ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இந்தியாவுக்கு மகிந்தவின் தூதுவர் பயணம் இலங்கை நிலைமைகள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு விளக்கம் அளிக்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க புதுடில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டம், தமிழீழ விடுதலைப் புலிகளின் 4 வான் தாக்குதல்கள் உள்ளிட்டவை குறித்து இந்தியப் பிரதமருக்கு மகிந்த கொடுத்தனுப்பிய தகவல்களை லலித் வீரதுங்க கையளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் புதுடில்லியில் லலித் வீரதுங்க முகாமிட்டிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் பண்டாரநாயக்க அனைத்துல வானூர்தி நிலையத்து சிறப்பு இந்திய வான்படை வானூர்தி மூலம் ஒரு குழுவினர் வந்துள்ளனர். இந்திய …
-
- 3 replies
- 1.7k views
-
-
சர்வதேச சமூகத்தின் எரிச்சலை அறுவடை செய்யும் இலங்கை மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் இலங்கை அரசுத்தலைமை தொடர்ந்து காட்டிவரும் உதா சீனப் போக்கும், விசேட சட்ட விலக்களிப்பு சிறப்புரிமைகளை வசமாகப் பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்புத்தரப்பு புரிந்துவரும் கொடூரங்களும் சர்வதேச மட்டத்தில் விபரீத மான விளைவுகளை ஏற் படுத்தப்போகின்றன என்பதை முற்கூட்டியே இப்பத்தியில் மீண்டும் மீண்டும் வலி யுறுத்தி வந்தோம். அதுவே இப்போது யதார்த்தமாகி வருகின்றது. சர்வதேச நிலைப்பாடு இலங்கை அரசுத் தலைமைக்கு எதிராக ஒன்று திரண்டு, உருக்கொண்டு, விஸ்வ ரூபம் எடுத்திருப்பதையும் அதன் விளைவுகளையும் இலங்கை எதிர்கொள்ளும் வேளை வந்துவிட்டது என்றே தோன்று கின்றது. இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான சம…
-
- 1 reply
- 1.1k views
-
-
போர் மேலும் 20 ஆண்டுகள் நீடிக்கலாம் அதில் இந்தியா தலையிட முடியாது முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி . இலங்கையில் நடக்கும் போர் மேலும் 20ஆண்டுகள் நீடிக்லாம். ஆனால் அதில் இந்தியா தலையிட முடியாது என்று இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி கூறினார். கடலோர காவல்படை மற்றும் சென்னை பல்கலைககழகம் இணைந்து சென்னை துறைமுகத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தன. இலங்கை இந்தியா உறவு மற்றும் தற்போது நிலவிவரும் சூழ்நிலை என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி.ஆர்.ராகவன் பேசினார். கடலோர காவல்படைக்கு சொந்தமான சாரங்கப்பலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராகவன் மேலும் கூறியதாவது: இலங்கை மற்றும் இந்தியாவில் 1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் நிலவிய சூழ்நிலைகள்…
-
- 2 replies
- 1.7k views
-
-
கல்விச் செயற்பாடுகள் மீண்டும் குடாநாட்டில் குழம்பும் நிலையில்! கல்விமான்கள் கவலை தெரிவிக்கின்றனர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கல்விச் செயற்பாடுகள் முடக்கப்படும் ஒரு புறச் சூழ்நிலை உருவாகி வருகிறது. கடந்த பெப்ரவரி மாதத்தில் தோன்றியது போன்று மாணவர்கள் கல்விக்கு மீண்டும் குந்தகம் விளைவிக்கும் நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் கல்வியாளர்கள், புத்திஜீவி கள், பெற்றோர்கள் மத்தியில நிலவுகின் றது. மாணவர்களின் பாதுகாப்புக்குப் பங் கம் உண்டாக்கும் செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கக் கூடிய பின்புலங்கள் உரு வாக்கப்படுவதாக மேற்கண்ட தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர். மிகக் குறிப்பாக அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் றிச்சர்ட் பௌச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் இவ்வேளையில், மாணவர்…
-
- 0 replies
- 678 views
-
-
பல்கலை மாணவரின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்புறக்கூடாது என மாணவர் கோரிக்கை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் இயல்பான கற்றல் சூழலைப் பாதிக்கும் வகையில் செயற்படவேண்டாம் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றி யம் சகல தரப்புகளிடமும் கேட்டுள்ளது. ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த வெள்ளிக்கிழமை சிவில் உடை யில் வந்தவர்களால் பின் வாசலில் கட மைக்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை மிரட்டி விட்டு மாணவர் பொது அறை யில் நுழைந்து அங்கு பெரும் சேதங்களை விளைவித்துள்ளனர். எமது உறவுகளான கொல்லப்பட்ட மூன்று மாணவர்களின் உருவப்படங்களை உடைத்து நொறுக்கி யுள்ளனர். இந்தச் செயற்பாடு மாணவர்கள் மத்தி யில், ஜனநாயகத்தை மதிக்கும் மன நிலை யைக் குழப்பியுள்ளது. பெரும் அதிர்ச்…
