ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
தமிழீழம் ஏற்கனவே உருவாகி விட்டதா? தமிழீழம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதா? 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலாசிங்கத்தின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப் படலாம் எனச் செய்திகள் வந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் இச்செய்தியானது சர்வதேச ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ள அல்லது பரப்பப்படும் விதமானது தமிழீழம் ஏற்கனவே உருவாகி விட்டதா? தமிழீழம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதா? தமிழீழத்தை சர்வதேச ஊடகங்கள் மனத்தளவில் அங்கீகரித்து விட்டனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சர்வதேச ஊடகங்களில் திருமதி அடேல் பாலசிங்கம் மறைந்த முன்னால் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டுள்ளமையே…
-
- 9 replies
- 3k views
-
-
பொதுமக்களை பாதுகாக்கவும்: யு.என்.எச்.சி.ஆர் வேண்டுகோள் மட்டக்களப்பு வாகரை மீதான சிறிலங்கா அரசின் படை நடவடிக்கைகளை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அரச கட்டுப்பட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசையும் விடுதலைப் புலிகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பான யு.என்.எச்.சி.ஆர் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பேச்சாளர் ரொன் ரெட்மொன்ட் கூறியதாவது: சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் அனைத்துலக விதிகளை மதிப்பதுடன் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் அனுமதியளிக்க வேண்டும். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடக்கும் போரில் 70,000-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் 465,000 மக…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறீலங்கா அரசாங்கத்தின் ஒரே நோக்கு தமிழர்களை தாயத்திலிருந்து விரட்டுவது - ஜெயானந்தமூர்த்தி சிறிலங்கா அரசாங்கத்தின் ஒரே நோக்கு தமிழர்களை தாயகப் பகுதியில் இருந்து விரட்டியடித்து பல அவலங்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக உள்ளது. இந்த ஈனச் செயலுக்கு இராணுவம் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டுவருகின்றது. இந்நடவடிக்கையினை வன்மையாக கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பகுதியில் மக்கள் வாழ்க்கின்ற குடியிருப்புக்கள் மீது இராணுவம் தொடர்ந்து ஆட்லறி மற்றும் விமானத் தாக்குதல்லை மேற்கொண்டதன் விளைவாக அங்கியிருந்து பல்ல…
-
- 0 replies
- 853 views
-
-
திங்கள் 22-01-2007 13:35 மணி தமிழீழம் [செந்தமிழ்] இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை சாதகமாக பரிசீலிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலாயம் அனைத்துலக நாடுகளை கோரியுள்ளது இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களும் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக வடக்கு கிழக்கு இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழர்களுக்கு மாற்றிடங்களில் வாழ்வதற்கான சூழ்நிலை காணப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மக்களால் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை சாதகமாக பரிசீலிக்குமாறு கோரிக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசு தீவின் கிழக்கு பகுதியில் போராளிகளின் பலமிக்க பிரதேசங்களை கைபற்றிய பின்னர் கடந்த திங்களன்று "புலிகளை காட்டுக்கு அடித்து விரட்டுவோம்" என்று சூழுரைத்துள்ளது. "ஆனால் புலிகள் பேச்சுக்கு சம்மதித்தால் மேற்கொண்டு யுத்தத்தை தவிர்க்கலாம்" என்றும் தெரிவித்துள்ளது. நீங்கள் ஆட்டத்தை ஆரம்பித்தீர்கள், இனி அவர்கள் ஆடும் முறை. அதற்குள் என்ன அவசரம்!
