ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
கொழும்பில் செப்ரெம்பர் 4 ஆம் நாள் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆவது ஆண்டு மாநாட்டின் போது திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த சம்பூரை அரச படைகள் மீளக் கைப்பற்றியதை அறிவித்த போது இடிமுழக்கமான கைதட்டல்கள் எழும்பின. அப்போது ராஜபக்ச கூறினார்: "நமது ஆயுதப்படைகள் சம்பூரை கைப்பற்றியது அங்கு வாழும் மக்களின் நலனுக்காக- நன்மைக்காக" என்றார். இருந்தபோதும் பெரும்பான்மையான ஊடகங்கள் சம்பூர் வெற்றியானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான "இராணுவ" வெற்றியாக முன்னிலைப்படுத்தப்பட்டது. "இராணுவ வெற்றியுடன் சம்பூர் மக்களின் நலனை மையமாக வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக" டெய்லி நியூசில் பிரபல ஊடகவியலாளர் லூசியன் ராஜகருணாநாயக்க எழுதினார்…
-
- 0 replies
- 763 views
-
-
கொழும்புக்கு தென்னிலங்கை பயங்கரவாதிகளால் ஆபத்து: கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை ஜபுதன்கிழமைஇ 4 ஒக்ரொபர் 2006இ 19:10 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு தென்னிலங்கை பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: பொதுமக்கள் மற்றும் ஊடகங்களினால் கொழும்பு நகரில் பயங்கரவாதச் செயல்கள் குறைந்துள்ளமை தொடர்பில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மகிழ்வடைந்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதைச் சீர்குலைக்கும் வகையில் தென்னிலங்கை பயங்கரவாதிகள் செயற்படக் கூடும் என்றும் எச்சரிக்கிறோம். ஊடக நிறுவனங்களின் பிரத…
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளின் வானொலி அலைவரிசையை இரத்துச் செய்ய வழக்கு.10:47:11 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வானொலி அலைவரிசை ஒன்றை நடத்திச் செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த மனுமீதான விசாரணைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31 திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெற உள்ளது. இந்த மனுவை பியசேன திசாநாயக்க என்பவர் தாக்கல் செய்திருந்தார். நோர்வே தூதரகம் ஊடாக இந்த வானொலி கருவிகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். நன்றி :அதிர்வு.கொம்
-
- 4 replies
- 3.1k views
-
-
இன்றும் வான் குண்டுவீச்சு தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறிலங்கா விமானப் படையினர் இன்றும் வான் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று புதன்கிழமை காலை 9.15 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இத்தகைய தாக்குதல்கள் மூலம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஈடுபாடு கேள்விக்குறியாக உள்ளது என்றார். "எமது அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் நேற்று செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த போது பூநகரி பகுதியில் சிறிலங்கா விம…
-
- 2 replies
- 1.3k views
-
-
யுத்த வலயத்திலிருந்து இரு வெள்ளையர்களின் உடல்களை மீட்டதாக அரசாங்கம் அறிவிப்பு. யுத்த வலயத்தில் இருந்து இரண்டு வெள்ளையர்களின் உடலங்களை கைப்பற்றி இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (Hindustan Times) ஹிண்டுஸ்தான் ரைம்ஸ் நாளேட்டிற்கு செவ்வி வழங்கியிருக்கும் சிறீலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளின் கூலிப் படையினர் எனக் கருதப்படும், இரண்டு வெள்ளையர்களின் உடலங்களை யுத்த வலயத்தில் இருந்து சிறீலங்கா பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவு
-
- 2 replies
- 2k views
-
-
அதிகமாக மகிழ்ச்சியடைய வேண்டாம்- பாரதூரமான தாக்குதலுக்கு பிரபாகரன் தயாராகிறார்-எல்லாவல மேதானந்த தேரர் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். கிழக்குப் பிரதேச பயணத்தை முடித்து விட்டு கண்டி திரும்பிய அவர் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்ச்சியில் பேசியதாவது: மாவிலாறு மற்றும் சம்பூர் வெற்றிகளால் மிக அதிகமாக நாம் மகிழக் கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளானது பாரிய பாரதூரமான தாக்குதல் ஒன்றுக்கு பிரபாகரன் தயாராவதையே வெளிப்படுத்துகி…
-
- 4 replies
- 1.9k views
-
-
