ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
12.08.2007 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு
-
- 2 replies
- 896 views
-
-
மகிந்த அரசாங்கம் பெறும் கடன்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீளடைப்பு செய்யமாட்டோம்: ஐ.தே.க. [திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007, 19:42 ஈழம்] [கொழும்பு நிருபர்] மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்று வரும் பெருந்தொகையான கடன்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீளடைப்பு செய்யமாட்டோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது: மாத்தறையில் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையின் முழு வடிவத்தை வெளியிட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தடை விதித்தது. அதனால் அந்த உரையை துண்டுப்பிரசுரமாக கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையம் முன்பாக நாளை மறுநாள் அச்சிட்டு வெளியிட உள்ளோம். யாழ். குடாநாட்டுக்கா…
-
- 0 replies
- 899 views
-
-
புதிய சந்தைகளை உருவாக்கும் யுத்தங்கள் -சி.இதயச்சந்திரன்- பூகோள அரசியலில் புதியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் நிகழ்ந்த பனிப்போரில் ஈடுபட்ட இரு வல்லரசுகளும் புதிய தளமொன்றில் மோதத் தொடங்கிவிட்டன. சோவியத் யூனியனின் சிதைவோடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் துண்டாடப்பட்டு, அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ கூட்டமைப்புக்குள் இணையத் தொடங்கியவுடன் பெருங்காயடப்பாவாக விளங்கும் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. ஜோர்ஜியா, உக்ரெனில் இருந்து ஆரம்பித்து கொசோவோ வரை அமெரிக்க ஆதிக்கம் வலுவடைகிறது. ரஷ்யாவை சூழவுள்ள நாடுகளில் ஏவுகணை எதிர்ப்பு நிலையம் அமைக்க மேற்குலகம் மேற்கொள்ளும் முயற்சிக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பினை தெரிவிப…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழில் ஒரே நாளில் 5 துப்பாக்கிச் சூடு- 4 பேர் பலி [திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007, 16:34 ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ்ப்பாணத்தில் இன்று ஒரே நாளில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கைதடிச் சந்தியில் இன்று திங்கட்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தம்பையா சந்திரமோகன் (வயது 28) என்பவர் உயிரிழந்துள்ளார். அவருடைய சடலம் சாவகச்சேரி நீதிபதியின் விசாரனையைத் தொடாந்து யாழ். போதனா மருத்துவமனையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற கிராம அலுவலரான க.செல்லையா (வயது 65) தனது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் இன்று முற்பகல் 11 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார். கைதடி கிழக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஜெயதாஸ் ரூபன் என்ற…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிழக்கில் தப்பி சென்ற புலிகள் பாதுகாப்புப்படையினரிடம் சரணைடைய மன்னிப்பு காலம் வழங்கவுள்ளது-பிரதமர் நிஷாந்தி செப்டம்பரில் 1ம் திகதி முதல் கிழக்கிலிருந்து தப்பி சென்ற விடுதலைப்புலிகள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைய மன்னிப்பு வழங்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெற்காசிய ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளும் இலங்கை அன்னியின் மக்கள் எனவே அவர்களையும் இந்நாட்டடின் அபிவிருத்தியை இணைத்து கொள்ள வேண்டியது அரசின் கடமை அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டியதும் அரசின் கடமையென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சனிக்கிழமை ஹொரனையில் இடம் பெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். தொப்பிகயில் இருந்து தப்பி சென்ற புலிகள் மறைந்திருந்து …
-
- 6 replies
- 2.1k views
-
-
குறுகிய கால நிகழ்வுகளின் அடிப்படையில் நீண்டகால உத்திகளைத் தீர்மானிக்க முடியாது செய்தி ஆய்வு [திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007, 14:28 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றுக்குத் தம்மைத் தயார்படுத்தியுள்ளார்கள் எனவும், எந்தக் களமுனைகள் அவர்களது இலக்காக அமையலாம் எனவும் களமுனைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் தகவல்கள் மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது. குறிப்பாக கொழும்பைத் தளமாகக்கொண்டுள்ள படைத்துறை ஆய்வாளர்கள் இவ்வாறான குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கொழும்பின் ஆங்கில மற்றும் ஒருசில சிங்கள ஏடுகளும் கூட இந்த வேலைகளைச் செய்து வருகின்றன. கடந்த கால புலிகளின் தாக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
