Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்தின் பக்கத்துக்கு கட்சிதாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லீம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று அரசில் இணைய உள்ளனர். அதேவேளையில், இவ்வாறு அரசுடன் இணைந்துகொள்பவர்களையும் உள்ளடக்கிய அமைச்சரவை மறுசீரமைப்பும் இன்று நடைபெற உள்ளது. ஐ.தே.க. தலைமையில் திருப்தியடைந்துள்ள சுமார் பதினேழு வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அரசில் இணைந்து கொள்வார்கள் என அரசு எதிர்பார்க்கின்றது. ஆனால் 13 உறுப்பினர்களே ஐ.தே.க.வில் இணைந்து கொள்ள உள்ளனர் என ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும் விஷேட வைபவம் ஒன்றில் இவர்கள் அனைவரும் அர…

  2. ] "சிறிலங்காவினால் தற்போது மீறப்பட்டுள்ள வடக்கு - கிழக்கு இணைப்பு பற்றிய இலங்கை - இந்திய அனைத்துலக ஒப்பந்த விவகாரத்தை, இந்தியாவினால் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்குவிதிகளின், ஆறாவது அதிகாரத்தின், சாரம் 34, 35, 36 க்கு அமைய, முறையீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு." பிரான்சை தலைமையகமாகக் கொண்ட தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் செயலாளர் ச.வி.கிருபாகரன் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "1987 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் நாள் கையெழுத்தான சிறிலங்கா - இந்தியா அனைத்துலக உடன்படிக்கையின் பிரகாரம், சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தல…

  3. * பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ -ராய்ட்டர் செய்திச்சேவை- விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது தாக்குதலை மேற்கொண்டு அவர்களுடைய இராணுவ கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராய்ட்டர் செய்திச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சமாதானம் குறித்து நேர்மையான அக்கறை கொண்டுள்ளதை விடுதலைப்புலிகளின் தலைவர் தனிப்பட்ட ரீதியில் வெளிப்படுத்தினால் மாத்திரமே இராணுவத்தின் திட்டங்களை கைவிடச் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் இராணுவக் கட்டமைப்புகளை அழிக்க விரும்புகின்றோம், அவை எங்கிருந்தாலும், வடக்கு, கிழக்கு, தெற்கில் இருந்தால…

  4. பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு உலகின் ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் எமது தேசியக் கொடியின் கீழ் விமான சேவைகள் ஏனைய நாடுகளுக்கு சேவையை மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திலேயே "மிஹின் லங்கா" விமான சேவை ஆரம்பிக்கபட்டதாகத் தெரிவிக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ கூடிய விரைவில் இதுபோன்ற தேசிய கப்பல் சேவையொன்றும் ஆரம்பிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை 25 ஆம் திகதி மாத்தறை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற "ஜாதிக சவிய" திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றும் போதே பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். இலங்கைக்கென தனித்துவமான விமான சேவை இருந்தது. ஆனால், இ…

  5. மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக நூற்றாண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கவும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் வெளிவிவகார அமைச்சு செயலாளர் பாலித கோஹணவும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். காந்தி சத்தியாக்கிரக நூற்றாண்டு விழாவை இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது. அகிம்சைக் கோட்பாட்டை போதித்து அதன் வழி நடந்த காந்தியைப் பற்றி பேசுவதற்கும் அவர் தொடர்பாக இடம் பெறும் உரைகளை செவிமடுக்கவும் இலங்கைத் தமிழர்கள் டில்லிக்கு வருகை தருகின்ற போதும் இலங்கையில் உக்கிரமடைந்து வரும் மோதல்கள் தொடர்பாக இந்தியத் தலைவர்களுடன் இவர்கள் கலந்தாராய்வார்களென எதிர் பார்க்கப்படுவதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை ந…

