ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
இலங்கை அகதிகளிடம் தமிழக காவல்துறையின் வெறியாட்டம் இலங்கைத் தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளாய் நாடு விட்டு நாடு, ஊர் விட்டு ஊர் என்ற நிலையில் தமிழர்களை இலங்கை அரச வைத்துள்ளது. அப்படிபட்ட நிலையில், இந்தியவிற்கு பல்லாயிரம் தமிழ் அகதிகள் தமிழகம் நோக்கி வந்து, சுமார் 103 அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிலும் அண்மைக்காலமாய் இலங்கையில் நிலவும் போர் சூழல் காரணாமாய், தமிழர்கள் தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேசுவரம் வந்தடைகின்றனர். அங்கே அகதிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள 287 ஏக்கர் நில பரப்பில், உயரமான சுற்றுச்சுவருக்கு மேல் மின்சாரம் வேலியுடன் அமைந்துள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தான், புதிதாய் வந்திரங்கும் அகதிகளின் வாய்லாய் அமைகிறது. மண்டபம் முகாமில் ஏற்…
-
- 21 replies
- 4k views
-
-
மிக்27 ரக யுத்த விமான கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் - 600 மில்லியன் ரூபா ஊழல் இடம் பெற்றுள்ளது மிக்27 விமான கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுள்ளமையினால் அது குறித்து விசாரணைகள் நடத்தி குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் , ஸ்ரீபதி சூரியாராச்சியும் கோரிக்கை விடுத்துள்ளனர். இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு நேரடியாக விஜயம் செய்த இருவரும் யுத்த விமானங்கள் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து முறைப்பாட்டினை தெரிவித்ததுடன் அதற்கான சில ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். இந்த முறைப்பாடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவிக்கையில்…
-
- 1 reply
- 875 views
-
-
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் கருணா குழுவினர்: அனைத்துலக மன்னிப்புச் சபை சிறிலங்காவின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செயற்பட்டு வரும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர், புதிதாக இடம்பெயர்ந்து வரும் மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்குள் நடமாடுவதுடன் மக்களையும் கடத்தி வருவதாக அம்னஸ்டி இன்டர்நசனல் எனப்படும் அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. கருணா குழுவினரின் நடவடிக்கைகளை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுப்பதற்கு அரசாங்கம் இயன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த வாரம் முதல் இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளினால் மட்டக்களப்பு, தி…
-
- 1 reply
- 797 views
-
-
ஓமந்தையில் அமைந்துள்ள சிறீலங்கா படையினரின் பிறகேட் தலைமையகம் விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாக சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை இரவு 11 மணி தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் போது படை தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளாதகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 660 views
-
-
மவ்பிம பத்திரிகையின் கணக்குகளை அரசாங்கம் முடக்கியுள்ளது விமான சேவைகள் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் டிரான் அலஸின் தலைமையின் கீழ் இயங்கிவரும் மவ்பிம பத்திரிகையின் கணக்குகளை அரசாங்கம் முடக்கியுள்ளது. மவ்பிம பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளமையினால், ஊடக அமைப்புக்கள் பல தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. மவ்பிம பத்திரிகையின் கணக்குகளை முடக்கியதற்கான காரணத்தை அரசாங்கம் கூறவில்லையெனவும், இப்பத்திரிகைக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைள் அனைத்தையும் கண்டிப்பதாக சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 662 views
-
-
யாழில் தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தல். மல்லாகப் பகுதியில் தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து வெளியில் சென்ற இவர் இனம் தெரியாத ஆயுதாரிகளால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் 22 அகவையுடைய அப்துல்கலாம் சுவைதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
-
- 3 replies
- 1.1k views
-
-
