ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
சாவகச்சேரி மருத்துவமனையில் காவலாளி சுட்டுக்கொலை சாவகச்சேரி பொதுவைத்திய சாலையில் இரவு காவல் கடமையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் இரவு 11 மணியளவில் இரு இனம்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் யாழ்பாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளபோது வழியில் இறந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்வர் பருத்தித்துறையை சேர்ந்த 23 அகவையுடைய ரஞ்சன் எனவும் இவர் யாழ்பல்கலைக் கழக மாணவன் எனவும் தனது மாமாவிற்கு உதவி செய்யும் பொருட்டு இரவு கடமையில் இருந்ததாகவும் மேலும் அறியமுடிகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1k views
-
-
ஏறிகணைத் தாக்குதலையடுத்து பொதுமக்கள் இடப்பெயர்வு மட்டக்களப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வவுணதீவு, மங்கிக்காடு, ஈச்சிலம்பற்று, நாவற்காடு, மண்முனை மேற்கு விளாவெட்டுவான் ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிறீலங்கா அரசின் அகோர எறிகணைத் தாக்குதலையடுத்து இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துள்ளார்கள். 23-3 பிரிகேட் இராணுவ தலமையகம், வாழைச்சேனை காகித தொழிற்சாலை இராணுவ முகாம், மயிலம்பவே இராணுவ முகாம் ஆகிய பகுதிகளில் இருந்தே கடந்த செவ்வாய்கிழமை முதல் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல்களில் பெருமளவு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பங்குடவலி கிராமத்தை சேர்ந்த நான்கு பொதுமக்கள்…
-
- 0 replies
- 963 views
-
-
- பாங் கி மூன் விடுதலைப் புலிகளும் சிறீலங்கா அரசாங்கமும் அமைதி முயற்சியை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங் கி மூன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் மட்டக்களப்பில் உலங்கு வானூர்த்தி மூலம் இராஜதந்திரகள் கொண்டுசெல்லப்பட்ட போது எறிகணைத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட விடயம் தொடர்பிலேயே பாங் கி மூன் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தாக்குதலைக் கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செலயலாளர் நாயகம் வெளிநாட்டுத் தூதுவர்களையும் அனைத்துலகத் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளையும் ஏற்றிச் செல்லப்பட்ட உலங்கு வானூர்த்தி மீதான தாக்குதலானது அனைத்துல சமூகத்ததின் உயிர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது எ…
-
- 3 replies
- 1.3k views
-
-
வடபோர் முனைப் போராளிகளின் கனரக ஆயுதப் பயிற்சி நிறைவு நிகழ்வு [வியாழக்கிழமை, 1 மார்ச் 2007, 15:58 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர் முனைப் போராளிகளின் கனரக ஆயுதப் பயிற்சி நிறைவு நிகழ்வு நேற்று புதன்கிழமை சிறப்பாக ஒழங்கமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் நிகழ்வின் ஆரம்பத்தில் முதன்மைச்சுடரினை வடபோர் முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன் ஏற்றிவைத்து மாவீரரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்ததுடன் சிறப்புரையும் நிகழ்த்தினார். இதேவேளை இப்பயிற்சியின் நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் கனரக ஆயுதப்பயிற்சியை நிறைவு செய்த போராளிகளுக்கு இடையே போட்டிகள் இடம்பெற்றன. தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் செ.வ.தம…
-
- 0 replies
- 875 views
-
-
தமிழீழ தனியரசை அங்கீகரிக்க புலம் பெயர் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி போர் நிறுத்த உடன்படிக்கை ஐந்து வருடத்தை நிறைவு செய்துள்ள இந்நிலையில் தமிழீழ தனியரசு அமைப்பதற்கான அங்கீகாரத்தை சர்வதேச சமுகம் வழங்க முன்வர வேண்டும். அதற்காக புலம்பெயர்ந்து வாழும் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலண்டன் லூசியம் பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ் மக்களின் உரிமைக்க…
