ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
கொழும்பு (A.F.P) - "அமெரிக்காவின் சமாதானத் தூதுவர் உருவாக்கம் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை!" சிறீ லங்கா ஊடக அமைச்சர் அறிவிப்பு! அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஜ் இடம் 38 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறீ லங்காவின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அமெரிக்கா உதவ வேண்டுமெனக் கூறிச் சமர்ப்பித்த அமெரிக்க சமாதானத் தூதுவர் பற்றிய அறிக்கை சம்மந்தமாக தாம் கவலைப்படவில்லை என சிறீ லங்காவின் ஊடக அமைச்சர் அனுரா யாப்பா தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற முயற்சிகள் அமெரிக்காவில் முன்பும் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அமெரிக்கா தமது அரசாங்கம் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு அமைய விடுதலைப் புலிகளுடன் போர்புரிந்து அவர்களை பலவீனப்படுத்துவதற்கு தொடர்ந்தும் உதவி செய்யும் என எதிர்பார்ப்பதா…
-
- 4 replies
- 1.5k views
-
-
சுதந்திர தினக் கொண்டாட்டம் யுத்தத்திற்கான புதிய அத்தியாயம் -ஜெயராஜ்- 'விடுதலைப் புலிகளுடனான 20 வருடகாலப் போரில் தாம் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாகக் காட்டும் செயல்" எனச் சிறிலங்காவின் 59 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் போது மகிந்த அரசாங்கம் மேற்கொண்ட 'தீவிரமான இராணுவ விளம்பரங்கள்" இருந்தன சிறிலங்கா கடற்படையின் போர்க் கப்பல்கள், அதிவேக டோறாப் பீரங்கிப்படகுகள் அணி வகுத்துச் செல்ல, கிபிர் மற்றும் மிக்-27 ரகப் போர் விமானங்கள், எம்.ஜ - 24 வகைத் தாக்குதல் வானூர்திகள் வானில் பறந்து சாகசம் செய்ய, பல்குழல் எறிகணைச் செலுத்திகள், டாங்கிகள், கவச வாகனங்கள், ஆட்லறிப்பீரங்கிகள் என்பன அணிவகுப்பில் வர 3,500 சிறிலங்கா இராணுவத்தினரின் அணிவகுப்பும…
-
- 0 replies
- 776 views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்யக்கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ரத்துச் செய்து, நோர்வேயை உடனடியாக வெளியேற்ற கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது . அகில இலங்கை வர்த்தக ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.. சுமார் ஒருமணித்தியாலம் நடத்தப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து க…
-
- 0 replies
- 834 views
-
-
Heavy SLA casualties feared in Jaffna claymore attack [TamilNet, Friday, 09 February 2007, 04:10 GMT] Several Sri Lanka Army (SLA) troopers have been feared killed in a claymore attack on a bus carrying SLA soldiers along Palaly Road, less than 50 meters from Urelu SLA camp at 10:30 p.m. during curfew hours Thursday night, sources in Jaffna said. The Palaly military command has not released official details on the attack. The damaged bus, belonging to the Ceylon Transport Board (CTB), has been taken inside the Urelu camp, local residents said. However, large areas of blood stains and broken glasses are still visible near the scene of the attack, according to res…
-
- 1 reply
- 2.4k views
-
-
[09 - February - 2007] [Font Size - A - A - A] இலங்கையில் அரசாங்க சார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் அண்மைக் காலமாக எதிர் நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் காரணமாக சர்வதேச சமூகம் அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது போலத் தெரிகிறது. இலங்கைக்கு உதவி வழங்கும் பிரதான நாடுகளின் தூதுவர்கள் சகிதம் கொழும்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூட்டிய செய்தியாளர்கள் மகாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான அணுகுமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதியளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையொன்று உருவாகியிருப்பதை வெளிக்காட்டுகி…
