Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவில் 16 குண்டுகளின் சிதறல்களிடையே சிக்கி மரண ஓலம் எழுப்பி நம் பிஞ்சுப் பிள்ளைகள் மாண்டுபோய்விட்டன. மகிந்தவும் அவரது பரிவாரக் கும்பல்களும் மீண்டும் தமது "சிந்தனாக்களை" தமிழ்ப் பிஞ்சுகளின் இரத்தத்தால் எழுதியுள்ளன. முதலுதவி பயிற்சி நெறிக்காக திரண்டுநின்ற அப்பாவி பாடசாலை சிறுமிகளுக்கு ஈவிரக்கமற்ற சிங்களப்படைகள் முடிவெழுதி சென்றிருக்கின்றன. தமது மக்களுக்கு தண்ணீர் தேவையென்பதற்காக தமிழரின் இரத்தத்தை கறக்கும் இனவெறி பிடித்த பௌத்த மேலாதிக்க இனக் கழுகாக உருவெடுத்துள்ள மகிந்த, முன்பிருந்த சந்திரிகாவின் மறு அவதாரமாக வெளிப்பட்டு நிற்கிறார். அன்று நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது ஏழு குண்டுகளை சந்திரிகா வீசினார். இன்று முல்லை செஞ்சோலை மீது 16 க…

  2. நாளை தமிழீழத் தேசிய துயர நாள் [திங்கட்கிழமை, 14 ஓகஸ்ட் 2006, 20:41 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா விமானப் படையின் கொடூர குண்டுவீச்சில் பாடசாலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து நாளைய நாள் தமிழீழத் தேசிய துயர நாளாகக் கடைபிடிக்கப்பட உள்ளது. தமிழீழத் தேசியத் துயர நாள் அறிவிப்பை தமிழீழ கல்விக்கழகம் அறிவித்துள்ளது. http://www.eelampage.com/?cn=28183

    • 2 replies
    • 1.3k views
  3. அனைவருக்கும் எனது வணக்கம் முதலில்... சிறுவர்களை கொடூரமாகக் குண்டுபோட்டு கொன்றழித்த சிறிலங்கா அரசின் மிருகத்தனமான செயலை ஐரோப்பிய ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடைப்பாடு உள்ளவர்களாக நாங்கள் இருக்கிறோம். இந்தச் செய்தி ஊடகங்களில் திட்டமிட்டே மறைக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே யேர்மனியில் உள்ள உறவுகள் பின்வரும் யேர்மன் ஊடகங்களோடு இன்றே தொடர்புகளை மேற்கொண்டு தாயகத்தில் நடந்த இந்த கொடூர நிகழ்வைத் தெரியப்படுத்துங்கள். குறிப்பாக அவர்களது தொலைக்காட்சிச் செய்தியில் கட்டாயமாக இச்செய்தியை இணைத்துக்கொள்ளுமாறும் சொல்லுங்கள். ஆதாரமான இணையத்தளச் செய்தி இணைப்புக்களையும் கொடுங்கள். வீடியோப் பதிவுக்கு தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தை அணுகுமாறும் கூறுங்கள். …

  4. வலிகாமத்தில் தற்காலிகமாக ஊரடங்கு தளத்தப்பட்டு மீண்டு அமுலுக்கு வந்தது. யாழ் குடாநாட்டில் இன்று வலிகாமம் பகுதியில் தற்காலிகமாக முற்பகல் 10 மணிமுதல் 12.30 வரை நீக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் பலாலி தற்போது மீண்டும் அமுலுக்கு வந்தள்ளது. எனினும் 1 மணிமுதல் 3.30 வரை வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளிலும் தளர்த்தப்படும் என பலாலி படைத் தலைமையகம் அறிவித்திருந்தபோதும் பின்னர் அது ரத்தச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது குடாநாடு முழுவதுமாக மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமூலுக்கு வந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://twogermany.com/Pathivu/index.php?su...t_from=&ucat=1&

