ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
வவுணதீவு முகாம்மீது எறிகணைத்தாக்குதல் 7 இராணுவம் காயம் இன்று வியாழக்கிழமை காலை 9.40 மணியளவில் வவுணதீவு இராணுவ முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் 7 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
-
- 0 replies
- 1.1k views
-
-
ஏ 9 பாதை மூடியது சம்பந்தமான மனுவுக்கு பிரித்தானியப் பிரதமரின் அலுவலகம் பதில். பிரித்தானிய பிரதமரின் இணயத் தளத்தினூடாக அனுப்பப்பட்ட ஒன்லையின் மனுவுக்கு இப்படி பதிலை அனுப்பி உள்ளார்கள். A9-pathway - epetition reply8 February 2007 We received a petition asking: "We the undersigned petition the Prime Minister to persuade the Sri Lankan government to open the A9 road and also alert Britain of the killings in Sri Lanka." Read the petition Petitions home page Read the Government's responseGareth Thomas, Parliamentary Under-Secretary of State at the Department for International Development, answered a Parliamentary Question on the impact of the closure o…
-
- 3 replies
- 2k views
-
-
-சபேசன் (அவுஸ்திரேலியா)- புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, ஐந்து ஆண்டுகள் முழுமையடையப் போகின்ற இக்காலகட்டத்தில் சிறிலங்கா அரசு வெளிப்படையான, வலிந்த போர் ஒன்றை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வருகின்றது. சிறிலங்காவின் தற்போதைய அரச அதிபர் மகிந்த ராஜபக்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விடயங்களை முறையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கு எதிரான செயற்பாடுகளைத்தான் முடுக்கி விட்டு வருகிறார். மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் அரச அதிபராகப் பதவியேற்ற பின்பு நடைபெற்ற ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் ஏற்;றுக் கொள்ளப்பட்ட விடயங்களை கூட அவர் நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. சிறிலங்கா அரசின் அராஜக போக்குகள் மேலும் தொடர்ந்தும் பெருகி …
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அரசதலைவர் மகிந்தவின் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகளும், அவர் விடுத்துவரும் இராணுவ போர்ச் சூளுரைகளும் விரைவில் சிறிலங்காவில் பாரிய இனநெருக்கடியையும் அரசியல் சூறாவளியையும் உருவாக்கக் கூடும் என்று நேற்று ஒஸ்லோவில் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சில் நடாத்தப்பட்ட நோர்வேயின் உதவி பெறும் நாடுகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட உயர் மட்ட அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தார்கள். நோர்வே நாட்டின் உதவிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டாலும் எதுவித முடிவுகளும் இவ்விடயத்தில் எட்டப்படவில்லை. குறிப்பாக சிறிலங்காவில் பிரதான அரசியற்கட்சிகளுக்கிடையிலான முறுகுநிலை மற்றும் சிறிய நாடான சிறிலங்காவின் பெரியளவிலான மந்திரிசபை என்பதுபோன்ற …
-
- 1 reply
- 2k views
-
-
வாழைச்சேனை சந்திவெளி பிள்ளையார் கோயிலின் பிரதம குருக்கள் ஒட்டுக்குழு கருணா கும்பலினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். செல்லைய்யா குருக்கள் என்று அழைக்கப்படும் பரமேஸ்வரசர்மா அவர்களின் வீட்டிற்கு கடந்த இரவு சென்ற கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்கள், அவரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். சந்திவெளி அரசினர் பாடசாலைக்கு அருகில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது கொலை தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குருக்கள் ஜயா அவர்கள் வாகரையில் இருந்து வீடு வாசல்களை இழந்து இடம்பெயர்ந்த மக்களிற்கு உதவி வந்தவர் என்றும், பல காலங்களாக கருணா ஒட்டுக்குழுவினதும், சிங்களப் புலனாய்வுத்துறையினதும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர். இவர், சிறீலங்காவின் …
-
- 7 replies
- 3.1k views
-
-
