Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இன்று காலை வடமராட்சி மாலுசந்திப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினரால் வீதியில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இத் தாக்குதலில் கலைப்பீட மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். ராஜரட்ணம் பிரியன், பாலசுந்தரம் செல்வா ஆகிய இருவருமே தாக்குதலுக்கு உள்ளானவர்களாவர். -Sankathi-

  2. அளுத்கம பொலிஸ் காவலரனை சேர்ந்த இரு ஊர்காவற்படை வீரர்கள் காணமற்போயுள்ளனர். தந்திரி மலையருகே இரு ஊர்காவற்படை வீரர்கள் நேற்று இரவு முதல் காணமற் போயுள்ளனர் . தந்திரிமலை அளுத்கமை பொலிஸ் காவலரனைச் சேர்ந்த இரு ஊர்காவற்படை வீரர்களும் கடமையின் நிமித்தம் சைகிளில் வெளியே சென்றுள்ளனர் . என வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார் . இவர்கள் இருவரும் இதுவைரை பொலிஸ் காவலரணிற்கு திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஒருவரது சைக்கிள் பொலிஸ் காவலரணிற்கு அருகேயிருந்து மீட்கப்பட்டுள்ளது -Tamilwin-

  3. சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைக்கு 54.6 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரவு. சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைக்கு 54.6 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு, அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரின் இலங்கை வருகை, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் ஆளும் சுதந்திரக் கட்சி சார்பில் தீர்வுத் திட்டம் முன்வைத்தமை, விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் ஆகியனவை நடந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் இக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் கூறியுள்ளது. …

    • 3 replies
    • 1.7k views
  4. கொழும்பில் ரணில் மற்றும் மங்கள சமர வீர தலைமையில் நடந்த அரசுக்கு எதிரான பேரணியில் இலட்சம் (100,000) மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மகிந்தவனின் கிழக்கின் உதயம் வெற்றி முழக்கத்துடன் இப்பேரணி நடத்தப்பட்டுள்ளதானது மகிந்தவனின் செல்வாக்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதுமட்டுமன்றி பேரணியாளர்கள்.. மகிந்தவை படத்தில் உள்ளது போல சித்தரித்துள்ளதானது.. சிங்கள அரசியல் என்பது பிரபாகரன் என்ற கதாநாயகன் இல்லாமல் நடக்காது என்பதை கோடிகாட்டி நிற்கிறது. படம் தமிழ் நெற். Thousands march against Rajapaksa govt. in Colombo [TamilNet, Thursday, 26 July 2007, 09:25 GMT] Around 100,000 people marched in Colombo Thursday in the first main rally jointly organised by S…

    • 1 reply
    • 1.2k views
  5. கறுப்பு யூலைத் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய வர்கள் மீது ஜ.தே.க ஆதரவாளர்கள் தாக்குதல் 83ம் ஆண்டு ஆடிக்கலவரத்தின் நினைவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்த வாழ்வதற்கான மன்றத்தின் செயற்பாட்டாள்கள் மீது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று கொழும்பு ஹைட் பாக் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் அலை பேரணியில் கலந்து கொண்டவர்களாலேயே தமது செயற்பாட்டாளர்கள் தாக்கப்பட்டதாக வாழ்வதற்கான மன்றத்தினர் அறிவித்துள்ளனர். 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக அப்போது ஆட்சியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்ட வன்முறைகள் குறித்து வாழ்வதற்கான மன்றத்தின் செயற்பாட்டாளர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்த போதே இந்த தசம்பவம் இடம்பெற்றுள்ளது…

  6. வெள்ளி 27-07-2007 16:34 மணி தமிழீழம் [மயூரன்] ஆழிப்பேரலை வீடமைப்புத் திட்டத்தில் வடக்கு கிழக்கு புறக்கணிப்பு - அக்சன் ஏய்ட் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக அக்சன் ஏய்ட என்ற மனிதாபிமான அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தென் பகுதி சிங்கள மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் 86 சதவீதம் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் வடக்கில் 12 வீதமான திட்டங்களும் கிழக்கில் 26 வீதமான வீடமைப்பு பணிகளுமே நிறைவடைந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கமும் மனிதாபிமான தொண்டர் அமைப்புகளும் ஆழிப்பேரலையின் பின்னர் வெள…

