ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
செவ்வாய் 27-03-2007 22:27 மணி தமிழீழம் [சிறீதரன்] போகல்லாகம இணைத்தலமை நாடுகளின் தூதவர்களை சந்தித்துள்ளார் சிறீலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் போகல்லாகம செவ்வாய்கிழமை கொழும்பில் இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை நடாத்தியுள்தாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பின் போது விடுதலைப்புலிகளின் வான்படையினர் தொடர்பாகவும் அதை எதிர்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும் தெரியவருகிறது. இதன்போது அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக், ஜேர்மன் தூதவர் யூலியன் றீத், ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் யூலியன் வில்சன், நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கர், ஜப்பானிய பிரதிநிதி என்.ற்ரோ ஆகியோரும் பங்கேற்றதாக தெரியவருகிறது pathivu.com
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடிகாலை 6.00 மணியளவில் கரும்புலித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. வெடிமருந்து நிரப்பப்பட்ட வண்டி ஒன்றை செலுத்தி வந்த கரும்புலி வீரர் ஒருவர் படை இலக்கு மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவருகிறது. மட்டக்களப்பின் பிரதான முகாமைத் தாக்கவே வந்த வண்டியை தாம் தடுத்து நிறுத்தி பாரிய அழிவைத் தடுத்துள்ளதாக சிங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்திருக்கலாமென நம்பப்படுவதாகவும் படையினர் அறிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. யாழ்.களத்திற்காக (கணினிக்கு முன்பாகவிருந்து) மின்னல்
-
- 23 replies
- 6.4k views
-
-
செவ்வாய் 27-03-2007 20:10 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] காங்கேசன்துறை கடற்கரையில் துப்பாக்கி சந்தங்கள் மற்றும் வெடியோசைகள் காங்கேசன்துறை பதித்தித்துறை கடற்கரைப் பகுதியில் வெடியோசைகள் மற்றும் துப்பாக்கிச் சந்தங்களும் கேட்டுள்ளவண்ணம் உள்ளதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை 7.45 மணியளவில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறைப் பகுதியில் வெடியோசைகள் துப்பாக்கிச் சத்தங்கள் மற்றும் பரா வெளிச்சங்களும் செவிமடுக்கப்பட்டுள்ளளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பதிவு.கொம்
-
- 0 replies
- 2k views
-
-
வான் தாக்குதலின் மூலம் போரின் வியூகமே முற்றாக மாறியுள்ளது: இக்பால் அத்தாஸ் [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 14:21 ஈழம்] [க.நித்தியா] தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் போரின் வியூகமே முற்றாக மாறிவிட்டது என்று பிரபல இராணுவ விமர்சகர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு உலகின் பிரபல சஞ்சிகையான ஜேன் இதழின் சிறிலங்காவிற்கான முகவரும், பிரபல இராணுவ ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ், கட்டுநாயக்க மீதான தாக்குதல் குறித்து பி.பி.சி ஆங்கில சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த இரண்டு தசாப்தங்களாக தரை கடல் போர் அரங்குகளில் மாத்திரமே இடம்பெற்று வ…
-
- 1 reply
- 737 views
-
-
-ராய்ட்டர் செய்திச் சேவை- இலங்கையிடம் இருக்கும் யுத்த விமானங்களுடன் விடுதலைப் புலிகளின் இரண்டிற்கும் ஐந்திற்கும் இடைப்பட்ட சிறிய விமானங்களைக் கொண்ட விமானப் படையை ஒப்பிடமுடியாதெனக் கூறப்பட்டாலும் இலங்கை இராணுவத்திற்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றார்களென்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் வான் படையை குறைத்து மதிப்பிடுவது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2002 போர் நிறுத்தத்தின் பின்னர் வணிகக் கப்பல்களில் பாகங்களாக கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட விமானங்களை புலிகள் வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கட்டுநாயக்காவில் இடம்பெற்ற வான் தாக்குதலானது விமானப்படையினரை முற்றுமுழுதாக ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியதாக தோன்றுவதாகவும் பதில் நடவடிக்கை மே…
-
- 5 replies
- 2k views
-
-
சிலநாட்களாக தேனீ ஏன் பொய்த்தேன் சொரி(றி)ய வில்லை? Global warming காரணமாக மழை அப்பக்கம் அடிக்கவில்லையா?
