ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
"திருட்டு அரசன்' எனும் பெயரில் ரணில் குறித்து புத்தகம் வீரகேசரி நாளேடு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தன்வசம் வைத்துக் கொண்டு ஆட்டுவிக்கும் ஹேமந்த நிஷாந்த யார் அவரது பின்னணி என்ன? என்பது தொடர்பான சர்ச்சைக்குரிய விடயங்களை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாக எச்சரிக்கும் ஜாதிக ஹெல உறுமய திருட்டு அரசன் என்ற பெயரில் ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக மிக விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தது. நுகேகொடையிலுள்ள ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அதன் சட்ட ஆலோசகர் உதய கம்மான்பில இதனைத் தெரிவித்தார். ஜாதிக ஹெல உறுமயத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மோதானந்த தேரரின் …
-
- 2 replies
- 1.5k views
-
-
பங்களாதேஷ் - இலங்கை! -சோலை நமது அண்டை நாடான பங்களா தேஷில், ஒரு பொம்மை அரசை முன்னிறுத்தி, ராணுவம் தான் ஆட்சி செய்கிறது. அந்த ராணுவம், ஆட்சி அதிகார ருசி கண்டது. எனவே, எந்த ஜனநாயக அரசும் நீடித்து நிலைத்திருப்பதை அந்த ராணுவம் அனுமதித்ததில்லை. பாகிஸ்தானின் ஓர் அங்கமாக கிழக்குப் பாகிஸ்தான் இருந்தது. மொழியால், கலாசாரத்தால் மேற்குப் பாகிஸ்தானோடு எந்த வகையிலும் அதனால் இணங்கிப் போக முடியவில்லை. வங்க மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட கிழக்குப் பாகிஸ்தான் மக்களால் உருது மொழியின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவே பங்களாதேஷ் என்ற நாடு உருவானதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. இன்று இலங்கையில் ஈழம் என்ன நிலையில் இருக்கிறதோ, அதே நிலையில்தான் அன்றைய கிழக்குப் பாகிஸ்த…
-
- 3 replies
- 2.6k views
-
-
உலக நாடுகளால் கைவிடப்பட்ட மிக்-27 ரக வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்ததில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச பெருந்தொகையான மில்லியன் டொலரை கொள்ளையடித்தது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆய்வு அறிக்கையை கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏடு வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம்: கடந்த வருடம் ஒவ்வொன்றும் 2.462 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 4 மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை பாதுகாப்பு அமைச்சு கொள்வனவு செய்திருந்தது. எனினும் இந்த கொள்வனவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா மில்லியன் டொலர் பணத்தை ஊழல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூர…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐ.நா.ச. மனிதஉரிமைகள் கண்காணிப்புக்குழு ஒருபோதும் தேவையில்லை. - ரம்புக்வெல Written by Pandaravanniyan - Aug 07, 2007 at 08:51 PM ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் கண்காணிப்புக்குழு ஒருபொழுதும் சிறிலங்காவுக்குத் தேவையில்லை என சிறிலங்காவின் பாதகாப்பு தொடர்பான அமைச்சரவைப்பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எமது முப்படையினர் மீதும் எமக்கு பூரணமான நம்பிக்கை உள்ளது. பெரும் கட்டுப்பாடுடனும், நன் நடவடிக்கையுடனுமே எமது முப்படையினரும் செயல்பட்டுவருகின்றனர். சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்று சேர்ந்தே தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தின் மீதும், இராணுவத்தினர் மீதும் அவதூறான பிழையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். …
