ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
வான் புலிகளின் அச்சுறுத்தலை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? *பாதுகாப்பு நிலைவரம் -விதுரன்- வான் புலிகளின் மீள் வருகைக்காக முப்படையினரும் காத்திருக்கின்றனர். முதல் முறை வான் புலிகள் நடத்திய தாக்குதலால் அதிர்ந்து போயிருக்கும் அரசு, புலிகளின் அடுத்த வான் வழித் தாக்குதலை எப்படியாவது முறியடித்து விடவேண்டுமென்பதில் தீவிரம் காட்டுகிறது. இதற்காக, ஆயிரம் அடிக்குக் கீழ் பறக்கும் வானூர்திகளைக் கண்டுபிடிக்கும் ராடர்களை உலகெங்கும் தேடும் இலங்கை அரசு, இரவு நேரத்தில் வரும் வான் புலிகளை எதிர்கொள்ள முப்படைகளையும் தயாராக்கி வருகின்றது. வன்னியிலிருந்து வரும் விமானங்களை வான்பரப்பில் எதிர்கொள்ள முடியாவிட்டாலும் அவை வன்னிக்குத் திரும்பிச் சென்று தரையிறங்கும் போதாவது தாக்க…
-
- 4 replies
- 1.8k views
-
-
பேலியகொடை, கடவத்தை பகுதிகளில் 2 தமிழ் இளைஞர் கடத்தப்பட்டனர் பேலியகொடை மற்றும் கடவத்தை பகுதிகளில் கடந்த புதன்கிழமை இரு தமிழ் இளைஞர்கள் வெள்ளை வான்களில் வந்தோரால் கடத்தப்பட்டது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்குளியை பிறப்பிடமாகவும் பேலியகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் பிரதீபன் (23 வயது) என்பவரும், கெலாபோக்கை, கரச்சா மலைத் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டவருமான இராமையா ஜெயகாந்தன் (24 வயது) ஆகிய இருவருமே வெள்ளை வான்களில் கடத்தப்பட்டுள்ளனர். பிரதீபன் பேலியகொடை சந்தியில் வைத்து தாக்கப்பட்ட பின் கடத்தப்பட்டதாகவும், ஜெயகாந்தன் கண்டி பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த போது கடவத்தை சந்தியில் வைத்து வெள்ளை வானில் வந்தவ…
-
- 0 replies
- 595 views
-
-
காணாமல்போனோர் மாநாட்டில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு A] கடத்தப்பட்டு காணாமல்போனோரின் குடும்பத்தவர்களின் மாநாட்டை நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை இலக்கம் 146, கதிரேசன் வீதி வீரமைலன் மண்டபத்தில் நடாத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளது என இக்குழுவின் ஏற்பாட்டாளரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; காணாமல்போனோரின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களை ஒன்று கூட்டி இந்த பாரிய மனித அவலம் தொடர்பிலான சர்வதேசியத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக இம்மாநாடு நடத்தப்படுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில…
-
- 0 replies
- 625 views
-
-
யுத்த அவலத்தில் வாழும் நமது சகோதரர்களுக்கு சமாதான சூழலில்தான் விடியல் பிறக்கவேண்டும் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவை கிறிஸ்தவ உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், கிறிஸ்துவின் உயிர்ப்பு தரும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகிறோம். என திருகோணமலை - மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை விடுத்துள்ள ஈஸ்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச்செய்தியில் ஆயர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. மனித வாழ்வில் ஏற்படுகின்ற ஈடுசெய்ய முடியாத சோகம் சாவு; அதுவே வாழ்வில் முடிவு என்ற எண்ணமே இதற்கு காரணம். அந்தச் சாவையே வென்று கிறிஸ்து உயிர்ப்பு அடைந்தார் என்ற செய்தி முழு உலகுக்கும் நம்பிக்கை தரு…
-
- 0 replies
- 669 views
-
-
புலிகளின் வான் வழித் தாக்குதலின் எதிரொலி இந்திய கடற்படை துவக்கு சூட்டுப் பயிற்சியில் தீவிரம் இலங்கையில் விடுதலைப்புலிகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இராமேஸ்வரத்தில் இந்திய கடற்படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர். இராமநாதபுர மாவட்டம் இராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் கடல்வழிப் பாதை கண்காணிக்கப்பட்டு இது குறித்து இந்திய கடற்படையின் இராமேஸ்வரம் பிரிவு கமாண்டர் முகர்ஜி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: இராமேஸ்வரத்தில் உள்ள அலுவலகத்திலிருந்து 30 வீரர்கள் தனுஷ்கோடி பகுதி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்படுவர். அவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தரப்படவு…