  7. பிரதமர் பதவி என்ற கனவுடன் தமிழர்களின் துயரில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே குளிர் காய்கின்றார். ஜ வெள்ளிக்கிழமைஇ 27 யூலை 2007 ஸ ஜ யோகராஜன் ஸ விடுதலைப் புலிகளை அழித்து வெற்றி கொள்வோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பிரதமர் பதவி என்ற கனவுடன் தமிழ் மக்களின் துயரத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார் என்று மேலக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி ந. குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ் பேசும் மக்களை துன்பத்தினுள் மேலும் மேலும் தள்ளுவதை தனது அரசியல் அஸ்திரமாக இன்றைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மகிந்த ராஜபக்ஷவை ஜன…

    • 1 reply
    • 1.3k views
  8. 25.07.07 அன்றைய காலக்கணிப்பு

  9. ரணில்-மங்கள ஒப்பந்தம் செல்லாது: ஐ.தே.க. சனநாயக குழு [வெள்ளிக்கிழமை, 27 யூலை 2007, 11:55 ஈழம்] [ப.தயாளினி] ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் செல்லாது என்று மகிந்த அரசாங்கத்தில் இணைந்திருக்கும் ஐ.தே.க.அதிருப்தியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. ஐ.தே.க. அதிருப்தியாளர்கள் குழுவான ஐ.தே.க. சனநாயக குழுவைச் சேர்ந்த அமைச்சர் காமினி லொகுகெ நேற்று ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்த போது அது கட்சியின் அனைத்து நிலைகளிலும் முன்வைக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் ரணில்-மங்கள ஒப்ப…

  10. வெளிநாடுகளுக்கு `கோள்' சொல்லும் தேவை ரணிலுக்கு இல்லை [27 - July - 2007] * அநுராதபுரம் மாவட்ட ஐ.தே.க. எம்.பி.- பி.ஹரிசன் பேட்டி - ரொஷான் நாகலிங்கம்- நாட்டின் இன்றைய நெருக்கடி மிக்க அவல நிலைக்கு அரசின் நிர்வாகம் சீரற்றிருப்பதே காரணம். இதனை மறைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் மீது சேறுபூசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களை சுதந்திரமாக வாழ வைப்பதே எமது கட்சியின் நோக்கமென ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் தெரிவித்தார். இந்த அவல நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு இன்று போராட்டத்தை முன்னெடுக்கும் இத் தருணத்தில் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத…

  11. காலி பொலிஸ் நிலையம் அருகில் வெள்ளை வான் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டதால் குண்டுப்புரளி காலி நகரில் புதன்கிழமை ஏற்பட்ட குண்டுப்புரளியால் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மக்களும் அச்சத்துடன் நகரைவிட்டு வெளியேறினார்கள். காலி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வெள்ளை வான் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்ததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது. அந்த வெள்ளை வான் பழுதடைந்ததால் அதன் சாரதி அதனைச் செலுத்த முடியாமல் பொலிஸ் நிலையம் அருகில் நிறுத்திவிட்டு, கராஜ் ஒன்றுக்கு சென்றுவிட்டார். அவர் திரும்பிவரத் தாமதமானது. அதனை அறியாத சிலர் அந்த வான் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருப்பதை அவதானித்து, அதனுள் குண்டு இருப்பதாக புரளியை கிளப்பிவிட்டனர். இது நகர் எங்கும் பரவியதால…

  12. அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல். அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பயணித்த உழு ஊர்தி மீது நேற்று விடுதலைப்புலிகளால் பதுங்கித்தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கஞ்சிகுடிச்சாற்றுப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. -Puthinam-