-
- 0 replies
- 832 views
-
-
கொழும்புத் துறைமுகத்தில் புலிகளின் படகுகள் அழிக்கப்பட்டதா? [09 - February - 2007] [Font Size - A - A - A] புலிகள் இயக்க கெரில்லாக்கள் கடந்த வாரம் கொழும்புத் துறைமுகம் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றியும் அது சம்பந்தப்பட்ட தகவல்கள் பற்றியும் பல சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேற்படி தாக்குதல் முயற்சிக்காக புலிகளால் ஓட்டிவரப்பட்ட இரண்டு டிங்கிப் படகுகள் மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட்டதாக கடற்படையினர் கூறியிருந்தனர். மேலும், புலிகள் செலுத்தி வந்த மூன்றாவது டிங்கிப்படகே "செலொன்பொனேசியா பிரைட்" எனப்படும் தாய்வான் கொள்கலன் கப்பல் மீது மோதியதாகவும் கடற்படையினர் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்காக புலிகள் ஓட்டிவந்த முதலாவது டிங்கிப் படகை துறைமுகத்த…
-
- 6 replies
- 2.2k views
-
-
[Wednesday February 07 2007 01:13:56 PM GMT] [pathma] அமெரிக்காவில் பணியாற்றும் தமிழ் கற்றோர் சமூகம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பன் கி-மூன் அவர்களுக்கு, நாட்டுநிலைமை தொடர்பான விளக்கக் கடிதமொன்றை இவ்வார இறுதியில் அனுப்புகிறது. அதில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் கையொப்பம் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இருப்பினும் தமிழ் மக்கள் பாராமுகமாய் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் கையொப்பமிட விரும்பும் அனைவரும் இவ்வாரம் வியாழக்கிழமை முடிவதற்குள், கீழுள்ள இணைப்பில் அழுத்தி, உள்ளே செல்லவும். http://www.ipetitions.com/petition/srilankaunappeal/ நன்றி : தமிழ்வின்
-
- 28 replies
- 5.3k views
-
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு இனியும் சாட்டுக்கூற முடியாது: இந்தியா கடும் தொனியில் இடித்துரைப்பு. இனப்பிரச்சினைக்குரிய தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு இந்த அரசாங்கம் இனியும் சாட்டுச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அதனைச் செய்வதற்குக் காலம் தாழ்த்தவும் கூடாது. இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா கடுந்தொனியில் இடித்துரைத்திருப்பதாக நேற்று ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் புதுடில்லி சென்றிருந்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்கவிடம் மேற்படி விடயத்தை இந்திய அரசாங்கம் மிகத் தெளிவாகச் சொல்லி அனுப்பி இருப்பதாக ஐ.தே. கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் கூறினார். அவர் தமது நேற்றைய உரையில் மேலும் கூறிய தாவது: ஜே.வி.பி. ஒத்துழ…
-
- 1 reply
- 1.5k views
-
-
அமைச்சர் அனுராவுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தலாம்! ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டால் தன்னை கடத்திச் சென்று மின்கம்பத்தில் தொங்கவிடப்போவதாக அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரே ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். தமது தொலைபேசிக்கு மூன்று தடவைகள் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் கொலை மிரட்டல் பாணியில் கதைத்தார் எனவும் மூன்றாவது தடவை குறித்த நபர் தன்னைத் திட்டித் தீர்த்தார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோன்று அமைச்சர் மங்கள சமரவீரவையும் மாத்தறைப் பகுதியில் மின்கம்பத்தில் தொங்கவிடப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அனுரா கூறினார். இதனை ஒரு விளையாட்டாகக் கருதமுடியாது எனத் தெரிவித்த …
-