பல்குழல் எறிகணைத் தாக்குதலை உடன் நிறுத்துக: நோர்வேத் தூதுவரிடம் த.தே.கூ வலியுறுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கரைச் சந்தித்து மட்டக்களப்பு நிலைமைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர். சந்திப்பில் சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் தமிழ் மக்கள் சந்தித்துள்ள அவலங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக படையினால் கடந்த 5ம் நாள் தொடக்கம் படுவான்கரை மற்றும் எழுவான்கரை நோக்கித் தொடர்ச்சியாக ஏவப்படும் பல்குழல் எறிகணை வீச்சுக்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நோர்வேத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இன்றைய சந்திப்பின் போது மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்…
-
- 0 replies
- 733 views
-
-
வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம ஐ நா செயலாளர் நாயகத்தை சந்தித்தார் ஜறுநனநௌனயல ஆயசஉh 14 2007 10:43:00 யுஆ புஆவுஸ ஜஎசையமநளயசi.டமஸ சகல தரப்பிரனதும் யோசனைகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் இனப்பிரச்சினைகு தீர்வு காணும் என வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளிற்க்கான விஜயம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பன்கி மூனை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளனர். இதன் போது இலங்கையில் இடம்பெறும் பிரச்சினைகளிற்கு தீர்வுகாண்பதற்கும் எடுக்கப்படும் அரசியல் தீர்வுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஐ.நா செயலாளருக்கு விளக்கியுள்ளார் மேலும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெ…
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் குப்பிலான் பகுதியிலிருந்து புதிய ரக தற்கொலை அங்கி மீட்பு ஜறுநனநௌனயல ஆயசஉh 14 2007 10:45:43 யுஆ புஆவுஸ ஜயேககநடஸ யாழ்ப்பாணம் குப்பிலான் பகுதியிலிருந்து தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் புதிய ரக அங்கியொன்றை கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்துஇ இராணுவத்தினரால் இந்த அங்கி மீட்கப்பட்டதாக அவர் கூறினார். தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வழமையான அங்கியுடன் ஒப்பிடுகையில் இது மாறுப்பட்டதாக இருக்கின்றதாகவும்இ இந்த அங்கியில் குண்டுகள் சிறிய பெல்டில் நிரப்பப்பட்டிருந்தாகவும் அவர் கூறினார்.
-
- 6 replies
- 2.6k views
-
-
ஐ.நாவின் பிரதிநிதிகளை அனுமதிப்பது நோர்வேயை அனுமதித்ததை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ஜே.வி.பி ஜபுதன்கிழமைஇ 14 மார்ச் 2007இ 07:02 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் இரு பிரதிநிதிகளை அரசாங்கம் அழைத்ததனை ஜே.வி.பி கடுமையாக எதிர்த்துள்ளதுடன்இ ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை அனுமதிப்பது நோர்வேயை அனுமதித்ததனை விட மோசமான விளைவுகளை நாட்டிற்கு ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் செயற்குழுவினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் நான்காவது கூட்டத்தொடரில் கலந்து க…
-
- 0 replies
- 709 views
-
-
கற்பிட்டி ஊடாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எரிபொருள் விநியோகம் ஜபுதன்கிழமைஇ 14 மார்ச் 2007இ 16:50 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ கற்பிட்டி குடாப் பிரதேசத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எரிபொருட்களை விநியோகம் செய்யும் நடவடிக்கை பாரியளவில் நடைபெற்று வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது. இச்செய்தியை இன்று புதன்கிழமை வெளிவந்த 'திவயின' நாளேடு வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த வாரம் வில்பத்து காட்டுப்பகுதியில் 8 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதானதும் இந்த கற்பிட்டி மன்னார் விநியோகப் பாதையின் காரணமாகவே என்று படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர். கற்பிட்டி பிரதேசத்தில் ஆயிரத்திற்கும்…
-
- 0 replies
- 791 views
-
-
இலங்கையில் ஐ.நா கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஜபுதன்கிழமைஇ 14 மார்ச் 2007இ 18:11 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ மனித உரிமைகள் சபையில் மகிந்த சமரசிங்கவினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் போதுமானவை அல்ல. எனவே இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். மேற்கண்டவாறு வலியுறுத்தப் போவதாக அமெரிக்க நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹியூமன் றைட் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் மூத்த சட்டத்துறை ஆலோசகர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்ததாவது: மக்கள் தேவையில்லாது துன்பத்தை …
-
- 0 replies
- 804 views
-
-
இன்று பிரித்தானிய பாராளுமன்றில் உறுப்பினர் ஒருவர் சிரிலங்கா தொடர்பாக கேட்ட கேள்வி ஒன்றிற்கு பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் அளித்த பதில் ஒளி வடிவில் : http://www.dailymotion.com/video/2423561 நன்றி : நிதர்சனம்