மலையக அரசியல் தலைவர்களின் போட்டா போட்டி காரணமாக நடந்து முடிந்த சம்பள உயர்வுப் போராட்டம் தொழிலாளர்கள் மத்தியில் விரக்தி நிலையை தோற்றுவித்துவிட்டன. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக் கொடுப்பதை விட அவர்கள் தங்களுடைய புகழை இந்தப் போராட்டத்தின் மூலம் எவ்வளவு உயர்த்திக் கொள்ள முடியுமென்பதில் தான் அக்கறை கொண்டிருந்தார்கள். இதனால், கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு கிடைக்காமல் போய்விட்டது. தொழிலாளர், விடுதலை முன்னணியின் பசறை, மடுல்சீமை மாவட்ட தொழில் உறவு அதிகாரி எம். ஞானப்பிரகாசம் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பசறை மாவட்ட அமைப்பாளர் பி. செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசுகையில்; தொழிற்சங்கம் தொழி…
-
- 0 replies
- 645 views
-
-
கொழும்பு மறைமாவட்ட பேராயர் டுலிப் டி சிக்கேரா யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் நற்பணிச் சபையின் போதகரும் நான்கு சிறிய வயதுள்ள குழந்தைகளின் தந்தையுமான நல்லதம்பி ஞானசீலன் யாழ்ப்பாணத்தில் பிரதான வீதியில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமையானது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியையும், மனக்கதறலையும் ஏற்படுத்தியுள்ளது என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் டுலிப் டி சிக்கேரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து முரண்பாடான தகவல்கள் உள்ளன. சுயாதீன விசாரணை ஒன்றின் மூலமே உண்மை நிலை வெளிவரும். ஒரு சக கிறிஸ்தவ தலைவர் என்னும் நிலையில் இப்படியான விசாரணை ஒன்றை ஆரம்பிக்கும்படி அக்கறையுடன் வேண்டுகின்றேன். ஏனெனில் ஒரு மதத்தலைவரினதும் அவர் சபையின…
-
- 0 replies
- 648 views
-
-
பலாலி வீதியில் சிங்கக் கொடிகள்! திருநெல்வேலிப் பகுதியில் பலாலி வீதியில் இரு மருங்கிலும் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் முன்னால் சிங்கக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. பலாலி வீதியில் பரமேஸ்வராச் சந்தியில் அமைந்துள்ள கடைகள், வீடுகளின் வாசல்கள், இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடு படும் இடங்கள் ஆகியவற்றில் இந்தச் சிங்கக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. -Uthayan-
-
- 0 replies
- 855 views
-
-
வாகரையிலிருந்து படைகளை அரசு விலக்கினால்தான் பேச்சுக்கு வாய்ப்பு: ஸ்ரீகாந்தா எம்.பி. கிழக்கில் அண்மையில் கைப்பற்றிய வாகரை, கதிரவெளி பிரதேசங்களில் இருந்து அரசுப் படைகள் வாபஸ்பெறப்பட்டு, 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது இருந்த களநிலைமை மீண்டும் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே இனி சமாதானத்துக்கு வாய்ப்புக் கிட்டும். அவ்வாறானதொரு சூழ்நிலையை அரசு உருவாக்குமானால் மீண்டும் பேச்சுக்குத் திரும்புமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளை வற்புறுத்தும். இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் ஸ்ரீகாந்தா எம்.பி. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் …
-
- 0 replies
- 660 views
-
-
உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற்கு அதியுயர் மட்ட ராஜதந்திரிகளை அனுப்புமாறு அரசு கேட்டுக்கொண்ட போதும் ஜேர்மன் மறுத்துவிட்டது உதவி வழங்கும் மாநாட்டிற்கு அதியுயர் மட்ட ராஜதந்திரிகள் அனுப்புமாறு அரசாங்கம் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதுவரை கேட்ட போதும் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. நீங்கள் எதிர்பார்ப்பது போன்று உயர்மட்ட ராஜதந்திரிகளை அனுப்ப முடியாது என ஜேர்மன் தூதுவர் பதிலளித்ததாக ஐக்கிய தேசிய கட்சி எம்.பி ரவி கருணாநாயக்க சபையில் தெரிவித்தார். அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணையின் மீது உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அருமையான சந்தர்ப்பம் இருந்தது. இரு கட்சிகளுக்கும் இடையில் உடன் படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டது. ஆனால்…
-
- 0 replies
- 882 views
-