- 7 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் மூன்று பொதுமக்கள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை வடமராட்சி வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் அங்கிருந்த முப்பத்து நான்கு அகவையுடைய கிட்டினன் கிறிஸ்துராஜா என்ற இளைஞரை கடத்திச் சென்றுள்ளனர். இதேபோன்று வலிகாமம் மல்லாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இருபத்து மூன்று அகவையுடைய சின்னத்துரை விஜயரூபன் என்ற இளைஞரும், கடந்த திங்கட்கிழமை இரவு தென்மராட்சி சாவகச்சேரி மட்டுவில் கிழக்குப் பகுதியில் இருபத்தைந்து அகவையுடைய செல்லையா சிவேந்திரன் என்ற இளைஞரும் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர். -Pathivu-
-
- 0 replies
- 726 views
-
-
சு.க. உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்துகொண்டு சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கட்சி உறுப்பினர்களுக்கு கடுமையாக எச்சரித்திருக்கிறார். அலரி மாளிகையில் நேற்று முற்பகல் கட்சி அமைப்பாளர்கள் 27 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நான் பண்டாரநாயக்காவோ, ஸ்ரீமா அம்மாவோ அல்லது சந்திரிகா அம்மையாரோ கிடையாது. நான் மஹிந்த ராஜபக்ஷ. கட்சிக்குள் இருந்து கட்சியை நிர்மூலமாக்கும் நோக்கில் சதி செய்தவர்கள் இறுதியில் என்ன முடிவை எதிர்நோக்கினார்கள் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். …
-
- 0 replies
- 956 views
-
-
வேலை தேடிச்சென்று ஈராக் நாட்டில் அந்தரித்த 17 இலங்கைத் தமிழர்கள் ஐ.நா. உதவியுடன் திங்களன்று நாடு திரும்பினர் வளைகுடாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக்கூறி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 17 பேர் ஈராக்கிலுள்ள வீடொன்றில் ஒருமாதகாலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அவர்கள் பின்னர் கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு அனுப்பப்பட்டனர் என்று சர்வதேச குடியகல்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த இந்த 17 தமிழர்களும் வளைகுடா நாடொன்றிக்கு வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றுக்குத் தலா இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களைக் கட்டணமாகச் செலுத்திய பின்னர், அவர்கள் இந்த முகவர் நிலையத்தால் ஈராக்கிற்கு …
-
- 0 replies
- 705 views
-
-
-சபேசன் (அவுஸ்திரேலியா)- புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, ஐந்து ஆண்டுகள் முழுமையடையப் போகின்ற இக்காலகட்டத்தில் சிறிலங்கா அரசு வெளிப்படையான, வலிந்த போர் ஒன்றை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வருகின்றது. சிறிலங்காவின் தற்போதைய அரச அதிபர் மகிந்த ராஜபக்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விடயங்களை முறையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கு எதிரான செயற்பாடுகளைத்தான் முடுக்கி விட்டு வருகிறார். மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் அரச அதிபராகப் பதவியேற்ற பின்பு நடைபெற்ற ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் ஏற்;றுக் கொள்ளப்பட்ட விடயங்களை கூட அவர் நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. சிறிலங்கா அரசின் அராஜக போக்குகள் மேலும் தொடர்ந்தும் பெருகி …
-
- 3 replies
- 1.6k views
-
-
கரை திரும்பாத குற்றச்சாட்டின் கீழ் 15 கடற்தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். யாழ் குருநகர் கடற்பரப்பில், மீன்பிடிக்கச் சென்று விட்டு உரிய நேரத்திற்கு கரை திரும்பாத குற்றச்சாட்டின் கீழ், சிறீலங்கா கடற்படையினரால் பதினைந்து கடற்தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இன்று காலை கரை திரும்பிய பதினைந்து கடற்தொழிலாளர்களை வழிமறித்து, விசாரணை என்ற போர்வையில் கண்மூடித்தனமாக தாக்கிய சிறீலங்கா கடற்படையினர், இவர்களின் வசமிருந்த மீன்பிடி அனுமதிப் பத்திரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். உரிய நேரத்திற்கு கரை திரும்பத் தவறியமைக்கான தண்டனையாக, எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இவர்கள் அனைவரும் கடலுக்கு செல்லக் கூடாது என்றும், சிறீலங்கா கடற்படையினர் உத்தரவிட்டுள்ளனர்.