சிங்களவர்களின் வாகனங்களிலேயே கொழும்பில் வர்த்தகர்கள் கடத்தல். கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு மிகப் பெருந்தொகை பணம் அறவிடப்பட்டு வரும் சம்பவங்களின் சூத்திரதாரி பற்றி, இந்த ஆட் கடத்தல் தொடர்பாக கொழும்பு கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ் குழு ஒன்றின் உறுப்பினரான இவர் தொடர்பாக ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலை கொட்டாஞ்சேனையில், புறக்கோட்டை மீன்கடை வர்த்தகரொருவரின் குடும்பத்தினரிடமிருந்து 25 இலட்சம் ரூபா பணத்தைக் கப்பமாக பெறவந்த நால்வரில் ஒருவரை, தகவலொன்றின் பேரில் பொலிஸார் துரத்திப் பிடித்து கைது செய்தனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இவரிடமிருந்து கொழும்ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே சிறப்புத் தூதுவர் மற்றும் நோர்வே தூதுவரைக் கொண்ட குழுவினரை இன்று சந்தித்து நாங்கள் விரிவாகக் கலந்துரையாடினோம். இன்றுள்ள நிலைமைகள் மற்றும் சர்வதேச கரிசனை…
-
- 1 reply
- 1.5k views
-
-
மட்டு. புல்லுமலை மோதலில் 11 போராளிகள் வீரச்சாவு: இ.இளந்திரையன் ஜசனிக்கிழமைஇ 30 செப்ரெம்பர் 2006இ 18:50 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலையில் உள்நுழைந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று நடத்திய தாக்குதலில் 11 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இணைத் தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கமைய அனைத்து பதில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக நோர்வே அனுசரணையாளர்களுடாக நாம் தெரிவித்துள்ள நிலையில் எமது நிர்வாகப் பகுதியான புல்லுமலைக்குள் உள்நுழைந்து வலிந்த தாக்குதலை சிறிலங்கா அதிரடிப்படையினர் இன்று சனிக்கிழமை அதி…
-
- 32 replies
- 7.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்ச உத்தரவின்படி பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும் ஆசிரியர்களும் மாணவர்களும் செல்லவில்லை. சிறிலங்கா ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஜோசெப் ஸ்ராலின் கூறியதாவது: யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகளால் மாணவர்களால் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது. யாழ். நிலைமைகளில் வீதிகளில் நடமாடக்கூட அவர்கள் அஞ்சுகின்றனர். தற்போதைய நிலைமைகளால் பாடசாலை மாணவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக யாழில் வரிசையில் காத்து நிற்கின்றனர். சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பாடசாலைகளைத் திறப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுப்பதாகக் கூறி மகிந்த ராஜபக்ச இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் முகமாலை மற்றும் ஓமந்தை ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
வலிந்த தாக்குதலை- யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலகல்: நோர்வேத் தூதுவரிடம் புலிகள் தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே சிறப்புத் தூதுவர் மற்றும் நோர்வே தூதுவரைக் க…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தியாவின் நாசவேலையால் ஜயந்த தனபால விலகல்: சிறிலங்கா குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தேர்தல் போட்டியிலிருந்து ஜயந்த தனபால விலகியமைக்கு இந்தியாவின் நாசவேலையே காரணம் என்று சிறிலங்கா தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார பிரதிச் செயலாளரும் சிறிலங்காவின் தூதுவராக பணியாற்றியவருமான நந்த கொடகெ இது குறித்து கூறியுள்ளதாவது: எமக்கு எதிராக இந்தியா நாசவேலை செய்துவிட்டது. சசி தாரூரை போட்டியில் நிற்க வைத்ததே எம்மை வெளியேற்றத்தான். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவியை நாம் பெற்றிருந்தால் நமது பாதுகாப்பு, இறைமை மற்றும் சுதந்திரம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவோ சிறிலங்காவை ஒரு பலவீனமான நாடாகவே வைத்திருக்க…
-
- 3 replies
- 1.8k views
-
-
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பும் முஸ்லிம் தலைமையின் முரண்பாடும் எம்.ஏ.எம்.நிலாம் கிழக்கில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் மோசமான சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்தை மிக ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவனவாகவே அமைந்துள்ளன. மூதூர் சம்பவங்களின் வேதனை அகன்றுவிடுவதற்கு முன்னர் பொத்துவில் இளைஞர்களின் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இத்தனையையும் இனவாதச் சக்திகளே பின்னணியில் நின்று செய்திருப்பது இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையிலும் அரசாங்கம் விவகாரத்தை திசைதிருப்பி முஸ்லிம் சமூகத்தை முட்டாள்களாக்கப் பார்க்கின்றது. இதற்கு அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சில