ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
முற்றும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் மஹிந்தர் ` மன்னாரில் அப்பாவித் தமிழ் மக்களை உடல் சின்னா பின்னமாக்கிக் கொன்றொழிக்கும் வகையில் இலுப்பைக்கடவை படகுத்துறை குடியிருப்பு மீது இலங்கை விமானப்படை கண் மூடித்தனமான குண்டு வீச்சை நடத்தியதும், அதில் கொல் லப்பட்ட அப்பாவித் தமிழ் சிவிலியன்களைப் புலிகளாகச் சித் திரிக்கத் தென்னிலங்கைத் தலைமை முயன்றதும், அதைத் தொடர்ந்து தென்னிலங்கையில் வெடித்த இரு மோசமான பஸ் குண்டு வெடிப்புகளில் தெற்கின் அப்பாவி மக்கள் படுகொலை யுற, மேலும் பல டசின் கணக்கானோர் மோசமாகப் படுகாய மடைந்தமையும் கடந்த வாரத்தின் துன்பியல் நிகழ்வுகள். மர ணங்கள் மலிந்த சாவுப் பூமியான இலங்கைத் தீவின் கறை படிந்த வரலாற்றின் மோசமான பக்கங்களில் பதிவு செய்யப்படும் பலநூறு க…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களில், தமிழ் மக்கள், சிறிலங்கா இனவெறி இராணுவத்தினரால் கொன்று குவிக்கப்படும் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிறிலங்கா விமானப்படையினரின் கண்மூடித்தனமான அப்பாவித் தமிழர் குடியிருப்புக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், இன்று தொடக்கம் எதிர்வரும் புதன்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் தொடர்பான பல அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஹர்தால் தொடர்பாக தெரிவிக்கையில், இன்று தொடக்கம் புதன்கிழமை வரை சகல வர்த்தக நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களையும் மூடி இந்தக் ஹர்த்தாலை முழுமையாக அனுஷ்டிக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்…
-
- 0 replies
- 767 views
-
-
திருமலை தமிழர்புனர்வாழ்வுக்கழக காரியாலயம் நேற்றிரவு 10.30 மணியளவில் சிறிலங்காப் படையினரின் துணைஆயுத கூலிக் கும்பலினால் சூறையாடப்பட்டுள்ளது. அங்கிருந்த கணணிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் பக்ஸ் மெசின், போட்டோக் கொப்பி மெசின் மற்றும் ஒரு தொகைப் பணம் அத்துடன் தளபாடங்கள், காரியாலய ஆவணங்கள் என அத்தனையும் ஆயுதக் கும்பலால் களவாடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வார காலத்துக்குள் வவுனியா, மற்றும் கொழும்பு அலுவலகமும் காவற்துறையினரால் சோதனையிடப்பட்டு ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. ஏற்கனவே கடந்த வருடம் யாழ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பல முறை குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி ஊழியர் பலர் காயமடைந்தமைகுறிப்பிடத்தக்க
-
- 0 replies
- 817 views
-
-
அம்பாறை சென்றல்காம்ப் பகுதியில் நேரக்கணியக் குண்டு வெடித்தில் பொதுமக்கள் ஆறுபேர் படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விவசாய இரசாயன விற்பனைநிலையமொன்றிற்கு அருகில் இன்று காலை 10.30மணிக்கு இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ.எம்.எம்.கருண், ஆதம் லெப்பை நபீர், ஆதம் லெப்பை நௌசாத், எஸ்.தர்மலிங்கம், டபிள்யூ.குலதுங்க, ஐ.எம்.அபேரத்ன ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். சென்றல் காம்ப் பகுதி அம்பாறை கல்முனையிலிருந்து 20கீலோமீற்றர் மேற்காக அமைந்துள்ளது http://www.sankathi.org/news/index.php?opt...58&Itemid=1
-
- 0 replies
- 728 views
-
-
கட்டில்கள் நிறைந்த வாட்டின் ஓரமாக விளையாடிக்கொண்டிருந்;தான் ஆறு வயது நிரம்பிய விதுரன் அவனைச்சுற்றிலும் ஓரிரு விளையாட்டுப்பொருட்கள் சிதறிக்கிடந்தன ஆனாலும் அவனது புலன்கள் அந்தமையத்தில் குவியப்படவில்லையென்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது தான் விளையாடிய மணல்மேடுகளிலும் அலைகளுக்கு ஓட்டம் காட்டிய கடற்கரையிலும் தடம்பதித்த அந்த பிஞ்சுக்கால்கள் ஆஸ்பத்திரி தரையில் சோர்வோடு பதிந்திருந்தன. உதயகுமார் விதுரன் (06) காயமடைந்தவர்களை சுமந்திருந்த கட்டில்கள் நிறைந்த ஆஸ்பத்திரி வாட்டிற்குள் தான் இருப்பதை சிந்திக்க திராணியற்று விளையாடிக்கொண்டிருந்தவனிடம