-
இடம்பெயர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு - இந்த அடையாள அட்டைகள் வாகரைப் பகுதிக்குள் மட்டுமே செல்லுபடியாகும் வாகரையிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் அனைவரையும் பொலிஸார் பஸ் மூலம் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். இதன்போது குடும்பம் குடும்பமாகவும் தனித்தனியாகவும் புகைப்படம் எடுக்கப்படுவதாக தெரியவருகிறது. இந்த தற்காலிக அடையாள அட்டையின்றி மக்கள் எவரும் வாகரையில் மீளக் குடியேற முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் பொலிஸ் நிலையங்கள் முன்னால் அடையாள அட்டை பெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் …
-
- 0 replies
- 673 views
-
-
ஐ.நா. கொழும்பு அலுவலகம் அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றது - விமல் வீரவன்ச ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் அரசாங்கத்திற்கு எதிராகவும் விடுதலைப்புலிகளுக்கு சார்பாகவும் செயற்பட்டு வருகின்றது என ஜே. வி. பி.யின் பிரசார செயலாளரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான விமல் வீரவன்ச சபையில் குற்றம்சாட்டினார். கொழும்பிலுள்ள ஐ. நா. அதிகாரிகள், இராஜதந்திரிகளுக்குரிய வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு நாட்டைப்பிரிக்க போராடும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியதும் வழமையான தினப்ப ணிகள் இடம்பெற்றன. அதனையட…
-
- 0 replies
- 886 views
-
-
இந்தியத் தலைவர்களிடமிருந்து சந்திரிகாவுக்கு அவசர அழைப்பு இந்தியத் தலைவர்களின் அழைப்பையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அடுத்த வார முற்பகுதியில் புதுடில்லி செல்லவுள்ளார். இவ்வார பிற்பகுதியில் லண்டனிலிருந்து நாடு திரும்பவிருந்த நிலையிலேயே புதுடில்லி வருமாறு சந்திரிகாவுக்கு இந்தியத் தலைவர்களிடமிருந்து அவசர அழைப்பொன்று கிடைத்தது. இதையடுத்து, அவர் அடுத்த வார முற்பகுதியில் புதுடில்லி சென்று இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அவரது செயலாளர் பி.திஸநாயக்கா தெரிவித்துள்ளார். இதனால், சந்திரிகா குமாரதுங்க, இலங்கை வருவதற்கு முன்னர் புதுடில்லி சென்றுவிட்டே அங்கிருந்து கொழும்பு திரும்புவாரெனவும் திஸநாயக்கா தெரிவித்தார். இலங…
-
- 2 replies
- 1.6k views
-
-
யானைகளின் சரணாலயமாக மாறிவிட்டது அரசு; வீரவன்ஸவின் கிண்டலால் சபையில் சலசலப்பு! அரசு இன்று யானைகளின் சரணாலயமாகவே மாறிவிட்டது என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் கிண்டலுடன் விமர்சித்தார். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. விமல் வீரவன்ஸவின் இந்த விமர்சனம் எதிர்க்கட்சி அணியிலிருந்து ஆளும் கட்சியின் பக்கம் தாவியவர்களைத் தர்ம சங்கடமான நிலைக்குத்தள்ளியது. அவர்கள் விளக்கெண்ணெய் குடித்தவர்கள்போல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு அசடு வழிய அமைதியாக இருந்தனர். நாடாளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது. எம்.பியாகப் பதவியேற்ற அமைச்சர்! முதற்கட்டமாக சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்ப…
-
- 1 reply
- 988 views
-
-
''எழுச்சி கொள்ளும் இளையோர்'' சீ. ஆதித்தன் கடந்த சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைவோரது தொகை அதிகரித்துக் கொண்டு செல்வதைக் காணமுடிகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பிராந்தியத்தில் இருக்கின்ற சகல கிராமங்களில் இருந்தும் தற்போது வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். நாளிற்கு நாள் இணைவோர் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் அரசியல்துறைச் செயலகங்களை நிறைக்கும் இளைஞர், யுவதிகளின் மன நிலையில் தெளிவான பார்வை தென்படுவதை அவதானிக்கலாம். இது ஒரு புறம் இருக்க விடுதலைப் போராட்டத்திற்காக தமது பிள்ளைகளை தாமாகவே வந்து போராளிகளிடம் ஒப்படைக்கின்…
-
- 1 reply