திங்கள் 13-08-2007 13:53 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர் சுட்டுக்கொலை யாழ்ப்பாணத்தில் யாழ் மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஊழியர் ஒருவர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் குருநகர் இராஜசிங்கன் வீதியைச் சேர்ந்த 28 அகவையுடைய எஸ்.தேவராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பணி நிமிர்த்தம் தனது வேலைத் தலத்திற்குச் சென்றுகொண்டிருந்த போது உந்துறுளியில் வந்த தாக்குதலாளிகளால் சுடப்பட்டுள்ளார். படுகாயங்களுக்கு உள்ளாகிய தேவராஜா யாழ் பொது மருத்துவமனையில் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். பதிவு
-
- 0 replies
- 808 views
-
-
நெடுங்கேணியில் விமானத் தாக்குதல் நிஷாந்தி ஸ்ரீறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் இன்று காலை நெங்கேணி பகுதியில் வான் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் விடுதலைப்புலிகளின் மோட்டார் தாக்குதல் நடத்தும் மையமொன்றை விமானப்படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 6.40 மணியளவில் இவ் வான் தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் இதில் புலிகளிற்கு சேதம் ஏற்ப்பட்டிருக்கலாம் எனவும் தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீரகேசரி
-
- 2 replies
- 1.3k views
-
-
முல்லை, சிலாபம் மக்கள் மீது கடற்படையினர் பீரங்கித் தாக்குதல் Written by Ravanan - Aug 13, 2007 at 11:05 AM முல்லைத்தீவு சிலாவத்துறைப் பகுதி நேற்றிரவு சிறிலங்கா கடற்படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலையடுத்து அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இரவு 10.30 மணியளவில் இப்பகுதி மீது நடத்திய தாக்குதலையடுத்து சிலாவத்தைப் பகுதி மக்களும் அளம்பில் பகுதி மக்குளும் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் முள்ளியவளைப பகுதி நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இதேவேளை நேற்றுக் காலை 9.15 மணியளவில் அளம்பில் கடற்கரையில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்தொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதலினை மேற்கொண்டனர். இதனால் கரைவலைத் தொழிலாளர்கள் வலையினைக் கடலில் விட்டு விட்டு …
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : 2007-08-13 தமிழர் தாயகத் துண்டிப்பை உறுதிப்படுத்தும் தீர்வு வருகிறது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனைகளை சிபாரிசு செய்யும்படி கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டிய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, இழுத்துப் பறித்து ஒருவாறு தன் திட்டம் ஒன்றை இவ்வாரத்தில் முன்வைக்கும் என்று தெரிகின்றது. ஆளும் தரப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஒரு யோசனையை முன்னர் முன்வைத்திருந்தது. மாவட்ட மட்டத்தில் அதிகாரத்தைப் பகிர்வது குறித்தும், கிராம மட்ட நிர்வாகம் பற்றியும் அது பிரஸ்தாபித்தது. அந்தத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர - சற்று விட்டுக்கொடுக்க - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'பெரும…
-
- 1 reply
- 1.4k views
-
-
சர்வதேச சமூகத்திடம் தாய்நாட்டை காட்டிக்கொடுக்க சிலசக்திகள் முயற்சி வீரகேசரி நாளேடு சர்வதேச சமூகத்திடம் தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்க சில சக்திகள் முயற்சி செய்கின்றன. சிலர் அதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளனர். ஆனாலும், தாய்நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தை தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம். அத்துடன், ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் சளைக்காது தொடருவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 1989 ஆம் ஆண்டில் இருந்ததைப் போன்றதொரு அபாயகரமான, மிக மோசமான சூழல் வடக்கிலும் கிழக்கிலும் இன்றில்லை. இந்த வருடம் சுகாதார சேவைக்காக 63 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்ததொரு பிரதேசத்தில் வாழும் மக்கள் கூட்டத்துக்காக ஒதுக்கப்படவில்லை. முழு நாட…
-
- 1 reply
- 1.2k views
-
-
