Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Posted on : 2007-07-23 நீடிக்கும் ஆடிக் கலவர அதிர்வு இன்றைக்குச் சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்னர், யாழ்ப்பாணம் பலாலி வீதியில், திருநெல்வேலியில், தபால்கட்டுச் சந்தியில் வெடித்த நிலக்கண்ணியின் அதிர்வு இன்னும் ஓயவில்லை. அந்த அதிர்ச்சியின் அலைகள் பெரும் வன்முறைப் புயலாக விஸ்வரூபம் எடுத்து, இலங்கைத் தீவை இன்றும் கலங்கடித்து சமராடிக் கொண்டிருக்கின்றன. அன்று பறந்த சிறு பொறி, இன்று ஊழித்தீயாக உரு வெடுத்து,முழு இலங்கைத் தீவையும் வெந்தணலாய் தகிக்க வைத்துக்கொண்டிருக்கின்றது. பௌத்த சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதி ராக, நீதியும், நியாயமும், கௌரவமும் மிக்க வாழ்வியல் உரிமை வேண்டி அஹிம்சை வழியில் அறநெறியில் சுமார் மூன் றரை தசாப்த காலம் சளைக்காது ஈழத் தமிழினம் நடத்திய விடு தல…

  2. கறுப்பு ஜூலை அழியாத வடுக்கள்! -(தாயகன்) [22 - Jஉல்ய் - 2007] * 24 வருட நினைவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான இனவெறியும் மதவெறியும் கொண்ட அரசாங்கத்தின் இன அழிப்பு மற்றும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது இதயங்களில் மாறா வடுவை ஏற்படுத்தி விட்ட `கறுப்பு ஜூலை' தின நிகழ்வுகளை நாளை அனுஷ்டிக்கின்றனர். 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஐ.தே.க.வினால் இனக்கலவரம் என்கின்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலைக்கு நாளையுடன் 24 வயதாகிறது. தமிழ் மக்களின் மனங்களின் சிங்களத்தின் கொடூரத்தை வடுவாக்கி விட்ட அந்த இனப்படுகொலை `கறுப்பு ஜூலை' என்கின்ற பெயரில் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டுள்ள அதேவேளை, அந்த கறுப்பு ஜூலையே சிங்களத்தின் வீழ்ச்சிக…

  3. இலங்கை அரசு மீது ஜேர்மன் அதிருப்தி! இலங்கைக்கான ஜேர்மனியத் தூதர் யூர்ஜென் வீர்த் மீது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சுமத்தி யிருக்கின்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கை அரசி டம் விளக்கம் கோருவதற்கு ஜேர்மன் அரசு தீர்மானித் திருப்பதாகத் தெரியவருகிறது. ""கொழும்புக்கான ஜேர்மன் தூதர் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் செயற்படுகின்றார். அதனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்கின்றது'' என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சமீபத் தில் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துஜேர்மன் அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது. இலங்கை அமைச்சரின் இந் தப் பகிரங்கக் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜேர் மனின் வெளிவிவகார …

  4. யுத்தமா? பேச்சா? எதற்கும் நாங்கள் தயார்: மகிந்த அறிவிப்பு [வியாழக்கிழமை, 19 யூலை 2007, 12:51 ஈழம்] [செ.விசுவநாதன்] யுத்தம் அல்லது பேச்சு எதுவானாலும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்க நாளிதழலான டெய்லி நியூசின் இன்றைய (19.07.07) பதிப்புக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: யுத்தம் அல்லது பேச்சுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எது என்பது அவர்களின் கைகளில் உள்ளது. எந்தப் பாதை என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளே தெரிவு செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது. பேச்சு மேசையை விட்டு விலகியதும் கிடையாது. விடுதலைப் புலிகள்தான் பேச்சுக்களை நடுவில் முறித்துக் கொண்டனர். …

    • 12 replies
    • 2.2k views
  5. மன்னாரில் இரு முனை முன்னகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிப்பு - இளந்திரையன் மன்னார் முள்ளிக்குளம் பகுதியூடாக இருமுனைகளில் முன்னேற முயற்சி விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இருமுனைகளால் முன்னேறிய இராணுவத்தினரை வழிமறித்த போராளிகள் படையினர் மீது பதில் தாக்குதல்களை நடத்தி படையினரின் விரட்டியடித்துள்ளனர். நேற்றைய தாக்குதலில் சிறீலங்கா படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புக்களையடுத்து படையினர் தமது நிலைகளுக்கு பின்நகர்ந்துள்ளனர். முறியடிப்புச் சமரில் களமாடி ஐந்து போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். முறியடிப்புச் சமர் நேற்று மாலை 3 மணிமுதல் மாலை 6 மணி…

