Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பில் டெங்கினால் இளைஞர் உயிரிழப்பு : ஒரே நாளில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி Published By: NANTHINI 19 FEB, 2023 | 01:42 PM மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 22 வயது இளைஞரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். அத்துடன் குறித்த மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மட்டும் 14 பேர் டெங்கு நுளம்பு நோய்த் தாக்கத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: ஏறாவூர் ஜய…

  2. “13” முழுமையாக அமுலாக இடமளியோம்! – பிக்குகள் எச்சரிக்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் கூட அதனை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், இதனைச் செய்வதற்கு முற்படும் ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகளின் அரசியல் முகவரியும் இல்லாது செய்யப்படும் எனவும் அவர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். ஊடகவியலாளர்களை சந்தித்தவுடன் நடைபெற்ற நேர்காணலின்போதே உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் இவ்வாறு அறிவித்துள்ளனர். அக்மீமன தயாரத்ன தேரர் ஹெல உறுமயவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக …

  3. “சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நூல்கள் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. சபாநாயகர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நூல்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் கலந்து கொண்டிருந்தார். …

  4. அமைதிப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையை பாதுகாப்பதில் முன்னிறுத்தி செயற்படுங்கள் - அமெரிக்கத் தூதுவர் Published By: DIGITAL DESK 5 21 FEB, 2023 | 08:48 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்குமாறு இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிப்பதன் ஊடாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படுவதற்குப் பங்களிப்புச்செய்யவேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. வெளிநாடொன்றில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திரியான ஜுலி சங், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், அதற்குரிய நியமங்களையும் பாதுகா…

  5. நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுகிறது? ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார். தற்போது, உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாவனைக்குத் தகுதியற்ற உணவைத் தயாரிக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு பணிபுரியும் நபர்களின் தூய்மை குறித்து ஆராய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுவதாக பொது சுகாதார பரிச…

  6. நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை – ரணில் நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். 20வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் காலத்தை இரண்டரை வருடங்களாக குறைத்துள்ளதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் இதன்போது தெரிவித்துள்ளனர். எனினும் அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் அதனை நான்கரை வருடங்களாக அதிகரித்ததாகவும் அது குறித்து 22ஆம் திருத்தச்சட்டத்தில் எந்தவித திருத்தமும் மேற்க…

  7. நாடாளுமன்றத்திற்குள் எதிர்கட்சியினர் போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1324788

  8. இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்குவதாக அறிவித்தது சீனா ! இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் உத்தரவாதம் இல்லாமல், இலங்கைக்கு உதவுவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் ப்ளூம்பெர்க் தெரிவித்ததை அடுத்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன. இந்நிலையில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நிலுவையில் உள்ள கடனை நீடிக்க தாம் விருப்பம் தெரிவித்துள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையின் கடன் நிலைத்தன்மையை ஆதரிக்கும் கடிதத்தை சீனா ஏற்கனவே வழங்கியு…

  9. பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக சேரும் மாணவர்களுக்கு உறுதிமொழிச் சான்றிதழ்! Published By: T. Saranya 21 Feb, 2023 | 11:42 AM மாணவர்களிடம் உறுதிமொழிச் சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க மாட்டோம், பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தை ஏற்படுத்தப் போவதில்லை என உறுதிமொழிச் சான்றிதழில் கையொப்பம் பெறப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் நுழைவ…

  10. இலங்கையிலிருந்து வெளியேறும் ஜப்பான் நிறுவனங்கள் ஜப்பான் தாய்சே மற்றும் மிட்சுபிஷி(Mitsubishi) நிறுவனங்கள் இலங்கையிலுள்ள தமது அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு குறித்த நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. மிட்சுபிஷி நிறுவனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகம் எதிர்வரும் மார்ச் மாதம் மூடப்படவுள்ளதுடன் தாய்சே நிறுவனத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் அயல் நாடுகளின் பிரதிநிதிகளால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. R https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இலங்கையிலிருந்து-வெளியேறும்-ஜப்பான்-நிறு…

  11. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? புலிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சொல்வது என்ன? #Exclusive பட மூலாதாரம்,STR/AFP VIA GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" என பழ. நெடுமாறனும் கவிஞர் காசி ஆனந்தனும் அறிவித்தது இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த அறிவிப்பிற்கான பின்னணி என்ன என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்கிளப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளரும் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தயா மோகன் பிபிசி தமிழ் செய…

  12. தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் – மாவை சேனாதிராஜா இனப்பிரச்சினை, நில விடுவிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அழுத்தங்களை பிரயோகிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றாகவே செயற்படுவோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் அரசியலமைப்பின்படி தமிழரசு கட்சியின் கீழ் தான், கூட்டமைபின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா, தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில் கூட்டமைப்பாக இல்லாமல் தனித்தனியாக போட்டியிட்டு சிறு வாக்குகளால் விகிதாசாரத்தில் வந்து ஆட்சி அமைப்பதை தவிர்க்கும் வகையிலேயே தந்திரமாக போட்டியிடுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார். கிளிநொச…

    • 3 replies
    • 797 views
  13. ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை இலங்கையில் இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் நாட்டில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும், தடையை தளர்த்துமாறு ஜேர்மனி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி தடை நீடித்தால் சில நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜரமன-வடததளள-எசசரகக/175-312593

  14. மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் பெயரிலுள்ள படை முகாம் அகற்றப்பட வேண்டும் – சாணக்கியன்! மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் பெயரில் படை முகாம் எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் – 2023 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேட்பாளர்கள் அறிமுகத்துடனுன் தேர்தல் பரப்புரை மக்கள் கூட்டம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்த பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வீதியின் …