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கை இராணுவம் சமீபத்தில் தனக்கு கிடைத்துள்ள வெற்றிகளைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தலாம் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் அதேவேளை, விடுதலைப் புலிகள் தீவிரமான கெரில்லா தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தமது திறமையை தக்க வைத்துக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து சர்வதேச செய்தி ஸ்தாபனமொன்று வெளியிட்டுள்ள ஆய்வில், இலங்கை இராணுவம் பல வார கால தாக்குதலுக்குப் பின்னர் வாகரையை கைப்பற்றியுள்ளது. விடுதலைப் புலிகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தோல்வியை சந்தித்துள்ளனர் என கருத்து தெரிவித்துள்ள மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தைச் சேர்ந்த சுனந்த தேசப்பிரிய, இதன் காரணமாக இராணுவம் மேலும் பல தாக்குதல்களை மேற்கொள்ள முனைய…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையில் தீர்வை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா தலையிட வேண்டும்: அமெரிக்காவின் ஜனநாயக கட்சி உறுப்பினர். இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அரச தலைவர் ஜோர்ஜ் புஷ் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் ஜனநாயக கட்சி உறுப்பினரான பிராங் பலோன் பிரதிநிதிகள் சபையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் நிர்வாகம் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். ஜெனீவாவில் நடைபெற்ற இறுதிச்சுற்றுப் பேச்சுக்கள் முறிவடைந்து விட்டன. அதன் பின்னர் பேச்சுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. அங்குள்ள மக்கள் துன்பத்தில் வாழ்கின்றார்கள். 1983 ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ விடு…
-
- 0 replies
- 674 views
-
-
இவர்கள் இணைந்தால் நாம் விலகுவோம்: ஜே.வி.பி. [திங்கட்கிழமை, 22 சனவரி 2007, 13:40 ஈழம்] [க.திருக்குமார்] ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், மிலிந்த மொறகொட, ராஜித சேனாரட்ன ஆகியோர் அரசில் இணைந்தால் நாம் அரசிலிருந்து விலகுவது உறுதி என ஜே.வி.பி. அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினரான அனுர குமார திசநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளதாவது: நாம் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் இவை தவிர மேலும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட வேண்டியுள்ளது. இந்த வாரம் கூடவுள்ள எமது மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். எமது இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தா…
-
- 0 replies
- 748 views
-
-
லக்கிலேன்ட் தோட்டத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் அட்டகாசம் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன, தொழிலாளர்கள் விரட்டியடிப்பு. இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள நிவித்திகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்கிலேன்ட் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களை அடித்து நொறுக்கி சேதமாக்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற இந்த சம்பவத்தினால் தோட்டத்தொழிலாளர்களின் ஆறு குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்திருப்பதாகவும் இதனால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தோட்ட நிர்வாகத்தின் உதவியுடனேயே இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது, சம்பள உயர்வு கோரி தோ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பலாலி வீதியில் மாணவிகள் மீது கெடு பிடி திருநெல்வேலி பலாலி வீதியில் பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கச் சென்று வரும் மாணவிகள் மீது திருநெல்வேலிச்சந்திக்கும் பல் கலைக்கழக சந்திக்கும் இடையே காவல் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசாரும் இராணுவத்தினரும் வேண்டும் என்று அவா்களை மறித்து வேண்டத்தகாத வார்ததைப் பிரயோகங்களில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகின்றது. இரண்டு மூன்ற மாணவிகள் ஒன்றாக வரும் வேளையில் இம் மாணவிகளை தடுத்து வைத்து தனித்தனியாக பிரிந்து செல்லும் படி கூறி நேரத்தை மினக்கடுத்தி செல்லவிடுவதும் மற்றும் கல்யாணம் சம்பந்தமாக கேள்விகளை கேட்பதும் என துன்புறுத்திவருகின்றார்கள் பல்கலைக்கழக சந்தியில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசார் இந்த செயல்பாட்டில் மிகவும…
-
- 0 replies
- 774 views
-
-
சஙகதியை பாருங்கோ... http://sankathi.org/news/index.php?option=...35&Itemid=1
-
- 8 replies
- 2k views
-
-
