ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்கள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியைச் சென்னையில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இந்திய மாதிரியிலான அரசியலமைப்பு முறையின் கீழ் தீர்வு காணப்பட வேண்டும் என்று தான் கருணாநிதியிடம் வலியுறுத்தியதாக ஆனந்த சங்கரி அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார். தனி நாடு கோரிக்கை என்பதை சர்வதேச சமூகமும், இந்தியாவும் ஏற்காது என்பதால், இந்தப் பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தான் கருணாநிதியிடம் வலியுறுத்தியதாகவும் ஆனந்த சங்கரி கூறினார். http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
-
- 1 reply
- 897 views
-
-
வவுனியாவில் உயர்பாதுகாப்பு பகுதியில் கிளைமோர் தாக்குதல் வவுனியா சிறிலங்காப் படையினரின் உயர்பாதுகாப்பு பகுதியான ஈரப்பெரியகுளத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் நிலை மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரப்பெரியகுளம் தொடரூந்து நிலையத்தில் உள்ள சிறிலங்கா காவல்துறையினரின் நிலை மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலின் போது காவல்துறையினரின் நிலையில் காவல்துறையினர் இருவரும் சிங்கள ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் காவல் கடமையில் இருந்தனர். இவர்களில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவரும் காவல்துறையைச் சேர்ந்த ஒருவருமாக இருவர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா இராணுவத் தலைமையகமும் விமானப் படைத்தளமும…
-
- 0 replies
- 711 views
-
-
சிறிலங்காவின் 'வெற்றிப் பெருமிதமும் தலைக்குனிவும்': ஜேர்மனிய நாளேடு [வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2007, 06:48 ஈழம்] [கி.தவசீலன்] "மட்டக்களப்பை விட்டு விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் கூற்று பொய் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. வெளிநாட்டு இராஐதந்திரிகள், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'பாதுகாப்புப் படைகள்' வெற்றிப்பாதையில் வீறுநடை போடுகின்றனர் என்ற கூற்றைக்கூட சிறிதளவும் மெய்யென்று நம்பமுடியாமல் செய்துவிட்டது". இவ்வாறு ஜேர்மனியில் வெளியாகும் நாளேடுகளில் ஒன்றான General-Anzeiger நேற்று முன்தினம் புதன்கிழமை (28.02.07) வெளியிட்ட செய்தியில் சிறிலங்கா அரசை எள்ளி நகையாடியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் உள்ள வெ…
-
- 6 replies
- 1.9k views
-
-
சிறிலங்கா அரசின் பிரச்சாரப்போரின் மீது வீழ்ந்த எறிகணைகள் -அருஸ் (வேல்ஸ்)- சிறிலங்கா அரசின் வாகரை ஆக்கிரமிப்பின் பின்னர் கிழக்கில் நிலவிவரும் இராணுவச் சமவலுச் சமன்பாடுகளில் சர்வதேசம் கொண்டிருந்த குழப்பநிலை கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பின் இதயப்பகுதியில் நடைபெற்ற மோட்டார் தாக்குதலுடன் மேலும் குழப்பமடைந்துள்ளது. அரசின் அண்மைய இராணுவ நடவடிக்கைகளால் உற்சாகம் அடைந்த மகிந்தாவின் சகோதரரும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச விடுதலைப் புலிகளை முற்றாக கிழக்கில் இருந்து வெளியேற்றப் போவதாக சூளுரைத்திருந்தார். அவரின் கூற்றின் அறியாத்தன்மையை அனைத்துலக சமூகம் தெளிவாக புரிந்து கொண்ட நாளாக கடந்த 27.02.2007 ஆம் நாள் அமைந்து விட்டது. தனது இராணுவ மேலான…
-
- 0 replies
- 681 views
-
-
மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சடலத்தை திருப்பி அனுப்பிய படையினர். - பண்டார வன்னியன் Friday, 02 March 2007 11:27 யாழ்ப்பாணம் தகனக்கிரிகைக்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலத்தினையும், விறகினையும் எடுத்துச் செல்லப் படையினர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். இச் சம்பவம் அராலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அராலி பூவோடை இந்துமயானப் பகுதியிலேயே இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த வயோதிபர் ஒருவரை அடக்கம் செய்வதற்காக முன்கூட்டியே படையினரின் அனுமதியைப் பெற்று விறகும் இறக்கப்பட்டு இறுதிக்கிரியைக்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் அங்கு வந்த படை அதிகாரிகள் சிலர் சடலத்தையும் வறகையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற …
-
- 7 replies
- 1.4k views
-
-
வடக்கு கிழக்கும் பகுதிகளுக்கு தொலைதொடர்பு விநியோகத்திற்கு பாதுகாப்பு அமைச்சு தடைவிதித்துள்ளது. விடுதலைப்புலிகள் இரகசிய தகவல் பரிமாற்றத்திற்கு இவைபயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் இத்தடை உத்தவு நடைமுறைப்படுத்தப்படுவதாகவு
-
- 0 replies
- 783 views
-
-
சற்று நேரத்திற்கு முன் அனுராதபுரம் விமானப்படையினரின் தளத்துள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளது. இருவர் மரணித்துள்ளதாக இராணுவ பேச்சாளன் அறிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்டுகின்றது. ஈழத்திலிருந்து ஜானா
-
- 11 replies
- 2.9k views
-
-
இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாது இலங்கைக்கு அமெரிக்கா எடுத்துரைப்பு.இந்த தலைப்பில் எந்த சந்தேகமுமில்லை இந்த உண்மையை பல வருடங்களின் முன்பே அமெரிக்கா அறிந்திருந்ததினால் தான் ஸ்ரீலங்காவுக்கு உதவ முண்டியடித்துக் கொண்டிருக்கிறது இருந்தாலும் இன்று அமெரிக்கா இந்த கருத்தை சொல்வதில் தான் சந்தேகம் அதிகரிக்கிறது. உலகத்திலே ஏதாவது ஒரு நாடோ அல்லது விடுதலை அமைப்புகளோ சற்று பலம் பெற்றுவிட்டால் அங்கே தான் அமெரிக்காவின் பிரசன்னம் ஆரம்பிக்கிறது. இன்று எமது பிரச்சினையில் அமெரிக்கா தனது வேஷத்தை மாற்றி நடிக்க முயற்சிக்கிறமாதிரி தோன்றுகிறது. அதாவது ஸ்ரீலங்காவை கண்டிக்கிறமாதிரியும் தான் ஒரு நடுநிலை வாதியென்று காட்டிக்கொள்ள எத்தனிக்கிறது. இதை நிஷப்படுத்துகிறமாதிரி பிரிட்டிஷ்காரனின் …
-
- 19 replies
- 3.6k views
-
-
-
- "அல் ஜஸீரா'க்கு பேட்டி கொடுக்கும் லண்டன் ஈழத்தமிழ் உணர்வாழர்களுக்கு ஒரு அன்பான எச்சரிக்கை. ஜ வியாழக்கிழமைஇ 1 மார்ச் 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ மத்திய கிழக்கின் பிரபல்யம் மிக்க தொலைக்காட்சிச் சேவையான "அல் ஜஸீரா' நேற்றுக்காலை தனது "இன்சைட் ஸ்டோரி' என்ற நிகழ்வில் இலங்கை விவகாரம் தொடர்பாக மூன்று முக்கிய அரசறிவியல் பிரமுகர்களை ஒரே சமயத்தில் இணைத்து நடத்திய கலந்துரையாடலில் அந்நிபுணர்கள் தெரிவித்த முக்கிய கருத்து ஒன்று இப்போது குறிப்பிடத்தக்க அம்சமாக வந்திருக்கின்றது. ஆதே போன்று இந்தவாரம் வேறு ஒரு நிகழ்சியையும் ஈழத்தமிழரிடம் பேட்டி எடுத்து ஒலிபரப்பி இருந்தது. முதலாவதாக ஒலிபரப்பாகிய நிகழ்சியில் பல ஈழத்தமிழ் ஆதரவாளரும் கருத்து தெரிவித்திரந்தனர். ஆனால் அந்த நிகழ்சியை ஏற்பாட செய்த…
-
- 0 replies
- 734 views
-
-
கருனாநாய் வவுனியாவில் உள்ளவழக்கறிஞர்களை மிரட்டியருக்கின்றான்வுhரசளன
-
- 4 replies
- 2.1k views
-
-
இந்திய மத்திய அரசின் பட்ஜெட்டில் இலங்கைக்கான உதவி ரூபா 105 கோடி ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவித் திட்டத்தில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இலங்கைக்கு 77 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புப் பிரிவில், இலங்கைக்கு 28 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் நலனுக்காக 17 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது http://www.thinakkural.com/news/2007/3/2/i...s_page22484.htm இந்திய நிதியமைச்சர் தமிழரான பா.சிதம்பரம் வாழ்க :angry:
-
- 0 replies
- 843 views
-
-
இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அமெரிக்க தூதுவர் [வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2007, 05:00 ஈழம்] [க.திருக்குமார்] இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்ற எமது நிலைப்பாடானது கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற தாக்குதலின் மூலம் மாற்றமடையப் போதில்லை என்று சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றோபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பிய பின்னர் இரு நாட்களில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வர்த்தக நிர்வாக முதுமாணிப் பிரிவினரின் பழைய மாணவர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரைய…
-
- 8 replies
- 1.6k views
-
-
வெள்ளி 02-03-2007 00:50 மணி தமிழீழம் [மயூரன்] தெகிவளையில் 3 தமிழ் பெண்கள் கைது தெகிவளை காவல்துறையினரால் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் அவர்களது வீட்டில் வைத்து களுபோவில விஐயராம மாவத்தை, தெகிவளை பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் (PTA) எதுவித காரணமும் கூறாமல் கைது செய்து தெகிவளை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதுதொடர்பில் தெகிவளை காவல்துறையினரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். கைதுசெய்யப்பட்டவர்கள் 26 அகவையுடைய ரங்கராஐh கிருஸ்ணவேணி, 17 அகவையுடைய செபஸ்ரியன் கனிஸ்சிகா, 33 அகவையுடைய அன…
-
- 1 reply
- 1.1k views
-
-
: விமல் வீரவன்ச ஜவியாழக்கிழமைஇ 1 மார்ச் 2007இ 20:29 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "சிறிலங்காவின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிடும் சூழலை அனைத்துலக சமூகம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதானது கோசோவோ மற்றும் தென்சூடான் போன்றவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடுகளைப் போல் ஆபத்தானது" என்று ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு முன்னணி சார்பாக தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: "அனைத்துலக சமூகம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் பின்னரும் தமது வழமையான மந்திரத்தையே உச்சரித்து வருகின்றன. இராஜதந்திரிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மிகக் கடுமையான …
-
- 1 reply
- 986 views
-
-
-
- 4 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்புக்கு வெளிநாட்டுதூதுவர்கள் வருவதற்கு முதல்நாளிரவும் அரைமணித்தியாலங்கள் முன்னதாகவும் தாக்குதல் நடந்துகொண்டிருந்ததை இராணுவத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதிகாலை 7.30 -8.15 வரை செல் தாக்குதல் நடாத்தப்பட்டது. வெளிநாட்டுதூதுவர்கள் 8.40 ற்கு வருவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் தூதுவர்களை தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தரையிறக்கி ஒரு நாடகத்தை அரங்கேற்றியது அரசு. தகவல் மூலம்: டெய்லிமிறர் When contacted by the Daily Mirror STF Commandant Nimal Lewke confirmed there was an attack on the Air Force camp minutes before the helicopters with the diplomats landed at the Webber stadium which is under the control of the STF. Defence sources said as…
-
- 0 replies
- 863 views
-
-
ஸிரீ லன்கா கடற்படையினால் கப்பல் ஒன்று தகர்ப்பு.....
