ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
மாவிலாறு அணைக்கட்டை திறப்பதற்கு நாம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என புலிகள் தெரிவித்துள்ளனர். மனிதபிமான அடிப்படையிலேயே மாவிலாற்று நீரை திறந்து விட தேசியத் தலைவர் பணித்ததாகவும். அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு குழு அமைக்கப்படும் என நோர்வே தூதுவரே தெரிவித்தார் விடுதலைப் புலிகள் அணைக்கட்டை திறப்பதற்கு நிபந்தனைகள் விதித்ததாக பொய் பரப்புரை மேற் கொண்டு வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
- 0 replies
- 781 views
-
-
ஜேவிபியை அரசாங்கத்தில் இணைக்க இராணுவ நடவடிக்கை அணைக்கட்டை திறப்பதற்கான படையினரின் வலிந்த தாக்குதல் புலிகளால் முறியடிப்பு. மாவிலாற்று பகுதியை கைப்பற்ற சிறீலங்கா அரசு மீண்டும் மேற் கொண்ட படை நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் எதிர் தாக்குதல் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாரிய மோதல்கள் இடம் பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவிலாற்று அணைக்கட்டை இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றினால் சிறீலங்கா அரசுடன் ஜே.வி.பி இணைந்து கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் சோமவன்சா தெரிவித்ததை அடுத்தே அரசு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. பதிவு
-
- 21 replies
- 3.5k views
-
-
லண்டன் கருப்பு யூலை நிகழ்வினை கரும்புலிகள் தினம் எனப் பொய் சொல்லும் சிங்கள ஊடகம் ரீசேட்டுகளில் பின்லேடனின் பெயரை அனுமதியாத பிரிட்டன் பிரபாகரனின் பதாகை ஊர்வலத்துக்கு தாராள அனுமதி சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் ஸ்ரீலங்காவில் இயங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சேர்த்து அதனைப் பயங்கரவாத இயக்கமாகக் கருதி ஐக்கிய இராச்சியத்தில் அந்த அமைப்பைச் சட்டபூர்வமாக அந்நாட்டு அரசாங்கம் தடை செய்து சில வருடங்கள் கடந்துவிட்டன. அவ்வாறு தடை செய்யப்பட்டநிலையிலும் அந்த நாட்டில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் குறைந்துவிடவில்லை. புலிகள் இயக்கத்தினர் தடை செய்யப்படுவதற்கு முன்னர் எவ்வாறு இயங்கி வந்தார்களோ அந்த முறையிலேயே இன்று வரை செயற்பட்டு வருவதுடன் அங்கு வாழும் தமிழ்மக்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
கண்டியில் கிளைமோர் தாக்குதல் - சிறப்பு அதிரடிப் படையின் உயர் அதிகாரி உபுல் செனிவிரத்தின பலி சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மூத்த காவல்துறை அத்தியட்சகர் உபுல் செனிவிரத்தின இன்று அதிகாலை 4.00 மணியளவில் கண்டியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பணிக்காக அவர் சென்று கொண்டிந்தவேளை அவரது ஊர்தி கிளைமோர் தாக்குதலில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. நன்றி : சங்கதி
-
- 6 replies
- 2.2k views
-
-
மாவிலாறு பேச்சுவார்த்தை முறிவுக்கு சிங்கள அரசாங்கமே பொறுப்பு: கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு மாவிலாறு அணைக்கட்டு திறப்பு தொடர்பான பேச்சுவார்த்தை முறிவுக்கு சிங்கள அரசாங்கம்தான் பொறுப்பு என்று இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் கூறியதாவது: பேச்சுவார்த்தை மூலம் மாவிலாறு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்பது அல்லாத வேறு ஒரு திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்த நினைக்கிறது. ஆகையால் பேச்சுக்கள் முறிந்துள்ளன. அரசாங்கத்துக்கு நீர் பெறுவதில் விருப்பம் இல்லை. நாங்கள் அரசாங்கம் மீதுதான் குற்றம் சாட்டுகிறோம். விடுதலைப் புலிகளின் மனிதாபிமான நடவடிக்கையைச் சீர்குலைத்த பொறுப்பு …
-
- 1 reply
- 1k views
-
-
குடும்பம் குடும்பமாக தூக்கு - பெண்கள் கற்பளிப்பு - சிங்கள ராணுவம் அட்டகாசம் -குமுறும் அகதிகள்! http://thatstamil.oneindia.in/news/2006/08...8/06/lanka.html
-
- 1 reply
- 3.4k views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19107 இதற்கு குருவிகளின் பதில் இவ்வாறுதான் இருக்கும்: செத்தது தமிழாக்கள் தானே. யார் கவலைப்பட்டார். வேற்றினத்தவர் செத்தால்தான் எங்களுக்கு கவலை. :!: :!: :!:
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தைப் போல் யுத்தத்தினூடாகவே தீர்வு காண்போம்;: சி.எழிலன் பதிலடி [ஞாயிற்றுக்கிழமை, 6 ஓகஸ்ட் 2006, 21:04 ஈழம்] [ம.சேரமான்] மாவிலாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையை நிராகரித்து யுத்தத்தினூடாகத்தான் தீர்வு காண்போம் என்று சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிராக நாமும் அதே வழியில் தான் தீர்வு காண்போம் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இது குறித்து விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (06.08.06) சி.எழிலன் அளித்துள்ள நேர்காணல்: போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சனும் திருகோணமலை மாவட்ட கண்காணிப்புக் க…
-
- 0 replies
- 946 views
-
-
புலிகளின் இணக்கத்தை நிராகரித்து யுத்தத்தைத் தொடங்கியது சிங்கள அரசு மாவிலாறு அணையின் மதகுகளைத் திறக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் இணக்கம் தெரிவித்திருந்ததை நிராகரித்து சிறிலங்கா அரசாங்கம் யுத்தத்தைத் தொடங்கியுள்ளது. சிறிலங்கா அமைச்சரும் அரச பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பிக்கு அளித்த நேர்காணல்: பயங்கரவாதிகள் அணையைத் திறப்பதை நாங்கள் விரும்பவில்லை. நீர்ப்பாசனத் திட்ட பொறியாளர்கள்தான் அதனைச் செய்ய வேண்டும். இல்லையெனில் எந்த வழியிலாவது நாங்கள் திறப்போம். நீர் ஒரு பேச்சுக்களுக்கான கருவியாக இருக்கக் கூடாது. நீர் விநியோதத் திட்டம் தொடர்பான எதனையும் நாங்கள் ஏற்கவில்லை என்றார் அவர். இராணுவப் பேச்ச…
-
- 36 replies
- 6k views
-
-
கனடிய தமிழ்ச்சோலை வானொலியில் பிரதி சனிதோறும் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் வழங்கும் செய்தி ஆய்வு :arrow: 05.08.06 நன்றி. தமிழ்நாதம்.
-
- 8 replies
- 2.2k views
-
-
மூதூர் நகருக்குள் விடுதுலைப் புலிகள் நுழைந்து தாக்குல் நடத்திய போது அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த உத்தரவிடுவதற்கும் சிறிலங்கா காவல்துறையினரை வழி நடத்துவதற்கும் எந்தவொரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியும் மூதூரில் இருந்திருக்கவில்லை என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூதூரில் நிரந்தரமான உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் இருக்க வேண்டிய போதிலும், சுமார் 5 மாதங்களாக அந்தப் பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகள் மூதூரில் தாக்குதல் நடத்திய போது மூதூர் காவல் நிலையப் பொறுப்பதிகாரி திருகோணமலையில் நடந்த காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். மூதூரில் நிலைமை மோசமாக இருந்ததால் அவரால் மூதூருக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்காக பாகிஸ்தானில் இருந்து 1,100 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 22 சீனத் தயாரிப்பு யுத்த டாங்கிகளுக்கான கொள்வனவில் மோசடி நடந்துள்ளது அம்பலமானதையடுத்து கொள்வனவவை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இடைநிறுத்தியுள்ளார். தலா 15 கோடி ரூபா பெறுமதியான இந்த யுத்த டாங்கிகளை பாகிஸ்தான் நிறுவனம் ஒன்று சீனாவிலிருந்து கொள்வனவு செய்து அதனை 50 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு இருந்ததாக அறிந்த மகிந்த இந்த கொள்வனவை நிறுத்துவதற்கு மகிந்த நடவடிக்கை எடுத்துள்ளார். சீனாவிலிருந்து நேரடியாக 15 கோடி ரூபாவிற்கு இவற்றைக் கொள்வனவு செய்ய முடியுமாக இருக்கையில் பாகிஸ்தான் ஊடாக கொள்வனவு செய்கையில் 35 கோடி ரூபாவை மேலதிகமாக செலுத்துவதன் ஊடாக இந்த கொள்வனவானது மோசடிமிக்க ஒன்ற…
-
- 0 replies
- 922 views
-
-
BREAKING NEWS Colombo bombards Maavil Aaru, SLMM officials under attak [TamilNet, August 06, 2006 09:21 GMT] Sri Lanka Monitoring Mission officials, Liberation Tigers Political Head S. Elilan and civilian representatives who went to Maavil Aaru site to re-open the closed sluice gates have come under aerial attack by Sri Lanka Air Force and Sri Lanka Army artillery attack, initial reports said. Norwegian Special Envoy Jon Hanssen Bauer is in direct contact with Royal Norwegian Government and Colombo discussing the latest hostile attacks. SLMM officials have taken cover on the ground from the attacks. Further details are not available at the moment h…