- 882 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேற்குலகம் நீக்க வேண்டும்: கலாநிதி வி.கருணரட்ன மகிந்த ராஜபக்ச அரசிற்கு 4.5 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணங்கிய சர்வதேச சமூகம், அந்த நாட்டில் அமைதி உருவாக வேண்டும் என்று விரும்பினால், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி பேச்சுவார்தைகளில் அவர்களும் சமதரப்பாகக் கலந்துகொள்ள ஏதுவான நிலையை உருவாக்க முன்வரவேண்டுமென, இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரட்ன தெரிவித்தார். சிறீலங்காவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக லண்டனில் வாழும் மக்களுக்கு விரிவான விளக்கத்தை வழங்கும் நோக்கத்துடன், பல்வேறு சந்திப்புகளையும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நடத்தி வருகிறார். நாட்டின் ஜனாதிபதியால் கூட, தனது மாளிகைக்குள் ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
-சி.இதயச்சந்திரன்- அரசு என்கிற கட்டுமானத்திலிருந்து வெளித்தள்ளப்பட்ட, அரசியலின் ஆளுமைக்குட்படாது சமூக வெளிப்பாடுகளும் தத்துவங்களும் இல்லையென்பதை அறுதியிட்டும் கூறலாம். அதில் நேரடித் தலையீட்டை மேற்கொள்ளாத மக்கள் கூட்டம் பற்றி பேசலாமென எண்ணுகிறேன். அரசியலில் ஊடுருவாத எந்தவொரு சமூகத்தினரும் இல்லையென்பதே யதார்த்தமானதாகும். வாக்களிக்கும் போதும், அதன் பின்னரும் அரசியல்வாதிகள் கூறுவதை கேட்டபடி இருப்பவர்களே வெகுஜன மக்களாவர். அதிகாரத்தை இயக்குவதில் பங்குகொள்ளாத இக்கூட்டம், அந்நியராக வாழ்வதே நாடாளுமன்ற ஜனநாயகம் இவர்களுக்கு கொடுத்த உரிமையாகும். அந்நியராக வாழும் உரிமைகூட முதலாளித்துவ அரசியலில் மட்டுமே காணப்படுகிறது. மதத்தை முன்னிலைப்படுத்தி அரசிய…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்த மூவரை தாம் கைது செய்துள்ளதாக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். [Wednesday February 07 2007 10:30:24 AM GMT] [virakesari.lk] இவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளையடுத்து, இம்மூவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர் கூறினார். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஹிரு பத்திரிகையின் சுதந்திர ஊடகவியலாளர் உபாலி செனவிரட்ண, தொழிற்சங்கவாதியும் அக்குண பத்திரிகையின் ஆசிரியருமான சிசிர குமார மற்றும் சுதந்திர ஊடகவியலாளர் நிஹால் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.…
-
- 13 replies
- 2.7k views
-
-
[Wednesday February 07 2007 01:13:56 PM GMT] [pathma] அமெரிக்காவில் பணியாற்றும் தமிழ் கற்றோர் சமூகம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பன் கி-மூன் அவர்களுக்கு, நாட்டுநிலைமை தொடர்பான விளக்கக் கடிதமொன்றை இவ்வார இறுதியில் அனுப்புகிறது. அதில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் கையொப்பம் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இருப்பினும் தமிழ் மக்கள் பாராமுகமாய் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் கையொப்பமிட விரும்பும் அனைவரும் இவ்வாரம் வியாழக்கிழமை முடிவதற்குள், கீழுள்ள இணைப்பில் அழுத்தி, உள்ளே செல்லவும். http://www.ipetitions.com/petition/srilankaunappeal/ நன்றி : தமிழ்வின்
-
- 28 replies
- 5.3k views
-
-
அமைச்சர் அனுராவுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தலாம்! ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டால் தன்னை கடத்திச் சென்று மின்கம்பத்தில் தொங்கவிடப்போவதாக அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரே ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். தமது தொலைபேசிக்கு மூன்று தடவைகள் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் கொலை மிரட்டல் பாணியில் கதைத்தார் எனவும் மூன்றாவது தடவை குறித்த நபர் தன்னைத் திட்டித் தீர்த்தார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோன்று அமைச்சர் மங்கள சமரவீரவையும் மாத்தறைப் பகுதியில் மின்கம்பத்தில் தொங்கவிடப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அனுரா கூறினார். இதனை ஒரு விளையாட்டாகக் கருதமுடியாது எனத் தெரிவித்த …
-