-
- 0 replies
- 866 views
-
-
எதனையும் சந்திக்க நாங்கள் தயார்: விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன். எதனையும் சந்திக்க நாங்கள் தயார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள வேளையில், எந்தச் சவாலையும் எவ்வளவு காலத்துக்குள்ளும் நாங்கள் எதிர்கொள்ளத் தயார் என்று விடுதலைப் புலிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். வடக்கு - கிழக்குப் பகுதிகளில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வன்முறைகளில் புத்தாண்டின் முதல் இரண்டு நாட்களில் மட்டும் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜனவரி முதலாம் நாள் 10 கொலைகள் பதிவாகின. நேற்று 15-க்கும் அதிகமானோர் மன்னா…
-
- 98 replies
- 15.4k views
-
-
வாகரை களமுனையில் நிற்கும் வரிப்புலி வீரனின் குரல் "புலி பசித்தாலும் புல்லுண்ணாது" இது வெறும் மொழியல்ல. மூதாதயர் அனுபவத்தில் உரைத்த முதுமொழி, சாவைக்கூட சந்திப்போம், சரணடைய மாட்டோம். இது வேங்கை மொழி. வரலாற்றில் நடந்த மொழி. வாகரையிலும் அது தான் நடக்கிறது. நிகழ்காலத்தில் நிலவுகின்ற நிகழ்ச்சி நிரல் என்ன? ஊடகங்களில் உலா வரும் செய்திகள் பதில் சொல்லும். இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உரைக்கின்றார் 'இன்னும் இரண்டு மாதங்களில் கிழக்கில் புலிகளை முடக்கி விடுவோம்" என்று. இந்த வசனங்கள் களத்தில் நிற்கும் நாங்கள் அடிக்கடி அறிபவை தான். சரத்போன்சேகா சொல்வதை படை சாதித்து காட்ட தயாரா அன்பது தான் கேள்வி? இல்லை என்பதே பதில். ஏன் தெரியுமா? சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடுமா? நிச்ச…
-
- 2 replies
- 2k views
-
-
இன்று முதல் சிறிலங்காவில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுலாக்கப்படுகிறது. சிறிலங்காவின் தென்பகுதியில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதையடுத்து, நாடு முழுவதிலும் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பேரூந்து மற்றும் தொடரூந்துகளில் பயணம் செய்பவர்களின் நலனைக்கருத்திற்கொண்டே இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்றுத் தெரிவித்திருக்கின்றார். கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நித்தம்புவ மற்றும் ஹிக்கடுவ பிரதேசங்களில் தனியார் பயணிகள் பேரூந்து வாகனங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்தே புதிய பாதுகாப்பு ஏற்பா…
-
- 0 replies
- 790 views
-
-
சிங்கள மயமாகும் தமிழ்க் கிராமங்கள் -கே.சௌந்தரம்- வவுனியா பறையனாலங்குளம் வீதியில் பூவரசன்குளத்திற்கு மேற்காக பொலிஸாரின் திட்டமிட்ட நடவடிக்கையினால் தமிழ் கிராமமொன்றிற்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் இதேபோன்று ஏற்கனவேயும் பல செயற்பாடுகள் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன. ஒன்று ஏடிபல படை நடவடிக்கை மூலம் வவுனியா - பறையனாலங்குளம், மதவாச்சி - மன்னார் ஆகிய இரு வீதிகளையும் கைப்பற்றிய படையினர் பறையனாலங்குளத்தை சப்புமல்புர என பெயர்மாற்றம் செய்து பறையனாலங்குளம் சந்தியில் உள்ள படைமுகாமில் பெயர்ப்பலகை ஒன்றை நட்டு அதனை அப்போதைய பாதுகாப்பு துணை அமைச்சர் அனுருத்த ரத்வத்தையினால் திரைநீக்கம் செய்து விழா கொண்டாடினர். இதனை பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்தி…
-
- 0 replies
- 972 views
-
-
இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை சம்பூரில் அனல்மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கத்தை இந்தியா முற்றாக நிராகரித்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது. திருகோணமலை சீனன்குடாவில் தெரிவு செய்யப்பட்ட மூன்று இடங்களைத் தவிர்த்து வேறு இடமொன்றில் அனல்மின் நிலையத்தை அமைக்கும் யோசனைக்கு இந்தியா உடன்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய அரசின் தேசிய அனல் சக்திக் கூட்டுத்தாபனமும், சிறிலங்கா மின்சார சபையும் இணைந்து திருகோணமலையில் 500 மெகா வார்ட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. இத்திட்டம் தொடர்பான யோசனை, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. இத…
