ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல்; காரணம் என்ன? இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன குறிப்பிட்டார். கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் இருபத்தி இரண்டு பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணி புரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலா…
-
- 0 replies
- 484 views
- 1 follower
-
-
நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆய்வு செய்கிறது மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் குறித்து விசேட விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நிலைமை குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் தொழிற்சங்கம் மனுவை சமர்ப்பித்தது, தற்போதைய மருந்து தட்டுப்பாடு மனித உரிமை மீறல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். https:…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
கோட்டாவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி ரணில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் - அநுர Published By: DIGITAL DESK 5 25 FEB, 2023 | 09:57 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல ஆகவே அவருக்கு தேர்தல்,மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அக்கறை இல்லை, தான் குறிப்பிடுவதே அரச சுற்றறிக்கை என்று சர்வாதிகாரமாக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாட்டுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலடி கொடுப்போம் என மக்கள் விடுதலை முன்னணியின…
-
- 0 replies
- 876 views
- 1 follower
-
-
யாழ். பல்கலைக் கழகத்தில் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை Published By: T. SARANYA 25 FEB, 2023 | 11:09 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை உட்பட பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலைவார நிகழ்வுகளின் போது, மூன்றாம் வருட மாணவர்களால், இரண்டாம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான – முறை சார்ந்த விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக நான்கு பேருக்கும் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர் வதிவிடம…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இசை நிகழ்சியில் லேசர் கதிரொளிகள், புகைகள் (ஸ்மோக்) போன்றவை அளவுக்கு அதிகமாக பாவிக்கப்பட்டமையாலையே நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கண் எரிச்சல், கண் வீக்கம், தொடர்ச்சியாக கண்ணீர் வருதல் போன்ற பாதிப்புக்களுக்கு உள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சுமார் 50க்கும் மே…
-
- 3 replies
- 379 views
-
-
மது போதையில் வந்த பொலிஸாரால் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் - ரோஹினி குமாரி Published By: DIGITAL DESK 5 24 FEB, 2023 | 02:04 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக கல்வி அமைச்சில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த ஆசிரியர்கள் சிலர், மது போதையில் வந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போத…
-
- 2 replies
- 334 views
- 1 follower
-
-
உக்ரைனிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறக் கோரும் ஐ.நா. தீர்மானம்: இலங்கை புறக்கணிப்பு! உக்ரைனிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறக் கோரி ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்திற்கு, இலங்கை உட்பட 32 நாடுகள் வாக்களிக்கவில்லை. ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து விலக்கிக் கொள்ளவும், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரும் சிறப்புத் தீர்மானம், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவளித்தும், 7 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்த நிலையில், இலங்கை, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 32 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். எனினும், இந்த சிறப்புத் தீர்மானம், 141 நாடுகள் ஆதரவுடன் ஐக்கிய நாடுகளி…
-
- 4 replies
- 566 views
-
-
கனடாவில் வதியும் யாழ்.பெண்மணியால் காணியற்றோருக்கு காணிகள் பகிர்ந்தளிப்பு புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்பவர் யாழ்ப்பாணத்தில் அவருக்குச் சொந்தமான காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்துள்ளார். வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட திருமதி வரதா சண்முகநாதன் என்பவரே தனக்குச் சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா இரண்டு பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார். பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருமதி வரதா சண்முகநாதனை பின்பற்றி புலம் பெயர் நாடுகளி…
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-
-
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பிரபாகரனே அழித்தார் -நீதியமைச்சர் குற்றச்சாட்டு வடக்கு மாகாண மக்களின் விவசாயம் உள்ளிட்ட வளங்களை அரசாங்கம் அழிக்கவில்லை என்றும் பிரபாகரனே அனைத்தையும் அழித்தொழித்தார் என்றும் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிபரின் கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பிரபாகரனே அழித்தார் வடக்கு மாகாண விவசாயத்தை, வளங்களை அரசாங்கம் இல்லாதொழிக்கவில்லை என்றும் பிரபாகரன், வடக்கு மாகாணத்தில் விவசாயத்துறையும், மக்களின் வாழ்க்கையையும் அழித்தொழித்தார் என்றும் தெரிவித்த அவர், காங்கேசன்துறை சீமெந்து…