மகிந்தவுக்கு எதிரான பிரச்சாரத்தில் சந்திரிக்கா. Written by Pandaravanniyan - Aug 13, 2007 at 08:35 AM முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொழும்பு திரும்பியுள்ள நிலையில், மங்கள - ரணில் அணியுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று கொழும்பு திரும்பிய உடனடியாகவே மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் பேசிய சந்திரிகா இன்று திங்கட்கிழமை அவரை நேரில்சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். ரணில் - மங்கள அணியினரின் அடுத்த கட்ட 'மக்கள் அலை' ஆர்ப்பாடட்டப் பேரணி அத்தனகலையில் நடைபெறும் எனவும், அதில் சந்திரிகா குமாரதுங்க கலந்துகொள்ளலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெதிவித்தன. தன்னுடைய மகளான யசோதாவின்…
-
- 2 replies
- 1.3k views
-
-
வடக்கில் யுத்தத்தை ஆரம்பிக்கப் போவது யார்? -விதுரன்- வடக்கில் போர் முனை அமைதியாயிருக்கிறது. பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. எவ்வேளையிலும் இங்கு பெரும் போர் வெடிக்கலாமென்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பிலுமிருந்த போதிலும், இங்கு எதிர்பார்க்கப்பட்ட பெரும் சமர் தாமதமடைகிறது. கிழக்கை புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறும் அரசு, வடக்கிலும் புலிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயல்கிறது. கிழக்கை போன்று வடபகுதி களமுனையில்லையென்பது படையினருக்கு நன்கு தெரியும். இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நகர்வு முயற்சியும் பலத்த சேதங்களுடன் தோல்வியடைந்துள்ளன. இதனால் வடக்கில் பாரிய தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு படையினர் தயங்குகின்றனர். தெற்கில் நிலவும் அரசியல் க…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஐ.நா. பிரதிநிதிகளை அரசாங்கம் முத்தமிட்டு வரவேற்கின்றது. ஆனால் அவர்களோ இறுதியில் எமக்கெதிராக அறிக்கைகளை வெளியிட்டுச் செல்கின்றனர். இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இலங்கையை பிரிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிகாரங்களின் திட்டங்களை வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில் பிரிவினைவாதத்திற்கு எதிரான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் ""கதிர்காமரின் அடையாளத்தை'' உடனடியாக கண்டுகொள்வதற்காக நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மறைந்து இரண்டு ஆண்டுகள் நேற்று 12ஆம் திகதி பூர்த்தியாவதை முன்னிட்டு ஜே.வி.பி. யின் அரசியல் சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே …
-
- 1 reply
- 887 views
-
-
அமைச்சர் கேஹெலிய பெருமிதம் '30,000 இந்திப் படை வீரர்கள் கிழக்கில் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளல் 2,000 இந்திப் படையினர் மாண்டனர். ஏனையோர் அவ்விடத்தை விட்டும் பின் வாங்கினர். என்றாலும், எமது படையினர் மதிநுட்பத்துடன் கிழக்கை மீட்டெடுத்தனர்" கண்டி மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை அவரது வாசஸ்தல்த்தில் சந்தித்த பின்னர் அவர் ஊடுகவியலாளரையும சந்தித்து உரையாடினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:- கிழக்கில் அரச படைகள் ஈட்டிய வெற்றியை சிலர் தவறாக மதிப்பிடுகிறார்கள். இவ்வாறு மதிப்பிடுபவர்கள் நாட்டின் மீது பற்றுதல் கொண்டவர்கள் அல்லர். இன்று பிரபாகரன் இந்த வெற்றி காரணமாக எலியின் நிலையைப் போன்று ஆகியுள்ளார். சிலர் இன்று புலி…
-
- 2 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் ஓய்வுகளை எண்ணி நாம் நிம்மதி கொள்ள முடியாது: "லக்பிம" வார ஏடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு முன்னர் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு, தற்போது அவர்கள் இரவு நேர பறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் ஓய்வுகளை எண்ணி நாம் நிம்மதி கொள்ள முடியாது என்று "லக்பிம" வார ஏடு எச்சரித்துள்ளது. "லக்பிம" வார ஏட்டில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூர்ய எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சிறிலங்கா வான் படையினால் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஜேவை-11 (JY-II) ரக குறைந்த உயர்வீச்சுள்ள முப்பரிமான ரடார்கள் நீண்ட காலத்தின் பின்னர் கடந்த வாரம் சிறிலங…
-
- 0 replies
- 949 views
-
-
[ ஓகஸ்ட் 12, 2007 - 11:46 PM - GMT ] யாழ்.குடாவின் அரியாலை மற்றும் குருநகரை அண்டிய கடற்பரப்பில் விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை சிறு சிறு மோதல்கள் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடற்பரப்பில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி மூலமான மோதல்கள் நடைபெற்றதாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. இந்த மோதல்களால் அரியாலை கிழக்கு, அரியாலை, கொழும்புத்துறை, பாசையூர் மற்றும் குருநகர் பகுதி மக்களிடேயே அச்சநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -ஈழத்தமிழ்.