  6. ஞாயிறு 28-01-2007 01:01 மணி தமிழீழம் [மோகன்] பரிசோதனை என்ற போர்வையில் பெண்கள் மீது கெடுபிடி யாழ்நகரில் சிறீலங்கா காவல்நிலையத்தின் வணிக மையத்திற்கு இன்று பொருட்களை கொள்வனவிற்காக சென்ற பொதுமக்கள், பெண்கள் சோதனை என்ற போர்வையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். பெண்களை வழிமறிக்கும் ஆண்காவல்துறையினர் அவர்களை நடுவீதியில் வைத்து உடற்கோதனைக்கு உட்படுத்தி இம்சைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். இதேவேளை சிறீலங்கா காவல்துறையினரால் உடற்பரிசோதனைக்கு பெண்கள் உட்படுவதை காவல்துறையின் மற்றொருபிரிவினர் ஒளிப்படக் கருவிகள் மூலம் பதிவு செய்தனர். http://www.pathivu.com/

  7. ~வாகரை ஒரு பலப்பரீட்சைக்கான களமல்ல~ -அருஸ் (வேல்ஸ்)- வாகரையை கடந்த 19.01.2007 அன்று அரச படைகள் கைப்பற்றியதை அடுத்து படை அதிகாரிகளை பாராட்டிய ஜனாதிபதி மகிந்த தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கிழக்கு முழுவதும் மிகவிரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தனது அரசியல் ஆதங்கத்தை தெரிவிக்கத் தவறவில்லை. மாவிலாறு, சம்பூர், வாகரை என மகிந்தவின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. 1995 இல் யாழ். குடாவை கைப்பற்றிய பின்னர் சந்திரிக்கா பாரிய விழா எடுத்திருந்தார். தென்னிலங்கை முழுவதும் நீலக்கொடிகள் பறந்தன, அதற்கான காரணமும் உண்டு. யாழ். குடாவானது சிறிலங்கா இராணுவத்துடனான உக்கிர மோதல்களின் பின்னர் 1984-1985 காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள…

    • 3 replies
    • 1.1k views
  8. மணலாறு மாவட்டத்தில் மோதலில் போராளி வீரச்சாவு கடந்த 24ம் திகதி நிகழ்ந்த மோதலின் போது விரவேங்கை மணிமொழி என்றழைக்கப்படும்இ வவுனியா ஓமந்தைப் பகுதியை சொந்த இடமாக கொண்ட இராஐரட்ணம் ரஐனா என்ற போராளி வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளார். அதேநாளில் மணலாறு ஜானகபுரத்தை அண்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் சிறீலங்கா படையினர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது யாழ் இணையத்தளம் சார்பாக வீரச்சாவைத்தழுவிக்கொண்ட ஒவ்வொரு போராளிக்கும் எமது அஞ்சலியைச் செலுத்துவோம்

    • 0 replies
    • 775 views
  9. கொழும்பு துறைமுகத் தாக்குதல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா? [ஞாயிற்றுக்கிழமை, 28 சனவரி 2007, 04:49 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகம் மீது நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலானது அரசினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தாக்குதலில் தாக்குதலாளிகளால் 4 கடற்கலங்கள் அழிக்கப்பட்டதாக நேற்று மாலை கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால், சிறிலங்கா கடற்படையினர் தாம் சந்தேகத்திற்கு இடமான 3 படகுகளை அழித்ததாக நேற்று காலை தெரிவித்திருந்தனர். பின்னர் துறைமுகப்பகுதியிலிருந்து தப்பியோடிய சந்தேகத்திற்கு இடமான 9 பேரை கைது செய்திருப்பதாக நேற்று கடற்படையினர் தெரிவித்தனர். தாக்குதலின் பின்னர…

  10. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் முயற்சி சிறிலங்காவின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தினை ஏற்படுத்தும்" என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொருளியல் நிபுணர் கலாநிதி ஹர்சா டீ சில்வா தெரிவித்துள்ளதாவது: "இத்தாக்குதல் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் காப்புறுதித் தொகையை அதிகரிக்கச் செய்வதுடன் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படத்தலாம். அதாவது சிறிலங்காவின் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் காப்புறுதித் தொகை அனைத்துலகத்தில் அதிகரிக்கலாம். கொள்கலன்களை இறக்கும் கப்பல்களின் உரிமையாளர்கள் அதிகளவிலான கட்டணங்களையும், அதிகளவிலான காப்புறுதித் தொகையையும் செ…