-
- 6 replies
- 829 views
-
-
யாழிலுள்ள அரச காணிகளை பகிர்ந்தளிக்குமாறு காணியற்றோர் மக்கள் இயக்கம் கோரிக்கை Published By: DIGITAL DESK 5 24 FEB, 2023 | 04:25 PM யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம் மகஜர் கையளித்துள்ளது. நீண்ட காலமாக தாம் வாடகை வீடுகளில் வசித்து வருவதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் , தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமையால் , பெருந்தொகை வாடகையை செலுத்த முடியாது தவித்து வருவதாகவும் , அதனால் யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை காணியற்ற தமக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரி…
-
- 0 replies
- 612 views
- 1 follower
-
-
இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படுகின்றன! ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன. மனித உரிமைகள் குழுவின் 137வது அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் 24 வரை நடைபெறுகின்றது. இதில் இலங்கை, பெரு, பனாமா, எகிப்து, சாம்பியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன. 173 உறுப்பினர்கள் குழுவில் அடங்கும் இந்த 6 நாடுகளினதும் மதிப்பாய்வை, 18 சர்வதேச சுயாதீன நிபுணர்கள் மேற்கொள்ளவுள்ளனர். இதற்கமைய, மனித உரிமை மீறல்கள், பாலின அடிப்…
-
- 1 reply
- 470 views
-
-
இலங்கை இறுதிப் போரில் காணாமல் போனவர்கள் எங்கே? ராணுவம் பதிலளிக்க வவுனியா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முழு விவரம் கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 11 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை இறுதி கட்ட போரில் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள், ராணுவத்தினர் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற வகையில் வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்) மற்றும் உருத்திமூர்த்தி (கொலம்பஸ்) ஆகியோர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்களை அவர்களது மனைவிகள்…
-
- 0 replies
- 550 views
- 1 follower
-
-
ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் – சஜித் ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் இல்லை என்றால், இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது எவ்வாறு என தாம் கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். இந்நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைத்து தேர்தலை நிறுத்துவதற்கு பிரதான ச…
-
- 0 replies
- 197 views
-
-
2,000 ரூபா நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுமாறு வாசுதேவ நாணயக்கார முன்மொழிவு 2000 ரூபா நோட்டுக்களை நிதி அமைப்பில் இருந்து வாபஸ் பெறப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் , பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், நாட்டில் “கறுப்புப் பண” சந்தை செழித்து வருகிறது. ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவது குறித்த அறிவிப்பு வெளியானால், “கறுப்புப் பணம்” அம்பலமாகும் என்றார். ஊழலை ஒழிப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியமானது எனவும், இது தொழிலாளர் வர்க்கத்தின் சுமையையும் குறைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/241760
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
சுங்கத்துறையிடம் உள்ள புற்றுநோய் வைத்தியசாலை உபகரணங்களை விடுவிக்க உத்தரவு இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த புற்றுநோய் வைத்தியசாலையில் இயந்திரம் பழுதுபார்ப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களை உடனடியாக விடுவிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உத்தரவிட்டுள்ளார். சரக்குகளை இறக்குமதி செய்த தனியார் நிறுவனத்தினால் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே உபகரணங்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இலங்கை சுங்கத்தினால் ஏற்பட்ட தாமதத்தினால் அல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால், முன்னுரிமை அடிப்படையில் அத்தகைய உபகரணங்களை பெற்றுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். புற்று…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 % அதிகரிப்பு ! சந்தையில் வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 சதவீதம் அளவில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதானமாக மின்கலம், மின்குமிழ், கண்ணாடி, வாகன இலக்க தகடு மற்றும் இயந்திரம் உள்ளிட்ட பல உதிரிபாகங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக பஞ்சிகாவத்தை உதிரிபாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் சந்தையில் வாகன உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் சில நிதி நிறுவனங்கள் கடன் பத்திரங்களை விநியோகிக்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன உதிரிபாகங்களை நாட்டுக்கு கொண்டு வரும் வர்த்தகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அ…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