-
- 0 replies
- 870 views
-
-
இறுதிவரை போரிட்டு மடிய எண்ணிக்கைக்கு குறைவில்லாத பெண் புலிகள்: அல்ஜசீரா [புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 15:13 ஈழம்] [பி.கெளரி] தமிழீழ விடுதலைப் புலிகள், தங்களது தாயக விடுதலைக்காக இறுதிவரை போரிட்டு மடிய எண்ணிக்கைக்கு குறைவில்லாத வகையில் மகளிர் படையணிகளை பெற்றுள்ளனர் என்று அல்ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தொடர்பாக அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் பத்தி எழுத்தாளர் கெய்லி கிரே கிளிநொச்சியில் இருந்து எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்: விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தமது நோக்கம் மற்றும் உரிமைகளுக்காக போராடுவதுடன், தமது படையணியையும் மேன்மைப்படுத்தியுள்ளார்கள். சிறிலங்கா இராணுவம் வடக்கில் ஒரு இறுதித் தாக்குதலுக்கு தம்மை தயா…
-
- 12 replies
- 6.2k views
-
-
ஈ.பி.டி.பி.யிலிருந்து கி.பி. எனப்படும் முன்னைநாள் ஈ.பி.ஆர்.எல்.எவ். மத்தியகுழு உறுப்பினர் கிஸ்னபிள்ளை தப்பி ஓட்டம். ஜ செவ்வாய்கிழமைஇ 7 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ யாழ்ப்பாணத்திலிருந்து ஈ.பி.டி.பி. குழுவின் முக்கிய ஒட்டுக்குழு உறுப்பினரான கி.பி. தோழர் டக்ளசுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் தப்பியோடி இந்தியாவில் உள்ளார். (கி;.பி க்கு இந்தியாவில் வேறு மனைவிகள் பிள்ளைகள் உண்டு.) டக்ளசின் ஒட்டுக்குழு குண்டர்களின் அட்டகாசத்தை நேரில் பார்த்த கி.பி,. படுகொலை நடவடிக்கைகளை நிறுத்தும்படி சாள்ஸ், உதயன் ஆகியோருடன் வாய்த்தர்க்கப்பட்டுள்ளார். இதன்போது மதிப்பிழந்த கி.பி. தப்பியயோடி இந்தியாவில் உள்ள வரதராஜப்பெருமாளைச் சந்தித்து யாழ்ப்பாணத்தில் நடக்கும் படு கொலைகளின் பின்னணிபற்றிக் கூறியுள்ளா…
-
- 0 replies
- 2.2k views
-
-
Posted on : Tue Aug 7 8:02:01 EEST 2007 முகமாலை முன்னரங்கில் நேற்றுமாலை குண்டு வீச்சு முகமாலைமுன்னரங்க நிலைகளுக்கு அப்பால் நேற்றுப் பிற்பகல் 4.30 மணி யளவில் "கிபிர்' விமானங்கள் குண்டு வீச் சுத் தாக்குதலை நடத்தின. குடாநாட்டின் வான்பரப்புக்கு மேலாகச் சென்ற "கிபிர்' விமானங்கள் முகமாலைப் பகுதியில் தாக்குதல் நடத்தின. ஆனால் சேத விவரம் குறித்து தகவல் கிடைக்கவில்லை. நன்றி - உதயன்
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு விளக்கிக் கூறுவதற்காக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடு திரும்புகின்றனர். கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், சுரேஷ்பிரேமச்சந்திரன் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே இன்று நாடு திரும்புகின்றனர். ஒன்றரை மாதத்திற்கும் மேலாக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட இவர்கள் அங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபை பி…
-
- 0 replies
- 813 views
-
-
கொள்ளுப்பிட்டி பாலத்தில் எழுந்த புகையால் பதற்றம் வீரகேசரி நாளேடு கொழும்பு3 கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க நிலையத்திற்கு முன்னாலுள்ள பாலத்தின் ஓரத்தில் வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து எழுந்த மர்ம புகையினால் அப்பகுதியில் நேற்று பிற்பகல் பெரும் பதற்றம் நிலவியது.மர்ம சத்தத்தையடுத்து எழுந்த புகையினால் அமெரிக்க நிறுவனம் . மற்றும் இந்திய தூதரகம் உள்ளிட்ட அருகிலுள்ள அரச,தனியார் நிறுவனங்களுக்கு வருகைதந்திருந்தவர்கள் அல்லோல கல்லோலப்பட்டனர். . புறக்கோட்டையிலிருந்து காலிக்கு செல்லும் பக்கத்தில் பாலத்தில் நடைபாதையில் பதிக்கப்பட்டிருந்த சுமார் நான்கு அங்குலம் உயரமான தரை ஓடுகளுக்கிடையிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 12 மணியளவில் கேட்ட …