  6. வடக்குடன் போர் மட்டுப்படுத்தப்படுமா? -விதுரன் - வடக்கு - கிழக்கில் நூறு வீதமாயிருந்த யுத்தத்தை, கிழக்கை முழுமையாகக் கைப்பற்றியதன் மூலம் ஐம்பது வீதமாகக் குறைத்து விட்டதாக அரசு கருதுகிறது. இதுவரை நாளும் வடக்கு - கிழக்கில் நடைபெற்ற போர் இனிமேல் வடக்குடன் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டத

  7. தொப்பிகல கொண்டாட்டங்களால் குழம்பிப் போன தமிழ் அரசியல்வாதிகள் -(அஜாதசத்ரு) [22 - July - 2007] மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள தொப்பிகலயை அரச படையினர் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் அது தொடர்பான நிகழ்வை `கிழக்கின் உதயம்' என்று பிரகடனப்படுத்தி ஒரு தேசிய விழாவாக கொண்டாடி உளமகிழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் `கிழக்கின் உதயம்' விழா' மிகப் பிரமாண்டமான தேசிய விழாவாக அதாவது சுதந்திர தின வைபவம் போன்று நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, பீரங்கி வேட்டுகள் என்பவற்றுக்கு மத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தொப்பிகல வெற்ற…

  8. யாழ் "அல்டி எலக்ரோனிக்ஸ்" உரிமையாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொலை. வெள்ளிக்கிழமை மாலை 4-30 மணியளவில் உந்துருளியில் வந்த இரண்டு ஆயுததாரிகளால் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனமான அல்டி எலக்றோனிக்ஸ் உரிமையாளர் செல்லத்துரை சண்முகராஜா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Leading businessman shot dead in Jaffna city Two gunmen, riding a motorbike, shot and killed a leading businessman in Jaffna city Friday around 4:30 p.m., Police said. Tension prevailed among the business community in Jaffna peninsula following the slaying of Sellaththurai Shanmugarajah, 56, the owner of Aldi Electronics. The motive behind the killing is believed to be vengeance for his son's a…

  9. எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் சுப.வீ. வலியுறுத்தல் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் இன்று நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் "ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். நிகழ்…

  10. இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்துவதாக எத்திஹாட் அறிவிப்பு வீரகேசரி நாளேடு அபுதாபியின் எத்திஹாட் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான தனது சேவைகளை செப்டெம்பர் 9ஆம் திகதி முதல் நிறுத்தப்போவதாக நேற்று அறிவித்துள்ளது. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களினால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்ததையடுத்தே இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எத்திஹாட் விமான சேவை நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் குமார் டி.சில்வா ,.... இவ்வருடம் முதலாம் அரையாண்டில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 30 வீதத்தால் வீ…

  11. மங்கள - ரணில் கூட்டணியில் ஆலோசகராக சந்திரிக்கா. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் அணிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணியில் ஆலோசகராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க செயற்பட இருக்கின்றார். இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கூட்டணியை வரவேற்று, சந்திரிக்கா ஏற்கனவே வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க அடுத்த மாதம் நாடு திரும்ப இருப்பதாக, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் அணியினர் தெரிவித்துள்ளனர். -Puthinam-

  12. உயர்பாதுகாப்பு வலயப் பிரகடனத்தை கண்டித்து வடக்கு - கிழக்கில் பணிப்புறக்கணிப்பு: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு திருகோணமலை மாவட்டம் மூதூர், சம்பூர் பிரதேசங்களை உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியதை கண்டித்து வடக்கு - கிழக்கில் நாளை மறுநாள் புதன்கிழமை (25.07.07) பணிப்புறக்கணிப்பு கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை: மூதூர் கிழக்கை அதியுயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியதற்கு எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாளை மறுநாள் புதன்கிழமை (25.07.07) வடக்கு - கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கடமை புறக்கணிப்பும், கதவடைப்பும் …

  13. மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்?: அமைச்சர் அதாவுல்லா கிழக்கு வெற்றி நிகழ்ச்சியில் மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்? என்று சிறிலங்கா அமைச்சர் அதாவுல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மகிந்தவுக்கு அதாவுல்லா வாழ்த்துத் தெரிவித்தமையை மற்றொரு அமைச்சரான ஹக்கீம் மறைமுகமாகத் தாக்கி நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். ஹக்கீமின் நாடாளுமன்றப் பேச்சுக்கு பதிலளித்து அதாவுல்லா கூறியுள்ளதாவது: கிழக்கின் உதயம் நிகழ்ச்சியில் மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தியதன் மூலம் சில அரசியல்வாதிகள் கூறுவது போல் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவிதமான இக்கட்டும் ஏற்படவில்லை. புலிப் பயங்கரவாதிகளை தோற்…