-
- 0 replies
- 669 views
-
-
ஆயுதம் தாங்கிய குழு பல்கலைக்குள் புகுந்து நடத்திய அத்துமீறலுக்குக் கண்டனம் இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்கக் கோரிக்கை கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆயு தந் தாங்கிய குழு ஒன்று யாழ். பல்லைக் கழக வளாகத்திற்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டியதை பதில் துணைவேந்தரும் பீடாதிபதிகளும் கண்டித்துள்ளனர். அமரத்துவம் அடைந்த மாணவர் களின் புகைப்படங்களைச் சேதப்படுத்தி யமை சக மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டும் மனிதநேயமற்ற செயற்பாடா கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ள னர். பல்கலைக்கழகச் செயற்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய இத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு பீடாதிபதி கள் சகல தரப்புகளிடமும் கோரியுள்ளனர். இது சம்பந்தமாக நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது கடந்த சனிக்கிழமை அதிக…
-
- 0 replies
- 550 views
-
-
அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிக்க பிரிட்டன் இலங்கைக்கு உதவும் பிரதமர் பிளயரிடமிருந்து ஜனாதிபதிக்குக் கடிதம் நோர்வே அனுசரணையுடன் அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கு பிரிட்டன் உதவி புரிய உள்ளது. இது தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் இலங்கை ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இது சம்பந்தமான நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக தமது சார்பில் பேச்சு நடத்த இரு விசேட தூதர்களை அனுப்ப இருப்பது குறித்தும் அவர் பிரிட்டிஷ் ஜனாதி பதிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதர் பிரதமர் பிளயரின் கடிதத்தை ஜனாதிபதி காரியா லயத்தில் கையளித்தார் என்று நம்பிக்கையாகத் தெரியவந்துள்ளது. உதயன்
-
- 0 replies
- 706 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம்? இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ளதைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்றக்கூடும் எனத் தெரிகிறது. மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியோ அல்லது சிறிலங்கா அரசாங்கத்தை கண்டனம் செய்தோ ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமைகள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மணிநேரம் நடைபெற்றதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் இத்தகைய விவாதம் நடைபெற உள்ளது. ஐரோப்பிய அபிவிருத்திக் குழுவின் இலங்கை நிலைமைகள் தொடர்பான கூட்டம் எதிர்வரும்…
-
- 5 replies
- 2.4k views
-
-
உளவு வானூர்திகளின் பறப்பு வன்னியில் அதிகம்: கண்காணிப்புக் குழு போர் மேகங்கள் வடபோர் முனையை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கப் படையினரின் ஆளில்லாத உளவு வானூர்திகள் மற்றும் வானோடிகளை உடைய உளவு வானூர்திகளின் பிரசன்னம் வன்னி வான்பரப்பில் அதிகரித்துள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. போர் நிறுத்த கண்காணிப்புக் குழு, தனது ஏப்ரல் 23 - 29 வரையிலான வாராந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் விடுதலைப்புலிகள் வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதனைத் தொடர்ந்து படையினரின் உளவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இது வன்னிப்பகுதி மீது விரைவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தை உண்டு பண்…
-
- 1 reply
- 778 views
-
-