-
- 1 reply
- 824 views
-
-
நாளை செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை செல்லவுள்ளார். இலங்கை செல்லும் இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைசந்தித்து பேசவுள்ளார். இலங்கையின் தற்போதைய நிலை சமாதான முயற்சி குறித்து இலங்கை தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&
-
- 0 replies
- 835 views
-
-
2 ஆம் லெப். ஜீவன் பயிற்சிப் பாசறையின் 23 ஆம் அணியின் பயிற்சி நிறைவும் பெற்றோர் சந்திப்பும் நேற்று எழுச்சியுடன் நடைபெற்றது. நேற்று சனிக்கிழமை முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரை கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் இளங்கோவும் தமிழீழ தேசியக்கொடியினை மணலாறுப் பகுதி தளபதி குமரன் ஏற்றிவைத்தனர். 2 ஆம் லெப். ஜீவனின் திருவுருவப்படத்துக்கான ஈகச்சுடரை தேசிய எழுச்சிப் பேரவைப்பொறுப்பாளர் சஞ்சை ஏற்றிவைத்தார். திருவுருவப்படத்துக்கான மலர்மாலைகளை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஆகியோர் அணிவித்தனர். தொடர்ந்து பெற்றோர் தமது பிள்ளைகளை சந்தித்து அளவளாவியுள்ளதுடன்…
-
- 1 reply
- 1.8k views
-
-
காலிப் பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் பேருந்தில் பொருத்தப்பட்ட குண்டு ஒன்று வெடித்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர். 15க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இனியும் தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டால் சிங்களவர்களின் உயிரும் பறிக்கப்படவேண்டும். இனியாவது சிங்கள அரசு தமிழ்ப்பகுதிகள்மீது குண்டுவீசுவதை நிறுத்துமா?
-
- 26 replies
- 5.9k views
-
-
சிறீலங்கா அரசுக்கு எதிராக ஐ-நா பேரவையில் தீர்மானம்? சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பபு பேரவையால் இம்மாதம் 15ம் திகதி நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்த ஐ-நா சிறப்புத் தூதுவர் அலன் றொக் முன்வைத்த கருத்துக்கள் அடிப்படையில் இத் தீர்மானம் நிறைவேற்ற தயாராகி வருவதாக அறியமுடிகிறது. சிறீலங்கா துணைப்படை கருணா குழுவால் மேற்கொள்ளப்பட்டு வரும் பலவந்த சிறுவர் ஆட்சேர்ப்புக்கு சிறிலங்கா படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அலன் றொக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிறீலங்கா அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதனை ஆராய அதிபர் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சென்னையிலும் டில்லியிலும் நடந்ததென்ன?:சு-ப-வீ வழங்கிய பிரத்தியேகப் பேட்டி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் ஆகிய ஐவரும் அண்மையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களையும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும் சந்தித்து ஈழத்தமிழர்கள் மீது ஷ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள 'அரச பயங்கரவாதம்' குறித்து மனம் விட்டுப் பேசியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வரையும் பிரதமரையும் சந்திப்பதற்குப் பகீரத முயற்சிகளை மேற்கொண்டும் கைகூடாமல் போனது. இது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 1 reply
- 1.4k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கை காலத்தில் 1475 பொதுமக்கள் பலி, 545 பேர் காணாமல் போயுள்ளார்கள். கடந்த 5 வருட போர்நிறுத்த காலப்பகுதியில் மிகமோசமான மனிதஉரிமை மீறல்களை சிறீலங்கா படைகள் மேற்கொண்டுள்ளதாக விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளார்கள் தமிழீழ செயலகத்தால் விடப்பட்டிருக்கும் அவ் அறிக்கையில் கடந்த 5 வருடத்தில் 1475 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 545 பொதுமக்கள் காணாமல் போயுள்ளதாகவும் சிறீலங்கா படை நடவடிக்கைகளால் 2 10,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 300 000 பேர் பலவந்தமாக குடிபெயர்க்கப் பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது. -Pathivu-