-
- 1 reply
- 835 views
-
-
அதற்கு முன்னர் சரணடைவதே நல்லது என்று சொல்கிறார் பிரதமர் கிழக்கு மாகாணத்தில் ஒழித்துக்கட்டியது போலவே, வடக்கு மாகாணத்திலிருந்தும் விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிப்பதற்கு எமது வீரம் மிக்க, துணிச்சலான படையினர் இப்போது தயாராக உள்ளனர்.ஆகையால் வேண்டாத சாவுகளைத் தவிர்ப்பதற்கு எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் அரசபடைகளிடம் சரண் அடைவதே நல்லது.இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பிரதமர். ஹொரணை சமூர்த்தி கழகத்தில் பத்தாவது ஆண்டு விழாவில் நேற்றுப் பேசுகையிலே பிரதமர் இவ்வாறு சொன்னார். அவர் தமது பேச்சில் மேலும் கூறியதாவது :- நாட்டிலிருந்து பயங்கரவாதிகளைப் பூண்டோடு அழிப்பதற்கு மக்களின் தெளிவான ஆணையை கடந்த தேர்தலில் அரசு பெற்றுள்ளது.அதற்கிசைவாக அரசு மக்களின் ஆணையையே நிறைவேற்றி வரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
Heavy fighting in the seas off Pulmoaddai - LTTE [TamilNet, Sunday, 12 August 2007, 23:02 GMT] Three Sri Lanka Navy Fast Attack Crafts (FACs) were damaged and more than 20 Dvora gunboats were chased away by the Sea Tigers, the naval force of the Liberation Tigers of Tamileelam (LTTE), towards Trincomalee port Sunday night after a fierce sea battle off Pulmoaddai that lasted from 10:00 p.m. till 2:30 a.m. Monday, according to Sea Tiger officials in Vanni. Three Sea Tiger fighters were killed in action in the battle. More than 20 Israeli-built Dvora FACs were "chased away to Trincomalee port after 4 hours of fierce fighting," a Sea Tiger official told TamilNet. …
-
- 12 replies
- 2.5k views
-
-
இலங்கையில் அமைதி ஏற்படுவது சாத்தியமில்லை மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர் வீரகேசரி நாளேடு இலங்கையில் மக்கள் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அங்கு அமைதி ஏற்படுவது சாத்தியமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.புதுடில்லிக்கு செல்லும் வழியில் நேற்று காலை சென்னைக்கு விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்க சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.இங்கு அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் பொருளாதாரம், அபிவிருத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இலங்கையில் யுத்த சூழ்நிலையே நிலவுகின்றது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறலில் ஈடுபடும் அமெரிக்க பிரஜை மீது அமெரிக்க பொலிசாருக்கு தொடர்ச்சியாக முறையிட முடியும். - இதனால் பல சட்ட சிக்கலை மகிந்தவின் சகோதாரர்களுக்கு ஏற்படுத்த முடியும். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 12 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ அமெரிக்காவில் கைதிகளை சித்திரவதை செய்தமை பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியமை போன்றவற்றிற்கு எதிராக பலர் அமெரிக்க சிப்பாய்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யபட்டு விசாரணைகள் நடைபெறுகின்றது அதே போன்று இலங்கை இராணுவ சிப்பாயாக இருந்து பின்னர் அமெரிக்காவில் அகதியாகி தற்போது அமெரிக்க பிரஜையாக உள்ளவரும் இலங்கை முப்படைகளின் அமைச்சு செயலாளராக உள்ள கோதபாய றஜபக்ச மீது ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கோதபாய ராஜப…
-
- 2 replies
- 1.7k views
-
-