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : 2007-08-07 மாறி மாறி முன்வைக்கப்படும் முத்தரப்பின் குற்றச்சாட்டுகள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மூன்று பிரதான தரப்புகள் ஒவ்வொன்றும் மற்றையவை இரண்டின் மீதும் மாறி மாறி சுமத்தும் குற்றச்சாட்டுகள் சுவாரசியமானவை. மற்றைய இரண்டு தரப்புகளுமே சேர்ந்துகொண்டு, கூட்டாகச் செயற்படுகின்றன என்றுதான் மூன்றாவது தரப்பு குற்றம் சுமத்துகின்றது. அதை சற்று விரிவாகப் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் பொருத்தமானது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை இங்கு இன்றைய நிலையில் முக்கிய மூன்று தரப்புகள் எவை? ஒன்று - தமிழர் தரப்பில் அவர்களின் உரிமைக்கான போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகள். அடுத்தது - தமிழர் தரப்பின் உரிமைகளை மறுக்கும் அடக்கு…
-
- 0 replies
- 924 views
-
-
சிறிலங்காவுக்கு மேலதிக ராடார்களை அனுப்பியது இந்தியா: "இந்து" சிறிலங்காவுக்கு ஓராண்டுக்குப் பின்ன்ர் மேஎலதிகமாக ராடார்களை இந்தியா அனுப்பியுள்ளதாக சென்னையிலிருந்து வெளிவரும் "இந்து" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஓராண்டுக்குப் பின்னர் மேலதிகமான ராடார்களை சிறிலங்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ளதாக புதுடில்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2005ஆம் ஆண்டு இரண்டு ராடார்களை இந்தியா சிறிலங்காவுக்கு அளித்திருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் ஒரு இரணுவ ராடாரை சிறிலங்காவுக்கு அனுப்பியது. அதே வகையான ராடார் கடந்த ஜுன் மாதமும் அனுப்பி …
-
- 4 replies
- 1.7k views
-
-
பத்திரிகைகள் பற்றிய ரணிலின் கருத்து [06 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற டி.ஆர்.விஜேவர்தன ஞாபகார்த்த விருதுகள் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சிங்கள, தமிழ் செய்திப் பத்திரிகைகளைப் பற்றித் தெரிவித்த கருத்துகள் எமது கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கின்றன. அவர் எந்தவொரு பத்திரிகையினதும் பெயரைக் குறிப்பிடாமல் பொதுவில் பேசிய காரணத்தினால் தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்பான அவரது கருத்துகளுக்கு எமது பிரதிபலிப்பை வெளியிடுவதில் தவறு ஏதும் இருக்க முடியாது என்று நம்புகின்றோம். ஐக்கிய இலங்கைக்காக பாடுபடுவதைவிடுத்து நாட்டை பிளவுபடுத்துவதற்கு சிங்களப் பத்திரிகைகள் முயற்சிக்கின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலையும் நடவடிக்கைகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்... காணாமல் போதல், கொல்ல படுதல் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களின் நிலை , கருணா ஒட்டு குழுவின் அரச படைகளுடனான தொடர்பு, அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு கருணா ஒட்டு குழுவின் பங்களிப்பு, அரச உதவி படைகளுக்கு சிறுவர் கட்டாய ஆள் பிடிப்பு என்பவை அலச படுகிறது, விளக்கம் அளிப்பவர்களில் பாராள மண்ற உறுப்பினர் மனோகணேசன் குறிப்பிட படவேண்டியவர்.... நாளை நான் இறந்து போகலாம் அதுக்கு நான் வெளிப்படையாக உங்களோடு பேசுவதே காரணமாகலாம் எனும் மனோ கணேசன் அவர்கள், அதுக்கு உதாரணமாக தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்களின் கொலைகளையும் சொல்ல தவற இல்லை....! அது சம்பந்தமான ஒளிப்படம்...!