''சிறிலங்காவின் நிகழ்ச்சிநிரலை குழப்பியுள்ள வான்புலிகள்'' -வேனில்- விடுதலைப்புலிகளின் வான்படை சிறிலங்காவிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுமார் ஒரு மாதத்தில் (33 நாட்களில்) மூன்று தாக்குதல்களை விடுதலைப்புலிகளின் வானூர்திகள் சிறிலங்காவின் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது மேற்கொண்டுள்ளன. வன்னி வான்பரப்பில் வட்டமிட்டு தாக்குதல் நடாத்த முற்பட்ட வேளையில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக குண்டு வீச்சு விமானம் ஒன்றும் விடுதலைப்புலிகளின் வான் எதிர்ப்பு அணிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது முதற் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை சிறிலங்கா படைத்துறை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அதன்பி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வான் ஆதிக்கத்தின் விளைவு போரின் வியூகத்தை மாற்றும் -அருஸ்- வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை அவசரமாக பிரித்தது ஏன்? வலிந்த தாக்குதல்களின் மூலம் போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுக்கள் என்ற முயற்சிகளை முடக்கியது ஏன்? விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை இல்லாதொழிக்கப்போகின்றோம் என கங்கணம் கட்டிக் கொண்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தியது ஏன்? என்ற கேள்விகளுக்கான பதில் கடந்த ஏப்பிரல் 30 ஆம் நாள் வெளிவந்துள்ளது. அன்று நடைபெற்ற மேதின பேரணியின் போது அரசின் பிரதான அரசியல் கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனது தீர்வுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. அதில் தற்போதைய மாகாண சபைகள் கூட மறைந்து மாவட்ட சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதாவது இருந்த உலக்கையும் தேய்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கு படையினரின் முழுக் கட்டுப்பாட்டில்; வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விவரிக்கப்படும் அமைச்சர் போகொல்லாகம சொல்கிறார் கிழக்கில் திருகோணமலை, மட்டக் களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங் கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல் லாகம தெரிவித்தார். மல்வத்தை பீடாதிபதியை நேற்றுச் சந் தித்துக் கலந்துரையாடுகையில் அவர் இப்படிக் கூறினார். கிழக்கை முழுமையாகக் கைப்பற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அதனை வெளிநாட்டுத் தூதர்களுக்கு நாளை விளக்கிக் கூற உள்ளதாகவும் அமைச் சர் மேலும் தெரிவித் தார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டில் உள்ள ஏனைய பிரதேசங்களையும் மீட்கவேண்டும் என்று மல்வத்தை மகா நாயக்கர் அமைச்சருக்கு எடுத் துரைத்தார். மாகாண சபைத்திட்டம்…
-
- 6 replies
- 2.7k views
-
-
காரைநகர் படைமுகாமில் இருந்து பாரிய குண்டு வெடிப்புச்சத்தம். காரைநகர் படையினரின் முகாமிற்குள் இரவு பாரிய குண்டுச்சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளது. முகாமினுள் இருந்த ஆயுதக் களஞ்சியம் வெடித்திருக்காலாம் என பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 10.00 மணியளவில் காரைநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள படைமுகாமில் ஒரு மணித்தியாலயம் வரை கேட்ட பாரிய குண்டுச்சத்தங்கள் யாழில் பல பிரதேசங்களிலும் கேட்டதுடன் பாரிய அளவில் வெளிச்சம் தென்பட்டதாகவும் அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இதனால் மக்களிடையே பெரும் பதட்டம் நிலவியதாகவும் படைமுகாமில் உள்ள ஆயுதக்களஞ்சியங்களில் ஒன்று வெடித்துச் சிதறியிருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் இப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர். சம்பவதினம்…
-
- 4 replies
- 3.9k views
-
-
லண்டன் கோயிலுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டு பிரிட்டனில் அறக்கட்டளைகளுக்காகத் திரட்டப்படும் நிதி விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் அனுப்பப்படுவதாக பிபிசிக்கு கிடைத்த கசியவிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. பிபிசிக்கு கசிந்த ஆவணம் ஒன்றின் மூலம், இங்கு லண்டனில் டூட்டிங் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்புடன் உள்ள தொடர்புகள் குறித்த விசாரணைக்காக, இந்த ஆலயத்தின் வங்கிக் கணக்குகளை பிரிட்டனின் அறக்கட்டளைகளை ஒருங்கிணைக்கும் ஆணைக்குழு முடக்கியுள்ளது. அத்துடன் அந்த ஆலயத்தின் ஸ்தாபகரான நாகேந்திரம் சீவர…
-
- 15 replies
- 4.1k views
-
-
