ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
-முத்துசாமிகளுக்கு இடமளிக்க முடியாது என்கிறார் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1815 இல் கண்டி இராச்சியத்தை காட்டிக் கொடுத்த போது தனது எதிராளிகள் அனைவருடனும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அதேபோல், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தனது எதிராளிகள் அனைவருடனும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலைமை நாட்டை பிரிக்க முயலும் சர்வதேச பிரிவினைவாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விட்டதென்கிறார் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற "அன்று கண்டி இராச்சியம் இன்று தாய் நாடு" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய போதே விமல் வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
அம்பாறையில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2007, 19:07 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் அம்பாறையில் இழப்புக்களை சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாறை உடும்பன்குளம் பகுதிக்குள் ஆக்கிரமிப்பு நோக்கில் நகர்ந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை 6.10 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலின் போது சிறிலங்கா அதிரடிப்படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட விடுதலைப் புலிகள், ஏகே எல்எம்ஜி ரவை இணைப்புத் தொடர்கள், 40 ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
பழைய பூச்சாண்டி [06 - March - 2007] முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் அரசாங்கத்தரப்பு பின்வரிசை எம்.பி.க்களாக இருந்து கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவருக்கு நெருக்கமான குழாமுக்கும் எதிரான `போராட்டத்தை'த் தொடர்ந்த வண்ணமிருக்கிறார்கள். அவர்களின் இந்தப் போராட்டம் பெரும்பாலும் கொழும்பில் செய்தியாளர் மகாநாடுகளைக் கூட்டி குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ராஜபக்ஷ தரப்பினர் விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கையொன்றைச் செய்திருந்ததாக சமரவீரவும் சூரியாராச்சியும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு தென்னிலங்கையில் இப்போது பெரும் அரசியல் சர்ச்சை…
-
- 3 replies
- 1.8k views
-
-
கொழும்பு, மார்ச்.6 சேர்பியாவின், கோசோவோ மாகாணத்தை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய் வதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு அமைதிப்படை ஒன்றை அனுப்பவிரும்புவதாகக் கூறப்படும் தருணத்தில, கொசோவோ குறித்த தகவல் எமது நாட்டுக்கு உடனடியான பயமுறுத்தலாகும். இவ்வாறு அதிர்ச்சியும், ஆத்திரமும் வெளியிட்டிருக்கிறார் ஜே.வி.பியின் தலை வர் சோமவன்ச அமரசிங்கா. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு நீண்ட காரசாரமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார் ஜே.வி.பியின் தலைவர். நன்றி : உதயன்
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையின் முதலாவது இணைய சேவை நிறுவனம் வங்குரோத்து [06 - March - 2007] [Font Size - A - A - A] இலங்கையில் முதலாவதாக இணையத்தள சேவையை வழங்கிவந்த லங்கா இன்ரர்நெற் சேவிசஸ் வங்கு ரோத்து நிலையை அடைந்துவிட்டது. கம்பனி முகாமைத்துவமும் காணாமற்போய்விட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக் கிழமை தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் கம்பனி தனது சேவையை நிறுத்தியுள்ளது. இந்தக் கம்பனி 1994 இல் இணையத்தள சேவையை ஆரம்பித்தது. அதன்பின் பல நிறுவனங்கள் இணைய சேவையை நடத்த ஆரம்பித்ததால் இந்தக் கம்பனி கடும் போட்டியை எதிர்நோக்கியது. இலங்கையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் இணையத் தொடர்புகள் உள்ளன. http://www.thinakkural.com/news/2007/3/6/i...s_page22737.htm