-
- 0 replies
- 853 views
-
-
தமிழீழச் செய்தி மடல்: பிரிக்கமுடியாத இரத்த உறவு! -(எஸ்.எம்.ஜி) "பிரிவினைவாதப் பயங்கரவாதிகள்" - இப்படித்தான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சிங்கள ஆதிக்க சக்திகளும். இனவெறி ஊடகங்களும் முத்திரை குத்தி உலக முழுவதும், பிரசாரம் செய்து வருகின்றன. இந்தப் பிரச்சாரம் ஓரளவு - ஓரளவல்ல பெருமளவு வெற்றியும், பெற்றிருக்கிறதென்றே சொல்லவேண்டும். இதனால்தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டுமென்று கிளிப்பிள்ளைகள் போல வெளிநாடுகள் பலவும் திரும்பத் திரும்பச் சொல் லிக்கொண்டு வருகின்றன. இதே சமயம் இலங்கை பிளவுபடுவதையோ இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் ஏற்படுவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இலங்கையின் அயல்நாடுகளும், உலக நாடுகள் பலவும் வ…
-
- 0 replies
- 1.8k views
-
-
அமெரிக்கா தனது நலனுக்கா பிராந்திய நாடுகளை கைக்குள்ள போடுறதும்.. யுத்தம்.. பொருளாதார நெருக்கடி மூலம் மிரட்டிப் பணிய வைக்கிறதையும் செய்யுற நாடு. ஈராக் ஆக்கிரமிப்பின் பின்னர் (2003 இல் இருந்து) அமெரிக்கா சப்பிளை செய்த ஆயுதங்கள் 190,000 காணேல்ல என்று அமெரிக்காவே கதை விடுகுது. அப்படின்னா.. அமெரிக்காவே எதிரணிக்கும் ஆயுத சப்பிளை செய்து.. ஈராக்கில் தனது வெளியேற்றத்தை தாமதப்படுத்துது என்று தான் கொள்ளனும்.! அமெரிக்க இழந்தவற்றில் முக்கியமானவை... MISSING IN IRAQ AK-47 rifles: 110,000 Pistols: 80,000 Body armour pieces: 135,000 Helmets: 115,000 இதில் ஏகே துப்பாக்கிகளை அமெரிக்கா தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. US 'loses track' of Iraq weapo…
-
- 0 replies
- 931 views
-
-
திங்கள் 06-08-2007 12:51 மணி தமிழீழம் [சிறீதரன்] கருணா குழுவிடம் ஆயுதங்களை களைவதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல - அரசாங்கம் ஸ்ரீலங்காவின் துணை ஆயுதக் குழுவான கருணா குழுவிடம் இருந்து ஆயுதங்களை களைவதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளரும் அமைச்ருமான ஜெராஜ் பெர்னாண்டோ புள்ளே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தமது துணை ஆயுதப் படைகளான கருணா குழு மற்றும் ஈ.பி.டி.பி ஆகியன தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் கூறியுள்ளார். கிழக்கில் கருணா குழு ஆயுதங்களுடன் நடமாடுவது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்பதால் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறீலங்காவின் பாராளுமன்றமும் கொழும்பினுடைய நடவடிக்கைகளும்
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்கு அபிவிருத்திக்காக "சமாதானம்" தொடர்பில் கவனம் செலுத்துவோம்: மகிந்த ராஜபக்ச [திங்கட்கிழமை, 6 ஓகஸ்ட் 2007, 21:37 ஈழம்] [கொழும்பு நிருபர்] வடக்கு அபிவிருத்திக்காக சமாதானம் தொடர்பில் கவனம் செலுத்தப் போவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற சீன உதவியுடன் அமைக்கப்பட உள்ள நுரைச்சோலை அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு மகிந்த பேசியதாவது: கிழக்குப் பகுதியில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் தொடங்கியுள்ளது. வடக்கிலும் இதேபோன்ற அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு சமாதானத்தின் பக்கம் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இப்பாதையில் எதிர்கொள்;ளும…
-
- 0 replies
- 847 views
-
-
Posted on : Mon Aug 6 7:34:35 EEST 2007 வெளிநாட்டில் வசித்தாலும் இலங்கையர் ஆயுதம் கொள்முதல் செய்யத் தடை! தற்பொழுது நடைமுறையில் இருக் கும் அவசர காலச் சட்ட விதிகளின் கீழ் கடந்த வாரம் திங்கட்கிழமை மேலும் புதிய விதிகள் சிலவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளார். அபாயகரமாண ஆயுதங்களை சேகரித்து வைப்பதை தடுப்பதற்கான சட்ட விதிகள் ஏற்கனவே சட்டப் புத்தகத்தில் இருந்து வருகின்ற போதிலும் இப்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விதிகள், இராணுவ ஆயுதத் தளபாடங்களை இலங்கையில் வசிப்பவர்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் வாங்கிக் குவிப்பதை தடைசெய்கின்றது. இலங்கையர் ஒருவர் உள்நாட்டில் வசித்தாலும் அல்லது வெளிநாட்டில் இருந்தாலும் இராணுவ ஆயுதங்களை வாங்கிக்…
-
- 3 replies
- 2k views
-
-