  11. கொழும்புத்துறை முகத்தில் தாக்குதல் முயற்சி ஒன்றைத் தாம் முறியடித்துள்ளதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தில் முழுமையான செய்தி இணைக்கப்படவில்லை. ஒரு வரியில் (ஓட விடப்பட்டுள்ள) செய்தியில் அதிகாலை ஐந்து மணியளவில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை கடற்படையினர் முறியத்துள்ளதாகவும், புலிகளின் படகு ஒன்று அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரம் தெரிந்தவர்கள், வேறு செய்திகள் மூலம் இதனை அறிந்தவர்கள் இங்கே வந்து விபரங்களைக் கொட்டுங்கள்

  12. தமிழர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட வகையினர் உண்டு. அவர்கள் தங்களை நம்புவதை விட மற்றவர்களையே அதிகம் நம்புவார்கள். துன்பம் நேரும் போது வேறு யாராவது வந்து தங்களை கைதூக்கி விடுவார்கள் என்று காத்திருப்பார்கள். அந்த "வேறு யாராவது" என்பது "கடவுளாகக்" கூட இருக்கலாம். மொத்தத்தில் தங்களின் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு முயற்சி செய்யாது மற்றவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இவ்வாறான குணவியல்பு கொண்டவர்கள் தொகையளவில் மிக அதிகமானவர்களாக இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இவர்களின் "காத்திருப்புக்களை" காணக்கூடியதாக இருக்கிறது. போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் "இந்தியா வந்து பிரச்சனையை தீர்த்து வைக்கும், இந்தியா தமிழீழம் பெற்றுத் தரும்" என்று நம…

  13. 'விடுதலைப் புலிகளை அழிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சி வெற்றி பெறுமா?': ரொய்ட்டர்ஸ் "திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றியுள்ள விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தளங்களை அப்புறப்படுத்த போவதாக கூறிய சிறிலங்கா அரசு, இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் தற்போது விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவதற்கு அது தீர்மானித்துள்ளது. ஆனால் யாருக்கும் வெற்றி இல்லை என்பது தான் தற்போதைய நிலை" என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தனது செய்தி ஆய்வில்: கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய நகரான வாகரையை கைப்பற்றிய சிறிலங்கா அரசு, போரைத் தொடர்ந்து முன்னெடுத்து விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டம…

    • 10 replies
    • 2.1k views
  14. அம்பாறையில் அதிரடித்தாக்குதல் - 8 அதிரடிப் படையினர் பலி - 12 படுகாயம் - பாண்டியன் Saturday, 27 January 2007 20:14 அம்பாறை மாவட்டம், திருக்கோவிலில் உள்ள தங்கவேலாயுதபுரம் பகுதியில் வைத்து சிங்கள அதிரடிப் படையினர் மீது இன்று காலை 9.30 மணியளவில் நடத்தப்ப்பட்ட அதிரடித் தாக்குதலில் ஒன்பது அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்ட பகுதிகளில் தற்போது நிலைகொண்டுள்ள அதிரடிப் படையினருக்கான வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வாகனங்களை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளை துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதன்போது எட்டு அதிரடிப்படையினர் கொல்லப்…

  15. இன்று காலை 5.30 மணியளவில் கொழும்பு தறைமுகத்தின் வெளிச்ச வீடு வரை ஊடுருவிய இந்த படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கடற்படையினரின் தாக்குதலில் ஒரு படகு மூழகடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.ஏனைய இரண்டு படகுகளும் அங்கிருந்து தப்பிச் சென்ற இரண்டு படகுகளையும் கடற்படை படகுகள் தாக்கி அழித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார் இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் பலத்தை முற்றாக முறியடிக்கும் தாக்குதல்களை தொடரவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்த ஊடுருவல் நடவடிக்கையானது ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவான செய்தியை தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி சேவை கர…