முஸ்லிம் தலைமைகளும் கொடி தூக்குவது முஸ்லிம் சமூகத்தை மேலும் வேதனைக்குள் தள்ளியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் இருப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவுக்கான போட்டி இவ்வருட இறுதியுடன் தனது பதவிக்காலத்தை முடிவுசெய்யும் கொபி அனானுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்வதற்கான பந்தயம் முடிவுக்கட்டத்தை எட்டியிருக்கின்றது. வேட்பாளர்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவை அறிந்து கொள்வதற்காக ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகள் மத்தியில் நடத்தப்படும் பரீட்சார்த்தமான முறைசார வாக்கெடுப்பின் (ஸ்ட்ரந் Pஒல்ல்ச்) நான்காவது சுற்று இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது. கடந்த வியாழனன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று வாக்கெடுப்பில் 13 ஆதரவு வாக்குகளையும் ஒரு எதிர்ப்பு வாக்கையும் எந்த அபிப்பிராயத்தையும் தெரிவிக்காத ஒரு வாக்கையும் பெற்ற தென்கொரிய வெளியுறவு அமை…
-
- 0 replies
- 663 views
-
-
கடத்தல்களுக்கு காரணமான துணை இராணுவக்குழுக்களின் ஆயுதங்களைக் களைக: மக்கள் கண்காணிப்புக் குழு கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கடத்தல் சம்பவங்கள் உள்ளிட்ட நீதிக்கும் புறம்பான படுகொலைகளுக்குக் காரணமான சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் கண்காணிப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சிறிதுங்க ஜயசூர்ய கூறியுள்ளதாவது: சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையின் படியே கடத்தல்களும் படுகொலைகளும் மிகவும் மோசமாக உள்ளது. கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்டோருக்கும் தமிழீழ விடுதலைப் புல…
-
- 0 replies
- 1.1k views
-
-
முற்பிறவியில் தான் தமிழ்ப்பெண் எனக்கூறும் சிங்கள மாணவன். சிங்கள மொழி மறந்து தமிழில் உரையாடும் இவர் மருத்துவமனையில் அனுமதி நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களச் சிறுவன் ஒருவர் தான் முற்பிறவியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜி என்ற பெண் எனத் தெரிவித்துள்ளார். கந்தானை வித்தியாலோக மகாவித்தியாலையத்தில் கல்வி பயிலும் இந்த சிங்கள மாணவர் கடந்த 25 ஆம் திகதி முதல் தான் பெண் எனத் தெரிவித்து யாழ்ப்பாண யுத்தம் தொடர்பாக தமிழில் பேசி வருவதாக பாடசாலையின் அதிபர் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கொச்சிக்கடை காவற்துறையினர்இ இந்தச் சிறுவனின் பெற்றோர் சிங்களவர் எனவும் இவர்கள் கந்தானை கபல்லகஸ் சந்திப்…
-
- 28 replies
- 6.9k views
-
-
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 8 replies
- 4k views
-
-
மூதூரில் பிரசுரம் வீசியது புலிகள் அல்ல: கண்காணிப்புக் குழு மூதூர் முஸ்லிம்களை வெளியேறுமாறு கோரி துண்டுப் பிரசுரங்களை வீசியது விடுதலைப் புலிகள் அல்ல என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக் குழுவினரின் கடந்த வார அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மூதூரில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. மூதூரில் மீளக் குடியேறுமாறு சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். http://www.eelampage.com/?c…
-
- 6 replies
- 2.1k views
-
-
புலிகளின் "விடுதலை"க் கனவு என்பது கனவாகத்தான் இருக்கும்: பாலித கோகென்ன ஞாயிற்றுக்கிழமை 1 ஒக்ரொபர் 2006இ 19:32 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் "விடுதலை" கனவு என்பது கனவாகத்தான் இருக்கும் என்று சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன கூறியுள்ளார். ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு பாலித கோகென்ன அளித்த நேர்காணல்: பேச்சு மேசைக்குத் திரும்புவதாக அரசாங்கம் தொடர்ந்து கூறிவருகிறது. ஒக்ரோபர் ஓஸ்லோப் பேச்சுக்களை நடத்துவது தொடர்பில் நோர்வே அணுசரணையாளர்களுடன் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறோம். ஆகையால் நிச்சயமாக பேச்சுக்கள் நடைபெறும். ஆனால் ஒரே வருத்தம்... இந்த சமாதான காலத்தைப் பயன்படுத்தி போர் நடவடிக்கைகள் மற்றும் ஆட்சேர்ப்பு- ஆயுதக்குவிப…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமைச்சராவதைவிட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தினால் அது சரிதான்: ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க [ஞாயிற்றுக்கிழமை, 1 ஒக்ரொபர் 2006, 07:36 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் பொதுமக் கள் பணத்தை கொள்ளையடிக்கும் காடைத்தனமான அமைச்சராவதை விட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தியிருந்தால் அது சரியானதுதான் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். சோமவன்ச அமரசிங்கவின் சகோதரியின் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சோதனையிடப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் ஆண் பாலியல் தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையேயான வார்த்தை ய…