    • 3 replies
    • 1.2k views
  5. திங்கள் 14-08-2006 19:43 மணி தமிழீழம் [மயூரன்] மூன்று கட்டங்களாக கண்காணிப்புக் குழு வெளியேறும் - பாலித கோஹோண மூன்று கட்டங்களாக போர் நிறுத்த கண்காணிப்பு பணிகளில் விலகி கொள்ள உள்ளதாக போர் நிறுத்த கண்காணிப்பு குழு அறிவித்துள்ளதாக சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோஹோன தெரிவித்தார். முதலாவது கட்டமாக கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் உள்ள தமது பொருட்களை சேகரித்து கொள்ள உள்ளதாகவும் அதன் பின்னர் அனைவரும் கொழுப்பிற்கு வந்து அடுத்த கட்டமாக இலங்கையில் இருந்து வெளியேற உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது முதலாவது கட்டம் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தொடர்ந்தும் கண்காணிப்பு குழுவினரை பணியில் ஈடுபடுமாறு கோரியுள்ளதாகவும் அவர் கூறினார். …

    • 0 replies
    • 1k views
  6. மிருசுவில் பகுதியில் மோதல்கள்: 500 குடும்பங்கள் வடமராட்சிக்கு இடப்பெயர்வு. யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவில் சந்தியையும் தாண்டி நேற்றிரவு கடுமையான மோதல் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல்களை அடுத்து தடைகளையும் தாண்டி மாசேரிப் பகுதியில் இருந்து 500 குடும்பங்கள் வடமராட்சிப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படகிறது. வயல் வெளிகள், பற்றைக் காடுகள், ஊடாக இந்த மக்கள் வெளியேறியதாகவும் தொடர்ந்தும் வெளியேறிவருவதாகவும் இடம்பெயர்ந்து சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். http://twogermany.com/Pathivu/index.php?su...t_from=&ucat=1&

  7. தென்மராட்சி வரணிப்பகுதியில் சிங்களப் படைகளின் கொலை வெறியாட்டம்! ஜ திங்கட்கிழமைஇ 14 ஆகஸ்ட் 2006 ஸ ஜ -பிரவீனா ஸ தற்போது கிடத்த செய்தி ஒன்றின்படி யாழ் தென்மராட்சி வரணிப்பகுதிகளில் சிங்களப்படைகள் பாரிய கொலைவெறித் தாண்டவத்தை ஆடியிருப்பதாக தெரிகிறது. பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வயல்களிலும், வீதிகளிலும் வீசியெறியப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. வரணிப்பகுதி மக்கள் வெளியேற விடாமல் கடந்த சில நாட்களாக சிங்களப்படைகள் தடுத்து வைத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது

  8. தென்னிலங்கை மீது High Security Zone Residents Liberation Force (HZRLF) என்ற அமைப்பு தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு பத்திரிகை ஒன்றூ செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இனி அப்பாவி தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு சிங்கள மக்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளதாக அப்பத்திரிகை மேலும் விபரித்துள்ளது. யாராவது இது பற்றி உண்மை தகவல்கள் அறிந்தீர்களா? http://www.vg.no/pub/vgart.hbs?artid=126520

  9. சண்டையை ஆரம்பிச்சது யார்? ( இலங்கை அரசு அல்லது புலிகள், இல்லை ஜரோப்பிய தடையா?) :roll: ஜரோப்பாவில் புலிகள் தடை செய்யப்பட்டா புலிகள் யுத்தத்தை தொடங்க மாட்டார்கள் என்று சொல்லி தான் ஜரொப்ப சன(ந)யக வாதிகள் புலிகளை தடை செய்தனர் அதால புலிகளும் பயந்து(? :oops: :P ) போய் சண்டைய தொடங்கவில்லை, சண்டையை ஆரம்பிச்சது யார்? அதுக்கு பதில் அடி கொடுthதனர் புலிகள் முதூர் பிடிச்ச பின் வந்தது கண்டங்கள் பல உலக மக சன(நா)யாகவதிகளிம் இருந்து தண்ணீ மூடியது தவறு எல்லோரும் சண்டையை விட்டு விட்டு பழைய இடங்களில் போய் அமருங்கள் என்று சரி புலிகளும் பயந்து போய் திரும்பி போய்விட்டார்கள் தண்ணீயும் விட்டாச்சு சரி தண்ணீதானே விட்டாச்சு ஏன் இராணுவம் மீண்டும் மாவிலாறை பிடிக்க முற்ப…