ன்னாரில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 5 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்பு [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 19:52 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் தம்பனையில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று முறியமடித்து 5 இராணுவத்தினரின் சடலங்களை கைப்பற்றியுள்ளனர். மன்னார் மடுவுக்கு தெற்காக உள்ள தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கை ஒன்றை பெரும் படை பலத்துடன் மேற்கொண்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை நீண்ட இம்மோதலில் படைத்தரப்பினருக்கு விடுதலைப் புலிகள் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி முன்நகர்வை முறியடித்தனர். இதில் 5 இராணுவத்தினரின் சடலங்கள் மற்றும் ஆயு…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்கா உளவுத்துறையின் முக்கிய அதிகாரியான எஸ். எச். நிலாம், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் கடந்த மாதம் 23ந் தேதியில் இருந்து இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ளனர்.. இவர் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை இந்தோனேசிய உளவுத்துறை மூலம் பெற்று ஆயுதக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் அழிக்கப்பட்டமைக்குக் காரணமாக இருந்தவர். அத்துடன் "மில்லேனியம் சிற்றி"யில் உளவுத்துறையினரின் பதுங்குவீட்டிற்குப் பொறுப்பாகவும் இருந்தவர்! Intelligence officer Nilam missing By Sunil Jayasiri A top intelligence officer of the Sri Lanka Army, Captain S.H. Nilam, who was the defence attaché at the Sri Lanka Embassy in Jakarta, has gone missing since last mo…
-
- 16 replies
- 4.7k views
-
-
கருணா குழுவிற்குள் பிளவு- பிள்ளையான தப்பி ஓட்டம்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 05:56 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையான் தனது 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். இந்த முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளார். கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையான் தனக்…
-
- 1 reply
- 847 views
-
-
மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - இரு விசேட அதிரடிப் படையினர் பலி. மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலைப்பகுதியில் ஞாயிறு காலை 9 மணியளவில் சிறப்பு அதிரடிப் படையினர் பயணம் செய்த உழவு இயந்திரம் கிளைமோர் தாக்குலுக்கு உள்ளாகியதில் இரு சிறப்பு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. காயமடைந்த ஐவரையும் வைதியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் எனினும் காயமடைந்தவர்களில் ஒருவர் அதன்போது இறந்துள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. -Pathivu-
-
- 1 reply
- 1k views
-
-
வவுனியா நாவற்குளத்தில் படையினரின் முன் நகர்வு முறியடிப்பு. வவுனியா நாவற்குளத்தில் சிறிலங்காப் படையினர் முன் நகர முற்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்துள்ளனர். ஓமந்தைக்கு மேற்காக உள்ள நாவற்குளம், நெல்லிக்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிமுதல் எறிகணை, பல்குழல் வெடிகணைகளின் செறிவான சூட்டாதரவோடு படையினர் முன் நகர்வை மேற்கொண்டனர். முன் நகர முற்பட்ட படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இதில் கொல்லப்பட்ட இரு படையினரின் சடலங்களுடன் படையினர் பின்வாங்கிச் சென்றுள்ளனர். விடுதலைப் புலிகளால் படைத்தரப்பினர் கைவிட்டுச் சென்ற ஆயுதத் தளபாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. -Put…
-
- 0 replies
- 1.1k views
-
-
லண்டன் முத்தரப்பு உச்சி மாநாடு குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை அமைச்சர் ரம்புக்வெல லண்டனில் எதிர்வரும் ஜூலையில் நடைபெறவிருப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளஅரசு விடுதலைப் புலிகள் நோர்வே அரசு உச்சி மாநாடு குறித்து உத்தியோகபூர்வ மான தகவல் எதுவும் அரசுக்குக் கிடைக்கவில்லை. பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான பேச் சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல இத னைத் தெரிவித்தார். பிரிட்டனில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, அரசு விடுதலைப் புலிகள் நோர்வே தரப்பு ஆகிய முத்தரப்புகளையும் கொண்ட உச்சி மாநாட்டை ஜூலை மாதம் நடத்தப்போவதாக பிரிட் டிஷ் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது. இது குறித்து கேட்டபோது இதுவரை உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் அரசுக்கு கிட…