-
- 2 replies
- 1.6k views
-
-
செவ்வாய் 27-03-2007 15:00 மணி தமிழீழம் [மயூரன்] மனித முகம் கொண்ட மீன் கடந்த வெள்ளிக்கிழமை சிலாபம் பகுதிகளில் மனித முகம் கொண்ட 60 கிலோ எடையுள்ள மீன் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. இதற்கு வால் காணப்படவில்லை எனவும் சிறகுகள் இரு அடிகளை கொண்டதாக காணப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கொழும்பு நாசா பரிசோதனை நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. pathivu
-
- 1 reply
- 1.2k views
-
-
ஸ்ரீபதி சூரியாராய்ச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராய்ச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிற்கு பிணை வழங்க கடுவெல நீதிவான் நீதிமன்றம் மறுத்துள்ளதுடன் எதிர் வரும் ஏப்ரல் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. விசேட காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராய்ச்சிக்கு பிணை வழங்கவேண்டும் என அவரது சட்டதரணி விடுத்த கோரிக்கையை கடுவல நீதிவான் லக்மால் விக்க்ரம் சூரிய நிராகரித்துள்ளார். http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 0 replies
- 811 views
-
-
இலங்கைக்கான விமான சேவைகலை கதே பசுபிக் ஏயார் வேஸ் இடைநிறுத்தம் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாக்குதலையடுத்து கதே பசுபிக் நிறுவனம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது. இத்தாக்குதல் குறித்து விரிவாக ஆராய்ந்து நிலைமைகளை கண்டறிந்த பின்னர் தமது இலங்கைக்கான சேவையை தொடர்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கதே பசுபிக் எயர்வேஸ் நிருவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனை தொடர்ந்து பல விமான சேவை நிறுவனங்கள் தமது இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்த போவதாக அறிவித்துள்ளன இருப்பினும் இது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.. http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 0 replies
- 789 views
-
-
சிறிலங்கா அரசின் கூற்றை கேலிசெய்யும் விமர்சகர்கள். - பண்டார வன்னியன் Tuesday, 27 March 2007 09:56 கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் வான்படை விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசதரப்பு கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் கோழைத்தனமான செயல் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. வானூர்திகள் மீது தாக்குதல் நடத்த புலிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இராணுவ விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கையிலையே இது ஒரு கேலிக்குரிய பேச்சு எனத்தெரிவித்தனர். சிறிலங்கா அரசபடைகள் தொடச்சியாக ம…
-
- 5 replies
- 2.1k views
-
-
ஈராக் அமெரிக்க இராணுவத்தில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர் [27 - March - 2007] புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த வெளிநாட்டுச் செயற்பாடுகளுக்கான தலைவர் எனக் கருதப்பட்டு வரும் மத்திய கிழக்கில் புலிகள் இயக்கத்துக்காகச் செய்யப்படும் உளவு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர் எனக் கருதப்படுபவருமான நபர் ஒருவரைக் கடந்த வாரம் கொழும்பு புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வைத்து பொலிஸ் விசேட நடவடிக்கைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த நபரிடம் மூன்று லப்டப் (Laptop) கணினிகளும், செய்மதி தகவல் ரிசீவர்கள் மற்றும் செய்மதித் தொடர்பு இருப்பு நிலையத்தைக் காட்டும் ஜி.பி.எஸ்.(Global Position System) உபகரணங்களும் அத்துடன், அமெரிக்கப் பாத…
-
- 2 replies
- 2k views
-
-
http://tamilvoice.dk/index.php?option=com_...0&Itemid=38
-
- 2 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா விமான நிலையப் பகுதியில் தாக்குதல் நடக்கிறதா? தற்போது கிடைத்த செய்தி என்று குறிப்பிடப்பட்டு இப்படியொரு செய்தி அல்ஜசீறா தொலைக்காட்சியில் சொல்லப்பட்டது. மேலதிக விபரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் பதிவிடுங்கள்
-
- 275 replies
- 59.8k views
-
-