-
- 55 replies
- 7.7k views
-
-
மாவிலாறு நீரை மாலைக்குள் திறந்துவிட புலிகள் இணக்கம் பவன் Sunday, 06 August 2006 மாவிலாறு நீரை சிங்கள மக்களுக்காக இன்று மாலைக்குள் திறந்துவிட விடுதலைப்புலிகள் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். தமிழ் மக்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட நிபந்தனைகளை மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் நிறைவேற்ற நோர்வே அரசும் சர்வதேச சமூகமும் உறுதியளித்திருப்பதை தொடர்ந்து இதற்கு தமது சம்மதத்தை தெரிவித்திருப்பதாக அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்தார். நோர்வேயின் சமாதானத்துக்கான விஷேட தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவரையும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கரையும் விடுதலைப்புலிகள் சந்தித்து பேச்சுக்களை நடத்திய பின்னர் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஞாயிறு 06-08-2006 13:32 மணி தமிழீழம் [மகான்] பிலியந்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைக்குண்டு வீச்சு: 7 பொதுமக்கள் படுகாயம். கொழும்பு பிலியந்தல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் சனி இரவு 8மணியளவில் கைக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்
-
- 0 replies
- 850 views
-
-
பாலசிங்கத்துடன் இந்தியப் பிரதிநிதி பேச்சுவார்த்தை: சிங்கள ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 6 ஓகஸ்ட் 2006, 08:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைப் பிரிவின் அதிகாரி தொலைபேசியூடாக பேச்சுவார்த்தை நடத்தியதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த சிங்கள ஊடகச் செய்தி வருமாறு: கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி யுத்த நிறுத்தத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கின் திருப்பமும் தெற்கின் திகைப்பும் -பீஷ்மர்- [06 - August - 2006] [Font Size - A - A - A] வடக்கே முகமாலையிலும் நாகர் கோவிலிலும் வடமராட்சியிலுமே நடைபெறப்போவதாக இருந்த விடுதலைப்புலிகளின் பதிற்குறிகள் சகல எதிர்பார்ப்புகளையும் மீறி திருகோணமலைப் பகுதியை அதுவும் கொக்கிளாய், புல்மோட்டை, சேருவில பகுதிகளையும், மூதூரையும் மையக் களங்களாக்கும் `நடவடிக்கைகள்' மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏறத்தாழ கடந்த ஒன்றரை இரண்டு வருடங்களாக திருகோணமலை நகரப்பகுதியிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அரச படையினர் மேற்கொண்டுவந்த நேரடி, மறைமுக செயற்பாடுகளின் போது கிழக்கில் விடுதலைப்புலிகளை தலைமையாகக் கொண்ட தமிழர் உரிமைப் போராட்டக் குரலுக்கு இடமிருக்காது என்ற நிலைப்பாட்டில் அரச இராணுவம் பல …
-
- 0 replies
- 1k views
-
-
திருமலை இறுதிப்போருக்கான பரீட்சார்த்த களம் -இதயச்சந்திரன்- கடந்த வாரக் கட்டுரையில் குறிப்பிட்டது போல் லெபனான் விவகாரத்தில் உள்வாங்கப்படும் அனுபவங்கள், மாவிலாறு அணைக்கட்டில் பரீட்சித்துப் பார்க்கப்படுவது போல் தெரிகிறது. இரு இஸ்ரேலிய வீரர்கள் கடத்தப்பட்டவுடன், லெபனான் மீது தொடர் விமான குண்டு வீச்சுக்கள் நிகழ்த்தப்படுவது போன்று, அணைக்கட்டு மறிப்பு விவகாரத்தை சாட்டாக வைத்து, திருமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மீது விமானத் தாக்குதல்களும் எறிகணை வீச்சுகளும் மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதலிற்கான பின்புலச் சதியில், மாவிலாறு சிக்கலை ஊதிப் பெரிதாக்கி திருமலை மாவட்டத்தை ஏனைய பகுதியிலிருந்து துண்டாடும் நீண்டகால பேரினவாதச் சிந்தனை தொழிற்படுவது போல் இருக்கிறது. இதனை …