யாழ். சுன்னாகத்தில் வயோதிபத் தம்பதியிடம் நூதன மோசடி சுன்னாகத்தில் தனித்து வசிக்கும் முதியவர்களிடம் சமுர்த்தி உத்தியோகத்தர் எனக் கூறி நூதன மோசடி நடந்துள்ளது. சுன்னாகத்திலுள்ள வயோதிபத் தம்பதியின் வீட்டுக்கு கடந்த வாரம் சென்ற நபரொருவர் அரச உத்தியோகத்தர் போல தோன்றும் விதமாக ஆடையணிந்திருந்ததுடன் முகக்கவசமும் அணிந்திருந்தார். அந்தப் பிரதேசத்தின் சமுர்த்தி உத்தியோகத்தராக புதிதாக நியமனம் பெற்றவர் எனக் குறிப்பிட்டு அந்த முதியவர்களுக்கு சமுர்த்தி கொடுப் பனவு கிடைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமுர்த்திப் பயனாளியாக இணைக்க வேண்டுமென குறிப்பிட்டு விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்துள்ளார். பின்னர் சமுர்த்திப் பயனாளியாவதற்கு 30,000 ரூபா செலுத்த வேண்டுமெனக் குறிப…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
புலம்பெயர் முன்னணித் தமிழ் தொழிலதிபருக்கு புலனாய்வுத் துறையால் நெருக்கடி! முதலீட்டாளர்கள் அச்சம் புதிய இணைப்பு சர்வதேச தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருப்பது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை தோற்றுவிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில், இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்து இருக்கும் முதலீட்டாளர்களை இலங்கைக்கு வருமாறும் முதலீடு செய்யுமாறும் அழைப்பு விடுத்திருக்கின்றது. இப்படியான சூழலில், புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து முதலீடு செய்யும் தொழிலதிபர்களையும் அவர்களது ஊழியர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் புலனாய்வாளர்களின் செயற்பாடு இருப்பதன் கா…
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
அமெரிக்க C17 Globemaster விமானத்தில் ஆயுதங்களோடு கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விசேட அதிகாரிகள்!(VIDEO) 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய ஆட்சி மாற்றம் இடம்பெற்றது, அதன் பின்னணியில் இருப்பது அமெரிக்கா என்பது எல்லோருக்கும் தெரியும் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஆட்சிமாற்றத்தின், தொடர்ச்சியாகத்தான், அதாவது அந்த இடத்திற்கு யாரை கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்கா விரும்பியதோ அவரை கொண்டு வந்த பின்னரான தொடர் நடவடிக்கைகளைத் தான் நாங்கள் இப்போது பார்க்கின்றோம். அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த …
-
- 0 replies
- 396 views
- 1 follower
-
-
இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது : ஜனாதிபதி Published By: T. SARANYA 23 FEB, 2023 | 04:03 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது எனவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். தேர்தலை பிற்போடுங்கள்,நாங்கள் கூச்சலிட்டு பின்னர் அமைதியாகி விடுகிறோம் என என்னிடம் பலமுறை கோரிக்கை விடுத்தவர்கள் தற்போது நான் தேர்தலை பிற்போடுவதாக என்மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் எனவும் குறிப்பிட்டார். மேலும் பொருளாதாரத்தை பாதுகாக்கவே முன்னுரிமை வழங்குகி…
-
- 0 replies
- 573 views
- 1 follower
-
-
இலங்கைக்கு நம்பகரமான நிதி உத்தரவாதம் உடனடியாக தேவை - அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் Published By: RAJEEBAN 23 FEB, 2023 | 04:06 PM இலங்கைக்கான நம்பகமான நிதி உத்தரவாதம் மிகவும் அவசரம் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் யனெட் யெலென் தெரிவித்துள்ளார் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அழுத்தத்தில் உள்ள உருவாகிவரும் சந்தைகளிற்கான அர்த்தபூர்வமான கடன் நடவடிக்கைகளில் சீனா உட்பட அனைத்து கடன் கொடுப்பனவு நாடுகளும் கலந்துகொள்ளவேண்டும் என அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல நாடுகளின் முன்னோக்கிய வளர்ச்சியை தடுத்துவைத்துள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இணைந்து பணியாற்…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்தார் சஜித்! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் (வியாழக்கிழமை) நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார். நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் விஜய்காந்த், யாழ் மவட்ட அமைப்பாளர் கு.மதன்ராஜ், தொகுதி அமைப்பாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2023/1325105
-
- 1 reply
- 723 views
-
-
தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை – ஜனாதிபதி! தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விசேட உரையாற்றிய அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது தேர்தலை நடத்துவதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1325113 நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது – ஜனாதிபதி நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விச…
-
- 1 reply
- 317 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகாரம் புதிய திசையில் நகரும் போக்கினாலேயே ஒத்திவைக்க முயற்சி – அனுர உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகாரம் புதிய திசையில் நகரும் போக்கு காணப்படுகின்றமை காரணமாகவே ஆட்சியில் உள்ளவர்கள் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1325067
-
- 0 replies
- 434 views
-
-
மின்சார அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து பேசிய அதானி குழுமத்தின் அதிகாரிகள்! இந்தியாவின் அதானி குழுமத்தின் அதிகாரிகள், கொழும்பில் மின்சார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். மன்னாரில், அதானி குழுமத்தால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் டிசெம்பர் மாதம் நிறைவடைய உள்ளதாகவும், அதற்குத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1325070
-
- 0 replies
- 304 views
-