அரசின் தலையாய கடமை எது? [27 - March - 2007] இலங்கையில் ஒரு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படுவது அவசியமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், மூத்த ஐ.நா. அதிகாரிகள் மற்றும் பல தேசிய சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விடுத்த வேண்டுகோள் இலங்கை அரச தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை காணப்படுகிறது. ஆட்கடத்தல்கள், பலவந்தமாக காணாமற் போதல்கள், கொலைகள் செய்யப்படுதல் அடங்கலான பல்வேறு மனித உரிமை மீறல்கள் நாளாந்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பது கண்கூடு. எவ்வாறாயினும், அவை அரசாங்கத்திற்கு அவப்பெயர் உண்டுபண்ணுவதற்கு மிகைப்படுத்தப்பட்டும் சோடிக்கப்பட்டும் வருவதாக அரசாங்க முக்கியஸ்தர்கள் வாதிட்டு வருகின்றனர். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் மீது மட்டும…
-
- 0 replies
- 830 views
-
-
கிளிநொச்சி: விடுதலைப் புலிகளின் விமானப்படையான வான்புலிகள் பிரிவின் தலைவராக இருந்தவர் சென்னை பொறியியல் கல்லூரியில் பி.இ படித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர் புலிகளின் வான் புலிகள் பிரிவினர். நள்ளிரவில் பலத்த பாதுகாப்பு மிக்க கொழும்பு விமான நிலையம் அருகே உள்ள விமானப் படை தளத்தை விமானம் மூலம் தாக்கி 3 பேரைக் கொன்று விட்டு பத்திரமாக தங்களது பகுதிக்குத் திரும்பியுள்ளது புலிகளின் விமானங்கள். புலிகள் நடத்தியுள்ள இந்த முதல் விமானத் தாக்குதல் இலங்கை அரசுக்கும், அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் சிங்கள மக்கள் உறைந்து போயு…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா வான்படையினரின் பெறியியல் பகுதிக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. - பண்டார வன்னியன் Tuesday, 27 March 2007 11:59 கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீதான விடுதலைப்புலிகளின் வான்படையினர் வீசிய குண்டுகள் வான்படையின் பொறியியல் பகுதிக்குள்ளும் வீழ்ந்து வெடித்ததாக சிறிலங்காவின் படைத்துறைத் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. இத் தாக்குதல்களில் விமானங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பி.பி.சி வான்படைத்தளப் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளித்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கான அனைத்து குடிசார்வான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை அங்கிருந்தும் வெளியேற…
-
- 0 replies
- 1.3k views
-
-
கட்டுநாயக்கா தாக்குதலில் சிறிலங்கா வான்படைக் கலங்களுக்கு ஏற்;பட்ட பாரிய இழப்புகள் மூடிமறைப்பு. - பண்டார வன்னியன் Tuesday, 27 March 2007 11:23 நேற்று அதிகாலை 12.45 மணியளவில் சிறிலங்காப் படையினரின் அதியுயர் பாதுகாப்பு தளமான கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலின் போது சிறிலங்கா வான்படைக் கலங்களுக்கும், இராணுவத்தினருக்கும் பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. இத்தாக்குதலின் போது இரண்டு போர் உலங்கு வானூர்த்திகள் மாத்திரமே சேதமடைந்தன என சிறிலங்கா அரசாங்க தரப்புத் தெரிவித்தாலும், தளப்பகுதி தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததாகவும் அப்பிரதேசம் புகைமண்டலமாக காட்சியளித்ததாகவும் உடனடியாக வெளிவந்த …
-
- 0 replies
- 1.4k views
-
-
அமைதி முயற்சிகளை நிறுத்துங்கள்- விடுதலைப் புலிகளை சிதறடியுங்கள்: ஜே.வி.பி ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 06:25 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ போர் நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகள் வானூர்திகளை கொள்வனவு செய்வதற்கும்இ வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது. அரசாங்கம் தவறான அதிகாரப்பகிர்வு என்ற கொள்ளையை விடுத்து விடுதலைப் புலிகளை நசுக்க வேண்டிய தருணம் இதுவே என்று ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பொரளையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசாங்கம்இ ஒரு காலை அமைதி முயற்சிகளிலும் மறுகாலை விடுதலைப் புலிகளை ஒழிக்கும் நடவ…
