ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142578 topics in this forum
-
தடைகள் எது வந்தாலும் தமிழீழம் அடைவது உறுதி http://www.orupaper.com/issue49/pages_K__Sec3_25.pdf
-
- 0 replies
- 1.1k views
-
-
பதிலடி கொடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் அனுப்பியுள்ளது: சு.ப.தமிழ்ச்செல்வன் சிறிலங்கா இராணுவத்தின் வான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க நேரிடும் என்று சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கையை சிறிலங்காவுக்குத் தெரிவிக்குமாறு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் அனுசரணையாளராகிய நோர்வேயின் சிறிலங்காத் தூதுவர் ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது: இலங்கையில் உள்ள கள நில…
-
- 1 reply
- 1.2k views
-
-
நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்: ஜே.வி.பி.யிடம் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் கூட என்று ஜே.வி.பி. குழுவினரிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜே.வி.பி.யினருடன் அண்மையில் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்திய போது நடைபெற்ற விவாதங்களை கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: மகிந்தவுடனான ஜே.வி.பி.யின் சந்திப்பில் நோர்வே குறித்து விமல் வீரவன்ச கருத்துகளை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்து மகிந்த ராஜபக்ச கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு பக்கச் சார்பாகத்தான் நோர்வே செயற்படுவது எ…
-
- 3 replies
- 1.6k views
-
-
வரலாற்றின் வழிகாட்டுதலில் "கிளைமோர் முறியடிப்பு" வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிளைமோர்த் தாக்குதல்கள் என இப்போது தினசரி செய்திகள் வெளிவருகின்றன. சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரே இவ்வாறு விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று இந்த தாக்குதல்களை நடத்துகின்றார்கள். இதற்கு துணை இராணுவக் குழுக்களின் உதவியும் தாராளமாகக் கிடைக்கின்றது. இருந்த போதிலும், அண்மையில் ஆழ ஊடுருவும் படையணிகளைச் சேர்ந்த பலர் விடுதலைப் புலிகள் விரித்த வலையில் அகப்பட்டுள்ளார்கள். இதில் படையினர் சிலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த முறியடிப்பானது பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆழ ஊடுருவும் படையைப்…
-
- 3 replies
- 1.6k views
-
-
பாராளுமன்றம் முன்பாக உண்ணாவிரதமிருந்த தயாஇடைக்காட்டாரின் போராட்டத்தை இருட்டடிப்புச்செய்து விட்டு நோர்வேக்கு வந்த அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் தமிழோசைசெய்தியாளன் சுவாமிநாதன் மைக்கை வாய்க்குள் ஓட்டிக்கொண்டு இருந்தார் ஏதோ அப்படியே எல்லா உண்மையையும் போய் சொல்கிறோம் எங்களுக்கு சொல்லுங்கோ என்று அப்ப இந்த இடைக்காட்டார் விசயத்தில் மட்டும் ஏன் இந்த மைக் செத்துபோனது. அல்லது உண்மை தெரிய வரக்கூடாது என்று சதிசெய்தார்களா?
-
- 79 replies
- 11.7k views
-
-
வங்காலைப்பாட்டில் பெரும் அட்டூழியம் -நூற்றுக்கணக்கான வாடி வீடுகள், படகுகள் தீக்கிரை; கடலுக்கு சென்ற 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை மன்னார் வங்காலைப்பாட்டில் நேற்று சனிக்கிழமை காலை மீனவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வாடி வீடு களும், பேசாலை முதல் வங்காலைப்பாடு வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கண்ணாடி நாரிழைப் படகுகளும் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதேநேரம், நேற்று அதிகாலை தலைமன்னார் முதல் மன்னார் வரையான கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாலை வரை கரைதிரும்பவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது. பேசாலைக் கடற்பரப்பில் நேற்றுக் காலை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே நடைபெற்ற கடற் சமரையடுத்தே கடற்றொழி…
-
- 0 replies
- 982 views
-
-
சிறிலங்கா தாம் மூன்று கடற்கலங்களை இழந்துள்ளதாக பீபீசிக்கு தெரிவித்துள்ளது.