அங்கீகரிக்கப்பட்ட கொசோவோ விடுதலை அங்கீகரிக்கப்படாத தமிழர் போராட்டம் -சி.இதயச்சந்திரன்- சென்ற வாரம் நண்பர் பரணி கிருஷ்ணறஜனி எழுதிய கட்டுரையொன்றினை 'தமிழ்நாதம்" இணையத்தளத்தில் பார்வையிட்டேன். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் குறித்த இராணுவ, அரசியல் ஆய்வுகள், மக்களிடம் சென்றடையக்கூடிய வலுநிலையற்ற தளத்தினைக் கொண்டதென தனது ஆதங்கத்தினை அதில் வெளிப்படுத்தியிருந்தார். விடுதலைப் புலிகளின் படைவலுவுடன் கூடிய போர்த்திறனை, சர்வதேசம் புரியக்கூடிய வகையில் வெளிப்படுத்தினால், அவர்களின் போராட்டம் குறித்த பார்வையில் மாற்றமேற்படலாமென்பது அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தோழர் 'தராகி" சிவராமின் கட்டுரையொன்று, இராணுவத்தின் சில நகர்வுகளை தடுத்ததாகவும் அதில் கு…
-
- 0 replies
- 905 views
-
-
பண்டாரநாயக்க குடும்பத்திலிருந்து அரசியல் பிரவேசம் செய்யும் புதியவர் [06 - August - 2007] -எம்.ஏ.எம்.நிலாம்- பண்டாரநாயக்க குடும்பத்திலிருந்து புதியவர் ஒருவர் அரசியல் பிரவேசம் செய்யவுள்ளார். அவர் பற்றிய விபரங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படவிருக்கின்றது. செப்டெம்பர் 26 ஆம் திகதி அமரர் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவ
-
- 7 replies
- 2.7k views
-
-
வான்புலிகள்-சிங்கள அரசு நடுக்கம் திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கை தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர் சிங்கள அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு இரகசிய அறிக்கை படைத்துறைத் தளபதிகள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கையின் முக்கியமான ஒரு நட்பு நாடு (இந்தியாவாக அல்லது அமெரிக்காவாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது) இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்துள்ளது. தனது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினால் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்த இரகசிய அறிக்கையை குறிப்பிட்ட அந்த நேச நாடு தயாரித்திருந்ததாக கூறப்படுகின்றது. தற்பொழுது இலங்கையின் படைத் துறை தளபதிகள் மத்தியிலும், ஒரு சில முக்கிய அம…
-
- 2 replies
- 3.8k views
-
-
திருகோணமலையில் புலிகளுடன் நேரடி மோதல்: சிறிலங்கா அரசு [திங்கட்கிழமை, 6 ஓகஸ்ட் 2007, 17:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் நேரடி மோதல் நடைபெற்றதாக சிறிலங்காவின் பாதுகாப்புக்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: திருகோணமலை பான்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் சிறிலங்காஇராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அப்பகுதியில் புலிகளுடன் நடைபெற்ற நேரடி மோதலின் பின்னர்; மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதல் நடவடிக்கையின் போது ரி.56 ரக துப்பாக்கி ஒன்று, அற்குப் பயன்படுத்தும் மகஸின் ஒன்று மற்றும் புலி உறுப்பினர்கள் பயன்ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
திங்கள் 06-08-2007 15:24 மணி தமிழீழம் [சிறீதரன்] பருத்தித்துறையில் படையினரின் வாகனத் தொடரணி மீது தாக்குதல்: 5 பேர் படுகாயம் பருத்தித்துறையிலிருந்து பலாலி நோக்கி பயணித்த சிறீலங்கா படையினரின் வாகனத் தொடரணி மீது வீதியோரத்தில் பொருத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் போது சிறீலங்காப் படைத்தரப்பினரில் 4 இராணுவத்தினரும் பொதுமகன் ஒருவருமாக 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 11.10 மணியளவில் வாகனத் தொடரணியில் பேரூந்தை இலக்கு வைத்து தாக்குலாளிகளால் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நன்றி - பதிவு
-
- 1 reply
- 1.2k views
-
-
Posted on : 2007-08-06 சர்வதேசக் கருத்து நிலைப்பாடு கொழும்புக்கு எதிராகத் திரும்புகிறது இராணுவ நடவடிக்கைப் போக்கில் - யுத்த முனைப்பில் - தீவிரமாக இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச அழுத்தம் கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிறாக இறுகி வருவதை அறிய முடிகின்றது. வரும் வாரங்களிலும் மாதங்களிலும் அது இன்னும் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் அந்தப் புறநிலை யதார்த்தத்தை இலங்கை அரசுத் தலைமை புரிந்து கொண்டிருப்பதாக - உணர்ந்துகொண்டிருப்பதாக - தெரியவில்லை. இலங்கையில் சீர்குலைந்துபோயுள்ள மனித உரிமைகள் விவகாரத்தை அடிப்படையாகச் சுட்டிக்காட்டி, இலங்கைக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் முடக்குவது குறித்து அமெரிக்க செனட்சபை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. 2…
-
- 1 reply
- 1.7k views
-