-
- 1 reply
- 794 views
-
-
யாழ்குடாவில் உணவு நிலை சீரடையும் வரையில் இந்தியாவில் இருந்து உணவு இறக்குமதி செய்யப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கையின் வடக்கில் யாழ்குடா நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையை அடுத்து, தமிழகத் தலைநகர் சென்னையில் இருந்து உணவுப் பொருட்களை கப்பல் மூலமாக இலங்கை அரசு இறக்குமதி செய்து யாழ் குடாநாட்டில் விநியோகிக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இது தொடர்பாக தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்குடா நாட்டில் உள்ள உணவு பற்றாக்குறை நிலை சீரடையும் வரை இலங்கை அரசு தமிழ்நாட்டில் உள்ள தனியார் வியாபாரிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்யும் என்றார். இது குறித்து செவ்வாய்கிழமையன்று கொழும…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஐந்து பேர் கொண்ட ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் குழு இன்று இலங்கை வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் அடங்கிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் குழு இன்று இலங்கை வரவுள்ளது. கொழும்பில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட ரவிராஜ் தொடர்பான விசாரணைகளுக்காக ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரின் ஒத்துழைப்பு பெறுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய வெளிநாட்டு அமைச்சு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை அடுத்தே ஐந்து பேர் அடங்கிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் இன்று இலங்கை வரவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது த…
-
- 5 replies
- 1.4k views
-
-
மணிசங்கர ஐயரின் மகளின் திருமணத்தில் ராஜபக்ஸ. கிழே உள்ள சண்டே டைம்ஸின் கட்டுரையில் மணிசங்கர் ஐயரின் மகளின் திருமணத்தில் ராஜபக்ஸ் கலந்து கொண்டுள்ளது பற்றி வந்துள்ளது.அத்தோடு சர்வதேச ரீதியாக,பிராந்திய ரீதியாக சிறிலங்கா அரசுக்கு எழப்போகும் நெருக்கடிகள் பற்றிக் கூறப்படுள்ளது. சிறிலங்கா இராணுவம் ஏன் தமிழ்மக்களைத் தாக்கி விடுதலைப் புலிகளைச் சீண்டி அவர்களை பாரிய யுத்ததை ஆரம்பிக்க வைக்க எத்தனிக்கிறது என்பதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரை காவி வந்துள்ளது. விடுதலைப் புலிகள் ஏன் மவுனம் காக்கிறார்கள் என்பதற்கான பதிலும் இதில் பொதிந்து இருக்கிறது. பொறுத்திருப்போம் , தலமையின் முடிவுகளில் நம்பிக்கை வைப் போம்.காலம் கனியும். Year of crisis for Rajapaksa I…
-
- 3 replies
- 2.1k views
-
-
வன்முறையைப் புலிகள் தேர்ந்தெடுத்தால் அதற்குப் பதிலடி கொடுக்க அரசு தயார் அமைச்சர் ரம்புக்வெல கூறுகின்றார். பேச்சு மூலம் தீர்வு காண அரசு திறந்த மனத்துடன் செயற்படுகின்றது. ஆனால் வன்முறைகளை விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று தெரிகின்றது. அதனைத் தக்க முறையில் எதிர்கொள்ள பதிலடி கொடுக்க அரசு தயாராகவுள்ளது அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார். பி.பி.ஸிக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கூறியதாவது: கடந்த 25 ஆண்டு காலமாகப் புரையோடிப் போயுள்ள தீவிரவாதத்தை இந்த நாடு சந்தித்து வருகின்றது. ஒரு தீர்வினைக் கொண்டுவர பேச்சு நடத்தி வருகின்றோம். ஆனால் விடுதலைப் புலிகள் குறிப்பாக வன்முறைப் பாதையில் செல…
-
- 2 replies
- 1.5k views
-
-