- 7 replies
- 2.2k views
-
-
மஹிந்த சிந்தனை இலங்கை மக்களுக்கு வரம் என்கின்றார் அமைச்சர் அமீர்அலி "மஹிந்த சிந்தனை' என்பது இலங்கை மக்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் வரமாகும் என்று அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் கடந்த 2ஆம் திகதி தனது கடமையைப் பொறுப்பேற்கும் வைபவத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்த அமைச்சை கடந்த வருடம் நான் பொறுப்பேற்ற வேளை ""சரியான ஒருவருக்கே இந்த அமைச்சு வழங்கப்பட்டுள்ளது'' என்று ஜனாதிபதியின் ஊடக ஆராட்சி அதிகாரி எம்.எச்.எம். அஸ்வர் சொன்னார். ஜனாதிபதி இதைப்பொறுப்பேற்றபோது இதைக்கொண்டு என்னசெய்யமுடியும் என்ற வினாவே எ…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளின் நிலைகள் மீது ஹெலிகள் றொக்கட் வீச்சு!: பிரசாத் சமரசிங்க திருகோணமலையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளின் மறைவிடங்கள் எனச் சந்தேகிக்கப்படும் காட்டுப்பகுதி மீது நேற்று விமானப் படையின் ஹெலிக்கொப்டர்கள் றொக்கட் தாக்குதல்களை நடத்தின என்று கொழும்பில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுக்காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கூறினார். தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை என்று செய்தி ஏஜென்ஸிகள் தெரிவித்தன. -Sudaroli-
-
- 0 replies
- 1.2k views
-
-
அமைச்சர்களே வீதியில் செல்லமுடியாத நிலை மனம் வெதும்புகின்றார் அமைச்சர் ஜெயராஜ்! அவரது காரையே தட்டித் தர்பார் நடத்தினராம் பொலிஸார் கொழும்பு, பெப். 07 அமைச்சரொருவருக்குக் கூட இன்று வீதியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? நேற்று நாடாளுமன்றில் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஆளும்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே. நேற்று நாடாளுமன்றம் சபாநாயக்கர் ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியபோது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சிறப்புரிமைப் பிரச்சினை யொன்றை எழுப்பி உரையாற்றினார். அவர் அங்கு கூறியதாவது: இன்று காலை பௌத்தலோக மாவத்தை வழியாக நான் நாடாளுமன்றத்துக்கு எனது வாகனத்தில் வந்துகொண்…
-
- 4 replies
- 2k views
-
-
நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை சிதறடித்துவிட்டார் ஜனாதிபதி: ரணில் நாட்டில் நிரந்தரமான ஒரு சமாதானத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்கு இடப்பட்ட அத்திபாரத்தை ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடுகள் அடியோடு தகர்த்துவிட்டன. ஜனாதிபதியின் நடவடிக்கை பிரதான இரு கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்ய வைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் நல்ல ஒரு எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்றுக்காலை நாடாளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சபையில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். அப்போதே அவர் இவ்வாறு கவலை தெரிவித்தார்…
-
- 0 replies
- 818 views
-
-
இலங்கையில் மனித உரிமைகள்:சர்வதேசத்தின் பரிசீலனையில்! இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர் பான விவகாரம் சர்வதேச ரீதியில் ஒலிக்கும் கவனிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஐ. நா. பாதுகாப்புக் கவுன்ஸிலின் செயலணிக் குழு ஒன்று நாளை மறுதினம் கூடி இலங்கை விவ காரம் குறித்து ஆராயஇருக்கின்றது. அதேசமயம் அடுத்த மாதத்தில் கூடவிருக் கும் ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட் டத் தொடரிலும் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங் களில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் விவகாரம் விரிவாக ஆராயப்படவிருப்பதாக விடய மறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக் கின்றன. மேற்படி கவுன்ஸிலின் ஆவணங்களின் படி கூட்டத் தொடரின் நான்காவது அமர்வின் போது மார்ச் 12 ஆம் திகதிக்கும் ஏப்ரல் 5ஆம் திகதிக்கும் இடையில் ம…
-
- 0 replies
- 1k views
-