ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
மகிந்தவின் கட்சி உடைந்தது: மங்கள - சிறீபதி இணைந்து புதிய கட்சி தொடக்கம். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடைந்துள்ளது. கட்சியின் அதிருப்தியாளர்கள் இணைந்து "சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மகாஜன பிரிவு)" என்ற புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். மகிந்தவினால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகியோர் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் லொக்கு பண்டாரவுக்கு "சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மகாஜன பிரிவு)" சார்பில் மங்கள சமரவீரவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்: 1. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பி…
-
- 3 replies
- 1.8k views
-
-
நஞ்சு கலந்த உணவை உட்கொண்ட படையினர் ஒன்பது பேர் மயக்கம் Written by Ellalan - Jun 19, 2007 at 02:09 PM யாழ். பொலிகண்டி படை முகாமில் நேற்று காலை படையினருக்கு வழங்கப்பட்ட உணவில் நஞ்சுத் தன்மை இருந்ததால் அதனை உட்கொண்ட படையினர் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் இதில் ஒரு படைச்சிப்பாய் இறந்துள்ளார். மயக்கமடைந்த படையினர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என தெரிவிக்கப்படுகின்றது. சங்கதி
-
- 4 replies
- 2.7k views
-
-
செவ்வாய் 19-06-2007 15:19 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மருத்துவமனையில் கப்பம் கேட்கும் காவல்துறை யாழ்ப்பாண மருத்துவமனையில் நிலைகொண்டுள்ள காவல்துறையினர் பொது மக்களிடம் கப்பம் கேட்டு துன்புறுத்திவருவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றார்கள். யாழ்ப்பாண மருத்துவமனையில் வளாகத்தில் ஒரு காவல்துறை நிலையம் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது குறிப்பிட்ட காவல் நிலையம் போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்படும் திடீர் மரணங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் கூடிய காணம் அடைந்தவர்களின் நலனுக்காக இந்த காவல் துறை நிலையம் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் கூட தற்போது யாழ் குடா நாட்டில் இடம் பெறும் இனம் தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டு மரணங்கள் மற்றும் தற்கொலைகள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வளைந்து கொடுக்காத மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன்: கோத்தபாய ராஜபக்ச. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்- வளைந்து கொடுக்காத மனிதர். நிலங்களைக் கைப்பற்றுவது இராணுவத்தின் இலக்கல்ல. விடுதலைப் புலிகளை பலவீனமாக்குவது தான் எமது நோக்கம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு வார ஏடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: முன்னைய ஈழப் போர்களின் போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இராணுவ உத்தி என்பது இராணுவத்தினர் தொடர்பானது. இராணுவத்தினருக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். இராணுவ உத்தியை வகுப்பது என்பது முற…
-
- 6 replies
- 2.1k views
-
-
சந்திரிகா மீண்டும் அரசியலில் ஈடுபட ஜனாதிபதி வழங்கிய உயர் பாதுகாப்பு [19 - June - 2007] தற்போது லண்டனில் வசித்து வரும் ஷ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகளாகிய யசோதாவுக்கு கடந்த 15 ஆம் திகதி லண்டனில் திருமணம் நடந்தது. இவ்வாறு யசோதாவை மணம் முடித்திருப்பவர் றொஜர் வாக்கர் என்னும் வைத்திய கலாநிதியாகும். வெள்ளை இனத்தவரும் பிரிட்டிஷ் பிரஜையுமாகிய இவர் லண்டனிலுள்ள சென்ற் ஜோன் வைத்தியசாலையில் தற்போது பணியாற்றி வருகின்றார். கடந்த 15 ஆம் திகதி லண்டனில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவருடைய திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர்கள் மட்டுமன்றி ஷ்ரீலங்காவையும் லண்டனையும் மற்றும் வெளிநாடுகளையும் சேர்ந்த பிரமுக நண்பர்களும் கல…
-
- 3 replies
- 1.7k views
-
-