-
- 16 replies
- 4.6k views
-
-
ஜப்பானிய உதவிகள் நிறுத்தம்? இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளை நிறுத்துவது தொடர்பாக ஜப்பான் பரிசீலித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து ஒரு முழு அளவிலான யுத்தம் தொடங்கும் நிலை இருப்பதால் தனது உதவிகளை நிறுத்த ஜப்பான் முடிவு செய்திருப்பதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜப்பான் தெரிவித்திருப்பதாகவும் ஜப்பான் தனது உதவிகளை நிறுத்தினால் ஐக்கிய நாடுகள் சபை உதவியும் நிறுத்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் மக்களினது சட்டப்பூர்வமான முறைமைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று டோக்கியோ இணைத் தலைமை நாடுகள் …
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்கா சமாதான செயலகத்துக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே மோதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓஸ்லோ குழுவினருக்கு உலங்குவானூர்தி ஏற்பாடு செய்தமை தொடர்பில் சிறிலங்கா சமாதான செயலகத்துக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: சுவிஸ், சூரிச்சிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 6 பேர் கொண்ட குழு புறப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சின் சார்பில் நோர்வே தரப்பினருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து வவுனியா ஓமந்தை வரைக்கும்தான் உலங்குவானூர்தி ஏற்பாடு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓமந்தையிலிருந்து விடுதலைப் புலிகளின் …
-
- 0 replies
- 839 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடை அநாகரிகமானது: டென்மார்க் அமைதி சபை கண்டனம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை அநாகரிகமானது என்று டென்மார்க் நாட்டின் அமைதிச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. டென்மார்க் அமைதிச் சபையின் பிரதித் தலைவர் லெவி கே.ப்ரவுச் இது குறித்து கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமைதியை உருவாக்காது. அமைதியின் பக்கத்தைத் தவிர எந்த ஒரு பக்கச் சார்பு நிலையையும் நாம் மேற்கொள்ளமாட்டோம். இந்தப் பிரச்சனையில் தொடர்புடைய இருதரப்பினருமே வன்முறையை கையாள்கின்றனர். அனைத்து வகையிலான வன்முறைகளையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். இருதரப்பினரையும் ஒரே பாதையில்தான் சர்வதேச சமூகம் அணுக வேண்டு…
-
- 0 replies
- 1k views
-
-
ஆழ ஊடுருவும் இராணுவத்தினரை சுட்டுக்கொன்ற மக்கள் படையினர் சிறப்பிப்பு [சனிக்கிழமை, 17 யூன் 2006, 18:44 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] வவுனியா நைனாமடுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா இராணுவத்தினரை கடந்த மூன்று நாட்களாக சுற்றிவளைத்து தேடுதல் நடத்தி அந்த முற்றுகையை உடைத்து செல்ல முயன்ற சிறிலங்கா இராணுவத்தரப்பைச் சேர்ந்தவரை சுட்டுக்கொன்ற மக்கள் படையினர் இன்று சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்டனர். நைனாமடுப் பகுதிக்குள் ஊடுருவிய சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த மூன்று நாட்களாக விடுதலைப் புலிகள், தமிழீழ தேசிய துணைப்படை மற்றும் மக்கள் படை ஆகியவற்றால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் விமானத் தாக்குதல் யுத்த நிறுத்த மீறலே: கண்காணிப்புக் குழு [சனிக்கிழமை, 17 யூன் 2006, 18:31 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய விமானத் தாகுதல், எறிகணைத் தாக்குதல் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்தான் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலனை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் திருமலை மாவட்ட தலைவர் ஓவ் ஜென்சென் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். மூதூர் கிழக்கு சம்பூரில் உள்ள திருமலை மாவட்ட அரசியல்துறை செயலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய எழிலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிகள் ம…
-