  14. 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடக்காது 2011ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி தேர்தல் இல்லை வீரகேசரி நாளேடு அரசாங்கம் எக்காரணம் கொண்டும் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தாது. அத்துடன் 2011 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி தேர்தலும் இடம்பெறாது. இதற்கான தேவைகள் தற்போது ஏற்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சி பலமடைய ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்யின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று மஹரகமையில் இடம்பெற்ற கட்சியின் 17 ஆவது தேசிய சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: எதிர்வரும் 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொதுத்தேர்த…

  15. தந்திரோபாயப் பின்னர்கவுகளின் இறுதி அத்தியாயம் அண்மிக்கிறது -சி.இதயச்சந்திரன்- இலங்கையிலுள்ள பாடசாலைகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி, தொப்பிகலை மீட்பினைக் கொண்டாடும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மன்னர் இட்ட கட்டளைக்கு மறுப்புக் கூறினால் தண்ணீர் இல்லாக் காட்டுப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என்பது இலங்கையின் ஜனநாயக மரபு. இருப்பினும் இலங்கையின் தேசியக் கொடியை பாடசாலையொன்றில் எரித்த சார்ள்ஸ் அன்ரனியின் நினைவு மீண்டும் வருகிறது. தொப்பிகலையில் விறகு வெட்டச் சென்றதாக எதிர்க்கட்சிகளும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வெல்வதற்கே அங்கு சென்றதாக ஆளும் கட்சியும் அரசியல் இலாப நட்டக் கணக்குப் பார்க்கிறார்கள். மூத்த தளபதிகளுடன் 800 போராளிகளும் த…

    • 0 replies
    • 1.6k views
  16. ஞாயிறு 22-07-2007 23:40 மணி தமிழீழம் [சிறீதரன்] மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இதுவரை 4 ஆயிரத்திற்கு மேல் படுகொலை - கஜேந்திரன் மகிந்த ராஜபக்ச அவர்கள் சனாதிபதியாக பதவியேற்ற பின்னர் "மகிந்த சிந்தனை"யின் அடிப்படையில் ஐக்கிய இலங்கையினுள் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் தமிழ் மக்கள் மீது அரசியல் தீர்வொன்றை திணிப்பதற்கான வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து நடை முறைப்படுத்தி வருகின்றார். அதன் பிரகாரம் தமது திட்டத்திற்கு முட்டுக் கட்டையாக இருக்கக் கூடிய தமிழ் தேசிய ஆதரவாளர்கள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், தமிழ் கல்விமான்கள் என தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இது வரையில் 4000 திற்கும் அதிகமானவர்களை கொலை செய்து 1000 திற்கு…

  17. சந்தேக நபர்களை 48 மணி நேரம் தடுத்து வைக்க சட்ட முன்வரைபு [ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2007, 15:46 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவில் சந்தேக நபர்களை எதுவித தாக்கீதும் இல்லாமல் 48 மணி நேரம் தொடர்ந்து தடுத்து வைக்க வகை செய்யும் சட்ட முன்வரைபு சிறிலங்கா நாடாளுமன்றில் வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலைகள், கொலை முயற்சிகள், கடத்தல்கள், பாலியல் வல்லுறவு, மரணத்தை ஏற்படுத்தும் கொள்ளைகள் உள்ளிட்ட குற்ற வழக்குகளுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. puthinam

  18. தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் போரில் முறை கெரில்லா பாணியிலான தாக்குதலுக்கு மாற்றப்பட்டமை சிறீலங்காப் படைகளுக்கு அபாயகரமானது என பிரபல படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். சண்டேரைம் ஆங்கில பத்திரிகையில் வெளிவந்திருக்கும் பத்தியிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார். கிழக்கை சிறீலங்காப் படைகள் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவந்துள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு அணிகள் பெருமளவில் நடமாடுகின்றனர். இந்த நடமாட்டம் என்பது சிறீலங்கா அரச உயர் அதிகாரிகள், படை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், அரசாங்க வேட்பாளர்கள், என பலரும் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நில…

    • 1 reply
    • 1.6k views
  19. நடுக்கடலில் இரகசிய சந்திப்பு - (கலைஞன்) [22 - July - 2007] *ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் இந்திய- இலங்கை கடற்படைகள் நடுக்கடலில் நடத்திய இரகசிய சந்திப்பு, இந்திய கடற்படை அதிகாரியின் திடீர் யாழ்குடா நாட்டு விஜயம், இந்திய- இலங்கை கடற்படையின் கூட்டு ரோந்து சாத்தியமானதென்ற இந்தியாவின் அறிவிப்பென கடந்தவாரம் பல சூடான விடயங்கள் நடந்தேறின. சிறிது காலம் மௌனமாகவிருந்த இந்திய அரசு, இலங்கையரசின் கிழக்கு மாகாண வெற்றிக்குப் பின் தனது சுய நடவடிக்கைகளை இலங்கையில் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம் சர்வதேச கடல் எல்லையில் இந்திய- இலங்கை கடற்படையினர் இரகசிய சந்திப்பொன்றை நடத்தி கடற்புலிகளை ஒடுக்குவது மற்றும் இலங்கையிலிருந்து அகதிகள் தமிழ…