    • 0 replies
    • 1.1k views
  16. இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் அம்பாறை திருக்கோவில் தங்கவேலாயுதபுரப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் வாகனத்தின் மீது பகுங்கியிருந்து தாக்கியதில் 8 சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பில் கிடைத்த ஆரம்பகட்ட தகவலின்படி விடுதலைப்புலிகளின் விசேட கரந்தடிப்படையிணி ஒன்று விசேட அதிரடிப்படையிளரின் விநியோக அணிமீது மேற்கொண்ட தாக்குதலிலே இவ்இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதனைத்தொடர்ந்து கல்முனைப்பகுதியில் 41 கிலோமீற்றர் தெற்கில் அமைந்துள்ள தாக்குதல் இடம்பெற்ற இவ்இடத்தில் இருந்து தாக்குதலையடுத்து பலத்த எறிகணை, மற்றும் துப்பாக்கி சூட்டுதாக்குதல்களை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர். tha…

  17. இயந்திரக் கோளாறு காரணமாக, முல்லைத்தீவு கடலடிப் படுக்கையில் தரைதட்டி செயலிழந்து நிற்கும், ஜோர்டானிய சரக்குக் கப்பலை தகர்ப்பதற்கான முயற்சிகளில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன http://www.ibctamil.co.uk/index.php?subact...mp;ucat=20&

  18. 29,30 ஆம் திகதிகளில் காலியில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு 1.5 பில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்குமென அரசு நம்பிக்கை வீரகேசரி நாளேடு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு எதிர்வரும் 29,30 ஆம் திகதிகளில் காலி மாநகரில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்தார்.இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா,ஜப்பான், நோர்வே,ஜரோப்பிய ஒன்றியம் உட்பட 50 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வர். "மகிந்த சிந்தனை புதிய இலங்கைக்கான இலக்கு' என்னும் தொனிப்பொருளிலில் இந்த மாநாடு நடைபெறுக…

  19.  சனி 27-01-2007 17:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழ் ஊடகவியளாளர் கைது – சுதந்திர ஊடக அமைப்பு விசனம் மௌனசாமி பரமேஸ்வரி என்ற தமிழ் ஊடகவியலாளரை நீண்டகாலமாக குற்றச்சாட்டு எதுவும் இன்றி தடுத்துவைக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டித்திருக்கும் சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்டிருக்கும் பத்திரிகைக் குறிப்பு ஒன்றில் இது சிறீலங்கா இராணுவமயப்படுத்தப்பட்ட அரசாக மாறிவருவதையும் அத்துடன் இலங்கையில் பாரிய மனித உரிமைகள் மீறல் இடம்பெறுவதையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. இக் கைதும் தடுப்புக்காவலும் தங்களை மிகுந்த விசனத்துக்கு உள்ளாக்கியிருப்பதாக மேற்படி அமைப்பு கண்டணம் வெளியிட்டுள்ளது. pathivu.com

  20. சனி 27-01-2007 16:12 மணி தமிழீழம் [சிறீதரன்] தமிழ்தேசிய கூட்டமைப்பு நோர்வே தூதுவர் சந்தித்து பேச்சு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு தலைவர் இரா சம்பந்தர் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிட்ஸகரை சந்தித்து பேசியுள்ளார் நேற்று நோர்வே தூதவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா படைகள் மேற்கொண்டு வரும் வலிந்த தாக்குதல்கள் குறித்தும் இதன் காரணமாக அப்பாவி பொது மக்கள் தொடச்சியாக அனுபவித்து வரம் இன்னல்கள் குறித்தும் நோர்வே தூதுவருக்கு விளக்கி கூறப்பட்டுள்ளது இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கருத்து தெரிவித்த நோர்வே தூதுவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனும் தமிழீழு விடுதலைப் புலிகளுடனும் தாங்கள் விரைவி…