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகள் எந்தநேரமும் தாக்கலாம் படையினர் அச்சம் சிறிய படகுகள் மூலம் தரையிறக்கம். திருமலை நகரைக் கைப்பற்றுவதற்கான படை நகர்வை, எந்த நேரமும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பிக்கலாம் என்ற அச்சம், சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மூதூர் - சேருநுவர ஆகிய பகுதிகள் மீது தொடுக்கப்பட்டமை போன்று, அதிரடியாக திருமலை நகர் மீது பாரிய வலிந்த படையெடுப்பொன்ற தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுக்கலாம் என்ற அச்சம் சிறீலங்கா அரச தரப்பினர் மத்தியில் நிலவுகின்றது. மூன்று நாட்கள் உக்கிர சமர்களை மேற்கொண்டு சிறீலங்கா படையினருக்கு பாரிய அழிவை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், அதிரடியாக பழைய நிலைகளுக்கு திரும்பியமை, தற்போது அரசாங்கத்தை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
இளையோர் அணியின் முதலாவது அணிக்கான பயிற்சி அணியின் நிறைவு நிகழ்வு கிளிநொச்சியில் லெப். செல்லக்கிளி பயிற்சிப் பாசறையின் இளையோர் அணியின் 500 பேர் கொண்ட முதலாவது அணிக்கான பயிற்சி அணியின் நிறைவு நிகழ்வு நடைபெற்றது. கிளிநொச்சியில் உள்ள பயிற்சி மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஆரம்பமான நிகழ்விற்கு இளையோர் மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் நரேன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவுப் பொறுப்பாளர் சக்தி ஏற்றிவைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றிவைத்தார். லெப்.செல்லக்கிளியின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்ப…
-
- 0 replies
- 762 views
-
-
படையினரின் கொலை வெறித் தாக்குதலில் 15 தன்னார்வ நிறுவனப் பணியாளர்கள் சுட்டுக்கொலை. சிறீலங்கா படைகளின் கொலை வெறித் தாக்குதல்களில் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மூதூர் நகரில், வெளிநாட்டு தன்னார்வ நிறுவனம் ஒன்றின் பதினைந்து பணியாளர்கள், சிறீலங்கா படையினரால் கோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற மோதல்களை அடுத்து, (Action Fiam) அக்ற்யன் பியாம் எனப்படும் தன்னார்வ நிறுவனத்தின் பணியாளர்கள், மூதூர் செயலகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். மூதூர் நகரில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேறிய பின்னர், இன்று அதிகாலை குறிப்பிட்ட தன்னார்வ நிறுவனத்தின் செயலகத்திற்குள் புகுந்த சிறீலங்கா படை…
-
- 4 replies
- 1.9k views
-
-
சின்னக்குட்டிகளின் மரதனோட்டம்...! முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் மிரட்ச்சியுமாக நம்பிக்கையுடன் ஓடும் இவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....! சலோம் சிறுவர் முன்பள்ளியின் மாணவர்களுக்கிடயேயான குறுந்தூர மரதனோட்டப்போட்டி தென்னிந்திய திருச்சபை குரு ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது..! 4 வயதுக்குட்பட்ட ஆண் பெண் சின்னகுட்டான்களின் ஓட்டம் தாயகத்தில் நடப்பது இதுதான் முதற்தடவை...! நண்றி சங்கதி
-
- 2 replies
- 1.3k views
-
-
தாயக உணாவுள்ளவர்களே! இதையும் கொஞ்சம் பாருங்கள். http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=208806#208806
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தளம் திரும்பினர். மூது}ர் பிரதேசத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட சில இராணுவ நிலைகள் மீது தாம் நடத்திய மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை நேற்று நள்ளிரவு (04-08-2006) 12.00 மணியுடன் பூர்த்தி செய்யப்பட்டுத் தமது துருப்பினர் தளம் திரும்பிவிட்டதாக விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் சி. எழிலன் அவர்களை மேற்கோள்காட்டிச் செய்திகள் இங்கே (தாயகத்தில்) வெளியாகியுள்ளன. முஸ்லிம் மக்களுக்குரிய சகல உரிமைகளையும் தமது துருப்பினர் பேணவேண்டுமெனக் கடுமையான கட்டளையிடப்பட்டிருந்தது எனவும், அத்துடன் நேற்று நள்ளிரவு வரை மூது}ரில் தாம் நிலைகொண்டிருந்தவேளையில் முஸ்லிம் மக்களது உடம…
-
- 33 replies
- 5.9k views
-
-
என்ன நடந்தது தமிழ்நெற்றுக்கு????... நேற்றிலிருந்து படுத்து விட்டது!!! உந்த ஆங்கில இணையத்தளம் மட்டுமல்ல, மட்டுஈழநாதம், புதினம், பதிவு, நிதர்சனம், .. சங்கதி எல்லாம் நல்லா நித்திரையடிக்கினம் போல!! ஈழ்பதீஸானே! அடியேன் நித்திரையை குழப்பி செய்தி பாம்பமென்டாம் டென்ஸனைக் கிளப்புகிறான்கள்!!
-
- 0 replies
- 1.7k views
-