-
- 0 replies
- 655 views
-
-
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் க.பொ.த. சாதாரண பரீட்சையில் சாதனை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் அண்மையில் வெளியாகிய க.பொ.த. பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். பரீட்சைக்கு தோற்றிய 246 மாணவர்களில் 200 பேர் உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். 10 ஏ சித்திகளை 8 மாணவர்களும் 9 ஏ சித்திகளை 17 மாணவர்களும் 8 ஏ சித்திகளை 11 மாணவர்களும் பெற்று கல்லூரிக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். 10 ஏ சித்திபெற்ற மாணவர் விபரம் சிவகுமாரன் ஜனகன், விஸ்வலிங்கம் அருணாத், சண்முகவேல் வித்தியாசங்கர், சிவசேகரம் யதுர்ஷன், நவரத்தினலிங்கம் யதார்த்தனன், தனபாலசிங்கம் ராஜ்குமார், சிறிகாந்தன் ஜினேஷ், ஜெயந்திநாதசர்மா கௌரிநாதன் ஆகிய 8…
-
- 0 replies
- 762 views
-
-
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பெருமளவில் கைது செய்யப்படுவதற்கு கடும் கண்டனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் கிராமங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள அகதி முகாம்களையும் சுற்றிவளைத்து வகைதொகையின்றியும் வயது வித்தியாசமின்றியும் படையினர் மக்களை கைது செய்வதை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி வன்மையாகக் கண்டித்துள்ளார். கடந்த வாரம் சித்தாண்டி கிராமத்தைச் சுற்றி வளைத்த படையினரும் பொலிஸாரும் 27 பேரைக் கைது செய்திருந்தனர். இக் கைதை அடுத்து ஜெயானந்தமூர்த்தி எம்.பி. எடுத்துக் கொண்ட முயற்சி காரணமாக அவர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும், இருவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நேற்று முன்தினம் ஏறாவூர…
-
- 19 replies
- 2k views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்து வகைளுக்கு பெரும் தட்டுப்பாடு யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்குத் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிளினிக்குக்குச் செல்லும் இருதய நோய் மற்றும் ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. கிளினிக்குச் செல்லும் மேற்குறித்த நோயாளர்களின் குறிப்பு புத்தகத்தில் வைத்திய நிபுணர்கள் ஆறுவகையான மருந்துவகைகளை எழுதி விட்டாலும் - மருந்தகத்தில் மூன்று வகையான மருந்துகளே வழங்கப்படுகின்றதென்றும் தெரிவிக்கப்படுகின்றது. நோயாளர்கள் அன்றாடம் உட்கொள்ள வேண்டிய மாத்திரைகள் சில 15 நாட்களுக்கு மட…
-
- 0 replies
- 579 views
-
-
மீராவோடையில் இளைஞன் சுட்டுக்கொலை வாழைச்சேனை மீராவோடைப் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இளைஞனொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இரவு 7.30 மணியளவில் வீடொன்றுக்குச் சென்ற ஆயுதபாணிகளே அங்கிருந்த இளைஞனை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். பி.கோகிலராஜா (21 வயது) என்பவரே கொல்லப்பட்டவராவார். இவரது சடலம் நேற்று வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது thinakkural.com
-
- 0 replies
- 620 views
-
-
அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதலை அரசாங்கம் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் -வன்னி மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கோரிக்கை அப்பாவி பொதுமக்கள் மீதான கொடூரத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அநியாயமான உயிரிழப்புகளை தடுப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் - வவுனியா பிதான வீதியில் பிரமனாளங்குளத்திற்கு அருகாமையில் நேற்றுக் காலை பொதுமக்கள் பயணம் செய்த பஸ் வண்டி மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதலைக் கண்டித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்ட…