-
- 0 replies
- 777 views
-
-
ஏ 9 பாதை மூடியது சம்பந்தமான மனுவுக்கு பிரித்தானியப் பிரதமரின் அலுவலகம் பதில். பிரித்தானிய பிரதமரின் இணயத் தளத்தினூடாக அனுப்பப்பட்ட ஒன்லையின் மனுவுக்கு இப்படி பதிலை அனுப்பி உள்ளார்கள். A9-pathway - epetition reply8 February 2007 We received a petition asking: "We the undersigned petition the Prime Minister to persuade the Sri Lankan government to open the A9 road and also alert Britain of the killings in Sri Lanka." Read the petition Petitions home page Read the Government's responseGareth Thomas, Parliamentary Under-Secretary of State at the Department for International Development, answered a Parliamentary Question on the impact of the closure o…
-
- 3 replies
- 2k views
-
-
வாழைச்சேனை சந்திவெளி பிள்ளையார் கோயிலின் பிரதம குருக்கள் ஒட்டுக்குழு கருணா கும்பலினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். செல்லைய்யா குருக்கள் என்று அழைக்கப்படும் பரமேஸ்வரசர்மா அவர்களின் வீட்டிற்கு கடந்த இரவு சென்ற கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்கள், அவரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். சந்திவெளி அரசினர் பாடசாலைக்கு அருகில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது கொலை தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குருக்கள் ஜயா அவர்கள் வாகரையில் இருந்து வீடு வாசல்களை இழந்து இடம்பெயர்ந்த மக்களிற்கு உதவி வந்தவர் என்றும், பல காலங்களாக கருணா ஒட்டுக்குழுவினதும், சிங்களப் புலனாய்வுத்துறையினதும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர். இவர், சிறீலங்காவின் …
-
- 7 replies
- 3.1k views
-
-
வவுணதீவு முகாம்மீது எறிகணைத்தாக்குதல் 7 இராணுவம் காயம் இன்று வியாழக்கிழமை காலை 9.40 மணியளவில் வவுணதீவு இராணுவ முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் 7 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசதலைவர் மகிந்தவின் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகளும், அவர் விடுத்துவரும் இராணுவ போர்ச் சூளுரைகளும் விரைவில் சிறிலங்காவில் பாரிய இனநெருக்கடியையும் அரசியல் சூறாவளியையும் உருவாக்கக் கூடும் என்று நேற்று ஒஸ்லோவில் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சில் நடாத்தப்பட்ட நோர்வேயின் உதவி பெறும் நாடுகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட உயர் மட்ட அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தார்கள். நோர்வே நாட்டின் உதவிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டாலும் எதுவித முடிவுகளும் இவ்விடயத்தில் எட்டப்படவில்லை. குறிப்பாக சிறிலங்காவில் பிரதான அரசியற்கட்சிகளுக்கிடையிலான முறுகுநிலை மற்றும் சிறிய நாடான சிறிலங்காவின் பெரியளவிலான மந்திரிசபை என்பதுபோன்ற …
-
- 1 reply
- 2k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைகோவுடன் சந்திப்பு மூன்று பிரதிநிதிகள் அடங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக தலைவர் வைகோவைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினர். மிகுந்த அக்கறையுடன் தமிழ் பிரதேசங்களின் தற்போதைய மனித அவலங்கள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்ட வைகோ, தமிழ்நாட்டு அதிகாரிகளும், மத்திய அரசும், ஈழத்தமிழர்களின் துன்பங்கள் தீர்ந்து உரிய விடிவு கிடைக்க விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்களென தான் நம்புவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. -புதினம்
-
- 15 replies
- 3.1k views
-
-
இந்தியத் தலைவர்களிடமிருந்து சந்திரிகாவுக்கு அவசர அழைப்பு இந்தியத் தலைவர்களின் அழைப்பையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அடுத்த வார முற்பகுதியில் புதுடில்லி செல்லவுள்ளார். இவ்வார பிற்பகுதியில் லண்டனிலிருந்து நாடு திரும்பவிருந்த நிலையிலேயே புதுடில்லி வருமாறு சந்திரிகாவுக்கு இந்தியத் தலைவர்களிடமிருந்து அவசர அழைப்பொன்று கிடைத்தது. இதையடுத்து, அவர் அடுத்த வார முற்பகுதியில் புதுடில்லி சென்று இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அவரது செயலாளர் பி.திஸநாயக்கா தெரிவித்துள்ளார். இதனால், சந்திரிகா குமாரதுங்க, இலங்கை வருவதற்கு முன்னர் புதுடில்லி சென்றுவிட்டே அங்கிருந்து கொழும்பு திரும்புவாரெனவும் திஸநாயக்கா தெரிவித்தார். இலங…