  20. பெரு வெற்றியை பெற்றுத்தரும் வகையில் நீண்டகால நோக்கில் போர் நுட்பங்களை மாற்றி, மாற்றி அமைப்பதில் தேசியத் தலைவர் அவர்கள் வல்லவர். தலைவர் அவர்களின் போர் நுட்ப முறைகளை இன்று உலக நாடுகளின் இராணுவ மேதைகள் ஏற்றுக்கொள்கின்றார்கள், புகழ்கின்றார்கள் என்று "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி தெரிவித்துள்ளார். புலிகளின் குரலின் கிளிநொச்சி வானொலி மன்றத்தின் முத்தமிழ்கலை அரங்க நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கரும்புலிகள் நாளை முன்னிட்டு புலிகளின் குரல் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறையால் பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வினையடுத்து இந்த சிறப்பு முத்தமிழ் கலையரங்கம் நடத்தப்பட்டது. …

  21. திரியாய் மக்கள் வெளியேறுகின்றனர் [ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2007, 17:52 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராம மக்கள் அச்சம் காரணமாக தமது கிராமத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் திரியாய் கிராமத்தில் பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதை தொடர்ந்து மக்கள் அங்கு வசிக்க அச்சமடைந்துள்ளனர். 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வன்முறைகளால் இக்கிராமத்தில் வசித்த 1,200 வரையான குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டில் மீளக்குடியமர்ந்ததில் 850 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். தற்போது பதினொரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட…

  22. கிழக்கில் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் உலக நாடுகளிடம் நிதிபெற அரசு திட்டம். கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகக்கூறி, இணைத்தலைமை நாடுகள், மற்றும் பல உலக நாடுகளிடம் நிதியுதவி பெறுவதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டு வருகின்றது. இதற்கென கிழக்கில் சில அபிவிருத்தித் திட்டங்களை வரைவதற்கென, அரசினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. செப்ரெம்பர் மாதம் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நடைபெற இருப்பதால் அதனை இலக்கு வைத்து இவ்வாறான நகர்வுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. உலக நாடுகளிடம் இருந்து 1.8 பில்லியன் ரூபாவினை நிதியுதவியாகப் பெறுவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த அரசு, உலக நாடுகளின் கண்டனம் காரணமாக அ…

  23. ஞாயிறு 22-07-2007 18:09 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பு டெல்கந்த சந்தையில் குண்டு கண்டுபிடிப்பு ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா தலைநகர் கொழும்புக்கு சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள டெல்கந்த பகுதியில் அமைந்துள்ள சந்தைக்கு அருகில் நேரம் கணித்து வெடிக்க வைக்கும் எட்டு கிலோ எடையுள்ள குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதனையடுத்து குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அவ்இடத்துக்கு விரைந்து குண்டினை செயலிழக்கச் செய்ததாகவும். pathivu

  24. ஞாயிறு 22-07-2007 16:35 மணி தமிழீழம் [மயூரன்] எச்சந்தர்ப்பத்திலும் புலிகளுக்கு நிதியை வழங்கவில்லை - மகிந்த ராஜபக்ச எச்சந்தர்ப்பத்திலும் தான் விடுதலைப் புலிகளுக்கு பெரும் நிதியைக் கொடுக்கவில்லை என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை நாவலப்பிட்டியில் நடைபெற்ற பொதுக்கூகூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எத்தகைய சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகளுக்கு பெரும் நிதியைத் தான் வழங்கவில்லை. விடுதலைப் புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு நிதியை வழங்கியதாகச் சொல்லப்படும் பரப்புரையில் எதுதுவித உண்மைத் தன்மையும் இல்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆளும் அரசாங்கம் கலைக்கப்படும் என பரப்புரைகள் மேற்கொள்ளப்படுக…

  25. சர்வதேச சமூகத்தின் இயலாமையின் சின்னங்கள் [21 - July - 2007] `கிழக்கின் உதயம்' கொண்டாட்டங்களின் போது நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை இராணுவ முனைப்பைத் தளர்த்தும் உத்தேசம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்திருந்தது. அரசியல் தீர்வு யோசனைகளை வகுக்கும் செயன்முறைகளை துரிதப்படுத்துமாறு சர்வ கட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவிடம் ஜனாதிபதி வேண்டுகோளொன்றை விடுத்தபோதிலும், அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவைத் திரட்டும் அக்கறை அவருக்கு இருப்பதாக அந்த உரை உணர்த்தவில்லை. மாறாக, இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கு அரசாங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.