`புலிகளை தோற்கடித்து முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கம்' [19 - June - 2007] * அமைச்சர் மித்ரபால தெரிவிப்பு உலகிலேயே அதிக பலம் வாய்ந்த ஆயுதக் குழுவுடன் யுத்தம் செய்தவாறே அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இது மிகவும் கடினமான காரியமாக அமைந்தாலும் நாட்டு மக்களின் நலன்களைப் புறக்கணிக்க முடியாது என்று அமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தெரிவித்தார். நவன்வெலயில் அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: உலகின் பயங்கரவாதக் குழுக்களிலொன்றான புலிகள் நாட்டில் நாசகார செயல்களில் ஈடுபட்டுள்ளனர். புலிகளைத் தோற்கடித்து, வடகிழக்கு உட்பட முழு நாட்டையும் அபிவிருத்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
மகிந்தவை ஜனாதிபதியாக்க புலிகளுக்கு பணம் கொடுத்த பலர் அரசில் அங்கம் [19 - June - 2007] * ரிரான் அலஸ் கூறுகிறார் கே.பி.மோகன் மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக புலிகளுக்கு பணம் கொடுத்து உதவிய பலர் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருவதாக விமான நிலைய விமான சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ரிரான் அலஸ் நேற்று திங்கட்கிழமை மாலை அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது குற்றம்சாட்டினார். கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததோடு சுகம் பெற்று நேற்று அங்கிருந்து வெளியேறிவந்த பின்னரே பொறளையிலுள்ள அவரது வீட்டில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தா…
-
- 0 replies
- 1.4k views
-
-
அரசியல் தீர்வென்ற போர்வையில் தொடரும் நில அபகரிப்பு யுத்தம்? [19 - June - 2007] * அரசில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் செய்யவேண்டிய காரியம் "அது ஒரு பெரியதவறு. அப்படியான தவறொன்று நடந்திருக்கக் கூடாது. இனிமேல் அது நடவாது" என்று தான் தமிழர் கொழும்பு `லொட்ஜ்"களிலிருந்து வெளியேற்றியது தொடர்பாக வருத்தம் தெரிவிக்கையில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் கூறிவைத்தார். பின்னர் ஜெனிவா நகரில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO)96 ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அது தொடர்பாக சற்று வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும், தமிழர் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தும் விதத்திலேயே ஜ…
-
- 1 reply
- 962 views
-
-
இன நெருக்கடி தீர்வு யோசனை 6 வாரத்துக்குள் பூர்த்தியாகும் [19 - June - 2007 * பேராசிரியர் திஸ்ஸ விதாரண நம்பிக்கை ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகளை எதிர்வரும் 6 வார காலத்திற்குள் வெளியிட முடியுமென சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தவிசாளரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியன ஒற்றை ஆட்சி முறையினையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கான பேராசிரியர் திஸ்ஸ விதாரண சமர்ப்பித்துள்ள யோசனைகள் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரை…
-
- 2 replies
- 1k views
-
-
நோர்வேயை வெளியேற்ற வேண்டும் டொனி பிளேயரை இணைத்துக்கொள்ளக்கூடாது: ஜே.வி.பி. சமாதான செயற்பாடுகளில் இந்தியா, ஜப்பான் உட்பட எந்த நாடும் தலையிடக்கூடாது என்கிறது ஜே.வி.பி. பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் தனது பதவிக் காலம் முடிந்தபின்னர் இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் மத்தியஸ்தராக செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். வெளிநாட்டவர்கள் இலங்கையின் பிரச்சினையில் ஆரம்பத்திலிருந்து தலையிட்டமையின் காரணத்தினாலேயே நாடு இன்று இக்கட்டான நிலையில் உள்ளது என்று ஜே.வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். நோர்வேயையும் சமாதான செயற்பாடுகளிலிருந்து வெளியேற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் …
-
- 2 replies
- 1.2k views
-
-
