு இராணுவ ஆட்சியை நடத்துகின்றது. படுவான்கரையில் மாத்திரம் இப்பொது 33 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பாடசாலைகள், கோவில்கள், அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்களளின் காணிகள் போன்றவற்றை வளைத்துப் போட்டு இந்த இராணுவ முகாம்கள் அமைக்கபட்டடுள்ளன. கிழக்கு வீதிகள் அன…
-
- 0 replies
- 737 views
-
-
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிறிலங்கா இராணுவத்தினர் 60 பேர் உயிரிழந்திருப்பதாகவும், முப்படையினர் மற்றும் காவல்துறையினர் 223 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இராணுவத்தினர் குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ரட்ணசிறி விக்கிரமநாயக்க தாக்கல் செய்து பேசியதாவது: கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அங்கே காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் கிழக்கை கைப்பற்றியுள்…
-
- 1 reply
- 1k views
-
-
அனைத்துலக அளவிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி திரட்டலைத் தடுக்க தீவிரமாக முயற்சித்துவருகிறோம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமையன்று அவர் பேசியதாவது: ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டபோது புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக நான் விளக்கி கூறினேன். புள்ளி விபரங்கள், தகவல்களை வழங்கினோம். அதன் அடிப்படையிலே புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டும் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த ஒருவரும் கனடாவில் பிரசாரங்களை மேற்…
-
- 1 reply
- 972 views
-
-
ராடார்களை இந்தியா வழங்கியமை பயங்கரவாத யுத்தத்தினை ஊக்குவிப்பதாகும்: செ.கஜேந்திரன் [வியாழக்கிழமை, 9 ஓகஸ்ட் 2007, 19:40 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா அரசாங்கத்துக்கு ராடார்களை இந்திய அரசாங்கம் வழங்கியமையானது சிறிலங்காவின் பயங்கரவாத யுத்தத்தை ஊக்கப்படுத்துவதாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்காவிற்கான யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சாடியுள்ளார். இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசுக்கு ராடர்களை இந்தியா வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தியினால் தமிழ் மக்கள் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். சிறிலங்கா அரசானது சமாதான முயற்சிகளை புறந்தள்ளி விட்டு இராணுவத்தீர்வின் …
-
- 0 replies
- 681 views
-
-
உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான- மோசமான இடம் சிறிலங்காதான்: ஐ.நா. அதிகாரி சாடல் [வியாழக்கிழமை, 9 ஓகஸ்ட் 2007, 19:40 ஈழம்] [ப.தயாளினி] உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான- மோசமான இடமாக சிறிலங்காதான் உள்ளது என்று இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் சாடியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இன்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், துஸ்ப்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் …
-
- 0 replies
- 738 views
-
-
சிலாபம் நகரில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நூற்றுக்கும்மேற்பட்ட வாக்கிடோக்கிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் வந்த இவர் சிலாபம் நகரில் இறங்கிய சிறிது நேரத்திலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். மிகப்பெரிய பயணப் பொதியொன்றை இவர் தூக்கிச்சென்றுகொண்டிருந்தப
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை அதிபராக உள்ள ராஜபக்சே போன்ற ஒரு மோசமான இரட்டை வேடதாரியை உலகின் அரசியல் அரங்கு இதுவரை கண்டதே இல்லை! சிங்கள வெறித்தனத்தின் மறு உருவாகக் காட்சி அளிக்கும் அதிபர் ராஜபக்சே, எத்தகைய கோரத் தாண்டவத்தை (சுநபை டிக கூநசசடிச) கட்டவிழ்த்து விடுகிறார் என்பதற்கு அண்மைக் காலத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்த தமிழர்களை - (அவர்களில் பலரும் அங்கேயே பிறந்து அங்கேயே வாழ்ந்து வரும் குடியுரிமை உள்ள குடிமக்கள்) இராணுவத்தை ஏவிவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றிடும் வெறித்தன நடவடிக்கையில் வெட்கம் சிறிதுமின்றி ஈடுபட்டதே சரியான சாட்சியமாகும். இலங்கை உச்சநீதிமன்றமும், அந்நாட்டு நாடாளுமன்றமும் (சிங்களர்களையே பெரிதும் கொண்ட அமைப்புகள்) `இது சட்ட விரோதம், நியாய விரோதம், மனித உரிமைப் பறிப…
-
- 2 replies
- 1.6k views
-
-
அக்கரைப்பற்று ஆலயயடி வேம்பு பகுதிகளில் மின்மாற்றிகளை மீது இனம் தெரியாத ஆயுத தாரிகள் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இதனால் 3 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்துப்பாக்கி பிரயோகத்தையடுத்து குறித்த பகுதிக்கான மின் விநியொகம் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-
- 0 replies
- 843 views
-
-