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவில் பாரிய தாக்குதல் நடத்த படையினர் திட்டமிடுவதாக தெரிவிப்பு முல்லைத்தீவில் பாரிய தாக்குதலைத் தொடுக்க அரச படைகள் திட்டமிட்டு வருவதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்புச் செயலகம் நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கையில், முல்லைத்தீவில் பாரிய தாக்குதலொன்றைத் தொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. அவர்களது அண்மைக் காலச் செயற்பாடுகள் இதனை நன்கு தெளிவுபடுத்துகின்றன. இதற்காக இராணுவ விசேட அணிகளும் கருணா குழுவும் திருகோணமலைக்கு வடக்கே புல்மோட்டையிலும் கொக்குத்தொடுவாய் மற்றும் கொக்கிளாய்ப் பகுதிகளிலும் நிலை கொண்டுள்ளன. முல்லைத்தீவில் பாரிய தாக்குதலைத் தொடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு படைக்குவிப்பு…
-
- 20 replies
- 4.5k views
-
-
'எமது படையினரின் தாக்குதலால் பிரபாகரன் தப்பியோடுவார்': சிறிலங்கா அமைச்சர் ஜசெவ்வாய்க்கிழமைஇ 6 மார்ச் 2007இ 17:03 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ "பிரபாகரன் நாட்டை விட்டு தப்பியோடும் அளவுக்கு எமது படையினர் பதில் தாக்குதல்களை நடத்துவர்" என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார். பிலியந்தலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "அரசாங்கம் தேர்தலை நடத்தப்போவதில்லை. எமக்கு பலமான அரசாங்கம் இருக்கின்றது. அதனால் அனைத்து சக்திகளும் நிபந்தனைகளை விதிப்பதை கைவிட்டு விட்டு அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட வேண்டும். அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ…
-
- 42 replies
- 6.3k views
-
-
தமிழீழ தாயகத்தை எதிரிகளிடமிருந்து மீட்பதற்கான விடுதலைப் வேள்வியில் சனவரி திங்களில் தம்மை ஆகுதியாக்கிய வீரமறவர்களின் விபரங்கள்: நன்றி: சங்கதி
-
- 1 reply
- 833 views
-
-
புரிந்துனர்வு ஒப்பந்ததை இரத்துச் செய்யக் கோரி தாக்குதல் செய்த மனு மேல் நீதி மன்றத்தால் நிராகரிப்பு சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி ஜாதிக ஹெல உறுமயஇ மக்கள் விடுதலை முன்னனி உட்பட மூன்று கட்சிகள் தாக்கல் செய்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது . விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் பிரிதி வாதிகளாக இம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர். இரு தரப்பும் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு முரணானது ஒன்றென இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தம
-
- 6 replies
- 1.5k views
-
-
அநுராதபுரப் பகுதியில் 5 உடலங்கள் கண்டெடுப்பு அநுராதபுரம் சேமக்குளம் கிராமசேகவர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் செவ்வாய் காலை 5 உடலங்கள் ஒருமிக்க கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்உடலங்களின் மேற்பகுதி ரயர்களால் எரிந்து காணப்படுவதாகவும் கிராமவாசிகள் கொடுத்த தகவலையடுத்து திரப்பேன் காவல்துறையினர் அவ் உடலங்களை காலை 6.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கந்தானை காவல்துறையினரின் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 6 உடலங்கள் கண்டெடுக்கப்பட்டது தெரிந்ததே. அநுராதபுர நீதிபதி வசந்த ஜனதாஸ அவ்இடத்திற்கு விஜயம் செய்துள்ளார். இவ் உடலங்கள் அனைத்தும் ஆண் உடலங்கள் என தெரியவருகிறது. இவ்உடலங்கள் இன்னமும் இனம்காணப்படவில்லை என்பது நோக்கத்தக்கது http://www.pathivu.com/in…
-
- 0 replies
- 820 views
-
-
பிரித்தானியாவில் ஹரோ மேற்கை வதிவிடமாகக் கொண்ட சிவபாதம் சிவசொரூபன் எனும் வர்த்தகர், கடந்த ஒரு மாதங்களுக்கு முன் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்துக் இலக்கத்தகடற்ற வெள்ளை வானில் வந்த சிங்களப் புலனாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கும் கருணா ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டு, பின் சிங்கள விசேட அதிரடிப்படையால் பொறுப்பேற்கப்பட்டு, காணாமல் போன சம்பவமானது, பிரித்தானியா அரசின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், பிரித்தானிய அரசின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், ஹரோ மேற்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் மாண்புமிகு திரு கரத் தோமஸ் அவர்களுக்கு சவால் விடும் வகையில் நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. ......... http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.5k views