-
- 0 replies
- 697 views
-
-
தலைமன்னார் கடலில் படகில் சென்ற மீனவர் மீது துவக்கு சூடு; ஒருவர் பலி தலைமன்னார் கடற்பரப்பில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 32 வயதுடைய மீனவரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் கண்ணாடியிழைப் படகில்சென்ற மூன்று மீனவர்கள் மீது படகொன்றில்சென்ற இனந்தெரியாத நபர்கள் கடும் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான எஸ். நெல்சன் படுகாயமடைந்து கடலில் வீழ்ந்துள்ளார். இதையடுத்து, குறித்த படகில் பயணம் செய்த ஏனைய இரண்டு மீனவர்களும் படகுடன் கரையை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டு காயத…
-
- 0 replies
- 598 views
-
-
ஊடரங்கு வேளையில் நடைபெறும் கொடூரம்! -(தேசியன்) [08 - April - 2007] யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்கு வேளையில் கதவுகளை உடைத்துக்கொண்டு வீடுகளுக்குள் நுழையும் ஆயுதக் கும்பல்கள் கொள்ளையில் ஈடுபடுவதுடன் குடும்பத்தவரின் கண்முன்னே பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி வருவதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். ஆயுத முனையில் நிர்வகிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணத்தில் மாலை 6 மணியுடன் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டத்தால் மக்கள் எவரும் வெளியில் நடமாட முடியாத சூழலே நிலவி வருகின்றது. மாதகல் வீதி, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி, முகமாலை வீதி, தீவுகளுக்கான வீதியென குடாநாட்டின் அனைத்து பிரதான வீதிகளும் அரச படைகளின் கடுகளவும் பிசகாத கண்காணிப்பின் கீழேயே உள்ள…
-
- 38 replies
- 6k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் தொடர்ந்தும் விசாரணை சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்டபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் தொடர்ச்சியாக 10 மணிநேரம் இவரிடம் விசாரணைகளை நடத்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், மீண்டும் நாளை திங்கட்கிழமை (09.04.07) அவரை விசாரணைகளுக்கு அழைத்துள்ளனர். தென்னிலங்கையில் இருந்து வாகனம் ஒன்றை கொண்டு சென்று விடுதலைப் புலிகளிடம் கையளித்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இதனை மறுத்த சிவாஜிலிங்கம், அவர்கள் குற்றம் சுமத்துவது போல எந்த ஒரு வாகனத்தையும…
-
- 0 replies
- 583 views
-
-
இலங்கை இனப்பிரச்சனைக்கு சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு உட்பட்டு தீர்வு காண முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் சார்பில் "ஈழத் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களும்-தீர்வுகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், ஈழத்தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மனித உரிமை இயக்க மாநிலத் தலைவர் பூமொழி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். இந்நிகழ்வில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசியதாவது: இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்தே அங்கு இனப்பிரச்சினை நீடிக்கிறது. ஈழத்தமிழர்களை சிறிலங்கா அரசு இரண்டாம்தர குடிமக்களாக நட…
-
- 1 reply
- 718 views
-
-
[06 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] * சபையில் சம்பந்தன் வலியுறுத்தல் -டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களைக் கட்டுப்படுத்த இலங்கையரசு தவறிவிட்டதால், உடனடியாக ஐ.நா.கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வரவேண்டுமென வலியுறுத்திய தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியான கிழக்கு மாகாணம் முழு வீச்சில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாகவம் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த இரா. சம்ப…