முஸ்லிம்கள் கடத்தப்படாதபோது அமைச்சர் ஹக்கீம் ஏன் ஓலமிடுகிறார்?: ஆளுநர் அலவி மௌலானா சிறிலங்காவில் முஸ்லிம்கள் கடத்தப்படாதபோது அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏன் ஓலமிடுகிறார் என்று மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அலாவி மௌலானா கூறியுள்ளதாவது: அரசியல் இலாபங்களுக்காக ஆட்கடத்தல் சம்பவங்களை ஐக்கிய தேசியக் கட்சி பெரிதாக்குகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினரே முஸ்லிம் வர்த்தகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களில் கடத்தப்போவதாகவும் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தப்பிக் கொள்ளுமாறும் தகவல்கள் அனுப்புகின்றனர். அதேபோல் இந்த விடயத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏன் பெரிய இரைச்சல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் எனப் புரியவில்லை. ஒன்றிரண்…
-
- 0 replies
- 988 views
-
-
Posted on : Tue Jun 19 9:01:07 EEST 2007 சீனாவிலிருந்து யுத்த உபகரணங்கள் கொள்வனவு செய்ய அரசு ஏற்பாடு சீனா நிறுவனம் ஒன்றிடமிருந்து யுத்தத்திற்கான உப கரணங்களை இலங்கை அரசு கொள்வனவு செய்யவுள்ளது என்று சீன பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் செய்து கொள்ளப்பட்டதெனவும் அப்பத்திரிகையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அப்பத்திரிகைத் தகவலில் மேலும் தெரியவருவதா வது: இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் தேவையான யுத்த உபகரணங்களை 37 கோடி60 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் இலங்கை அரசு கொள்வனவு செய்யவுள்ளது. இந்த ஆயுதக் கொள்வனவிற்கான பணத்தின் 25 வீதத்தை முதலில் செலுத்தி மிகுதியைப் 10 மாதத் தவணையில் செலுத்துவதற்கு உடன்படிக்கை செய்துகொள்ள…
-
- 2 replies
- 1k views
-
-
Posted on : Tue Jun 19 8:52:31 EEST 2007 வன்னி நிலைமை அறிய ஐ.தே.கட்சிக் குழு பயணம் வன்னி மக்களின் நிலைமையைக் கண்டறிவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்று அடுத்தவாரம் வன்னி செல்லத் தீர்மானித்துள்ளது. இந் தக் குழுவிற்கு அக்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தலைமை வகிப்பார். நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு அங்கு செல்லும் இக்குழு, அங்குள்ள நிலைமையை ஆராயும், பல பொது அமைப்புகளினதும் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கூறுகையில், தற்போது வன்னி நிலைமை மிக மோசமாகிவருகிறது. உணவுப் பொருள்களின் தட்டுப்பாடு உட்பட பல பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலைமையை ந…
-
- 1 reply
- 930 views
-
-
Posted on : Tue Jun 19 8:23:28 EEST 2007 புலிகளின் இறுவட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்பான வீடியோ இறுவட்டுக்களை டோகா கட்டாரில் இருந்து இலங்கைக்கு எடுத்துவந்ததாகக் கூறப்படும் இரு தமிழர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து நேற்றுக் கைதுசெய் யப்பட்டனர். டோகா கட்டாரில் தொழில் புரியும் இவர்கள் நேற்று இலங்கை திரும்பினர். கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களது உடைமைகள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டன. இதன்போது அவர்கள் எடுத்துவந்த பொருள்களில் விடுதலைப் புலிகள் அமைப் புத் தொடர்பான பொருந்தொகையான வீடியோ இறுவட்டுக்கள் இருந்தமை பொலி ஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட இரு தமிழர்களும் மன்னார் மற்றும் கற்…
-
- 3 replies
- 1.6k views
-
-
Posted on : 2007-06-19 கொழும்பின் தவறான போக்கினால் ஈழத் தமிழர்களுக்குக் கிட்டும் நன்மை தலைநகர் கொழும்பின் தங்குமிட விடுதிகளில் இருந்து அதிகாலை வேளையில் படையினராலும் பொலிஸாராலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்கள், அந்தக் கட் டாயத்தின்போது தாங்கமுடியாத பெரும் மன உளைச்சலுக் கும், அசௌகரியத்துக்கும், நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் ஆளானார்கள் என்பது உண்மைதான். ஆனால் அரச அதி காரவர்க்கத்தின் அந்த அறிவிலித்தனமான செயற்பாட்டின் பெறு பேறாக, தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் எழுந்த அதிர்வலைகள், அந்த நடவடிக்கையால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கும் சாதக மான புதிய நிலைப்பாட்டைத் தோற்றுவித்திருப்பதா…
-
- 0 replies
- 838 views
-
-