- 0 replies
- 1k views
-
-
மன்னாரில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து இராணுவம் தாக்குதல்! 30ற்கு மேற்பட்டோர் படுகாயம்! சிலர் கொல்லப்பட்டிருக்கலாமென அச்சம்! மன்னார் பேசாலையில் இன்று காலை சிறிலங்கா கடற்படையினர் மக்கள் குடியிருப்புக்க ளுக்குள் நுழைந்து மேற்கொண்டு கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத் தாக்குதலில் சுமார் 30ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. காயமடைந்தவர்கள்; சலர் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் காயப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு போதுமான அம்புலன்…
-
- 4 replies
- 1.7k views
-
-
இன்று அனுராதபுரம் கெப்பிடிகொல்லாவவில் பேருந்தில் ஏற்பட்ட பகுதியில் குண்டுவெடிப்பில் 30 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. source: www.battieelanaatham.com
-
- 41 replies
- 6.9k views
-
-
அண்மையில் வந்த தமிழீழ காணிச்சட்டத்து சரத்து ஒண்று பற்றிய விவாதம் ஒண்று இங்கு காரசாரமாக நடந்தது. அதுசம்பந்தமாக தெளிவு பெற நான் தமிழீழ சட்டவியல் தலைவர் பரா அண்ணாவுக்கு மின்னஞ்சம் அனிப்பி இருந்தேன். அதுக்கு அவர் பதில் அனுப்பியும் இருக்கிறார். பலர் மனங்களில் இது பாலை வார்க்கலாம்.! எனது மின்னஞ்சல் தமிழில் இருந்ததால் யுனிக்கோட் பிரச்சினையால் எனது அஞ்சலை படிக்க கஸ்ரப்பட்டதுபோல தெரிகிறது.! அதனால்த்தான் தாமதமாக பதிலை பெற்று உள்ளேன். http://img131.imageshack.us/my.php?image=p...araanna16yn.gif நான் அனுப்பிய மடல் நான் தாயகத்தில்சாவகச்சேரியை பிறப்பிடமாககொண்டு.1999ம் வருடத்தில் இருந்து புலம்பெயர்ந்து. இங்கிலாந்துநாட்டில்வாழ்ந்த
-
- 4 replies
- 2.1k views
-
-
தமிழ் மக்களிடம் உலகை நோக்கி கேக்க ஆயிரம் கேள்விகள் http://www.eelamurazu.com/To%20Day%20News/...s/Page%2011.pdf
-
- 12 replies
- 2.5k views
-
-
கிளிநொச்சியில் இன்று மாலை 6.30 மணிக்கு சிறிலாங்க இராணுவத்தின் கிபிர் விமானங்கள் மூன்று மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது ஐந்து தடவைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளன சேத விபரங்கள் உடன் தெரியவில்லை நன்றி தகவல் வெற்றி
-
- 24 replies
- 4.2k views
-
-
கிளைமோர் தாக்குதல் முறியடிப்பு: ஒருவர் சுட்டுக்கொலை: மூவர் கைது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 1.00 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாக மட்டக்களப்பு அரசியல் துறையினர் தெரிவிக்கின்றார்கள். இத்தாக்குதல் மேற்கொண்டவர்களின் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் புளொட் உறுப்பினர்கள் என்றும் மட்டக்களப்பு பல்பொடி கம்பனி இராணுவ முகாமில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி முக்கியஸ்த்தர்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ள வந்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இத்தாக்குலில் எவ்விதமா…
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழத்தின் களஞ்சியறையில் கருணா குழுவினர் திருட்டு. மட்டக்களப்பு பழைய வீதியில் அமைந்துள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மாவட்ட அலுவலக காரியலய களஞ்சிய நிலையம் நேற்றிரவு 10.30 மணியளவில் கருணா அணியினரால் களவாடப்பட்டுள்ளது. இதில் தளபாடங்கள் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்க்கான உலர் உணவுப்பொருள்கள் மருந்து பொருள்களையும் எடுத்து சென்று கோவிந்த வீதியில் அமைந்துள்ள கருணா குழுவின் அலுவலகத்தில் இறக்கியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பிட்டட அலுவலகம் இரு தடவைகள் கைகுண்டு தாக்குதலின் போது ஒரு காவலாளி கொல்லப்பட்டமையால் எவரும் இங்கு இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்து. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&…
-
- 2 replies
- 1.8k views
-
-
