ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
பருத்தித்துறை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் காணொளி பதிவுகளை எடுத்து அதனை பயன்படுத்தி தொடர்ச்சியாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில் சிறுமி சுகயீனமடைந்தது வைத்தியசா…
-
- 3 replies
- 334 views
-
-
சீனாவுடனான உறவால் இலங்கையை மற்றநாடுகள் தனிமைப்படுத்திவிட்டன – அமைச்சர் விஜேதாச ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையினால் பல நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தியுள்ளன விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே சர்வதேச நாணய நித்தியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனறும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் உறவுகளை தொடர்ந்தும் பேணுவதற்கு விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து தாம் விமர்சித்தமையால் அமைச்சர் பதவியில் இருந்…
-
- 5 replies
- 359 views
-
-
போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு! தமது இயலாமையை மறைப்பதற்காகவும் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே பொதுமக்களுக்கு பகிரங்க கடிதமொன்றை நேற்று(செவ்வாய்கிழமை) அனுப்பி வைத்துள்ளார். இந்த பகிரங்க கடிதத்திலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக போராட்டத்தை தெரிவு செ…
-
- 0 replies
- 304 views
-
-
மியான்மார் அகதிகளை நாடு கடத்த முற்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு! மியான்மார் அகதிகளை நாடு கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீடித்து மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து படகில் தப்பி செல்ல முற்பட்ட வேளை கடந்த 17ஆம் திகதி படகு பழுதடைந்ததில் , வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தத்தளித்த நிலையில் 104 ரோஹிங்கிய அகதிகள் இலங்கை கடற்படையினாரால் காப்பாற்றப்பட்டு , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை மீரிகான தடுப்பு முகாமில் தடுத்து வைக்க நீதிமன்று உத்தரவிட்டது. அதேவேளை இவர்களை நாடு கடத்த முற்பட்டவர் என ஒருவருக்கு எதிர…
-
- 0 replies
- 133 views
-
-
தேர்தலுக்காக 20 பில்லியன் செலவழித்து 8 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க முடியுமா? தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்காக 20 பில்லியன் செலவழித்து 8 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க முடியுமா என வஜிர அபேவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சிகள் பணம் அச்சிட்டாவது தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் அது நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வருடத்தில் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதே ஜனாதிபதியின் இலக்கு. என்றும் அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்…
-
- 0 replies
- 128 views
-
-
தஞ்சமடைந்த மீனவர்களின் மீன்கள் விற்பனை – கைதான சமாச தலைவருக்கு பிணை! தஞ்சமடைந்த தமிழக மீனவர்களின் மீன்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தலைவரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று பிணையில் விடுவித்துள்ளது. தமிழக மீனவர்கள் நால்வர் பயணித்த படகு இயந்திர கோளாறு காரணமாக கடந்த 29ஆம் திகதி வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியில் கரையொதுங்கியது. தமிழக மீனவர்களை பருத்தித்துறை பொலிஸார் விசாரணைக்காக அழைத்து சென்ற வேளை தமிழக மீனவர்களின் படகில் இருந்த மீன்களை அங்கு நின்று இருந்த ஒருவர் எடுத்து விற்பனை செய்திருந்தார். தமிழக மீனவர்களின் மீன்களை விற்பனை செய்த குற்றத்தில் குறித…
-
- 0 replies
- 108 views
-
-
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு ! உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மார்ச் 20 ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டும், அதற்கான தேர்தல் மா…
-
- 4 replies
- 239 views
- 1 follower
-
-
பெற்றோலிய கூட்டுத்தானம் , ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனங்களுக்கு உபகார கொடுப்பனவு : காரணத்தை வினவினார் ஜனாதிபதி 03 JAN, 2023 | 10:04 PM (இராஜதுரை ஹஷான்) நட்டத்தில் இயங்கும் அரச கூட்டுத்தாபனம் மற்றும் அரச நிறுவன சேவையாளர்களுக்கு உபகார கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நிதியமைச்சு அறிவித்துள்ள நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் ஆகிய அரச நிறுவனங்களுக்கு உபகார கொடுப்பனவு (போனஸ்) வழங்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் வினவியுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேவையாளர்களுக்கு இருமாத சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது – வெலிஓயா மக்கள் எச்சரிக்கை! விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம். இவ்வாறு ஹட்டன், வெலிஓயா – 22 ஆம் தோட்ட பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர். ஹட்டன், வெலிஓயா 22 ஆம் இலக்க தோட்டத்தில் உள்ள 4 வயது சிறுவன் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். சுகவீனமுற்றிருந்த குறித்த சிறுவனை, உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இருக்கவில்லை. வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையிலேயே இதற்கு…
-
- 7 replies
- 605 views
- 1 follower
-
-
யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில்! கொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து சேவைக்காக மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி பயணிகள்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை, வவுனியா அனுராதபுரம் பாதை திருத்த வேலை காரணமாக குறைந்தது ஆறு மாதங…
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
முட்டை உற்பத்தியை நிறுத்தப் போவதாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை ! முட்டையை இறக்குமதி செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் முன்னெடுத்தால், தாம் தொழிலில் இருந்து விலக நேரிடும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. முட்டை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று திங்கட்கிழமை அறிவித்தார். 2022 டிசம்பரில், முட்டை விலை அதிகரிப்பிற்கு தீர்வாக, கொழும்பு, கம்பஹாவில் முட்டைகளை 55 ரூபாய்க்கு விற்கும் விசேட திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. அரசாங்கமும் முட்டை உற்பத்தியாளர் சங்கமும் இணைந்து இந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் முட்டைகளை இறக்குமதி உள்ளுர் தொழில்துறைக…
-
- 10 replies
- 523 views
-
-
கோட்டாவின் நிலையே காஞ்சனவிற்கும் ஏற்படும் – நாளின் பண்டார எச்சரிக்கை எதிர்ப்புக்களை மீறி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்தால், கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைமையே அவருக்கும் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நிலக்கரி இறக்குமதியில் இடம்பெறும் மோசடிகளை முகாமைத்துவம் செய்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையோ அல்லது மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவையோ ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். எது எவ்வாறாயினும் கூறியதை போன்று மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், தொழிற்துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்றும் இது பொருளாதார நெருக்கடியில் கடுமையான தாக…
-
- 1 reply
- 654 views
-
-
தந்திரிமலை பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றவர் கைது! By T. SARANYA 03 JAN, 2023 | 11:47 AM தந்திரிமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரால் பொலிஸ் நிலைய ஆயுதக் களஞ்சியத்திலிருந்து திருடப்பட்டதாக கூறப்படும் T-56 துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்ற நபர் ஒருவர் நேற்று (02) வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வில்பத்து தேசிய பூங்காவில் வைத்தே இந்நபர் கைது செய்யப்பட்டதுடன் வேட்டையாடப்பட்ட மான் ஒன்றின் இறைச்சி, T56 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தந்திரிமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரினால், சந்தேகத்தில் க…
-
- 0 replies
- 635 views
- 1 follower
-
-
மைத்திரி, டலஸ், விமல் அணிகளின் அரசியல் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது ! By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 02:49 PM (இராஜதுரை ஹஷான்) ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இல்லாமல், தலைமைத்துவ சபை ஊடாக பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சுதந்திர மக்கள் மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த அரசியல் கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டணி என பெயரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுத…
-
- 5 replies
- 917 views
- 1 follower
-
-
வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு கியூ.ஆர். குறியீடு அறிமுகம் By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 03:03 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இந்த ஆண்டு முதல் வாகன சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் -அபிவிருத்தி குசலானி டி சில்வா தெரிவித்தார். தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்கள் உள்ளன. அந்த சாரதி அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் போது, புதிய கியூ.ஆர். குறியீடு முத்திரையிடப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திர…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் - டயனா கமகே By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 08:55 PM (இராஜதுரை ஹஷான்) வீதி கடைகளில் விற்பதற்காகவும், அனைவரும் வாங்கி பயன் படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை. வர்த்தக பயிராக அறிமுகப்படுத்துமாறு கோரியுள்ளேன். பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவார்கள், கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம். தவறான மற்றும் முட்டாள்தனமான சிந்தனைகளில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்…
-
- 12 replies
- 618 views
- 1 follower
-
-
எரிபொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு By RAJEEBAN 02 JAN, 2023 | 09:38 PM நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளன. ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினாலும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் விலைக் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, புதிய விலையாக ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 415 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 355 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பெற்றோல் உள்ளிட்ட ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