-
- 6 replies
- 2.3k views
-
-
சிறி.படையினரின் வீதித்தடையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு. யாழ்ப்பாணம் வடமராட்சி வீதியில் சிறிலங்காப் படையினர் இன்று காலை தொடக்கம் பொதுமக்களின் போக்குவரத்துக்களை முடக்கியுள்ளனர். வல்லையில் இருந்து பருத்தித்துறை வரையான மக்கள் போக்குவரத்து வீதியை இக்று காலை 8.00 மணியிலிருந்து 1.00மணிவரை இந்த வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் தகவலின் படி சிறிலங்காப் படையினர் முகமாலை முன்னரங்கப் பகுதிகளிற்கு ஆயுததளவாடங்களையும் பெருமளவான படையினரையும் நகர்த்திவருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். சிறிலங்காப் படையினரின் இந்த மிலேச்சத்தனமான நடவடிக்கையினால் பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் அரசசெயலகர்கள், வியாபாரிகள் எனப் பலர் சிறிலங்…
-
- 0 replies
- 570 views
-
-
5 ஆயிரம் மலையக இளைஞர்களை இணைக்கும் விடுதலைப் புலிகளின் திட்டம்: சிங்கள நாளேடு [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 17:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரிவுகளில் நிலவும் ஆட்பற்றாக்குறை காரணமாக மலையக இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ளும் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள நாளேடான 'தினமின' செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு, உளவுப் பிரிவு மற்றும் கடற்புலிகள் பிரிவு ஆகியவற்றில் ஆட்பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் மலையகப் பகுதிகளுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களை அனுப்பி அதன் ஊடாக உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள விடுதலைப் புலிகள் வகுத்துள்ள த…
-
- 6 replies
- 1.6k views
-
-
(மேலதிக இணைப்பு) [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 15:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] இந்தியா - சிறிலங்கா நாடுகள் கடலில் கூட்டு சுற்றுக்காவல் பணியை மேற்கொள்வதினால் பாதகங்களே அதிகம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, அக்கேள்வி பதில்களின் விபரமாவது: கேள்வி: சிறிலங்கா கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது பற்றிய பிரச்சினை என்னவாயிற்று? பதில்: இப்பிரச்சினை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. சார்பில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்த மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்திய மீனவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக…
-
- 1 reply
- 1k views
-
-
சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்க தொடர்ந்தும் மறுத்து வந்தால் பேரழிவுதான் மிஞ்சும் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை வழங்க பெரும்பான்மை இனம் தொடர்ந்தும் மறுக்குமானால் ஒருபோதும் நாட்டை பேரழிவிலிருந்து மீட்டெடுக்க முடியாது போகுமெனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் கடைப்பிடித்துவரும் தவறான அணுகுமுறை காரணமாக தேசத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. பல்லின மக்கள் வாழும் நாட்டில் 75 சதவீதமான பெரும்பான்மை இனம் 25 சதவீதமான சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள எண்ணுவது ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு முயற்சியாகவே கொள்ள வேண்டியுள்ளதாகவும் அக்கட்சி தெரிவிக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் அலுலககத்தில் நேற…
-
- 2 replies
- 1.4k views
-
-
எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி நடைபெறவுள்ள சுவிற்சர்லாந்தின் மத்திய பகுதி மாநிலமான லுசேர்ன் கன்ரோன் பாராளுமன்றத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் (ளுP) சார்பில் ஈழத்தமிழரான திரு. லதன் சுந்தரலிங்கம் போட்டியிடுகின்றார். ஏற்கனவே 2004 ம் ஆண்டில் லுசேர்ன் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நகரசபை உறுப்பினராகவுள்ள இவர் தற்போது கன்ரோன் பாராளுமன்றத்தேர்தலிலும் போட்டியிடுகின்றார். ஆரம்பத்தில் மருத்துவதாதி பயிற்சியை முடித்துக்கொண்ட இவர் லுசேர்ன் பல்கலைக்கழகத்தில் “பல்கலாச்சார தொடர்பாடல் நெறி” யில் (ஆழசந ஊரடவரசயடடல ஊழஅஅரniஉயவழைn) டிப்ளொமா பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் உயர்கல்லூரி முகாமைத்துவ கற்கை நெறியிலும் தனது பயிற்சியை நிறைவுசெய்துள்ளார் சுவிற்ச…
-
- 18 replies
- 3.7k views
-
-