-
- 12 replies
- 2.6k views
-
-
சிறு குழந்தையின் வலதுகால் விரலில் காயம் இடதுகால் விரல் நகத்தை அகற்றிய டாக்டர் கைது Saturday, 30 September 2006 -------------------------------------------------------------------------------- சிறுகுழந்தை ஒன்றின் வலதுகாலில் காயமடைந்த விரல் ஒன்றின் நகத்தை அகற்றுவதற்கு பதிலாக குழந்தையின் இடதுகால் விரலின் நகத்தைக் கழற்றிய தம்புள்ள வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை தம்புள்ள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்துள்ளனர். தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த சிறு குழந்தையின் வலது காலில் இரும்பு உபகரணம் ஒன்று விழுந்ததால் விரல் ஒன்று நசுங்கி காயமேற்பட்டது. இதையடுத்து இக்குழந்தையின் தாய் குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார். இரவு ந…
-
- 1 reply
- 1.7k views
-
-
என் அனுபவத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகம் புறக்கணித்துவிட்டது: ஜயந்த தனபால [ஞாயிற்றுக்கிழமை, 1 ஒக்ரொபர் 2006, 06:20 ஈழம்] [ச.விமலராஜா] ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் வெற்றி பெறுவதற்கான எதுவித சாத்தியமும் இல்லாத நிலையில் விலகிக் கொண்ட சிறிலங்காவின் ஜயந்த தனபால தான் விலகியமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு திரும்பிவிட்ட ஜயந்த தனபால இது தொடர்பில் கூறியுள்ளதாவது: என்னுடைய அனுபவத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகம் புறக்கணித்துவிட்டது. அதனால் இயற்கையாகவே வருத்தம் ஏற்படும். ஒரு தொழில்முறை சார் நெறிமுறைகள் சார் மிகக் குறைந்த திட்டமிடலில் நான் எனது வேட்பாளருக்கான தகுதிகளை முன்வைத்தேன். வேட்பாளர் போட்டிய…
-
- 1 reply
- 1.4k views
-
-
நோர்வே "கல்யாண தரகர்" வேலை மட்டும்தான் பார்க்க வேண்டும்: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களுக்கான "கல்யாண தரகராக" உள்ள நோர்வே அந்த வேலையை மட்டும்தான் பார்க்க வேண்டும்- கல்யாண நாள் மற்றும் இடம் பார்ப்பது அதன் வேலை இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க சாடியுள்ளார். இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: அமைதியை உருவாக்க வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினால் இடைத்தரகர்கள் எவரும் இல்லாமல் நேரடியாக பேச்சுக்கு வர வேண்டும். பயங்கரவாதிகள் வலு இப்போது குறைந்துவிட்டது. இதற்கு முன்னைய காலங்களிலிருந்து நாம் பாடங்களைப் பெற்றுள்ளோம…
-
- 6 replies
- 2k views
-
-
சிறிலங்கா அராசங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தாளை எடுத்து கைப்பட எழுதிக் கொடுத்தால்தான் பேச்சுக்கள் என்ற எமது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: கடந்த 23 ஆண்டுகால வரலாற்றில் அமைதிப் பேச்சுக்கள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளனர். ஆனால் தனது நிலைப்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகிக் கொண்டதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய சூழ்நிலையால் பிரபாகரன் கூடுதலான பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறார். நோர்வே அமைதி அனுசரணையாளர்களைக் க…
-
- 3 replies
- 2.2k views
-
-
வவுனியாவில் உயிரிழந்த முல்லைத்தீவு மாணவியின் சடலம் வவுனியாவில் வைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானக்குண்டுத் தாக்குதலில் காயமடைந்து, கண்டியில் சிகிச்சை பெற்று, வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மரணமடைந்த மாணவியின் உடல் இன்னும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த விமானக்குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் மூன்று மாணவிகள் வவுனியா வைத்தியசாலை ஊடாக கண்டிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக வவுனியா வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டு கண்டி பொலிசாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூவரில், ஒர…
-
- 0 replies
- 1.1k views
-