சர்வதேச மனிதநேய சட்டங்களை மதித்து மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் நடக்கவேண்டும்: UNHCR. மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் பொதுமக்களைப் பாதுகாத்தல்,சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடமளித்தல் உட்பட சர்வதேச மனிதநேய சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்ஸ்தா னிகராலயத்தின் (யு.என்.எச்.சி.ஆர்) பேச்சா ளர் றொன் றெட்மொன்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜெனிவாவில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறிய தாவது;கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வாகரையிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். படையினர் தாக்குதல் நடத்தியவாறு முன்னேறுவதாக தெரிவ…
-
- 0 replies
- 638 views
-
-
கடல்கோளினால் பெரிதும் சேதமடைந்துள்ள காலி விளையாட்டரங்கை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து காலிப் பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியதையடுத்து, இப்பிரச்சினை தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டரங்கை புனரமைப்பதற்கு அவுஸ்திரேலியா 800 இலட்சம் ரூபாவை வழங்கியிருந்த போதிலும், இந்தப்பணம் புனரமைப்புப் பணிகளுக்கு செலவிடப்படவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த இரு அதிகாரிகள் இந்த வேலைகள் நடைபெறாதது குறித்து ஆச்சரியப்பட்டதுடன், இந்தப் பணத்துக்கு என்ன நடந்தது எனவும் கேட்டுள்ளனர். இது தொடர்பாக காலி கச்சேரியில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திலும் இப்பிரச்சினை முன்வைக்கப்பட்ட போது விளையாட்டரங்கின் பொறு…
-
- 0 replies
- 634 views
-
-
அமைச்சரவை மாற்றம் இம்மாத இறுதிக்குள் இடம்பெறுமென தெரிவித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே 52 அமைச்சரவை அமைச்சர்களும், 52 இராஜாங்க அமைச்சர்களும் அங்கம் வகிப்பரெனவும் தெரிவித்தார். இதேவேளை ஐ.தே.க. மற்றும் மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால் மாத்திரமே அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமென அமைச்சர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார். அமைச்சர் ஜெயராஜ் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும். இதில் 52 அமைச்சர்களும், 52 இராஜாங்க அமைச்சர்களும் இடம்பெறுவர். இதில் ஐ.தே.க.விலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும். இதேவேளை 2003 ஆம் ஆண்டு எனக்கு ம…
-
- 0 replies
- 530 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு குழுவினர் ஆதரவு தெரிவிக்கும் அதேவேளை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. மகிந்த அரசின் மீதான அதிருப்தியை அடுத்து அரசில் உள்ள பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்காவினதும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினதும் தலைமையில் திரண்டுள்ளனர். பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமரவீரவை சந்தித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பாகவும் தமது பொறுப்புக்களை மகிந்த, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்க முயற்சிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடினர். ம…
-
- 1 reply
- 933 views
-
-
தென் மாகாணத்தில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு, புதிய நவீன விளையாட்டு அரங்குகளை அமைப்பதற்கு, இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் 1.9 மில்லியன் ரூபாவை அம்பாந்தோட்டை மாவட்ட விளையாட்டுச் சங்கத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. "அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள தங்காலைப் பகுதியிலுள்ள மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கை புனரமைப்புச் செய்வதே எமது முக்கிய குறிக்கோள் என்று, ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதித் தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகக் குழுத் தலைவருமான மணிலால் பெர்னாண்டோ தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்; "மேற்படி விளையாட்டு அரங்கை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம். இந்த விளையாட்ட…
-
- 1 reply
- 638 views
-
-
வவுனியாவில் பொலிஸார் மீது தாக்குதல்! ஒருவர் பலி. வவுனியா குழுமாட்டுச் சந்திப்பகுதி வவுனியா-மன்னார் வீதியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியொன்றில் இருந்த பொலிஸார் மீது நேற்று மாலை 6:30மணியளவில் இனந்தெரியாதோர் நடத்திய கைத்துப்பாக்கித் தாக்குதலின் போது பொலிஸ்கான்ஸ்ரபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ்கான்ஸ்ரபிள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. -Sankathi-
-
- 0 replies
- 655 views
-
-
சிறார் படைச் சேர்ப்பில் துணை இராணுவக் குழுவினருடன் அரசு இணைந்து செயற்படுகின்றது: மனித உரிமைகள் அமைப்பு. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் சிறார்களை தமது படையில் சேர்ப்பதனை ஊக்கிவிப்பதன் மூலம் சிறிலங்கா அரசு சர்வதேச விதிகளை மீறியுள்ளதாக அமெரிக்கா நியூயோர்க்கை தளமாகக்கொண்டு இயங்கும் கியூமன் றைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் அமைப்பு சிறிலங்கா அரசை சாடியுள்ளது. இந்த அமைப்பு தனது 100 பக்கங்களை கொண்ட அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை (24.01.07) வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்படும் சிறார்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் ப…