யாழ். குடாநாட்டு மக்களின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவர அரச அதிகாரிகளும் கல்விமான்களும் முன்வர வேண்டுமென யாழ். மாவட்ட பொதுஅமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில்; யாழ். குடாநாட்டில் நாளும் பொழுதும் மக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் பல்வேறு இராணுவ நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் இல்லாது அழிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான ஊரடங்குச்சட்டம், கடற்றொழில் தடை, பொருளாதார நெருக்கடிகள், உணவுத் தட்டுப்பாடு என பல்வேறு பாரிய பிரச்சினை…
-
- 0 replies
- 776 views
-
-
மாத்தறை பறவைகள் சரணாலயத்தின் அருகில் வைத்து மொனறாகலை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவருடன் அருகில் நின்ற மற்றொரு வர்த்தகர் இச்சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். தாம் இருவரும் வியாபார அலுவலாக மாத்தறைக்கு வந்ததாகவும் சரணாலயம் அருகில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென வந்த வெள்ளைவான் எமக்கு அருகில் நிறுத்தப்பட்டதும், அதில் இருந்த சிலர் அந்த வர்த்தகரை பலவந்தமாக பிடித்துவானில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது கப்பம் கேட்பதற்காக கடத்தப்பட்டிருக்கலாம் என கடத்தப்பட்ட வர்த்தகரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இச் சம்ப…
-
- 0 replies
- 998 views
-
-
கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள தேர்தலை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக் குழு தேவையற்றது என்று அந்நாட்டு அமைச்சர் லக்ஸ்;மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: கிழக்கில் குடிசார் நிர்வாகத்தை தேர்தல் மூலம் அமைக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் சில சக்திகள் அதனைக் குழப்ப முயற்சிக்கின்றன. கிழக்கில் நடைபெறப்போகும் தேர்தல் குறித்து எவரும் அச்சப்படத் தேவையில்லை. சிறிலங்காவின் சட்டம், நீதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே மகிந்த அரசாங்கம் இத்தேர்தலை நடத்துகிறது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறிலங்காவ…
-
- 0 replies
- 981 views
-
-
மகிந்தவின் சீன விஜயத்தின் போது 56 மில்லியன் ரூபா செலவு ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சீன விஜயத்திற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் 56 மில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்காவின் வேண்டுகோளை அடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளரா ஜெராஜ் பெர்னாண்டோ புள்ளே இந்த தகவலை நேற்றுப் பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி முதல் மார்ச் மாதம் 7ம் திகதி வரை மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் சீனாவிற்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த பயணத்தின் போது 192 பேர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. -பதிவு
-
- 1 reply
- 856 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் ஆலோசகரும் மகிந்தவின் சகோதரருமான பசில் ராஜபக்சவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையே நடந்த மோதல் எது என்பது குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் பசில் ராஜபக்சவுடன் முறுகலுக்குக் காரணமாக இருந்த இ.தொ.கா. வின் பிரதித் தலைவர் முத்து சிவலிங்கம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவது என்று முடிவெடுத்துள்ளோம். மகிந்த அரசாங்கத்தை விட்டு நாங்கள் விலகவில்லை. அமைச்சுப் பதவிகளையே வேண்டாம் என்று கூறியுள்ளோம். ஆனால் அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த சட்டமூலங்களுக்கு குறிப்பாக அவசரகாலச் சட்ட மூலத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம். அமைச்சுப்பொறுப்புக்களை ம…
-
- 13 replies
- 3.5k views
-
-
வவுனியாவில் அதிரடித் தாக்குதல் - இரு படையினர் பலி [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 09, 2007 - 05:45 AM - GMT ] வவுனியா மாவட்டம், மாமைலன்குளம் பகுதியில் படையினரின் நிலைகள் மீது நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாமைலன்குளப்பகுதியில் அமைந்திருந்த ஊர்காவல் படையினரின் நிலைகள் மீது நேற்றிரவு 7.30 மணியளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ள படைத்தரப்பு இதன்போது படையாள் ஒருவரும் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் மேலும் இரு படையினரும், மூன்று ஊர்காவல் படையினரும் காயமடைந்துள்ளதாகவும் விபரம் வெளியிட்டுள்ளது. காயமடைந்தோர் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட…
-
- 0 replies
- 1.6k views
-
-
அரசை தோற்கடித்து மக்கள் கட்சியை உருவாக்கும் காலம் வந்துவிட்டது. Written by Pandaravanniyan - Aug 09, 2007 at 10:21 AM ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான மக்கள் விரோ அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கத்தை விரைவில் ஏற்படுத்துவோம். இன்றைய அரசாங்கம் மக்கள் வழங்கிய ஆணையினை மீறிவிட்டது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் இன்றிருபபுது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமல்ல ஐ.தே.கட்சி அரசாங்கமேயாகும். மக்களை கவனிக்காத அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து புதியதொரு மக்களாட்சியினை உருவாக்கும் காலம் வந்துவிட்டது என்றம் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்…