கடன் நெருக்கடிக்கு தீர்வு காண கடுமையாக உழைத்து வருகிறோம் இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு தீர்வைக் கொண்டுவர சர்வதேச நாணய நிதியம் கடுமையாக உழைத்து வருவதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜியேவா தெரிவித்துள்ளார். அமெரிக்க சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். கேள்வி - சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கும் வகையில் குறைந்த வருமானம் கொண்ட பல நாடுகள் கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை உலக நிதி நெருக்கடியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? "இதுவரை, இந்த நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடி உலகளாவிய நெருக்கடியை உருவாக்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை. செட் (Chad), எத்தியோப்பியா, ச…
-
- 0 replies
- 359 views
-
-
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிரடி அறிவிப்பு சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பணியக சட்டத்தின் விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 ஆம் திகதி முதல் 8 பெண்களைக் கொண்ட குழு இலங்கை வந்தடைந்ததாகவும், மேலும் 6 பெண்கள் இன்று (02) இலங்கைக்கு வரவுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. தூதரகத்தால் பணியகத்தில் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படாத சுற்றுலா வீசாக்களுடன் ஓமனுக்கு வேலைக்குச் சென்ற 18 பேர் சிக்கித் தவிப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 205 views
-
-
அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் எம்.பியை நியமிப்பதில் இழுபறி! அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுகிறது. அரசியலமைப்பு பேரவைக்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 3 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் தற்போது 5 சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், எஞ்சிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழிந்ததுடன், தமிழ்கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன. இதற்கு உத்தர ல…
-
- 1 reply
- 416 views
-
-
அதிகளவில் ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் – புகையிரத சேவைகள் இரத்து! நாட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை இயக்கப்படவிருந்த 6 அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் 2 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர கடலோர, புத்தளம் மற்றும் பிரதான வழித்தடங்களில் தலா ஒரு புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும் பல புகையிரதங்கள் இரத்து செய்யப்படலாம் என புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளமையே இதற்கான பிரதான காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. சுமார் 500 பணியாளர்கள் ஓய்வு பெற்ற…
-
- 13 replies
- 900 views
- 1 follower
-
-
மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம்! மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுடன் இந்த அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு மேலதிக அமைச்சு பதவிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆறு ஆளுந…
-
- 3 replies
- 662 views
-
-
மட்டக்களப்பில் 180 தற்கொலை சம்பவங்கள் பதிவு – திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் Posted on January 1, 2023 by தென்னவள் 12 0 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சுமார் 180க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருக்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. தற்கொலைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வுகள் மாவட்டத்தின் எந்தவொரு கிராம மற்றும் நகர மட்டத்திலும் நடைபெறாமை குறித்து உண்மையில் கவலையளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வயது வித்தியாசமின்றி சிறியோர், பெரியோர், படித்தவர்கள், பாமரர்கள் என்ற…
-
- 2 replies
- 735 views
-
-
கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் Posted on January 1, 2023 by தென்னவள் 14 0 புதுவருட தினமான இன்றும் (ஜன 1) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2142ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மாரால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம், அவர்களது போராட்ட பந்தலுக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மற்றும் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி தேவை என்பதோடு அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், …
-
- 0 replies
- 287 views
-
-
அதிபர் - ஆசிரியர்களின் “குருசெத” கடனுக்கான வட்டிவீதம் அதிகரிப்பு : இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதிக்கும் கடிதம் By NANTHINI 01 JAN, 2023 | 03:37 PM அதிபர் - ஆசிரியர்கள் குருசெத கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும்போது 9.5 வீதமாக இருந்த வட்டியை 15.5 வீதம் வரை அதிகரிக்க எடுத்த தீர்மானத்துக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றைய தினம் (டிச. 31) இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின்போது தெரிவித்துள்ளார். அதிபர்களும் ஆசிரியர்களும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்தில், அரச வங்கிகள் மூலம் குருசெத்த கடன் திட்டத்த…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-