    • 3 replies
    • 2.1k views
  13. கடந்த கால வரலாற்று தவறுகளில் இருந்து பாடம் கற்க மறுக்கும் மகிந்த அரசு -புரட்சி (தாயகம்)- பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த 19 ஆம் நாள் மகிந்த அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ?குடும்பி மலை வெற்றிவிழா? நிகழ்வானது எந்தவிதமான களிப் பேருவகையோ அல்லது எதிர்பார்ப்புக்களோ இன்றி சப்பென்று நிறைவடைந்துவிட்டது. பௌத்த பேரினவாதத்தினை மாணவர்கள் உள்ளடங்கலாக அனைத்து சிங்கள மக்களின் மனங்களிலும் ஊட்டி தனது தொடர்ச்சியான போர் முயற்சிகளுக்கு ஆதரவு தேடுவதற்காகவும் மக்களின் வாழ்க்கைச் செலவுச்சுமை மற்றும் ஏனைய பொருளாதார நெருக்கடிகளையும் மறைப்பதற்காகவும் மிகவும் சிறந்த வழியாக இவ்விழா அமையும் என்று மகிந்த அரசினால் பெரிதும் நம்பப்பட்டபோதிலும் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறாக ச…

  14. Posted on : 2007-07-27 அரசியல் விழிப்புணர்வுக்கு வழிகாட்டும் ஊடகவியலாளன் மனித வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. ஆனால் போராட்டமே வாழ்க்கை என்றாகிவிட்டால்.....? ஆயுதம் தாங்கிய போராளிகளினது மட்டுமல்ல, எழுது கோல் எடுத்த எழுத்தாளர்களின் ஊடகவியலாளர்களின் வாழ்க்கையும் உலகில் இன்று போராட்டம் என்றாகிவிட்டது. அதுவும் ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களின் நிலையோ மிக மோசம். இருப்பு என்ற வாழ்வியலுக்குள் இருந்து இல்லாமை என்ற சூனியத்துக்குள் சாவுக்குள் எக்கணமும் வல்வந்தமாகத் தூக்கி வீசப்படலாம் என்ற பேராபத்து நிலைக்குள்தான் ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களின் அன்றாடப் பணி இன்று கட்ட விழ்கின்றது. இந்த அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தாம் நேசிக்கும் ஊட கப் பணியை விட்டொழிந்தவர்கள் விட்டொளித்தவர்கள் பல…

  15. மனோ கணேசன் சூளுரை தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டில் உயிருக்குப் பயப்படாது நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் இந்த அரசை கூண்டோடு அழித்தெறிய வேண்டும். இவ்வாறு மேலக மக்கள் முன்னனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சூளுரைத்தார். நேற்று மாலை ஐ.தே.க வும் சு.க மக்கள் பிரிவினறும்; இணைந்து ஏற்பாடு செய்திருந்த அரசுக்கு எதிரான மாபெரும் கண்டனப் பேரணியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது : இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு விலைவாசிப் பிரகச்சினை,சுகாதராப் பிரச்சிலை,மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை விடவும் அவர்களுக்…

    • 1 reply
    • 1.7k views
  16. சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றார் தந்தை; அதில் சிக்குண்டு மரணமானார் 5 வயது மகள் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற ஒருவரின் மகள், அந்த இடத்தில் விளை யாடிய போது மின்சாரத்தில் சிக்குண்டு மரணமானார். இந்தப் பரிதாபகரமான சம்பவம் பாசையூர் பகுதியில் நேற்று இடம்பெற் றது. மின்சாரத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர் தோமஸ் கென்னடி ஒஸ்பசியஸ் கௌசிகா என்ற ஐந்த வயதுச் சிறு மியாவார். சம்பவம் தொடர்பாக யாழ்.நீதிவான் இ.த.விக்னராஜா நேற்று மரண விசாரணைகளை நடத்தினார். கடற்றொழிலாளியான தோமஸ் கெனடி ஒஸ்பசியஸ் நேற்றுமுன்தினம் இரவு சட்டவிரோதமாக மின்சார இணைப்பைப் பெற்றிருக்கிறார். நேற்றுக்காலை மின் இணைப்புப் பெறுவதற்குப் பயன்படுத் திய வயர்களை அகற்றாமல் வெளியே சென்றுவிட்டார். அவரது மகள் நேற்று அந்தப்…