-
- 0 replies
- 868 views
-
-
Posted on : 2007-08-09 எல்லாவற்றுக்கும் குற்றச்சாட்டு தமிழர்களின் தரப்பின் மீதுதான் நாய்க்குக் கல் எறிந்தால், அந்தக் கல் உடலின் எந்தப் பாகத்தில் பட்டாலும், நாய் காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடும் என்பார்கள். அப்படித்தான் இன்று தென்னிலங்கை அரசியல் கலாசாரமும். எந்த அரசியல் பிரச்சினையாயினும் தமக்கு சுய லாபம் ஈட்டுவதற்காக அவ்விடயத்தைத் தமிழர் தலையில் - இப்போதைய நிலையில் தமிழர்களின் விடுதலைப் போராட்ட சக்தியான புலிகள் மீது - போடுவதுதான் தென் னிலங்கை அரசியல்வாதிகளின் சாமர்த்தியம். 'செட்டியார் நட்டம் ஊர் மேலே' என்பது போல - 'செல்லும் - செல்லாதது எல்லாம் செட்டியாரிடம்' என்பது போல - எல்லா விடயங்களிலும் குற்றத்தைப் புலிகள் மீது போட்டு தங்களை அரசியல் சுத்தவாளிகளாகக் காட்டுவத…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேரரின் ஆடம்பரக் காரும் அரசியல் சர்ச்சையும் இன்று நாட்டு மக்களை எண்ணற்ற பிரச்சினைகள் திணறடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் எந்தவொன்றையுமே தணிப்பதற்கான வழிவகைகளைக் காண்பதற்கு வக்கில்லாத அரசியல்வாதிகள் தங்களது சந்தர்ப்பவாத கட்சி அரசியலை நடத்துவதற்கு கூட, மக்களின் குறைந்த பட்ச ஆதரவையேனும் பெறுவதற்கு பயன்படுத்தக்கூடிய பிரச்சினை எதுவென்பதை தெரிவுசெய்ய முடியாதவர்களாக இருக்கும் பரிதாபத்தைக் காண்கின்றோம். தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கும் அனுமதிப் பத்திரத்தை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மெத்தானந்த தேரர் துஷ்பிரயோகம் செய்ததாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெர…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐ.நா. அதிகாரி இன்று இலங்கை வருகை: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தர உள்ளார். மூதூரில் படுகொலை செய்யப்பட்ட அரச சார்பற்ற பணியாளர்கள் 17 பேரின் முதலாமாண்டு நினைவு நிகழ்வில் அவர் இன்று பங்கேற்கிறார். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் சிறிலங்காவின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். யாழ்ப்பாணத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் ஹோல்ம்ஸ் அங்கு மனிதாபிமான நிலைமைகளை ஆராய்கிறார். தொடர்ந்து மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்துக்கு புதன்கிழமை அவர் பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்கா அரச தலைவர்…
-
- 8 replies
- 1.6k views
-
-
10 ஆயிரம் குளங்கள் புணரமைப்புத் திட்டத்தில் ஜேவிபியால் பல லட்சம் ரூபாக்கள் மோசடி ஜே.வி.பியினால் ஆரம்பிக்கப்பட்ட 10000 குளங்களை புணரமைக்கும் திட்டத்தில் முறை கேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான அனுர குமார திஸநாயக்க விவசாய அமைச்சராக பதவி வகித்த காலத்தில் விவசாய அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தில் பல இலட்சக்கணக்கான ரூபாய பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இடம்பெற்ற முறை கேடுகள் குறித்து பூரண விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் முடிவில் முன்னாள் அமைச்சர் அனுர குமார திஸநாயக்காவால் மேற்கொள்ளப்பட்ட முறை கேடுகள் முழுமையாக …
-
- 0 replies
- 895 views
-
-
மூதூரில் மூன்றாம் கட்டை மலையடி அகழ்வாராய்ச்சிப் பகுதியாக அறிவிப்பு இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதூரை அடுத்துள்ள ஒரு சிறிய குன்றுப் பகுதி அகழ்வாராய்வு பகுதியாக திடீரென அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதியில் பல காலமாக கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை இந்தப் பகுதியில் காணப்படுவதாகக் கூறப்படும் சிதிலங்கள் தமது மதங்களுக்கு உரியவை என்று பௌத்த, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதப்பிரிவினர் சிலர் உரிமை கோரியுள்ளனர். இந்த மலைப்பகுதி அகழ்வாராய்ச்சி திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சிக்கான பகுதியாக அறிவிக்கப்பட்டதாக திருகோனமலை அரச அதிபரால் தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக மூதூர் பிரதேச செயலர் எம். ஏ. …
-
- 0 replies
- 920 views
-
-
வடபோர் முனையில் கடற்புலிகளை முறியடிக்க சர்வதேச உதவியை நாடும் அரசு தெற்கில் திடீர் அரசியல் மாற்றங்களேற்படலாமென்ற நிலை தோன்றியுள்ளது. அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் அரசிலிருந்து விலகிவிட எத்தனித்து வருவதால் எவ்வேளையிலும் அரசு பெரும்பான்மை பலத்தையிழந்து ஆட்சி கவிழலாமென்றதொரு நிலைமையேற்பட்டுள்ளது. இதனை ஆட்சியாளர்களும் எதிர்பார்த்திருப்பதால் அடுத்த தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியாளர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அரசிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து பாராளுமன்றம் எவ்வேளையிலும் கலைக்கப்படலாமென்றதொரு நிலைமை உருவானது. இ.தொ.கா. திடீர் பல்டி அடித்து, மீண்டும் அரசுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்ததன் மூலம் அரசு கவ…
-
- 0 replies
- 1.1k views
-