  10. Buddhist Extremists Attack Christian-Run Children’s Home in Sri Lanka Christian Solidarity Worldwide has reported of attacks by extremist Buddhist monks in Sri Lanka on a children's home in the country run by the Dutch Reformed Church http://www.christiantoday.com/news/south-a...i.lanka/360.htm

  11. புலிகள் அனைவரையும் பொலிஸ் நிலையத்திலோ, இராணுவ முகாம்களிலோ வந்து சரணடையுமாறும் அவர்களை சீர்திருத்தப்பள்ளியில் விட்டு பின் பாதுகாவலரிடம் ஒப்படைப்பதாக இலங்கை வானொலி நேற்றிரவிலிருந்து அறிவித்துக்கொண்டிருக்கிறது.

  12. மீண்டும் மூண்ட போரும் சர்வதேச சமூகமும் [14 - August - 2006] [Font Size - A - A - A] மீண்டும் மூண்டுவிடக்கூடாதென்று கடந்த நான்கு வருடங்களுக்கும் அதிகமான காலமாக நாமெல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த முற்றுமுழுதான போர் ஆரம்பித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். வடக்கு, கிழக்கில் பலமுனைகளில் இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன. இரு தசாப்த கால உள்நாட்டுப் போரின் அவலங்களில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மக்கள் மீண்டும் அதைவிடக் கொடூரமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலநாள் சண்டைகளிலேயே ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடு வாசல்களைவிட்டு இடம்பெயர்ந்திருக்கிறா…

  13. ஜெனரல் விமல் வீரவன்ஸ இராணுவத்தை வழி நடத்துவதாலேயே பெரும் நெருக்கடி நிலை [14 - August - 2006] [Font Size - A - A - A] * சாடுகிறார் ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் செனிவிரட்ண இலங்கை இராணுவத்தை ஜெனரல் விமல் வீரவன்ஸ வழி நடத்துவதால் இராணுவத்தினர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனிவிரட்ண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக் கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகைலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; மாவிலாறு பிரச்சினையை பேச்சு மூலம் தீர்க்க முடியாத அரசு இனப்பிரச்சினையை எவ்வாறு பேசித் தீர்க்கப் போகின்றது? அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல ஒவ்வொரு நாளும் மாவிலாறுக்குப் போவதாக சொல்கிறார்…

  14. வான் புலிகள் தாக்குதல் நடத்துவதாக சங்கதி இணையம் தெரிவித்துள்ளது. http://sankathi.com/content/view/4269/26/

  15. இஸ்ரேலின் பாணியில் இலங்கை தாக்குதல்! [13 - August - 2006] [Font Size - A - A - A] * `சென்னை' புலனாய்வு இதழ் நக்கீரனின் பார்வை இது "ஸ்ரீலங்கா அரசு இனி ஒருமுறை எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையாக அதனை நாங்கள் கருதாமல், பரந்த அளவிலான ஒரு யுத்தத்தை எங்கள் மீது திணிப்பதாகவே கருதுவோம்" என்று எச்சரிக்கை கொடுத்திருந்தார் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன். இவர் இப்படி கூறிய சிலமணி நேரங்களிலேயே பிரச்சினைக்குரிய, மாவிலாறு மதகை திறப்பதற்காகச் சென்ற யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினர் மீதும், புலிகள் தரப்பினர் மீதும் வெடிகுண்டுகளை வீசியது இராணுவம். அதிர்ஷ்டவசமாக இவர்கள் உயிர்தப்ப, மேலும் பதற்றமாகியி…

  16. மூதூரில் படுகொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பிரெஞ் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த 17 ஊழியர்களின் உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம், பாதுகாப்பு அமைச்சு, அவுஸ்திரேலிய தூதுவராலயம், மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் நலன் குறித்து செயல்படுபவர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகளை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களின் பிரேத பரிசோதனை முன்னர் அனுராதபுர சட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி வைத்தியரட்னவினால், மேற்கொள்ளப்பட்டது. பிரேதங்கள் பழுதடைந்த நிலையிலேயே பிரேத பரிசோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டதாக தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி, அதன் காரணமாக கொலைக…