புலிகளிற்கு எதிராக ஆரம்பித்துள்ள படை முன்னர்வுகள் இன்னும் 3 வருடங்களிற்கு முகம் கொடுக்க வேண்டுமென அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி தெரிவித்துள்ளது இராணுவத்தினர் விடுதலைப்புலிகளிற்கு எதிராக ஆரம்பித்துள்ள புதிய படை முன்னர்வுகள் இன்னும் 3 வருடங்களிற்கு முகம் கொடுக்க வேண்டுமென பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்குள் இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை துரத்தி விடுவார்கள் எனின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரை இடம்பெ ற்ற மோதல்களிற்கு அரசியல் தீர்வு மூலம் சமாதானத்தை கொண்டு வர முயற்சிகின்றனர் என அவ் அதிகாரி மேலும் தெரிவித்தனர். http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews …
-
- 1 reply
- 1.4k views
-
-
கடத்தப்பட்ட 7 உறுப்பினர்களும் உயிரிழந்து விட்டனர்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 15:14 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29, 30 ஆம் நாட்களில் கடத்தப்பட்ட 7 தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களும் உயிரிழந்து விட்டதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அறிவித்துள்ளது. இவர்கள் பொலநறுவ மாவட்டம் வெலிக்கந்தையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டிருந்தனர். இதனை இன்று புதன்கிழமை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களான தம்பிராசா வசந்தராசா சண்முகநாதன் சுஜேந்திரன் கைலாசபிள்ளை இரவீந்திரன் …
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கை கடற்படை சுட வேண்டிய அவசியம் இல்லை; வக்காலத்து வாங்கும் ஏ.கே.அந்தோணி டெல்லி: இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சுட வேண்டிய காரணமோ, அவசியமோ இல்லை என்று கூறியுள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து லோக்சபாவில் நேற்று தமிழக எம்.பிக்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசியது. இதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. …
-
- 17 replies
- 3k views
-
-
அமெரிக்கா - இலங்கை ஒப்பந்தத்தின் இரகசியம் [14 - March - 2007] ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஷ்ரீலங்காவுக்கும் இடையில் அண்மைக்காலமாக அதிகரித்து வந்துள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொடர்புகளை உறுதிசெய்யும் வகையில் இரண்டு நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நேரடியான யுத்த உதவிகளை வழங்கும் ஒப்பந்தமாக இல்லாது ஷ்ரீலங்கா படையினருக்கு அவசரமாகத் தேவைப்படும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிப் பொருட்களையும் வழங்குவதாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அத்தியாவசிய வழங்குதல்களும், பரஸ்பர சேவையும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு நாடுகளும் தமது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்த…
-
- 3 replies
- 1.7k views
-
-
காற்றில் பறக்கும் வாக்குறுதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் திடீரெனத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ நாயக்காவை அழைத்துப் பேசியமை பல்வேறு ஊகங்களுக்கு வழி சமைத்திருக்கின்றது. இனப்பிரச்சினை விவகாரத்தில் பௌத்த சிங்களத் தீவிரப் போக்கைக் கடைப்பிடித்துஇ வடக்கு கிழக்கில் இராணுவ முனைப்புடன் விடயங்களைக் கையாண்டு வருவதால் ஜனாதி பதி மஹிந்தருக்கு தென்னிலங்கையில் செல் வாக்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே. கட்சிஇ ஜனா திபதித் தேர்தலை அடுத்துஇ உடைந்து துண்டாகி பலமிழந்துஇ தடுமாறிப்போய் நிற்கிறது. அதேசம யம்இ தமது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அரசல் புரசலாக ஆரம்பித்திருக்கும் உட்கட்சிப் பூசலையும், கட்சித்தலைமைக்கு எதி ரான …
-
- 0 replies
- 779 views
-
-
வடமராச்சி கிழக்கில் இளைஞர் கைது நேற்று காலை குடத்தனைப்பகுதியில் பருத்தித்துறைப்பகுதியை நோக்கி பயணித்த இளைஞரை விசாரணைக்கு உட்படுத்திய சிறீலங்கா படையினர் இவரது கண்களை கறுப்புத்துணியால் கட்டியும் கைகளை கயிற்றால் கட்டியும் வல்லிபுரம் படைமுகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 695 views
-
-
சிறீசண்முகா இந்து மகளிர் கல்லூரி காவலாளி கருணா கூலிக்குழுவால் தாக்கப்பட்டுள்ளார் திருமலை நகரில் உள்ள சிறீசண்முகா இந்து மகளீர் கல்லூரியின் இரவு நேரகாவலாளியை பாடசாலைக்கட்டத்திற்குள் நேற்று இரவு உட்புகுந்த கூலிக்குழு ஆயுததாரிகளால் பாடசாலைக்கட்டட கதவுகளை உடனடியாக திறக்கக்கோரி கூச்சலிட்டு திறக்க தாமதித்த காரணத்தால் அவர் அக்கூலிக்குழுவால் நையப்புடைக்கப்பட்டார். இதன்போது தாக்கிபடுகாயமடையச் செய்யப்பட்டவர் நாகரத்தினம் என தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 887 views
-