-
- 3 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பில் புலிகளின் பகுதி மீது கடும் ஷெல் வீச்சு சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 பேர் படுகாயம் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை படையினர் மேற்கொண்ட பலத்த ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதலில் 20 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை புலிகளின் பகுதிகளை நோக்கி நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களையடுத்து புலிகளும் பதில் தாக்குதலை நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலின் போதே 23-3 ஆவது படையணித் தலைமையகத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலரும் படையினரும் காயமடைந்தனர். இதையடுத்து காலை முதல் மாலை வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்…
-
- 1 reply
- 845 views
-
-
வியாழக்கிழமை 1 மார்ச் 2007 ஜனனி எமது நாட்டை ஐக்கிய நாடுகள் சபை கைப்பற்றும் வகையில் சர்வதேச சமூகம் திட்டமிட்டு செயற்படுகின்றது. மட்டக்களப்பில் இடம் பெற்ற தூதுவர்கள் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல்களையும் சர்வதேச சமூகம் இதற்காகவே பயன்படுத்திவருகின்றது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி. யின் பிரசார செயலாளருமான விமல் வீரவங்ச தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுவதுபோன்று இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போர்நிறுத்த உடன்படிக்கை தடையாக இருக்கவில்லை என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால். புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டுமானால் போர்நிறுத்த உடன்படிக்கை ரத்துச்செய்யப்படவேண்டும். இந்த உடன்படிக்கை சட்ட ரீதியாக அமுலில் இருக்கின்ற நிலை…
-
- 1 reply
- 914 views
-
-
யாழ். குடாநாட்டு அவலங்கள் [01 - March - 2007] -கி.சிவனேசன் எம்.பி- இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 22 ஆம் திகதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைவதுடன், யாழ். குடாநாட்டின் தரை வழிப்பாதை இராணுவத்தால் மூடப்பட்டு கடந்த 11 ஆம் திகதியுடன் ஆறுமாதங்கள் கடந்துள்ள நிலையில் அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளினால் இந்த ஒப்பந்தம் முற்றுமுழுதாக மீறப்பட்டு வட,கிழக்கில் வாழும் தமிழ் பேசும் இனம் மிகக் கொடுமையான மனிதப்பேரவலத்திற்குள் வாழும் துயரம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட,கிழக்கு பகுதிகளில் ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதும் நாடு முழுவதிலும் 5 இலட்சம் மக்களுக்கு மேல் உள்நாட்டிலேயே இடம்பெய…
-
- 1 reply
- 1k views
-
-
-ஹெல்மன்- இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களும் அதன் தாக்கங்களும் இலங்கை மக்களின் வாழ்க்கை முறை, வாழ்க்கைத் தரத்திலிருந்து பொருளாதார அடிப்படை வரை பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இன்றைய நவீன உலகில் பொருளாதார சீர்திருத்தம் என்றால் நவதாராண்மை வாதமாகவே கொள்ளப்படுகிறது. இந்த நவதாராண்மை வாதமானது கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இது சிந்தனைக் கிளர்ச்சி அதனூடாகத் தேடலைத் தூண்டவல்லது. சந்தைச் சக்திகள் போட்டி அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ள தூண்டப்படுவதால் சவால்களும் எழுந்து நிற்கின்றன. சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உற்பத்தியாளர் - நுகர்வோரிற்கு ஏற்பட வேண்டியுள்ளது. நவதாராண்மைவாத பொருளாதாரக் கொள்கையும் இலங்கையின் பொருளாதார …
-
- 0 replies
- 7.9k views
-
-
இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான கிபிர் வான்கலங்கள் பொதுமக்கள் குடியிருப்பு மீது குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விமானங்கள் எட்டு குண்டுகளை வீசியுள்ளதாககவும் இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒலுமடுவில் ஆழ ஊடுருவினரின் தாக்குதலிலிருந்து சிற்றூர்தி மயிரிழையில் தப்பியது சிறீலங்கா படையினரின் ஆள ஊடுருவும் அணியின் தாக்குதலில் இன்று வியாழக்கிழமை காலை பொதுமக்கள் பயணிக்கும் சிற்றூர்தி ஒன்று மயிரிழையில் தப்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் நெடுங்கேணியில் இருந்து மாங்குளம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற சிற்றூர்தியே நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் இத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. வாகனம் சிறு தாக்கங்களுக்கு உட்பட்ட போதிலும் அதிஸ்ரவசமாக பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
- 1 reply
- 1k views
-
-
குடாநாட்டை விட்டு வெளியேற 96 வீதமான மக்கள் விருப்பம். - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 01 ஆயசஉh 2007 14:36 யாழ் குடாநாட்டை விட்டு 96வீதமான மக்கள் வெளியேறவிரும்புவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பிரதேச ரீதியாக இந்த அமைப்பால் 10பேர் வீதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவ்விபரம் தெரியவந்துள்ளது. உணவுத்தட்டுப்பாடு, தொழிலின்மை, போக்குவரத்தின்மை, உயிர்அச்சம் போன்ற காரணங்களை மக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது http://sankathi.org/news/index.php?option=...03&Itemid=1
-
- 3 replies
- 2k views
-