-
- 2 replies
- 1.6k views
-
-
யானைகளின் சரணாலயமாக மாறிவிட்டது அரசு; வீரவன்ஸவின் கிண்டலால் சபையில் சலசலப்பு! அரசு இன்று யானைகளின் சரணாலயமாகவே மாறிவிட்டது என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் கிண்டலுடன் விமர்சித்தார். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. விமல் வீரவன்ஸவின் இந்த விமர்சனம் எதிர்க்கட்சி அணியிலிருந்து ஆளும் கட்சியின் பக்கம் தாவியவர்களைத் தர்ம சங்கடமான நிலைக்குத்தள்ளியது. அவர்கள் விளக்கெண்ணெய் குடித்தவர்கள்போல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு அசடு வழிய அமைதியாக இருந்தனர். நாடாளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது. எம்.பியாகப் பதவியேற்ற அமைச்சர்! முதற்கட்டமாக சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்ப…
-
- 1 reply
- 987 views
-
-
மலையக அரசியல் தலைவர்களின் போட்டா போட்டி காரணமாக நடந்து முடிந்த சம்பள உயர்வுப் போராட்டம் தொழிலாளர்கள் மத்தியில் விரக்தி நிலையை தோற்றுவித்துவிட்டன. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக் கொடுப்பதை விட அவர்கள் தங்களுடைய புகழை இந்தப் போராட்டத்தின் மூலம் எவ்வளவு உயர்த்திக் கொள்ள முடியுமென்பதில் தான் அக்கறை கொண்டிருந்தார்கள். இதனால், கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு கிடைக்காமல் போய்விட்டது. தொழிலாளர், விடுதலை முன்னணியின் பசறை, மடுல்சீமை மாவட்ட தொழில் உறவு அதிகாரி எம். ஞானப்பிரகாசம் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பசறை மாவட்ட அமைப்பாளர் பி. செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசுகையில்; தொழிற்சங்கம் தொழி…
-
- 0 replies
- 644 views
-
-
கொழும்பு மறைமாவட்ட பேராயர் டுலிப் டி சிக்கேரா யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் நற்பணிச் சபையின் போதகரும் நான்கு சிறிய வயதுள்ள குழந்தைகளின் தந்தையுமான நல்லதம்பி ஞானசீலன் யாழ்ப்பாணத்தில் பிரதான வீதியில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமையானது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியையும், மனக்கதறலையும் ஏற்படுத்தியுள்ளது என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் டுலிப் டி சிக்கேரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து முரண்பாடான தகவல்கள் உள்ளன. சுயாதீன விசாரணை ஒன்றின் மூலமே உண்மை நிலை வெளிவரும். ஒரு சக கிறிஸ்தவ தலைவர் என்னும் நிலையில் இப்படியான விசாரணை ஒன்றை ஆரம்பிக்கும்படி அக்கறையுடன் வேண்டுகின்றேன். ஏனெனில் ஒரு மதத்தலைவரினதும் அவர் சபையின…
-
- 0 replies
- 647 views
-
-
பலாலி வீதியில் சிங்கக் கொடிகள்! திருநெல்வேலிப் பகுதியில் பலாலி வீதியில் இரு மருங்கிலும் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் முன்னால் சிங்கக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. பலாலி வீதியில் பரமேஸ்வராச் சந்தியில் அமைந்துள்ள கடைகள், வீடுகளின் வாசல்கள், இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடு படும் இடங்கள் ஆகியவற்றில் இந்தச் சிங்கக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. -Uthayan-
-
- 0 replies
- 854 views
-
-
வாகரையிலிருந்து படைகளை அரசு விலக்கினால்தான் பேச்சுக்கு வாய்ப்பு: ஸ்ரீகாந்தா எம்.பி. கிழக்கில் அண்மையில் கைப்பற்றிய வாகரை, கதிரவெளி பிரதேசங்களில் இருந்து அரசுப் படைகள் வாபஸ்பெறப்பட்டு, 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது இருந்த களநிலைமை மீண்டும் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே இனி சமாதானத்துக்கு வாய்ப்புக் கிட்டும். அவ்வாறானதொரு சூழ்நிலையை அரசு உருவாக்குமானால் மீண்டும் பேச்சுக்குத் திரும்புமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளை வற்புறுத்தும். இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் ஸ்ரீகாந்தா எம்.பி. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் …
-
- 0 replies
- 659 views
-