கிளேமோர் தாக்குதலில் பயணிகள் பஸ் தப்பியது; கனகராயன்குளம் பகுதியில் சம்பவம் வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கனகராயன்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை ஆழ ஊடுருவும் படையணியினர் பயணிகள் பஸ் ஒன்றின் மீது கிளேமோர் தாக்குதலை நடத்திய போதும் அந்த பஸ் மயிரிழையில் தப்பியுள்ளது. முகமாலையிலிருந்து புளியங்குளம் நோக்கி `ஏ 9' வீதியில் வந்து கொண்டிருந்த பயணிகள் பஸ் மீதே காலை 8.30 மணியளவில் இந்தக் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கனகராயன் குளத்திற்கும் மன்னார் குளத்திற்குமிடையிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. குறித்த இடத்தை பஸ் தாண்டிய பின்பே கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பஸ் மயிரிழையில் தப்பியுள்ளது. இதனால் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது அதிகரித்து வரும் அரச வன்முறைகளை ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்துக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மனு ஒன்று தயாரிக்கப் பட்டிருக்கிறது. கீழேயிருக்கும் சுட்டிக்குச் சென்று தயவு செய்து அனைவரும் கையொப்பமிடவும் (ஓரிரு நிமிடங்கள் போதுமானது). தத்தம் நண்பர்களுக்கும் மடலாடற்குழுக்களுக்கும் செய்தியைப் பரப்பவும். நன்றி! கையொப்பம் இடுவதற்கான சுட்டி: Petition Online முழுப்பதிவிற்கும் http://bhaarathi.net/sundara/?p=273
-
- 3 replies
- 3k views
-
-
2 ஆம் இணைப்பு) மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு: இராணுவத்தை மீட்க வந்தோர் சுட்டுக்கொலை மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனையில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதல், தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு தாக்குதலை நடத்தியோர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியோரை மீட்க வந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலுப்பையடிச்சேனையில் நேற்று வியாழக்கிழமை இரவு போக்குவரத்தில் ஈடுபட்டோரை இலக்குவைத்து கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் ஈடுபட்டனர். அவர்களை விடுதலைப் புலிகள் துரத்திச்சென்ற போது வாவிக்கரை காட்டுக்குள் தப்பி நுழைந்துள்ளனர். அப்பகுதி விடுதலைப் புலிகளால் சுற்றி…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து இருந்து ஒரு கடிதம் மாசிலான் அன்புக்குரிய தென் தமிழீழ மக்களுக்கு! மீண்டும் மனிதப்புதைகுழி கலாசாரம் யாழ்ப்பாணத்தில் தோன்றியுள்ளது. 1995இல் யாழ்ப்பாணத்தைச் சிங்களப் படையினர் முற்றாக கைப்பற்றியவுடன் ஒட்டுமொத்தத் தமிழினமும் வெளியேறிய வரலாறு மறக்க முடியாதது. அவ்வாறு வெளியேறிய மக்களுக்குப் பாதுகாப்புத் தருவதாக அன்றைய சனாதிபதி சந்திரிக்கா கூறி யாழ்ப்பாணத்திற்குத் திரும்பும் படி அழைத்தார். 1996இல் சந்திக்காவை நம்பித் திரும்பிய மக்களில் பலநூற்றுக் கணக்கானோர் காணாமல் போனோர் பட்டியலில் இடம்பிடித்துக் கொண்டனர். அதன் பின்புதான் செம்மணிப் புதைகுழி அம்பலமாகியது. அதே போன்று யாழ்ப்பாணம் நகருக்குள்ளே இருக்கும் விளையாட்டரங்கிலும் மனிதப்பு…
-
- 0 replies
- 979 views
-
-
http://www.eelamurazu.com/To%20Day%20News/...s/Page%2023.pdf
-
- 0 replies
- 924 views
-
-
தேர்தல் மூலம் காய்நகர்த்த முயலும் ஜனாதிபதி மஹிந்தர் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தாயகத்தின் ஒட்டுமொத்தப் புறக் கணிப்புக் காரணமாக, தென்னிலங்கைத் தீவிரவாத பௌத்த, சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுபெற்ற மஹிந்த ராஜபக்ஷ, எதிர்பாராத வகையில் ஜனாதிபதியாகி விட்டார். நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு வந்து விட்டாலும் கூட, தம்மை அரியணை ஏற்றப் பக்க பலமாக அமைந்த தென்னிலங்கை பௌத்த, சிங்களத் தீவிரவாத சக்திகளின் பிடி யிலிருந்து மீளமுடியாதவராக அச்சக்திகளின் கைப்பொம் மையாக சிக்கித் திண்டாடி வருகின்றார் அவர். நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தால் எதுவும் செய்ய வக்கற்றவராக அவரது ஆட்சி நிர்வாகம் நகருகின்றது. நாட்களைக் கடத்துகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐ.த…
-
- 1 reply
- 1.1k views
-