  17. மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் தம்மை மீளக்குடியமர்த்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர் இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பிரதேச மக்கள் அந்த பாதுகாப்பு வலயத்திற்குள் மீளக் குடியேறி வசிப்பதற்கான அனுமதியைக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு இன்று கூட்டாக மகஜரொன்றை அனுப்பி வைத்துள்ளனர் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குரிய தகுதி வாய்ந்த அதிகாரியான மேஜர் ஜெனரல் பராக்கிரம பண்ணிப்பட்டியவிற்கு மூதூர் இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் என குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்டப்டுள்ள இந்த மகஜரில் யுத்த அகதிகளாக இடம் பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியு…

  18. வெள்ளை சிற்றூந்துக் கும்பலால் தமிழ் வர்த்தகரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா கொள்ளை கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபாவினை, வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுதக் குழுவொன்று கொள்ளையிட்டுள்ளது. தமிழருக்கு சொந்தமான நாணயமாற்று நிறுவனத்திற்குச் சென்ற நான்கு பேர் கொண்ட ஆயுதக் குழுவினர், பணத்தைப் பறிமுதல் செய்த பின்னர், அங்கு பணியாற்றிய பணியாளர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். துப்பாக்கி தாரிகளில் ஒருவரை மடக்கிப் பிடிக்க முனைந்த பணியாளர் ஒருவர் சுடப்பட்ட நிலையில், கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறீலங்கா காவல்துறையினரும், படையினரும் அதிகமாகக் குவிக்கப்பட்டு, கண்காணிப்பில் ஈடுபடும் இந்தப் பகுத…

  19. சிறீலங்கா பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் சிறீலங்கா பட்டினியால் வாடும் பத்துநாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் உலக உணவு திட்டத்தினால் இது தொடர்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் ஆப்கானிஸ்தான், சாட், கொங்கோ, எதியோப்பா, கென்யா, பலஸ்தீனம், சோமாலியா, இலங்கை, சிம்பாவே, சூடான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. சிறீலங்காவில் கிழக்கு மாகாணத்தில் 74 000 ற்கு அதிகமானோர் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் மற்றும் சொந்தக்கிராமங்களில் குடியமர்ந்தவர்களில் 90 வீதமானோர் உலக உணவு திட்டத்தினால் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது எனவும் ஏனைய 10 வீதமானவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் உணவுப்பொருட்களை வழங்கி வர…

  20. மல்லாவி மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை மல்லாவி மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரி கதிர்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: மல்லாவி அரசினர் மருத்துவமனையில் நோயாளர்களுக்கான மருந்துகளும் ஏனைய மருந்து வகைகள் பலவும் முடிவடைந்துள்ளன. குருதி அழுத்த நோயாளர்களுக்கான மருந்து வகைகள் தீர்ந்து விட்ட நிலையில் தொடர்ந்து அவர்களுக்கான மருந்து வகைகளை வழங்க முடியாமையினால் அவர்கள் வாத நோய்க்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சத்திர சிகிச்சைக்கூடங்களில் கட்டுத்துணி இல்லாமையினால் பெரும் இடர்பாடுகளை நாம் சந்தித்து வருகின்றோம். குழந்தைகளுக்கான பாணி மருந்துகள் முற்றாக தீர்ந்து விட்டன. இதனா…