-
- 6 replies
- 1.4k views
-
-
மாங்குளத்தில் கிபிர் விமானத் தாக்குதல். மாங்குளம் பகுதியில் இன்று வியாழன் காலை 7.55 மணியளவில் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர் இதன் போது ஏற்பட்ட சேத விபரம் தெரிய வரவில்லை . மாங்குளம் மேற்கு 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீதே விமானத்தாக்குதல் நடத்தப்படடுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது -Virakesari-
-
- 1 reply
- 786 views
-
-
-விஜயன்- 'கொழும்பட்ட கிரி அப்பிட்ட கெக் கரி" (கொழும்பில் உள்ளவர்களுக்குப் பால் கொடுத்து ஓய்ந்துபோன வெற்று முலைகள் - வெறும் கெக்கரிக்காய் போன்ற - தான் எங்களுக்குக் கிடைக்கிறது. இது சிங்களக் கிராமங்களில் கொழும்பிலுள்ள ஆட்சியாளர்கள் பற்றிக் கூறப்படுகின்ற பிரதானமான ஒரு பழமொழி. சிங்கள ஆட்சியாளர் குழாம் ஆங்கிலம் கற்று, வெள்ளைக்காரருடன் சேர்ந்து நலன்களை அனுபவித்துக் கொண்டு சாதாரண சிங்கள மக்களை நசுக்க முற்பட்டதன் உள்ளடக்கமே அது. கிராமத்துச் சிங்கள மக்கள் சமூக அந்தஸ்திலும், பொருளாதாரத்திலும், அரசியல் அரங்கிலும் ஓரம்கட்டப்பட்டு வாழுகின்றனர். இன்றைய நிலையிற்கூட ஆங்கிலம் கற்ற சிங்கள வரை கிராமத்தவர் 'கடுவ" (வாள்) என்றே குறிப்பிடுவதைக் காணலாம். பல்கலைக்கழகங்களிற்கூ…
-
- 1 reply
- 1.4k views
-
-
புலிகள் மீதான அணுகுமுறையை சர்வதேச சமூகம் தீவிரப்படுத்த வேண்டும் மட்டக்களப்புத் தாக்குதலைக் கண்டித்து ஈ.பி.டி.பி அறிக்கை. சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகள் மீதான அணுகுமுறையை தீவிரப்படுத்தும் அதேவேளை, தமிழ் மக்களின் அவலம் தீர்வதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவ்வாறு மட்டக்களப்பில் அமைச்சர் மற்றும் ராஜதந்திரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஈ.பி.டி.பி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அனர்த்த நிவாரண முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீது மட்டக்களப்பில் புலிகள் நடத்திய தாக்குதலை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிக்கிறது. …
-
- 5 replies
- 1.1k views
-
-
பாக்கு நீரிணையில் காத்திருக்கும் 15 கரும்புலி தாக்குதல் படகுகள். அண்மையில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் இந்திய தென்பிராந்திய பாதுகாப்புப் படைத் தலைவர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் நடத்திய மாநாடு ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கேற்ப புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகளின் முக்கிய நிலையமாக தமிழ்நாடு மாநிலமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் புலனாய்வுத்துறையினர் தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்களில் தென்னிந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடைப்பட்ட குறுகிய கடற்பரப்பில் பாக்கு நீரிணைப் பகுதியில் மட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தற்கொலைக் கடற்புலியி…
-
- 11 replies
- 2.9k views
-
-
கல்லடியில் சிறப்பு அதிரடிப்படையினரால் 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு கல்லடி முகாமுக்கு அண்மையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் 3 தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று புதன்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பிலான தகவலை காத்தான்குடி சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட சடலங்கள், மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கொல்லப்பட்ட 3 இளைஞர்களும் தமது முகாமை தாக்கும் நோக்கத்துடன் அண்மித்ததாகவும் முகாமிற்கு அண்மையில் பதுங்கியிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் அவர்களை சுட்டு…