  17. யாழ் குடாநாட்டுக்குள் உள்நுழைந்த விடுதலைப் புலிகள் மீது சிறீலங்காப் படையினர் பல முனைகளில் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் பலத்த மோதல்கள் நடந்துள்ளன. இன்று மாலை 5 மணியளவில் பகுதியில் நடைபெற்ற முன்னேற்ற நடவடிக்கை ஒன்றில் சிறீலங்கா இராணுவத்தினரின் இரு டாங்கிகள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதா விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இதுவரை நடைபெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 22 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

  18. கண்காணிப்புக் குழு மறுப்பு அமைதிப் பேச்சை ஆரம்பிக்கத் தயார் என்று புலிகள் தெரிவித்தனர் என்று கூறப்படும் கோரிக்கை எதனையும் பெற்று அதனை அரசுத் தரப்பிடம் தெரிவிக்கவில்லை என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கிறது. அத்தகைய கோரிக்கை எதனையும் தாங்கள் இலங்கை அரசிடம் தெரியப்படுத்த வில்லை என்று போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தேர்பினோ ஒமர்ஸன் கூறியிருக்கிறார் http://www.uthayan.com/pages/news/today/04.htm

  19. யாழ். இராணுவத் தாக்குதலில் 40 தமிழர்கள் படுகொலை- 100 பேர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 13 ஓகஸ்ட் 2006, 22:50 ஈழம்] [ம.சேரமான்] யாழில் சிறிலங்கா இராணுவத் தாக்குதலில் 40 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலாலி விமான தளத்திலிருந்து அல்லைப்பிட்டி புனித பிலிப் மேரி தேவாலயத்தை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் பல்குழல் உந்துகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் அல்லைப்பிட்டி தீவகப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்நிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மருத்துவமனைக்கு காயமடைந்தோரை எடுத்து வரும் நோயாளர் காவு வாகனங்களை இலக்கு வைத்தும் சிறிலங்கா இரா…

  20. தடுப்பு அணைகள் திறக்கப்படும் காலம் நெருங்கி வருகிறது -இதயச்சந்திரன்- மூதூரில் நடந்து முடிந்த தாக்குதல், பின்னகர்வு போன்ற நிகழ்வுகள் மிகப் பாரியதொரு இராஜதந்திர நகர்வாகக் கருத இடமுண்டு. வெறும் இராணுவ வெற்றி வாய்ப்புக் கண்ணோட்டத்தோடு அணுகினால் ஆழமான அர்த்தங்கள் மலினப்படலாம். அண்மையிலேயே போர் நிறுத்த அனுசரணையாளர்கள் இரண்டாவது தடவையாக பாரிய பொறிக்குள் சிக்குண்டுள்ளார்கள். தாமே விரித்த ஐரோப்பிய ஒன்றியத் தடை வலைக்குள் விழுந்து நிமிர முடியாமல் இன்னமும் தள்ளாடும் நிலையில் மூதூரில் இன்னுமொரு பெரிய பொறி வலைக்குள் மாட்டிக் கொண்டுள்ளார்கள். அத்துடன் ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலைத் துறைமுகத்தையும், அதனைச் சூழவுள்ள பிரதேசத்தை எந்நேரத்திலும்…

  21. கடும் சமரின் கடைசி நிலைவரம் -தெய்வீகன்- நான்காம் கட்ட ஈழப்போர் இன்னமும் களத்தில் ஆரம்பிக்கவி;ல்லையாயினும் தென்னிலங்கை ஊடகங்கள் தற்போதைக்கு தமது ஆத்ம திருப்திக்கு தமது ஊடகங்களில் உத்தியோகப்பற்ற முறையில் ஆரம்பித்து அதற்கு ஆராத்தி எடுத்து வருகின்றன. உண்மையில் களத்தில் நடந்து கொண்டிருப்பது விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அடையாளம் காணப்பட்ட இலக்குகளை அழித்தொழிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவநடவடிக்கையாகும். தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து அங்கு அராஜகங்களையும் அட்டுழியங்களையும் அநீதிகளையும் அரங்கேற்றிவரும் அரச படைகளின் இலக்குகளை இனம்கண்டு அவற்றால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களை முற்கூட்டியே தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள்தான் இதுவாகும். அதனை அர…