  21. மகிந்தவின் தேயிலைப் பரிசை உதாசீனம் செய்த முன்னாள் பிரித்தானியப் பிரதமர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ, முன்னாள் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயருக்கு பரிசாகக் கையளித்த தேயிலையை அவர் ஊதாசீனம் செய்து உத்தியோக இல்லத்தில் விட்டுச் சென்றுள்ளார். 140 பிரித்தானியப் பவுண்டுகளுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய பொருட்களை பிரித்தானிய அமைச்சர்கள் பரிசாகப் பெற்றால், பதவி விலகும்போது அவற்றை அவர்களே கொள்வனவு செய்ய வேண்டும், அல்லது பொதுச்சொத்தாக விட்டுச்செல்ல வேண்டும். ரொனி பிளேயர் விட்டுச்சென்ற பொருட்களில் அமெரிக்க ஆளுநரும், பிரபல ஹொலிவூட் நடிகருமான சுவாசெனீக்கர், குவைத் மன்னர் வழங்கிய நாணயம், சிறீலங்கா அதிபர் கொடுத்த தேயிலைப் பொதி என்பன அடங்குகின்றன. -பதிவு

  22. வெள்ளி 27-07-2007 03:22 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் - அமெரிக்கா மீண்டும் அக்கறை சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி பேணப்பட வேண்டும் எனஇ அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய அமெரிக்காவின் மனித உரிமைகள்இ ஜனநாயகம்இ மற்றும் தொழிலாளர்களுக்கான அமைச்சின் உதவிச் செயலாளர் ஜெஃப்றி கிரில்லாஇ புஸ் அரசாங்கம் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார். அத்துடன்இ கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தில் பணியாளர்களை அதிகரித்துஇ மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பது பற்றி ஆலோசிக்கப்படுவதாகவும் ஜெஃப்றி கிரில்லா கூறியிருக்கின்றார். …

  23. வெள்ளி 27-07-2007 03:57 மணி தமிழீழம் [தாயகன்] வெள்ளை சிற்றூந்துக் கும்பலால் தமிழ் வர்த்தகரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா கொள்ளை கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபாவினைஇ வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுதக் குழுவொன்று கொள்ளையிட்டுள்ளது. தமிழருக்கு சொந்தமான நாணயமாற்று நிறுவனத்திற்குச் சென்ற நான்கு பேர் கொண்ட ஆயுதக் குழுவினர்இ பணத்தைப் பறிமுதல் செய்த பின்னர்இ அங்கு பணியாற்றிய பணியாளர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். துப்பாக்கி தாரிகளில் ஒருவரை மடக்கிப் பிடிக்க முனைந்த பணியாளர் ஒருவர் சுடப்பட்ட நிலையில்இ கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறீலங்கா காவல்துறையினரும்இ படையினரும் அதிகமா…

  24. வெள்ளி 27-07-2007 00:11 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஜாதிக ஹெல உருமய முன்வைத்துள்ள கோட்பாடுகள் தவறானவை - பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி இலங்கையில் தமிழ் மக்களின் தாயக பிரதேசம் இல்லை என்றும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடையாது என்றும் ஜாதிக ஹெல உருமய முன்வைத்துள்ள கோட்பாடுகள் தவறானவை என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜாதிக ஹெல உருமய அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபைக்கு வழங்கிய யோசனைகள் குறித்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே பேராசிரியர் தாயசிறி இந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஜாதிக ஹெல உருமயவினர் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசம் குறித்தம் சுய ந…

    • 1 reply
    • 1.3k views
  25. சிறிலங்கா- அவுஸ்திரேலியா இடையே புதிய வான் போக்குவரத்து ஒப்பந்தம் [வியாழக்கிழமை, 26 யூலை 2007, 16:08 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே புதிய வான் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 1950 ஆம் ஆண்டு வான் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் பின்னர் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயணிகள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை எந்த வகை வானூர்தி மூலமும் அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண், பிறிஸ்பேர்ன், பேர்த் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் எந்தவிதக் கட்டுபாடுமின்றி எடுத்துச் செல்ல இந்த ஒப்…

    • 1 reply
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.