-
-
06 - March - 2007 அமெரிக்காவும் இலங்கையும் தத்தமது படையினருக்கு பரஸ்பரம் இராணுவத்தினர் மற்றும் இராணுவத் தளபாடங்களை வழங்குவதற்கான உடன்படிக்கையில் நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை 10 ஆண்டு காலப் பகுதிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. "பெற்றுக்கொள்ளுதலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும்" என்ற இந்த உடன்படிக்கையில் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளாக்கும் நேற்று கைச்சாத்திட்டிருப்பதாக அமெரிக்கத் தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. விநியோகம், ஆதரவு, எரிபொருள் நிரப்புதல் போன்றவற்றை அமெரிக்காவும் இலங்கையும் பரஸ்பரம் மேற்கொள்ள இந்த உடன்படிக்கை வழியமைத்திருப்பதாகவும் தூதரக அறிக்கை…
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டு.முதலிக்குடா, கொக்கட்டிச்சோலை பகுதியில் படையினர் தொடர் எறிகணை வீச்சு. - பண்டார வன்னியன் Tuesday, 06 March 2007 09:51 இன்று காலை 6.00 மணிதொடக்கம் வவுனதீவு சிறிலங்காப் படைமுகாமில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான முதலிக்குடா, கொக்கட்டிச்சோலை ஆகிய மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை படையினர் நடாத்திவருகின்றனர். இதன் போது ஏற்ப்பட்டுவரும் சேதவிபரங்கள் தெரியவரவில்லை.
-
- 0 replies
- 976 views
-
-
முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து கிபீர் விமானங்கள் தாக்குதல். இன்று காலை மணியளவில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் இரண்டு முல்லைத்தீவு மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இத் தாக்குதலின் போது ஏற்பட்ட சேதவிபரங்கள் தெரியவில்லை. இக் கிபீர் விமானங்களின் குண்டு வீச்சுத் தாக்குதலினால் பாடசாலை மாணவர்கள் பதுங்கு குழிகள் இல்லாத காரணத்தால் என்னசெய்வதென்று அறியாமல் தரையில் வீழ்ந்து பாதுகாப்பை தேடினர் இதனால் பாடசாலைகளின் கல்விச்செயற்பாடுகள் முற்றாகத் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா விமானப்படையினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் காரணத்தால் மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் பாதிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சர்வதேச கப்பற் போக்குவரத்து மற்றும் கடல் மார்க்க வர்த்தக நடவடிக்கைகள் பற்றிய உத்தியோகபூர்வமான தகவல்கள் ஆய்வு, மற்றும் அறிக்கைகள் சமர்ப்பித்தல் போன்ற சர்வதேச கடற்பிராந்தியங்களினூடாக நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் பதிவு செய்யும் சர்வதேச நிறுவனமாகிய லொயிட்ஸ் சர்வதேச அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சொந்தமானதும் சர்வதேச கடற்பிராந்தியத்தில் போக்குவரத்து செய்து வருவதான கப்பல்களைப் பற்றிய முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது. மேற்படி அறிக்கைக்கு ஏற்ப சிறிலங்காவிலுள்ள புலிகள் அமைப்புக்குச் சொந்தமானதும் சட்டவிரோதமாகப் போக்குவரத்துச் செய்து வருவதுமான கப்பல்கள் சர்வதேச கடற்பிராந்தியங்களில் பயணம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