படையினர் முன் உள்ள அடுத்த தெரிவு என்ன? -அருஸ் (வேல்ஸ்)- விடுதலைப் புலிகளுக்கு முன்னுள்ள தெரிவுகள் என்ன? என்பதுதான் தற்போது இராணுவ ஆய்வாளர்கள் சிலரின் ஆராய்ச்சி. அதாவது, அவர்கள் வலிந்த பெரும் சமரை நடத்தப் போகின்றனரா அல்லது கடுமையான தற்காப்புச் சமரை நடத்தப் போகின்றனரா? போன்றவையே தற்போது முன்னிறுத்தி ஆராயப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் இந்த இரு உத்திகளில் ஒன்றைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கும் அவர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த இரு உத்திகளில் ஒன்றின் அடிப்படையில் தான் செயற்பட வேண்டும் என்ற அழுத்தம் விடுதலைப் புலிகளுக்கு கிடையாது. அதாவது, அரசியல் அழுத்தங்களோ, முடிந்து போகும் அல்லது பறிபோகும் பதவிக்காலங்களோ அவர்களிடம் இல்லை. சுருக்கமாக சொல்லப் போ…
-
- 6 replies
- 2k views
-
-
[12 - August - 2007] * ஏ-9 மூடப்பட்டு 1 வருட நிறைவால் அதிகரித்துள்ள அவலங்கள் ! குடாநாட்டை வன்னிப் பெருநிலப் பரப்புடனும் நாட்டின் ஏனைய பகுதிகளுடனும் இணைக்கும் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலைக்கு மூடு விழா நடந்து நேற்று 11 ஆம் திகதியுடன் ஓராண்டு ஓடி முடிகின்றது. கடந்த வருடம் (11.08.2006) ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் முகமாலை முன்னரங்கப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் திடீரென்று கடும் சமர் வெடித்தது. இப்பெருஞ் சமர் மூண்டதையடுத்து அன்று மாலை 5 மணிக்கு பலாலி இராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமையகம் மறு அறிவித்தல் வரும் வரை யாழ்.குடாநாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்தது. இத…
-
- 0 replies
- 1.5k views
-
-
[12 - August - 2007] ஏறத்தாழ கடந்த இரண்டு வாரங்களாக தென்னிலங்கையில் சுதந்திரக் கட்சியை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி சார்பாளர்கள் ரணிலின் அதிரடித் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முனையும் வேளையில் ஜே.வி.பி. இந்த அரசாங்கத்தின் தளர்ச்சி நிலை கண்டு தங்களை ஆட்சிக்கான சக்தியாக முன்னிலைப் படுத்துவதைக் காணலாம். இந்த அபிவிருத்திகள் காரணமாக தொப்பிகல வெற்றி ஏறத்தாழ மறக்கப்பட்டதொன்றாக மாத்திரமல்லாமல் அது பற்றிய வெற்றிவிழாவை சுதந்திரவிழா போன்று கொண்டாடியிருக்கலாமா என்ற விமர்சனக் குரல்களும் எழுந்துள்ளன. திடீரென்று இலங்கை பிராந்திய சர்வதேச இராஜதந்திர சிரத்தை வட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்ற வாரம் இங்கு வந்த ஐ.நா.அலுவலர் தமது விஜயத்தின் பின் சமர்ப்பித்துள்ள அறிக்கை அர…
-
- 0 replies
- 1.2k views
-
-
[sunday August 12 2007 07:43:50 AM GMT] அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னோடியாகவும் யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவுகூர்ந்தும் களுத்துறையில் உள்ள விகாரையில் நேற்று போதிபூசை ஒன்றை அவர் நடத்தினார். அரசியலில் அவர் பிரவேசிக்கிறார் என்பது நிச்சயமாகி வருகிறது. எனினும் அவர் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படப் போகிறார் என்ற தகவல் எதுவும் இன்னும் வெளிப்படையாகவில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் கோத்தபாய ராஜபக்ஷவை பதவிநீக்கம் செய்து, அந்தப் பதவிக்குத் தகுதியானவரான ஜானக பெரேராவை நியமிக்குமாறு அண்மைக் காலமாக ஐ.தே.கட்சி கோரிவருகிறது. எனினும் ஜானக பெரேரா அரசியலில் ஈடுபடுவதையே பெரிதும் விரும்புவதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின…
-
- 0 replies
- 1k views
-