    • 3 replies
    • 478 views
  15. சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்தார் இந்திய இந்துமக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் Published By: T. SARANYA 20 FEB, 2023 | 06:50 PM இந்தியாவின் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தனை அவரது வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலில் இலங்கை - இந்தியா உறவுகளை வலுப்படுத்தி எதிர்காலத்தில் ஆற்ற ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும்…

  16. பஷில் ராஜபக்ஷ தலைமையில் விசேட கூட்டம் Published By: DIGITAL DESK 5 20 FEB, 2023 | 08:43 PM (இராஜதுரை ஹஷான்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செவ்வாய்க்கிழமை (21) பகல் பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தையில் உள்ள உத்தியோகப்பூர்வ காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அநுராதபுரம்நகரில் நடத்த தீர்மானிக்கப்பட்டடிருந்தது. தபால்மூல வாக்கெடுப்பு பிற்போடப்பட்டதை தொடர்ந்து மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தே…

  17. 6 ஆண்டுகளாக கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் Published By: DIGITAL DESK 5 20 FEB, 2023 | 06:39 PM கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் அதை நினைவு படுத்திய போராட்டம் ஒன்று (20) இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து ஏழாவது ஆண்டு ஆண்டில் கால் பதிக்கின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங…

  18. கொக்குத்தொடுவாயில் சிறுபான்மை கால்நடை வளர்ப்பாளரை கட்டிவைத்து தாக்கிய பெரும்பான்மையின திருடர்கள் ! Published By: VISHNU 20 FEB, 2023 | 07:43 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், சிவந்தாமுறிப்பு பகுதியில், தமிழ் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் பெரும்பான்மை இனத்தவர்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். பெரும்பான்மை இனத்தவர்கள் குறித்த தமிழ் கால்நடைவளர்ப்பாளருக்குச் சொந்தமான கால்நடைகளைத் திருடமுற்பட்டதாகவும், குறித்த திருட்டுமுயற்சியைத் தடுக்கும்போதே தாம் பெரும்பான்மை இனத்தவர்களால் கட்டிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் குறித்த கால்நடை வளர்ப்பாளர் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்துவ…

  19. வடக்கும் கிழக்கும் மோடியின் கைகளில்! – அண்ணாமலை தெரிவிப்பு இலங்கையைப் பொறுத்தவரையில் வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. மோடியையே அந்த மாகாணமக்கள் நம்பியிருக்கிறார்கள். ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம்.13 ஆவது திருத்தமே தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதற்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.” – இவ்வாறு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் தமிழகம் சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இலங்கை இனப்பிரச்சினைக்கு 13ஆவது அரசியல் திருத்தம் நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும்,…

  20. “வைக்கோல் பட்டறை நாய்” என கூறிய உறுப்பினரின் ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்த யாழ்.மாநகர முதல்வர்! யாழ்.மாநகர சபையில் சிலர் “வைக்கோல் பட்டறை நாய்” போல செயற்படுகின்றார்கள் என சக உறுப்பினர் கூறியதை கண்டித்து அவரை சபையில் இருந்து வெளியேற்றி அவரது ஒரு மாத சம்பளத்தையும் இரத்து செய்துள்ளனர். யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்(வியாழக்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, சபையில் உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி “சபையில் சிலரின் செயற்பாடுகள் வைக்கோல் பட்டறை நாய்” போன்றுள்ளது என கூறியிருந்தார். அதனால் சபையில் சில உறுப்பினர்கள் கடும் ஆவேசமடைந்து அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து “வைக்கோல் பட்டறை ந…

  21. பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றியிருந்தால் நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது – ஜனா பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடந்த காலங்களில் 50 இற்கு மேற்பட்ட ஊடக…

  22. ஸ்ரீலங்கன் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SRI LANKAN AIRLINES இயந்திர கோளாறு ஏற்பட்ட 3 விமானங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக, தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அண்மையில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் …

  23. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை Published By: NANTHINI 19 FEB, 2023 | 04:19 PM (எம்.ஆர்.எம்.வசீம்) உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாமல் போனால் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் ஏற்கனவே முடிவடைந்திருந்த நிலையில், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அரசியலமைப்பின் ஊடாக விதிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைய ஒரு வருடகாலத்துக்கு ஆட்சி காலம் நீடிக்கப்பட்டிருந்…

  24. வடக்கில் திடீரென தோன்றிய சிவலிங்கம் சிவராத்திரி நாளான நேற்று (19) சனிக்கிழமை, நாட்டிலுள்ள பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில், யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி - முடங்குதீவுப் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரி விரதம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. எனினும், குறித்த சிவலிங்கம் வெள்ளிக்கிழமை இரவு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதி ஊடாகப் பயணிப்போர் வாகனங்களில் இருந்து இறங்கி சிவலிங்கத்துக்குப் பூ வைத்து, கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்து வழிபட்டுச் செல்கின்றனர். https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடக்கில்-திடீரென-தோன்றிய-சிவலிங்கம்/7…

  25. இந்திய விசா விண்ணப்ப மையம் மீண்டும் நாளை திறக்கப்படும் தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பில் உள்ளஇந்திய விசா விண்ணப்ப மையம், நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசா மற்றும் பிற சேவைகளுக்கான விசா விண்ணப்ப மையம் நாளை முதல் வழமையாக இயங்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 15ஆம் திகதியன்று, இரவு எழுந்த பாதுகாப்பு சிக்கல் காரணமாக, இந்திய விசா விண்ணப்ப மையம், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/240609

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.