-
- 0 replies
- 517 views
-
-
வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தில் ஒரு விடுதலைப் போராட்டம் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை பெரும் சிக்கலாக விஸ்வரூபம் எடுத்து இலங்கைத் தீவையே தனது வன் முறைத் தீயால் சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றது. உரிமை வேண்டி கௌரவ வாழ்வு வேண்டி நீதியும் நியாயமும் கோரி சுதந்திரம் கேட்டு தமிழர்கள் நடத்தும் போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. சுதந்திர வேள்வியில் தகித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தின் சூட்டை தகிப்பை சகிக்க முடியாது தடுமாறுகின்றது தென்னிலங்கைப் பேரினவாதம். புறச் சக்திகள், வெளிநாடுகள் போன்ற எவற்றினதும் ஆதரவின்றித் தனித்துத் தன்னந் தனியாக இந்தப் போராட் டத்தை ஈழத்தமிழர் தாயகம் முன்னெடுக்…
-
- 0 replies
- 856 views
-
-
வாகரை கைப்பற்றலை மகிழ்வுடன் கொண்டாடிய மகிந்த வாகரையை கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரச படைகள் கைப்பற்றியதை அறிந்ததும் படை அதிகாரிகளை பாராட்டிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தேசிய அமைப்புக்களின் ஒருங்கிணைந்த குழுவுடனான சந்திப்பின் போதே மகிந்த வாகரை வெற்றியை கொண்டாடினார். இது தொடர்பாக அங்கு அவர் கருத்துக் கூறுகையில், கிழக்கு முழுவதும் மிக விரைவில் விடுவிக்கப்படும் எனவும் அரசின் பயங்கரவாதத்திற்கான எதிரான போரை (இதென்ன அமெரிக் சொல்லிக் கொடுத்த சொல்லோ.. உலகில் உள்ள பயங்கரவாதிகள் எல்லாம் ஒருங்கிணைந்து இந்த அமெரிக்கப் பயங்கரவாததையும் அதன் எடுபிடி அரசுகளையும் எதிர்த்துப் போர…
-
- 1 reply
- 1.1k views
-
-
[21 - January - 2007] [Font Size - A - A - A] மட்டக்களப்பு வாகரையை நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை கைப்பற்றிய படை யினர் நேற்று கதிரவெளி மற் றும் வெருகல் பகுதிகளை கைப்பற்றியதன் மூலம், திருகோணமலைக்கும் மட்டக் களப்புக்கும் இடையிலான `ஏ-15' தரைவழிப் பாதை திறக்கப் பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. திருகோணமலை- மட்டக் களப்பு வீதியில் விடுதலைப் புலிகள் வசம் எஞ்சியிருந்த கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியையும் படையினர் நேற்று பிற்பகல் கைப்பற்றியதன் மூலம், இந்தப் பிரதேசங்களில் நிலை கொண்டிருந்த விடுதலைப்புலிகள் கதிரவெளி யின் மேற்குப் பக்கமாகவும் மாவிலாறின் தெற்குப் பக்கமாகவும் பின்வாங்கிச் சென்றதாகவும் படைத்தரப்பு நேற்றிரவு தெரிவித்தது. கதிரவெளி மற்றும் வெருகல் பக…
-
- 3 replies
- 1.8k views
-
-
[21 - January - 2007] [Font Size - A - A - A] -யாழின்மைந்தன்- 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் திகதி யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்குள்ள சுமார் 6 இலட்சம் மக்களும் இரும்புப் பிடிக்குள் இறுக்கப்பட்டு அவர்களின் அடிப்படைச் சுதந்திரங்கள் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன. அரசியல், இராணுவ, பொருளாதார நலன்களுக்காக யாழ்ப்பாண மக்கள் திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றார்க
-
- 0 replies
- 926 views
-
-
பருத்தித்துறையை நோக்கி படையினர் எறிகணை வீச்சு: தாய் பலி- 2 பிள்ளைகள் படுகாயம் சிறிலங்காப் படையினரின் பலாலி படைத்தளத்தில் இருந்து வடமராட்சி வடக்குப் பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக நடத்திய எறிகணை வீச்சில் 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது இரு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடுமையான மோதலை தொடர்ந்து சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக எறிகணை வீச்சுக்களை நடத்தினர். எறிகணையின் சிதறல்கள் அல்வாய் பாடசாலை வளாகப்பகுதியை தாக்கியதால் 34 வயதுடைய கிறேசியன் பாணுமதி என்ற இரு பிள்ளைகளின் தாயார் கொல்லபட்…
-
- 0 replies
- 843 views
-
-
http://www.tamilnaatham.com/interviews20070119.html புலிகள் இன்னும் 3. 3 மாதங்களினல் சிங்கள படைகளிற்கெதிராக பாரிய பாய்ச்சலை நடாத்துவார்கள்...கஸ்பர்..முழக்
-
- 3 replies
- 3k views
-
-
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. பங்காளிகளாக இருக்க வேண்டும்: மா.க.ஈழவேந்தன் [ஞாயிற்றுக்கிழமை, 21 சனவரி 2007, 18:53 ஈழம்] [புதினம் நிருபர்] இந்தியாவுடன் செய்துகொண்ட இருநாட்டு ஒப்பந்தத்தையே 19 ஆண்டு முடிவில் தூக்கியெறிய முடியும் என்றால், எதனை நம்பி சிங்கள அரசுடன் நாங்கள் இனி ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்? என்ற கேள்வியையே பதிலாக்கினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன். அண்மையில் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அங்கிருந்து வெளிவரும் 'தமிழ்முரசு' நாளேட்டிடம் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், அதாவது வடக்கு - கி…
-
- 0 replies
- 919 views
-