கொழும்பில் எட்டு பெண்கள் உட்பட 37 பேர் கைது. கொழும்பு மஹரகம பிரதேசத்தில் நேற்று அதிகாலை 8 மணிமுதல் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் எட்டு பெண்கள் உட்பட 37 வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை, காவல்பதிவு. கொழும்பில் தங்குவதற்கான காரணம், அடையாளத்தை உறுதிசெய்யாமையே கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என காவல்துறை அத்தியேட்சகர் வழமைபோல தெரிவித்துள்ளார். இவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். -Pathivu-
-
- 0 replies
- 859 views
-
-
பிரித்துப் பார்ப்பது தவறு! கொழும்பிலிருந்து தமிழரை வெளியேற்றியமை பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளான விடயமாகியுள்ளது. ஒருபுறத்தில் வெளியேற்றுதலுக்கான கண்டனமும் மறுபுறத்தில் வெளியேற்றுதலுக்கான மன்னிப்புக் கோருதலும் நிகழ்ந்தன. தமிழரை வெளியேற்றியமை குறித்து எழுந்த பலமான கண்டனங்களைத் தொடர்ந்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மன்னிப்புக் கோரிய அதேவேளை கடும் நிபந்தனைகளுடன் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கொழும்புக்குள் கொண்டு சென்றமையும் ஏற்கனவே அதிகம் பேசப்பட்ட விடயங்கள்தான். ஆயினும் இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முற்றுப்பெற்றுவிட்டதாக இல்லை. ஒருபுறத்தில் ஆளும் கட்சியில் ஒருதரப்பினர் அத்தகையதொரு மன்னிப்புக் கோரவேண்டியதில்லை. அமெரிக்காவோ அன்றி மேற்கு நாட…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் தொடரும் வன்முறைகளால் பிரிட்டனுக்கு நேரடியான பாதிப்பு இலங்கை அரசாங்கம் மீது பிரிட்டன் எவ்வித நிர்ப்பந்தத்தையும் பிரயோகிக்கவில்லை. ஆனால் உலகமயமாக்கலின் கீழ் எந்தவொரு நாடும் தனியான தீவாக இயங்க முடியாது என இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் தெரிவித்தார்.இலங்கையில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் வன்முறைகளால் பிரிட்டனுக்கு நேரடியான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே நாம் இலங்கையின் சமாதான முயற்சிகளில் அக்கறை காட்டுகின்றோம் என்றும் சில்கொட் கூறினார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் பிரிட்டனின் செயற்பாடுகள் என்ற தலைப்பில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே டொமினிக் சில்…
-
- 1 reply
- 1.3k views
-
-
நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக முட்டாள்த்தனமான வழிகளில் நகரும் சிறிலங்கா அரசாங்கம்: சண்டே லீடர் சாடல் ஒரு நெருக்கடியில் இருந்து மறு நெருக்கடிகளுக்கு முட்டாள்த்தனமான வழிகளில் சிறிலங்கா நகர்கிறது என்று மகிந்த அரசாங்கத்தை கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே லீடர்" வார இதழ் சாடியுள்ளது. "சண்டே லீடர்" வார இதழின் அரசியல் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனைத்துலக சமூகத்தினால் தனிமைப்படுத்தப்படும் நிலையை அடைந்துள்ளது. அதன் பிரதான காரணம் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களின் தீவிரம் தான். அதேசமயம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் வீதிகளில் இறங்கி போராட உள்ளது. மகிந்…
-
- 3 replies
- 1.3k views
-
-
செவ்வாய் 19-06-2007 02:35 மணி தமிழீழம் [சிறீதரன்] தனது அரசியல் எண்ணங்களுக்கு எதிரானவர்களை தண்டிப்பதில் மகிந்த சிறீலங்காவின் உயர்நீதி மன்றம் சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது அரசியல் எதிராளிகளை துன்புறுத்துவதில் ஈடுபடுவதாக குற்றம்சுமத்தியுள்ளது. ரிறான் அலெஸ் அவர்களது கைது நடவடிக்கைக்கு பின்னாலும் அரசியல் காரணங்கள் காணப்படுவதாக பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை ரிறான் அலெஸ் ஐ திங்கட்கிழமை பிணையில் செல்வதற்கும் அடிப்படை மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளவும் சிறீலங்கா உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளமை தெரிந்ததே. ஸ்ரான்டட் பத்திரிகை குழுவின் உரிமையாளர் ராஜபக்ஸ முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய நண்பன் என…
-
- 1 reply
- 1k views
-
-
புலம் பெயர் மக்களால் நடாத்தப்பட்ட வெல்க தமிழ் சொல்கின்ற செய்தி என்ன?