அவுஸ்.தேசிய வானோலிக்கு அமைச்சன் நிமல் பேட்டி விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு நிதி சேகரிப்பதற்காகவே இலங்கையில் வர்ழ்கின்ற தமிழ் மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு வி.புலிகள் மேற்கொண்டு வருகின்ற மற்றுமொரு நடவடிக்கையாகும் என்று சுகாதரார அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் நிமல் அங்குள்ள தேசிய வானோலி ஒன்றுக்கு நேற்று முன்தினம் வழங்கிய செவ்வியிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் வழங்கிய செவ்வி தொடர்பாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்பட்டுள்ளதாவது:- தமிழ் மக்களை வேறு நாடுகளுக்கு அகதிகளாக அனு…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தான் துணை இராணுவக் குழுவை வளர்த்து வருகின்றது: ரொய்ட்டர்ஸ் ஜசெவ்வாய்க்கிழமைஇ 6 மார்ச் 2007இ 07:04 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் அணியில் சிறார்களை சேர்ப்பதில் இராணுவத்தில் உள்ள சில பிரிவினர் உதவி வருவதாக ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதிகள் தெரிவிப்பதாகவும் அரசாங்கம் தான் கருணா குழுவினரை வளர்த்து வருகின்றது என அவதானிகளும் கூறுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தனது ஆய்வுச் செய்தியில் தெரிவித்திருக்கின்றது. சைமன் கார்டினர் என்பவரால் எழுதப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்ட சில பகுதிகள் வருமாறு: இலங்கையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள உள்நாட்டு போரில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட நுற்றுக்கண…
-
- 2 replies
- 932 views
-
-
கருணா அணியினரின் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானது ஜஆழனெயல ஆயசஉh 05 2007 07:28:35 Pஆ புஆவுஸ ஜயாழ் வாணன்ஸ மயிலம்பாவெளியில் கருணா அணி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவகம் நேற்றிரவு விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானதாக ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் அலுவலகம் அமைந்திருந்த கட்டிடடம் முற்றாக சேதமடைந்துள்ளதோடுஇ அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அருகிலுள்ள பாடசாலையொன்றில் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட 4 சிவிலியன்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் தரைமட்டமான அலுவலகம் டிடிஉ.உழஅ http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 4 replies
- 1.8k views
-
-
வட கொரியாவை தளமாகக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆயுத விநியோகம்: சிங்கள நாளேடு [திங்கட்கிழமை, 5 மார்ச் 2007, 20:05 ஈழம்] [கொழும்பு நிருபர்] வட கொரியாவை பிரதான தலைமையகமாகக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு பெருமளவு ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கப்பலில் கொண்டு வரும் விநியோகப் பாதையை சிறிலங்கா படைத்தரப்பினர் அடையாளம் கண்டுள்ளதாக சிங்கள நாளேடான 'திவயின' தெரிவித்துள்ளது. இன்றைய 'திவயின' நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்த விநியோகப் பாதையினூடாக கடல் வழியில் எறிகணைகள் மற்றும் மோட்டார் பீரங்கிகள் பெருமளவில் கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிழக்குப் பிராந்திய இராணுவ நடவ…
-
- 0 replies
- 618 views
-
-
'மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் போராளிகள் தான்': வெ.இளங்குமரன் "மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் ஒரு வகையில் இனப்பற்றுக் கொண்ட போராளிகள் தான் அவர்கள் பேனா தூக்குகின்ற போராளிகள் நாங்கள் துப்பாக்கி தூக்குகின்ற போராளிகள்". கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளிநொச்சி தமிழ்ச் சங்க பணிமனையின் திறப்பு விழாவில் தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர் வெ. இளங்குமரன் ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தனது சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மிகச் சிறப்பாக, கொண்ட குறிக்கோளோடு அவற்றை கடைப்பிடிப்பதில் பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து மற்றவர்களின் கருத்துக்களை விட தம் குறிக்கோளே முதன்மையானது எனக்கர…
-
- 16 replies
- 3.3k views
-
-