-
- 0 replies
- 625 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஞ்சிய 17 பேரையும் தக்க வைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் தலா 50 மில்லியன் ரூபாய்களை அன்பளிப்பாக வழங்க அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச கடந்த வாரம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் ஏப்பிரல் 3 ஆம் நாள் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் தொடரூந்து போக்குவரத்து பிரதி அமைச்சர் எட்வேட் குணசேகர மீண்டும் தனது கட்சிக்கு தாவியதை தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களை சந்தித்த பசில் ராஜபக்ச, இந்த உடன்பாட்டை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த 50 மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசா…
-
- 2 replies
- 989 views
-
-
கைப் பொம்மை கமலசபேசன் இளைப்பாறுகிறார். http://www.colombopage.com/archive_07/April7150359CH.html
-
- 16 replies
- 2.8k views
-
-
[சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2007, 12:31 ஈழம்] [கி.தவசீலன்] "இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் ஒரே பாதுகாப்பு அரணாக உள்ள விடுதலைப் புலிகளால் மட்டுமே அங்குள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியும் என்று தற்போதும் முழுமையாக நம்புகின்றோம்" என பாரிஸ் தமிழ் வணிகர் சங்கத்தினர் பிரான்ஸ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.04.07) அதிகாலை 5 மணியளவில் பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17 பேரை 'பயங்கரவாதிகள்', 'கட்டாயமாக பணம் வசூலித்தனார்' என்ற குற்றச்சாட்டுகளில் பிரான்ஸ் காவல்துறையினர் கைது செய்தமையை மறுத்து, பாரிஸ் தமிழ் வணிகர் சங்கத்தினர் அறிக்கை தயாரித்து சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்…
-
- 0 replies
- 714 views
-
-
தொல். திருமாவளவன் [சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2007, 18:10 ஈழம்] [தாயகத்திலிருந்து க.தெய்வேந்திரம்] இந்திய அரசாங்கம், சிறிலங்காவுக்கு கொடுக்கும் ஓர் எச்சரிக்கையாக, சென்னையில் இருக்கும் சிறிலங்கா தூதுவர் அம்சாவைத் திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழ்நாட்டு வார ஏடான ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். "தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்களே? இதற்கு என்னதான் தீர்வு?" என ஆனந்த விகடன் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தொல். திருமாவளவன் தெரிவித்தார். அவரது விபரமான பதிலாவது: "சிங்கள இனவெறி பிடித்த சிறிலங்கா அரசாங்…
-
- 0 replies
- 757 views
-
-
கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியில் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 85 வீதமானவர்கள் க.பொ.த உயர்வகுப்பில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இம்முறை கணிதம், விஞ்ஞானம் ஆகிய துறைகளிலேயே அதிக மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மேற்படி பாடசாலையின் விடுதி மாணவர்கள் அனைவருமே உயர்வகுப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். இப்பாடசாலை 1983ம் ஆண்டுக்கு பின்னர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து தடைக்கற்களை தாண்டி இன்று ஒரு சிறந்த பாடசாலையாக திகழ்வதற்கு பாடசாலை அதிபர் மதனராஜாவின் அயராத முயற்சியே காரணமாகும். வசதி குறைந்த மாணவர்களை அதிகமாக கொண்ட இப்பாடசாலைக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுத்து இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அதிபர் ஆற்றிய சே…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஞாயிறு 08-04-2007 00:15 மணி தமிழீழம் [சிறீதரன்] தினக்குரல் பத்திரிகையின் யாழ் அலுவலகம் படையினரால் சோதனை தினக்குரல் பத்திரிகையின் யாழ்ப்பாணக் கிளையின் அலுவலகம் இன்று சிறீலங்காப் படையினரால் சோதனை செய்யப்பட்டுள்ளது. சிறீலங்காப் படையினர் குவிக்கப்பட்டு தினக்குரல் பத்திரிகையின் யாழ் அலுவலகம் மீது தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆசிரியர் அலுவலகமே தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பதிவு