அரசும் விடுதலைப் புலிகளும் போரையே எதிர்பார்க்கின்றன [ஞாயிற்றுக்கிழமை, 7 சனவரி 2007, 20:26 ஈழம்] [பூ.சிவமலர்] புத்தாண்டில் முழுப்போர் வெடிக்கக்கூடும் என்று சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தன. அந்த எச்சரிக்கை கடந்த ஒரு வார காலமாக வன்முறைச் சம்பவங்களாக வெடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கம் போர் முரசம் கொட்டுகிறது. கேகலிய ரம்புக்கவெல, சரத் பொன்சேகா போன்ற உயர் அரச அதிகாரிகள் பேச்சில் முழுமையான போர் குறித்த அறிகுறிகள் வெளிப்படுத்திக்கொண்டிருப்
-
- 0 replies
- 885 views
-
-
வாகரைப் பகுதியில் இன்னும் 1..2 நாட்களில் உணவுகள் முற்றாக தீர்ந்துவிடும் அபாயநிலைக்கு வந்திருப்பதாக அவசர வேண்டுகோளை விடுத்திருக்கிறது சர்வதேசம் நோக்கி. SOS from Vaharai [TamilNet, Sunday, 07 January 2007, 13:49 GMT] Tamils Rehabilitation Organization (TRO) its press release on Thursday said that the 15,000 Internally Displaced Persons (IDPs), denied food by the Sri Lanka Army (SLA) obstruction of the transport of food to Vaharai, are on the verge of death due to starvation. The TRO besides sending an urgent request to the to the Government of Sri Lanka (GoSL) and the International Committee of Red Cross (ICRC) to send food, medicine and and other essentials …
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசாங்கம் போர் முரசம் கொட்டுகிறது: சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன். புத்தாண்டில் முழுப்போர் வெடிக்கக்கூடும் என்று சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தன. அந்த எச்சரிக்கை கடந்த ஒரு வார காலமாக வன்முறைச் சம்பவங்களாக வெடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கம் போர் முரசம் கொட்டுகிறது. கேகலிய ரம்புக்கவெல, சரத் பொன்சேகா போன்ற உயர் அரச அதிகாரிகள் பேச்சில் முழுமையான போர் குறித்த அறிகுறிகள் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதால் இலங்கையின் எதிர்காலம் மிகவும் இருண்டிருக்கிறது என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் கூ…
-
- 0 replies
- 807 views
-
-
1987 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஒன்றாகும். சுதந்திரம் அடைந்த பின்னர் எமது நாடு வேறு எந்த ஒரு ஆண்டிலும் அவ்வாறு கீழான சிறுமைப்படுத்தலுக்கு உள்ளாகாத அளவுக்கு அந்த ஆண்டில் நாட்டின் மதிப்பு கீழ்த்தள்ளப்பட்டது. அந்த துரதிர்ஷ்டமான நிகழ்வு ஏற்படுவதற்குப் பெருமளவில் காரணமாக நமது தவறான செயற்பாடுகளே இருந்தன. அன்று ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய தென்பகுதிக் கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை மிகுந்த தொலை நோக்குடனும் ஒற்றுமையுடனும் நடுநிலையுடனும் மேற்கொண்டிருந்தால் 1987 ஆம் ஆண்டில் நாம் அந்த அளவுக்கு ஆபத்தான அபத்தமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம். புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அந்த …
-
- 1 reply
- 2.2k views
-
-
2007 –மகிந்தவிற்கு பிரச்சனைகள் நிறைந்த ஆண்டு. எழுதியவர் சாத்வீகன் Sunday, 07 January 2007 2007ம் வருடம், ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வைப் பொறுத்த வரையில் நிறைய சவால்களை எதிர்கொண்டாக வேண்டிய பிரச்சனைகள் நிறைந்த ஒரு ஆண்டாக அமைய இருக்கின்றது என்று தென்பகுதி ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அவர் ஆரம்பித்துள்ள யுத்தத்தின் சுமைகளையும், வெளிநாட்டு அழுத்தங்களையும், பொருளாதார நெருக்கடிகளையும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்கொள்ளவேண்டிய ஒரு ஆண்டாக இருக்கும் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஐ.நா. சபை, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா என்ற புதிய சர்வதேச அழுத்தங்களையும் இவ் ஆண்டில் மகிந்த எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம் என்றும் சுட்டிக்காண்பிக்கப்பட்ட…
-
- 0 replies
- 1.1k views
-