-
- 2 replies
- 1.7k views
-
-
ஹிட்லரைப் போல் செயற்படும் ராஜபக்ச: சூரியராச்சி [திங்கட்கிழமை, 18 யூன் 2007, 21:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஹிட்லரைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்படுவதனை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் சிறிலங்கா அமைச்சர் சிறீபதி சூரியராச்சி சாடியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று திங்கட்கிழமை சிறீபதி சூரியராச்சி மற்றும் வானூர்தி சேவைகள் முன்னாள் தலைவரும் ஸ்டான்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் குழும உரிமையாளருமான ரிரான் அலெஸ் ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். "அமைச்சரவையிலிருந்து மங்கள சமரவீரவும் சிறீபதி சூரியராச்சியும் நீக்கப்படும் முன்னர் வரை ஒரு சகோதரனைப் போல் ராஜபக்ச இருந்தார். ஆனால் இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்ட பின்னர் அவர்கள…
-
- 0 replies
- 1.4k views
-
-
மகிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் நாளை பலப்பரீட்சை. மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பலப்பரீட்சை நடைபெற உள்ளது. அரசாங்கம் அமைத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலுக்கு மகிந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு தாவிய 17 பேருக்கான அமைச்சகங்களை அமைக்க 65,756,100 ரூபாவுக்கான கூடுதல் நிதி நிலை அறிக்கையை மகிந்த அரசாங்கம் நாளை தாக்கல் செய்ய உள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை இந்த கூடுதல் நிதி நிலை அறிக்கைக்கு எதிராக வாக்களிக…
-
- 11 replies
- 2.1k views
-
-
தாவடி, கொக்குவில் கிழக்கு மற்றும் குளப்பிட்டிப் பகுதிகள் சுற்றி வளைப்பு. இன்று அதிகாலை முதல் தாவடி மற்றும் கொக்குவில் கிழக்கில் ஒரு பகுதி இராணுவ சுற்றி வளைப்புத் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அதிகாலை 4.00 மணியளவில் குளப்பிட்டி வீதி, ஆனைக்கோட்டை வீதி, காங்கேசன்துறை வீதி, காளிகோவிலடி, பிடாரி அம்மன் கோவில் உட்பட பல பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுல் நடத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலைமை காணப்பட்டது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் பல நூற்றக்கணகான இராணுவத்தினர் இந்தப் பகுதியில் நிலைப்படுத்தப்பட்டு இந்த தேடுதல் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்மைமயால் பதட்டமான நிலமை காணப்பட்டது. இதேவேளை குறிப்பிட்ட பகுதியில் இர…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா வில் தனக்குத் தானே கரி பூசிக் கொண்ட சிறிலங்கா. சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் கட்டடத் தொகுதியில் மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமே அம்பலப்பட்டு அவமானத்துக்குள்ளாகியது. மனித உரிமைகள் குறித்த 5 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 11 ஆம் நாள் முதல் நடைபெற்று வரும் இக்கூட்டத் தொடரில் அனைத்துலக மனித உரிமைகளின் நிலைமை மற்றும் அதனை பாதுகாப்பது பற்றி பல்வேறு கலந்துரையாடல்கள், கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இக் கூட்டத்தொடரில் பங்கு கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகளு…
-
- 4 replies
- 2.1k views
-