  22. கண்காணிப்புக் குழு விலக நேரிடும்: உல்ப் ஹென்றிக்சன் இலங்கையிலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் விலக நேரிடும் என்று அதன் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளதாவது: இலங்கையிலிருந்து போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவை விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு நோர்வேக்கு பரிந்துரைத்துள்ளோம். இருதரப்பும் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக கண்காணிப்புக் குழு விலக்கிக் கொள்ளப்படும். அரசியல் ரீதியாக எம்மை பயன்படுத்த நினைக்கின்றனர். ஆகையால் அவர்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் உ…

    • 3 replies
    • 1.5k views
  23. முகமாலைஎழுதுமட்டுவாள் பகுதிகளில் புலிகளை விரட்ட படையினர் கடுஞ்சமர் முறியடித்துவிட்டதாக புலிகள் அறிவிப்பு முகமாலை நாகர்கோவில் கிளாலி முன்னரங்கப் பாதுகாப்பு அரண்களை ஊடறுத்துக் கொண்டு எழுதுமட்டுவாள் பகுதிக்குள் முன்னேறியுள்ள விடுதலைப் புலிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக அரசுத் துருப்புகள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன என்று களமுனைத் தகவல்கள் தெரி விக்கின்றன. முகமாலை மற்றும் எழுதுமட்டுவாள் பகுதிகளில் இருந்து புலிகளைப் பின்வாங்கச் செய்வதற்கான படை நடவடிக்கை ஒன்றை நேற்று அதிகாலை முதல் அரசுப் படைகள் ஆரம்பித்தன என்று பாதுகாப்புத் தரப்பில் இருந்து அறிய முடிகின்றது. படையினரின் இந்தத் தாக்குதலை தாங்கள் வெற்றி கரமாக முறியடித்துவிட்டனர் என்று விடுதலைப் புலிகள் அறிவித்…

    • 0 replies
    • 1.2k views
  24. யாழ் குடா நிலவரம்!!! தொடர்ந்து மூன்று நாட்களாக போர்களமாக மாறியிருக்கும் யாழ் குடாநாட்டின் உண்மையான நிலவரம் ஒரு மர்மமாகவே தொடர்ந்தும் இருக்கிறது. உண்மையான செய்திகளை அறிய முடியாத நிலையில் வெறும் ஊகங்களும் வதந்திகளும் பரவி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. போர்முனைச் செய்திகளை விடுதலைப்புலிகளும் அடக்கியே வாசிக்கின்றனர். பலாலியில் வான்புலிகளின் தாக்குதல் பற்றியும் விடுதலைப்புலிகள் பட்டும் படாமலுமே கருத்து தெரிவித்திருந்தனர். முகமாலை, மண்டைதீவு சண்டைகள் குறித்தும் பெருமளவிலான தகவல்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து வரவில்லை. சில ராஜதந்திரக் காரணங்களாலேயே விடுதலைப்புலிகள் இவ்வாறு நடந்து கொள்வதாக நம்பப்படுகிறது. சிறிலங்கா அரசு உத்தியோகபூர்வமாக யுத்தப்…

  25. எமது பலமே எமக்கு ஆதாரம் -ஞாலவன்- 1990 இல் ஈராக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து குவெய்த்தை 'விடுவிப்பதற்காக" முழு அளவிலான யுத்தமொன்றை அமெரிக்கப்படைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக, அமெரிக்காவின் பிரபல்யமான தொலைக்காட்சிச்சேவைகளில் எல்லாம் அடிக்கடி ஒரு அரேபியச்சிறுமியின் முகம் காட்டப்பட்டது. அமெரிக்கக்காங்கிரசின் முன்பாகத்தோன்றி குவெய்த்திலுள்ள அல் அடாம் வைத்தியசாலையின் மகப்பேற்றுப்பிரிவில் தாதியாகப் பணிபுரிந்துவந்த நயிரா என்பவளாக சோகத்தில்தோய்ந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவள், தன்னுடைய பராமரிப்பிலிருந்த குழந்தைகளை கண்முன்னேயே ஈராக்கியப்படைகள் கட்டில்களிலிருந்து இழுத்து வெறுந்தரையில் வீசிக்கொன்ற கோரத்தை சித்திரித்தாள். ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.