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழக ஊடகமான 'விடுதலை' யில் வந்த 'முதன் முதலாக விடுதலைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல்!' முதன் முதலாக விடுதலைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல்! ருசியாவின் `மிக்’ ரக சண்டை விமானங்களும் இசுரேலின் `கிபிர்’ ரக விமானங்களும் கடும் சேதம் அதிர்ச்சியில் உறைந்தது சிங்கள இராணுவம்! கொழும்பு, மார்ச் 26- விடுதலைப்புலிகள் முதன்முதலாக விமானத் தாக்குதலைத் தொடுத்து சிங்கள இராணுவத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர். சிங்களர்களின் விமானப்படைத் தாக்குதல் அத்துமீறிப் போய்க் கொண்டிருப்பதால், விடுதலைப்புலிகள் மிகப்பெரிய பதிலடி கொடுப்பார்கள் என்று உளவுத் துறையினர் கூறிவந்தனர். புலி வருகிறது, புலி வருகிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், உண்மையிலேயே புலி வந்து கிலிய…
-
- 5 replies
- 2.3k views
-
-
கொழும்பு மலையக பகுதிகளில் 40 பொதுமக்கள் கைது. - பண்டார வன்னியன் கொழும்பில் கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து 23 பொலிஸ் நிலைய பகுதிகளில் கூட்டாக பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதலில் 40ற்கு மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்டவர்கள் மலையகத்தை சேர்ந்த ஆண்கள் என தெரியவந்துள்ளது. சங்கதி
-
- 1 reply
- 906 views
-
-
நியூசிலாந்து தமிழ் மருத்துவ சங்கத்தின் முயற்சியினால் நியூசிலாந்து அரசாங்க உபகாரசபை தென் தமிழீழ மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. http://www.tamilnaatham.com/photos/2007/MA...326/NEWZEALAND/
-
- 0 replies
- 758 views
-
-
சிறிலங்கா வான்படைத் தளத்துக்குச் செல்ல கண்காணிப்புக்குழுவுக்கு அனுமதி மறுப்பு ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 05:11 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்டைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான பகுதிகளை பார்வையிடுவதற்குச் சென்ற இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவை சிறிலங்கா வான்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோர்பினூர் ஓமர்சன் தெரிவித்ததாவது: தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக நேற்று நாம் சென்ற போதுஇ விமானப்படை அதிகாரி எம்மை தடுத்துள்ளார். எனினும் நாம் நீர்கொழும்பு மருத்துவமனைக்குச் ச…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஸ்ரீபதி, மங்கள வழங்கிய தகவல்களை அடுத்தே இலகு விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன மிக்27 ரக யுத்த விமானங்கள் தொடர்பாக அண்மைக்காலமாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பாதுகாப்பு அமை ச்சின் செயலாளரும் விமானப்படைத் தளபதியும் விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களான ஸ்ரீபதியும், மங்களவும் வழங்கிய தகவல்களை அடுத்தே விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இவ்வாறான விமானத்தாக்குதல்கள் நடத்துவதற்கான ஆயுதங்கள் யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட ஐக்கியதேசிய முன்னணி ஆட்சிக்காலத்திலேயே கொண்டு வரப்பட்டது என்றாலும…
-
- 3 replies
- 1.9k views
-
-
விமானத் தாக்குதலை அடுத்து நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு அரசாங்கம் அறிவிப்பு விமானப் படையினரின் பிரதான தளமான விளங்கும் கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் வான் படையினரின் தாக்குதலை சிறீலங்கா அரசாங்கமும் இதர கட்சிகளும் கண்டித்துள்ளன. இதுகுறித்து அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கையில்... கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதலைக் கண்டித்து சிறீலங்கா அரச திணைக்களம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலானது ஒரு கோளைத் தனமான தாக்குதல் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. விமானத் தாக்குதலை ஒப்புக் கொண்ட அரசாங்கம் இத்தாக்குலில் பொறியியல் பகுதி மீதே தாக்குதல் நடத்ததப்பட்டதாகவும் தாக்குதலின் போது மூன்று விமானப் படையினர் கொல்லப்பட்டதாகவும் ம…
-
- 7 replies
- 2.8k views
-
-
செவ்வாய் 27-03-2007 03:11 மணி தமிழீழம் [மயூரன்] விடுதலைப்புலிகளின் வான்படைக்கு வயது ஒன்பது – முன்னாள் ரோ அதிகாரி இந்தியாவின் முன்னாள் ரோவின் தலைவர் பி.ராமன் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ‘சிறீலங்கா புலனாய்வு துறையினரை பொறுத்தவரை அவர்களுக்கு வான்புலிகளை பற்றிய அடிநுனி எதுவும் தெரியாத வகையில் ஒன்பது வருடங்களாக வான்புலிகளை வளர்த்துள்ளார்கள்.’ என கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகள் போருக்கான ஆயுதக் கொள்வனவுகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பதிவு.கொம்
-
- 2 replies
- 1.7k views
-