-
- 1 reply
- 582 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் மகிந்தவிற்கும் தொடர்புள்ளது: ரணில். கடந்த அரச தலைவர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது தேர்தலின் இறுதி முடிவுகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறீகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கு மற்றும் கிழக்கில் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தது தான் மகிந்தவின் வெற்றிக்கு காரணம். கடந்த அரச தலைவர் தேர்தலின் போது மகிந்தவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக குற்றச்…
-
- 0 replies
- 570 views
-
-
'சிறிலங்காவிற்கு இந்தியா போர்க்கப்பலை வழங்கக்கூடாது': த.தே.கூ. "சிறிலங்காவிற்கு உயிராபத்துக்களை விளைவிக்கும் ஆயுதங்களை இந்திய அரசு வழங்கக்கூடாது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது. சிறிலங்காவின் கடற்படைக்கு இந்திய அரசு பாரிய போர்க்கப்பல் ஒன்றை வழங்கவோ அல்லது வாடகைக்கு வழங்கவோ முன்வந்துள்ளதாக வெளியாகிய செய்திகளைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அந்த அறிக்கையின் முழுமையான விவரம்: "சிறிலங்காவின் கடற்படைக்கு இந்திய அரசு பாரிய போர்க்கப்பல் ஒன்றை வழங்கவோ அல்லது வாடகைக்கு வழங்கவோ முன்வந்துள்ளதாக ஊடகங்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிந்தி…
-
- 0 replies
- 555 views
-
-
''வன்னி மீது ஆக்கிரமிப்புப்போரைத் தொடுக்க ஆயத்தமாகும் அரசபடைகள்'' -வி.வேனில்- வடக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னி நிலப்பரப்பின் சில பகுதிகளைக் கைப்பற்ற சிறிலங்கா அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் சிறிலங்காப்படையினர் மும்முரமாக ஈடபட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. கிழக்கில் தனது படைகளைக்கொண்டு சம்பூர், வாகரைப்பகுதிகளை கைப்பற்றிய சிறிலங்கா அரசு சமகாலத்திலேயே வன்னிப்பிரதேசங்கள் மீது வான்படைத்தாககுதல்களை மேற்கொண்டு வந்தது. தற்போது வன்னியின் பல முனைகளில் போரை ஆரம்பித்து சிலபகுதிகளையேனும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அது விரும்புவதாகவே தெரிகிறது. வவுனியா வடக்கில் ஓமந்தையை எல்லைப்பகுதியா…
-
- 66 replies
- 10.8k views
-
-
மிகுந்த மரியாதையுடன் அமெரிக்கத் தூதுவருக்கு...! கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் பிளேக் இலங்கை இனநெருக்கடி தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துகள் அரசியல் அரங்கில் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. குறிப்பாக இனநெருக்கடிக்கு இராணுவத்தீர்வு காண முடியாது என்ற கருத்தை அண்மைக்காலமாக அவர் மிகவும் அழுத்தம் திருத்தமாக வெளியிட்டுவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று சந்தர்ப்பங்களில் அமெரிக்கத் தூதுவர் இராணுத்தீர்வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு கடந்த மாத இறுதியில் காலியில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிளேக், இலங்கை நெருக்கடிக்கு இராணுவத்தீர்வு…
-
- 4 replies
- 2.3k views
-
-
உடுப்பிட்டியில் கடத்தப்பட்ட இரு மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ் உடுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட இரு பாடசாலை மாணவர்களும் நேற்று திங்கள் அதிகாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.வெள்
-
- 0 replies
- 730 views
-
-