-
- 0 replies
- 1.4k views
-
-
வான்பாதுகாப்பு சாதனங்களைக் கொள்வனவு செய்ய மூவர் குழு விரைவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு விடுதலைப் புலிகளின் வான்தாக்கு தல் அச்சுறுத்தலை தவிர்க்கும் பொருட்டு வான் பாதுகாப்புச் சாதனங்கள் மற்றும் நவீன ரக ராடர்களை கொள்வனவு செய் வதற்காக உயர் மட்டக் குழு ஒன்று வெளி நாடு செல்ல இருக்கிறது. மூவர் அடங்கிய இக்குழு ஆகப்பிந் திய தொழில்நுட்பத்துடன் கூடிய வான் பாதுகாப்புச் சாதனங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக ஆராய உள்ளது. அத்துடன் மிக் 29 ரக விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வது தொடர்பாகவும் இக்குழு ஆராயவிருக்கின்றது. வான்பாதுகாப்புமுறைச் சாதனங்கள், ராடர்களை இந்தியாவிலிருந்து அல்லது பாகிஸ்தானிலிருந்து கொள்வனவு செய் வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இக்குழு அந்த இரண்டு நாடுகளுக்கும…
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று இரவு மோதல் முல்லைத்தீவு கடற்ப்ரப்பில் நேற்று வெள்ளி இரவு 11:30 மணியளவில் கடற்புலிகளிற்கும் கடற்படையினருக்கும் இடையில் உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதல்லில் 10 கடற்புலிகள் பலியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு புல்மோட்டையிலிருந்து முல்லைதீவு நாயாறு நோக்கி புலிகளின் படகுகள் முன்னகர்வதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்தியதில் புலிகளின் 4 தற்கொலை தாக்குதல் படகுகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 12 replies
- 4.6k views
-
-
சிறிலங்கா அமைச்சரைச் சந்திக்க தமிழக முதல்வர் மறுப்பு. சிறிலங்கா அமைச்சரைச் சந்திக்க தமிழக முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளதாக தெரிகிறது. அண்மையில் சிறிலங்கா அமைச்சர் பி. சந்திரசேகரன், முதல்வர் கருணாநிதியை சந்திக்க அனுமதி கேட்டிருந்ததாகவும் ஆனால் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழாவை சுட்டிக்காட்டி சந்திரசேகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒருவரை சந்திக்க விரும்பாததால்தான் மலையக கட்சியைச் சேர்ந்த சந்திரசேகரனுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. -Puthinam-
-
- 0 replies
- 1.1k views
-
-
காலத்தின் தேவையே உண்மையான சேவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கற்பதற் குத் தேவையான சகல வளங்களும் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகப் பேரவை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது யாழ்.பல்கலைக்கழகத்தில் தற்போது கல்விச் செயற் பாடுகள் சீராக நடைபெறமுடியவில்லை என்ற நிலை யைப் பேரவையின் அறிக்கை வெளிப்படுத்தி நிற்கிறது. பல்கலைக்கழகக் கல்வி சாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பினால் இத்தகைய நிலை தோன்றியுள்ளது என்றும் பேரவையின் அறிக்கை எடுத்துரைக்கிறது. தாய்ச் சங்கத்தின் வேலைநிறுத்த நடவடிக்கை களுக்கு ஆதரவு தெரிவித்துத் தாம் பணிநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், கல்விச் செயற்பாடுகள் பாதிப்புறாதிருக் கும் வகையில் தாம் தொண்டர் சேவையில் ஈடுபடுவர் எ…
-
- 0 replies
- 777 views
-
-
[02 - Mஅய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஷ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான உத்தேச தீர்வுத் திட்ட யோசனைகளை விடுதலைப்புலிகள் முழுமையாக நிராகரித்துள்ள அதே சமயம், அரசியல் ஆய்வாளர்கள் இந்த தீர்வுத் திட்ட யோசனைகள் வெற்றியளிப்பனவாக இல்லையென்று கருத்துத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆட்சியில் இருக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மட்டத்தில் அதிகளவு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் சிவில் யுத்தத்துக்கு தீர்வு காணும் யோசனைகளை முன்வைத்துள்ளதுடன் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும் இவ்வுத்தேச தீர்வுத் திட்ட யோசனைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால…
-
- 0 replies
- 668 views
-