  21. கொழும்பு துறைமுக தாக்குதல் முறியடிப்பு: சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் தகவல் சிறிலங்கா தலைநகரில் உள்ள கொழும்பு துறைமுகத்தைத் தாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சி ஒன்றைத் தாம் இன்று காலையில் முறியடித்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்துள்ளன. அதிவேகப் படகுகள் மூலம் வந்து துறைமுகத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் முற்பட்டதாகவும், இவ்வாறு விடுதலைப் புலிகள் வந்த படகுகளில் ஒன்று கடற்படையினரது தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டதாகவும் படைத் தரப்பினர் தெரிவித்தனர். மூன்று படகுகளிலேயே விடுதலைப் புலிகள் வந்ததாகவும், அவற்றில் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய இரண்டு படகுகள் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டதாகவும…

    • 0 replies
    • 883 views
  22. கிழக்கு நிலை தொடர்பாக கண்காணிப்புக் குழு சிறப்பு அறிக்கை வெளியிடுகிறது [சனிக்கிழமை, 27 சனவரி 2007, 08:43 ஈழம்] [அ.அருணாசலம்] "கிழக்கு மாகாணத்தில் தற்போது தோன்றியுள்ள மிகவும் வன்முறையான சூழ்நிலை மற்றும் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வரும் கடுமையான மோதல்கள் குறித்து விரைவில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட உள்ளதாக" இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமர்சன் தெரிவித்துளதாவது: "கடந்த சில மாதங்களாக சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கிழக்கு மாகாணத்தில் பெரும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இம்மோதல்களினால் கிழக்கு மாகாணத்தில் தோன்றியுள்ள வன்முறை தொடர்பாக நாங்…

    • 4 replies
    • 1.2k views
  23. தினக்குரலுக்கு வலை வீசும் அமெரிக்கா ...தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி விழுவாரா ? Friday, 26 January 2007 இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்கத் தூதரகத்தின் பத்திரிகைத் தொடர்பு, கலாசார விவகார கவுன்சிலர் ரெறி ஜே.வைற் சகிதம் தினக்குரல் தலைமையகத்துக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்தார். அவர் தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி, நிருவாக இயக்குநர் எஸ்.பி.கணேசராஜா, இயக்குநர் எஸ்.பி.கேசவராஜா, பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் மற்றும் ஊடக ஆலோசகர் ஈ.வீ.டேவிட் ராஜூ ஆகியோருடன் அளவளாவுவதைக் காண்கிறீர்கள். ... தினக்குரலுக்கு வலை வீசும் அமெரிக்கா ...தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி விழுவாரா ? http://www.sooriyan.com/index.php?opt…

  24. அனல் மின் நிலையம் நிறுவும் ஏற்பாடு இந்தியக் குழு திருமலை சென்று ஆய்வு கொழும்புஇ ஜன. 27 சம்பூர் அனல்மின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக நேற்றுமுன்தினம் இந்தியக் குழுவொன்று திருமலை சென்று ஆய்வு நடத்தியது. இத்திட்டத்திற்கென மூதூர் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் ஐந்நூறு ஏக்கர் நிலத்தை ஒதுக்க அரசு தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஐந்நூறு ஏக்கர் நிலம் அங்கிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமானது என்றும் இந்த நிலச்சுவீகரிப்பால் இந்த இடங்களில் உள்ள அறுநூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களை நிரந்தரமாக இழப்பர் என…

  25. உண்மையை உணர்ந்து செயற்படுங்கள் - மக்கள், மாணவருக்கு படையினர் வேண்டுதல். சாவகச்சேரியிலும் மானிப்பாயிலும் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; மாணவர்கள் காயமுற்றனர். விடுதலை விரும்பிகள் எனக் கூறிக்கொள்ளும் புலிகளின் இலக்கு அப்பாவி மக்களா? மக்களும் மாணவர்களும் உண்மை என்ன என்பதை உணர்ந்து இவ்வாறான செயல்களுக்கு உடந்தையாக இருக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் அறிக்கை ஒன்றை யாழ்ப்பாணம் 51 ஆவது படைப்பிரிவு வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலி உறுப்பினர்களின் பாதகச் செயல்களால் குடாநாட்டில் பொதுமக்களின் உயிர்கள் பலிகொள்ளப்படுவதாகவும் அதனால் மக்கள் சொல்லொண்ணாக் கஷ்டங்களை அனுபவிப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. தமக்கு எதிரானவ…

    • 1 reply
    • 896 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.