-
- 1 reply
- 787 views
-
-
சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த மூன்று போராளிகளின் விபரங்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் கடற்பரப்பில் நேற்று இடம்பெற்ற மோதலில் கப்டன் றெஜி என்றழைக்கப்படும் காலியை சேர்ந்த பரமசிவம் சுப்பிரமணியம் என்ற போராளி வீரச்சாவை தழுவிக்கொண்டுள்ளார். திருமலை உப்பாறில் கடந்த 30 ம் திகதி இடம்பெற்ற மோதலில் கப்டன் ஈழவேந்தன் என்றழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தை சொந்த இடமாகவும் மல்லாவி யோகபுரம் வளநகரை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த மரியதாஸ் அந்தோனி என்ற போராளி வீரச்சாவை தழுவியுள்ளார். கடந்த 1998 ம் ஆண்டு ஜீன் மாதம் 20 ம் திகதி வன்னி மாங்குளத்தில் இடம்பெற்ற ஜெயசுக்குறு சமரில் வீரவேங்கை வெற்றிவேந்தன் என்றழைக்கப்படும் மலையகம் கண்ட…
-
- 4 replies
- 1.4k views
-
-
ராமேஸ்வரம்: கள்ளத்தனமாக இலங்கைக்கு சென்று அகதிகளிடம் அதிக அளவில் பணம் பறித்துக் கொண்டுஇ விடுதலைப் புலிகள் மிரட்டியதால் அவர்களை அழைத்து வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்த 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 3ம் தேதி 14 பெண்கள்இ 15 குழந்தைகள் உள்பட 41 அகதிகள் ராமேஸ்வரம் வந்தனர். செல்வம் என்பவரின் விசைப் படகில் அவர்கள் வந்தனர். இதையடுத்து அகதிகளை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்த போலீஸார்இ செல்வத்திடம் விசாரித்தனர். அதற்கு செல்வம்இ நான்இ ராஜ்இ அந்தோணி சிலுவை ஆகிய மீன்வர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது விடுதலைப் புலிகள் ஒரு படகில் வந்து எங்களைக் கடத்திச் சென்றனர். பின்னர் இந்த 41 பேரையும் ராமேஸ்வரம் கொண்டு போய் சேர்க்குமாறு உத்தரவிட்டனர…
-
- 2 replies
- 1.5k views
-
-
சனி 07-04-2007 17:54 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஜிம் பிறவுண் அடிகளார் படுகொலை செய்யப்பட்டிருக்காலம் - கத்தோலிக் குருமார் அச்சம் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்ட பங்குத் தந்தை நிகால் ஜிம் பிறவுன் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா யாழ் கிறிஸ்தவ குருமார் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் தீவகம் அல்லைப்பிட்டி இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து கைதான 34 அகவையுடைய திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் அடிகளாரும் அவரின் உதவியாளரான 38 அகவையுடைய வின்செண்ட் விமலன் ஆகியோர் விசாரணைக்கு எனக் கைதான பின் காணாமல் போயுள்ளர். இந்த நிலையில் மண் சாக்குமூடை ஒன்றில் வெட்டப்பட்ட ந…
-
- 7 replies
- 2k views
-
-
அரச சார்பற்ற அமைப்பான Centre for Policy Alternatives.. கொழும்பில் உள்ள Social Indicator என்ற புள்ளிவிபரம் சேகரிக்கும் அமைப்பின் உதவியோடு சிறீலங்காவில் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில் போர் மூலம் புலிகளைத் தோர்க்கடித்து அதன் பின் பேச்சுவார்தைகள் மூலம் தீர்வு எட்ட வேண்டும் என்ற எண்ணப்பாடு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை வெளிப்பட்டுள்ளது..! பெரும்பாலான சிங்களவர்கள் மகிந்தவின் செயற்பாடுகளை ஆதரிப்பதோடு அவர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவார் என்றும் நம்புகின்றனர்..! பெரும்பாலான சிங்கள மக்கள் புலிகள் போர் நிறுத்ததைக் சரி வர கடைப்பிடிக்கவில்லை என்று கருதுகின்றனர்..! பெரும்பாலான சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அரசு மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்ட…
-
- 20 replies
- 3.6k views
-