புலிகள் யுத்த களத்தில் பின்னடைவை கண்டுள்ளார்கள்: கெஹலிய ரம்புக்வெல்ல. யுத்த களத்தில் பின்னடைவை கண்டுள்ள புலிகள் முட்டாள் தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் என தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். மடக்களப்புக்கு இராஜதந்திரிகள் வருவது குறித்து தமக்கு முன் கூட்டியே அறிவிக்கவில்லையென புலிகள் கூறுகின்றனர். இராஜதந்திரிகள் மட்டக்களப்பு செல்வது குறித்து புலிகளுக்கு தெரியாமல் இருக்க சந்தர்ப்பம் இல்லை. தமிழ் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக இராஜதந்திரிகள் மீது புலிகள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர் என்பது வெளிப்படையாக தெரியவந…
-
- 3 replies
- 1.5k views
-
-
அலரி மாளிகை அருகே கருணா குழுவின் புதிய மறைவிடம்? பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணை ஜ புதன்கிழமைஇ 28 பெப்ரவரி 2007 ஸ ஜ யோகராஜன் ஸ அதி உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் அமைந்திருப்பதும் ஜனாதிபதியின் வாசஸ்தலமாகப் பேணப்பட்டு வருவதுமான அலரி மாளிகைக்கு அண்மையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றைக் கடந்த வாரம் விலைக்கு வாங்கியுள்ளவர்கள் கருணா குழுவினர் எனவும் இவ்வாறான நிலைமை அலரி மாளிகையின் பாதுகாப்புக்குக் குந்தகமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களைத் தொடர்ந்து இது பற்றி சிங்கள பாதுகாப்புத் துறையினர் பரந்த அளவிலான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அலரி மாளிகைக்குச் சுமார் 500 மீற்றர் தூரத்தில் பாதுகாப்பு முக்கியத்துவமுள்ள பகுதிய…
-
- 11 replies
- 3.3k views
-
-
மாத்தறை கடற்பரப்பில் வெடி பொருட்களுடன் கப்பலொன்று கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்டது. மாத்தறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான கப்பல் ஒன்றை கடற்படையினர் இன்று புதன்கிழமை தாக்கியழித்துள்ளனர். இக்கப்பலினை இனங்கான்பதற்கான எதுவித சின்னங்களோ கொடிகளோ காணப்படவில்லை. கடற்படையினர் இக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து கப்பல் பலத்த சத்தத்துடன் தொடர்ந்து வெடித்தது. எனவே விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலாக இருக்கலாம் என கடற்படை பேச்சாளர் டி.கே.பி தஸ்நாயக்க தெரிவித்துள்ளார். -Virakesari-
-
- 20 replies
- 4.9k views
-
-
தமிழக அரசியலில் றோ! கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பார்வை தமிழீழ மக்களின் அவல வாழ்வு குறித்து திரும்பியுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியையும் ஒரு வித புத்துணர்ச்சியையும் ஈழத்தவருக்கு கொடுத்துள்ளது. அதேவேளை, தமிழக அரசியலின் தற்போதைய நிகழ்வுகள் தமிழீழத்தின் உருவாக்கத்தைச் சிதைப்பதற்கான முன்னெடுப்புக்களாகவே தமிழீழத்தவரர்களால் சோக்கப்படுகின்றது. ஆம், தழிழகத்தின் திராவிட அரசியல் கட்சிகளிடையே மிகவும் நுண்ணியமான முறையில் இந்திய மற்றும் வெளிநாட்டு; உளவு நிறுவனங்கள் இந்தக் கட்சிகளுக்குத் தெரியாமலேயே இவர்களுக்குள் வேரூன்றியிருக்கின்றனர். இந்த உளவு நிறுவனங்கள், தமிழகக் கட்சிகளுக்குள் சில உள் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளமை…
-
- 11 replies
- 3.4k views
-
-
இலங்கையின் சுற்றாடலையும் வரலாற்றையும் அடையாளப்படுத்தும் சின்னமாக எமது மக்கள் கருதும் யானையை இலங்கையர் சீனா மீதும் மக்கள் மீதும் கொண்டிருக்கும் கௌரவத்துக்கும் அன்புக்கும் உரிய பரிசாக வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சிசாலைக்கு பின்னவலை யானைகள் சரணாலயத்திலிருந்து யானைக் குட்டியொன்றை அன்பளிப்பாக வழங்கிய ஜனாதிபதி அந்த நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது; "சகல விலங்குகளுக்குமே பூமி சொந்தமானது என்று நாம் நம்புகிறோம். அதனால் எதிர்கால சந்ததிக்காக நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஆட்சியாளர் இந்த மரபுரிமைக்கு உரிமையாளன் அல்ல. ஆனால், அவற்றின் தற்காலிகமான பாதுகாவலனாக ஆட்சியா…
-
- 6 replies
- 1.7k views
-
-
கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்ட புலிவீரரை காட்டி கொடுத்த நித்தியானந்தன் பாபு இராணுவ பாதுகாப்புடன் நேற்று கொழும்புக்கு கூட்டி வரப்பட்டுள்ளான். கரவெட்டி மத்தி தச்சந்தோப்பு பிள்ளையார் கோவிலடியில் சிங்கள இரானுவத்தால் பதுங்கி இருந்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட போராளியை கரவெட்டியை சேர்ந்த நித்தியானந்தன்( நித்தி)னின் மகன் பாபு( வயது 32 திருமனம் ஆகி 3 பிள்ளைகள்மனைவிபெயர் கிளி வயது 29) காட்டி கொடுத்த பின் இரானுவத்தின் பாதுகாப்புடன் கொழும்பு கூட்டி வரப்பட்டுள்ளான். பாபுவின் இரண்டாவது அக்கா கவிதா திருமனம் முடித்தது விக்கி என்ற முன்னால் போராளி முன்னர் நடந்த சண்டை ஒன்றில் கால் ஒன்றை இழந்த பின் இயக்கததை விட்டு விலகிவிட்டார் இவர் விலகும் போது கால் இழந்ததுக்காக புலிகளி…
-
- 27 replies
- 8.5k views
-
-
அனைத்துலக அமைப்புக்கள் இன்னும் 'கும்பகர்ணன் படலத்திலேயே' உள்ளன: ச.வி.கிருபாகரன் "அனைத்துலக அமைப்புக்கள் தமக்கு நிதி வழங்குவோரின் கொள்கைகள், வேண்டுகோள்களை பிரதிபலிப்பவையாகவே என்றும் உள்ளன. ஆகையால் அவர்கள் ஒன்றையும் உருப்படியாக செய்பவர்கள் அல்லர்" என்று தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். சுவிசிலிருந்து வெளிவரும் 'நிலவரம்' வார எட்டுக்கு பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் செவ்வி வழங்கியுள்ளார். அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழு விவரம்: கேள்வி: தமிழர் மனித உரிமைகள் மையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? பதில்:…
-
- 1 reply
- 889 views
-
-
இந்த இணையத்தில் போட்டிருக்கிறார்கள். விபரமாக இல்லை. http://www.theacademic.org/ 15 LTTE men killed in clash with Sri Lankan navy Colombo, Feb. 28 (AP): The Sri Lankan navy battled a flotilla of Tamil Tiger boats and at least 15 rebels were believed killed as they attempted to infiltrate a strategic port in the northeast, the Defence Ministry said Wednesday. About 14 vessels carrying fighters from the Liberation Tigers of Tamil Eelam were attempting to enter the Trincomalee port - home to a major military base - when the navy intercepted and engaged them late Tuesday, said military spokesman Brig. Prasad Samarasinghe. ``Our naval troops confront…
-
- 1 reply
- 2.3k views
-
-
'வெடிபொருட்களுக்கோ ஆயுதங்களுக்கோ எமக்கு பெரியளவு தட்டுப்பாடுகள் ஏற்படுவதில்லை': சு.ப.தமிழ்ச்செல்வன் "நாம், எமது மண்ணில் ஆக்கிரமித்திருக்கின்ற இராணுவத்தினருடன் போரிட்டு அவர்களிடமிருந்தே பெருமளவு இராணுவத் தளபாடங்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றுகின்ற வழமையைப் பேணி வருகின்றோம்" சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் 'தமிழ்முரசு' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முழுமையான பேட்டியின் விவரம்: கேள்வி: அமைதி உடன்பாடு ஏற்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அமைதி உடன்பாட்டை நீங்கள் தொடர்ந்து மதிக்கப்போகின்றீர்களா அல்லது மீறப் போகின்றீர்களா? பதில்: இந்த யுத…
-
- 2 replies
- 1.3k views
-
-
காவல்துறையினரின் தடுப்புக்காவலில் இருந்த சிங்கள இளைஞர் மரணம் சிறிலங்கா குற்றத் தடுப்புப் பிரிவினரால் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சிங்களவர் ஒருவர் கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் கழிவறையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஓ.ஜி.சந்திரசேகர என்பவரே தமது போர்வைத்துணியை பயன்படுத்தி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் பிரேத பரிசோதைனையின் பின்னரே அது தற்கொலையா அல்லது கொலையா என கூறமுடியும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு நவம்ப…
-
- 2 replies
- 1.1k views
-