''உண்மையிலேயே வலுவாக இருக்கிறதா பொன்சேகவின் படை? -பு. சத்தியமூர்த்தி- சிறிலங்கா இராணுவத்தின் போர்முனைச் செயற்பாடுகள் மிக அதிகமாக காணப்படுகின்றன அங்கிங்கெனாதபடி ஒவ்வொரு நாளும் அது நகருவதாகவும் நிலையெடுப்பதாகவும் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதாகவும் பாய்ந்து பரந்து புலிகளை பஸ்மீகரம் செய்துவிடப் போவதாகவும் அதனது தரப்பு ஊடகங்கள் படாடோபமாகப் பிரசாரம் செய்து வருகின்றன. இந்தக் கருத்துருவாக்கம் சிறிலங்காவின் அதிகாரபீடத்தை முற்றாகக் கபளீகரித்துள்ளது. அதன் காரணமாக ஆழ்ந்த பொருள் பொதிந்த பிரதாபங்களை அது தினந்தினம் வெளியிட்டு வருகிறது. இந்த எண்ண அலைகள் கொழும்பு மையச் சிங்கள, ஆங்கில ஊடகங்களையும் வெகுவாகப் பாதித்துள்ள காரணத்தால் அவை வெளியிடும் செய்திகளும் பத்திகளும் கட்டுரைகளும…
-
- 3 replies
- 2.1k views
-
-
முதல்வர் கருணாநிதி வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்! பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதியின் காதில் பூ வைக்கிறாரா? அல்லது மன்மோகன் சிங் கருணாநிதி இருவரும் சேர்ந்து எங்களது காதில் பூ வைக்கிறார்களா? இலங்கையின் இறைமை மற்றும் ஆடபுல கட்டுப்பாடுகளுக்கு ஊறு நேராதவகையில் ஒன்றுபட்ட நாட்டில் தமிழ் மக்கள் உரிமைகளோடு வாழ இந்தியா தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசை வற்புறுத்தும் என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகும். மேலும் ஸ்ரீலங்காவோடு இந்தியா எந்தவித பாதுகாப்பு உடன்பாடும் செய்து கொள்ளாது. அழிவு ஆயுதங்களையும் விற்பனை செய்யாது என்ற உறுதி மொழியும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் தமிழகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. இலங்கை சிக்கல் குறித்து தமிழ…
-
- 3 replies
- 2.8k views
-
-
அனைத்துலக சமூகத்திற்கு புலிகளின் செய்தி செவ்வாய் 06-03-2007 02:17 மணி தமிழீழம் [மயூரன்] 'சிறீலங்கா அரசு அனைத்துலக ஆதரவுடன் உருவான போர்நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறி தமிழர்தாயகம் மீது ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்து விட்டு தமிழர்களை அவலத்தில் தள்ளியுள்ள இந்நிலையில் சிறீலங்கா அரசை கண்டிக்க தவறியுள்ள அனைத்துலக சமூகம், தமிழர்களளின் தாயகம் மீதான சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்பை முறியடிக்க விடுதலைப்புலிகள் சமரை தொடங்கும் போதும் கண்டிக்க கூடாது' இதுவே அனைத்துலக சமூகத்திற்கான எங்களின் செய்தி என்று தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் நோர்வே தூதுவரிடம் தெரிவித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தின் இணையத்தள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pathiv…
-
- 1 reply
- 1.6k views
-
-
செவ்வாய் 06-03-2007 01:05 மணி தமிழீழம் [மயூரன்] அமெரிக்காவின் உயர் பிரதிநிதிகள் குழு சிறீலங்காவிற்கு விஜயம் இந்தவாரம் இருநாள் விஜயமாக அமெரிக்காவின் உயர்குழுவினர் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலும் சிறீலங்கா ஐனாதிபதி மற்றும் உயர் மட்ட அமைச்சர்களுடன் பேச்சுநடத்துவதற்காக இருநாள் விஐயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக நேற்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதன்போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை துணைச்செயலர் ஸ் ரீவன் மான் (Steven Mann) அவர்களும் செல்லவிருப்பதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலருடன் சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றொபேட் பிளேக் அவர்கள் இருநாடுகளுக்கும் இட…
-
- 3 replies
- 1.1k views
-
-
செவ்வாய் 06-03-2007 00:41 மணி தமிழீழம் [மயூரன்] நீர்கொழும்பு பகுதியில் 15 வயது சிறுமி கடத்தல் இனம் தெரியாத குழுவினரால் நீர்கொழும்புப் பகுதியில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் 15 அகவையுடைய அவரது மகளை கடத்தி அவரது விடுதலைக்கு 4 மில்லியன் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை இவரது மகளையும் மற்றும் மகனையும் பாடசாலையைவிட்டு வரும்போது வழியில் வெள்ளை வானில் சென்றோரால் 1.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை அவரது மகன் அக்குழுவினரிடம் இருந்து தப்பி பத்திரமாக வீடுசென்று சேர்ந்துள்ளதாக தெரியவருகிறது. பதிவு.கொம்
-
- 0 replies
- 803 views
-